ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (13) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்:

Unit 8 வினாக்கள்:

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்:

அறிவியல் வினாக்கள்:

கணித வினாக்கள்:

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனகொள்க.

தமிழ் வினாக்கள்:

1. யாருடைய நினைவுநாளில் பிறந்து, யாருடைய பிறந்தநாளில் இறந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்?

A. கலிலியோ, நியூட்டன்

B. நியூட்டன், ஐன்ஸ்டீன்

C. ஐன்ஸ்டீன், நியூட்டன்

*D. கலிலியோ, ஐன்ஸ்டீன்

2. கீழ்க்கண்ட பெயர்களை சரியான வரிசையில் அமைக்கவும்.

A. டாக்டர் என். ஸ்ரீதர், கணமுத்தையா, யுமாவாசுகி

B. யுமாவாசுகி, டாக்டர் என். ஸ்ரீதர், கணமுத்தையா

*C. கணமுத்தையா, டாக்டர் என். ஸ்ரீதர், யுமாவாசுகி

D. கணமுத்தையா, டாக்டர் என். ஸ்ரீதர், யுமாவாசுகி

3. முனிவு என்பதன் பொருள் யாது?

A. முனைப்பு

*B. சினம்

C. முயற்சி

D. துணிவு

4. தேவர்‌ அனையர்‌ கயவர்‌ அவரும்தாம்‌

மேவன செய்தொழுக லான்‌.

குறளில் பயின்றுள்ள அணி யாது?

*A. வஞ்சப் புகழ்ச்சி அணி.

B. பிறிது மொழிதல் அணி

C. தற்குறிப்பேற்ற அணி

D. வேற்றுமையணி

5. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

A. நற்றிணை

B. ஐங்குறுநூறு

*C. பரிபாடல்

D. அகநானூறு

6. பொருத்துக.

அ.  பஞ்சபூதங்களின் அறிவியல் கதைகள் – 1. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

ஆ. அன்றாட வாழ்வில் அறிவியல் – 2. சுரதா

இ. காலம் – 3. ச. தமிழ்ச்செல்வன்

ஈ. தேன்மழை – 4.  அ.கா.பெருமாள்‌

உ. நாட்டார் கதைகள் – 5. நீலமணி

A. 5 4 3 2 1

B. 5 3 2 1 4

C. 5 2 1 3 4

*D. 5 3 1 2 4

7. மொழிபெயர்க்க: Didactic compilation.

*A. நீதிநூல் திரட்டு

B. நீதிநெறித் திரட்டு

C. நீதி இலக்கியத் திரட்டு

D. நீதிவெண்பா திரட்டு

8. பட்டினத்தார் பாடலில் குறிப்பிடப்படும் கூத்து எது?

A. தெருக்கூத்து

*B. தோற்பாவைக் கூத்து

C. குடக்கூத்து

D. பறைக்கூத்து

9. இலக்கணக்குறிப்பு தருக. என்னா

*A. அசைச்சொல்

B. உரிச்சொல்

C. திர்இசொல்

D. திசைச்சொல்

10. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க.

1. நீதிவெண்பாவை இயற்றிய செய்குதம்பிப் பாவலர் சதாவதானக் கலையில் சிறந்தவர்

2. செய்குதம்பிப் பாவலர் உரை எழுதிய நூல் சீறாப்புராணம்

3. பாவலர் 1907, மார்ச் 18 அன்று, தன் சதாவதானக்கலையை மெய்ப்பித்தார்

A. 1 மற்றும் 3 சரி

*B. 1 மற்றும் 2 சரி

C. 2 மற்றும் 3 சரி

D. அனைத்தும் சரி

11. பிரான்ஸ் தேசிய நூலகத்தில் பல அரும்பெரும் தமிழ் நூல்களைக் கண்டதாக விவரிப்பவர் யார்?

A. குலோத்துங்கன்

B. இராமலிங்க அடிகள்

*C. தனிநாயக அடிகள்

D. சா. கந்தசாமி

12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

A. அணிமை

B. அண்மை

C. அருகு,

*D. செய்மை

13. “கற்பனைத்திறன் என்பது, இன்று நாம் அறிந்துவைத்திருப்பதை மட்டுமன்று, இனி நாம் அறியப்போவதையும் உள்ளடக்கியது”. சொன்னவர் யார்?

A. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

*B.  ஐன்ஸ்டீன்.

C. நியூட்டன்

D. கலிலியோ

14. சோழர்காலச் சிற்பங்களும் தமிழ்க்கல்வெட்டும் அமைந்துள்ள சிவன்கோவிலைக் கட்டிய மன்னன் யார்?

A. செங்கிஸ்கான்

B. தைமூர்

*C. குப்லாய்கான்

D. ஷேர்ஷா

15. வாளால்‌ அறுத்துச்‌ சுடினும்‌ மருத்துவன்‌ பால்‌

மாளாத காதல்‌ நோயாளன்‌ போல்‌ மாயத்தால்‌

மீளாத்‌ துயர்தரினும்‌ வித்துவக்‌ கோட்டம்மா! நீ

ஆளா உனதருளை பார்ப்பன்‌ அடியேனே. *

பாடலில் பயின்று வந்துள்ள தொடைநயத்தைக் கண்டுபிடி.

  1. அடி இயைபு
  2. சீர் எதுகை
  3. ஒருவு மோனை

*D. அடி எதுகை

16. இப்பேரண்டம் பெருவெடிப்புகளால் ஆனது என்பதை எதன் அடிப்படையில் ஹாக்கிங்ஸ் நிறுவினார்?

*A. கணிதவியல்

B. இயற்பியல்

C. கோட்பாட்டு இயல்

D. வானியல்

17. ஒரு மொழி வளம்பெறவும், உலகத்தோடு உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாதது எனச் சொன்னவர்?

A. மணவை முஸ்தபா

B. நோம்சாம்சுகி

*C. மு.கு. ஜகந்நாத ராஜா.

D. ராகுல் சாங்கிருத்யாயன்

18. சொற்களைப் பொருத்துக.

அ. மொகு சாஸ்டு – 1. இராஜஸ்தானி

ஆ. கச்சிகொடி – 2. ஆங்கிலம்

இ. கா- 3. ஜப்பான்

ஈ. கேமல் – 4. தமிழ்

A. 3 1 2 4

B. 3 4 2 1

C. 3 4 1 2

*D. 3 1 4 2

19. கறங்கு என்பதன் பொருள் யாது?

*A. காற்றாடி

B. கொலுசு

C. மரம்

D. பனை ஓலை

20. கலைச்சொல் தருக. terminology?

A. வேர்ச்சொல்

*B.  கலைச்சொல்

C. ஒலிபெயர்ப்புச்ச்ஒல்

D. இயற்சொல்

21. செய்க பொருளைச்‌ செறுநர்‌ செருக்கறுக்கும்‌

எஃகதனிற்‌ கூரிய தில்‌.

குறளில் பயின்றுள்ள தொடைநயத்தைக் குறிப்பிடுக.

  1. கீழ்க்கதுவாய் மோனை
  2. மேல்க்கதுவாய் எதுகை
  3. கீழ்க்கதுவாய் எதுகை

*D. மேல்க்கதுவாய் மோனை

22. குளசேகர ஆழ்வார் அன்னையாக நினைத்துப் பாடும் கடவுள் யார்?

A. ஆதிகேசவ பெருமாள்

B. திருவரங்கப் பெருமாள்

*C. உய்யவந்த பெருமாள்

D. வைகுந்த பெருமாள்

23. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

A. ஹெப்லர்

*B.  ஜான் வீலர்

C. ஜான் டால்டன்

D. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

24. மன்றல் என்ற சொல்லின் பொருள் யாது?

*A. திருமணம்

B. முற்றம்

C. பொங்கல்

D. தென்றல்

25. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A. தால்

*B. உழுவை

C. பண்டி

D. அடி

26. ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய மனித இயந்திரம் எது?

A. வாட்சன்

B. இலா

*C. பெப்பர்

D. IBM

27. பொருள் தருக: ஆர்தருபு.

A. குளிர்ந்த மழை

B. யுகம்

C. செந்தீ

*D. வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

28. நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று சொல்லும்

தமிழ் நூல் எது?

*A. திருவாசகம்

B. தேவாரம்

C. திருப்புகழ்

D. சீவகசிந்தாமணி

29. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

1. 360 பாகை அரைவட்ட வானத்திரை அமைந்துள்ள இந்தியாவின் ஒரே கோளரங்கம்  பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம்.

2. இந்தத்திரை கடந்த 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

*A. கூற்று 2 தவறு

B. கூற்று 1 தவறு

C. கூற்றுகள் இரண்டும் தவறு

D. கூற்றுகள் எதுவும் தவறில்லை.

30. கூற்று காரணம் ஆராய்க.

கூற்று: தற்கால ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்.

காரணம்: அழிவின் ஆற்றல் என்று கருதப்பட்ட கருந்துளையை ஹாக்கின்ஸ் படைப்பின் ஆற்றல் என மாற்றினார்.

  1. கூற்று சரி, காரணம் தவறு

*B. கூற்று காரணம் இரண்டும் சரி

C. கூற்று தவறு காரணம் சரி

D. கூற்று காரணம் இரண்டுமே தவறு

31. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எந்த இயலில் எத்தனையாவது பாடலாகக்  குறிப்பிடுகிறார்?

A. கிளவியாக்கம்-68

B. உவமையியல்-34

*C. மரபியல்-98.

D. மெய்ப்பாட்டியல்-14.

32. சரியான தலைகீழ் வரிசையைக் கண்டுபிடி.

A. பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், ஹஜிராபாக் மத்திய சிறை, பாரா ஒலிம்பிக்

B. ஹஜிராபாக் மத்திய சிறை, பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், பாரா ஒலிம்பிக்,

C. பாரா ஒலிம்பிக், ஹஜிராபாக் மத்திய சிறை, பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம்

*D. பாரா ஒலிம்பிக், பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், ஹஜிராபாக் மத்திய சிறை

33. “நாளை அமைச்சர் மதுரை வருகிறார்”

தொடரில் அமைந்துள்ள வழுவைக் காண்க.

  1. இடவழு
  2. திணைவழு
  3. மரபுவழு

*D. காலவழு

34. காடனுக்கும் கபிலனுக்கும் இலக்கணக் குறிப்பு தருக.

*A. எண்ணும்மை

B. உம்மைத்தொகை

C. சிறப்பும்மை

D. உவமைத்தொடர்

35. மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூற்றின் 50ஆவது பாடலில் இடம்பெற்ற மாந்தர்கள் யார்?

A.கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்

*B.  மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

C. கபிலர், பாரி

D. ஔவையார், அதியமான் நெடுமானஞ்சி

36. நீங்கள் படித்த இலக்கியங்களை மனதில் கொண்டு, கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமான எண்வரிசையைக் கண்டுபிடி.

A. 3-105

5-70

24-64

  • 24-64

3-70

5-105

*C. 3-64

5-105

24-70

  • 3-64

5-70

24-105

37. கும்பாட்டம் என்றழைக்கப்படுவது எது?

A. ஒயிலாட்டம்

B. தப்பாட்டம்

C. பொய்க்கால் குதிரை ஆட்டம்

*D.  கரகாட்டம்

38. இந்தியாவின் தாமரைத்திரு விருதுபெற்ற தமிழ் நாடகக்கலைஞர் யார்?

A. சங்கரதாச சுவாமிகள்

B. அவ்வை சன்முகம்

*C.  கூத்துப்பட்டறை நா. முத்துசாமி

D. பரீக்ஷா ஞானி

39. பொருத்துக.

அ. சிலம்பு, கிண்கிணி: 1. காலில் அணிவது

ஆ. அரைநாண்: 2. இடையில் அணிவது

இ. சுட்டி: 3. தலையில் அணிவது

ஈ. குண்டலம், குழை: 4. காதில் அணிவது

உ. சூழி: 5. நெற்றியில் அணிவது

A. 1 2 3 4 5

B. 1 2 3 5 4

C. 1 2 4 5 3

*D. 1 2 5 4 3

40. மதுரைக்கலம்பகம், மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர்கள் யார்?

A. நக்கீரர், குமரகுருபரர்

B. பரஞ்சோதி முனிவர், குமரகுருபரர்

*C. குமரகுருபரர், பரஞ்சோதி முனிவர்

D. பரஞ்சோதி முனிவர், நக்கீரர்

41. சரியான கூற்றுகளைக் கண்டறிக.

1. தேவராட்டம் ஆண்களால் மட்டுமே ஆடப்படுவது.

2. பறை தேவராட்டத்துக்குரிய இசைக்கருவியாகும்.

A. கூற்று 2 சரி

*B. கூற்று 1 சரி

C. கூற்று 1 மற்றும் 2 சரி

D. கூற்று 1 மற்றும் 2 தவறு

42. கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்டது எது?

*A. தக்கையின் மீது நான்கு கண்கள்

B. சாயாவனம்

C. தொலைந்து போனவர்கள்

D. சூர்யவம்சம்

43. குழந்தையின் 5-6 மாதங்களில் தலையசையும் பருவம் எது?

A. சிற்றில் பருவம்

B. அம்மானைப் பருவம்

*C. செங்கீரைப்பருவம்

D. காப்புப் பருவம்

44. ‘அசும்பிய’ என்ற சொல்லின் பொருள் யாது?

A. சிவக்கிற

B. புன்னகைக்கிற

C. அரும்புகிற

*D. ஒளிவீசுகிற

45. ‘வளர்வானம்’ இலக்கணக் குறிப்பு தருக.

A. பண்புத்தொகை

*B. வினைத்தொகை

C. வினைமுற்று

D. தொழிற்பெயர்

46. “தலைவிதிதான் வாழ்க்கையைத்‌ தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் ‌பார்த்தால்‌ எனக்குச்‌ சிரிப்புதான்‌ வருகிறது” என்று சொன்னவர் யார்?

A. பெரியார்

B. ஐன்ஸ்டீன்

*C. ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

D. பெர்னாட்ஷா

47. மொழிபெயர்க்கவும். Nanotechnology?

A. நுண்தொழில்நுட்பம்

B. சிறு உயிரித் தொழில்நுட்பம்

*C. மீநுண் தொழில்நுட்பம்

D. நானோ தொழில்நுட்பம்

48. “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்” என்னும்  சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பினால்  தெரிய வருவது

A. மகாபாரதம் பக்தி இலக்கிய காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது

B. மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் இருந்தது

*C. சங்ககாலத்திலேயே மொழிபெயர்ப்பு முயற்சிகள் இருந்தன

D. தமிழின் முதல் மொழிபெயர்ப்பு நூல் மகாபாரதம்

49. நீதிநெறிவிளக்கம் என்ற நூலை இயற்றியவர் யார்?

A. உலகநாதர்

B.  சடகோபர்

C. சிவப்பிரகாசர்

*D. குமரகுருபரர்

50. பொருந்தாத இணையைக் கண்டறிக.

*A. விசாரணைக் கமிஷன் – சுடுமண் சிலைகள்

B. வேர்ட்ஸ்மித் – எழுத்தாளி

C. எட்வின் ஹப்பின் – பால்வீதி

D. உவா – முழுநிலவு

Unit 8 வினாக்கள்:

51: ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பென் யார்?.

A,  இரானி மங்கம்மாள்.

B,  ஜான்சிரானி இலட்ச்சுமிபாய்.

*C,  வீரமங்கை தென்இந்தியாவின் ஜான்சிரானி.

D,  வடிவு நாட்ச்சியார்.

52:  தமிழகத்தின் அன்னிபெசண்ட் என்று மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் யாரால்  அழைக்கப்பட்டார்?.

A,  மூதறிஞர் இராஜாஜீ.

*B,  பேரறிஞர் அண்னா.

C,  கருப்பு காந்தி காமராஜர்.

D,  பகுத்தறிவு பகழவன் ராமசாமி.

53:  கீழ்கண்டவர்களுள் பொருந்தாத நபரை கண்டுபிடி?.

A,  மூவலூர் ராமாமிர்தம்.

B,  முத்து இலட்ச்சுமி ரெட்டி.

*C,  அம்புஜத்தம்மாள்.

D,  நீலாம்பிகை அம்மாள்.

54:  நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற அம்மாகன்னு (லீலாவதி) வயது என்ன?.

A,  08.

*B,  09.

C,  10.

D,  12.

55:  தென்நாட்டு ஜான்சிரானி என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர் யார்?.

*A,  அஞ்சலையம்மாள்.

B,  அம்புஜத்தம்மாள்.

C,  அசலாம்பிகை அம்மாள்.

D,  அஞ்ஜம்மாள்.

56:  அம்புஜத்தம்மாள் காந்தியடிகளால் எவ்வாறு அழைக்கப்பட்டார்?.

*A,  தத்த்து எடுக்கப்பட்ட மகள்.

B,  உடன் பிறந்த சகோதரி.

C,  உறவினர்.

D,  தோழி.

57:  சீனிவாச காந்தி நிலையம் என்ற தோண்டு நிறுவனத்தை தொடங்கியவர் யார்?.

A,  ருக்குமனிஇலட்சுமிபதி.

B,  கோதை நாயகிஅம்மாள்.

*C,  அம்புஜத்தம்மாள்.

D,  ராமாமிர்தம் அம்மாள்.

58:  இந்தியர்களின் நலனுக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்ப்பேன் என் இன்னுயிரையும் தருவேன் என்று கூறியவர் யார்?.

*A,  வல்லியம்மை.

B,  அஞ்சலையம்மாள்.

C,  மலர்முகத்தம்மாள்.

D,  தாமரைகன்னி அம்மாள்.

59:  தில்லையாடி வல்லியம்மை பற்றி காந்தியடிகள் எந்தெந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாஆர் ?.

*A,  இந்தியன்  ஒப்பினியன்.

*B,  தென்இந்திய சத்யகிரகம்.

C,  இந்தியன் பெட்றியாட்.

D,  எனது இந்தியா.

60:  தமிழக அரசு உயர் கல்வி உறுதித்திட்டம் யாருடைய பெயரில் வழங்கி வருகிரது

*A,  மூவலூர் இராமாமிர்தம்.

B,  கடலூர் அஞ்சலையம்மாள்.

C,  தர்மாம்பாள் அம்மாள்.

D,  முத்து இலட்ச்சுமி ரெட்டி.

61:  விடுதலைக்கு பின்பு நிலம்மில்லா எழைகளுக்காக போராடினார் 2020 ஆம் ஆண்டு இவருக்கு பத்ம புஷன் விருது வழங்கப்பட்டது இந்த பெருமைக்கு சொந்தக்காரர் யார்?.

A,  கோதை நாயகி அம்மாள்.

*B,  கிருஷ்னம்மாள் ஜெகன்நாதன்.

C,  மூவலூர் அம்மாள்.

D,  நாகம்மாள்.

62:  தமிழகத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர் யார்?.

A,  முத்து இலட்ச்சுமி ரெட்டி.

B,  ராதாபாய்.

*C,  ருக்குமனி இலட்்ச்சுமிபதி .

D,  வை.மு. கோதை நாயகி அம்மாள்.

63) தர்மாம்பாள் அம்மாள் தமிழ் ஆசிரியர்களுக்காக போராடிய போது கல்வி அமைச்சராக இருந்தவர் யார்?.

    *A) அவிநாசிலிங்கம் செட்டியார் .

    B, ) பெரியார்.

    ) ராஜாஜி.

    ஈ) தியாகராஜன் செட்டியார்.

64) தேவதாசி மரபை ஒழிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்தவர் யார்?.

    A) மூவாழூர் அம்மாள்.

    B) ருக்குமனி லட்ச்சுமிபதி.

    *C) முத்துலட்ச்சுமி ரெட்டி .

    D) தர்மாம்பாள் அம்மாள்.

65) தமிழகத்தில் முதல்சட்டமன்ற மேலவை பென் யார்?.

    A) தர்மாம்பாள்

    B) நாகம்மாள்.

    *C) முத்துலச்சுமி ரெட்டி.

D)  ருக்குமனி லட்ச்சிமிபதி .

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்:

66) நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது சரக்கு மற்றும் சேவை வரி குறித்த சரியான கூற்றுக்களை தேர்வு செய்க?

கூற்று 1: சரக்கு மற்றும் சேவை வரி 122 ஆவது சட்ட மசோதா மூலம் 101 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது

கூற்று 2: இந்தியாவில் முதல் மாநிலமாக குஜராத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது

கூற்ற 3: மாதாந்திர சராசரி வரியாக ரூபாய் 1.5 லட்சம் கோடியாக உள்ளது

கூற்று 4: கடந்த ஜூலை 2023 அதிகபட்சமாக 1.87 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

A) கூற்று 1, 2, மற்றும் 4 சரி

B) கூற்று 1 மற்றும் 4 சரி

*C) கூற்று  1, மற்றும் 3 சரி

D) அனைத்து கூற்றுகளும் சரி

67) 2023 இல் ஆசியாவின் சிறந்த தடகள வீரர் என தேர்வு செய்யப்பட்ட தமிழர் யார்?

A) ஆதவ் அர்ஜுனா

*B) செல்வா திருமாறன்

C) மாரிமுத்து

D) விவேக் சுப்புராஜ்

68) அடிப்படை கல்வி அறிவு வழங்குவதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எந்த ஆண்டு வரை விரிவு படுத்தப்பட்டுள்ளது?

A) 2025

*B) 2027

C) 2030

D) 2033

69) கீழ்காணும் கூற்றுகளைக் கொண்டு எந்த பகுதி அகழாய்வை குறிக்கிறது என தேர்வு செய்க?

கூற்று 1:  தற்பொழுது இரண்டாம் கட்ட அகலாய்வு நடைபெற்று வருகிறது

கூற்று 2: தங்க அணிகலன்கள் தங்க பட்டை புகைப்பிடிப்பான் கருவி சாதனைகள் ஆகியவை கிடைத்துள்ளன

கூற்று 3: தற்பொழுது சுடுமண் பானைகள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கூம்பு வடிவ விளக்கு மற்றும் பட்ட வடிவ மண் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.

A) துலுக்கர்பட்டி

B) பொறுப்பினை கோட்டை

C) மாளிகைபுரம்

*D) வெம்பக்கோட்டை

70) தமிழ்நாடு அரசின் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது எந்த அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது?

*A) அறிவியல் நகரம்

B) ஊரக சிற்பிகள்

C) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

D) அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம்

அறிவியல் வினாக்கள்:

71) நவீன ஆவர்த்தன  அட்டவணையில் உள்ள தனிமங்கள் மொத்தம் எத்தனை?

*A) 118

B) 116

C) 122

D) 117

72) திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவில் உள்ள வாயுக்களின் கலவை என்னென்ன?

A) ப்ரோப்பைன், நியான்

*B) ப்ரோப்பைன், பியூட்டென்

C) மீத்தேன், பியூட்டேன்

D) இவற்றுள் எதுவும் இல்லை

73) வாகனங்களின் முகப்பு விளக்குகளிலிருந்து வரும் ஒளி ஒளிக்கற்றையாக தோன்றுவது எதனால்?

A) பிரவுன் இயக்கம்

*B) டின்டால் விளைவு

C) வண்ணப் பிரிகை

D) ஒளிவிலகல்

74) நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள இயற்கையாக கிடைத்த தனிமங்கள் மொத்தம் எத்தனை?

A) 88

B) 82

*C) 92

D) 98

75) ஆல்ஃபா துகள்கள் சிதறல் அடையும் ஆய்வின் முடிவினை கொண்டு அணுக் கொள்கையை வெளியிட்டவர் யார்?

A) ஜே ஜே தாம்சன்

B) டால்டன்

*C) ரூதர்போர்ட்

D) நியூட்டன்

76) நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?

A) ரூதர்போர்ட்

B) ஜே ஜே தாம்சன்

C) டால்டன்

*D) ஜேம்ஸ் சாட்விக்

77) ஒத்த அணு என்னையும் வேறுபட்ட நிறை என்னையும் கொண்ட ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) ஐசலோ பார்

B) ஐசோ பார்

*C) ஐசோடோப்

D) இவற்றுள் எதுவுமில்லை

78) பின்வருவனவற்றுள் எது மந்தவாயு என்பதை தேர்வு செய்க?

*A) ஹீலியம்

B) ஹைட்ரஜன்

C) நைட்ரஜன்

D) மெக்னீசியம்

79) நடுக்கமுரு வலைதலுக்கு எடுத்துக்காட்டு தருக?

A) நிலவுமலர்

*B) மைமோசா கூடிகா

C) தாண்டிலியர்

D) இவற்றுள் எதுவுமில்லை

80) இலைத்துளைகள் வழியாக நீராவிப் போக்கு எத்தனை சதவீதம் தாவரங்களில் நடைபெறுகிறது?

A) 75 முதல் 80 சதவீதம்

B) 80 முதல் 85 சதவீதம்

C) 85 முதல் 90 சதவீதம்

*D) 90 முதல் 95 சதவீதம்

81) வைட்டமின் A ஐ கண்டுபிடித்தவர் யார்?

A) ஹேக்கர்

B) நியூலாந்து

*C) ஃபங்க்

D) ஹென்றி மோஸ்லே

82) உலக உணவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) செப்டம்பர் 16

*B) அக்டோபர் 16

C) நவம்பர் 16

D) டிசம்பர் 16

83) வைட்டமின் B12 ன் அறிவியல் பெயர் என்ன?

A) நியாஸின்

B) தயமின்

C) ரெட்டினாள்

*D) சைனோ கோபாலமைன்

84) வைட்டமின் K குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?

*A) ரத்தம் உறைதல்

B) ஸ்கர்வி

C) ரிக்கட்ஸ்

D) பெரி பெரி

85) நமது தினசரி உணவில் கார்போஹைட்ரேட்டின் பங்கு எவ்வளவு சதவீதம்?

A) 70 முதல் 150 கிராம்

*B) 150 முதல் 200 கிராம்

C) 200 முதல் 250 கிராம்

D) 100 முதல் 150 கிராம்

கணித வினாக்கள்:

86) ரூபாய் 4,000 க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2  1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியை காண்க?

A) 1,024

B) 1,032

C) 1,050

*D) 1,082

87) பின்வரும் தொடர் வரிசையில் அடுத்த எண் என்ன?

4, 6, 12, 14, 28, 30, ?

A) 32

*B) 60

C) 54

D) 62

88) ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3:2 எனில், பின்வருவனவற்றள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கிறது?

A) 16

B) 18

C) 24

*D) 25

89) 48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்?

*A) 07:12

B) 07:15

C) 07:45

D) 08:30

90) தனி வட்டியில் ஒரு அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்காகும்?

A) m

B) m×n

*C) (m – 1) × n

D) m n – 1

91) (P + Q) வின் 20% மற்றும் (P – Q) வின் 50% சமம் எனில், P:Q ஐ காண்க?

A) 2:5

B) 3:7

*C) 7:3

D) 5:2

92) 10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்கு சமம். 15 நாற்காலிகள் மற்றும் இரண்டு மேசைகள் சேர்த்து விலை ரூபாய் 4,000. 12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் மொத்த விலை என்ன?

A) 3,500

B) 3,750

C) 3,840

*D) 3,900

93) ரூபாய் 35,000 க்கு வட்டி வீதம் 9 சதவீதம் எனில், 2 ஆண்டுகளுக்கான தனிவட்டியை காண்க?

A) 6,000

*B) 6,300

C) 6,800

D) 7,400

94) ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும், 105 லிட்டர் எருமை பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவு கொண்ட இருவகையான கலன்களில் அடைத்து விற்க விரும்புகிறார். இவ்வாறு விற்பதற்கு தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு என்ன?

A) 15 லிட்டர்

B) 25 லிட்டர்

*C) 35 லிட்டர்

D) 40 லிட்டர்

95) பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த என் என்ன?

2, 5, 9, 19, 37, ?

A) 70

B) 73

*C) 75

D) 82

96) ஒரு மாணவர்  31 சதவீத மதிப்பெண்களை பெற்று, 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35 சதவீத மதிப்பெண்கள் தேவை எனில், தேர்வின் மொத்த மதிப்பெண்களை காண்க?

A) 150

*B) 300

C) 450

D) 500

97) இரு எண்களின் கூடுதலானது, இரண்டாம் எண்ணின் 116. 2/3 சதவீதம் எனில், முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம் என்ன?

*A) 1:6

B) 2:5

C) 7:2

D) 7:4

98) ஒரு புத்தகத்தின் விலையில் 10 சதவீதம் தள்ளுபடி அளித்தாலும் வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கிறது. புத்தகத்தின் குறித்த விலை ரூபாய் 220 எனில், அதன் அடக்க விலை என்ன?

*A) 180

B) 198

C) 176

D) 190

99) 450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x – 51 என்ற வடிவில் எழுதினால் x இன் மதிப்பு யாது?

A) 2

*B) 3

C) 4

D) 5

100) “SQUARE” என்பது (19 17 21 1 18 5) எனக் குறிக்கப்பட்டால், “RECTANGLE” என்பது எவ்வாறு குறிக்கப்படும்?

*A) 17, 5, 3, 19, 1, 14, 8, 12, 5

B) 18, 5, 3, 20, 1, 13, 7, 12, 5

C) 18, 5, 3, 20, 1, 14, 7, 11, 5

*D) 18, 5, 3, 20, 1, 14, 7, 12, 5