ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், தொகுதி 2 மூன்றாவது மாதிரித்தேர்வு பொதுப்பாடம் மற்றும் கணித வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) இடது ஆரிக்கிள் மற்றும் இடது வென்ட்ரிக்கிளை பிரிப்பது எது?

A) செப்டா

*B) மிட்ரல் வால்வு

C) மூவிதழ் வாழ்வு

D) பிறை சந்திர வாழ்வு

2 கீழ்கண்டவர்களுள் பொருந்தாத நபர் யார்?.

A செண்பகராமன்.

B வ.வே.சு.

C வாஞ்சிநாதன்.

*D வ.உ..சி.

3) பிஜப்பூர் சுல்தான் சாஜியை______ஆம் ஆண்டு விடுதலை செய்தார்.

*A) 1649

B) 1652

C) 1654

D) 1655

4. தேசியவாதிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக ஆராய 1903 ஆம் ஆண்டு சி.ஐ.டி. உருவாக்கியவர் யார்?

A. வாரன் எஸ்டிங்ஸ்

B. வெல்லஸ்லி

C. ரிப்பன் பிரபு

*D. கர்சன் பிரபு

5 கீழ்கண்டவற்றில் தாவர உன்னிகளையும் ஊன் உண்ணிகளையும் உண்ணக்கூடியவைகளைத் தேர்வு செய்க? 

A) சிங்கம் பாம்பு

B) காளான் பூஞ்சைகள்

C) வரிக்குதிரை ஆடு

*D) ஆந்தை முதலை

6. வர்ணாசிரமத்திற்கு வெளியில் உள்ள அல்லது விலக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A. ஒடுக்கப்பட்டோர்

B. தாழ்த்தப்பட்டோர்

*c. பஞ்சமர்

D. பாகுபடுத்த பட்டோர்

7.பல்வந்தராய் மேத்தா குழு பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை யவை?

1. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை பல்வந்தராய் மெத்தா குழுவால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2. கிராம ஊராட்சியில் நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது.

3. ஜில்லா பரிசத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் இருக்கக் கூடாது.

A. ஒன்று, மற்றும், மூன்று சரி.

*B. ஒன்று, மற்றும், இரண்டு, சரி.

C. அனைத்தும் சரி.

D. இரண்டு, மற்றும் மூன்று சரி.

8) ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் என்ன?

A) 3:1

B) 1:2

C) 2:1:3

*D) 1:2:1

9 டி. முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதீமன்ற நீதீபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு.

A 1867.

B 1875.

*C 1877.

D 1884.

10) பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றைத் தேர்வு செய்க 

கூற்று – 1: சிவாஜி தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் 1656 ஆம் ஆண்டு தொடங்கினார் 

கூற்று – 2: சிவாஜி சதாரா மாவட்டத்தில் உள்ள ஜாவ்லி என்னும் இடத்தை கைப்பற்றியதன் மூலம் மராத்தியர்கள் இடையே பிரபலம் அடைந்தார்

கூற்று – 3: சிவாஜியை அடக்குவதற்காகவும் பிஜபூரை கைப்பற்றுவதற்காகவும் ஜெய் சிங் தலைமையிலான ராணுவம் வந்த போது தக்காணத்தின் ஆளுநராக இருந்தவர் முநிம்கன் என்கிற பகதூர்ஷா

கூற்று – 4: 1965 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் நாள் சிவாஜிக்கும் ஜெய்சிங் இடையே புறந்தர் ஒப்பந்தம் கையெழுத்தானது

A) 1 மற்றும் 4 மட்டும் தவறு

B) 1 மற்றும் 2 மட்டும் தவறு 

*C) 3 மற்றும் 4 மட்டும் தவறு 

D) அனைத்தும் தவறு

11. பசிபிக் பிரதேச ஹிந்துஸ்தான் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A. 1911

*B. 1913

C. 1903

D. 1912

12) வெப்பமண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று – 1: இப்பகுதிகள் மிக அடர்ந்த காடுகளைக் கொண்டிருப்பதால் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது

கூற்று – 2: இங்குக் குடியிருப்புகள் சிதறிக் காணப்படுகின்றன

கூற்று – 3: உணவு சேகரித்தல், மீன் பிடித்தல், மரம் வெட்டுதல், இடமாற்று விவசாயம் போன்ற தொழில்கள் இங்கு வாழும் மக்களின் வாழ்வதாரமாக உள்ளது

A) கூற்று 1 மற்றும் 3 சரி 

B) கூற்று 1 மற்றும் 2 சரி 

C) கூற்று 2 மற்றும் 3 சரி 

*D) அனைத்து கூற்றுகளும் சரி

13. கீழ் கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடப் பள்ளிகள் என்று அழைத்த சமூக சீர்திருத்தவாதிகளைத் தேர்ந்தெடு.

1. பெரியார்

2. சிங்காரவேலர்

3. அயோதிதாச பண்டிதர்

4. அம்பேத்கர்

A. பெரியார் மற்றும் அம்பேத்கர்

B. அம்பேத்கர் மற்றும் அயோத்திதாச பண்டிதர்

C. பெரியார் மற்றும் சிங்காரவேலர்

*d. சிங்காரவேலர் மற்றும் அயோத்திதாச பண்டிதர்

14. பின்வருவனவற்றை பொருத்துக

A. பல்வந்தராய் மேத்தா குழு 1. 1977

B. அசோக் மேத்தா குழு 2. 1985.

C. எல், எம், சிங்வி, குழு, 3. 1986

D. ஜி வி கே ராவ் குழு, 4. 1957

A. 3 2 1 4.

B. 4 3 1 2.

*c. 4 1 3 2.

D. 4 2 1 3 

15) ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுவது எது?

*A) குரல்வளை

B) நாக்கு

C) உதரவிதானம்

D) வாய்

16 இந்திய தேசிய காங்கிரசுக்கு முன்னோடி இயக்கம் எது?.

*A சென்னை மஹாஜன சபை.

B சென்னை வாசிகள் சங்கம்.

C மும்பை வாசிகள் சங்கம்.

D இந்திய மறுமலர்ச்சி சங்கம்.

17) சிவாஜியின் மறைவிற்குப் பிந்தைய நிகழ்வுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க

A) 1686 ஆம் ஆண்டு பிஜப்பூர் அவுரங்கசீப்பால் கைப்பற்றப்பட்டது 

B) 1687 ஆம் ஆண்டு கோல்கொண்டா கோட்டை அவுரங்கசிப்பால் வெற்றி  கொள்ளப்பட்டது

C) 1689 ஆம் ஆண்டு சாம்பாஜி கொல்லப்பட்டார்

*D) 1706 சாகு அரியணை ஏறினார்

18. சரியான இணையைத் தேர்வு செய்க

ஒன்று: பொதுக் கூட்ட சட்டம் 1907

இரண்டு: செய்தித்தாள் சட்டம் 1908

மூன்று: இந்திய பத்திரிக்கைச் சட்டம் 1910

A. ஒன்று மட்டும் சரி

B. இரண்டு மட்டும் சரி

C. மூன்று மட்டும் சரி

*D. ஒன்று இரண்டு மூன்று சரி

19) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது? 

A) 1982 

B) 1967 

C) 1972 

*D) 1953

20. சரியான கூற்று அல்லது கூற்றுகளைத் தேர்ந்தெடு

1. 1961 ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டம் மகப்பேறு காலத்தில் பணியில் உள்ள பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை உறுதி செய்கிறது

2. தற்பொழுது தமிழக அரசு ஒரு வருட மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் அளிக்கிறது

A. கூற்று ஒன்று சரி

*b. கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி

C. கூற்று இரண்டு சரி

D. கூற்று ஒன்று மற்றும் இரண்டு தவறு

21. பொருத்துக

A. எல், எம், சிங், வி, குழு, 1. பஞ்சாயத்து, ராஜ், நிறுவனங்களின், புத்துயிர்.

B. ஜி வி கே ராவ் குழு 2. கிராமப்புற மேம்பாட்டின் நிர்வாக ஏற்பாடு.

c. பல்வந்தராய் மேத்தா குழு 3. சமூக அபிவிருத்தி திட்டம்.

D. அசோக் மேத்தா குழு 4. பஞ்சாயத்து முறையை வலுப்படுத்துதல்.

A. 3 4 1 2.

B. 4 3 2 1.

C. 2 3 1 4

*d. 1 2 3 4.

22) நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் நடத்துனர் யார்?

A) அட்ரீனல் சுரப்பி

*B) பிட்யூட்டரி சுரப்பி

C) தைமஸ் சுரப்பி

D) பீனியல் சுரப்பி

23 மிதவாதிக்கெல்லாம் மிதவாதி யார்?.

A கோகலே.

*B சீனிவாச சாஷ்த்ரி.

C நடேசன்.

D சுப்ரமணிய அய்யர்.

24) சிவாஜி______ஆம் ஆண்டு சத்திரபதி என்னும் பட்டத்தைச்  சூடினார்.

*A) 1674 ஜூன் 6

B) 1674 ஜூலை 6

C) 1674 ஜூலை 16

D) 1674 ஜூன் 16

25. பம்பாயில் தன்னாட்சிக் கழகத்தை துவக்கியவர் யார்?

A. அன்னிபெசன்ட்

*B. பால கங்காதர திலகர்

C. கோபாலகிருஷ்ண கோகலே

D. லாலா லஜபதி ராய்

26) கீழ்கண்ட மாநிலங்களில் கிணற்றுப் பாசனத்தை அதிகமாக பயன்படுத்தும் மாநிலங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துக

A) குஜராத் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம் ராஜஸ்தான்

B) உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் குஜராத் ராஜஸ்தான் 

*C) உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் குஜராத்

D) மத்திய பிரதேசம் குஜராத் உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான்

27. சட்டங்களையும் ஆண்டுகளையும் பொருத்துக

A. இந்திய கிருத்துவ திருமண சட்டம் 1. 1955

B. முஸ்லிம் திருமண இழப்பீட்டுச் சட்டம் 2. 1956

C. இந்து திருமணச் சட்டம் 3. 1939

D. இந்து வாரிசு உரிமைச் சட்டம் 4. 1872

*a. 4, 3,1,2

B. 4, 3,2,1

C. 3, 4,2,1

D. 3, 2,1, 4

28. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை காண்க.

1. பேரூர் ஆட்சியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு.

2. அதிக நகராட்சிகள் உடைய மாவட்டம் காஞ்சிபுரம்.

3. ஒரு லட்சம் மக்கள் வாழக்கூடிய ஊரினை பேரூராட்சி என்று அழைக்கப்படுகிறது.

4. 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழக்கூடிய பகுதி மாநகராட்சி என்று அழைக்கப்படுகிறது.

A. ஒன்று, இரண்டு, மற்றும், மூன்று, சரி.

*b. ஒன்று, இரண்டு, மற்றும், நான்கு, சரி.

C. ஒன்று, மூன்று, மற்றும் நான்கு சரி.

D. அனைத்தும் சரி.

29) செல் பகுப்பின்போது ஸ்பிந்தில் நார்கள் குரோமோசோம் உடன் இணையும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) குரோமோனியர்

B) சென்ட்ரோசோம் 

*C) சென்ட்ரோமியர்

D) குரோமோனிமா

30 தமிழக தீவிரவாதத்தின் தந்தை யார்?.

A பாரதியார்.

B சுப்ரமனிய சிவா.

*C வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்.

D ஆரியா.

31) பின்வரும் கூற்று மற்றும்  காரணங்களை ஆராய்க

கூற்று – விஜயநகர அரசர்கள் பற்றிய தகவல்களை அவர்கள் அதிக எண்ணிக்கையில்  வெளியிட்ட வராகன் எனப்படும் தங்க நாணயங்கள் மூலமாக அறிய முடிகிறது 

காரணம் – அவர்கள் வெளியிட்ட தங்க நாணயங்களில் மன்னர்களின் பெயர்கள் தெலுகு மற்றும் கன்னடத்தில் இடம் பெற்றுள்ளது

A) கூற்று மற்றும் காரணம் சரி கூற்றை காரணம்  விளக்குகிறது

*B) கூற்று சரி காரணம் தவறு

C) கூற்று தவறு காரணம் சரி 

D) கூற்று சரி காரணம் சரி கூற்று காரணத்தை விளக்க வில்லை

32. சுதேசி என்றால் என்ன?

*A. சொந்த நாடு

B. பக்கத்து நாடு

C. தனிநாடு

D. அயல்நாடு

33) பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் இடப்பெயர்வு வேளாண் முறைகளின் பெயரைப் பொருத்துக

A) அசாம் – 1) மாசன்‌

B) கேரளா – 2) ஜூம்‌

C) ஆந்திர பிரதேசம் – 3) பொன்னம்

D) ஓடிஸா – 4) பொடு

A) 3 2 4 1

*B) 2 3 4 1

C) 4 2 1 3

D) 2 1 4 3

34. பறையன் என்ற இதழை நடத்தியவர் யார்?

*A. இரட்டைமலை சீனிவாசன்

B. வைகுண்ட சாமிகள்

C. அயோத்தி தாச பண்டிதர்

D. சிங்காரவேலர்

35. பின்வருவனவற்றுள் தவறான கூற்றை காண்க.

A. அதிக எண்ணிக்கையிலான ஊராட்சி ஒன்றியம் காணப்படும் மாவட்டம் விழுப்புரம்.

B. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உடைய பகுதி மாவட்ட ஊராட்சி ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது.

C. பல கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கிய பகுதி ஊராட்சி ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது.

*d. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 41 இல் பஞ்சாயத்து ராஜ் பற்றி குறிப்பிடப்படுகிறது.

36) பின்வருவனவற்றுள் எது நரம்பு செல்லின் பகுதி அல்ல?

A) செல் உடல்

B) பெரிகேரியா

*C) தண்டுவடம்

D) ஆக்சான்

37 புரட்சிகரவாதிகளின் தலைவர் யார்?.

A வரகனேரி வெங்கட சுப்ரமனியம்.

*B நீலகண்ட பிரம்மச்சாரி.

C செண்பகராமன்.

D அரவிந்த கோஷ்.

38) முதலாம் முகமதிற்கு நஷ்டயீட்டை வாரி வழங்கிய போர் எது?

A) மாளவப் போர் 

B) பெல்காம் போர் 

C) விஜயநகரப் போர்

*D) வாரங்கல் போர்

39. பொருத்துக:

A. வங்கப் பிரிவினை 1. 1906

2. B. இந்தியன் முஸ்லிம் லீக் 2. 1905

C. இந்திய தேசிய காங்கிரஸ் 3. 1916

4. D. லக்னோ ஒப்பந்தம் 4. 1885

*A. 2,1,4,3

B. 2,1,3,4

C. 3,2,4,1

D. 4,3,1,2

40) சணல் பயிர் வளர்வதற்கு ஏற்ற மண் வகை எது

*A) வண்டல் மண் 

B) கரிசல் மண் 

C) செம்மண் 

D) சரளை மண்

41. பலதரப்பட்ட சாதியினரை ஒன்றிணைக்க வைகுண்ட சாமிகள் துவங்கிய அமைப்பு எது?

*A. சமத்துவ சமாஜம்

B. சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

C. ஒடுக்கப்பட்டோர் சங்கம்

D. சமூக நீதிச் சங்கம்

42. பொருந்தாத இணையை காண்க

*a. பஞ்சாயத்து ராஜ் முதல் முதலில் தொடங்கப்பட்ட மாநிலம்/ஆந்திரா.

B. பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தம்/2016

C. பஞ்சாயத்து ராஜ் சட்டம்/1992 ஏப்ரல் 24

D. அட்டவணை 11 மற்றும் பகுதி ஒன்பது/பஞ்சாயத்து ராஜ் பற்றி குறிப்பிடுகிறது.

43) வவ்வால்களில் வியர்வை சுரப்பிகள் காணப்படும் இடம் எது?

A) காதுகள்

B) வயிறு

C) கண்கள்

*D) தலையின் பக்கவாட்டுப் பகுதி

44 மதுரையில் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர்.

*A ஜார்ச் ஜோசப்.

B திரு.வி.க.

C வி.வி. வாடியா.

D சிங்காரவேலர்.

45) பாமினி சுல்தான்களில் ஆதரவற்றவர்களுக்கென ஒரு பள்ளியை நிறுவியவர் யார்?

A) பாமன்ஷா 

*B) முஜாஹித்ஷா

C) மூன்றாம் முகமது 

D) ஹூமாயூன்

46. சுப்ரமணிய சிவா பாரதமாதாவிற்கு எந்த இடத்தில் கோவில் கட்டினார்?

*A. பாப்பாரப்பட்டி

B. கல்லுப்பட்டி

C. சின்ன கல்லுப்பட்டி

D. கொடுங்கையூர்

47) எந்த அரசர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும்‌ ஒருங்கிணைக்கவும்‌ சாஹி (ராயல்‌) சாலையை சிந்துபள்ளத்தாக்கிலிருந்து மேற்கு வங்கத்தில்‌ உள்ள சோனார்‌ பள்ளத்தாக்கு வரை அமைத்தார்‌

*A) ஷெர்சா சூரி

B) அக்பர்

C) அவுரங்கசீப் 

D) ஷாஜகான்

48. (துயரம் கொள்ளும் உயிரினங்களைக் கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள் கல்நெஞ்சுக்காரர்கள் அவர்களுடைய ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்) இக்கூற்றிற்குரிய சமூக சீர்திருத்தவாதி யார்

*A. வள்ளலார்

B. வைகுண்ட சாமிகள்

C. சிங்காரவேலர்

D. அயோத்தி தாசர்

49. கூட்டாட்சி அரசாங்க முறையில் சிறப்பு அம்சம் அல்லாதது எது?

A. எழுதப்பட்ட அரசியல் அமைப்பு

B. சுதந்திரமான நீதிமன்றம்.

C. இரவை சட்டமன்றம்.

*d. ஓர் அவை அரசாங்கம்.

50) எந்த வெளிக்கரு ஜவ்வு உருவாக்கித் தரும் திரவ ஊடகம் கருவை உலராமலும் அதிர்விலிருந்தும் காக்கிறது?

*A) ஆம்னியான்

B) கோரியான் கருவூண் பை

C) அலண்டாய்ஸ்

D) A & B

51 கிளாபத் இயக்கத்தின் குவிமையமாக இருந்த பகுதி.

A வேலூர்.

*B வாணியம்பாடி.

C செங்கல்பட்டு.

D சென்னை.

52) கோல்கொண்டா கோட்டையைக் கட்டியவர் யார்? 

A) பெரோஷ

B) முஜாஹித்ஷா

*C) ராஜா கிருஷ்ணதேவ் 

D) மகாராஜா கிருஷ்ணதேவராயர்

53. இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு என்ன?

A. 1910

*B. 1911

C. 1912

D. 1913

54) கீழ்கண்ட கூற்றுக்களை ஆராய

கூற்று – 1: இந்தியாவில்‌ மிக நீளமான தேசிய நெருஞ்சாலை NH7 ஆகும்‌  

கூற்று – 2: இச்சாலை உத்திரப் பிரதேசத்தில்‌ உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில்‌ உள்ள கன்னியாகுமரி வரை 2369 கிமீ நீளத்தைக்‌ கொண்டதாகும்‌ 

கூற்று – 3: குறைவான நீளமுடைய தேசிய நெருஞ்சாலைNH 47 A ஆகும்‌. இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீதொலைவைக்‌ கொண்ட கொச்சின்‌ துறைமுகத்தை (வில்லிங்டன்‌ தீவு) இணைக்கிறது.

A) கூற்று 1 மற்றும் 3 சரி 

B) கூற்று 2 மற்றும் 3 சரி 

C) கூற்று 1 மற்றும் 2 சரி 

*D) அனைத்து கூற்றுகளும் சரி

55. சுயமரியாதை இயக்க மாநாட்டுச் சொற்பொழிவின் மையக் கருத்தாக இருந்த சொல் எது?

*A. இனம்

B. மதம்

C. சாதி

D. மொழி

56. இந்திய அரசியலமைப்பை கூட்டுறவு கூட்டாட்சி என்று கூறியவர் யார்?

*A. கிரான்வில் ஆஸ்டின்

B. பீமாராவ் அம்பேத்கார்

C. ராஜேந்திர பிரசாத்.

D. சச்சுதானந்த சின்கா.

57) ரத்தத்தில் எத்தனை அணுக்கள் உள்ளன?

A) 2

*B) 3

C) 5

D)7

58 சென்னை புனித ஜார்ச் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியவர் யார்?.

A திருப்பூர் குமரன்.

B சோமையஜலு.

*C ஆரியா.

D சத்யமூர்த்தி.

59) பாமினி சுல்தானியத்தின் நிதி அமைச்சர் யார்?

*A) அமீர் இ ஜிம்லா

B) சதர் இ ஜகன்

C) கொத்துவாள்

D) பேஷ்வா

60. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது?

A. பம்பாய்

B. கல்கத்தா

*C. சென்னை

D. லக்னோ

61) பொருத்துக 

A) இந்துஸ்தான்‌ கப்பல்‌ கட்டும்‌ தளம்‌ – 1) மும்பை

B) கார்டன்‌ ரீச்‌ கப்பல்‌ கட்டும்‌ தொழிற்சாலை – 2) கொச்சி

C) மசாகான்‌ கப்பல்‌ கட்டும்‌ தொழிற்சாலை     – 3) கொல்கத்தா

D) கொச்சி கப்பல்‌ கட்டும்‌ தளம்‌ – 4) விசாகப்பட்டினம்‌

A) 4 3 2 1

B) 3 4 1 2

*C) 4 3 1 2

D) 3 1 4 2

62. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதி பேதம் அற்ற திராவிடர்கள் என பதிவு செய்யுமாறு வலியுறுத்தியவர் யார்?

*A. அயோத்திதாசர்

B. ஜான் திரவியம்

C. அம்பேத்கர்

D. இரட்டைமலை சீனிவாசன்

63. இந்தியாவில் கூட்டாட்சி முறையை முதன் முதலில் கோரிய அறிக்கை யாது?

A. அமைச்சரவை தூதுக்குழு.

*b. நேரு அறிக்கை.

C. மவுண்ட் பேட்டர்ன் திட்டம்

D. ஆகஸ்ட் அறிக்கை.

64) ஹார்மோன்கள் வேதியல் அடிப்படையில் எவ்வாறு காணப்படுகின்றன?

A) அமினோ அமிலங்கள்

B) புரதங்கள்

C) ஸ்டீராய்டுகள்

*D) இவை அனைத்தும்

65 இந்தியாவில் முதல் தற்கொலைப் படை பெண் யார்?.

A ரஷ்யா.

*B குயிலி.

C வடிவு நாச்சியார்.

D ஜான்சிராணி .

66) விஜயநகரப் பேரரசில் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் பள்ளிகள் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ள வெளிநாட்டுப் பயணி யார்? 

A) நுனிஸ்

B) அல்பருணி

C) பார் போஷா

*D) இவீன் பதுதா

67. விபின் சந்திர பால் எப்பொழுது விடுதலை செய்யப்பட்டார்?

*A. 1907 மார்ச் 9

B. 1909 மார்ச் 9

C. 1908 மார்ச் 9

D. 1910 மார்ச் 9

68) இந்தியாவின்‌ முதல்‌ அஞ்சல்‌ வில்லை 1852 ஆம்‌ ஆண்டு___இல் வெளியிடப்பட்டது

A) லாகூர்

*B) கராச்சி

C) டெல்லி 

D) மேற்கு வங்கம்

69. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

A. முடி சூடும் பெருமாள்

B. முத்துக்குட்டி

C. வைகுண்ட சுவாமிகள்

*d. ராமலிங்க அடிகள்

70. பின்வருவனவற்றுள் சரியான கூற்றுகள் யாவை.

1. பாராளுமன்றம் மாநில அரசுக்கு நிதி உதவி அளிக்கும் அதிகாரம் பெற்றுள்ளதை பற்றி குறிப்பிடும் பிரிவு 275.

2. மத்திய அரசால் விதிக்கப்பட்டும் வசூலிக்கப் பட்டும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரி பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 269.

3. மாநிலங்களுக்கிடையே காணப்படும் நதிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி பிரிவு 263 குறிப்பிடுகிறது.

4. மத்திய மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் உறவுகளைப் பற்றி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 245 முதல் பிரிவு 293 வரை  விளக்குகிறது

*a. ஒன்று, இரண்டு, மற்றும் நான்கு சரி.

B. ஒன்று, மற்றும், இரண்டு, சரி.

C. மூன்று, மற்றும், நான்கு, சரி.

D. அனைத்தும் சரி.

71. பின்வரும் கூற்றுகளில் தவறானவை எவை.

1. 1969 ஆம் ஆண்டு, ராஜமன்னார் தலைமையில், மத்திய மாநிலங்களுக்கிடையே ஆன உறவை ஆராய இரண்டு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

2. ராஜமன்னார் குழு அகில இந்திய சேவையை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

3. நிதி ஆணையம் நிறுவப்பட்டு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.

4. நிதி குழு பாகுபாடு இல்லாத நிரந்தர அமைப்பாக மாற வேண்டும் என ராஜமன்னார் குழு பரிந்துரைத்தது.

A. ஒன்று இரண்டு தவறு.

B. ஒன்று, மூன்று, மற்றும் நான்கு தவறு

*c. ஒன்று மட்டும் தவறு.

D. இரண்டு மட்டும் தவறு.

72 சென்னையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட பெண் யார்?.

A ராதாபாய்.

B பத்மாசினி அம்மாள்.

*C துர்காபாய்.

D ருக்மணி இலட்சுமிபதி.

73) விஜயநகரப் பேரரசில் அதவானே என்று அழைக்கப்பட்ட துறை எது? 

*A) நில வருவாய்த் துறை

B) நீதித்துறை 

C) சுங்க மேலாண்மைத் துறை

D) நாணய அச்சக மேலாண்மைத் துறை

74. அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தைத் துவங்கப் போவதாக அன்னிபெசன்ட் அறிவித்த நாள் என்ன?

A. 1915 அக்டோபர் 28

*B. 1915 செப்டம்பர் 28

C. 1915 நவம்பர் 28

D. 1915 டிசம்பர் 28

75 தென்னாட்டு ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?.

A அம்புஜத்தம்மாள்.

*B அஞ்சலையம்மாள்.

C அசாலாம்பிகை அம்மாள்.

D அலமேலு மங்கைத் தாயார்அம்மாள்.

76. மாநில அவசர கால நிதிநிலை நெருக்கடியை பற்றி குறிப்பிடும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 356 கவனமாகவும்  குறைவாகவும் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைத்த குழு எது?

*a. சர்க்காரியா குழு.

B. ராஜமன்னார் குழு

C. மண்டல் குழு

D. ராயல் குழு.

77) பொருத்துக 

A) இருகப்ப தண்ட நாதர் – 1) ரகுநாத அபி யூதயம்

B) ராம பத்திராம்பாள் – 2) ஞானார்த்த ரத்தின மாலை

C) ராமராஜ பூசநர் – 3) வசு சரித்திரம்

D) திருமலம் பால் – 4) வரதாம்பிகா பரிணயம்

A) 1 2 3 4

B) 2 1 4 3

C) 4 3 1 2

*D) 2 1 3 4

78. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?

A. 72

B. 22

C. 62

*D. இரண்டு

79) குமரவேல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 10 சதவீத வட்டி வீதம் இரண்டு ஆண்டுகள் கழித்து ரூபாய் 750 தனி வட்டியாக செலுத்தினால், அசலை காண்க?

A)  2700

B)  7500

*C)   3750

D)  3250802) ரு, 8,000 அசலுக்கு 5 சதவீத வட்டி வீதம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு?

A) 50

B) 41

C) 72

*D) 61

81) ரு, 3,000 அசலுக்கு 10 சதவீத ஆண்டு வட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

A) 963

*B) 993

C) 933

D) 1,233

82) ஒரு எண்ணின் 90% மற்றும் அதே எண்ணின் 72% ஆகியவற்றின் வித்தியாசம் 256 எனில், அந்த எண்ணின் 54 சதவீதம் என்ன?

*A) 768

B) 1,532

C) 947

D) 744

83) ஒரு தொகையின் 12 சதவீதம் என்பது 1,080 எனில், அத்தொகையை காண்க?

A) 12,000

B) 10,000

*C) 9,000

D) 10,200

84) 2:5 :: x:20 எனில் x – இன் மதிப்பை காண்க?

A) 10

B) 4

C) 6

*D) 8

85) ஒரு பொருளின் மதிப்பு முதல் வருட முடிவில் 60 சதவீதம் குறைகிறது. இரண்டாம் வருட முடிவில் 50 சதவீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பு 160 எனில், இரண்டு வருடத்திற்கு முன் அப்பொருளின் மதிப்பு எவ்வளவு?

A) 600

B) 900

C) 700

*D) 800

86) இரு எண்களின் விகிதம் 1:2 இவ்விரு எண்களுடன் 7ஐ கூட்டினால் விகிதமானது 3:5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்?

a. 17

b. 12

*c. 28

d. 36

87) ரூ 800ஐ கூட்டு வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கும், ரூ 840 ஐ நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?

A) 2 1/2%

B) 4%

*C) 5%

D) 6 2/3%

88) 8  1/2 மீட்டர் என்பது 11  1/3 மீட்டரில் எத்தனை சதவீதம்?

A) 60%

B) 72%

*C) 75%

D) 68%

89) கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில், தொடக்க அசலைப்போல் 8 மடங்காக எடுத்துக்கொள்ளும் வருடங்கள் எவ்வளவு?

A) 80 வருடங்கள்

B) 40 வருடங்கள்

C) 20 வருடங்கள்

*D) 30 வருடங்கள்

90)ஒரு பள்ளியில் 1,224 மாணவ மற்றும் மாணவிகள் உள்ளணர். 600 பேர் மாணவிகள் எனில், மாணவிகள் மற்றும் மாணவர்கள் எந்த விகிதத்தில் உள்ளனர்?

A) 13:18

B) 17:21

*C) 25:26

D) 4:5

91) இரு எண்களின் விகிதம் 6:7. அவற்றின் கூடுதல் 260 எனில், அவற்றில் சிறிய எண் எது?

*A) 120

B) 160

C) 320

D) 180 : 12.

92) தனிவட்டிக்கும், கூட்டுவட்டிக்கும் இடையேயான வித்தியாசம் 60. அசல் தொகை 1,500. வருடம் இரண்டு ஆண்டுகள் எனில், வட்டி வீதம் என்ன?

A) 12.5%

B) 15%

*C) 20%

D) 25%

93)5 மற்றும் 80 ன் சராசரி விகிதத்தை காண்க?

*A) 20

B) 42.5

C) 26

D) 22.5

94) ஒரு மருத்துவமனையில் 30 மருத்துவர்களும், 45 உதவியாளர்களும் உள்ளனர். பின்னர் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 உதவியாளர்கள் அதிகரிக்கப்படுகின்றனர். எனில், எத்தனை மருத்துவர்களை சேர்த்தால் விகிதம் மாறாமல்  இருக்கும்?

A) 10

B) 20

C) 30

*D) 40

95) ஒரு தேர்தலில் ஒருவர் 40 சதவீத ஓட்டுகள் பெற்றார். ஆனால் அவர் 298 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். எனில், மொத்த வாக்குகள் எவ்வளவு?

A) 1,290

B) 1,390

*C) 1,490

D) 1,590

96) ஒரு குறிப்பிட்ட தொகை இரண்டு வருடங்களில் ரூபாய் 1,008 ஆகவும் மற்றும் ரூபாய் 1,164 ஆக 3.5 வருடங்களில் ஆகிறது. எனில், அசல் மற்றும் வட்டி வீதத்தை கணக்கிடுக?

A) 900, 12%

*B) 800, 13%

C) 700, 15%

D) 600, 16%

97) ஒரு கலவையில் 5:3 என்ற விகிதத்தில் பாலும், தண்ணீரும் கலந்துள்ளது. 7 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் போது விகிதம் 1:2 என மாறுகிறது. எனில், பாலின் அளவு எவ்வளவு?

A) 7 லிட்டர்

B) 10 லிட்டர்

*C) 5 லிட்டர்

D) 2 லிட்டர்

98) ரூபாய் 800 ஆனத 3 வருட தனிவட்டியில் மொத்தம் 920 ஆக மாறுகிறது. வட்டி வீதம் மூன்று சதவீதம் அதிகரிக்கத்தால் கிடைக்கும் முதிர்வு தொகை என்ன?

A) 892

*B) 992

C) 1,092

D) 990

99. 2, 10, 30, 68, 130 –.

136

*222

131

145

100) 1, 5, 17, 53 –.

*161

163

83

97