ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், வாராந்திர மாதிரித்தேர்வு (14) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்

அரசியல் அறிவியல் வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

புவியியல் வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ் வினாக்கள்

1) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) குறளடி இரண்டடியைக் கொண்டது

2) அதன் முதலடி சிந்தடியாக அமையும்

*A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

2) எவ்வரசர் காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டூள்ளன?

*A. முதலாம் இராசராசன்.

B. இரண்டாம் இராசராசன்.

C. முதலாம் இராஜேந்திரன்.

D. இரண்டாம் இராஜேந்திரன்.

3) தீவக அணி எத்தனை வகைப்படும்?

A) 2

*B) 3

C) 4

D) 5

4) எதில் முடித்தல் ஆசிரியப்பாவிற்குச் சிறப்பு

A) ஆகாரம்

*B) ஏகாரம்

C) ஓகாரம்

D) ஐகாரம்

5) கோப்பரகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி ஆகியன யாருடைய பட்டங்கள்?

A. முதலாம் இராசராசன்.

*B. இரண்டாம் இராசராசன்.

C. முதலாம் இராஜேந்திரன்.

D. இரண்டாம் இராஜேந்திரன்.

6) சிலப்பதிகாரத்தில் உள்ள ஊரெடுத்த காதை எக்காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

A. மதுரைக்காண்டம்.

B. வஞ்சிக்காண்டம்.

*C. புகார்க்காண்டம்.

D. இவற்றில் எதுவுமில்லை.

7) சிறுகூடல் பட்டி என்ற சிற்றூர் எம்மாவட்டத்தில் உள்ளது?

*A. சிவகங்கை.

B. திண்டுக்கல்.

C. மதுரை.

D. நெல்லை.

8) வாய்மையே மழை நீராகி

இத்தொடரில் வெளிப்படும் அணி எது

 *A) தற்குறிப்பேற்ற அணி

B) நிரல்நிறை அணி

C) உயர்வுநவிற்சி அணி

D) தீவக அணி

9) மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பு யாருடையது?

*A. வேணுகோபாலன்.

B. நாகூர்ரூமி.

C. கண்ணதாசன்.

D. ராஜகோபாலன்.

10) ஆணிரை கவர்தல் எத்திணை ஆகும்

*A) வெட்சி

B) கரந்தை

C) வஞ்சி

D) காஞ்சி

11) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடூ என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

B. 1976.

B. 1967.

*C. 1966.

D. 1969.

12) பொருத்துக

A) கோ்ட்டைக்குள்ளிருந்து போரிடல் – 1) உழிஞை

B) மதிலைச் சுற்றி வளைத்தல் – 2) நொச்சி

C) போர்க்கலத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடல் – 3) வாகை

D) போரில் வெற்றி பெறுவது – 4) தும்பை

A) 1 3 2 4

*B) 2 1 4 3

C) 2 1 3 4

D) 3 4 1 2

13) எம்.எஸ்.சுப்புலட்சுமியை இசைப்பேரரசி என்று புகழ்ந்தவர் யார்?

*A. ஜவகர்லால் நேரு.

B. சரோஜினி நாயுடு.

C. காந்தியடிகள்.

D. அண்ணல்.

14) உற்றநோய் நீக்கி உறாமை முன்காக்கும்

பெற்றியார் பேணிக் கொளல்

இக்குறளில் இடம்பெறும் மோனை வகை எது

A) இணைமோனை

*B) பொழிப்பு மோனை

C) ஒரூஉ மோனை

D) முற்று மோனை

15) கீழ்கண்ட எந்த நூலுக்காக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சாகித்திய அகாதெமிவிருது பெற்றார்?

A. மண்ணகத்துப் பூந்துளிகள்

B. குறிஞ்சித் தேன்.

*C. வேருக்கு நீர்.

D. வேரில் பழுத்த பலா.

16) முதலில்லார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்

சார்பில்லாற்கு இல்லை நிலை

இக்குறளில் இடம்பெறும் அணி எது

A) உவமை அணி

*B) எடுத்துக்காட்டு உவமை அணி

C) உருவக அணி

D) ஏகதேச உருவக அணி

17) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் கீழ்கண்ட எந்த விருதை பெரவில்லை?

1. இந்திய அரசின் தாமரைத் திருவிருது.

2. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது.

3. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது.

A. 1 மட்டும்.

B. 2 மட்டும்.

C. 3 மட்டும்.

*D. இவற்றில் எதுவுமில்லை.

18) வெண்பாவில் அமைந்த நூல் எது

A) பெருங்கதை

B) சிலப்பதிகாரம்

*C) நாலடியார்

D) மணிமேகலை

19) குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியவர்?

B. மாங்குடி மருதனார்

B. ஆவூர் மூலங்கிழார்.

*C. ஊன் பொதிப் பசுங்குடையார்.

D. நக்கீரர்

20) சொல்லாத சொல் என்ற கவிதை தொகுப்பு யாரால் இயற்றப்பட்டது?

A. சொல்லின் செல்வர்.

*B. முகம்மதுரஃபி.

C. முகமது இஸ்மாயில்.

D. முத்தையா.

21) இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும் கவிதை வெளியீட்டிற்கு எளிதாகவும் இருப்பது எவ்வகைப்பா

A) வெண்பா

*B) அகவற்பா

C) வஞ்சிப்பா

D) கலிப்பா

22) தேம்பாவணி எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது?

A. 18.

B. 16.

*C. 17.

D. 19.

23) தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை

இக்குறளில் இடம்பெறும் எதுகை வகை எது

A) இணை எதுகை

*B) பொழிப்பு எதுகை

C) ஒரூஉ எதுகை

D) முற்றெதுகை

24) திருக்குறளை நிறைவு செய்க

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

——————- தொடர்கை விடல்

*A) நல்லார்

B) அல்லார்

C) இல்லார்

D) வல்லார்

25) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் எந்த மரபைச் சேர்ந்தவர்?

A. பல்லவர்.

B. பாண்டியர்.

C. சோழர்.

*D. சேர.

26) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பன்பும் பயனும் அது

இக்குறளில் இடம்பெறும் அணி எது

 A) தற்குறிப்பேற்ற அணி

*B) நிரல்நிறை அணி

C) உயர்வுநவிற்சி அணி

D) தீவக அணி

27) தேம்பாவணியில் எத்தனை படலங்கள்  உள்ளன?

A. 33.

B. 37.

C. 38.

*D. 36.

28) கப்பலுக்குப் போன மச்சான் என்ற நாவலை படைத்தவர் யார்?

A. வேணுகோபாலன்.

*B. நாகூர்ரூமி.

C. கண்ணதாசன்.

D. ராஜகோபாலன்.

29) செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை எது

A) செப்பலோசை

B) அகவலோசை

*C) துள்ளலோசை

D) தூங்கலோசை

30) எனது போராட்டம் என்பது யாருடைய தன்வரலாற்று நூல்?

A. திரு.வி.க.

B. மூ.வ.

C. வா.ஊ.சி.

*D. ம.பொ.சி.

31) தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்

2) பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்

A) கூற்று 1 தவறு

B) கூற்று 2 தவறு

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

*D) மேற்கூறிய எதுவும் இல்லை

32) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) வெண்பா ஐந்து வகைப்படும்

2) ஆசிரியப்பா நான்கு வகைப்படும்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

33. எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் எந்த ஆண்டு ஐ.நா. அவையில் பாடினார்?

B. 1976.

*B. 1966.

C. 1967.

D. 1969.

34) உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

இக்குறளில் உள்ள பலகற்றும் என்ற சீருக்கு உறிய வாய்பாடு எது

A) நேர் நேர் நேர்

*B) நிறை நேர் நேர்

C) நேர் நேர் நிறை

D) நேர் நிறை நேர்

35) எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பற்றி படைத்த நூல் எது?

A. சேற்றில் மனிதர்கள்.

B. மண்ணகத்துப் பூந்துளிகள்.

C. கரிப்பு மணிகள்.

*D. அலைவாய்க் கரையில்.

36) வெண்பாவிற்குப் பொருத்தமற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

A) ஈற்றடி முச்சீராய் வரும்

B) ஏணைய அடிகள் நாற்சீராய் வரும்

C) இயற்சீரும் வெண்சீரும் பெற்றுவரும்

*D) காய்ச்சீர் குறைந்த அளவில் வரும்

37) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) மண்ணாசை காரணமாக வஞ்சிப்பூ சூடிப் பகைவர் நாட்டின்மீது படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை

2) காஞ்சிப்பூ் சூடி பகைவரை எதிர்ப்பது காஞ்சித்திணை

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

38) இலக்கியச் சிற்பிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A. பாவண்ணன்.

*B. கு.அழகிரிசாமி.

C. மு.வரதராசனார்.

D. வெ.இராமலிங்கம்.

39) கீழ்கண்டவர்களில் யார் பெண் ஆற்றல் விருதினை பெற்றவர்?

A. எம்.எஸ்.சுப்புலட்சுமி.

*B. சின்னப்பிள்ளை.

C. பாலசரஸ்வதி.

D. ராஜம் கிருஷ்ணன்.

40) “இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் எது?

A. அகனாநூறு.

B. மதுரைக் காஞ்சி.

C. நற்றினை.

*D. புறனாநூறு.

41) (கேள்வியினான்) இலக்கண குறிப்பு தருக:

*A. வினையாலணையும் பெயர்.

B. வினாப்பெயர்.

C. தொழில்ப்பெயர்.

D. முற்றெச்சம்.

42) இரண்டாம் இராசராசனின் மெய்க்கீர்த்திகள் எத்தனை?

*A. 2.

B. 3.

C. 4.

D. 1.

43) ‘அடிகள் நீரே அருளுக’

இவ்வடியில் (நீரே) என்பது யாரை குறிக்கிறது?

A. சீத்தலைச்சாத்தனார்.

*B. இளங்கோவடிகள்.

C. கோவலன்.

D. கண்ணகி.

44) பொருத்துக:

   (ஜயகாந்தனின் விருதும் படைப்பும்)

A. குடியரசுத் தலைவர் விருது – 1. உன்னைப்போல் ஒருவன்.

B. சாகித்திய அகாதெமி விருது – 2. சில நேரங்களில் சில மனிதர்கள்.

C. சோவியத் நாட்டு விருது – 3. இமயத்துக்கு அப்பால்.

A. 1 3 2.

B. 2 1 3.

C. 3 2 1.

*D. 1 2 3.

45) ஆசிரியப்பாவிற்குத் தொடர்பில்லாத தளை எது

A) வெண்டளை

B) கலித்தளை

C) ஆசிரியத்தளை

*D) ஒன்றிய வஞ்சித்தளை

46) கீழ்கண்ட கு.அழகிரிசாமி பற்றிய கூற்றில் சரியானதை தேர்ந்தெடுக்கவும்.

1. கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் எனலாம்.

2. கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.

3. மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர்.

A. 1 மட்டும் சரி.

B. 1 மற்றும் 2 சரி.

*C. 1  2 மற்றும் 3 சரி.

D. 2 மற்றும் 3 சரி.

47) பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:

1. உண்மை சுடும்.

2. பிரளயம்.

3. கைவிலங்கு.

4. ரிஷிமூலம்.

*A. 1 மட்டும்.

B. 2 மட்டும்.

C. 3 மட்டும்.

D. 4 மட்டும்.

48) (கைதொழுது) இலக்கண குறிப்பு தருக:

A. இரண்டாம் வேற்றுமைத் தொகை.

B. நாங்காம் வேற்றுமைத் தொகை.

*C. மூன்றாம் வேற்றுமைத் தொகை.

D. ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

49) வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக எந்த மொழியைக் கற்றுக்கொண்டார்?

B. தமிழ்.

*B. உருது.

C. பாரசீகம்.

D. தெலுங்கு.

50)  (ஆடுக) இலக்கண குறிப்பு தருக:

A. தொழில்ப்பெயர்.

B. வினையெச்சம்.

C. வினைத்தொகை.

*D. வியங்கோள் வினைமுற்று.

அரசியல் அறிவியல் வினாக்கள்

51) கீழ்க்கண்ட துணை குடியரசு தலைவரின் தகுதிகளில் அல்லாதவற்றை தேர்வு செய்க

கூற்று 1: இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

கூற்று 2:  30 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

கூற்று 3: லாபம் தரக்கூடிய பதவிகளில் இருத்தல் கூடாது

கூற்று 4) மக்களவை உறுப்பினர்களுக்கு இணையான தகுதியினை பெற்றிருக்க வேண்டும்

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

B) கூற்று 1, 2 மற்றும் நான்கு மட்டும்

*C) கூற்று 2 மற்றும் 4 மட்டும்

D) மேற்கண்ட அனைத்தும்

52) இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர் யார்?

A) இந்திய பிரதமர்

*B) குடியரசு தலைவர்

C) ஆளுநர்

D) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

53) ராஜ்யசபா உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

*B) இந்திரா காந்தி

C) தேவகவுடா

D) மன்மோகன் சிங்

54) கீழ்க்கண்ட கூற்றுகளில் குடியரசுத் துணைத் தலைவர் பற்றிய சரியான கூற்றுக்களை தேர்வு செய்க?

கூற்று 1: சட்டப்பிரிவு 66 மற்றும் 67 துணை குடியரசு தலைவரின் தேர்வு பற்றி குறிப்பிடுகிறது

கூற்று 2: அதிகபட்சமாக 2 முறை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்க முடியும்

கூற்று 3: குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்க இயலும்

கூற்று 4: குடியரசு துணைத் தலைவரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அடுத்த குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிக்கலாம்

A) கூற்று 1, 2 மற்றும் 4 சரி

B) கூற்று 1 மற்றும் 3 சரி

C) கூற்று 1, 3 மற்றும் 4 சரி

*D கூற்று 3 மற்றும் 4 சரி

55) “புதிய அனைத்திந்திய பணிகளை” உருவாக்க எந்த அவை மூலம் தீர்மானம்    நிறைவேற்றப்பட  வேண்டும்?

A) மக்களவை

B) மாநில சட்டமன்றம்

C) ஈரவை கூட்டுக் கூட்டம்

*D) மாநிலங்களவை

56) குடியரசு துணை தலைவர் சார்ந்த சட்ட உறுப்புகளை சரியாக பொருத்துக

A) பிரிவு 64 – 1 பதவிக் காலம்

B) பிரிவு 65 – 2 ராஜ்ய சபா தலைவர்

C) பிரிவு 66 – குடியரசுத் தலைவராக செயல்படுதல்

D) பிரிவு 67 –  4 தேர்தல்

*A) 2 3 4 1

B) 3 2 4 1

C) 4 1 2 3

D) 2 4 3 1

57) குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா கடிதத்தை யாரிடம் அளிக்கிறார்?

A) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

B) ராஜ்ய சபா துணை தலைவர்

*C) குடியரசுத் தலைவர்

D) மக்களவை சபாநாயகர்

58) கீழ்காணும் கூற்றுகளில் பிரதமர் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க?

கூற்று 1: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூலமாக நியமிக்கப்படுகிறார்

கூற்று 2: மக்களவையின் தலைவராக செயல்படுகிறார்

கூற்று 3: இவருக்கென குறிப்பிட்ட பதவிக்காலம் எதுவும் வரையறுக்கப்படவில்லை

கூற்று 4: இவரின் பரிந்துரை மூலம் அமைச்சர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார்

A) கூற்று 3 மற்றும் 4 சரி 1 மற்றும் 2 தவறு

*B) கூற்று 2 3 மற்றும் 4 சரி 1 தவறு

C) கூற்று 1, 2 மற்றும் 3 சரி 4 தவறு

D) மேற்கண்ட அனைத்து கூற்றுகளும் சரி

59) கீழ்காணும் வாக்காளர் குழுக்களில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறுபவர்களை தேர்வு செய்க

1) மக்களவை உறுப்பினர்கள்

2) மாநிலங்களவை உறுப்பினர்கள்

3) சட்டமன்ற உறுப்பினர்கள்

4) யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்

A) 1, 2, 3 மட்டும்

B) 1, 2 மற்றும் 4 மட்டம்

*C) 1 மற்றும் 2 மட்டும்

D) மேற்கண்ட அனைவரும்

60) பண மசோதா குறித்த சரியற்ற கூற்றுக்களை தேர்வு செய்க?

கூற்று 1: பண மசோதாவை மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய இயலும்

கூற்று 2: பண மசோதாவை மாநிலங்களவையில் திருத்தவோ நிராகரிக்கவோ எந்த ஒரு பரிந்துரையை வழங்கவும் இயலாது

கூற்று 3: இரு அவைகள் கூட்டு கூட்டம் மூலம் பண மசோதா நிறைவேற்ற முடியாது

A) கூற்று 1 மட்டும் தவறு

B) கூற்று 2 மற்றும் 3 தவறு

*C) கூற்று 2 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

61) கீழ்கண்ட கூற்றுகளில் துணைக் குடியரசு தலைவர் நீக்கம் குறித்த சரியான கூற்றுக்களை தேர்வு செய்க?

கூற்று 1: துணை குடியரசு தலைவர் நீக்கம் குறித்த தீர்மானத்தை பாராளுமன்றத்தின் மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டு வரலாம்

கூற்று 2: மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் காலிப் பணியிடங்களை தவிர மீதமுள்ள உறுப்பினர்களில் 50% மேல் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்

கூற்று 3: மக்களவையில் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மாணம் நிறைவேற்றப்பட வேண்டும்

கூற்று 4: குடியரசு துணைத் தலைவர் பதவி நீக்கம் குறித்து 14 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட வேண்டும்

A) கூற்று 1, 2 மற்றும் 3 சரி

B) கூற்று 1, மற்றும் 3 மட்டும் சரி

*C) கூற்று 2 மற்றும் 4 சரி

D) கூற்று 2, 3 மற்றும் 4 சரி

62) பொருத்துக

A) சட்ட உறுப்பு 74 – 1 அனைத்து நடவடிக்கைகளையும் குடியரசுத் தலைவரின் பெயரில் மேற்கொள்ளுதல்

B) சட்ட உறுப்பு 75 – 2 அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவர் செயல்படுதல்

C) சட்ட உறுப்பு 77 – 3 பிரதமரின் கடமைகள்

D) சட்ட உறுப்பு 78 – 4 பிரதமர் அமைச்சரவை நியமனம்

A) 4 3 1 2

*B) 2 4 1 3

C) 2 1 4 3

D) 4 2 3 1

63) குடியரசுத் தலைவர் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க?

கூற்று 1: குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படுகிறார்

கூற்று 2: இவருக்கு துணை குடியரசு தலைவர் என்ற நிலையில் எந்த ஒரு ஊதியமும் வழங்கப்படுவதில்லை

கூற்று 3: குடியரசு தலைவர் பதவி காலியாக இருக்கும்போது அதிகபட்சமாக ஒரு வருடம் குடியரசுத் தலைவராக இவர் நீடிக்கலாம்

கூற்று 4: குடியரசு தலைவர் நிலையில் துணை குடியரசுத் தலைவர் இருக்கும் பொழுது மாநிலங்களவை துணைத் தலைவர் தலைவராக செயல்படுவார்

*A) கூற்று 1, 2 மற்றும் 4 சரி 3 மட்டும் தவறு

B) கூற்று 1, 3 மற்றும் 4 சரி 2 மட்டும் தவறு

C) கூற்று 1, 2 மற்றும் 3 சரி 4 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

64) மக்களவை மற்றும் மாநிலங்களவை ஈரவை இணைந்த கூட்டுக் கூட்டத்தில் தலைமை தாங்குபவர் யார்?

A) குடியரசுத் தலைவர்

B) துணை குடியரசுத் தலைவர்

*C) மக்களவை சபாநாயகர்

D) மாநிலங்களவை துணைத் தலைவர்

65) குடியரசுத் துணை தலைவருக்கு யார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்?

A) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

*B) குடியரசுத் தலைவர்

C) மக்களவை சபாநாயகர்

D) உச்சநீதிமன்ற ஏதேனும் ஒரு நீதிபதி

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

66) நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும்

வகையில் பிரதமர் நரேந்திர மோடி எந்த இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்?

A) என் மக்கள் என் தேசம்

B) சுதந்திர தேசம்

*C) என் மண் என் தேசம்

D) என் தேசம் என் பெருமை

67) இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்காகவும்———– ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது?

A) 1950

B) 2002

*C) 1973

D) 1999

68) 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர்க்கான நீளம் தாண்டுதல் ———– மீட்டர் நீளம் தாண்டி இந்திய வீரரான முரளி ஸ்ரீ சங்கர் வெள்ளி பதக்கம் பெற்றார்?

*A) 8.37 மீட்டர்

B) 8.74 மீட்டர்

C) 8.63 மீட்டர்

D) 8.87 மீட்டர்

69) வேளாண் சங்கமம் 2023 மாபெரும் பொருள் காட்சி எங்கு நடைபெற உள்ளது?

A) சென்னை

B) கோயம்புத்தூர்

*C) திருச்சி

D) மதுரை

70) கேரள சாகித்ய அகாடமி 2022 ஆண்டிற்கான கீதா கிரண்யன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) விக்னேஷ் கிஷோர்

B) சுந்தரமூர்த்தி

C) அகிலன்

D) கே சக்தி குமார்

புவியியல் வினாக்கள்

71) பின்வருவனவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க :

A) பாக்சைட்

B) காரியம்

C) நிக்கல்

*D) மைக்கா

72) பின்வருவனவற்றில் சரியாக அல்லாத ஒன்றை தேர்வு செய்க?

1) ஜிப்சம் சிமெண்ட், உரங்கள் மற்றும் பாரிஸ்சாந்து உற்பத்தியில் மூலப்பொருளாக பயன்படுகிறது.

2) ஜிப்சம் இருப்பில் ராஜஸ்தான் மாநிலம்  மட்டும் 81% பங்கினை வகிக்கிறது.

3) ஜிப்சம் உற்பத்தியில் தமிழ்நாடு 2 சதவீத பங்கினை வழங்குகிறது.

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

*C) 3 மட்டும்

D) 2 மற்றும் 3

73) பின்வரும் மண் வகைகளையும் அவற்றின் வேதி பண்புகளையும் பொருத்துக :

A) காடு மற்றும் மலைமன் – 1) பொட்டாஸ் மற்றும் பாஸ்பேட் சத்துக்கள் குறைவு

B) வறண்ட பாலை மண் – 2) சோடியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சல்ஃபியூரிக் அமிலம்

C) உப்பு மற்றும் காரமன் – 3) அதிக அளவிலான உப்பு, அமிலத்தன்மை மற்றும் பாஸ்பேட்

D) களிமண் மற்றும் சதுப்பு நிலமன் – 4) பொட்டாஸ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள்

*A) 4 3 2 1

B) 1 2 3 4

C) 3 4 2 1

D) 2 3 1 4

74) இரும்பு மற்றும் அலுமினியத்தின் நீரேற்ற ஆக்சைடுகளால் உருவான மண் வகை எது?

A) கரிசல் மண்

*B) சரளைமண்

C) உப்பு மற்றும் காரமண்

D) காடு மற்றும் மலைமண்

75) ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஊசியிலை காடுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மண்ணின் வேதியல் பண்புகள் எவை?

*A) பொட்டாஸ், பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாக காணப்படுகிறது

B) பொட்டாசியம், பாஸ்போரிக் அமிலம், சுண்ணாம்பு மற்றும் கார்பன் கலவைகள் அதிகமாக காணப்படுகிறது

C) கால்சியம், மெக்னீஷியம், கார்பனேட்டுகள் மற்றும் அதிக அளவிலான உப்பு

D) இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது

76) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :

கூற்று : உலோகப் படிவுகளில் இரும்பு, மாங்கனிசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.

காரணம் : உலோக கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். இது அரிதாகவும், இயற்கையான அடர்ந்த தாதுப் படிவுகளாக காணப்படுகின்றன.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

*C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

77) தீப்பாறை மற்றும் உருமாறிய பாறைகளில் கலவையாக காணப்படும் உலோக கனிமம் எது?

A) துத்தநாகம்

B) காரியம்

*C) இரும்பு

D) மைக்கா

78) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து குறியீடுகள் மூலம் சரியான விடையினை தேர்வு செய்க:

1) பழமையான படிக்கப் பாறைகளான கிரானைட் மற்றும் நைஸ் பாறைகள் சிதைவுறுவதால் கரிசல் மண் உருவாகிறது.

2) செம்மண்ணில் நைட்ரஜன், இலை மக்குகள், பாஸ்போரிக் அமிலம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

3) பருத்தி, திணை வகைகள், புகையிலை மற்றும் கரும்பு ஆகியவை செம்மண்ணில் வளரும் பயிர்கள்.

A) 1 சரி, 2 மற்றும் 3 தவறு

B) 2 சரி, 1 மற்றும் 3 தவறு

C) 1 மற்றும் 2 சரி, 3 தவறு

*D) மேற்கண்ட அனைத்தும் தவறு

79) சுண்ணாம்பு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கான 8.4 சதவீத உற்பத்தியில் பொருந்தாத மாவட்டத்தை தேர்வு செய்க?

A) காஞ்சிபுரம்

*B) திண்டுக்கல்

C) திருச்சி

D) தூத்துக்குடி

80) பொருத்துக :

A) மேக்னடைட் – 1) 69.9%

B) ஹேமடைட் – 2) 72.4%

C) லைமநைட் -:3) 48.2%

D) சிட்டரைட் – 4) 55%

A) 4, 3, 2, 1

*B) 2, 1, 4, 3

C) 2, 3, 1, 4

D) 4, 1, 2, 3

81) தேசிய அலுமினிய நிலையம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

A) 1971

B) 1974

*C) 1981

D) 1985

82) இந்திய மாங்கனிசு தாது நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

*A) நாக்பூர்

B) கொல்கத்தா

C) நாசிக்

D) சென்னை

83) பின்வருவனவற்றுள் மண்வள மூட்டியாக  பயன்படுவது எது?

A) மைக்கா

B) சுண்ணாம்பு

*C) ஜிப்சம்

D) காரியம்

84) இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

A) அலகாபாத்

B) அகமதாபாத்

C) ஹைதராபாத்

*D) ஃபரிதாபாத்

85) பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து குறியீடுகள் மூலம் சரியான விடையை தேர்வு செய்க:

1) மாங்கனிசு இரும்பு எஃகு மற்றும் உலோக கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப் பொருளாகும்.

2) ஒரு டன் இரும்பு எஃகு உற்பத்தி செய்வதற்கு 10 கிலோ மாங்கனிசு தேவைப்படுகிறது.

3) பூச்சிக்கொல்லிகள், வண்ணப் பூச்சுகள், மின்கலன்கள் போன்றவை தயாரிப்பதற்கு மாங்கனிசு பயன்படுகிறது.

4) மாங்கனிசு படிவுகள் பெரும்பாலும் தீ பாறைகளில் காணப்படுகிறது.

A) 1, 2 மற்றும் 4 சரி

B)2, 3 மற்றும் 4 சரி

*C) 1, 2 மற்றும் 3 சரி

D) அனைத்தும் சரி

கணித வினாக்கள்

86) ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் உள்ளனர். இவர்களுள் 5 மாணவர்கள் தலா 76 மதிப்பெண்களும், 7 மாணவர்கள் தலா 77 மதிப்பெண்களும், 8 மாணவர்கள் தலா 78 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். எனில், வகுப்பு சராசரி மதிப்பெண் காண்க?

A) 77.10

*B) 77.15

C) 77.51

D) 77.91

87) பின்வருவனவற்றை சுருக்குக :

(2  2/3 – 3  1/6) + (6  3/4) = ?

A) 75/12

*B) 6  1/4

C) 6  3/8

D) 5  1/4

88) ரூபாய் 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூபாய் 1,852.20 பைசா கிடைக்கும்?

A) 2 ஆண்டுகள்

B) 2  1/2 ஆண்டுகள்

*C) 3 ஆண்டுகள்

D) 4 ஆண்டுகள்

89) திவ்யா என்பவர் தமிழில் 50 க்கு 46 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 30 க்கு 27 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 40 க்கு 36 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 60 க்கு 54 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருப்பார்?

*A) தமிழ்

B) ஆங்கிலம்

C) கணக்கு

D) அறிவியல்

90) ஒரு கிலோகிராமில் 5 கிராம் என்பது எத்தனை சதவீதம்?

A) 1%

B) 0.75%

*C) 0.5%

D) 0.25%

91) இரு எங்களின் பெருக்குத்தொகை 1,600 மற்றும் அவற்றின் மீ போ வ 5 எனில், மீ சி ம காண்க?

A) 120

B) 360

C) 160

*D) 320

92) a/b = 3/4, b/c = 5/7 எனில், a:b:c இன் மதிப்பு காண்க?

A) 15:20:49

*B) 15:20:28

C) 15:25:49

D) 3:5:7

93) இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ₹ 594 க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10 சதவீத லாபமும், மற்றொன்றில் 10 சதவீத நஷ்டமும் ஏற்பட்டது எனில், அவருக்கு ஏற்பட்ட லாப அல்லது நஷ்ட சதவீதம் என்ன?

A) 10% லாபம்

B) 10% நஷ்டம்

C) 1% லாபம்

*D) 1% நஷ்டம்

94) ஒரு குறிப்பிட்ட அசலானது 8 சதவீத வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் என காண்க?

A) 10 ஆண்டுகள்

*B) 25 ஆண்டுகள்

C) 5 ஆண்டுகள்

D) 30 ஆண்டுகள்

95) 1 z a, 3 y b, 6 x c, 10 w d….. ?

A) 15 r e

B) 12 v e

C) 12 u e

*D) 15 v e

96) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் ஒரு வேலையை 30 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து வேலை செய்து, அவ்வேளையை முடித்து 600 ரூபாயை வருவாயாக பெற்றனர் எனில், B மற்றும் A இன் பங்கு என்ன?

A) 360, 240

*B) 240, 360

C) 300, 300

D) 350, 250

97) a+b/c = b+c/a = c+a/b = K எனில், K இன் மதிப்பு காண்க?

A) 0

B) 1

*C) 2

D) 3

98) ஒருவர் 600 மீட்டர் நீளமுள்ள ஒரு தெருவை 5 நிமிடங்களில் கடக்கிறார். எனில் அவரின் வேகத்தை கிலோ மீட்டர் / மணியில் கூறுக?

A) 5

B) 6.4

*C) 7.2

D) 9

99) ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலையில் 30 சதவீதம் அதிகரித்தால், 40% விற்பனை குறைந்தது எனில், வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவீதத்தில் காண்க?

A) 20% குறைவு

*B) 22% குறைவு

C) 20% அதிகம்

D) 25% குறைவு

100) 0.027 ன் கணமூலம் காண்க?

*A) 0.3

B) 3

C) 9

D) 0.03