ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், தொகுதி 2 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தமிழ்த்தேர்வு வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்

a) ச. அகத்தியலிங்கம்

*b) குமரிலபட்டர்

c) பாவாணர்

d) ஹீராஸ் பாதிரியார்

2) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை ஆய்ந்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்

a) கால்டுவெல்

b) வில்லியம் ஜோன்ஸ்

*c) ஹோக்கன்

d) ஹீராஸ் பாதிரியார்

3) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் எந்த ஆண்டு வெளியிட்டார்

a) 1846

*b) 1856

c) 1866

d) 1876

4) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) கோண்டா

b) கோண்டி

c) கோலாமி

*d) கோத்தா

5)  “மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்

மட்டுமே போதுமே ஓதிநட”

இப்பாடல் அடிகள் யாருடையது

a) பாரதியார்

b) சுரதா

*c) ஈரோடு தமிழன்பன்

d) கவியோகி சுத்தானந்த பாரதி

6)  பொருத்துக

a) 8 – 1) சுவை

b) 9 – 2) வனப்பு

c) 100 – 3) குணங்கள்

d) 110  – 4) வண்ணம்

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 2 1 4 3

d) 4 2 1 3

7)  சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) தூது இலக்கியங்கள் சங்க இலக்கியம், வாயில் இலக்கியம் என்றும் அழைக்கப்படுகின்றன

2) 19210 ஆம் ஆண்டு உ. வே. சா. தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தார்

3) தூது இலக்கியங்கள் கலிவெண்பாவால் ஆனவை

a) 1 மட்டும் சரி

b) 1, 2 சரி

c) 1, 3 சரி

*d) 3 மட்டும் சரி

8)  பயனிலை, எழுவாய், செயப்படு பொருள், இவ்வரிசையில் அமைந்த தொடரைக் காண்க

a) நான் பாடத்தைத் படித்தேன்

*b) படித்தேன் நான் பாடத்தை

c) படித்தேன் பாடத்தை நான்

d) நான் படித்தேன் பாடத்தை

9)  “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி”, இவ்வடி யாருடையது

a) மாங்குடி மருதனார்

b) தொ. பரமசிவன்

*c) ஆண்டாள்

d) குடபுலவியனார்

10) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

*a) வீரகாவியம்

b) கவிஞனின் காதல்

c) குருவிப்பட்டி

d) மேதினமே வருக

11) தவறான இணையைக் கண்டறிக

a) மது வேரி

b) பணிலம் சுரிவளை

c) மேதி பகடு

*d) கோடு சிமயம்

12) சேக்கிழார் யாரிடம் முதலமைச்சராகப் பணியாற்றினார்

a) ராசராசன்

b) முதலாம் குலோத்துங்கன்

*c) இரண்டாம் குலோத்துங்கன்

d) மூன்றாம் குலோத்துங்கன்

13) “பக்திச் சுவை னநிச் சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவ” என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்

a) பாரதியார்

b) திரு. வி. க.

*c) மீனாட்சி சுந்தரனார்

d) உ. வே. சா.

14) ஏரியைக் கண்மாய் என்று எந்தப் பகுதியில் அழைத்தனர்

a) சேர மண்டலம்

b) சோழ மண்டலம்

*c) பாண்டிய மண்டலம்

d) தொண்டை மண்டலம்

15)  கந்தர்வனின் இயற்பெயர் என்ன

a) ராசலிங்கம்

*b) நாகலிங்கம்

c) சொக்கலிங்கம்

d) ராமலிங்கம்

16)  “அவன் எழுதிப் பார்த்தான்” இது எவ்வகை வினை

a) செயப்பாட்டு வினை

b) ஏவல் வினை

*c) கூட்டு வினை

d) காரண வினை

17)   வாய்க்கால் மீன்கள் என்பது யாருடைய நூல்

a) கோமல் சாமிநாதன்

b) வைரமுத்து

*c) வெ. இறையன்பு

d) மா. கிருஷ்ணன்

18)  “எழுந்தது துகல், ஏற்றனர் மார்பு

கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்”

இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள மருப்பு என்ற சொல்லின் பொருள் என்ன

a) காளை

*b) கொம்பு

c) வீரன்

d) ஏரு தழுவுதல்

19)  ஏரு தழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் எது

a) நன்னூல்

b) அகப்பொருள் இலக்கணம்

*c) புறப்பொருள் வெண்பா மாலை

d) தண்டியலங்காரம்

20) திமிலுடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது

a) கரிக்கையூர்

b) சேலம்

c) கல்லூத்து மேட்டுப்பட்டி

*d) சித்திரக்கல் புடவி

21) தாழ்பூந்துறை இலக்கணக் குறிப்பு தருக

*a) வினைத்தொகை

b) வேற்றுமைத்தொகை

c) உவமைத்தொகை

d) உம்மைத்தொகை

22) கீழ்வரும் கூற்றுகளை ஆய்க

1) நன்னூல் புலவன் என்று குறிப்பிடப்பட்டவர் இலங்கோவடிகள்

2) இளங்கோவடிகளை நன்னூல் புலவன் என்று கூறியவர் சீத்தலைச் சாத்தனார்

a) 1தவறு, 2 சரி

b) 2 தவறு, 1 சரி

c) 1, 2 இரண்டும் சரி

*d) 1, 2 இரண்டும் தவறு

23) இந்தியாவில் எங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் முதல் கற்கருவி கிடைத்தது

a) அரிக்கமேடு

b) ஆதிச்சனல்லூர்

c) கீழடி

*d) பல்லாவரம்

24) கீழ்வரும் எந்த இலக்கியத்தில் பட்டிமண்டபம் என்ற சொல் இடம்பெறவில்லை

a) சிலப்பதிகாரம்

b) மணிமேகலை

c) கம்பராமாயணம்

*d) பெரிய புராணம்

25)  வல்லினம் மிகுமிடம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை

1) அ, இ ஆகிய சுட்டெழுத்துக்குப் பின் வல்லினம் மிகும்

2) அந்த, இந்த ஆகிய சுட்டுப் பெயருக்குப் பின் வல்லினம் மிகும்

3) எண்ணுப் பெயர்களில் பத்து எனும் எண்ணுப் பெயருக்குப் பின் மட்டும் வல்லினம் மிகும்

4) ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்

a) 1, 2, 3 சரி

*b) 1, 2, 4 சரி

c) 2, 3, 4 சரி

d) 1, 2, 3, 4 சரி

26)  திருக்குறள் செய்திகள் பற்றிய தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் பரிமேலழகர்

2) வள்ளுவர் கோடி எனும் எண்ணுப் பெயரை எட்டு முறை பயன்படுத்தியுள்ளார்

3) ஏழு எனும் எண்ணுப் பெயர் திருக்குறளில் ஏழு இடங்களில் காணப்படுகிறது

a) 1, 2 தவறு

b) 2, 3 தவறு

c) 1, 3 தவறு

*d) 1, 2, 3 தவறு

27)  சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்

a) 5

b) 6

*c) 7

d) 8

28)  “எந்திர ஊர்தி இயற்றுமின்

இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் உள்ளது

*a) நாமகள் இலம்பகம்

b) பூமகள் இலம்பகம்

c) மண்மகள் இலம்பகம்

d) குணமாலையார் இலம்பகம்

29)  தொல்காப்பியரின் அறிவு வகைபாட்டைப் பொருத்துக

a) சுவை – 1) ஐந்தாம் அறிவு

b) முகர்தல் – 2) நான்காம் அறிவு

c) பார்த்தல் – 3) மூன்றாம் அறிவு

d) கேட்டல் – 4) இரண்டாம் அறிவு

a) 1 2 3 4

b) 2 1 4 3

c) 4 1 2 3

*d) 4 3 2 1

30) தனது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்ற பெயரில் நூலாக வெளியிட்டவர் யார்

a) சிவன்

b) வளர்மதி

*c) மயில்சாமி அண்ணாதுரை

d) அருணன் சுப்பையா

31) சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.

கூற்று: 1) அடுக்குத் தொடரின் பின் வல்லினம் மிகும்

கூற்று: 2) அடுக்குத் தொடருக்கு எடுத்துக்காட்டு பாம்பு பாம்பு

a) கூற்று ஒன்று மட்டும் சரி

*b) கூற்று இரண்டு மட்டும் சரி

c) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி

d) கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு

32) டாக்டர் முத்து இலட்சுமி பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) டாக்டர் முத்து இலட்சுமியின் காலம் 1886/1968

2) சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்

3) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் இவர் ஆவார்

4) சென்னையின் முதல் மேயர் இவர் ஆவார்

*a) 1,  3 சரி

b) 1, 4 சரி

c) 1, 2, 3 சரி

d) 1, 2, 4 சரி

33) “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ”

இது யாருடைய கூற்று

a) பெரியார்

b) பாரதியார்

*c) பாரதிதாசன்

d) அறிஞர் அண்ணா

34) பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பது யாருடைய நூல்

*a) நீலாம்பிகை

b) மூவலூர் ராமாமிர்தம்

c) டாக்டர் முத்து இலட்சுமி ரெட்டி

d) பண்டித ரமாபாய்

35)  கல்வி உடைய பெண்களை பாரதிதாசன் எதற்கு ஒப்புமைப் படுத்துகிறார்

a) மரம்

b) களர்நிலம்

c) விலங்கு

*d) திருந்திய கழனி

36)  “பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்

மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா

விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது

a) உவமை அணி

*b) எடுத்துக்காட்டு உவமை அணி

c) உருவக அணி

d) ஏகதேச உருவக அணி

37)  கீழ் வரும் எந்த இதழில் அண்ணா உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்

a) ஹோம்லேண்ட்

b) ஹோம்ரூல்

*c) விடுதலை

d) திராவிட நாடு

38)  இந்திய நூலகங்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்

2) அதிகமான தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம் அறிஞர் அண்ணா நூலகம்

3) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் திருவனந்தபுரம் நடுவன் நூலகம் 

4) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் கல்கத்தாவில் உள்ளது

a) 1, 2, 3 சரி

b) 1, 2, 4 சரி

*c) 1, 3, 4 சரி

d) 2, 3, 4 சரி

39)  கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : ஆகஸ்டு 9 ஆம் நாள் நூலக நாளாக அனுசரிக்கப்படுகிறது

காரணம் : ஆகஸ்டு 9 ஆம் நாள் நூலகத்தின் தந்தை அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாள்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

40) உம் எனும் இடைச்சொல் கீழ் வரும் எந்தப் பொருளில் மட்டும் வராது

a) எதிர்மறை

*b) வினா

c) அளவை

d) ஐயம்

41.கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  இது பூ அல்ல என்பது இலக்கண முறைப்படிப் பிழையான தொடராகும்

காரணம் : அல்ல என்ற சொல் பன்மையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

42) பத்து உறுப்புகள் சிற்பத் தொழிற்கு உறியவை என்று கூறும் நூல் எது

a) சிலப்பதிகாரம்

B. மணிமேகலை

*c) திவாகர நிகண்டு

d) சிற்ப நூல்

43) கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் பாண்டியர் காலச் சிற்பங்கள் காணப்படாத இடம் எது

a) திருமயம்

*b) திருச்சி

c) திருப்பரங்குன்றம்

d) பிள்ளையார் பட்டி

44) மாளிகைகளில் சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறும் நூல் எது

a) சிலப்பதிகாரம்

*b) மணிமேகலை

c) புறநானூறு

d) அகநானூறு

45)  கோயில்களையும் கோயில்களைக் கட்டியவர்களையும் பொருத்துக

a) தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் – 1) ராஜேந்திரன்

b) கங்கைகொண்ட சோழபுரம் – 2) இரண்டாம் ராஜராஜன்

c) தாராசுரம் – 3) மூன்றாம் குலோத்துங்கன்

d) திரிபுவன வீரேஸ்வரம் – 4) முதலாம் ராஜராஜன்

a) 4 1 3 2

b) 4 2 1 3

c) 4 3 1 2

*d) 4 1 2 3

46)  கீழ்க்காணும் இடங்களில் உலோகப் படிமைகள் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படாத இடம் எது

a) சுவாமி மலை

b) கும்பகோணம்

*c) மாமல்லபுரம்

d) மதுரை

47)  ஆடை அணிகலன்களுடன் கூடிய சிற்பங்கள் யார் காலத்தில் தோன்றின

a) பல்லவர் காலம்

b) பாண்டியர் காலம்

*c) விஜயநகர காலம்

d) நாயக்கர் காலம்

48)  “வாய்வெரீஇ”, இது எவ்வகை அளபடை

a) செய்யுளிசை அளபடை

*b) சொல்லிசை அளபடை

c) இன்னிசை அளபடை

d) ஒற்றளபடை

49)  சதிர் என்ற சொல்லின் பொருள் என்ன

a) விளக்கு

b) மாலை

c) பாடல்

*d) நடனம்

50) நூல்களையும் அவற்றிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக

a) அன்பளிப்பு – 1) 1970

b) சக்தி வைத்திய சாலை – 2) 1987

c) முதலில் இரவு வரும் – 3) 1977

d) அப்பாவின் சிநேகிதர் – 4) 1996

a) 1 2 3 4

*b) 1 3 2 4

c) 4 3 2 1

d) 4 2 3 1

51) தி. ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற பயன அனுபவங்களை எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்

a) நடந்தாய் வாழி காவேரி

b) அடுத்த வீடு ஐம்பது மைல்

*c) கருங்கடலும் கலைக்கடலும்

d) உதைய சூரியன்

52) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : சே + அடி சேவடி, சேயடி ஆகிய இரு விதமாகப் புணரும்

காரணம் : ஏகார ஈற்றுக்கு ய, வ ஆகிய இரண்டும் உடம்படுமெய்யாக வரும்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான  சரியான விளக்கமில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

53) கதிர்கள் நிமிர்ந்து நிற்பதைத் திருத்தக்க தேவர் எதனோடு ஒப்புமைப்படுத்துகிறார்

a) கல்லாதவர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்

*b) பக்குவமில்லாத செல்வர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்

c) விலங்குகள் தலை நிமிர்ந்து நிற்றல்

d) போரில் வெற்றி பெற்ற அரசன் தலை நிமிர்ந்து நிற்றல்

54) பசுவையா என்னும் புனைப்பெயரில் புதுக்கவிதை எழுதியவர் யார்?

A) பிரமில்

B) கல்யாண்ஜி

C) கலாப்பிரியா

*D) சுந்தர ராமசாமி

55)  மதுரைக்காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனாரின் எத்தனை பாடல்கள் எட்டுத்தொகையில் உள்ளன

a) 11

b) 22

c) 35

*d) 13

56)  கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : மதுரையில் உள்ள மாட்டுத் தாவணி மாடுகள் விற்கப்படும் சந்தையாக இருந்தது

காரணம் : தாவணி என்ற சொல்லுக்குச் சந்தை என்று பொருள்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான  சரியான விளக்கமில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

57)  நான் வள்ளுவரைப் படித்தேன்

இது எவ்வகை ஆகுபெயர்

a) பொருளாகு பெயர்

b) சினையாகு பெயர்

c) கருவியாகு பெயர்

*d) கருத்தாவாகு பெயர்

58)  எழுத்துச் சீர்திருத்தங்களை எந்த இதழில் பெரியார் மேற்கொண்டார்

a) குடியரசு

b) விடுதலை

c) புரட்சி

*d) பகுத்தறிவு

59)  யுனஸ்கோ நிருவனம் எந்த ஆண்டு பெரியாருக்குத் தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் என்ற பட்டத்தை வழங்கியது

a) 1938

b) 1939

*c) 1970

d) 1971

60) ரேவதி என்னும் புனைப்பெயரில் கவிதை எழுதியவர் யார்

a) பெரியார்

b) ரங்கராஜன்

*c) ந. பிச்சமூர்த்தி

d) வ. சே. குழந்தைசாமி

61) எதனைக் காக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது

a) அறம்

*b) ஞானம்

c) அறிவு

d) வெகுளி

62) யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்

*a) 3

b) 2

c) 4

d) 6

63) பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்

a) பெரியார்

b) அண்ணா

c) கருணாநிதி

*d) வே. ஆனைமுத்து

64) இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது, என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்

a) ஜி. யூ. போப்

b) கால்டுவெல்

c) வீரமாமுனிவர்

*d) ஆல்பர்ட் சுவைச்சர்

65)  உலகத் தமிழ் மாநாடுகளையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக

a) கோலாலம்பூர் – 1) 1966

b) சென்னை – 2) 1968

c) மதுரை – 1981

d) மொரேஷியஸ் – 1989

a) 2 1 4 3

b) 1 3 2 4

c) 1 3 4 2

*d) 1 2 3 4

66)  எந்த அமைப்பு தோன்றத் தனிநாயக அடிகள் காரணமாய் இருந்தார்

*a) அகில உலகத் தமிழாய்வு மன்றம்

b) தமிழ் பண்பாடு

c) தமிழ் வளர்ச்சிக் கழகம்

d) 1 மற்றும் 2

67)  கல்யான் ஜி அவர்களின் நூல்களையும் நூல் வகைகளையும் பொருத்துக

a) முன்பின் – 1) சிருகதை

b) அகமும் புறமும் – 2) கவிதை

c) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – 3) கட்டுரை

d) சில இறகுகள் சில பறவைகள் – 4) கடிதம்

a) 2 1 3 4

*b) 2 3 1 4

c) 1 2 3 4

d) 3 1 2 4

68)  குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்

a) உ. வே. சா.

b) சீ. வை. தாமோதரம்பிள்ளை

c) தனிநாயக அடிகள்

*d) சௌரி பெருமாள் அரங்கனார்

69)  பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்

*a) சேரர்

b) சோழர்

c) பாண்டியர்

d) பல்லவர்

70) தேவர் அணையர் கயவர் அவருந்தான்

மேவன செய்தொழுக லால் இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள அணி எது?

a) உவமை அணி

b) உருவக அணி

c) ஏகதேச உருவக அணி

*d) வஞ்சப் புகழ்ச்சி அணி

71) அந்தாதியில் அமைந்த செய்யுள்களைப் பாடுவதில் வல்லவர் யார்

a) கம்பர்

b) புகழேந்தி

c) இரட்டையர்கள்

*d) ஒட்டக்கூத்தர்

72) கொற்கை முத்தின் சிறப்பு பற்றிக் கூறும் நூல் எது

a) தாலமியின் பூகோல நூல்

a) தொல்காப்பியம்

*c) அர்த்த சாஸ்திரம்

d) கவிராஜ மார்க்கம்

73) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : யவனர்கள் முசிரி துறைமுகத்திலிருந்து மிளகை ஏற்றுமதி செய்தனர்

காரணம் : பொன்னொடு வந்து கரியொடு பெயரும் என்ற அகநானூற்றுப் பாடல் இதற்குச் சான்றாகும்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான  சரியான விளக்கமில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

74) கடற்பயனத்தின்போது பயன்படுத்தப்பட்ட காந்த ஊசி பற்றிக் கூறும் நூல் எது

a) சிலப்பதிகாரம்

*b) மணிமேகலை

c) தொல்காப்பியம்

d) பதிற்றுப்பத்து

75)  பேரழகு இலக்கணக் குறிப்பு தருக

a) வினைத்தொகை

*b) பண்புத்தொகை

c) வேற்றுமைத்தொகை

d) உவமைத்தொகை

76) பாஞ்சாலி சபதத்தில் காணப்படும் சருக்கங்கள் மற்றும் பாடலின் எண்ணிக்கைகள் யாவை?

A) ஒன்பது சருக்கங்கள் மற்றும் 426 பாடல்கள்.

*b) ஐந்து சருக்கங்கள் மற்றும் 412 பாடல்கள்.

C) ஏழு சருக்கங்கள் மற்றும் 420 பாடல்கள்.

D) மூன்று சறுக்கங்கள் மற்றும் 410 பாடல்கள்.

77) பிற நாட்டு நல் அறிஞர் சாஸ்திரங்கள் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறியவர் யார்?

A) கவிமணி

*b) பாரதியார்

C) பாரதிதாசன்

D) கால்டுவெல்

78) (நீ மீண்டும் தோன்றிய பாரதியடா) என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரை பாராட்டியவர் யார்?

A) திரு. வி. கல்யாண சுந்தரனார்

B) வாணிதாசன்

*c) தோழர் பா. ஜீவானந்தம்

D) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

79) (ஓய்வாக இருக்கையில், தம்பி, நீ ஓவியம் வரைந்து பழகு) என்று பாடியவர் யார்?

A) பாரதியார்

B) தேவநேய பாவாணர்

C) இளங்குமரனார்

*d) பெருஞ்சித்திரனார்

80) பொதிந்து என்பதன் இலக்கண குறிப்பு யாது?

A) வினையெச்ச தொடர்

*b) வினையெச்சம்

C) பெயரெச்சத் தொடர்

D) வினையாலணையும் பெயர்

81) (சாதி சமய வேறுபாடுகளை மறக்க கற்றுக்கொள்; மறக்க முடியாவிட்டால் புறக்கணிக்க கற்றுக்கொள்) என்று கூறியவர் யார்?

A) பாரதியார்

*b) மு. வரதராசனார்

C) திரு. வி. கல்யாண சுந்தரனார்

D) பாரதிதாசன்

82) எனக்கு மிகவும் விருப்பமான இலக்கியம் உண்டு என்றால், அது (கலிங்கத்துபரணி) என்று கூறியவர் யார்?

A) ஒட்டக்கூத்தர்

B) பெரியார்

C) கம்பர்

*d) அறிஞர் அண்ணா

83) இலக்கண குறிப்புத் தருக. (கருமுகிலும் வெண்மதியும்)

A) உவமைத்தொகை

*b) எண்ணும்மை

C) உருவகம்

D) வினைத்தொகை

84) (அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை

இகழ்வாரை பொறுத்தல் தலை)

இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

A) சொற்பொருள் பின்வரும் நிலை அணி.

B) தற்குறிப்பேற்ற அணி.

C) இல் பொருள் உவமையணி.

*d) உவமையணி.

85) (தமிழ் மருந்துகள்) என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) காரியாசான்.

*b) கி.ஆ.பெ. விசுவநாதன்

C) நல்லாதனார்

D) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

86) கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள நூல்களுல் அவ்வையார் பாடல்கள் இடம்பெறாத நூல் எது?

A) அகநானூறு

B) புறநானூறு

C) நற்றிணை

*d) பரிபாடல்

87) (புலன் அழுக்கற்ற அந்த நாளன்) எனப் போற்றப்படுபவர் யார்?

*a) கபிலர்

B) நக்கீரர்

C) அவ்வையார்

D) தொண்டைமான் இளந்திரையன்

88) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?

A) ந. பிச்சமூர்த்தி

B) திரு. வி. கல்யாண சுந்தரனார்

C) திருவள்ளுவர்

*d) பாரதியார்

89) (தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.)

இக்குறளில் பயின்று வரும் அணியை காண்க.

A) உவமையணி

B) சொற்பொருள் பின்வரும் நிலை அணி

*c) வேற்றுமை அணி

D) சொல் பின்வருநிலையணி

90) (பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டு சொல்லுகிறது. ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ) என்ற உத்வேக வரிகள் யாருடையது?

A) ந. பிச்சமூர்த்தி

*b) ஈரோடு தமிழன்பன்

C) தாராபாரதி

D) அப்துல் ரகுமான்

91) சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்று பாடிய சித்தர் யார்?

*a) பாம்பாட்டி சித்தர்

B) திருமூலர்

C) பட்டிணத்தார்

D) கடுவெளி சித்தர்

92) அடுத்த ஜென்மத்தில் நான் தமிழனாக பிறந்து திருக்குறள் படிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?

A) லியோ டால்ஸ்டாய்

*b) மகாத்மா காந்தி

C) ரவீந்திரநாத் தாகூர்

D) விக்டோரியா மகாராணி

93) (தன்னை அறிந்து இன்பம் ஊரும் வெண்ணிலாவே ஒரு தந்திரம் ஒன்று நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே) என்று பாடியவர் யார்?

A) கடுவெளி சித்தர்

B) சிவவாக்கியர்

C) திருமூலர்

*d) ராமலிங்க வள்ளலார்

94) நந்தவனத்தில் ஒரு ஆண்டி

அவன் நாளாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடை தாண்டி

இப்பாடளில் உள்ள தொடை வகையைத் தேர்ந்தெடு.

*A) இயைபு

B) முரன்

C) சிந்து

D) அந்தாதி

95)டம்பாச்சாரி விலாசம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

A) கி.ஆ.பெ. விசுவநாதன்

*b) காசி விஸ்வநாதர்

C) கதிர்வேலன்

D) திரு. வி. கல்யாண சுந்தரனார்

96) கல்லக்குடி மகா காவியம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) பாரதிதாசன்

B) எத்திராசூ

*c) முத்தையா

D) சுரதா

97) சுடுகாடு இலக்கண குறிப்பு தருக.

A) வேற்றுமை தொகை

B) அன்மொழி த்தொகை

C) உவமைத்தொகை.

*d) வினைத்தொகை

98) (பறவைகள் ஒருவேளை தூங்க போய் இருக்கலாம்) என்னும் மொழிபெயர்ப்புநூலுக்காக சாகித்ய அகடமி விருது பெற்றவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியன்

B) ரவீந்திரநாத் தாகூர்

*c) இந்திரன்

D) வண்ணதாசன்

99)          உயிர்த்தெழும் காலத்திற்காக என்ற தலைப்பில் யாருடைய கவிதைத் தொகுக்கப்பட்டுள்ளது.

*A) வில்வ இரத்திணம்

B) மணிசேகரன்

C) ந. பிச்ச மூர்த்தி

D) வள்ளிக் கண்ணன்

100) பொருத்துக

A) புதுக்கவிதைப் பிறப்புக்கு வித்திட்டவர் 1) சி. மணி.

B) புதுக்கவிதை செழுமையுர காரணமாக இருந்தவர் 2) ந. பிச்ச மூர்த்தி.

C) புதுக்கவிதைக்கு ஒரு தூருவ நட்சத்திரம் 3) சி.சு. செல்லப்பா.

D) யாப்பறிந்து யாப்புடைத்தவர் 4) பசுவையா.

*A) 2 3 4 1

B) 3 4 2 1

C) 2 1 3 4

D) 4 2 3 1