- குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1) பொருத்துக :
a) விளைவுக்கு – 1) தோல்
b) அறிவுக்கு – 2) நீர்
c) இளமைக்கு – 3) வேல்
d) புலவர்க்கு – 4) பால்
A) 4, 3, 1, 2
B) 3, 1, 4, 2
*C) 2, 1, 4, 3
D) 2, 4, 1, 3
2) “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிர்”
இதில் “ஒளிக்கதிர்” என்பது யாரைக் குறிக்கிறது?
A) காமராஜர்.
*B) முகமது இஸ்மாயில்.
C) தந்தை பெரியார்.
D) அறிஞர் அண்ணா.
3) சரியான கூற்றை / கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
1. நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.2. இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
3. நோயின் தன்மை மூன்று வகைப்படும் என நீலகேசி கூறுகிறது.
4. இது கடவுள் வாழ்த்து உட்பட பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
A) 1, 2, 4.
B) 1, 3, 4.
*C) 1, 2, 3.
D) இவை அணைத்தும்.
4) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) வ் என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் தமிழில் இல்லை
2) று எனும் எழுத்து இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் தமிழில் இல்லை
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
*C) கூற்றுகள் 1,2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு
5) தேசாந்திரி என்ற நூலின் ஆசிரியர் யார்?
*A) எஸ் ராமகிருஷ்ணன்
B) அப்துல் ரகுமான்
C) தாராபாரதி
D) மு மேத்தா
6) ஓரெழுத்து ஒருமொழிகளை உறிய பொருளோடு பொருத்துக
A) கை – 1) இளமை
B) பை – 2) ஒழுக்கம்
C) தே – 3) மதில்
D) சோ – 4) கடவுள்
A) 2 1 3 4
*B) 2 1 4 3
C) 3 4 2 1
D) 3 4 1 2
7) கீழ்கண்டவர்களில் சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர் யார்?
A) ஜயகாந்தன்.
B) புதுமைப்பித்தன்.
C) பாவண்ணன்.
*D) சிவக்குமார்
8) வரிசைப்படுத்துக.
1. முல்லைப்பாட்டு.
2. மதுரைக்காஞ்சி.
3. நெடுநல்வாடை.
4. குறிஞ்சிப்பாட்டு.
A) 1, 4, 3, 2.
B) 2, 3, 1, 4.
C) 1, 4, 2, 3.
*D) 1, 2, 3, 4.
9) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 : தமிழ்நாடு என்ற சொல் கம்பராமாயணத்தில் முதன் முதலில் இடம்பெற்றது.
கூற்று 2 : தமிழன் என்ற சொல் அப்பர் தேவாரத்தில் முதன் முதலில் இடம் பெற்றது.
A) கூற்று ஒன்னு மட்டும் சரி.
*B) கூற்று இரண்டு மட்டும் சரி.
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
10) குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
*A) 17.
B) 18.
C) 12.
D) 16.
11) சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற தொடரில் வெளிப்படும் அணி எது
*A) பிரிதுமொழிதல் அணி
B) வேற்றுமை அணி
C) இரட்டுறமொழிதல் அணி
D) உவமை அணி
12) கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானது எது?
கூற்று 1 : உயிர் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை 5.
கூற்று 2 : குறில் எழுத்துக்களை ஒலிக்கும் கால அளவு இரண்டு மாத்திரை.
கூற்று 3 : ஆயுத எழுத்தை ஒலிக்கும் கால அளவு அரை மாத்திரை.
*A) கூற்று 1 மற்றும் 2 தவறு
B) கூற்று 1 மற்றும் 3 தவறு
C) கூற்று 2 மற்றும் 3 தவறு
D) அனைத்து கூற்றுகளும் தவறு
13) “வாழ்க்கை என்பது யாதெனில், நீ சாகும் வரை அல்ல: மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்று கூறியவர் யார்?
A) காந்தியடிகள்
B) கைலாஷ் சத்யார்த்தி
*C) அன்னை தெரசா
D) அறிஞர் அண்ணா
14) பொருத்துக.
A) அழுவம் – 1. அகல்விளக்கு.
B) வங்கூழ் – 2. காற்று.
C) வெற்பு – 3. மலை.
D) தகளி – 4. கடல்.
*A) 4, 2, 3, 1.
B) 4, 3, 2, 1.
C) 1, 2, 3, 4.
D) 1, 3, 2, 4.
15) பாரதியாரின் இயற்பெயர் என்ன?
*A) சுப்பிரமணியன்
B) சுப்ரமணிய சிவா
C) சுப்புரத்தினம்
D) மாணிக்கம்
16)தவறான தொடரைக் காண்க
1) ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
2) ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
3) ல் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
4) ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
A) 1, 2 தவறு
*B) 2, 3 தவறு
C) 1, 4 தவறு
D) 2, 3, 4 தவறு
17) குற்றியலுகரச் சொற்களை உறிய வகைகளோடு பொருத்துக
A) ஆறு – 1) உயிர்த்தொடர் குற்றியலுகரம்
B) அரசு – 2) இடைத்தொடர் குற்றியலுகரம்
C) மார்பு – 3) வன்றொடர் குற்றியலுகரம்
D) பேச்சு – 4) நெடில்தொடர் குற்றியலுகரம்
*A) 4 1 2 3
B) 4 2 1 3
C) 4 3 2 1
D) 2 4 1 3
18) “Magazine” தமிழாக்கம் தேர்ந்தெடுக்கவும்.
A) மாத இதழ்.
*B) பருவ இதழ்.
C) வார இதழ்.
D) நாளிதழ்.
19_பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
கூற்று 1 : இந்தியாவின் பறவை மனிதர் என்று டாக்டர் சலீம் அலி போற்றப்படுகிறார்.
கூற்று 2 : இவர் தனது சுயசரிதை நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டுள்ளார்.
A) 1 மட்டும்
B) 2 மட்டும்
*C) இரண்டும்
D) இரண்டும் இல்லை
20) உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது எவ்வகை அணி
A) உவமை அணி
B) எடுத்துக்காட்டு உவமை அணி
*C) உருவக அணி
D) ஏகதேச உருவக அணி
21) இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது
A) அந்தாதி
B) மோனை
C) எதுகை
*D) இயைபு
22) குறுக்கங்கள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
*A) ஐகாரக்குறுக்கம் ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
B) ஔகாரக்குறுக்கம் ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்
C) மகரக்குறுக்கம் கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்
D) ஆய்தக்குறுக்கம் கால் மாத்திரை அளவில் ஒலிக்கும்
23) ‘சாதல் நீங்க எமக்கீந் தனையே’
மேல்கண்ட கூற்று யார் யாரிடம் கூறியது?
A) அதியமான் ஔவையாரிடம்.
*B) ஔவையார் அதியமானிடம்.
C) ஔவையார் தொண்டைமானிடம்.
D) தொண்டைமான் ஔவையாரிடம்.
24) கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
A) 1964
*B) 1954
C) 1974
D) 1984
25) தவறான கூற்றை/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
1. இ ரா இளங்குமரனாரின் சிறப்பு பெயர் செந்தமிழ் கவிஞர்.
2. இவர் தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
3. இவர் திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்துள்ளார்.
A) 2 மட்டும்.
*B) 1 மட்டும்.
C) 3 மட்டும்.
D) 1 மற்றும் 3.
26) பெயர் பகுபதத்திற்குப் பொருத்தமற்ற சொல் எது
A) சித்திரையான்
B) உழவன்
*C) உண்கின்றான்
D) இனியன்
27) தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
A) பெரியார்.
B) வள்ளளார்.
*C) காத்தவராயன்.
D) இரட்டைமலை சீனிவாசர்.
28) மரபுப்பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A) குழந்தை பால் குடித்தது
*B) சிறுவன் இலை பறித்தான்
C) கட்டிடத் தொழிலாளி சுவர் கட்டினார்
D) தோழி சோறு தின்றாள்
29) ஆயுத எழுத்துக்கு வழங்கப்படும் பெயர்களில் தவறானது எது?
A) முப்புள்ளி
*B) முதல் நிலை
C) முற்பார் புள்ளி
D) தனிநிலை
30) மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
இத்தொடரில் பயின்றுவரும் அணி எது
A) உவமை அணி
B) எடுத்துக்காட்டு உவமை அணி
*C) இல்பொருள் உவமை அணி
D) உயர்வு நவிற்சி அணி
31) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது?
*A) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
B) பண்டைக்கால இந்திய வணிகம்
C) ரூபாய் பற்றிய பிரச்சனை
D) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
32) பொங்கல் உண்டான் என்பது எவ்வகை ஆகுபெயர்
A) முதலாகுபெயர்
B) பண்பாகுபெயர்
C) சினையாகுபெயர்
*D) தொழிலாகுபெயர்
33) அறிவியல் ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
A) ஔவையார்
B) பாரதியார்
C) அப்துல் கலாம்
*D) நெல்லை சு முத்து
34) யாரை, எதை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் தொடரின் பகுதி எது
A) எழுவாய்
B) பயனிலை
*C) செயப்படுபொருள்
D) இவை அனைத்தும்
35) தொடர் வகைகளை உறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக
A) கல்லாமை ஒழிக – 1) செய்தித்தொடர்
B) பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! – 2) வினாத்தொடர்
C) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். – 3) விழைவுத்தொடர்
D) நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? – 4) உணர்ச்சித்தொடர்
A) 3 4 2 1
*B) 3 4 1 2
C) 2 4 1 3
D) 4 2 1 3
36) ) கலிங்கத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்?
A) முதலாம் குலோத்துங்க சோழன்
B) செயங்கொண்டார்
C) சொக்கநாதப் புலவர்
*D) ஒட்டக்கூத்தர்
37) Pictograph தமிழாக்கம் தருக.
A) கல்வெட்டு எழுத்து.
B) ஓலைச்சுவடி எழுத்து.
*C) சித்திர எழுத்து:
D) வட்டெழுத்து.
38) தகுதிஎன ஒன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
இக்குறளில் பயின்றுவரும் எதுகைவகை எது
A) கூழை எதுகை
B) முற்று எதுகை
C) இணை எதுகை
*D) ஒரூஉ எதுகை
39) ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A) 1924.
*B) 1927.
C) 1932.
D) 1929.
40) பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்க
A) பொன் — பெயர் இயற்சொல்
B) நடந்தான் — வினை இயற்சொல்
C) அழுவம் — பெயர்த் திரிசொல்
*D) வந்தான் — வினைத்திரிசொல்
41) உலகிலேயே முதன்முறையாக ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு எது?
A) அமெரிக்கா
B) இங்கிலாந்து
C) இத்தாலி
*D) சவுதி அரேபியா
42) அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
A) அப்துல் கலாம்
B) விக்ரம் சாராபாய்
*C) சர் சி வி ராமன்
D) நெல்லை சுமுத்து
43) குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்
*A) 2
B) 4
C) 6
D) 8
44) பொருந்தாததை தெர்ந்தெடுக்கவும்.
1. நீதிநெறி விளக்கம்.
2. கதர் பிறந்த கதை.
3. கந்தர் கலிவெண்பா.
4. கயிலைக் கலம்பகம்.
A) 1 மட்டும்.
*B) 2 மட்டும்.
C) 3 மட்டும்.
D) 4 மட்டும்.
45) கவிஞர் களில் ஜிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்,
A) ஈரான்
*B) லெபனான்
C) பூட்டான்
D) பிரட்டன்
46) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
கூற்று 1 : உயிர் எழுத்துக்கள் மொழிக்கு முதலில் வராது.
கூற்று 2 : மெய் எழுத்துக்கள் மொழிக்கு இறுதியில் வராது.
A) 1 மட்டும்
B) 2 மட்டும்
*C) இரண்டும்
D) இரண்டும் இல்லை
47) கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள் யார்?
*A) சேரர்.
B) சோழர்.
C) பாண்டியர்.
D) பல்லவர்.
48) வனவியல் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் எது
A) Jungle
B) Forest Conservator
C) Bio Diversity
*D) Forestry
49) பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
A) 9
B) 7
C) 6
*D) 8
50) பொருத்துக.
a) உலக ஈர நில நாள் – 1. பிப்ரவரி 2.
b) உலக ஓசோன் நாள் – 2. செப்டம்பர் 16.
c) உலக இயற்கை நாள் – 3. அக்டோபர் 6.
d) உலக வனவிலங்கு நாள் – 4. அக்டோபர் 3.
*A) 1, 2, 4, 3.
B) 1, 2, 3, 4.
C) 1, 4, 3, 2.
D) 1, 3, 2, 4.
51) கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது
A) இணை எதுகை
B) கீழ்க்கதுவாய் எதுகை
C) கூழை எதுகை
*D) ஒரூஉ எதுகை
52) பொருத்துக :
a) தமிழ்நாடு – 1) மகர சங்கராந்தி
b) ஆந்திரா – 2) உத்ராயன்
c) பஞ்சாப் – 3) பொங்கல்
d) குஜராத் – 4) லோரி
A) 4, 3, 1, 2
B) 3, 4, 2, 1
C) 2, 3, 1, 4
*D)3, 1, 4, 2
53) இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முத்துராமலிங்கர் எச்சிறையில் அடைக்கப்பட்டார்?
*A) தாமோ.
B) அலிப்பூர்.
C) அமராவதி.
D) கல்கத்தா.
54) இலக்கண அடிப்படையில் சொல் எத்தனை வகைப்படும்?
A) 2
B) 3
*C) 4
D) 5
55) நிரையசைக்குப் பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்க
*A) குறில் எழுத்துடன் ஒற்று வருதல்
B) இரண்டு குறில் எழுத்துகள் இணைந்து வருதல்
C) இரண்டு குறில் எழுத்துகள் இணைந்து அவற்றுடன் ஒற்று வருதல்
D) குறில் நெடில் எழுத்துகள் இணைந்து வருதல்
56) சுதேசி நாவாய் சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A) திருப்பூர் குமரன்
B) சுப்பிரமணிய சிவா
C) வாஞ்சிநாதன்
*D) வ உ சிதம்பரனார்
57) கப்பல் கட்டும் கலைஞர்களை கம்மியர் என்று எந்த நூல் குறிப்பிடுகிறது?
A) புறநானூறு
*B) மணிமேகலை
C) பதிற்றுப்பத்து
D) அகநானூறு
58) முதனிலைத் தொழிற்பெயருக்குப் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
A) வானில் இடி இடித்தது
B) சோறு கொதி வந்தது
C) அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்
*D) தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
59) பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.
A) புத்துமண்.
B) கதை சொல்லும் கலை.
C) வேட்டை
*D) நேற்று வாழ்ந்தவர்கள்.
60) இல்லை என்பது எந்த இடத்திற்குறிய எதிர்மறைச் சொல்
A) தன்மை
B) முன்னிலை
C) படற்கை
*D) மேற்கூறிய அனைத்தும்
61) தூண்டில் கதைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A) ஜயகாந்தன்.
B) புதுமைப்பித்தன்.
C) அகிலன்.
*D) ரங்கராஜன்
62) தவறான கூற்றை/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழ்ப்பல்கலைக் கழகம்.1981 இல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டது.
2. இது தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
3. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது “ தமிழகம்” எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
A) 1 மட்டும்.
B) 2 மட்டும்.
*C) 3 மட்டும்.
D) இவற்றில் எதுவும் ில்லை
63) மரபுத்தொடர்களும் அவற்றிற்கு இணையான பொருளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்க
A) கொடிகட்டிப் பறத்தல் — புகழ்பெற்று விளங்குதல்
B) அவசரக்குடுக்கை — எண்ணிச் செயல்படாமை
*C) கல்லில் நார் உரித்தல் – ஆராய்ந்து பாராமல்
D) கானல்நீர் — இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது
64) யாருடைய பாடல்கள் தமிழின் உபநிடதங்கள் என்று போற்றப்படுகிறது?
A) வள்ளலார்
B) பாரதிதாசன்
*C) தாயுமானவர்
D) ராமலிங்கனார்
65) வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது
*A) பெயரெச்சம், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
B) இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
C) வினைத்தொகையில் வல்லினம் மிகாது
D) உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது
66) கப்பலைச் செலுத்துவதற்கும் உரிய திசையில் திருப்புவதற்கும் பயன்படும் கருவி —- எனப்படும்.
*A) சுக்கான்.
B) எரா.
C) பருமல்.
D) வங்கு.
67) பொருளை வேறுபடுத்துவதற்காகப் பெயர்ச்சொல்லோடு இணைக்கப்படும் வேற்றுமை உருபுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
A) எழுத்துகள்
*B) அசைகள்
C) சீர்கள்
D) அடிகள்
68) நிறுத்தக்குறிகள் இடவேண்டிய இடங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
1) வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
2) உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாகக் கூறும் இடத்தில் முக்காற்புள்ளி வரும்.
3) சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
4) சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
A) 1, 2 சரி
B) 2, 3 சரி
*C) 1, 4 சரி
D) 3, 4 சரி
69) சாலரா மற்றும் சேகண்டி எவ்வகை இசை கருவிகள்?
A) நரம்புக்கருவிகள்
*B) கஞ்சக்கருவிகள்
C) தோல்கருவிகள்
D) காற்றுக்கருவிகள்
70) சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் சுவரோவியங்களாக எங்கு வரையப்பட்டுள்ளன?
*A) தஞ்சைப் பெரிய கோயில்.
B) சித்தன்ன வாசல்.
C) சிதம்பரம் நடராஜ கோயில்.
D) கைலாசநாதர் கோயில்.
71) வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது
A) இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்
B) உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்
*C) எண்ணுப்பெயர்களில் பத்து என்ற எண்ணை அடுத்து மட்டும் வல்லினம் மிகும்
D) அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
72) இதய ஒலி நூலின் ஆசிரியர் யார்?
A) பெரியார்.
B) அண்ணா.
*C) இரசிகமணி.
D) குன்றக்குடி அடிகளார்.
73) ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
*A) சீனா
B) இந்தியா
C) நேபாளம்
D) பாகிஸ்தான்
74) வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அஃது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தருவது —-
A) வேற்றுமைத்தொடர்
*B) வேற்றுமைத்தொகை
C) உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை
D) தொகைநிலைத்தொடர்
75 கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தாராபாரதியின் படைப்புகளில் பொருந்தாது எது?
A) விரல் நுனி வெளிச்சங்கள்
*B) தொடுவானம்
C) இது எங்கள் கிழக்கு
D) புதிய விடியல்கள்
76) முத்துராமலிங்கத்தேவர் தன் தொடக்கக்கல்வியை எங்கு பயின்றார்?
*A) கமுதி
B) மதுரை.
C) பசுமலைப்.
D) இராமநாதபுரம்.
77) பொருத்துக
A) தலைவணங்கு – 1) ஆறாம் வேற்றுமைத்தொகை
B) சிதம்பரம் சென்றான் – 2) மூன்றாம் வேற்றுமைத்தொகை
C) மலைவீழ் அருவி – 3) நான்காம் வேற்றுமைத்தொகை
D) கம்பர் பாடல் – 4) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
A) 1 2 3 4
B) 2 1 3 4
*C) 2 3 4 1
D) 3 4 2 1
78) பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.
A) திருவானைக்கா உலா.
B) பரபிரம்ம விளக்கம்.
*C) தமிழ்ப்பேறு.
D) சித்திர மடல்.
79) எந்தப் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று தன்மை இடத்தில் வராது.
A) வேண்டல்
*B) விதித்தல்
C) வாழ்த்தல்
D) வைதல்
80) பெருவாயின் முள்ழியார் பிறந்த ஊர் எது?
A) தேரழுந்தூர்
B) தேரூர்
*C) கயத்தூர்
D) எட்டயபுரம்
81) தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடும் நூல் எது?
A) பரிபாடல்.
B) மணிமேகளை.
*C) சிலப்பதிகாரம்
D) புறநானூறு.
82) உவமைத் தொடர்களை அவற்றிற்குறிய பொருளோடு பொருத்துக
a. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – 1) ஒற்றுமையின்மை
b. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – 2) தடையின்றி மிகுதியாக
c. உள்ளங்கை நெல்லிக்கனி போல – 3) தற்செயல் நிகழ்வு
d. மடை திறந்த வெள்ளம் போல் – 4) வெளிப்படைத் தன்மை
*A) 3 1 4 2
B) 3 4 2 1
C) 2 1 4 3
D) 2 3 1 4
83) காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு எது?
A) 1966
B) 1956
C) 1986
*D) 1976
84) பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1 : “பாலோடு வந்து கூலோடு பெயரும்” என்று குறிப்பிடும் நூல் அகநானூறு.
கூற்று 2 : “பொன்னொடு வந்து கறியோடு பெயரும்” என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
*D) இரண்டும் தவறு
85) பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
A) குழலி நடனம் ஆடியது.
B) மேகங்கள் சூழ்ந்து கொண்டது.
*C) அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.
D) கோவலன் சிலம்பு விற்கப் போனாள்
86) ‘நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. போதிய ஓய்வும் நேரமும் வாய்ப்பும் இருப்பின் வேறு பல மொழிகளையும் பயிலலாம்’.
மேல் கண்ட கூற்றை கூறியவர் யார்?
A) மூவா.
*B) திருவிகா.
C) பெரியார்.
D) அண்ணா.
87)தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடுன் நூல் எது
A) கம்பராமாயணம்
B) தேம்பாவனி
C*) திருக்குறள்
D)சிலப்பதிகாரம்
88) யாருடைய அடி நிழல் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று காந்தியடிகள் கூறினார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) ராஜாஜி
*D) உ வே சா
89) பகுபதத்தின் இறுதியாக அமையும் விகுதி கீழ்வரும் எதைக் காட்டுவதில்லை
A) எச்சம்
*B) எதிர்மறை
C) முற்று
D) எண்
90) ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்னும் அடி இடம்பெ்ற்ற நூல் எது?
*A) புறநானூறு
B) அகநாநூறு.
C) நற்றினை.
D) பரிபாடல்.
91) நாட்டுப்புறவியல் ஆய்வு என்னும் நூலை தொகுத்தவர் யார்?
A) ஆலங்குடி சோமு
*B) சு சக்திவேல்
C) திரு வி க
D) ரா இளங்கமரனார்
92) ‘கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ என்னும் தொடர் இடம்பெற்ற நூல் எது?
*A) சிலப்பதிகாரம்.
B) நந்நூல்.
C) தொல்காப்பியம்.
D) மணிமேகளை.
93) கீழே கொடுக்கப்பட்டுள்ள இடுகுறிப் பொதுப் பெயரில் தவறானது எது?
A) மரம்
*B) கருவேலங்காடு
C) மண்
D) காற்று
94) சோணாடு என்பது எவ்வகை வழக்குச் சொல்
A) இலக்கணமுடையது
B) இலக்கணப்போலி
*C) மரூஉ
D) குழூஉக்குறி
95) மூதுரையில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A) 30
*B) 31
C) 32
D) 33
96) இயற்கை எழில் என்னும் பகுதி கீழ்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A) அமுதும் தேனும்.
*B) தேன்மழை.
C) துறைமுகம்.
D) இவற்றில் எதுவும் இல்லை.
97) மூன்று காலத்திலும் வரும் எச்ச வகை எது
*A) தெரிநிலைப் பெயரெச்சம்
B) குறிப்புப் பெயரெச்சம்
C) தெரிநிலை வினையெச்சம்
D) குறிப்பு வினையெச்சம்
98) தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்ட கல்வெட்டு எங்கு கிடைத்தது?
A) கீழடி.
B) செம்பியன் கண்டியூர்.
*C) அரச்சலூர்
D) ஆதிச்சநல்லூர்.
99 கொங்குநாட்டின் எல்லைகளை உறிய திசைகளோடு பொருத்துக
a) மேற்கு – 1) பெரும்பாலை
b) கிழக்கு – 2) பழனிமலை
c) தெற்கு – 3) வெள்ளிமலை
d) வடக்கு – 4) மதிற்கரை
A) 1 2 3 4
B) 3 4 1 2
*C) 3 4 2 1
D) 4 3 1 2
100) ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
A) சுப்ரமணியன்
B) சுப்புரத்தினம்
C) எத்திராசலூ
*D) துரைராசு
பொது அறிவு வினாக்கள்
101) ரத்தம் உறைதலுக்கு காரணமான தனிமம் எது
A] சோடியம்
B] பொட்டாசியம்
*C) கால்சியம்
D] இவற்றுள் எதுவும் இல்லை
102) பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
1) ஹரப்பா மக்கள் பாசனத்திற்கு கால்வாய்களையும், கிணறுகளையும் பயன்படுத்தினர்.
2) ஹரப்பா மக்கள் உழவுக்கு கலப்பையை பயன்படுத்தினர்.
3) ஹரப்பா மக்கள் உழுததற்கான சான்றுகள் காளிபங்கனில் காணப்படுகிறது.
4) ஹரப்பா மக்கள் இரட்டை பயிரிடல் முறையை பின்பற்றினர்.
A) 1, 4 சரி
B) 2, 3 சரி
C) 1, 3, 4 சரி
*D) அனைத்தும் சரி
103) பின்வரும் சட்டத்திருத்தங்களையும் அவை கொண்டுவரப்பட்ட ஆண்டுகளையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக :
a) 69 ஆவது சட்ட திருத்தம் – 1) 1956
b) 7 ஆவது சட்டத் திருத்தம் – 2) 1976
c) 44 ஆவது சட்ட திருத்தம் – 3) 1978
d) 42 ஆவது சட்ட திருத்தம் – 4) 1991
A) 4, 1, 2, 3
*B) 4, 1, 3, 2
C) 4, 3, 2, 1
D) 4, 2, 1, 3
104) ஹிட் ஸ்ட்ரிக் கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) கால்பந்து
*B) கிரிக்கெட்
C) ஹாக்கி
D) பேட்மிட்டன்
105) ரூபாய் 963 ஐ 3:6 என்ற விகிதத்தில் காண்க :
A) 312:624
*B) 321:642
C) 331:662
D) 33:666
106) வீரபாண்டிய கட்டபொம்மன் காலகட்டத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் யார்?.
A டல்கௌசி பிரபு.
B) வில்லியம் பென்டிங் பிரபு.
*C) வெல்லஸ்லி பிரபு.
D) கானிங் பிரபு.
107) “எங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் சரியான பிரதிநிதித்துவம் தரவில்லை எனில், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்” என்ற கூற்றை கூறியவர் யார்?
A) R K சண்முகனார்
B) தியாகராயர்
*C) நடேசன் ஆர்
D) விஜயன்
108) 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தில் கலந்துகொண்ட இந்தியத் தலைவர்களையும் அவர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளையும் பொருத்துக
a) இரண்டாம் பகதூர்ஷா – 1) ஜான் நிக்கல்சன்
b) பேகம் ஹஸ்ரத் மகால் – 2) காலின் கேம்பெல்
c) நானாசாகிப் – 3) ஹென்ரி லாரன்சு
d) கன்வர்சிங் – 4) வில்லியம் டெய்லர்
A) 1 2 3 4
B) 1 4 2 3
*C) 1 3 2 4
D) 1 2 4 3
109) பின்வருவனவற்றுள் அம்பேத்கர் எதை வலியுறுத்தவில்லை?
A) அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும்.
B) நிலத்தை அரசு நிர்வகிக்க வேண்டும்
C) கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும்
*D) காப்பீட்டு வணிகத்தை தனியார் செய்ய வேண்டும்
110) பின்வரும் நூல் மற்றும் நூல் ஆசிரியர்களை பொருத்துக :
a) பதஞ்சலி – 1) பிரஹத் சம்கிருதை
b) விசாகதத்தர் – 2) ஹஸ்த் ஆயுர்வேதா
c) வராகமிகிறர் – 3) மகா பாஷ்யம்
d) பால காப்பியா -:4) முத்திர ராட்சசம்
A) 1, 2, 3, 4
B) 3, 4, 2, 1
C) 4, 2, 1, 3
*D) 3, 4, 1, 2
111) 14-5+7+5×(72÷9) = ?
A) 168
*B) 56
C) 65
D) 49
112) மதுரை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?.
*A) N.M.R. சுப்புராயன்.
B) N.M.R. ராமராயன்.
C) N.M.R. குமாரசாமி.
D) N.M.R. சுப்பிரமனியன்.
113) நேனோ என்பது எம்மொழிச் சொல்
A] பிரஞ்சு
B] லத்தீன்
C] ஹீப்ரு
*D] கிரேக்கம்
114) 5/6 – (1/4 ÷ 2/3) = ?
*A) 11/24
B) 2/3
C) 1/2
D) 22/11
115) மகாதேவ் கோவிந்த் ரானடே எப்போது தக்காணக் கல்விக் கழகத்தை நிறுவினார்
A. 1842
B. 1861
C. 1870
*D. 1884
116) பின்வருவனவற்றுள் எவை தவறானது அல்ல?
1) நாரத ஸ்மிருதி என்னும் நூல் பாசனம் பற்றி குறிப்பிடுகிறது.
2) வயல்களை வெள்ளங்களில் இருந்து பாதுகாக்க உதவிய அணைக்கரை ‘கரா’.
3) பாசனத்திற்கு உதவிய அணைக்கரை ‘பந்தியா’.
4) தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜலகமா என்னும் வடிகால் அமைப்பு இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.
A)1, 2, 3, 4
*B) 1, 4
C) 2, 3
D) 2, 3, 4
117) குடியுரிமை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
1) சிட்டிசன் என்ற சொல் ‘சிவிஸ்’ என்ற லத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
2) 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்தால் தற்போது வரை ஏழு முறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
3) இந்திய குடியுரிமைச் சட்டம் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது.
4) 2004 ஆம் ஆண்டு காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்டது.
A) 1 மற்றும் 2
B) 1, 2 மற்றும் 3
*C) 2 மற்றும் 4
D) 3 மற்றும் 4
118) ஒரு பொருளுக்கு தொடர் தள்ளுபடியாக 12.5% மற்றும் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கு சமமான ஒரு தள்ளுபடியை காண்க?
A) 25 %
*B) 30 %
C) 35 %
D) 20%
119) ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் பொருந்தாத நபரை காண்க?
A) குலாம் நபி ஆசாத்
B) சஞ்சய் கோத்தாரி
C) அமித்ஷா
*D) Y V ரெட்டி
120) சிகரங்களை அதன் உயரத்தை வைத்து மேலிருந்து கீழ் நோக்கி எழுதவும்
1) கஞ்சஞ்சாங்க
2) மஹாலுர்
3) தவழகிரி
4) நந்தாதேவி.
A) 2 3 1 4
B) 3 2 1 4
C) 4 3 2 1
*D) 1 2 3 4.
121) விவசாயிகளின் புரட்சிகளையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக
a) சந்தால் கலகம் – 1) 1855 1856
b) தக்காண கலகம் – 2) 1875
c) பாப்னா கலகம் – 3) 1873
d) இண்டிகோ கலகம் – 4) 1859 1860
*A) 1 2 3 4
B) 1 4 2 3
C) 1 3 2 4
D) 1 3 4 2
122) புற்றுநோயை கண்டறிய உதவும் ஐசோடோப்பு எது
A] அயோடின் 131
B] சோடியம் 24
C] இரும்பு 59
*D] கோபால்ட் 60
123) ஸ்ரீகாந்த் என்பவர் 30 பேனாக்களை வாங்க கடைக்கு செல்கிறார். கடைக்காரர் நேற்றைய விலையை விட இன்று 20 சதவீதம் அதிகரித்து விட்டது என்கிறார். எனில், ஸ்ரீகாந்த் எத்தனை பேனாக்களை வாங்குவார்?
A) 26
*B) 25
C) 27
D) 24
124) சரியானவற்றை தேர்வு செய்க :
1) HDI இல் வருமானம் நீக்கப்படுகிறது. PQLI இல் வருமானம் சேர்க்கப்படுகிறது.
2) உடல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட மேம்பாட்டை HDI குறிப்பிடுகிறது. PQLI உடல் சார்ந்த மேம்பாட்டை மட்டுமே குறிப்பிடுகிறது.
A) 1 மட்டும் சரி
*B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
125) பின்வருவனவற்றை வரிசைப்படுத்துக :
1) சமய சார்பற்ற
2) குடியரசு
3) இறையாண்மை
4) சமதர்மம்
5) மக்களாட்சி
A) 1, 2, 3, 4, 5
B) 4, 2, 5, 1, 3
C) 3, 1, 4, 5, 2
*D) 3, 4, 1, 5, 2
126) கவிராஜா என்னும் பட்டம் எந்த குப்த பேரரசருக்கு வழங்கப்பட்டது?
A) முதலாம் சந்திரகுப்தர்
B) இரண்டாம் சந்திரகுப்தர்
*C) சமுத்திரகுப்தர்
D) ஸ்ரீ குப்தர்
127) இந்தியாவில் முதன்முறையாக ‘பல்நோக்கு கடற்பாசி பூங்கா’ எங்கு அமைக்கப்பட உள்ளது?
*A) தமிழ்நாடு
B) கேரளா
C) கர்நாடகா
D) ஒடிசா
128) சராசரியாக 19 ஆட்டங்களில் ஒரு பேட்ஸ்மேன் 57 ரன்கள் எடுக்கிறார். மற்றும் இருபதாவது ஆட்டத்தில் 97 ரன்கள் எடுக்கிறார் எனில், புதிய சராசரி என்ன?
A) 62
*B) 59
C) 69
D) 54
129) கீழ்கானும் பாளையங்களில் பொருந்தாதது எது?.
A) தலைவன் கோட்டை.
B) சுரண்டை.
C) சிங்கம்பட்டி.
*D) நாகலாபுரம்.
130) இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் —– பொதுத்துறை வங்கிகளாக உள்ளன?
A) 56.7%
B) 44%
*C) 72.9%
D) 80.2%
131) சூர்யோதயம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?.
A) சீனிவாச சாஷ்ரி.
*B) நீலகண்டபிரம்மச்சாரி.
C) வரதராஜுலு.
D) அரவிந்தர்.
132) இரண்டு ரூபாய்க்கும் 40 பைசாவுக்கும் இடையே உள்ள விகிதத்தை காண்க?
A) 1:5
*B) 5:1
C) 5:2
D) 2:5
133) பொருந்தாத இணையை தேர்வு செய்க :
A) செபு- மாடு
B) மெழுகா – சிந்து பகுதி
*C) ஹஜா பறவை – குயில்
D) சிந்துவெளி நாகரீக காலம் – வெண்கல காலம்
134) இந்திய அரசியலமைப்பின் மகாசாசனம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
A) பகுதி 2
*B) பகுதி 3
C) பகுதி 4
D) பகுதி 1
135) கீழ்கண்டவற்றுள் தவறான இனை எது?.
A) முத்துசாமி: உயர்நீதிமன்ற நீதிபதி.
*B) பக்ருஉதின் தியாப்ஜின்அலி: இரண்டாம் காங்கிரஷ் மாநாடு.
C) வாஞ்சிநாதன்: திருநெல்வேலி ஆட்சியர்.
D) புரோ இந்தியா: சென்பகராமன்.
136) 8 அடுத்தடுத்த ஒற்றைப்படை எண்களின் சராசரி 48. 5 மற்றும் 7 ஆம் எண்களின் கூட்டுத்தொகை என்ன?
*A) 102
B) 86
C) 89
D) 136
137) தவறானவற்றை தேர்வு செய்க :
1) இந்தியாவின் 41 ஆவது யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக ‘சாந்தி நிகேதன்’ சேர்க்கப்பட்டுள்ளது.
2) ராமப்பா கோவில் 40 ஆவது யுனெஸ்கோ தளமாக தேர்வு செய்யப்பட்டது.
3) குஜராத் மாநிலத்தில் உள்ள தோலைவரா இந்தியாவின் 39 ஆவது யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
A) 1 மற்றும் 2 தவறு
B) 1 மற்றும் 3 தவறு
*C) 2 மற்றும் 3 தவறு
D) அனைத்தும் தவறு
138) ஒத்த அணு என்னையும் வேறுபட்ட நிறை என்னையும் கொண்ட ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
*A] ஐசோடோப்பு
B] ஐசோ பார்
C] ஐசாலோ பார்
D]இவற்றுள் எதுவுமில்லை
139) 64, 48, மற்றும் Y இன் மீ பொ வ 8 எனில், பின்வருவனவற்றுள் Y இன் சாத்தியமான மதிப்பாக இருக்க முடியாதது எது?
A)104
B) 86
C) 72
*D) 96
140) கலகம் நடைபெற்ற இடங்களையும் தலைமைவகித்த இந்தியத் தலைவர்களையும் பொருத்துக
a) கான்பூர் – 1) ராணி லட்சுமிபாய்
b) ஜான்ஸி – 2) நானா சாகிப்
c) குவாலியர் – 3) கான் பகதூர் கான்
d) பரேலி – 4) தாந்தியா தோபே
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 2 3 1 4
*D) 2 1 4 3
141) நான்கு விதமான மனித மேம்பாட்டு குறியீடுகளை உருவாக்கியவர் யார்?
A) மகபூப் உள் ஹக்
B) அமர்த்தியா சென்
*C) பிஷ்வஜித் குகா
D) A and B
142) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : சர் சையத் அகமதுகான் அலிகார் இயக்கத்தைத் தொடங்கினார்
காரணம் : அவர் சமயச் சட்டங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை அவர் எதிர்த்தார்
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
C) கூற்று சரி. காரணம் தவறு
D) கூற்று தவறு. காரணம் சரி
143) எந்த சிறிய எண்ணில் இருந்து 12 ஐ கழிக்க அது 20, 25, 35 மற்றும் 40 மீதியின்றி வகுபடும்?
A) 1,388
B) 1,400
*C) 1,412
D) 1,548
144) பொருத்துக :
a) Article 14 – 1) வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு
b) Article 15 – 2) பேச்சுரிமை
c) Article 16 – 3) பாகுபாடின்மை
d) Article 19 -:4) சம உரிமை
A) 1, 4, 3, 2
B) 3, 1, 2, 4
C) 4, 1, 2, 3
*D) 4, 3, 1, 2
145) அலெக்சாண்டர் பிளமிங் பென்சிலின் கண்டுபிடித்த ஆண்டு
A] 1927
B] 1928
*C] 1929
D]1930
146) மூன்று எண்களின் விகிதம் 4:5:6. அதன் சராசரி 25. எனில், அதில் மிகப்பெரிய எண் எது?
*A) 30
B) 35
C) 40
D) 45
147) 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்தது எது
A) மத மாற்ற நடவடிக்கை
B) இந்திய இராணுவ வீரர்களுக்கு உயர்பதவி அளிக்காமை
C) துணை்படைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது
*D) இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டுரக துப்பாக்கி
148) 2023 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் வாழ்க்கை தர குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 50
B) 51
*C) 52
D) 53
149) பின்வருவனவற்றை பொருத்துக :
a) லோத்தல் -“1) வெண்கலக் காலம்
b) மொகஞ்சதாரோ – 2) புதையுண்ட நகரம்
c) உலோக கலவை – 3) இறந்தவர் மேடு
d) ஹரப்பா – 4) கப்பல் கட்டும் தளம்
A) 3, 4, 1, 2
*B) 4, 3, 1, 2
C) 3, 1, 2, 4
D) 1, 2, 3, 4
150) 45×? = 900 ல் 25 சதவீதம் மதிப்பு காண்க?
A) 16
B) 4
*C) 5
D) 500
151) முதிர்ச்சி அடைந்த ஹரப்பா கால தானிய களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது?
A) தோலவிழா
*B) ராக்கி கர்ஹி
C) காளிபங்கன்
D) நாகேஸ்வர்
152) கீழ்க்கண்ட எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை
கொண்டுள்ளது?
*A) புதுச்சேரி
B) லட்சத்தீ?வு
C) டாமன் & டையூ
D) தாதர் நாகர் ஹவேலி
153) தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நாள்?
A) நவம்பர் 21, 1992
B) ஜூலை 18, 1996
C) செப்டம்பர் 12, 1994
*D) டிசம்பர் 30, 1993
154 2:10:13 இந்த விகிதத்தின் ஒவ்வொரு பங்கையும் சதவீதமாக மாற்றுக?
A) 16%, 30%, 54%
*B) 8%, 40%, 52%
C) 28%, 20%, 52%
D) 22%, 30%, 38%
155) பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?
A) மகா அஷ்வபதி குதிரை படை தலைவர்.
B) நீதி மற்றும் நிர்வாகத் துறைக்கு பொறுப்பேற்றவர் மகா தண்டநாயக்கர்.
*C) நான்கு மகா தண்டநாயக்கர் பற்றி அலகாபாத் தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
D) மகா சந்திவிக்ரகா போர் மற்றும் அமைதிக்கான அமைச்சர்.
156) ரத்தம் உறைந்திருப்பதை கண்டறிய உதவும் ஐசோடோப்பு எது
A] அயோடின் 131
*B] சோடியம்24
C] இரும்பு 59
D] கோபால்ட்60
157) ஆனந்த் என்பவர் ஒரு பொருளை 10 சதவீத நட்டத்திற்கு ரூபாய் 360 க்கு விற்பனை செய்கிறார். அவர் அதை 10 சதவீத லாபத்திற்கு விற்கவேண்டும் எனில், எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்ய வேண்டும்?
A) 360
B) 400
C) 420
*D) 440
158) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் பொருந்தாத நபரை சேர்க்க?
A) சித்திரகுமார்
B) பிருந்தா
*C) வசந்தா
D) காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்
159) 36 லிட்டர், 48 லிட்டர், 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பீப்பாய்களில் உள்ளவற்றை காலியாக்க தேவைப்படும் மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட பீப்பாயின் அளவு என்ன?
A) 36
*B) 12
C) 24
D) 60
160) நாயக்கர் என்ற வார்த்தையின் சுருக்கம் நாயக் இதில் (நாயக்) என்பதன் பொருள் என்ன?.
1, தலைவர்.
2, அரசன்.
3, தளபதி.
4, அரசுப் பிரதிநிதி.
A) 1, 4, சரி.
B) 1, 2, 3, சரி.
*C) 1, 3, சரி.
D) 1, மட்டும் சரி.
161 இந்திய அரசியலமைப்பின் எந்த சட்ட திருத்தத்தின் படி, முகவுரையில் “சமதர்மம்”, மற்றும் “சமய சார்பற்ற” என்ற இரு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
A) 28 ஆவது சட்ட திருத்தம்
*B) 42 ஆவது சட்ட திருத்தம்
C) 44 ஆவது சட்ட திருத்தம்
D) 52 ஆவது சட்ட திருத்தம்
162) இந்திய கைவினைப் பொருட்களின் நசிவுக்காலம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1) பாகுபாடான சுங்கவரிக் கொள்கை மூலம் பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே இந்திய கைவினைப் பொருட்களை அழித்தது.
2) நவாப் மற்றும் அரசர்கள் காலம் முடிவுக்கு வந்தவுடன் இந்திய கைவினைப் பொருட்களை காப்பாற்ற எவரும் இல்லாத நிலை ஏற்பட்டது.
3) இந்தியாவில் தந்தி சேவை அறிமுகமான பின், பிரிட்டிஷ் பொருட்களுக்கான உள்நாட்டு சந்தை அதிகரித்தது.
*A) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 3
C) 1 மற்றும் 3
D) அனைத்தும்
163) குடியரசுத் தலைவரால் தடை செய்ய முடியாத அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடும் க்ஷரத்துக்கள் எவை?
A) 14, 18
B) 17, 19
*C) 21, 22
D) 23, 25
164 வினித் என்பவர் ஒரு காரை 3 லட்சத்துக்கு வாங்கி, 10 சதவீதம் செலவு செய்து பழுது நீக்குகிறார். பின்னர் 20 % லாபத்திற்கு விற்று விடுகிறார் எனில், அவர் பெரும் லாபத்தொகை எவ்வளவு?
*A) 66,000
B) 66,500
C) 65,000
D) 67,000
165) கூற்று : தென்இந்திய புரட்சி கடுமையான தோல்வியை சந்தித்தது .
காரனம் : தலைவர்களிடம் தீவிரமான ஒற்றுமை இருந்தது.
A) கூற்றும் காரனமும் சரி,ஆனால் காரனம் கூற்றை விலக்கவில்லை.
B) கூற்றும் காரனமும் சரி காரனம் கூற்றை விலக்குகிறது.
*C) கூற்று சரி ஆனால் காரனம் தவறு.
D) காரனம் சரி ஆனால் கூற்று தவறு.
166) X என்பவர் 20 புத்தகத்தை வாங்குகிறார். ஒரு புத்தகத்தின் அடக்க விலை 350 ரூபாய். புத்தகத்திற்கு 8 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனில், அவர் எவ்வளவு தொகை சேலத்தி 20 புத்தகங்களை பெற்றிருப்பார்?
A) 6,480
B) 5,820
C) 6,250
*D) 6,440
167) மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி எந்த ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பிற்கு வந்தது?
A) 1969
B) 1982
C) 1991
*D) 1978
168) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :
கூற்று : குப்தர் காலத்தில் உலோகவியல் உச்சத்தை எட்டி இருந்தது.
காரணம் : குப்தர் காலத்தில் மக்கள் வீட்டு உபயோக பொருட்களை செய்ய அதிக அளவிலான உலோக கலவையை பயன்படுத்தினர்.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
C) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
D) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
169) 168÷4+216÷(14×1-8) = ?
*A) 78
B) 223
C) 65
D) 51
170) சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) செப்டம்பர் 27
B) செப்டம்பர் 29
C) செப்டம்பர் 25
*D) செப்டம்பர் 30
171) அறை வெப்ப நிலையில் உருகும் உலோகம் எது
A] அலுமினியம்
B] தங்கம்
*C] காளியம்
D] இவை அனைத்தும்
172) 15 எண்களின் கூட்டுத்தொகை 450. முதல் 9 எண்களின் சராசரி 28. கடைசி 5 எண்களின் சராசரி 26. எனில், பத்தாவது எண் என்ன?
A) 64
B) 66
*C) 68
D) 72
173) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : ஜோதிபா பூலே பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்க காலத் தலைவர் என்று அறியப்படுகிறார்.
காரணம் : அவர் விதவை மறுமணத்தைக் குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
C) கூற்று சரி. காரணம் தவறு
D) கூற்று தவறு. காரணம் சரி
174) கீழ்கண்டவற்றுள் தவறான இனை எது??.
A) புலித்தேவர், நெல்கட்டான் சேவல்.
*B) கட்டபொம்மன், பாளையங்கோட்டை.
C) முத்துவடுகநாதர், சிவகங்கை.
D) வேலுர் புரட்சி, 1806.
175) ஆறு நபர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் வயதுகளின் சராசரி 40. ஒரு நண்பரை சேர்ப்பதால் அவர்களின் சராசரி 12.5% அதிகரிக்கிறது எனில், நண்பரின் வயது என்ன?
A) 65
B) 58
*C) 75
D) 69
176) பின்வருவனவற்றுள் தவறானவற்றை தேர்வு செய்க?
A) 1900 லிருந்து சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய தொடங்கியது.
B) வறட்சி மற்றும் காலநிலை மாற்றம்
C) மெசபடோமியாவுடன் வாணிபத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி
*D) காலப்போக்கில் சிந்துவெளி மக்கள் வடக்கு மற்றும் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்
177) ஆசியாவின் பருவ காற்று தோற்றத்தின் வெப்ப கோட்பாட்டினை முன்மொழிந்தவர்?
*A) ஹெயிலி,
பி) கொப்பர்
C) கெப்ளர்,
D) இமானுவேல் கான்.
178) 48 / 60 க்கு சமமான சதவீதம் என்ன?
A) 78
B) 75
C) 72
*D) 80
179) கூற்றுகளை ஆராய்க.
i] ஒரு தனிமத்தின் மிகச் சிறிய துகளே அணுவாகும்.
ii] ஒரு அணு என்பது எலக்ட்ரான் புரோட்டான் மற்றும் நியூட்ரான்களை தன்னகத்தே கொண்டது.
iii] நியூட்ரான்கள் எதிர்மின் சுமை கொண்டவை.
A] ஒன்று மற்றும் மூன்று சரியானவை
B] இரண்டு மற்றும் மூன்று சரியானவை
*C] ஒன்று மற்றும் இரண்டு சரியானவை
D] அனைத்தும் சரியானவை
180) தமிழக தீவிரவாதிகளின் தலைவர் யார்?.
A) வரகநேரி வெங்கட சுப்பிரமனி.
*B) வல்லியப்பன் உலகநாதன் சிதம்பரம்.
C) மகாகவி சுப்பிரமனிய பாரதி.
D) சுதந்திரானந்தா சுப்ரமனிய சிவா.
181) இந்தியாவின் முதல் பொதுத்துறை நிறுவனமான விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு தொழிலகம் எங்கு நிறுவப்பட்டது?
A) ரூர் கேளா
*B) பத்ராவதி
C) அகமதாபாத்
D) கான்பூர்
182) 2/3×5/8×276−√7056. சுருக்குக.
A. 36
B. 29
*C. 31
D. 33
183) ஆதிதிராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டவர் யார்
A) இராமலிங்க அடிகள்
B) வைகுண்ட சுவாமிகள்
*C) அயோத்திதாசப் பண்டிதர்
D) நாராயண குரு
184) இந்திய திட்ட நேரம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
A) 1902,
B) 1903,
C) 1904,
*D) 1905.
185) பின்வருவனவற்றில் டார்டாரிக் அமிலம் இடம்பெற்று இருப்பது எதில்
A] எலுமிச்சை
*B] திராட்ச்சை
C] ஆரஞ்சு
D] தக்காளி
186) எந்த சட்ட திருத்தத்தின்படி, வாக்களிக்கும் வயது 21 ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
A) 42 ஆவது சட்ட திருத்தம்.
B) 44 ஆவது சட்ட திருத்தம்
*C) 61 ஆவது சட்ட திருத்தம்
D) 83 ஆவது சட்ட திருத்தம்
187) ‘விஞ்ஞான் பிரதீபா’ விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
*A) வீர முத்துவேல்
B) நிகர் ஷாஜி
C) சிவன்
D) சோம்நாத்
188) பொருத்துக.
a) வ.உ.சி: சுதேச மித்திரன்.
b) சுப்ரமனிய சிவா: இந்தியா.
c) பாரதியார்: ஞானபானு.
d) ஜி. சுப்ரமனிய அய்யர்: விவேகபானு.
A) 1, 3, 2, 4, .
B) 2, 4, 1, 3, .
C) 1, 2, 3, 4, .
*D) 4, 3, 2, 1, .
189) 4ⁿ5, 4ⁿ−81, 4ⁿ12, 4ⁿ7 இவற்றின் மீசிம காண்க.
A. 4ⁿ7
B. 4ⁿ−81
*C. 4ⁿ12
D. 4ⁿ5.
190) ஆங்கிலேயர் அறிமுகம் செய்த எத்திட்டத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது
A) ஜமீன்தாரி முறை
*B) இரயத்துவாரி முறை
C) மகல்வாரி முறை
D) ஜாகிர்தாரி முறை
191) பின்வருவனவற்றுள் எது தவறானது அல்ல?
1) க்ஷரத்து 83 – நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் பற்றி கூறுகிறது.
2) க்ஷரத்து 85 – மக்களவையை கலைத்தல் பற்றி கூறுகிறது.
3) க்ஷரத்து 172 – பேரவையை கலைத்தல் பற்றி கூறுகிறது.
4) க்ஷரத்து 352 – மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சி பற்றி கூறுகிறது.
A) 1, 2 மற்றும் 3
*B) 1 மற்றும் 2
C) 3 மற்றும் 4
D) அனைத்தும்
192) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
கூற்று 1 : சென்னை மாகாண அரசு 1886 ஆம் ஆண்டு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று நிதி உதவி திட்டத்தை அறிவித்தது.
கூற்று 2 : 1892 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரித்து வழங்கியது.
கூற்று 3 : பிரித்து வழங்கப்பட்ட நிலத்தை பஞ்சமி நிலம் எனவும், அந்த நிலத்தைப் பெற்றுக் கொண்டவர்களை பஞ்சமர்கள் என்றும் அழைத்தனர்.
*A) 1 மட்டும் தவறு
B) 1 மற்றும் 2 தவறு
C) 1 மற்றும் 3 தவறு
D) அனைத்தும் தவறு
193) (√900+√144/√144)−√16÷∛8+2
a. 21/8
b. 21/4
c. 21/12
*d. 7/2
194) எங்கு அமைந்துள்ள உதம்பூர் ரயில் நிலையத்திற்கு “கேப்டன் துஷார் மகாஜனின்” பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A) டெல்லி
*B) ஜம்மு & காஷ்மீர்
C) மும்பை
D) லக்னோ
195) நவீன ஆவர்த்தன அட்டவணையுடன் தொடர்புடையவர்
A] ஹென்றி பெக்கோரல்
B] டால்டன்
*C] ஹென்றி மோர்ஸ்லே
D] ஜே ஜே தாம்சன்
196) இந்தியாவின் சிவப்பு நதி எது?
*A) பிரம்மபுத்திரா,
B) கோதாவரி,
C) சிந்து,,
D) கங்கை.
197) பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
A) சமத்துவ உரிமை
B) சுதந்திர உரிமை
C) தீர்வு காணும் உரிமை
*D) சொத்துரிமை
198) 65+√X=83
A. 289
B. 361
C. 441
*D. 324
199) ஜமீன்தாரி முறை ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எவ்வளவு சதவீத நிலப்பரப்பில் நடைமுறைப் படுத்தப்பட்டது
*A) 19 சதவீதம்
B) 30 சதவீதம்
C) 51 சதவீதம்
D) 66 சதவீதம்
200)பருவகாலங்களை ஏற்ற மாதங்களுடன் பொருத்துக;
A) குளிர்காலம் – 1) மார்ச் முதல் மே வரை.
B) கோடைக்காலம் – 2) அக்டொபர் முதல் டிசம்பர் வரை.
C)தென்மேற்கு பருவக்காற்று காலம் – 3) சனவரி முதல் பிப்ரவரி வரை.
D)வடகிழக்கு பருவக்காற்று காலம் – 4) சூன் முதல் செப்டம்பர் வரை.
A)1, 2, 3, 4
*B)3, 1, 4, 2
C)4, 3, 2, 1
D)2, 3, 4, 1