ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் ஏழாம் வகுப்பு மாதிரித்தேர்வு (21 ஜனவரி, 2024) வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) “அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்”

இப்பாடல் அடிகள் யாருடயவை

a) பாரதியார்

*b) இராமலிங்கனார்

c) வாணிதாசன்

d) இராஜகோபாலன்

2) விலங்குகளையும் அவற்றின் ஒலி மரபுகளையும் பொருத்துக

A) மாடு – 1) கத்தும்

B) கரடி – 2) கதரும்

C) சிங்கம் = 3) உருமும்

D) புலி – 4) முழங்கும்

a) 2 1 3 4

*b) 2 1 4 3

c) 1 2 3 4

d) 1 2 4 3

3) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

       இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”

இக்கூற்று யாருடையது

a) பாரதியார்

b) திரு) வி) க.

*d) பாரதிதாசன்

d) நாமக்கல் கவிஞர்

4) விலங்குகளின் பெயர்களோடு அவற்றின் இளமைப் பெயர்களைப் பொருத்துக

A) புலி – 1) குருளை

b) சிங்கம் – 2) கன்று

c) யானை – 3) குட்டி

d) கரடி – 4) பறழ்

*A) 4 1 2 3

b) 4 3 1 2

c) 1 3 2 4

d) 4 2 3 1

5) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) குற்றியலுகரம் உரைநடையில் இல்லை

2) குற்றியலுகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

3) குற்றியலிகரம் உரைநடையில் இல்லை

4) குற்றியலிகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

a) 1 2 சரி

*b) 3 4 சரி

c) 1 3 சரி

d) 2 4 சரி

6) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) கொடிமுல்லை

*b) தமிழச்சியின் கத்தி

c) தொடுவானம்

d) எழிலோவியம்

7) மொழியின் முதல் நிலையாகக் கருதப்படுவது எது

1) பேசுதல்

2) எழுதுதல்

3) கேட்டல்

4) படித்தல்

A) 1, 2

*b) 1, 3

c) 2, 4

d) 3, 4

8) கிளிக்கண்ணி என்பது

a) இரண்டு சீர்களால் தொடுக்கப்படுவது

*b) இரண்டு அடிகளால் தொடுக்கப்படுவது

c) இரண்டு பாக்களால் தொடுக்கப்படுவது

d) இரண்டு சீர்களும் இரண்டு அடிகளும் அமையப்பெறுவது

9) ஜாதவ்பயெங் அவர்களுக்கு வனமகன் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது

a) கௌஹாத்தி பல்கலைக்கழகம்

b) மும்பைப் பல்கலைக்கழகம்

c) சென்னைப் பல்கலைக்கழகம்

*d) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

10) அதிர அடிச்சா உதிர விளையும் என்னும் சொலவடையின் மூலம் வெளிப்படும் உட்பொருள் என்ன

A) சோம்பல்

*b) முயற்சி

c) பிடிவாதம்

d) மரியாதை

11) தவறான கூற்றைக் கண்டறிக

a) ஐகாரக்குறுக்கம் முதல், இடை மற்றும் இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் வரும்

*b) ஔகாரக் குறுக்கம் இறுதியில் மட்டும் வராது

c) ைகார மற்றும் ஔகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

d) இவை இரண்டும் சார்பெழுத்துக்களில் அடங்குவன

12) “ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி”

இவ்வடியில் சென்னி என்ற சொல்லின் பொருள் என்ன

a) சோழ அரசன்

b) கலங்கரைவிளக்கம்

c) தூண்

*d) உச்சி

13) பாண்டியர்கள் பற்றிய சரியான கூற்றைக் காண்க

1) பாண்டியர்களின் தலைநகரம் திருநெல்வேலி

2) அவர்களின் இரண்டாவது தலைநகரமாக மதுரைவிளங்கியது

a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*d) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

14) “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்”

இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது

a) பெரும்பாணாற்றுப்படை

*b) அகநானூறு

c) தொல்காப்பியம்

d) பதிற்றுப்பத்து

15) கப்பல் கட்டுவோர் ெவ்வாறு அழைக்கப்பட்டனர்

a) சுக்கான்

b) மீகான்

*c) கம்மியர்

d) கொல்லர்

16) பொருத்துக

a) காவற்புரை – 1) நாணயசாலை

b) அக்கசாலை – 2) வணிகம் நடைபெறும் இடம்

c) பேட்டை – 3) தானியம் விற்கப்படும் இடம்

d) கூழைக்கடை – 4) சிரைச்சாலை

a) 4 3 1 2

*b) 4 1 2 3

c) 3 4 1 2

d) 3 1 4 2

17) டி.கே.சி பற்றிய சரியான கூற்றைக் காண்க

1) டி.கே.சி ரசிகமணி என்று சிறப்பிக்கப்படுகிறார்

2) இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழ்க்காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்

3) வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்தினார்

*a) கூற்று  1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்று 3 மட்டும் சரி

d) அனைத்தும் சரி

18) உவமையையும் பொருளையும் அறநெறிச்சாரப் பாடலுக்கேற்பப் பொருத்துக

a) இன்சொல் – 1) களை

b) ஈதல் – 2) விளைநிலம்

c) வன்சொல் – 3) வித்து

d) அன்பு – 4) நீர்

*a) 2 3 1 4

b) 2 3 4 1

c) 2 4 1 3

d) 4 1 3 2

19) உருவக அணிக்குப் பொருத்தமில்லாததைக் காண்க

*a) மலர்ப்பாதம்

b) இன்ப வெள்ளம்

c) துன்பக் கடல்

d) தமிழ்த்தேன்

20) காயிதே மில்லத் பற்றிய சரியான கூற்றைக் காண்க

1) 1962 இல் நடைபெற்ற சீனப்போருக்குத்  தான் செல்ல ஆயத்தமாக இருப்பதாக ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்

2) இவர் கண்ணியமிகு என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுகிறார்

3) மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறினார்

a) கூற்றுகள் 1, 2 சரி

b) கூற்றுகள் 1, 3 சரி

*c) கூற்றுகள் 2, 3 சரி

d) அனைத்தும் சரி

21) “ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட” என்ற பாடலின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்

a) குமர குருபரர்

b) ஔவையார்

*c) பாரதிதாசன்

d) பாரதியார்

22) நெடில்தொடர் குற்றியலுகரம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க

1) தனி நெடிலைத் தொடர்ந்து வரும்  குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க்  குற்றியலுகரம்’ எனப்படும்

2) இவை ஈரெழுத்துச் சொற்களாக  மட்டும் அமையும்

A) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

*c) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

d) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

23) இரட்டைக்கிளவி பற்றிய தவறான கூற்றைக் காண்க

1) இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்

2) இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள்  தராது

3) இரட்டைக்கிளவி விரைவு, வெகுளி, அவலம், அச்சம், சினம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்

4) இரட்டைக்கிளவியில் சொற்கள் தனித்தனியே நிற்கும்

a) கூற்றுகள் 1, 2 தவறு

b) கூற்றுகள் 1, 3 தவறு

*c) கூற்றுகள் 3, 4 தவறு

d) கூற்றுகள் 2, 4 தவறு

24) குற்றியலுகரச் சொற்களை சரியான வகைகளோடு பொருத்துக

A) மாசு – 1) நெடில்தொடர் குற்றியலுகரம்

b) ஒன்பது – 2) இடைத்தொடர் குற்றியலுகரம்

c) உப்பு – 3) வன்தொடர் குற்றியலுகரம்

d) மூழ்கு – 4) உயிர்த்தொடர் குற்றியலுகரம்

A) 1 2 3 4

*b) 1 4 3 2

c) 1 3 2 4

d) 1 4 2 3

25) ஓரெழுத்து ஒருமொழிகளையும் பொருளையும் பொருத்துக

A) ஏ – 1) மேகம்

B) சே – 2) தெய்வம்

C) பே – 3) அம்பு

D) தே – 4) உயர்வு

a) 2 4 1 3

b) 4 3 1 2

c) 3 4 2 1

*d) 3 4 1 2

26) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அஃறிணைச் சொல் எது

A) முகிலன்

b) கயல்விழி

*c) கடல்

d) தலைவி

27) பொருந்தாத ஒன்றைக் காண்க

a) வெள்ளை ரோஜா

b) மண்வாசல்

c) பெய்து பழகிய மேகம்

*d) கதை சொல்லும் கலை

28) நூல் மற்றும் நூலாசிரியர்களைப் பொருத்துக

A) சகலகலாவல்லி மாலை – 1) குமரகுருபரர்

B) சரஸ்வதிமாலை – 2) வரதன்

C) புறப்பொருள் வெண்பா மாலை – 3) ஐயனார் இதனார்

D) மலரும் மாலையும் – 4) கவிமணி

*a) 1 2 3 4

b)  2 1 3 4

c) 1 2 4 3

d) 2 1 4 3

29) குணமாலை யானையைக் கண்டு அஞ்சிய ஓவியம் எதில் வரையப்பட்டுள்ளது

a) பாறை

b) தந்தம்

*c) துணி

d) கண்ணாடி

30) வானிதாசன் அவர்களுக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயர் எது

A) கவிஞரேறு

b) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

*c) பாவலரேறு

d) பாவலர்மணி

31) “வண்கீரை” இலக்கணக் குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) வேற்றுமைத்தொகை

*c) பண்புத்தொகை

d) அன்மொழித்தொகை

32) மதுரைத் தமிழ்ச்சங்கம் எப்போது திறக்கப்பட்டது

a) 2000

b) 1942

c) 1122

*d) 2016

33) ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பொருத்துக

a) எளிமை – 1) Charity

b) ஈகை – 2) Dignity

c) நேர்மை – 3) Simplicity

d) கண்ணியம் – 4) Integrity

a) 1 3 4 2

*b) 3 1 4 2

c) 3 2 1 4

d) 3 4 2 1

34) கீழ்க்காண்பவற்றுள் தொழிற்பெயர் விகுதி அல்லாதது எது

a) அல்

b) தல்

c) அம்

*d) அன்

35) காடு என்ற பொருள் தராத சொல் எது

A) அழுவம்

b) பழவம்

*c) வள்ளை

d) விடர்

36) தவறான கூற்றைத் தேர்ந்தெடு

1) வயலும் வாழ்வும் என்னும் நாட்டுப்புறப் பாடல் மலையருவி என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

2) மலையருவி நூலின் தொகுப்பாசிரியர் கி) வ) ஜெகன்நாதன்

a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

*c) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி

d) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு

37) “திக்கெல்லாம் புகழுரும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியைப்பற்றிக் கூறுபவர் யார்

a) அப்பர்

b) மாணிக்கவாசகர்

c) சுந்தரர்

*d) சம்பந்தர்

38) ஐகாரக்குறுக்கம் பற்றிய சரியான கூற்றைக் காண்க

1) ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

2) ஐகாரம் சொல்லின் இடையில் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்

3) ஐகாரம் சொல்லின் இறுதியில் வரும்போது அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

*A) 1, 2 சரி

b) 1, 3 சரி

c) 2, 3 சரி

d) அனைத்தும் சரி

39) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a) திருநெல்வேலிப் உலா

*b) குற்றாலக் குறவஞ்சி

c) மதுரைக் கலம்பகம்

d) மேற்கண்ட எதுவும் இல்லை

40) வலம் வந்தான் என்ற தொடரில் மகர மெய் ஒலிக்கும் மாத்திரையின் அளவு என்ன

A) ஒரு மாத்திரை

b) அரை மாத்திரை

c) இரண்டு மாத்திரை

*d) கால் மாத்திரை

41) கீழ்வரும் பெயர்களுள் ரசிகமணியின் சிறப்புப் பெயரல்லாதது எது

a) தமிழிசைக் காவலர்

b)  வளர்தமிழ் ஆர்வலர்

c) குற்றால முனிவர்

*d) செந்தமிழ் அந்தணர்

42) ஆய்தக் குறுக்கச் சொல்லைத் தேர்ந்தெடுக்க

A) அஃது

b) எஃகு

*c) முஃடீது

d) இவை அனைத்தும்

43) குற்றியலுகரச் சொற்களையும் அவற்றின் வகைகளையும் பொருத்துக

A) பாக்கு – 1) இடைத்தொடர்

B) காடு – 2) வன்தொடர்

C) உலகு – 3) நெடில்தொடர்

D) மூழ்கு – 4) உயிர்த்தொடர்

*a) 2 3 4 1

b) 2 4 3 1

c) 1 2 3 4

d) 4 3 2 1

44) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

                குறுகத் தரித்த குறள்”

என்று திருக்குறளின் பெருமையைப் போற்றுபவர் யார்

A) நக்கீரர்

*b) ஔவையார்

c) பரனர்

d) கபிலர்

45) “ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு”

இக்குறளில் அமைந்துள்ள மோனை வகை எது

A) இணை மோனை

*b) பொழிப்பு மோனை

c) ஒரூஉ மோனை

d) முற்று மோனை

46) சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பான பிசிராந்தையார் என்னும் நூல் ஒரு

a) கவிதைத்தொகுப்பு

b) கட்டுரைத்தொகுப்பு

*c) நாடகம்

d) புதினம்

47) தேனரசன் கவிதை எழுதாத இதழ் எது

a) தென்றல்

b) குயில்

c) வானம்பாடி

*d) கனவு

48) நூலகங்களையும் அவை உருவாக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக

A) கன்னிமாரா நூலகம் – 1) 1896

B) உ) வே) சா) நூலகம் – 2) 1942

C) சரஸ்வதிமஹால் நூலகம் – 3) 1122

D) கீழ்த்திசை நூலகம் – 4) 1869

*a) 1 2 3 4

b) 1 3 2 4

c) 2 3 4 1

d) 2 1 4 3

49) “காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது”

இவ்வடியில் வெளிப்படும் அணி எது

a) உவமை அணி

b) எடுத்துக்காட்டு உவமை அணி

*c) இல்பொருள் உவமை அணி

d) உருவக அணி

50) சரியான கூற்று/கூற்றுகளைக் கண்டறிக

1) காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர் ஆவார்

2) இவர் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியு்ளார்

3) அவ்வொரு பாடல் அகநானூற்றில் உள்ளது

*a) 1 2 சரி

b) 2 3 சரி

c) 1 3 சரி

d) 1 2 3 சரி

51) “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகலையும் உருவாக்கியவர்) உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர்) சுத்தத் தியாகி”

என்று முத்துராமலிங்கரைப் புகழ்ந்தவர் யார்

a) அண்ணா

*b) பெரியார்

c) சி) டி) ராமசாமி

d) காமராசர்

52) இழிந்தவரிடத்திலும் உள்ள செல்வமாக வள்ளுவர் குறிப்பிடுவது

A) அருட்செல்வம்

*b) பொருட்செல்வம்

c) மேற்கூறிய இரண்டும்

d) மேற்கூறிய இரண்டும் இல்லை

53) தமிழர்கள் கப்பல் கட்டுவதற்குறிய மரங்களாகத் தேர்ந்தெடுத்தவற்றுள்  கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு பயன்படுத்திய மரங்களில் தவறானது  எது

A) வேம்பு

 b) இலுப்பை

c) நாவல்

*d) தேக்கு

54) ரா) பி) சே) வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது

a) தமிழ் விருந்து

*b) தமிழின்பம்

c) ஆற்றங்கரையினிலே

d) கடற்கரையினிலே

55) இலக்கியவகைச் சொற்களை அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக

A) இயற்சொல் – 1) பெற்றம்

b) திரிசொல் – 2) இரத்தம்

c) திசைச்சொல் – 3) அழுவம்

d) வடசொல் – 4) சோறு

*A) 4 3 1 2

b) 4 3 2 1

c) 3 4 2 1

d) 2 4 1 3

56) பொருந்தாத இணையைக் கண்டறி

a) மையல் – முதற்போலி

b) அமைச்சு – இடைப்போலி

c) அறன் – கடைப்போலி

*d) பத்து – முற்றுப்போலி

57) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

2) பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்

3) பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

4) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் மாமல்லபுரம்

a) 1 2 4 சரி

b) 2 3 4 சரி

c) 1 2 3 சரி

*d) 1 2 3 4 சரி

58) “இடர்ஆழி” இலக்கணக்குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) உம்மைத்தொகை

*c) உருவகம்

d) வேற்றுமைத்தொகை

59) சாஸ்தி என்ற சொல்லின் பொருள் என்ன

a) செல்வம்

b) பெரும்பரப்பு

c) யானை

*d) மிகுதி

60) நேதாஜி என்ற பெயரில் வார இதழை நடத்தியவர் யார்

a) சுபாஷ் சந்திர போஸ்

b) திரு.வி) கல்யாணசுந்தரனார்

c) தந்தை பெரியார்

*d) முத்துராமலிங்கத்தேவர்

61) தமிழ் இலக்கணத்தில் உள்ள போலியின் வகைகளும் அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்லன) அவற்றுள் தவறான இணையைக் கண்டறிக

a) பைசல் – முதற்போலி

b) அரையர் – இடைப்போலி

c) நிலன் – கடைப்போலி

*d) ஐந்து – முற்றுப்போலி

62) சொற்களையும் அவற்றிற்குறிய பொருளையும் பொருத்துக

a) கழனி – 1) கதிரவன்

b) நிகர் – 2) மேகம்

c) பரிதி – 3) சமம்

d) முகில் – 4) வயல்

a) 4 3 2 1

*b) 4 3 1 2

c) 3 4 1 2

d) 3 4 2 1

63) ” உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

a) இணை எதுகை

b) பொழிப்பு எதுகை

*c) ஒரூஉ எதுகை

d) முற்று எதுகை

64) நாலடியார் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூலாகும்

2) நாலடி நானூறு, உத்தர வேதம் என்பவை இந்நூலுக்கு வழங்கப்படும்  வேறு பெயர்களாகும்

3) திருக்குறளைப் போன்றே நாலடியாரும் முப்பால் பகுப்புக் கொண்டது

a) 1, 2 சரி

*b) 1, 3 சரி

c) 2, 3 சரி

d) அனைத்தும் சரி

65) “வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!”

இவ்வடிகள் யாருடையவை

a) சே) பிருந்தா

*b) கண்ணதாசன்

c) பாரதிதாசன்

d) வெண்ணிலா

66) திருக்குறளார் வீ) முனிசாமி எழுதிய நூல்களில் மிகவும் புகழ் பெற்ற நூல் எது

a) வள்ளுவர் உள்ளம்

b) வள்ளுவர் காட்டிய வழி

c) திருக்குறளில் நகைச்சுவை

*d) உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்

67) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன

a) முகமது இசுலாம்

b) முகமது அலி

c) முகமது நபி

*d) முகமது இசுமாயில்

68) “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக் கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்”

என்று காயிதே மில்லத் அவர்களைப் புகழ்ந்தவர் யார்

a) கருணாநிதி

b) பெரியார்

c) எம்) ஜி) ஆர்

*d) அண்ணா

69) ஓரெழுத்து ஒருமொழி பற்றிய சரியான கூற்றைக் காண்க

1) தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன

2) அவற்றுள் இரண்டு எழுத்துகள் மட்டும் நெடில் எழுத்துகளாகும்

*a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

d)  கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

70) காயிதே மில்லத் என்பது

a) உருதுச் சொல்

b) ஹிந்திச் சொல்

*c) அரபுச் சொல்

d) தமிழ்ச் சொல்

71) பகுபத உறுப்புகளில் பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறுவது எது

a) சந்தி

*b) சாரியை

c) பகுதி

d) விகாரம்

72) சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவை வெளிப்படுமாரு கவிதைகள் எழுதியவர் யார்

a) வானிதாசன்

b) முடியரசன்

*c) தேனரசன்

d) சுப்ரபாரதிமணியன்

73) காளமேகப் புலவர் எழுதிய  நூல்களில் பொருந்தாதது எது

a) திருவானைக்கா உலா

b) சித்திரமடல்

*c) சகலகலாவல்லிமாலை

d) பரபிரம்ம விளக்கம்

74) பாரதியார் இந்தியா இதழில் தமிழ் மொழியில் அறிமுகம் செய்தது

a) நவீன ஓவியம்

b) தாள் ஓவியம்

c) கேலிச்சித்திரம்

*d) கருத்துப்பட ஓவியம்

75) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 1982 இல் தோற்றுவிக்கப்பட்டது

2) இதன் பரப்பளவு 1000 ஏக்கர் ஆகும்

3) இங்கு ஐந்து துறைகளும் இருபத்தைந்து புலங்களும் உள்ளன

a) 1, 2 சரி

b) 2, 3 சரி

c) கூற்றுகள் 2, 3 சரி

*d) கூற்று 2 மட்டும் சரி

76) வள்ளுவர் கோட்டத்தில் செதுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முப்பால் வகைகளை அவை செதுக்கப்பட்டுள்ள நிறங்களோடு பொருத்துக

a) அறத்துப்பால் – 1) கருமை

b) பொருட்பால் – 2) வெண்மை

c) இன்பத்துப்பால் – 3) செம்மை

*a) 1 2 3

b) 2 1 3

c) 3 2 1

d) 2 3 1

77) ஆகுபெயர்களை அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக

a) மல்லிகை சூடினாள் – 1) காலவாகுபெயர்

b) டிசம்பர் சூடினாள் – 2) பொருளாகுபெயர்

c) இனிப்புத் தின்றான் – 3) தொழிலாகுபெயர்

d) பொங்கல் உண்டான் – 4) பண்பாகுபெயர்

*a) 2 1 4 3

b) 2 1 3 4

c) 1 2 4 3

d) 1 2 3 4

78) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) முகலாய மன்னர்களில் ஒளரங்கசீப் காலம் முதல் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது

2) பாபர் ஆட்சிக்காலத்தில் நாட்குறிப்பு எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது

a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

c) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*d) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

79) சொல்ல வந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது எந்நூலின் சிறப்பு ஆகும்

A) புறநானூறு

*B) அகநானூறு

C) நற்றிணை

D) குறுந்தொகை

80) நிலப்பகுதியையும் மக்கள் பெயர்களையும் பொருத்துக

A) குறிஞ்சி – 1) மனைவி

B) முல்லை – 2) கொடிச்சி

C) நுலைச்சி – 3) பாலை

D) எயிற்றி – 4) நெய்தல்

A) 2 1 3 4

*B) 2 1 4 3

C) 2 3 4 1

D) 2 4 1 3

81) பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும் என்ற புதினம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு எது

A) 1994

*B) 1995

C) 1996

D) 1997

82) ஆசிரிய உரிச்சீர் எத்தனை வகைப்படும்

A) 2 வகை

B) 3வகை

*D) 4 வகை

D) 5 வகை

83) பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது எவ்வகை ஆசிரியப்பாவாகும்.

A) நிலைமண்டில ஆசிரியப்பா

B) இணைக்குறள் ஆசிரியப்பா

C) நேரிசை ஆசிரியப்பா

*D) அடிமறிமண்டில ஆசிரியப்பா

84) “சீரிய நெற்றி எங்கே?

சிவந்தநல் இதழ்கள் எங்கே?

கூரிய விழிகள் எங்கே?

குறுநகை போன தெங்கே?”

இவ்வடிகளின் ஆசிரியர் யார்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

*C) கண்ணதாசன்

D) டி.கே.சி

85) ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்

A) மதுசூதணன்

B) ஆத்மானாம்

C) பெ) தூரன்

*D) A) ஆ

86) பொருள் தருக; கோலத்து நாட்டார்

A) சேர நாட்டார்

B) சோழ நாட்டார்

C) பாண்டிய நாட்டார்

*D) கலிங்க நாட்டார்

87) இலக்கணக்குறிப்பு தருக; மாண்ட தவளை 

A) வினையெச்சம்

*B) பெயரெச்சம்

C) வினைத்தொகை

D) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

88) திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன)

*A) 38

B) 51

C) 658

D) 48

89) ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர் யார்

A) புலவரேறு பழநி தண்டபாணி

B) எஸ்.ஜி.கிட்டப்பா

*C) சங்கரதாசு சுவாமிகள்

D) பம்மல் சம்பந்தனார்

90) தோட்டியின் மகன் என்ற புதினத்தை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் யார்

A) கலாப்ரியா,

*B) பசுவய்யா,

C) சிற்பி,

D) ஈரோடு தமிழன்பன்,

91) “சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்,

தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் ெது

A) காற்றில் கலந்த பேரோசை

*B) புரட்சிக்கவி

C) திருச்சாழல்

D) குற்றாலக் குறவஞ்சி

92) மயிலைசீனி வேங்கடசாமி அவர்களுக்கு மதுரைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்னும் பட்டமளித்துப் பாராட்டியது

*A) 1980

B) 1990

C) 1970

D) 1950

93) தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்

A) பிரம்மராஜன்

*B) த) ந) குமாரசாமி

C) ம) இலே) தங்கப்பா

D) ர) A) பத்மநாபன்

94) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் மயிலைசீனி வேங்கடசாமி எழுதாத நூல் எது

A) பௌத்தமும் தமிழும்

*B) மறைக்கப்பட்ட இந்தியா

C) உறையூர் அழிந்த வரலாறு,

D) கொங்கு நாட்டு வரலாறு,

95) தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழன்னை விருது பெற்றவர் யார்

A) இன்குலாப்

*B) அப்துல் ரகுமான்

C) இரா) மீனாட்சி

D) வானிதாசன்

96) தொலைந்து போனவர்கள் என்னும் கவிதை இடம்பெறும் நூல் எது

B) பால்வீதி

B) நேயர்விருப்பம்

C) ஆலாபனை

*D) சுட்டுவிரல்

97) மனோன்மணீயம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்

2) இஃது எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது

3) மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை ‘சிவகாமியின் சபதம்’ ஆகும்

4) இந்நூல் ஐந்து அங்கங்களையும் இருபது களங்களையும் கொண்டது

A) 1, 3 சரி

*B) 1, 4சரி

C) 2, 3 சரி

D) 2, 4 சரி

98) திருக்குறள் விரிவுரை என்ற நூலின் ஆசிரியர் யார்

A) திருக்குறளார் வி) முனிசாமி

B) மு.வ

*C) திரு.வி.க

D) வ.உ.சி.

99) திரிகூட ராசப்ப கவிராயர் குற்றாலத்தின்மீது எவ்வகையில் இலக்கியம் எழுதவில்லை

A) தலபுராணம்

B) மாலை

C) பிள்ளைத்தமிழ்

*D) கோவை

100) இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்

இக்குறளில் பயின்றுவரும் அணி எது

A) உவமை அணி

*B) உருவக அணி

C) ஏகதேச உருவக அணி

D) பிரிதுமொழிதல் அணி