ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், மாதிரித்தேர்வு (10) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

புவியியல் வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ் வினாக்கள்

1)            பொருத்துக:

A.            1990   :   1. ஹாங்க் மாக்னஸ்கி

B.            1967   :   2. செஸ்டர் கார்ல்சன்

C.            1985   :   3. டிம் பெர்னெர்ஸ் லீ

D.            1962   :   4. ஜான் ஷெப்பர்டு பாரன்

E.              1938   :   5. ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

a)            5, 3, 1 ,2 4

b) 4, 1, 2, 3, 5

c)            3, 4, 2, 1, 5

*D) 3, 4, 1, 5, 2

2) சொன்னோர் இலக்கணக் குறிப்பு தருக.

*A) வினையாலணையும் பெயர்

B) தொழிற்பெயர்

C) வினையெச்சம்

D) பண்புத்தொகை

3)            ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி’

மேற்கண்ட அடிகள் இடம்பெற்ற நூல் எது?

A)           சீவக சிந்தாமணி

B)            பட்டினப்பாலை

*C) புறநானூறு

D) பதிற்றுப்பத்து

4)            இவற்றுள் தவறான இணை எது

A) ஈரறிவு – சிப்பி

*B) மூவறிவு – நத்தை

C)            ஓரறிவு – மரம்

D)           நான்கறிவு – தும்பி

5)            பின்வரும் கூற்றுகளில் தவறானவை எவை?

அ. உலகிலேயே இந்தியா குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுவுகிறது.

ஆ. விண்வெளியாளர் விக்ரம் சாராபாய் ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார்.

இ. சந்திரயான்-2 நிலவின் புறவெளியை ஆராயும் நோக்கம் கொண்டது.

ஈ. ‘கையருகே நிலா என்னும் நூலை எழுதியவர் அறிவியலாளர் அருண் சுப்பையா.

A அ மற்றும் ஆ தவறு

B) ஆ மற்றும் ஈ தவறு

*C) ஆ, இ மற்றும் ஈ தவறு

D) அனைத்தும் தவறு

6)            “தந்தையே பாருங்கள்” என்ற தொடரில் வல்லினம் மிகாமைக்குக் காரணம்?

A)           அது கட்டளைத் தொடர்

B) எழுவாய்த்தொடர்

*C) விளித்தொடர்

D) தொகைநிலைத் தொடர்

7)            இவற்றுள் பொருந்தாதது எது?

A)           துவனம்

B)            இமிழ்தல்

*C) சபலை

D) துகலம்

8)            ‘Missile’ என்பதன் தமிழாக்கம் தருக.

A)           ஏவுதளம்

*B) ஏவுகணை

C) ஏவு ஊர்தி

D) விண்களம்

9)            கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட இணை எது?

A)           அருண் சுப்பையா – மங்கல்யான்

*B) சித்தாரா – நேவிக்

C) வளர்மதி – ரிசாட்-1.

D)           விக்ரம் சாராபாய் – இஸ்ரோ

10)         எழுத்துகள் பிறக்கும் இடங்களை எந்த அறிவியல் பிரிவின் அடிப்படையில் தொல்காப்பியம் விளக்கியிருப்பதாக அயல்நாட்டு அறிஞர்கள் வியக்கின்றனர்?

A)           ஒலியியல்

B)            பிறப்பியல்

*C) உடற்கூற்றியல்

D) மரபியல்

11)         பொருத்துக.

A)           கவிதை நூல்   :   1. கிழவனும் கடலும்

B)            நாடகநூல்   :   2. சாக்ரடிஸின் சிவப்பு நூலகம்

C)            குறுநாவல்   :   3. கருப்பு மலர்கள்

D)           சிறார் நாவல்   :   4. தண்ணீர் தண்ணீர்

A)           4 2 1 3

B)            1 3 4 2

C)            3 4 2 1

*D) 3 4 1 2

12)         ‘Saline soil’ என்பதன் தமிழாக்கம் என்ன?

A)           விளைநிலம்

B)            பெருநிலம்

*C) கலர்நிலம்

D) குறுநிலம்

13)         அண்ணா அவர்களின் நினைவாக, நடுவண் அரசு அவரின் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட்ட ஆண்டு.

A)           2010

*B) 2009

C) 2008

D) 2007

14)         “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்”. இந்தக் கூற்றுக்குச் சொந்தக்காரர்?

A)           அறிஞர் அண்ணா

B)            பெர்னாட்ஷா

*C) ஆபிரகாம் லிங்கன்

D) வின்சண்ட் சர்ச்சில்

15)         பின்வரும் கூற்றுகளைச் சரிபார்க்க.

கூற்று 1. சிறுபஞ்சமூலம் சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று.

கூற்று 2. சிறுபஞ்சமூலம் என்ற சொல்லுக்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருளாகும்.

A)           கூற்று 1 சரி, 2 தவறு

B)            கூற்று 1 மற்றும் 2உம் சரி

C)            கூற்று ஒன்று மட்டும் சரி

*D) கூற்று இரண்டு மட்டும் சரி.

16)         பாவேந்தர் பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

A)           குடும்ப விளக்கு

B)            தமிழியக்கம்

C)            பாண்டியன் பரிசு

*D) பிசிராந்தையார்

17)         மாக்கடல், மலர்க்கை. இலக்கண குறிப்பு தருக.

A)           பண்புத்தொகை, உவமைத்தொகை

*B) உரிச்சொற்றொடர், உவமைத்தொகை

C) உரிச்சொற்றொடர், உருவகம்

D) பண்புத்தொகை, வினைத்தொகை

18)         வாழ்வு பணத்தி”னால்” அன்று! வில்வாள்

படையி”னால்” காண்ப தன்று!”

மேற்கோளிடப்பட்ட சொல்லின் வகை யாது?

A)           இயற்சொல்

B)            வேற்றுமை உருபு

*C) இடைச்சொல்

D) உரிச்சொல்

1)            புதுமைக் கருத்துகளை இயம்பும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை?

A)           சிற்றிலக்கியங்கள்

B)            உரைநடை இலக்கியங்கள்

C)            கடித இலக்கியங்கள்

*D) மறுமலர்ச்சி இலக்கியங்கள்

20)         கீழ்க்கண்ட கூற்றுகளில் மருத்துவர் முத்துலெட்சுமி அவர்களோடு தொடர்பில்லாதது எது?

A)           தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

B)            சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

*C) பெண்களுக்கான முதல் பள்ளியைத் தொடங்கியவர்.

D) சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

21)         வடசொல் – தமிழ் அகரவரிசை என்ற நூலின் ஆசிரியர் யார்?

*A)                                                                                                         நீலாம்பிகை அம்மையார்

B) இராஜேஸ்வரி அம்மையார்

C) இராமாமிர்தம் அம்மையார்

D) அம்புஜம் அம்மாள்

22)         ஆண்டுகளைப் பொருத்துக.

A.            1997   :   1. ஹண்டர்குழு அறிக்கை

B.            1882   :   2. கோத்தாரி கல்விக்குழு

C.            2014   :   3. சாரதா சட்டம்

D.            1929   :   4. மலாலா

E.            1964   :   5. நோபல் பரிசு

A)           4 5 1 2 3

B)            4 1 3 2 5

C)            5 3 2 1 4

*D) 4 1 5 3 2

23)         இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

*A) சாவித்திரிபாய் பூலே

B) பண்டித ரமாபாய்

C) ஐடாஸ் சோஃபியா ஸ்கட்டர்

D) சிவகாமி அம்மையார்

24)         சிற்பத் தொழிலின் உறுப்புகள் மொத்தம் 10எனச் சொன்ன  நூல் எது?

A)           மணிமேகலை

B)            சிலப்பதிகாரம்

C)            வளையாபதி

*D) திவாகர நிகண்டு

25)         எந்த மன்னர்களின் காலத்தில், சுதையினாலும், கருங்கற்களாலும் சிற்பங்கள் செய்யப்பட்டன?

A)           நாயக்கர்காலம்

B)            சோழர்காலம்

*c) பல்லவர் காலம்

D) பாண்டியர் காலம்

26)         பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறானவற்றைக் கண்டுபிடி.

கூற்று-1: சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தி இடம்பெற்றுள்ளது.

கூற்று-2: தமிழரின் தொடக்ககால சிற்பக்கலைக்குச் சான்றாக இந்த நிகழ்வைக் குறிப்பிடலாம்.

கூற்று-3: மாளிகைகளில் பல சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை ‘மணிமேகலை’ மூலம் அறியமுடிகிறது.

A)           கூற்று மூன்று தவறானது.

B)            கூற்று ஒன்று மற்றும் மூன்று தவறானது.

*C) கூற்று இரண்டு மட்டும் தவறானது.

D) கூற்று இரண்டு மற்றும் மூன்று தவறானது.

27)         சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிற கோவில் எது?

A)           காஞ்சி வைகுந்த பெருமாள் கோவில்

*B) காஞ்சி கைலாசநாதர் கோவில்

C) திருச்சி மலைக்கோட்டை

D) மாமல்லபுரம் குடைவரைக் கோவில்

28)         பொருந்தாத இணையைக் காண்க.

A)           குகைக்கோவில் – குன்றக்குடி

B)            நார்த்தாமலை – நடனமுத்திரை

*C) இரண்டாம் இராசராசன் – திரிபுவன வீரேசுவரம்

D) கங்கை கொண்ட சோழபுரம் – ஒற்றைக்கல் நவகிரகம்

29)         கீழ்க்கண்டவற்றுள் எந்தக் கோவில் சிற்பங்கள் சோழர்காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச் சிறந்த சான்றாகும்.

A)           கொடும்பாளூர் மூவர் கோவில்

B)            தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்

*C) திருவரங்கம் ரங்கநாதர் கோவில்

D) சீனிவாசநல்லூர் குரங்குநாதர் கோவில்

30)         சிற்பக்கலைச் செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் வெளியிடப்பட்ட நூல்?

A)           சிற்பப் பனுவல்

B)            சிற்பச் செய்திநூல்

*C) சிற்பச்செந்நூல்

D) சிற்ப நுட்பம்

31)         மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், ஆடை அணிகலன்கள் அணிந்த நிலையில் கலை நுட்பத்துடன் காணப்படுகின்ற அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களை அமைத்த அரசர்கள் யார்?

A)           பாண்டிய மன்னர்கள்

B)            விஜயநகர மன்னர்கள்

C)            பாளையக்காரர்கள்

*D) நாயக்க மன்னர்கள்

32)         ‘மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்’

பாடலில் பயின்றுள்ள தொடைநயத்தைக் கண்டறிக.

A)           இணைமோனை, இணை எதுகை

*B) பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை

C) ஒருவு மோனை, ஒருவு எதுகை

D) ஒருவு மோனை, ஒருவு இயைபு

33)         பொருந்தாத இணைகளைக் கண்டறிக.

1.            முருகியம் – குறிஞ்சி

2.            கடறு – மருதம்

3.            செறு – முல்லை

A)           1 மற்றும் 2 பொருத்தமற்றவை.

B)            1 மற்றும் மூன்று பொருத்தமற்றவை

C)            1 2 3 மூன்றுமே பொருத்தமற்றவை

*D) 2 மற்றும் 3 பொருத்தமற்றவை

34)         வெரீஇ, முத்துடைத்தாமம்: இலக்கணக் குறிப்பு தருக.

A)           சொல்லிசை அளபெடை, மூன்றாம் வேற்றுமைத்தொகை

B)            இசைநிறை அளபெடை, இரண்டாம் வேற்றுமைத்தொகை

*C) சொல்லிசை அளபெடை, இரண்டாம் வேற்றுமைத்தொகை

D) இன்னிசை அளபெடை, இரண்டாம் வேற்றுமைத்தொகை

35)         கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

*A) அருகர்களின் பாதை

B) கருங்கடலும் கலைக்கடலும்

C) அடுத்த வீடு ஐம்பது மைல்

D) உதயசூரியன்

36)         யகரம் மற்றும் வகரம் ஆகிய இரண்டு உடம்படு மெய்களும் தோன்றும் நிலைமொழி ஈறு எது?

A)           ஐகாரம்

*B) ஏகாரம்

C) உகரம்

D) இகரம்

37)         ‘Combination’ என்ற சொல்லுக்குத் தமிழாக்கம் தருக.

A)           கலவை

B)            சேர்க்கை

C)            கூடல்

*D) புணர்ச்சி

38)         இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்.

குறளில் பயின்றுள்ள இகல் என்னும் சொல்லின் பொருள் யாது?

A)           இகழ்ச்சி

*B) மனக்கசப்பு

C) பொறாமை

D) வதந்தி

39)         உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து.

குறளில் பயின்றுள்ள அணி யாது?

A)           வேற்றுமை அணி

B)            உயர்வு நவிழ்ச்சி அணி

C)            ஒட்டணி

*D) ஒருமருங்குருவக அணி

40)         காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு.

குறளில் பயின்றுள்ள தொடைநயத்தைக் குறிப்பிடுக.

A)           இணைமோனை, ஒருவு எதுகை

*B) கீழ்க்கதுவாய் மோனை, ஒருவு எதுகை

C) மேல்க்கதுவாய் மோனை, ஒருவு எதுகை

D) ஒருவு இயைபு, ஒருவு எதுகை

41)         பொருத்துக:

A.            இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்   :   1. கொல்கத்தா

B.            ஆசியாவின் மிகப்பழமையான நூலகம்   :   2. கன்னிமரா

C.            உலக அளவில் தமிழ்நூல்கள் அதிகமுள்ள நூலகம்   :   3. சரஸ்வதி மஹால்

D.            இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொதுநூலகம்   :   4. திருவனந்தபுரம்

E.            உலகின் மிகப்பெருய நூலகம்   :   5. லைபரரி ஆஃப் காங்கிரஸ்

A)           1 2 3 4 5

*B) 1 3 2 4 5

C) 4 2 3 1 5

D) 5 4 3 2 1

42)         ஈ வே ரா-நாகம்மை இலவசக் கல்வி உதவித்திட்டம் எதற்கு உரியது?

A)           பள்ளி்க்கல்வி

B)            தொழிற்கல்வி

*C) பட்ட மேற்படிப்பு

D) பட்டப்படிப்பு

43)         பொருந்தாத இணையைக் கண்டறிக.

A)           அன்பளிப்பு – கு. அழகிரிசாமி

*B) கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து

C)            சூடிய பூ சூடற்க – நாஞ்சில்நாடன்

D)           அப்பாவின் சிநேகிதர் – அசோகமித்ரன்

44)         13 லட்சம், 80 ஆயிரம், 50 லட்சம்.

கொடுக்கப்பட்டுள்ள எண்களை ஏறுவரிசையில் எழுதிட வசதியாக அவைகளுக்குத் தொடர்புடையனவற்றை வரிசைப்படுத்துக.

*A) கைலாஷ் சத்தியார்த்தி, ஐஆர்சிடிசி, விக்ரம் சாராபாய்

B) விக்ரம் சாராபாய், கைலாஷ் சத்தியார்த்தி, ஐஆர்சிடிசி

C) ஐஆர்சிடிசி, விக்ரம் சாராபாய், கைலாஷ் சத்தியார்த்தி

D) கைலாஷ்சத்தியார்த்தி, , விக்ரம் சாராபாய், ஐஆர்சிடிசி

45)         வீடு சென்றாள், தமிழ் படி, கரை பாய்ந்தான், கை தட்டு.

பொருத்தமான வேற்றும்ஐத்தொகைகளைக் காண்க.

A)           2 5 3 4

B)            4 3 5 2

C)            4 2 3 5

*D) 4 2 5 3

46)         கீழ்க்கண்டவற்றுள் முற்றிலும் பொருத்தமான இணை எது?

A)           ஆச்சாமரம் – சீவாளி

B)            இசைக் கற்றூண்கள் – பேரூர் சிவன் கோவில்

C)            நம் நாடு – விடுதலை

*D) ஆசிரியர் – வானோலிப் பணியாளர்

47)         செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது?

A)           பல்லவர் காலம்

*B) சோழர்காலம்

C) பாண்டியர் காலம்

D) நாயக்கர் காலம்

48)         கீழ்க்கண்ட எண்களுள் தொடர்பில்லாத எண் எது?

*A) 3100

B) 4000

C) 143

D) 12

49)         மரபுப் பிழையைக் கண்டறிக.

A)           கயல் பானை வனையக் கற்றுக்கொண்டாள்.

B)            இல்லத்தின் அருகே, புதிதாக கூரை வேய்ந்தனர்.

*C) நேற்று தென்றல் காற்று அடித்தது.

D) அணில் பழம் கொறித்தது.

50)         ஒரு புத்தகம், மூன்று கோடி ஆகிய தொடர்களில் வல்லினம் மிகாது. காரணம்?

A)           குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகாது

B)            எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகாது

C)            ஒன்று மற்றும் மூன்று ஆகிய எண்ணுப் பெயர்களோடு மட்டும் புணரும் வல்லினம் மிகாது

*D) எட்டு, பத்து தவிர பிற எண்ணு் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது.

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

51) இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகள் 1976 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  —– கமிட்டி அரசியலமைப்பு சட்ட திருத்தம் செய்ய பரிந்துரைத்தது?

A) தார்

*B) சர்தார் ஸ்வரன் சிங்

C) J.V.B

D) மொரார்ஜி தேசாய்

52) கீழ்காணும் குடியரசுத் தலைவர் பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : நிதி மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடியாது.

கூற்று 2 : நாடாளுமன்றத்தின் இரு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசு தலைவர் முடிவுக்கு கொண்டு வர இயலாது.

கூற்று 3 : மக்களவையின் ஐந்து ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

A) கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு

B) கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு

*C) கூற்று 1, 3 சரி கூற்று 2 தவறு

D) அனைத்தும் சரி

53) இந்திய அரசியலமைப்பில் அம்பேத்கார் புதுமையான சிறப்பம்சம் என எந்த பகுதியை குறிப்பிடுகிறார்?

A) அடிப்படை உரிமைகள்

B) அடிப்படைக் கடமைகள்

*C) அரசு வலி நெறிமுறை உறுத்தும் கோட்பாடுகள்

D) பஞ்சாயத்து அமைப்பு முறை

54) அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் ——— நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.

A) ரஷ்யா

*B) அயர்லாந்து

C) அமெரிக்கா

D) பிரிட்டன்

55) கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

கூற்று 2 : நடுவண் அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது

கூற்று 3 : மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதியினை பெற்றிருத்தல் வேண்டும்.

A) கூற்று 1, 3 சரி கூற்று 2 தவறு

B) கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு

*C) கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு

D) அனைத்தும் சரி

56) இந்திய அரசியலமைப்பில் —– வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் —— இன் படி 51A (k) கீழ் 11 வது அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

*A) 86, 2002

B) 92, 2002

C) 85, 2001

D) 93, 2003

57) பின்வருவனவற்றில் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படாதவர்களை தேர்ந்தெடுக்க

1. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

2. பல்கலைக்கழக துணை வேந்தர்கள்

3. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

4. மாநில தேர்தல் அதிகாரி

5. மற்ற நாடுகளுக்கான தூதர்கள்

A) 1, 3, 4

B) 3, 4, 5

*C) 2, 4

D) 1, 2, 4, 5

58) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த சட்டப்பிரிவு நீதிமன்றதால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது?

A) 71

*B) 72

C) 143

D) 361

59) கீழ்காணும் குடியரசு தலைவர் பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : குடியரசு தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

கூற்று 2 : மேலும் அவைக்கு வருகை புரிந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் ஆதரவு தெரிவிக்க வேண்டும்

கூற்று 3 : குடியரசுத் தலைவர் தனது பதவிக்காலம் முடிந்தாலும் அவருக்கு பின் ஒருவர் பதவி ஏற்கும் வரை அப்பதவியில் தொடரலாம்.

A) கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு

*B) கூற்று 1, 3 சரி கூற்று 2 தவறு

C) கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு

D) அனைத்தும் சரி

60) குடியரசுத் தலைவரின் நெருக்கடி நிலை அதிகாரங்களை பொருத்துக

அ) சட்டப்பிரிவு 352  – 1. மாநில அரசை கலைக்கும் அதிகாரம்

ஆ) சட்டப்பிரிவு 356 – 2. நிதி நெருக்கடியை அறிவிக்கும் அதிகாரம்

இ) சட்டப்பிரிவு 360  – 3. தேசிய நெருக்கடி நிலையை அறிவிக்கும் அதிகாரம்

A) 1 2 3

B) 2 3 1

C) 3 2 1

*D) 3 1 2

61) கீழ்காணும் அடிப்படை கடமைகள் பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை பேணிப் பாதுகாத்தல்

கூற்று 2 : நமது உயர்ந்த பாரம்பரிய கலப்பு பொருளாதாரத்தை மதித்து பாதுகாத்தல்

கூற்று 3 : அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.

கூற்று 4 : வன்முறையை கைவிட்டு பொது சொத்துக்களை பாதுகாத்தல்.

A) கூற்று 1, 2, 3 சரி கூற்று 4 தவறு

B) கூற்று 2, 3 மட்டும் சரி

C) கூற்று 2, 3, 4 சரி கூற்று 1 தவறு

*D) அனைத்தும் சரி

62) அரசியலமைப்பு சட்டப்பிரிவு —– இன் படி நடுவண் அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத் தலைவரின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்

A) 73

B) 70

*C) 77

D) 75

63) குடியரசுத் தலைவர் —– மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

*A) ஒற்றை மாற்று வாக்கு

B) நேரடி தேர்தல் முறை

C) மறைமுகத் தேர்தல் முறை

D) மேற்கண்ட அனைத்தும்

64) குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு யாரால் பதவியேற்பு உறுதிமொழி செய்து  வைக்க படுகிறது?

A) பிரதமர்

*B) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

C) துணை குடியரசுத் தலைவர்

D) மக்களவை சபாநாயகர்

65) கீழ்காணும் அரசு கொள்கை வழி காட்டு நெறிமுறைகள் பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படை கல்வி ஆகியோற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை  கொண்டுள்ளது.

கூற்று 2 : அரசு கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில்  வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக  பெற்றுக் கொள்ள முடியும்.

கூற்று 3 : நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

A) கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு

B) கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு

*C) கூற்று 1, 3 சரி கூற்று 2 தவறு

D) அனைத்தும் சரி

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

66) “மௌலவி அப்துல் கபீர்” எந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்?

A) மியான்மர்

B) சூடான்

C) வங்கதேசம்

*D) ஆப்கானிஸ்தான்

67) “யுவ சங்கமம்” திட்டத்தை எந்த அமைச்சகம் செயல்படுத்துகிறது?

A) மத்திய சுற்றுலா அமைச்சகம்

*B) மத்திய கல்வி  அமைச்சகம்

C) மத்திய வேளாண் அமைச்சகம்

D) மத்திய விளையாட்டு அமைச்சகம்

68) “Meri LIFE” செயலி எந்த திட்டத்துடன் தொடர்புடையது?

*A) Mission LIFE

B) vission LIFE

C)  Health LIFE

D) Energy

69) “மீண்டும் சிவிங்கி புலிகள்” திட்டத்தை கண்காணிக்க யாருடைய தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது?

A) விஷ்ணு குமார்

B) ராம் பிரசாத்

*C) ராஜேஷ் கோபால்

D) முருகேஷ்

70) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?

   கூற்று 1 :  உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 33.

   கூற்று 2 : சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.

A) கூற்று ஒன்று மட்டும்

*B) கூற்று இரண்டு மட்டும்

C) இரண்டும்

D) இரண்டும் இல்லை

புவியியல் வினாக்கள்

71) பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க;

*A) சிந்து

B) கங்கை

C) மகா                                                             நதி

D) கோதாவரி

72) பின்வருவனவற்றுள் வடிகால் கொப்பரை எனப்பதுவது எது?

A) முதன்மை ஆறுகளும், கிளை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு.

*B) முதன்மை ஆறுகளும், துணை ஆறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு.

C) ஆற்றின் முகதுவாரத்தில் காணப்படும் முக்கோணவடிவ வண்டல் பரப்பளவு.

D) முதன்மை ஆறுகள் கணவாய்கள் வழியாக பாய்ந்து உருவாகும் பள்ளத்தாக்குகள்.

73) இந்திய வேளான் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

A) 1952

*B) 1953

C) 1954

D) 1948

74) சாங்போ என்று அழைக்கப்படும் நதி எது?

A) சிந்து

B) கங்கை

C) கோதாவரி

*D) பிரம்மபுத்திரா

75) பொருத்தமற்ற இணையை தேர்வு செய்க;

A) சிந்து – பியாஸ்

B) கங்கை – கோமதி

C) பிரம்மபுத்திரா – மனாஸ்

*D) கிருஷ்னா – பூர்னா

76) பின்வரும் தக்கான நதிகளில் விருத்தகங்கா என்று அழைக்கப்படுவது எது?

A) நர்மதை

*B) கோதாவரி

C) கிருஷ்னா

D) காவிரி

77) பின்வரும் தக்கான நதிகளில் எது 3.13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு வடிகால் அமைப்பினை கொண்டது?

A) மகாநதி

B) கிருஷ்னா

C) காவிரி

*D) கோதாவரி

78) கௌதமி மற்றும் வஷிஸ்டா ஆகியவை எதன் கிளை ஆறுகள்?

A) காவிரி

B) கிருஷ்னா

*C) கோதாவரி

D) தபதி

79) நர்மதை நதியானது அமர்கண்டாக் பீடபூமியின் எவ்வளவு மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது?

A) 1,157

B) 1,257

*C) 1,057

D) 957

80) இந்தியாவில் பாயும் ஜீவ நதிகளின் வடிகால் அமைப்பின் பரப்பளவுகளில் பொருந்தாததை தேர்வு செய்க:

A) சிந்து 3,81,289 சதுர கிலோமீட்டர்

B) கங்கை 8,61,404 சதுர கிலோமீட்டர்

*C) பிரம்மபுத்திரா 1,95,413 சதுர கிலோமீட்டர்

D) இவற்றுள் எதுவும் இல்லை

81) தக்கான நதிகளில் எது 1,312 கிலோமீட்டர் நீளம் கொண்டது?

A) கோதாவரி

*B) நர்மதை

C) கிருஷ்னா

D) தபதி

82) பின்வருவனவற்றுள் பீமா மற்றும் முசி போன்றவை எதன் துணை ஆறுகள்?

*A) கிருஷ்னா

B) கோதாவரி

C) நர்மதை

D) தபதி

83) பின்வருவனவற்றுள் பொருத்தமற்றதை தேர்வு செய்க;

A) பர்ணா

B) பன்ஜர்

C) சக்கார்

*D) வாஹி

84) பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?

A) காதர் மற்றும் பாங்கர் ஆகியவை வண்டல் மண்ணின் இரு பிரிவுகளாகும்.

B) கரிசல்மண் பசால்ட் பாறைகளில் இருந்து உருவாகிறது.

C) சரலைமண் கா்பி மற்றும் ரப்பர் விளைவதற்கு ஏற்ற மண்வகையாகும்.

*D) இவற்றுள் எதுவும் இல்லை

85) பின்வரும் தக்கான நதிகளில் எது கர்நாடகாவில் சிவசமுத்திரம் மற்றும் ஶ்ரீரங்கப்பட்டினம்எனும் ஆற்றுத்தீவுகளை உருவாக்குகிறது?

A) துங்கபத்திரா

B) கிருஷ்னா

*C) காவிரி

D) கோதாவரி

கணித வினாக்கள்

86) ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் ரூ 6,200 எனவும், 3 ஆண்டுகளில் ரூ 6,800 எனவும் உயர்கிறது. எனில், அதன் வட்டி வீதத்தை காண்க?

A) 4%

*B) 12%

C) 15%

D) 10%

87) ஒரு பையில் பச்சை, மஞ்சள், கருப்பு நிற பந்துகள் 4:3:5 என்ற விகிதத்தில் உள்ளன. அதில் கருப்பு பந்துகளின் எண்ணிக்கை 40. எனில், பையில் உள்ள மொத்த பந்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

*A) 96

B) 74

C) 106

D) 86

88) எத்தனை ஆண்டுகளில் ரூபாய் 5,600,  6 சதவீத வட்டி வீதத்தில் கூடுதல் 6720 ஆகும்.

A) 5 வருடங்கள்

B) 4. 1/2 வருடங்கள்

C) 2. 3/4 வருடங்கள்

*D) 3  1/3 வருடங்கள்

89) ராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார்.  அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4:1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?

A) 30 அடி

B) 15 அடி

*C) 60 அடி

D) 40 அடி

90) ரூபாய் 3,600க்கு 15 சதவீத தனிவட்டி வீதத்தில் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வட்டித்தொகை எவ்வளவு?

A) 1,440

B) 1,700

*C) 2,160

D) 2,080

91) இரு நபர்களின் வார வருமானம் 7:3  என்ற விகிதத்திலும், செலவு 5:2 என்ற விகிதத்திலும் உள்ளன. அவர்கள் இருவருமே வாரம் ரூபாய் 300 ஐ சேமிக்கின்றனர். எனில், முதல் நபரின் வார வருமானம் எவ்வளவு?

A) 5,000

B) 5,700

C) 6,000

*D) 6,300

92) ஒரு தொகை கூட்டுவட்டி வீதத்தில் 15 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. எத்தனை ஆண்டுகளில் 8 மடங்காகும்.

A) 30 வருடங்கள்

*B) 45 வருடங்கள்

C) 35 வருடங்கள்

D) 48 வருடங்கள்

93) 2 சதவீத ஆண்டு வட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு அசலுடன் கிடைத்த கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் 4. எனில், அவற்றின் அசல் தொகை என்ன?

A) 4,000

B) 7,000

C) 16,000

*D) 10,000

94) a:b = 7:8, b:c = 24:9 எனில்  a:b:c = ?

A) 12:20:8

*B) 21:24:9

C) 21:12:9

D) 7:8:9

95) ஆண்டுக்கு 6%  வட்டி வீதம், 5 ஆண்டுகளில் தனிவட்டி ரூபாய் 60 பெறுவதற்கான அசல் தொகை என்ன?

*A) 200

B) 400

C) 600

D) 800

95) மூன்று ஆண்டுகளில் 6% தனி வட்டி வீதம், மொத்தத் தொகை  11,800 அளிக்கும் அசலை காண்க?

A) 7,500

B) 13,400

C) 6,900

*D) 10,000

97)  a:b=4:1 எனில் √(a/b)+ √(b/a) = ?

*A) 5/2

B) 4

C) 8

D)3/2

98) சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து ரூ 52,000 ஐ  ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாக பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து அவர் ரூபாய் 79,040 ஐ மொத்தத் தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தை காண்க?

A) 11%

*B) 13%

C) 14%

D) 18.5%

99) கவிதாவும், மீனாவும் ரூபாய் 25,000 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூபாய் 5,000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும், கவிதாவுக்கும் உள்ள புதிய பங்கின் விகிதம் என்ன?

A) 3:1

B) 4:3

C) 1:3

*D) 3:4

100) ரூபாய் 16,000  – க்கு இரண்டு வருட கூட்டுவட்டி மற்றும் தனிவட்டியின் வித்தியாசம் ரூபாய் 360 எனில், வட்டி வீதம் என்ன?

A) 5%

B) 10%

*C) 15%

D)  20%