*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1. சாதவாகன காலத்தில் எந்த மொழி ஆட்சி மொழியாக பயன்படுத்தப்பட்டது?
சமஸ்கிருதம்
* பிராகிருதம்
தெலுங்கு
பாலி
2. மௌரியர்களுக்குப் பிந்தைய காலத்தைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?
1. செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு கிறிஸ்தவத்தைப் போதிக்க கோண்டோபெர்னஸ் ஆட்சிக் காலத்தில் வந்தார்.
2. இந்தோ-கிரேக்க மன்னரான மினந்தர் ஜைன மதத்தைத் தழுவினார்.
3. குஷான வம்சம் கனிஷ்கரால் நிறுவப்பட்டது.
* 1 மட்டும் சரி
2 மட்டும் சரி
3 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
3. சுங்க வம்சத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. சுங்கர்களின் ஆட்சி பாட்டாலிபுத்திரம், ஐயோதி மற்றும் விதிஷா வரை பரவியிருந்தது.
2. இளவரசர்கள் மூலம் மாகாணங்களை நிர்வகிக்கும் மௌரிய முறையை பின்பற்றினர்.
3. சுங்கர்களைத் தொடர்ந்து குப்தர்கள் ஆட்சிக்கு வந்தனர்.
மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
* 1 & 2 சரி
2 & 3 சரி
2 மட்டும் சரி
1, 2 மற்றும் 3 சரி
4. சாக அரசர் நாகபானரைத் தோற்கடித்து சாதவாகன ஆட்சியை உயிர்ப்பித்தவர்?
ஹலா
* கௌதமிபுத்ர சதகர்ணி
புலுமாவி III
சிமுகா
5. சாதவாகன வம்சத்தைத் தோற்றுவித்தவர்?
ஹலா
* சிமுகா
கௌதமிபுத்ர சதகர்ணி
நாகபானர்
5. கீழ்க்கண்டவர்களில் கன்வ வம்சத்தை நிறுவியவர் யார்?
ருத்ரதாமன் I
சிமுகா
காரவேலர்
* வாசுதேவர்
6. நாசிக் கல்வெட்டில் எந்த அரசரின் சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
* கௌதமிபுத்ர சதகர்ணி
அசோகர்
காரவேலர்
புஷ்யமித்ர சுங்கர்
7. ‘மாளவிகாக்னிமித்ரா’ என்பது யாரைப் பற்றிய காவியம்?
* அக்னிமித்ரா
புஷ்யமித்ரா
ருத்ரதாமன்
தசரதன்
8. பின்வரும் ஆட்சியாளர்களில் யார் சுங்க வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல?
பாகவதர்
* வாசுதேவர்
தேவபூதி
அக்னிமித்ரர்
9. இலக்கண அறிஞர் பதஞ்சலி யாருடைய சமகாலத்தவர்?
அக்னிமித்ர சுங்கர்
* புஷ்யமித்ர சுங்கர்
வாசுதேவர்
கௌதமிபுத்ர சதகர்ணி
10. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: புஷ்யமித்ர சுங்கர் பௌத்தர்களை துன்புறுத்தியதாக பௌத்த இலக்கியங்கள் கூறுகின்றன.
காரணம்: பிற்கால சுங்க மன்னர்கள் பௌத்த மதத்திற்கு பங்களித்தவர்களாக கருதப்பட்டனர்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
* கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு
11. பின்வருவனவற்றுல் பொருந்தாததைத் தேர்க.
1. மகா பாஷியம்
2. யோகசூத்திரம்
3. திவ்ய வதனம்
1 & 3
2 மட்டும்
* 3 மட்டும்
2 & 3
12. பிராமணர்களுக்கு நிலத்தைக் கொடையாக வழங்கிய முதல் ஆட்சியாளர்கள்?
சுங்கர்கள்
கன்வர்கள்
* சாதவாகனர்கள்
குப்தர்கள்
13. கீழ்காணும் கூற்றுகளை கவனி.
1. கதாசப்தசதி என்ற நூலை எழுதியவர் கௌதமிபுத்ர சதகர்ணி
2. இது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.
மேல்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
* 1 & 2 தவறு
14. சாதவாகன ஆட்சியில் நிலப்பிரபுத்துவத்தின் பொருந்தாதது?
அமத்யாக்கள்
ராஜா
மகாபோஜன்
* சேனாபதி
15. குப்த வம்சத்தின் முதல் அரசர்?
* ஸ்ரி குப்தர்
சந்திர குப்தர் I
சந்திர குப்தர் II
குமர குப்தர்
16. முதலாம் சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்த ஆண்டாக சான்றுகள் குறிப்பிடுவது?
பொ.ஆ. 240
பொ.ஆ. 280
* பொ.ஆ. 319
பொ.ஆ. 335
17. குப்த ஆட்சியில் காமந்தகாரால் எழுதப்பட்ட நூல்?
* நீதிசாரம்
மனு ஸ்மிருதி
நாரத ஸ்மிருதி
விஷ்னு ஸ்மிருதி
18. பாஹியான் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்?
சந்திர குப்தர் I
சமுத்திர குப்தர்
* சந்திர குப்தர் II
ஹர்ஷர்
19. மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு யாரைப் பற்றிய செய்திகளைக் கொடுக்கிறது?
சந்திர குப்தர் II
சமுத்திர குப்தர்
* சந்திர குப்தர் I
அசோகர்
20. அலகாபாத் தூண் கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது?
* ஹரிசேனர்
கீர்த்தி வர்மன்
காளிதாசர்
சமுத்திர குப்தர்
21. கீழ்காணும் கூற்றுகளை கவனி.
1. குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
2. இந்த நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
* 1 & 2 சரி
1 & 2 தவறு
22. யாருடைய காலத்தில் இலங்கை அரசன் ‘மேகவர்மன்’ கயாவில் பௌத்த மடத்தை கட்டினார்?
சந்திர குப்தர் II
* சமுத்திர குப்தர்
சந்திர குப்தர் I
அசோகர்
23. கவிராஜா என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
ஹரிசேனர்
* சமுத்திர குப்தர்
குமர குப்தர்
காளிதாசர்
24. விக்ரமாதித்யர் என அழைக்கப்பட்ட குப்த அரசர்?
சந்திரகுப்தர்-I
சமுத்திர குப்தர்
* சந்திரகுப்தர்-II
ருத்ரதாமன்
25. ‘நவரத்தினங்கள்’ எனப்பட்ட ஒன்பது அறிஞர்கள் யாருடைய அவையில் இருந்தனர்?
சந்திரகுப்தர்-I
சமுத்திர குப்தர்
* சந்திரகுப்தர்-II
குமர குப்தர்
26. வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர்?
சந்திரகுப்தர்-I
சமுத்திர குப்தர்
* சந்திரகுப்தர்-II
குமர குப்தர்
27. சக்ராதித்யர் என அழைக்கப்பட்ட குப்த அரசர்?
சந்திரகுப்தர்-I
சமுத்திர குப்தர்
சந்திரகுப்தர்-II
* குமர குப்தர்
28. குப்த வம்சத்தின் கடைசி அரசர்?
சமுத்திர குப்தர்
சந்திரகுப்தர்-II
ஸ்கந்த குப்தர்
* விஷ்ணு குப்தர்
29. பின்வரும் கல்வெட்டுகளில் எது சதி பற்றிய ஆரம்பகால ஆதாரத்தை வழங்குகிறது?
ஹுவிஷ்காவின் மதுரா கல்வெட்டு
சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
ஸ்கந்த குப்தரின் ஜுனாகர் கல்வெட்டு
* பானு குப்தரின் ஈரான் தூண் கல்வெட்டு
30. இந்தியாவில் தென்னை சாகுபடி யாருடைய ஆட்சிக் காலத்திலிருந்து அறியப்பட்டது?
மௌரியர்கள்
சாதவாகனர்கள்
குப்தர்கள்
* மேற்கு கங்கர்கள்
31. “யாரும் தனது சொந்த சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளவோ அல்லது ஒரு தொழிலை மற்றொரு தொழிலுக்கு மாற்றவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களைப் பின்பற்றவோ அனுமதிக்கப்படுவதில்லை.” இது யாருடைய கூற்று?
மெகஸ்தனிஸ்
* பாஹியான்
யுவான்ஸ்வாங்
அல்பெருனி
32. ஹர்ஷரின் பின்வரும் கல்வெட்டுகளைக் கவனி.
1. நாளந்தா
2. கயா
3. பான்ஸ்கேடா
4. தாமோதர்
மேல் கண்ட கல்வெட்டுகளில் எது/எவை ஹர்ஷர் மத அமைப்புகளுக்கு நிலமானியம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது?
* 1,2 & 4
2 & 3
1&3
2 & 4
33. மேற்கத்திய உலகத்துடனான இந்தியாவின் வர்த்தகத்தை எளிதாக்கிய பருவக்காற்றுகளை கண்டுபிடித்தவர்?
* ஹிப்பாலஸ்
தாலமி
ப்லைனி
ஸ்ட்ராபோ
34. பின்வரும் கல்வெட்டுகளில் எது ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் போது ஹூனர்களின் படையெடுப்பைக் குறிக்கிறது?
மதுரா கல்வெட்டு
பிடாரி கல்வெட்டு
* ஜுனகார் கல்வெட்டு
சாஞ்சி கல்வெட்டு
35. பட்டியல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும் – பட்டியல் I :: பட்டியல் II
க்ஷேத்ரா :: 1. வீட்டுத் தளம்
கிலா :: 2. வன நிலம்
அவுடகபூமி :: 3. தரிசு நிலம்
ஜங்கலபூமி :: 4. சாகுபடி நிலம்
5. சதுப்பு நிலம்
4 1 3 5
2 3 1 4
4 3 5 2
* 1 3 5 2
36. பின்வருவனவற்றின் சரியான காலவரிசை என்ன?
1. தாலமியின் புவியியல்
2. தேயஸின் இந்தியாவின் குறிப்புகள்
3. காஸ்மோஸ் இண்டிகோ-ப்ளஸ்டெஸின் கிறிஸ்தவ வரைபடம்
4. பிளினியின் இயற்கை வரலாறு
* 4,2,3,1
2,4,1,3
2,4,3,1
4,2,1,3
37. ஃபா-ஹியான் அவரது குறிப்பில் , பின்வரும் எதைக் குறிப்பிடவில்லை?
மத்திய ராஜியங்களில் அமைதியும் ஒழுங்கும்
* தீவிரமான குற்றவியல் தண்டனைகள்
சண்டாலர்களின் சமூக புறக்கணிப்பு
பொது மக்களின் புலால் உண்ணா தன்மை
38. ‘ஹர்ஷவர்தனர் காலத்தில் காதி யந்திரத்தின் பானைகளால் வயல்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது’ எனக் கூறியவர்?
* யுவான்-சுவாங்
பானர்
சுபந்து
தண்டி
39. பின்வருவனவற்றில் எது ஊதியமற்ற உழைப்பைக் குறிக்கிறது?
பலி
சுல்கா
உத்ரங்கா
* விஷ்டி
40. ‘பிரம்மதேயம்’ என்ற சொல் முதன்முறையாக எங்கு பயன்படுத்தப்பட்டது?
ஆரம்பகால வேத நூல்கள்
* ஆரம்பகால பௌத்த நூல்கள்
குப்தருக்கு முந்தைய கல்வெட்டுகள்
குப்தருக்குப் பிந்தைய கல்வெட்டுகள்
41. ‘மற்ற நாடுகளில், போரின்போது விளைநிலங்களை அழிப்பது வழக்கம்; இந்தியர்களிடையே, வேளாண் தொழில் செய்பவர்கள், தங்கள் சுற்றுப்புறத்தில் போர் மூளும் போது கூட, துன்புறுத்தப்படாமல் இருக்கிறார்கள்’. எனக் குறிப்பிடுபவர்?
யுவான்-சுவாங்
மெகஸ்தனிஸ்
ஹெரோடோடஸ்
பா-ஹியான்
42. இந்து சட்டத்தின் முக்கிய ஆதாரமான யாக்ஞவல்கிய ஸ்மிருதிக்கு விளக்கம் எழுதியவர்–
அபரகர்
குலுக்கா
* விஜ்ஞானேஸ்வரா
விஸ்வரூபர்
44. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: குப்த அரசர்கள் தாம் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்ற பிம்பத்தை கொண்டிருந்ததாக சில வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காரணம்: அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
* இரண்டும் சரி
இரண்டும் தவறு
45. குப்த நிர்வாகத்தில் ‘மகாசந்திவிக்ரகா’ பின்வருபவைகளில் எதனோடு தொடர்புடையவர்?
நிதி நிர்வாகம்
நீதி நிர்வாகம்
* வெளியுறவு
மற்றும் பாதுகாப்பு
மாவட்ட தலைமை அதிகாரி
46. ‘லோகபாலா’ என்பது குப்த நிர்வாகத்தில் எதனோடு தொடர்புடையது?
வருவாய் அதிகாரி
* மாகாண ஆளுநர்
பிரதம அமைச்சர்
இளவரசர்
47. ‘பஞ்சமண்டலி’ என்ற நிர்வாக அமைப்பைப் பற்றி யாருடைய கல்வெட்டு குறிப்பிடுகிறது?
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
* இரண்டாம் சந்திர குப்தர்
குமர குப்தர்
48. பொருத்தமானதைத் தேர்க.
1. பாலாதி கிருத்யா, :: குதிரைப்படை தளபதி)
2. மஹாபாலாதிகிருத்யா :: (காலாட்படை தளபதி
1 சரி
2 சரி
1 & 2 சரி
* 1 & 2 தவறு
49. பின்வருவனவற்றுள் எதற்கு நிர்வாக உரிமை இல்லை?
பூமிசித்ராயனா
* அப்ரதா தர்மா
நிவி தர்மா
நிவி தர்ம அக்சயனா
50. நிலப்பதிவின் போது விதிக்கப்படும் விற்பனை வரி கீழ்காண்பவைகளில் எது?
* உபகிளிப்தா
உதியங்கா
ஹிரண்யா
ஹலிவகரா
51. கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோவில் இல்லை?
உதயகிரி குகை (ஒடிசா)
அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா)
* எலிபண்டா குகை (மகாராஷ்டிரா)
பாக் (மத்தியப் பிரதேசம்)
52. மோர்லேண்டின் குறிப்பின்படி, ‘ஜமா’ என்ற சொல் குறிப்பது?
மொத்த வருவாய் மதிப்பீடு
* மொத்த நில வருவாய் மதிப்பீடு
வசூலிக்கப்பட்ட நில வருவாய்
ஆளும் வர்க்கத்தின் நிகர வருமானம்
53. பின்வரும் இணைகளில் எது சரியாகப் பொருந்தவில்லை?
பிளினி: இயற்கை வரலாறு
தாலமி: புவியியல்
* ஸ்ட்ராபோ: எரித்ரேயன் கடலின் பெரிப்ளஸ்
காஸ்மோஸ் கிறிஸ்டியன் டோபோகிராபி
54. பின்வருவனவற்றில் எவை ஆரம்பகால பகவதியத்தின் முக்கியமான பண்புகளாக இருந்தன?
1. பக்தி
2. செயல்
3. அறிவு
4. சமூக ஒருங்கிணைவு
5. சுய தியாகம்
1&3
* 1,2,3&5
1,2,4&5
2,3&5
55. பஹாப்பூர் செப்பேடு யாருடைய ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்டது?
ஸ்கந்த குப்தர்
சமுத்திர குப்தர்
சந்திரகுப்தர் II
* புத்த குப்தர்
56. மெஹ்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு யாருடையக் காலத்தைச் சேர்ந்தது?
ஸ்கந்த குப்தர்
சமுத்திர குப்தர்
* சந்திரகுப்தர் II
புத்த குப்தர்
57. புகழ்பெற்ற சீன பயணி ஃபாஹியான் யாருடைய ஆட்சியின் போது இந்தியாவுக்கு வந்தார்?
ஸ்கந்த குப்தர்
சமுத்திர குப்தர்
* சந்திரகுப்தர் II
சந்திரகுப்தர் I
58. மெஹ்ராலி தூண் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சந்திரன்’ என்பது சமுத்திரகுப்தரை குறிக்கிறது என்பதைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வாளர்?
* ஸ்ரீ ராம் கோயல்
பரமேஸ்வரிலால் குப்தா
ராம் சரண் சர்மா
ரோமிலா தாபர்
59. சரகா பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனி.
சரகா இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
இவர் சமுத்திர குப்தரின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர்.
மேல் கண்ட கூற்றுகளில் எது சரியானது?
* 1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
இரண்டும் தவறு
60. சுஸ்ருத ஸம்ஹிதா என்ற நூலை எழுதியவர்?
ஷௌனக்
நாகார்ஜுனா
சரகா
* சுஷ்ருதா
61. மகாராஜாதிராஜா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் குப்த அரசர்?
* சந்திரகுப்தர் 1
சந்திரகுப்தர் II
சமுத்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
62. பின்வருபவைகளில் பொருந்தாததைத் தேர்க.
ரத்னாவலி
பிரியதர்ஷிகா
நாகாநந்தம்
* ஹர்ஷ சரிதம்
63. தசகுமார சரிதம் என்ற நூலை இயற்றியவர்?
பாரவி
ஹரிசேனர்
* தண்டி
பாஷர்
64. குமாரசம்பவம் என்பது யாருடைய காவிய படைப்பு?
* காளிதாசர்
விசாக தத்தர்
ஹபிசேனர்
தண்டி
65. ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கிய நகரம்?
* கனோஜ்
பாடலிபுத்திரம்
உஜ்ஜைனி
தைமாபாத்
66. யுவான்-சுவாங் இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தார்?
16
29
* 15
44
67. யுவான்-சுவாங்கின் கூற்றுபடி இந்தியாவில் எத்தனை பௌத்த பிரிவுகள் இருந்தன?
4
16
* 18
37
68. ஹர்ஷர் பின்வரும் எந்த பௌத்த பிரிவை ஆதரித்தார்?
* மகாயானம்
ஹீனயானம்
வஜ்ரயானம்
தந்தரியானம்
69. சீன பயணியான ஐ-சிங் இந்தியாவிற்கு வந்த ஆண்டு?
பொ.ஆ. 629
பொ.ஆ. 644
* பொ.ஆ. 670
பொ.ஆ. 680
70. ‘சிலாதித்யா’ என்ற பட்ட பெயரால் அறியப்படுபவர்?
பிராத்தக வர்தனர்
புலிகேசி II
சமுத்திர குப்தர்
* ஹர்ஷர்
71. ஹர்ஷரின் நிர்வாகத்தில் அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர் யார்?
சிம்மானந்தா
குந்தலா
* அவந்தி
திர்கத்வஜர்
72. சி-யு-கி என்ற பயணக் குறிப்பு லூலின் ஆசிரியர்?
ஐ-சிங்
பா-ஹியான்
* யுவான்-சுவாங்
இபன் படுடா
73. பயணிகளின் இளவரசர் எனப் பாராட்டப்படுபவர்?
ஐ-சிங்
பா-ஹியான்
* யுவான்-சுவாங்
மார்கோ போலோ
74. காந்தாரி என்ற இலக்கியத்தை இயற்றியவர்?
ஹர்ஷர்
* பானபட்டர்
பாஷர்
காளி தாசர்
75. ஐ-சிங்கின் கூற்று படி நாலந்தாவில் எத்தனை மாணவர்கள் தங்கி படித்ததாக குறிப்பிடுகிறார்?
* 3000
5000
7000
10000
76. வங்காளத்தில் பாலர்களின் ஆட்சியைத் தோற்றுவித்தவர்?
* கோபாலர்
தர்மபாலர்
ாணந்தபாலர்
மகிபாலர்
77. பின்வரும் ஸ்மிருதி நூல்களை கவனி.
1. யாக்ஞவல்கிய ஸ்மிருதி
2. மனு ஸ்மிருதி
3. பிரஹஸ்பதி ஸ்மிருதி
4. தேவாலா ஸ்மிருதி
மேல் கண்ட நூல்களின் சரியான காலவரிசையை பொருத்துக.
1,2,4,3
* 2,3,1,4
2,3,1,4
4,1,3,2
78. “கற்பனைமிக்க தொழில்நுட்ப சாதனங்கள் பற்றிய குறிப்புகளை எழுதியவர்?
போஜா
கோவிந்தராஜா
* சந்திரவர்மன்
மஹிபாலர்
79. இந்தியாவில் பகவதியம் பற்றிய ஆரம்பகால கல்வெட்டு ஆதாரம் எது?
சர்வதாதா மன்னரின் கோசுண்டி கல்வெட்டு
* ஹெலியோடோரஸின் பைசநகர் கல்வெட்டு
சாதவாகன அரசி நாகனிகாவின் நானாகாட் குகைக் கல்வெட்டு
சந்திரகுப்தரின் மெஹ்ராலி தூண் கல்வெட்டு
80. மகாட்சாலிபதிகா எந்தத் துறைக்கு பொருப்பானவர்?
தேர்படை
நீர்படை
* கணக்கு
காலாட் படை
81. குமாரகுப்தரின் காலத்தில் லதாவிலிருந்து தஸ்புராவுக்கு இடம்பெயர்ந்த வணிகக் குழு எந்த வர்த்தகத்தில் ஈடுபட்டது?
நகைகள்
குதிரைகள்
* பட்டு ஜவுளி
தந்தம்
82. குப்தர் காலத்தில் எந்த ஆதாரம் நில விற்பனை பற்றிய விவரங்களைத் தருகிறது?
ஜுனகர் கல்வெட்டு
பிடாரி தூண் கல்வெட்டு
பெக்ராம் செப்பேடு
* தாமோதர்பூர் செப்பேடு
83. முதலாம் குமரகுப்தரின் பட்டங்களை கவனி.
1. மகேந்திராதித்யா
2. மகேந்திரசின்ஹா
3. அஸ்வமேத மகிந்திரா
மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது?
1 மட்டும்
2 மட்டும்
1 & 3 மட்டும்
* 1, 2 & 3
84. குப்தர் காலத்தில் தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
திராமா
காசபானா
* தினார்
நிஷ்கா
85. குப்தர் காலத்தில் நிலப் பதிவேடுகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான அதிகாரி?
துருவதிகாரம்
* காரணிகா
சமஹர்தா
ஷௌல்கி
86. பின்வரும் அடைமொழிகளில் எது சமுத்திரகுப்தனுடையது அல்ல?
லிச்சாவி தௌஹித்ரஹ்
சர்வராஜோச்சேத்தா
அஸ்வமேத பராக்கிரமர்
* விக்ரமாதித்யா
87. ஃபோ-க்வோ-கி என்ற பயண நூலின் ஆசிரியர்?
* பா-ஹியான்
யுவான்-சுவாங்
ஐ-சிங்
இபன் படுடா
88. சமுத்திரகுப்தரை ‘இந்திய நெப்போலியன்’ என்று பாராட்டியவர் யார்?
ராதாகுமுத் முகர்ஜி
* V. ஸ்மித்
R.M. தண்டேகர்
R.C. மஜும்தார்
89. குப்தர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரசுச் சின்னம்?
லட்சுமி
வராஹா
* கருடன்
காளை
90. பஞ்சசித்தாந்திகா, என்ற நூலை எழுதியவர்?
ஆரியபட்டர்
* வராகமித்திரர்
பிரம்மகுப்தர்
பாஸ்கரர்
91. ராஷ்ட்ரகூடர்களின் ஆட்சியைத் தோற்றுவித்தவர்?
* தந்திதுர்கா
இந்திரன் III
கிருஷ்ணர் I
கோவிந்தர் I
92. உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோயில் யாருடைய ஆட்சியில் கட்டப்பட்டது?
சாளுக்கியர்
பல்லவர்கள்
* ராஷ்டிரகூடர்
குப்தர்
93. ராஷ்டிரகூடர்களைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
இந்திரன் III, பிரதிஹார ஆட்சியாளர் மகிபால I ஐ தோற்கடித்தார்.
மூன்றாம் கிருஷ்ணன் தக்கோலம் போரில் சோழர்களை தோற்கடித்தான்.
* எல்லோராவில் உள்ள கைலாச கோயில் இரண்டாம் கிருஷ்ணரின் காலத்தில் கட்டப்பட்டது.
கவிராஜமார்கத்தை எழுதியவர் நிருபதுங்கர்
94. சாளுக்கிய மன்னன் இரண்டாம் கீர்த்தி வர்மனை தோற்கடித்த ராஷ்டிர கூட அரசர்
* தந்தி துர்கா
கிருஷ்ணா I
கோவிந்தா II
கிருஷ்ணா II
95. கவிராஜ மார்கம் எம்மொழியில் எழுதப்பட்ட நூல்?
தமிழ்
சமஸ்கிருதம்
தெலுங்கு
* கன்னடம்
96. கீழ்காணும் கூற்றுகளை கவனி.
1. கீழை சாளுக்கியர்கள் கல்யாணி சாளுக்கியர் எனப்படுகின்றனர்.
2. கீழை சாளுக்கியர்களின் தலைநகரம் வாதாபி.
1 மட்டும் சரி
* 2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
97. சாளுக்கியர்களின் அரசுச் சின்னம் எது?
காளை
கருடன்
சிங்கம்
* வராகா
98. ஐஹோல் கல்வெட்டு யாரை பற்றி குறிப்பிடுகிறது?
முதலாம் புலிகேசி
கீர்த்திவர்மன்
* இரண்டாம் புலிகேசி
ஜெயசிம்மன்
99. ஹர்ஷரை தோற்கடித்த சாளுக்கிய அரசர்?
முதலாம் புலிகேசி
கீர்த்திவர்மன்
* இரண்டாம் புலிகேசி
ஜெயசிம்மன்
100. பின்வருபவைகளை கவனி.
1. ஹெர்ஜுங்கா
2. கிருகுலா
3. பில்கோடே
4. பன்னயா
மேல் கண்டவைகளில் எது/எவை சாளுக்கிய ஆட்சியில் வரிகளாக விதிக்கப்பட்டது?
1 and 2 மட்டும்
2, 3 and 4 மட்டும்
1, 2 and 3
* 1, 2, 3 and 4