*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) பொருந்தாததைத் தேர்ந்தெடு
a) கண்ணன் பாட்டு
b) குயில் பாட்டு
c) பாஞ்சாலி சபதம்
*d) தராசு
2) கடைச் சங்க காலத்தில் கல்வெட்டுகள் கண்ணெழுத்தில் பொறிக்கப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது
a) தொல்காப்பியம்
*b) சிலப்பதிகாரம்
c) மணிமேகலை
d) சீவக சிந்தாமணி
3) தவறான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) பாறைகளில் வளைகோடுகள் பயன்படுத்தப்பட்டன
2) ஓலைகளில் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன
a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
*d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
4) பறவைகளையும் அவற்றின் ஒலிமரபுகளையும் பொருத்துக
A) காகம் – 1) குழறும்
B) புறா – 2) கரையும்
C) ஆந்தை – 3) குனுகும்
D) கூகை – 4) அலறும்
a) 1 2 3 4
b) 2 1 3 4
c) 2 3 1 4
*d) 2 3 4 1
5) பானை என்ற சொல்லுக்கு ஏற்ற வினைமரபு எது
a) முடை
*b) வனை
c) செய்
d) உருவாக்கு
6) சேகரம் என்ற சொல்லின் பொருள் என்ன
a) கடல்
b) சேதம்
c) பஞ்சம்
*d) கூட்டம்
7) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : கோணக்காத்துப் பாட்டு என்பது பஞ்ச காலக் கும்மி ஆகும்
காரணம் : பஞ்ச காலக் கும்மிகள் பஞ்ச காலத்தில் பாடப்பட்டன
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
8) குறிப்பு வினைமுற்று கீழ் வரும் எதனை மட்டும் வெளிப்படையாகக் காட்டும்
*a) செய்பவன்
b) கருவி
c) செயல்
d) காலம்
9) மனிதனுக்கு ஏற்படும் மூவகை நோய்களைப் பற்றிக் கூறும் நூல் எது
a) திரிகடுகம்
b) சிறுபஞ்ச மூலம்
c) ஏலாதி
*d) நீலகேசி
10) நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது
*a) 10
b) 11
c) 12
d) 13
11) “கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா”
இவ்வரிகள் யாருடையது
a) ஆலங்குடி சோமு
b) சே. ராசு
*c) விநாயகம் பிள்ளை
d) வெங்கம்பூர் சாமிநாதன்
12) நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக
A) சந்திரிகையின் கதை – 1) கவிமணி
B) கதர் பிறந்த கதை – 2) பாரதியார்
C) மகளுக்குச் சொன்ன கதை – 3) சுஜாதா
D) தூண்டில் கதைகள் – 4) சே. பிருந்தா
a) 1 2 3 4
b) 1 2 4 3
c) 2 1 3 4
*d) 2 1 4 3
13) படித்தனள் மகிழ்ந்தாள், இலக்கணக் குறிப்பு தருக
a) பெயரெச்சம்
b) வினையெச்சம்
*c) முற்றெச்சம்
d) வினை முற்று
14) “கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு”
இவ்வரிகள் யாருடையது
a) கவிமணி
b) சே. ராசு
c) வெங்கம்பூர் சாமிநாதன்
*d) ஆலங்குடி சோமு
15) பொருத்துக
A) இயற்கை ஓவியம் – 1) திருக்குறள்
B) இயற்கை வாழ்வு இல்லம் – 2) பத்துப்பாட்டு
C) இயற்கைத் தவம் – 3) பெரிய புராணம்
D) இயற்கை அன்பு – 4) சிந்தாமணி
a) 2 1 3 4
*b) 2 1 4 3
c) 1 2 4 3
d) 2 3 4 1
16) “கல்வி என்பது வருவாய் தேடு்ம் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவிற்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்”
இக்கூற்று யாருடையது
a) திரு. வி. க.
b) டாக்டர் முத்து இலட்சுமி ரெட்டி
*c) விஜயலட்சுமி பண்டிட்
d) பெரியார்
17) பெண்ணின் பெருமை என்பது யாருடைய நூல்
a) பெரியார்
b) பாரதியார்
c) பாரதி தாசன்
*d) திரு. வி. க.
18) எல்லைப் பொருளில் வரும் வேற்றுமை எது
a) 4 ஆம் வேற்றுமை
b) 5 ஆம் வேற்றுமை
c) 6 ஆம் வேற்றுமை
*d) 4 மற்றும் 5 ஆம் வேற்றுமை
19) ஒரு சிறு தலைப்பை விரித்துச் சொல்லும் இடத்தில் இட வேண்டிய நிறுத்தற் குறியீடு எது
a) காற்புள்ளி
b) அரைப்புள்ளி
*c) முக்காற்புள்ளி
d) முற்றுப் புள்ளி
20) வண்மொழி, பொருள் தருக
a) வலிமையான மொழி
*b) வளமான மொழி
c) செம்மொழி
d) வலிமையற்ற மொழி
21) சூழ்கலி இலக்கணக் குறிப்பு தருக
a) பண்புத்தொகை
*b) வினைத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
22) என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a) என் + றென்றும்
*b) என்று + என்றும்
c) என்றும் + என்றும்
d) என் + என்றும்
23) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுவது தமிழ்மொழியின் மரபு ஆகும்.
2) இதனைக் கூறும் நூற்பா தொல்காப்பிய பொருளதிகாரத்தின் மொழிமரபு என்னும் இயலில் உள்ளது.
*a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
24) வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A) கோட்டெழுத்து
*B) வட்டெழுத்து
C) சித்திர எழுத்து
D) ஓவிய எழுத்து
25) “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறியவர் யார்
*a) தொல்காப்பியர்
b) பெரியார்
c) பாரதியார்
d) வீரமாமுனிவர்
26) பொருந்தாததைக் காண்க
a) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
b) நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி
c) குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே
*d) நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓரெழுத்து ஒருமொழி
27) நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை
a) க், ங்
b) ச், ஞ்
*c) ட், ண்
d) த், ந்
28) தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
இக்குறளில் அமைந்துள்ள மோனை எது
a) இணை மோனை
b) கூழை மோனை
c) மேற்கதுவாய் மோனை
*d) கீழ்க்கதுவாய் மோனை
29) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
இக்குறளில் பயின்று வரும் அணி எது
a) உவமை அணி
b) எடுத்துக்காட்டு உவமை அணி
*c) இல்பொருள் உவமை அணி
d) உருவக அணி
30) கடலோடாக் கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
இக்குறளில் காணப்படும் எதுகை எது
a) இணை எதுகை
b) பொழிப்பு எதுகை
*c) ஒரூஉ எதுகை
d) முற்று எதுகை
31) பயனில்லாத களர்நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்
a) அன்பில்லாதவர்
b) ஒழுக்கமில்லாதவர்
*c) கல்லாதவர்
d) வலிமையற்றவர்
32) ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்ற நூலை எழுதியவர் யார்
a) சுஜாதா
b) சே. ராசு
*c) குப்புசாமி
d) குலோத்துங்கன்
33) பெரிய புராணத்தின் முதல் நூல் எது
a) திருத்தொண்டர் திருவந்தாதி
*b) திருத்தொண்டர் தொகை
c) திருத்தொண்டர் புராணம்
d) இவற்றில் எதுவும் இல்லை
34) செறிவு எனக் கலித்தொகை கூறுவது எது
a) அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
b) அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
c) வறியவர்களுக்கு உதவி செய்தல்
*d) முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்
35) சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) கலித்தொகையில் உள்ள நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் நல்லந்துவனார்
2) கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்
3) நல்லந்துவனார் சங்கம் மருவிய காலப் புலவர்
*a) 1, 2 சரி
b) 1, 3 சரி
c) 2, 3 சரி
d) 1, 2, 3 சரி
36) கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் வகை எது
a) கல் மூங்கில்
b) மலை மூங்கில்
*c) கூட்டு மூங்கில்
d) காட்டு மூங்கில்
37) “கூம்பொடு மீப்பாய் களையாது”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
a) அகநானூறு
b) ஐங்குறுநூறு
*c) புறநாநூறு
d) கலித்தொகை
38) உடுக்கை பற்றிய சரியான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) உடுக்கையின் உடல் பகுதி இரும்பால் ஆனது
2) இதன் வாய்ப்பகுதி ஆட்டுத் தோலால் பொருத்தப் பட்டிருக்கும்
3) பெரிய உடுக்கையைத் தவண்டை என்றும், சிறிய உடுக்கையைக் குடுகுடுப்பை என்றும் கூறுவர்
4) குறிசொல்லும் போது இக்கருவி இசைக்கப் படுகிறது
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
*c) 2, 3, 4 சரி
d) 1, 2, 3, 4 சரி
39) கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் போன்ற பல வகைக் குழல்கள் காணப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது
a) திருக்குறள்
b) இசை நூல்
*c) சிலப்பதிகாரம்
d) நாச்சியார் திருமொழி
40) சொற்களையும் தொகைநிலைத் தொடர் வகைகளையும் பொருத்துக
A) கம்பர் பாடல் – 1) வினைத்தொகை
B) ஆடுகொடி – 2) வேற்றுமைத்தொகை
C) கருங்குவளை – 3) அன்மொழித்தொகை
D) மடக்கொடி – 4) பண்புத்தொகை
a) 1 2 4 3
*b) 2 1 4 3
c) 2 1 3 4
d) 1 2 3 4
41) கீழ்க்கொடுக்கப் பட்டுள்ளவற்றுள் சேரரின் துறைமுகம் அல்லாதது எது
*a) கொற்கை
b) தொண்டி
c) முசிரி
d) காந்தளூர்
42) கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக அமைந்திருந்தது எது
a) பெரும்பாலை
b) வெள்ளி மலை
c) மதிற்கரை
*d) பழனி
43) ஆன்பொருநை என்ற பெயரால் அழைக்கப்பட்ட நதி எது
*a) அமராவதி
b) நொய்யல்
c) காவிரி
d) பவானி
44) சிலையழகு, இது எவ்வகைப் புணர்ச்சி
*a) உயிரீற்றுப் புணர்ச்சி
b) மெய்யீற்றுப் புணர்ச்சி
c) உயிர்முதல் புணர்ச்சி
d) மெய்முதல் புணர்ச்சி
45) சொற்களையும் புணர்ச்சி வகைகளையும் பொருத்துக
அ) தாய்மொழி – 1) இயல்புப் புணர்ச்சி
ஆ) தமிழ்த்தாய் – 2) தோன்றல்
இ) விற்கொடி – 3) திரிதல்
ஈ) மனமகிழ்ச்சி – 4) கெடுதல்
a) 4 3 2 1
b) 1 2 4 3
*c) 1 2 3 4
d) 2 3 4 1
46) சொற்களைப் பொருளோடு பொருத்துக
அ) மறலி – 1) மலைக்குகை
ஆ) தூறு – 2) புதர்
இ) பிலம் – 3) காலன்
ஈ) அருவர் – தமிழர்
a) 2 4 1 3
*b) 3 2 1 4
c) 1 2 3 4
d) 1 3 4 2
47) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : கலிங்கப் படை கண்ட சோழர்கள் அஞ்சி ஓடினர். கடலில் குதித்தனர். யானையின் பின் மறைந்தனர்
காரணம் : கலிங்கரின் தாக்குதலைக் கண்ட சோழர்கள், வித்தையோ என வியந்தனர். எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
*c) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
d) கூற்று சரி, காரணம் தவறு
48) பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் யார்
a) ஒட்டக்கூத்தர்
b) புகழேந்திப் புலவர்
*c) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
d) குலோத்துங்கச் சோழன்
49) விடுதலைத் திருநாள் என்னும் கவிதை மீராவின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது
a) குக்கூ
b) ஊசிகள்
c) மூன்றும் ஆறும்
*d) கோடையும் வசந்தமும்
50) மீரா நடத்திய இதழின் பெயர் என்ன
a) வட்டத்தொட்டி
*b) அன்னம் விடு தூது
c) கனவு
d) தமிழ் நிலம்
51) எம். ஜி. ஆர் பற்றிய சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்க
1) எம். ஜி. ஆர் அவர்களின் பெற்றோர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்
2) இவர் கோபாலன் – சத்தியபாமா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்
3) மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
4) 1988 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய மாமணி விருது வழங்கப்பட்டது
a) 1, 3 சரி
*b) 2, 4 சரி
c) 2, 3 சரி
d) 1, 4 சரி
52) சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது
a) பெரியபுராணம்
*b) திருமந்திரம்
c) தேவாரம்
d) திருவாசகம்
53) பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
a) எக்காளக் கண்ணி
b) மனோன்மணிக் கண்ணி
c) நந்தீசுவரக் கண்ணி
*d) பராபரக் கண்ணி
54) தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று யாரைப் போற்றுவர்
a) பெரியார்
b) காயிதே மில்லத்
c) அண்ணா
*d) காத்தவராயன்
55) ” என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்தி தாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்.”
இக்கூற்று யாருடையது
*a) பெரியார்
b) அண்ணா
c) பாரதியார்
d) காமராசர்
56) அயோத்திதாசர் எழுதாத நூல் எது
a) புத்தரது ஆதி வேதம்
b) இந்திரர் தேச சரித்திரம்
c) விவாக விளக்கம்
*d) பாலவாகடம்
57) அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பை எந்த ஆண்டு உருவாக்கினார்
a) 1882
b) 1885
*c) 1892
d) 1895
58) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : புதுமைப்பித்தன் சிறுகதை மன்னன் என்று புகழப்படுகிறார்
காரணம் : அவர் சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டுள்ளார்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
59) புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன
a) வேதாச்சலம்
*b) விருதாச்சலம்
c) வெங்கடாச்சலம்
d) மேற்கூறிய எதுவும் இல்லை
60) பாக்களையும் அவற்றின் ஓசைகளையும் பொருத்துக
A) வெண்பா – 1) அகவல் ஓசை
B) ஆசிரியப்பா – 2) செப்பல் ஓசை
C) கலிப்பா – துள்ளல் ஓசை
D) வஞ்சிப்பா – தூங்கல் ஓசை
*a) 2 1 3 4
b) 2 1 4 3
c) 1 2 3 4
d) 1 2 4 3
61) பொருந்தாத இணையைக் காண்க
a) அசை – 2
*b) சீர் – 5
c) அடி – 5
d) தொடை – 8
62) சரியான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) திருப்பாவை நூலை இயற்றியவர் ஆண்டாள்
2) திருவெம்பாவை நூலை இயற்றியவர் காரைக்கால் அம்மையார்
*a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
63) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : இறையரசன் கன்னிப்பாவை நூலை இயற்றினார்
காரணம் : கன்னிப்பாவை திருவெம்பாவை நூலைத் தழுவி எழுதப்பட்டது
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
*c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
64) “கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே…
அவை
கைக்குழந்தைகளல்ல.”
இக்கவிதை வரிகள் யாருடையவை
a) வாலி
b) வைரமுத்து
*c) மு. மேத்தா
d) மீரா
65) மு. மேத்தாவின் எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது
a) கண்ணீர்ப் பூக்கள்
b) சோழநிலா
c) மகுடநிலா
*d) ஆகாயத்திற்கு அடுத்த வீடு
66) விழித்தெழும் என்பதைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a) விழி + எழும்
*b) விழித்து + எழும்
c) விழி + எழும்
d) விழித் + எழும்
67) ஒடுக்கப்பட்ட பாரதம் என்ற இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்
a) 1924
*b) 1927
c) 1931
d) 1937
68) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது
a) பண்டைய கால இந்திய வணிகம்
b) ரூபாய் பற்றிய பிரச்சனை
*c) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
d) இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்
69) அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய ஆண்டு எது
a) 1955
*b) 1956
c) 1957
d) 1954
70) கோமகளுக்குத் தமிழக அரசி்ன் விருதைப் பெற்றுத்தந்த நூல் எது
a) அன்பின் சிதறல்
*b) அன்னை பூமி
c) உயிர் அமுதாய்
d) நிலாக்கால நட்சத்திரங்கள்
71) கோமகள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) கோமகள் அவர்களின் இயற்பெயர் இராஜலட்சுமி
2) இவர் எழுதிய பால்மனம் என்னும் சிறுகதை அன்பின் சிதறல் என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
3) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினைப் பெற்றுள்ளார்
a) 1, 2 சரி
*b) 1, 3சரி
c) 2, 3 சரி
d) 1, 2, 3 சரி
72) உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது எவ்வகை அணி
a) உவமை அணி
b) வேற்றுமை அணி
*c) பிறிதுமொழிதல் அணி
d) இரட்டுறமொழிதல் அணி
73) “பெருநீரால் வாரி சிறக்க”
இவ்வடியில் உள்ள வாரி என்ற சொல்லின் பொருள் என்ன
a) கடல்
b) பயிர்
*c) வருவாய்
d) வித்து
74) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : தர்மபுரிக்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் தகடூர்
காரணம் : தகடூர் யாத்திரை தர்மபுரியின் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் ஆகும்
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
*c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
75) வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க
1) அந்த, இந்த எனும் சுட்டுத் திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
2) எந்த எனும் வினாத் திரிபை அடுத்து வல்லினம் மிகும்
3) இரண்டாம் வேற்றுமையின் உருபான ஐ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்
4) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தை அடுத்து வல்லினம் மிகும்
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
c) 2, 3, 4 சரி
*d) 1, 2, 3, 4 சரி
76) பொருத்துக:
A) சமுதாயப் புரட்சி 1) பாரதியார்
B) புதுக்கவிதை 2) பாரதிதாசன்.
C) பொதுவுடமை 3) மறைமலை அடிகள்.
D) தனித் தமிழ் 4) திரு வி கல்யாண சுந்தரனார்
*a) 2 1 4 3.
B) 3 1 2 4.
C) 4 2 3 1.
D) 1 2 3 4
77) ஜி யு போப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறான இணையைக் காண்க.
A) ஜி யு போப் 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
*B) ஜி யு போப் திருக்குறளை 41 ஆண்டுகள் படித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
C) ஜி யு போப் 1900 ஆம் ஆண்டு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
D) தன்னைத் தமிழ் மாணவன் என்று அறிவித்துக் கொண்டார்.
78) வீடெல்லாம், நாடெல்லாம், மக்களின் இதயக் கூடெல்லாம் ஏடெல்லாம்இன்பத் தமிழ் மணக்க வேண்டும் என்று தமிழ்ப் பணியாற்றியவர் யார்?
A) சுரதா
B) வாணிதாசன்
C) பாரதியார்.
*d) பாரதி தாசன்
79) குழவி பிணியின்றி வாழுதல் இனிது எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
* a) பூதஞ் சேந்தனார்
B) கண்ணன் கூத்தனார்
C) மதுரை கூடலூர்க் கிழார்
D) நல்லாதனார்
80) ஆனந்தத் தேன் என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர் யார்?
A) பா ஜீவானந்தம்
*b) கா சச்சிதானந்தன்
C) மறைமலை அடிகளார்.
D) பரிதிமாற் கலைஞர்
81) (தேன் நுகர் வண்டு மது தனை உண்டு தயங்கியே கிடந்ததைக் கண்டு) என்னும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
A) சீவக சிந்தாமணி.
*b) விவேக சிந்தாமணி.
C) ஆனந்த தேன்.
D) நளவெண்பா.
82) அசலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்களுள் பொருந்தாததை காண்க.
A) குழந்தை சுவாமிகள் பதிகம்.
*b) குழந்தை இலக்கியம்.
C) ஆத்திச்சூடி வெண்பா
D) காந்தி புராணம்
83) நான் கண்ட பாரதம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
*a) அம்புஜத்தம்மாள்
B) அஞ்சலை அம்மாள்.
C) அசலாம்பிகை அம்மையார்
D) வேலு நாச்சியார்
84) நாடக உலகின் இமயமலை என்றும், தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றும் அழைக்கப்படுபவர் யார்?
A) பரிதிமாற் கலைஞர்
B) பம்மல் சம்பந்தனார்
*c) சங்கரதாச சுவாமிகள்
D) நா முத்துசாமி
85) (தாதுகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்) இப்பாடல் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள காண்டம் யாது?
A) சுந்தர காண்டம்.
B) ஆரண்ய காண்டம்.
C) அயோத்தியா காண்டம்
*d) பால காண்டம்
86) சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என குறிப்பிடும் நூல் எது?
A) பரிபாடல்
B) திருவள்ளுவமாலை
*C) திருக்குறள்
d) நற்றிணை
87) (வளவன் ஏவா வானூர்தி) எனக் குறிப்பிடும் நூல் எது?
A) அகநானூறு.
*b) புறநானூறு.
C) சீவக சிந்தாமணி.
D) நற்றிணை.
88) வில்லி பாரதத்தில் உள்ள பருவங்கள் மற்றும் விருத்தப்பாக்களின் எண்ணிக்கை யாவை?
*a) 10 மற்றும் 4350.
B) 20, மற்றும் 3000
C) 36, மற்றும் 3615.
D) 5 மற்றும் 412.
89) காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்ல என்று கூறியவர் யார்?
A) எத்திராசலூ
*b) துரைராசு
C) பெருஞ்சித்திரனார்
D) பாரதிதாசன்
90) தமிழை ஆள் என வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
A) பரிதிமாற் கலைஞர்
B) பெருஞ்சித்திரனார்.
C) இளங்குமரனார்
*D) தேவநேய பாவாணர்
91) நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லை எனில் எப்போதோ தனது வாழ்க்கையை இழந்திருக்க கூடும் எனக் கூறியவர் யார்?
A) வீரமாமுனிவர்
B) தேவநேயப் பாவாணர்
*c) மகாத்மா காந்தி
D) திரு வி கல்யாண சுந்தரனார்
92) குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
A) நன்னூல்
B) புறப்பொருள் வெண்பா மாலை.
C) தண்டி அலங்காரம்
*d) தொன்னூல் விளக்கம்.
93) (முத்தே பவளமே மொய்த்த பசும் சுடரே) எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
A) குனங்குடி மஸ்தான்.
*b) தாயுமானவர்
C) முத்துராமலிங்கத் தேவர்.
D) வள்ளலார்
94) (வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே) என்று பாடியவர் யார்?
A) வாணிதாசன்
B) பாரதியார்
*c) பாரதி தாசன்
D) கண்ணதாசன்
95) வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகிறார் எனக் கூறியவர் யார்?
A) கால்டுவெல்
B) ஜி யு போப்
*c) ரா. பி. சேதுப்பிள்ளை.
D) மேற்கூறிய எவரும் இல்லை.
96) வசன நடை கைவந்த வள்ளலார் என ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?
A) நீலாம்பிகை அம்மையார்
*b) பரிதிமாற் கலைஞர்
C) ரா.பி. சேதுப்பிள்ளை
D) மறைமலை அடிகளார்.
97) கா சச்சிதானந்தன் ஆனந்தத் தேன் என்ற கவிதைத் தொகுப்பை எந்த ஆண்டு வெளியிட்டார்.
A) 1952.
B) 1964.
C) 1959.
*d) 1954.
98) நளவெண்பாவில் காணப்படும் பாக்களின் எண்ணிக்கை யாவை?
*a) 431.
B) Hundred.
C) 105.
D) 432.
99) திரு வி. கல்யாண சுந்தரனார் இக்கால ஔவையார் என்று யாரைப் பாராட்டியுள்ளார்.
A) நீலாம்பிகை அம்மையார்
*b) அசலாம்பிகை அம்மையார்
C) அஞ்சலை அம்மாள்.
D) அம்புஜத்தம்மாள்
100) மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி விடுதலை உணர்வை ஊட்டியவர் யார்?
A) அம்மா கண்ணு.
*b) அம்புஜத்தம்மாள்
C) அஞ்சலை அம்மாள்.