*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) பொருந்தாததைத் தேர்ந்தெடு
a) கண்ணன் பாட்டு
b) குயில் பாட்டு
c) பாஞ்சாலி சபதம்
*d) தராசு
2) கடைச் சங்க காலத்தில் கல்வெட்டுகள் கண்ணெழுத்தில் பொறிக்கப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது
a) தொல்காப்பியம்
*b) சிலப்பதிகாரம்
c) மணிமேகலை
d) சீவக சிந்தாமணி
3) தவறான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) பாறைகளில் வளைகோடுகள் பயன்படுத்தப்பட்டன
2) ஓலைகளில் நேற்கோடுகள் பயன்படுத்தப்பட்டன
a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
*d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
4) பறவைகளையும் அவற்றின் ஒலிமரபுகளையும் பொருத்துக
அ) காகம் – 1) குழறும்
ஆ) புறா – 2) கரையும்
இ) ஆந்தை – 3) குனுகும்
ஈ) கூகை – 4) அலறும்
a) 1 2 3 4
b) 2 1 3 4
c) 2 3 1 4
*d) 2 3 4 1
5) பானை என்ற சொல்லுக்கு ஏற்ற வினைமரபு எது
a) முடை
*b) வனை
c) செய்
d) உருவாக்கு
6) சேகரம் என்ற சொல்லின் பொருள் என்ன
a) கடல்
b) சேதம்
c) பஞ்சம்
*d) கூட்டம்
7) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : கோணக்காத்துப் பாட்டு என்பது பஞ்ச காலக் கும்மி ஆகும்
காரணம் : பஞ்ச காலக் கும்மிகள் பஞ்ச காலத்தில் பாடப்பட்டன
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
8) குறிப்பு வினைமுற்று கீழ் வரும் எதனை மட்டும் வெளிப்படையாகக் காட்ட்ும்
*a) செய்பவன்
b) கருவி
c) செயல்
d) காலம்
9) மனிதனுக்கு ஏற்படும் மூவகை நோய்களைப் பற்றிக் கூறும் நூல் எது
a) திரிகடுகம்
b) சிறுபஞ்ச மூலம்
c) ஏலாதி
*d) நீலகேசி
10) நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது
*a) 10
b) 11
c) 12
d) 13
11) “கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா”
இவ்வரிகள் யாருடையது
a) ஆலங்குடி சோமு
b) சே. ராசு
*c) விநாயகம் பிள்ளை
d) வெங்கம்பூர் சாமிநாதன்
12) நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக
அ) சந்திரிகையின் கதை – 1) கவிமணி
ஆ) கதர் பிறந்த கதை – 2) பாரதியார்
இ) மகளுக்குச் சொன்ன கதை – 3) சுஜாதா
ஈ) தூண்டில் கதைகள் – 4) சே. பிருந்தா
a) 1 2 3 4
b) 1 2 4 3
c) 2 1 3 4
*d) 2 1 4 3
13) படித்தனள் மகிழ்ந்தாள், இலக்கணக் குறிப்பு தருக
a) பெயரெச்சம்
b) வினையெச்சம்
*c) முற்றெச்சம்
d) வினை முற்று
14) “கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு”
இவ்வரிகள் யாருடையது
a) கவிமணி
b) சே. ராசு
c) வெங்கம்பூர் சாமிநாதன்
*d) ஆலங்குடி சோமு
15) பொருத்துக
அ) இயற்கை ஓவியம் – 1) திருக்குறள்
ஆ) இயற்கை வாழ்வு இல்லம் – 2) பத்துப்பாட்டு
இ) இயற்கைத் தவம் – 3) பெரிய புராணம்
ஈ) இயற்கை அன்பு – 4) சிந்தாமணி
a) 2 1 3 4
*b) 2 1 4 3
c) 1 2 4 3
d) 2 3 4 1
16) “கல்வி என்பது வருவாய் தேடு்ம் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆண்மாவிற்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்”
இக்கூற்று யாருடையது
a) திரு. வி. க.
b) டாக்டர் முத்து இலட்சுமி ரெட்டி
*c) விஜயலட்சுமி பண்டிட்
d) பெரியார்
17) பெண்ணின் பெருமை என்பது யாருடைய நூல்
a) பெரியார்
b) பாரதியார்
c) பாரதி தாசன்
*d) திரு. வி. க.
18) எல்லைப் பொருளில் வரும் வேற்றுமை எது
a) 4 ஆம் வேற்றுமை
b) 5 ஆம் வேற்றுமை
c) 6 ஆம் வேற்றுமை
*d) 4 மற்றும் 5 ஆம் வேற்றுமை
19) ஒரு சிறு தலைப்பை விரித்துச் சொல்லும் இடத்தில் இட வேண்டிய நிறுத்தற் குறியீடு எது
a) காற்புள்ளி
b) அரைப்புள்ளி
*c) முக்காற்புள்ளி
d) முற்றுப் புள்ளி
20) வண்மொழி, பொருள் தருக
a) வலிமையான மொழி
*b) வளமான மொழி
c) செம்மொழி
d) வலிமையற்ற மொழி
21) சூழ்கலி இலக்கணக் குறிப்பு தருக
a) பண்புத்தொகை
*b) வினைத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
22) என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a) என் + றென்றும்
*b) என்று + என்றும்
c) என்றும் + என்றும்
d) என் + என்றும்
23) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) உலகத்துப் பொருள்களை இரு தினைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுவது தமிழ்மொழியின் மரபு ஆகும்.
2) இதனைக் கூறும் நூற்பா தொல்காப்பிய பொருளதிகாரத்தின் மொழிமரபு என்னும் இயலில் உள்ளது.
*a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
d) 1 ம ற்றும் 2 இரண்டும் தவறு
24) வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து
*ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
25) “எல்லாச் சொல்லும் பொறுல் குறித்தனவே” என்று கூறியவர் யார்
*a) தொல்காப்பியர்
b) பெரியார்
c) பாரதியார்
d) வீரமாமுனிவர்
26) பொருந்தாததைக் காண்க
a) எல்லாச் சொல்லும் பொறுல் குறித்தனவே
b) நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி
c) குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே
*d) நொ, து என்னும் உயிர்மெய் எழுத்துகளும் பொருளுடைய ஓரெழுத்து ஒருமொழி
27) நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை
a) க், ங்
b) ச், ஞ்
*c) ட், ண்
d) த், ந்
28) தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
இக்குறளில் அமைந்துள்ள மோனை எது
a) இணை மோனை
b) கூழை மோனை
c) மேற்கதுவாய் மோனை
*d) கீழ்க்கதுவாய் மோனை
29) வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமெய்ந் தற்று
இக்குறளில் பயின்று வரும் அணி எது
a) உவமை அணி
b) எடுத்துக்காட்டு உவமை அணி
*c) இல்பொருள் உவமை அணி
d) உருவக அணி
30) கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
இக்குறளில் காணப்படும் எதுகை எது
a) இணை எதுகை
b) பொழிப்பு எதுகை
*c) ஒரூஉ எதுகை
d) முற்று எதுகை
31) பயனில்லாத களர்நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்
a) அன்பில்லாதவர்
b) ஒழுக்கமில்லாதவர்
*c) கல்லாதவர்
d) வலிமையற்றவர்
32) ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்ற நூலை எழுதியவர் யார்
a) சுஜாதா
b) சே. ராசு
*c) குப்புசாமி
d) குலோத்துங்கன்
33) பெரிய புராணத்தின் முதல் நூல் எது
a) திருத்தொண்டர் திருவந்தாதி
*b) திருத்தொண்டத் தொகை
c) திருத்தொண்டர் புராணம்
d) இவற்றில் எதுவும் இல்லை
34) செறிவு எனக் கலித்தொகை கூறுவது எது
a) அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்
b) அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்
c) வறியவர்களுக்கு உதவி செய்தல்
*d) முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்
35) சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) கலித்தொகையில் உள்ள நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் நல்லந்துவனார்
2) கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்
3) நல்லந்துவனார் சங்கம் மருவிய காலப் புலவர்
*a) 1, 2 சரி
b) 1, 3 சரி
c) 2, 3 சரி
d) 1, 2, 3 சரி
36) கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படும் மூங்கில் வகை எது
a) கல் மூங்கில்
b) மலை மூங்கில்
*c) கூட்டு மூங்கில்
d) காட்டு மூங்கில்
37) “கூம்பொடு மீப்பாய் களையாது”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
a) அகநானூறு
b) ஐங்குறுநூறு
*c) புறநாநூறு
d) கலித்தொகை
38) உடுக்கைப் பற்றிய சரியான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) உடுக்கையின் உடல் பகுதி இரும்பால் ஆனது
2) இதன் வாய்ப்பகுதி ஆட்டுத் தோலால் பொருத்தப் பட்டிருக்கும்
3) பெரிய உடுக்கையைத் தவண்டை என்றும், சிறிய உடுக்கையைக் குடுகுடுப்பை என்றும் கூறுவர்
4) குறிசொல்லும் போது இக்கருவி இசைக்கப் படுகிறது
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
*c) 2, 3, 4 சரி
d) 1, 2, 3, 4 சரி
39) கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் போன்ற பல வகைக் குழல்கள் காணப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது
a) திருக்குறல்
b) இசை நூல்
*c) சிலப்பதிகாரம்
d) நாச்சியார் திருமொழி
40) சொற்களையும் தொகைநிலைத் தொடர் வகைகளையும் பொருத்துக
அ) கம்பர் பாடல் – 1) வினைத்தொகை
ஆ) ஆடுகொடி – 2) வேற்றுமைத்தொகை
இ) கருங்குவளை – 3) அன்மொழித்தொகை
ஈ) மடக்கொடி – 4) பண்புத்தொகை
a) 1 2 4 3
*b) 2 1 4 3
c) 2 1 3 4
d) 1 2 3 4
41) கீழ்க்கொடுக்கப் பட்டுள்ளவற்றுள் சேரரின் துறைமுகம் அல்லாதது எது
*a) கொற்கை
b) தொண்டி
c) முசிரி
d) காந்தளூர்
42) கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக அமைந்திருந்தது எது
a) பெரும்பாலை
b) வெள்ளி மலை
c) மதிற்கரை
*d) பழனி
43) ஆன்பொருநை என்ற பெயரால் அழைக்கப்பட்ட நதி எது
*a) அமராவதி
b) நொய்யல்
c) காவிரி
d) பவானி
44) சிலையழகு, இது எவ்வகைப் புணர்ச்சி
*a) உயிரீற்றுப் புணர்ச்சி
b) மெய்யீற்றுப் புணர்ச்சி
c) உயிர்முதல் புணர்ச்சி
d) மெய்முதல் புணர்ச்சி
45) சொற்களையும் புணர்ச்சி வகைகளையும் பொருத்துக
அ) தாய்மொழி – 1) இயல்புப் புணர்ச்சி
ஆ) தமிழ்த்தாய் – 2) தோன்றல்
இ) விற்கொடி – 3) திரிதல்
ஈ) மனமகிழ்ச்சி – 4) கெடுதல்
a) 4 3 2 1
b) 1 2 4 3
*c) 1 2 3 4
d) 2 3 4 1
46) சொற்களைப் பொருளோடு பொருத்துக
அ) மறலி – 1) மலைக்குகை
ஆ) தூறு – 2) புதர்
இ) பிலம் – 3) காலன்
ஈ) அருவர் – தமிழர்
a) 2 4 1 3
*b) 3 2 1 4
c) 1 2 3 4
d) 1 3 4 2
47) கூற்று மற்று காரணத்தை ஆய்க
கூற்று : கலிங்கப் படை கண்ட சோழர்கள் அஞ்சி ஓடினர். கடலில் குதித்தனர். யானையின் பின் மறைந்தனர்
காரணம் : கலிங்கறின் தாக்குதலைக் கண்ட சோழர்கள், வித்தையோ என வியந்தனர். எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
*c) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
d) கூற்று சரி, காரணம் தவறு
48) பரணிக்கோர் செயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் யார்
a) ஒட்டக்கூத்தர்
b) புகழேந்தி புலவர்
*c) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
d) குலோத்துங்கச் சோழன்
49) விடுதலைத் திருநாள் என்னும் கவிதை மீராவின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது
a) குக்கூ
b) ஊசிகள்
c) மூன்றும் ஆறும்
*d) கோடையும் வசந்தமும்
50) மீரா நடத்திய இதழின் பெயர் என்ன
a) வட்டத்தொட்டி
*b) அன்னம் விடு தூது
c) கனவு
d) தமிழ் நிலம்
51) எம். ஜி. ஆர் பற்றிய சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்க
1) எம். ஜி. ஆர் அவர்களின் பெற்றோர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்
2) இவர் கோபாலன் – சத்தியபாமா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்
3) மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
4) 1988 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய மாமணி விருது வழங்கப்பட்டது
a) 1, 3 சரி
*b) 2, 4 சரி
c) 2, 3 சரி
d) 1, 4 சரி
52) சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது எது
a) பெரியபுராணம்
*b) திருமந்திரம்
c) தேவாரம்
d) திருவாசகம்
53) பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
a) எக்காளக் கண்ணி
b) மனோன்மணிக் கண்ணி
c) நந்தீசுவரக் கண்ணி
*d) பராபரக் கண்ணி
54) தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று யாரைப் போற்றுவர்
a) பெரியார்
b) காயிதே மில்லத்
c) அண்ணா
*d) காத்தவராயன்
55) ” என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்தி தாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்.”
இக்கூற்று யாருடையது
*a) பெரியார்
b) அண்ணா
c) பாரதியார்
d) காமராசர்
56) அயோத்திதாசர் எழுதாத நூல் எது
a) புத்தரது ஆதி வேதம்
b) இந்திரர் தேச சரித்திரம்
c) விவாக விளக்கம்
*d) பாலவாகடம்
57) அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பை எந்த ஆண்டு உருவாக்கினார்
a) 1882
b) 1885
*c) 1892
d) 1895
58) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : புதுமைப்பித்தன் சிறுகதை மன்னன் என்று புகழப்படுகிறார்
காரணம் : அவர் சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டுள்ளார்
*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
59) புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன
a) வேதாச்சலம்
*b) விருதாச்சலம்
c) வெங்கடாச்சலம்
d) மேற்கூறிய எதுவும் இல்லை
60) பாக்களையும் அவற்றின் ஓசைகளையும் பொருத்துக
அ) வெண்பா – 1) அகவல் ஓசை
ஆ) ஆசிரியப்பா – 2) செப்பல் ஓசை
இ) கலிப்பா – துள்ளல் ஓசை
ஈ) வஞ்சிப்பா – தூங்கல் ஓசை
*a) 2 1 3 4
b) 2 1 4 3
c) 1 2 3 4
d) 1 2 4 3
61) பொருந்தாத இணையைக் காண்க
a) அசை – 2
*b) சீர் – 5
c) அடி – 5
d) தொடை – 8
62) சரியான கூற்று / கூற்றுகளைக் காண்க
1) திருப்பாவை நூலை இயற்றியவர் ஆண்டாள்
2) திருவெம்பாவை நூலை இயற்றியவர் காரைக்கால் அம்மையார்
*a) 1 மட்டும் சரி
b) 2 மட்டும் சரி
c) 1 மற்றும் 2 இரண்டும் சரி
d) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
63) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : இறையரசன் கன்னிப்பாவை நூலை இயற்றினார்
காரணம் : கன்னிப்பாவை திருவெம்பாவை நூலைத் தழுவி எழுதப்பட்டது
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
*c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
64) “கவலைகளைத்
தூக்கிக்கொண்டு
திரியாதே…
அவை
கைக்குழந்தைகளல்ல..”
இக்கவிதை வரிகள் யாருடையவை
a) வாலி
b) வைரமுத்து
*c) மு. மேத்தா
d) மீரா
65) மு. மேத்தாவின் எந்த நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது
a) கண்ணீர்ப் பூக்கள்
b) சோழநிலா
c) மகுடநிலா
*d) ஆகாயத்திற்கு அடுத்த வீடு
66) விழித்தெழும் என்பதைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a) விழி + எழும்
*b) விழித்து + எழும்
c) விழி + எழும்
d) விழித் + எழும்
67) ஒடுக்கப்பட்ட பாரதம் என்ற இதழை அம்பேத்கர் எந்த ஆண்டு தொடங்கினார்
a) 1924
*b) 1927
c) 1931
d) 1937
68) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது
a) பண்டைய கால இந்திய வணிகம்
b) ரூபாய் பற்றிய பிரச்சனை
*c) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
d) இந்தியாவின் தேசியப் பங்கு வீதம்
69) அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய ஆண்டு எது
a) 1955
*b) 1956
c) 1957
d) 1954
70) கோமகளுக்குத் தமிழக அரசி்ன் விருதைப் பெற்றுத்தந்த நூல் எது
a) அன்பின் சிதறல்
*b) அன்னை பூமி
c) உயிர் அமுதாய்
d) நிலாக்கால நட்சத்திரங்கள்
71) கோமகள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) கோமகள் அவர்களின் இயற்பெயர் இராஜலட்சுமி
2) இவர் எழுதிய பால்மனம் என்னும் சிறுகதை அன்பின் சிதறல் என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
3) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினைப் பெற்றுள்ளார்
a) 1, 2 சரி
*b) 1, 3சரி
c) 2, 3 சரி
d) 1, 2, 3 சரி
72) உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது எவ்வகை அணி
a) உவமை அணி
b) வேற்றுமை அணி
*c) பிரிதுமொழிதல் அணி
d) இரட்டுறமொழிதல் அணி
73) “பெருநீரால் வாரி சிறக்க”
இவ்வடியில் உள்ள வாரி என்ற சொல்லின் பொருள் என்ன
a) கடல்
b) பயிர்
*c) வருவாய்
d) வித்து
74) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : தர்மபுரிக்கு முற்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் தகடூர்
காரணம் : தகடூர் யாத்திரை தர்மபுரியின் சிறப்பை எடுத்துரைக்கும் நூல் ஆகும்
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
*c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
75) வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க
1) அந்த, இந்த எனும் சுட்டுத் திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்
2) எந்த எனும் வினாத் திரிபை அடுத்து வல்லினம் மிகும்
3) இரண்டாம் வேற்றுமையின் உருபான ஐ வெளிப்படையாக வரும் இடத்தில் வல்லினம் மிகும்
4) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தை அடுத்து வல்லினம் மிகும்
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
c) 2, 3, 4 சரி
*d) 1, 2, 3, 4 சரி
76) செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே!”
இப்பாடல் அடிகள் யாருடையது
a.பாரதிதாசன்
b. பாரதியார்
c. நாமக்கல் கவிஞர்
*d. து.அரங்கன்
77) இ.ரா. இளங்குமரனார் எழுதாத நூல் எது
a. இலக்கண வரலாறு
b. தமிழிசை இயக்கம்
c. தனித்தமிழ் இயக்கம்
*d. தேவநேயம்
78) எழுத்துகளின் இடப்பிறப்பு பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
2. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
3. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
4. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன
a. 1, 2, 3 சரி
b. 1, 2, 4 சரி
c. 2, 3, 4 சரி
*d. அனைத்தும் சரி
79) செவ்விந்தியர்கள் தங்களது சகோதரர்களாகக் கருதாதது எது
a. மான்கள்
b. குதிரைகள்
c. கழுகுகள்
*d. மலர்கள்
80) ஏவல் வினைமுற்று பற்றிய தவறான கூற்றைக் காண்க
1. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
2. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.
3. விகுதி பெறாமல் வரும்.
4. இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
a. 1, 2 தவறு
b. 3, 4 தவறு
c. 1, 2, 4 தவறு
*d. 1, 3, 4 தவறு
81) நாட்களையும் கொண்டாடப்படும் தினங்களையும் பொருத்துக
a. உலக ஈர நில நாள் – 1. செப்டம்பர் 16
b. உலக ஓசோன் நாள் 2. பிப்ரவரி 2
c. உலக இயற்கை நாள் – 3. அக்டோபர் 5
d. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 3
a. 2 1 3 4
*b. 2 1 4 3
c. 2 4 1 3
d. 2 3 1 4
82) இளமையில் கல் என்பது எவ்வகைத்தொடர்
a. செய்தித் தொடர்
b. வினாத்தொடர்
*c. விளைவுத் தொடர்
d. உணர்ச்சித் தொடர்
83) திருக்குறள் பொருட்பாலில் இல்லாத இயல் எது
a. அரசியல்
b. அமைச்சியல்
c. ஒழிபியல்
*d. ஊழியல்
84) “கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா”
இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூூல் எது
a. பழமொழி நானூறு
b. நீலகேசி
*c. மலரும் மாலையும்
d. ஏலாதி
85) கொடுக்கப்பட்டுள்ள நூல்களுல் சுஜாதா எழுதாதது எது
a. என் இனிய எந்திரா
b. மீண்டும் ஜீனோ
c. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
*d. கால் முளைத்த கதைகள்
86) உவமைத் தொடர்களை அவை வெளிப்படுத்தும் பொருளோடு பொருத்துக
a. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – 1. ஒற்றுமையின்மை
b. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – 2. பயனற்ற செயல்
c. பசு மரத்து ஆணி போல – 3. தற்செயல் நிகழ்வு
d. விழலுக்கு இறைத்த நீர் போல – 4. எளிதில் மனத்தில் பதிதல்
*a. 3 1 4 2
b. 3 4 2 1
c. 2 1 4 3
d. 2 3 1 4
87) “ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு – உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதை விடு!”
இப்பாடல் அடிகள் யாருடையது
a. கவிமணி தேசிக விநாயகனார்
b. குமரகுருபரர்
*c. ஆலங்குடி சோமு
d. வானிதாசன்
88) இயற்கைத் தவம் என்று திரு.வி.க குறிப்பிடுவது
a. கம்பராமாயணம்
b. தேவாரம்
*c. சிந்தாமணி
d. பெரியபுராணம்
89) காமராசர் பதவியைத் துறந்தார் என்ற தொடரில் இரண்டாம் வேற்றுமையில் அடங்கும் எப்பொருள் வெளிப்படுகிறது
a. ஆக்கல்
b. அழித்தல்
*c. நீத்தல்
d. அடைதல்
90) பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க
a. செறிவு எனப்படுவது — கூறியது மறாஅமை
b. அறிவு எனப்படுவது — பேதையார் சொல் நோன்றல்
*c. முறை எனப்படுவது — மறை பிறர் அறியாமை
d. பண்பு எனப்படுவது — பாடறிந்து ஒழுகுதல்
91) வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பது எவ்வகைப் புணர்ச்சி
A) மெய்யீற்றுப் புணர்ச்சி
b) உயிரீற்றுப் புணர்ச்சி
*C) உயிர்முதல் புணர்ச்சி
D) மெய்முதல் புணர்ச்சி
92) கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பெற்ற நூல்
A) கலிப்பா
B) கலித்துறை
C) கலிவிருத்தம்
*D) கலித்தாழிசை
93) “உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்”
என்று பாடியவர் யார்
*A) ஔவையார்
B) கபிலர்
C) பரனர்
D) காவற்பெண்டு
94) மனித யந்திரம் என்னும் சிறுகதை எந்த இதழில் வெளியானது
A) எழுத்து
*B) மணிக்கொடி
C) வானம்பாடி
D) கல்கி
95) கலைச்சொற்களைப் பொருத்துக
A) தொண்டு – 1) Philosophy
B) தத்துவம் – 2) Charity
C) நேர்மை – 3) Reform
D) சீர்திருத்தம் – 4) Integrity
*A) 2 1 4 3
B) 2 1 3 4
C) 1 2 4 3
D) 3 4 2 1
96) “பாதங்கள்
நடக்கத்
தயாராய் இருந்தால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.”
இக்கவிதை வரிகளின் ஆசிரியர்யார்
A) இறையரசன்
*B) மு.மேத்தா
C) முடியரசன்
D) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
97) இந்திய மக்களுக்கு அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் கிடைக்கும்போதுதான் இந்தியா முழுமையான விடுதலைபெற்ற நாடாக இருக்க முடியும் என்று கருதி உழைத்த தலைவர் யார்
A) எம்.ஜி.ஆர்
B) தந்தை பெரியார்
*C) அண்ணல் அம்பேத்கர்
D) காமராசர்
98) “ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு”
இப்பாடலில் பயின்றுவரும் அணி எது
A) பிரிதுமொழிதல் அணி
B) வேற்றுமை அணி
C) ஏகதேச உருவக அணி
*D) சிலேடை அணி
99) பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக எந்த ஊர் விளங்குகிறது
A) ஈரோடு
B) திருப்பூர்
C) சேலம்
*D) கரூர்
100) இசைக்கருவி வகைகளில் பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க
a. குடமுழா — தோல்கருவி
*b. கொம்பு — நரம்புக்கருவி
c. சங்கு — காற்றுக்கருவி
d. சாலரா — கஞ்சக்கருவி