*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்
a) ச. அகத்தியலிங்கம்
*b) குமரிலபட்டர்
c) பாவாணர்
d) ஹீராஸ் பாதிரியார்
2) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை ஆய்ந்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்
a) கால்டுவெல்
b) வில்லியம் ஜோன்ஸ்
*c) ஹோக்கன்
d) ஹீராஸ் பாதிரியார்
3) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் எந்த ஆண்டு வெளியிட்டார்
a) 1846
*b) 1856
c) 1866
d) 1876
4) பொருந்தாத ஒன்றைக் கண்டறி
a) கோண்டா
b) கோண்டி
c) கோலாமி
*d) கோத்தா
5) “மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதிநட”
இப்பாடல் அடிகள் யாருடையது
a) பாரதியார்
b) சுரதா
*c) ஈரோடு தமிழன்பன்
d) கவியோகி சுத்தானந்த பாரதி
6) பொருத்துக
a) 8 – 1) சுவை
b) 9 – 2) வனப்பு
c) 100 – 3) குணங்கள்
d) 110 – 4) வண்ணம்
a) 1 2 3 4
b) 2 1 3 4
*c) 2 1 4 3
d) 4 2 1 3
7) சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) தூது இலக்கியங்கள் சங்க இலக்கியம், வாயில் இலக்கியம் என்றும் அழைக்கப்படுகின்றன
2) 1921 ஆம் ஆண்டு உ. வே. சா. தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தார்
3) தூது இலக்கியங்கள் கலிவெண்பாவால் ஆனவை
a) 1 மட்டும் சரி
b) 1, 2 சரி
c) 1, 3 சரி
*d) 3 மட்டும் சரி
8) பயனிலை, எழுவாய், செயப்படு பொருள், இவ்வரிசையில் அமைந்த தொடரைக் காண்க
a) நான் பாடத்தைத் படித்தேன்
*b) படித்தேன் நான் பாடத்தை
c) படித்தேன் பாடத்தை நான்
d) நான் படித்தேன் பாடத்தை
9) “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி”, இவ்வடி யாருடையது
a) மாங்குடி மருதனார்
b) தொ. பரமசிவன்
*c) ஆண்டாள்
d) குடபுலவியனார்
10) தமிழ்விடு தூது எத்தனை கண்ணிகளைக் கொண்டது
*a) 268
b) 368
c) 88
d) 68
11) தவறான இணையைக் கண்டறிக
a) மது வேரி
b) பணிலம் சுரிவளை
c) மேதி பகடு
*d) கோடு சிமயம்
12) சேக்கிழார் யாரிடம் முதலமைச்சராகப் பணியாற்றினார்
a) ராசராசன்
b) முதலாம் குலோத்துங்கன்
*c) இரண்டாம் குலோத்துங்கன்
d) மூன்றாம் குலோத்துங்கன்
13) “பக்திச் சுவை னநிச் சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவ” என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்
a) பாரதியார்
b) திரு. வி. க.
*c) மீனாட்சி சுந்தரனார்
d) உ. வே. சா.
14) ஏரியைக் கண்மாய் என்று எந்தப் பகுதியில் அழைத்தனர்
a) சேர மண்டலம்
b) சோழ மண்டலம்
*c) பாண்டிய மண்டலம்
d) தொண்டை மண்டலம்
15) கந்தர்வனின் இயற்பெயர் என்ன
a) ராசலிங்கம்
*b) நாகலிங்கம்
c) சொக்கலிங்கம்
d) ராமலிங்கம்
16) “அவன் எழுதிப் பார்த்தான்” இது எவ்வகை வினை
a) செயப்பாட்டு வினை
b) ஏவல் வினை
*c) கூட்டு வினை
d) காரண வினை
17) வாய்க்கால் மீன்கள் என்பது யாருடைய நூல்
a) கோமல் சாமிநாதன்
b) வைரமுத்து
*c) வெ. இறையன்பு
d) மா. கிருஷ்ணன்
18) “எழுந்தது துகல், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள மருப்பு என்ற சொல்லின் பொருள் என்ன
a) காளை
*b) கொம்பு
c) வீரன்
d) ஏரு தழுவுதல்
19) ஏரு தழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் எது
a) நன்னூல்
b) அகப்பொரள் இலக்கணம்
*c) புறப்பொருள் வெண்பா மாலை
d) தண்டியலங்காரம்
20) திமிலுடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
a) கரிக்கையூர்
b) சேலம்
c) கல்லூத்து மேட்டுப்பட்டி
*d) சித்திரக்கல் புடவி
21) தாழ்பூந்துறை இலக்கணக் குறிப்பு தருக
*a) வினைத்தொகை
b) வேற்றுமைத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
22) கீழ்வரும் கூற்றுகளை ஆய்க
1) நன்னூல் புலவன் என்று குறிப்பிடப்பட்டவர் இலங்கோவடிகள்
2) இளங்கோவடிகளை நன்னூல் புலவன் என்று கூறியவர் சீத்தலைச் சாத்தனார்
a) 1தவறு, 2 சரி
b) 2 தவறு, 1 சரி
c) 1, 2 இரண்டும் சரி
*d) 1, 2 இரண்டும் தவறு
23) இந்தியாவில் எங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் முதல் கற்கருவி கிடைத்தது
a) அரிக்கமேடு
b) ஆதிச்சனல்லூர்
c) கீழடி
*d) பல்லாவரம்
24) கீழ்வரும் எந்த இலக்கியத்தில் பட்டிமண்டபம் என்ற சொல் இடம்பெறவில்லை
a) சிலப்பதிகாரம்
b) மணிமேகலை
c) கம்பராமாயணம்
*d) பெரிய புராணம்
25) வல்லினம் மிகுமிடம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை
1) அ, இ ஆகிய சுட்டெழுத்துக்குப் பின் வல்லினம் மிகும்
2) அந்த, இந்த ஆகிய சுட்டுப் பெயருக்குப் பின் வல்லினம் மிகும்
3) எண்ணுப் பெயர்களில் பத்து எனும் எண்ணுப் பெயருக்குப் பின் மட்டும் வல்லினம் மிகும்
4) ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்
a) 1, 2, 3 சரி
*b) 1, 2, 4 சரி
c) 2, 3, 4 சரி
d) 1, 2, 3, 4 சரி
26) திருக்குறள் செய்திகள் பற்றிய தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் பரிமேலழகர்
2) வள்ளுவர் கோடி எனும் எண்ணுப் பெயரை எட்டு முறை பயன்படுத்தியுள்ளார்
3) ஏழு எனும் எண்ணுப் பெயர் திருக்குறளில் ஏழு இடங்களில் காணப்படுகிறது
a) 1, 2 தவறு
b) 2, 3 தவறு
c) 1, 3 தவறு
*d) 1, 2, 3 தவறு
27) சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்
a) 5
b) 6
*c) 7
d) 8
28) “எந்திர ஊர்தி இயற்றுமின்
இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் உள்ளது
*a) நாமகள் இலம்பகம்
b) பூமகள் இலம்பகம்
c) மண்மகள் இலம்பகம்
d) குணமாலையார் இலம்பகம்
29) தொல்காப்பியரின் அறிவு வகைபாட்டைப் பொருத்துக
a) சுவை – 1) ஐந்தாம் அறிவு
b) முகர்தல் – 2) நான்காம் அறிவு
c) பார்த்தல் – 3) மூன்றாம் அறிவு
d) கேட்டல் – 4) இரண்டாம் அறிவு
a) 1 2 3 4
b) 2 1 4 3
c) 4 1 2 3
*d) 4 3 2 1
30) தனது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்ற பெயரில் நூலாக வெளியிட்டவர் யார்
a) சிவன்
b) வளர்மதி
*c) மயில்சாமி அண்ணாதுரை
d) அருணன் சுப்பையா
31) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : அடுக்குத் தொடரின் பின் வல்லினம் மிகும்
காரணம் : அதற்கான எடுத்துக்காட்டு பாம்பு பாம்பு
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
*d) கூற்று தவறு, காரணம் சரி
32) டாக்டர் முத்து இலட்சுமி பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) டாக்டர் முத்து இலட்சுமியின் காலம் 1886/1968
2) சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்
3) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் இவர் ஆவார்
4) சென்னையின் முதல் மேயர் இவர் ஆவார்
*a) 1, 3 சரி
b) 1, 4 சரி
c) 1, 2, 3 சரி
d) 1, 2, 4 சரி
33) “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ”
இது யாருடைய கூற்று
a) பெரியார்
b) பாரதியார்
*c) பாரதிதாசன்
d) அறிஞர் அண்ணா
34) பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பது யாருடைய நூல்
*a) நீலாம்பிகை
b) மூவலூர் ராமாமிர்தம்
c) டாக்டர் முத்து இலட்சுமி ரெட்டி
d) பண்டித ரமாபாய்
35) கல்வி உடைய பெண்களை பாரதிதாசன் எதற்கு ஒப்புமைப் படுத்துகிறார்
a) மரம்
b) களர்நிலம்
c) விலங்கு
*d) திருந்திய கழனி
36) “பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு
இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது
a) உவமை அணி
*b) எடுத்துக்காட்டு உவமை அணி
c) உருவக அணி
d) ஏகதேச உருவக அணி
37) கீழ் வரும் எந்த இதழில் அண்ணா உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்
a) ஹோம்லேண்ட்
b) ஹோம்ரூல்
*c) விடுதலை
d) திராவிட நாடு
38) இந்திய நூலகங்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
2) அதிகமான தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம் அறிஞர் அண்ணா நூலகம்
3) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
4) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் கல்கத்தாவில் உள்ளது
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
*c) 1, 3, 4 சரி
d) 2, 3, 4 சரி
39) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : ஆகஸ்டு 9 ஆம் நாள் நூலக நாளாக அனுசரிக்கப்படுகிறது
காரணம் : ஆகஸ்டு 9 ஆம் நாள் அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாள்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
40) உம் எனும் இடைச்சொல் கீழ் வரும் எந்தப் பொருளில் மட்டும் வராது
a) எதிர்மறை
*b) வினா
c) அளவை
d) ஐயம்
41.கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : இது பூ அல்ல என்பது இலக்கண முறைப்படிப் பிழையான தொடராகும்
காரணம் : அல்ல என்ற சொல் பன்மையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
42) பத்து உறுப்புகள் சிற்பத் தொழிற்கு உறியவை என்று கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
ா. மணிமேகலை
*c) திவாகர நிகண்டு
d) சிற்ப நூல்
43) கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் பாண்டியர் காலச் சிற்பங்கள் காணப்படாத இடம் எது
a) திருமயம்
*b) திருச்சி
c) திருப்பரங்குன்றம்
d) பிள்ளையார் பட்டி
44) மாளிகைகளில் சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
*b) மணிமேகலை
c) புறநானூறு
d) அகநானூறு
45) கோயில்களையும் கோயில்களைக் கட்டியவர்களையும் பொருத்துக
a) தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் – 1) ராஜேந்திரன்
b) கங்கைகொண்ட சோழபுரம் – 2) இரண்டாம் ராஜராஜன்
c) தாராசுரம் – 3) மூன்றாம் குலோத்துங்கன்
d) திரிபுவன வீரேஸ்வரம் – 4) முதலாம் ராஜராஜன்
a) 4 1 3 2
b) 4 2 1 3
c) 4 3 1 2
*d) 4 1 2 3
46) கீழ்க்காணும் இடங்களில் உலோகப் படிமைகள் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படாத இடம் எது
a) சுவாமி மலை
b) கும்பகோணம்
*c) மாமல்லபுரம்
d) மதுரை
47) ஆடை அணிகலன்களுடன் கூடிய சிற்பங்கள் யார் காலத்தில் தோன்றின
a) பல்லவர் காலம்
b) பாண்டியர் காலம்
*c) விஜயநகர காலம்
d) நாயக்கர் காலம்
48) “வாய்வெரீஇ”, இது எவ்வகை அளபடை
a) செய்யுளிசை அளபடை
*b) சொல்லிசை அளபடை
c) இன்னிசை அளபடை
d) ஒற்றளபடை
49) சதிர் என்ற சொல்லின் பொருள் என்ன
a) விளக்கு
b) மாலை
c) பாடல்
*d) நடனம்
50) நூல்களையும் அவற்றிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a) அன்பளிப்பு – 1) 1970
b) சக்தி வைத்திய சாலை – 2) 1987
c) முதலில் இரவு வரும் – 3) 1977
d) அப்பாவின் சிநேகிதர் – 4) 1996
a) 1 2 3 4
*b) 1 3 2 4
c) 4 3 2 1
d) 4 2 3 1
51) தி. ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற பயன அனுபவங்களை எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்
a) நடந்தாய் வாழி காவேரி
b) அடுத்த வீடு ஐம்பது மைல்
*c) கருங்கடலும் கலைக்கடலும்
d) உதைய சூரியன்
52) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : சே + அடி சேவடி, சேயடி ஆகிய இரு விதமாகப் புணரும்
காரணம் : ஏகார ஈற்றுக்கு ய, வ ஆகிய இரண்டும் உடம்படுமெய்யாக வரும்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
53) கதிர்கள் நிமிர்ந்து நிற்பதைத் திருத்தக்க தேவர் எதனோடு ஒப்புமைப்படுத்துகிறார்
a) கல்லாதவர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்
*b) பக்குவமில்லாத செல்வர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்
c) விலங்குகள் தலை நிமிர்ந்து நிற்றல்
d) போரில் வெற்றி பெற்ற அரசன் தலை நிமிர்ந்து நிற்றல்
54) “அல்லல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ”
இவ்வடியில் சேரு என்ற பொருள் தரும் சொல் எது
*a) அல்லல்
b) பழனம்
c) அரக்கு
d) ஆம்பல்
55) மதுரைக்காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனாரின் எத்தனை பாடல்கள் எட்டுத்தொகையில் உள்ளன
a) 11
b) 22
c) 35
*d) 13
56) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : மதுரையில் உள்ள மாட்டுத் தாவணி மாடுகள் விற்கப்படும் சந்தையாக இருந்தது
காரணம் : தாவணி என்ற சொல்லுக்குச் சந்தை என்று பொருள்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
57) நான் வள்ளுவரைப் படித்தேன்
இது எவ்வகை ஆகுபெயர்
a) பொருளாகு பெயர்
b) சினையாகு பெயர்
c) கருவியாகு பெயர்
*d) கருத்தாவாகு பெயர்
58) எழுத்துச் சீர்திருத்தங்களை எந்த இதழில் பெரியார் மேற்கொண்டார்
a) குடியரசு
b) விடுதலை
c) புரட்சி
*d) பகுத்தறிவு
59) யுனஸ்கோ நிருவனம் எந்த ஆண்டு பெரியாருக்குத் தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் என்ற பட்டத்தை வழங்கியது
a) 1938
b) 1939
*c) 1970
d) 1971
60) ரேவதி என்னும் புனைப்பெயரில் கவிதை எழுதியவர் யார்
a) பெரியார்
b) ரங்கராஜன்
*c) ந. பிச்சமூர்த்தி
d) வ. சே. குழந்தைசாமி
61) எதனைக் காக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது
a) அறம்
*b) ஞானம்
c) அறிவு
d) வெகுளி
62) யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்
*a) 3
b) 2
c) 4
d) 6
63) பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்
a) பெரியார்
b) அண்ணா
c) கருணாநிதி
*d) வே. ஆனைமுத்து
64) இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது, என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்
a) ஜி. யூ. போப்
b) கால்டுவெல்
c) வீரமாமுனிவர்
*d) ஆல்பர்ட் சுவைச்சர்
65) உலகத் தமிழ் மாநாடுகளையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக
a) கோலாலம்பூர் – 1) 1966
b) சென்னை – 2) 1968
c) மதுரை – 1981
d) மொரேஷியஸ் – 1989
a) 2 1 4 3
b) 1 3 2 4
c) 1 3 4 2
*d) 1 2 3 4
66) எந்த அமைப்பு தோன்றத் தனிநாயக அடிகள் காரணமாய் இருந்தார்
*a) அகில உலகத் தமிழாய்வு மன்றம்
b) தமிழ் பண்பாடு
c) தமிழ் வளர்ச்சிக் கழகம்
d) 1 மற்றும் 2
67) கல்யான் ஜி அவர்களின் நூல்களையும் நூல் வகைகளையும் பொருத்துக
a) முன்பின் – 1) சிருகதை
b) அகமும் புறமும் – 2) கவிதை
c) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – 3) கட்டுரை
d) சில இறகுகள் சில பறவைகள் – 4) கடிதம்
a) 2 1 3 4
*b) 2 3 1 4
c) 1 2 3 4
d) 3 1 2 4
68) குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்
a) உ. வே. சா.
b) சீ. வை. தாமோதரம்பிள்ளை
c) தனிநாயக அடிகள்
*d) சௌரி பெருமாள் அரங்கனார்
69) பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்
*a) சேரர்
b) சோழர்
c) பாண்டியர்
d) பல்லவர்
70) தேவர் அணையர் கயவர் அவருந்தான்
மேவன செய்தொழுக லால் இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள அணி எது
a) உவமை அணி
b) உருவக அணி
c) ஏகதேச உருவக அணி
*d) வஞ்சப் புகழ்ச்சி அணி
71) அந்தாதியில் அமைந்த செய்யுள்களைப் பாடுவதில் வல்லவர் யார்
a) கம்பர்
b) புகழேந்தி
c) இரட்டையர்கள்
*d) ஒட்டக்கூத்தர்
72) கொற்கை முத்தின் சிறப்பு பற்றிக் கூறும் நூல் எது
a) தாலமியின் பூகோல நூல்
a) தொல்காப்பியம்
*c) அர்த்த சாஸ்திரம்
d) கவிராஜ மார்க்கம்
73) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : யவனர்கள் முசிரி துறைமுகத்திலிருந்து மிளகை ஏற்றுமதி செய்தனர்
காரணம் : பொன்னொடு வந்து கரியொடு பெயரும் என்ற அகநானூற்றுப் பாடல் இதற்குச் சான்றாகும்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
74) கடற்பயனத்தின்போது பயன்படுத்தப்பட்ட காந்த ஊசி பற்றிக் கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
*b) மணிமேகலை
c) தொல்காப்பியம்
d) பதிற்றுப்பத்து
75) பேரழகு இலக்கணக் குறிப்பு தருக
a) வினைத்தொகை
*b) பண்புத்தொகை
c) வேற்றுமைத்தொகை
d) உவமைத்தொகை
76) இந்தியாவை மொழிகளின் காட்சி சாலை என்று குறிப்பிட்டவர் யார்
A) ஹீராஸ் பாதிரியார்
B) குமரிளபட்டர்
*C) ச. அகத்தியலிங்கம்
D) கால்டுவெல்
77) மிசை -என்பதன் எதிர்ச்சொல் என்ன
*a) கீழே
b) மேலே
c) இசை
d) வசை
78) ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்ட ஆண்டு எது
A) 1863
B) 1864
C) 1913
*D) 1914
79) தருவாய் நிழல்தான் தருவாய்; நிதம்என்
வருவாய் எனநீ வருவாய்; – ஒருவாய்
உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று!
இப்பாடலின் ஆசிரியர் யார்
*A) கவிஞர் வாலி
B) ம.இலே. தங்கப்பா
C) வைரமுத்து
D) தமிழ் ஒளி
80) எந்த ஆற்றுத் துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
A) காவிரி
B) பவானி
*C) அமராவதி
D) நொய்யல்
81) மரபு இணைச் சொற்களில் தவறானது எது
A) மேலும் கீழும்
B) நகமும் சதையும்
*C) கேளிக்கையும் வாடிக்கையும்
D) கண்ணும் கருத்தும்
82) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
a) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
b) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
c) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
*d) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
83) வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது
A) ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்
B) கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்
C) என, ஆக போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்
*D) உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்
84) “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”
இவ்வடி இடம்பெறும் நூல் எது
A) தொல்காப்பியம்
*B) நன்னூல்
C) தண்டியலங்காரம்
D) யாப்பருங்கலம்
85) “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்”
இவ்வடி இடம்பெறும் நூல் எது
A) திருவாசகம்
*B) கம்பராமாயணம்
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
86) மணிமேகலை காப்பியம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) இக்காப்பியத்திற்கு மணிமேகலைத் துறவு எண்ணும் வேறு பெயரும் உண்டு
2) இது சமண சமயச் சார்புடையது
3) இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்
4) கதை அடிப்படையில் மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர்
A) 1, 2, 3 சரி
B) 1, 2, 4 சரி
*C) 1, 3, 4 சரி
D) அனைத்தும் சரி
87) எண்பேராயத்திற்குத் தொடர்பில்லாதவர் யார்
A) கரும விதிகள்
B) கனகச்சுற்றம்
C) கடைக்காப்பாளர்
*D) அமைச்சர்
88) சொல்லையும் பொருளையும் பொருத்துக
A) தோம் – 1) மாலை
B) விலோதம் – 2) பொன்
C) தாமம் – 3) குற்றம்
D) பொலம் – 4) துணியாலான கொடி
A) 3 1 4 2
*B) 3 4 1 2
C) 4 3 1 2
D) 2 1 3 4
89) நூல்களையும் நூலாசிரியர்களையும் பொருத்துக
A) தண்ணீர் தண்ணீர் – 1) வைரமுத்து
B) தண்ணீர் தேசம் – 2) கோமல் சுவாமிநாதன்
C) வாய்க்கால் மீன்கள் – 3) மா. கிருஷ்ணன்
D) மழைக்காலமும் குயிலோசையும் – 4) வெ. இறையன்பு
A) 2 1 3 4
*B) 2 1 4 3
C) 2 4 1 3
D) 2 3 1 4
90) பழமொழியை நிறைவு செய்க
———- தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது
A) ஆற்றுத் தண்ணீரை
B) ஊற்றுத் தண்ணீரை
*C) கிணற்றுத் தண்ணீரை
D) குளத்துத் தண்ணீரை
91) தமிழில் ஏறத்தாழ எத்தனை துணைவினைகள் உள்ளன
A) 30
*B) 40
C) 50
D) 60
92) கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
A) சாப்போ
B) பாய்யியோனா
*C) இளிகியா
D) எறிதிரை
93) பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்வது எந்த நூல்
A) அகநானூறு
B) நற்றிணை
C) குறுந்தொகை
*D) புறநானூறு
94) “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!”
இ்ப்பாடல் அடிகள் யாருடையவை
B) மாங்குடி மறுதனார்
B) ஔவையார்
C) கபிலர்
*D) குடபுலவியனார்
95) “வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம்
கானலின் நீரோ? – வெறுங் காட்சிப் பிழைதானோ?”
இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்
A) கவிஞர் தமிழ் ஒளி
*B) பாரதியார்
C) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
D) வைரமுத்து
96) ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ள நூல் எது
A) திருத்தொண்டத் தொகை
*B) திருத்தொண்டர் திருவந்தாதி
C) திருத்தொண்டர் புராணம்
D) பெரியபுராணம்
97) கவிஞர் தமிழ் ஒளியின் நூல்களுள் தவறானது எது
A) கவிஞனின் காதல்
B) கண்ணப்பன் கிளிகள்
C) குருவிப்பட்டி
*D) தமிழர் வரலாறு
98) தமிழகத்தில் காணப்பட்ட நீர்நிலைகளும் அவற்றிற்குறிய பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறான இணையைக் காண்க
1) ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
2) இலஞ்சி – பல வகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
3) குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
4) குண்டம் – சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
A) 1, 2
B) 1, 3
C) 2, 3
*D) 3, 4
99) கலைச்சொற்களைப் பொருத்துக
A) browser – 1) ஏவி
B) crop – 2) செதுக்கி
C) cursor – 3) உலவி
D) server – 4) வையக விரிவு வலை வழங்கி
A) 1 2 3 4
B) 2 1 4 3
C) 3 1 2 4
*D) 3 2 1 4
100) தமிழர்களின் சிறப்பு விருந்தோம்பல். இது எவ்வகை தொடர்
a) வினாத்தொடர்
b) கட்டளைத்தொடர்
*c) செய்தித்தொடர்
d) உணர்ச்சித்தொடர்