இந்திய தேசிய இயக்கம் (INM) வினாக்கள்
குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1) “பெருநீரால் வாரி சிறக்க! இருநிலத்து
இட்ட வித்து எஞ்சாமை நாறுக!”
இவ்வடியில் இடம்பெறும் வாரி என்ற சொல்லின் பொருள் என்ன
A) வளம்
B) மிகுதியாக
C) மழை
*D) வருவாய்
2) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு என்ற கட்டுரை பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ளது
2) இந்நூலை எழுதியவர் A) கௌரன்
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
3) பாடல் அடிகளும் நூல் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடுக்க
1) நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் — புறநானூறு
2) கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து — அகநானூறு
3) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு — தொல்காப்பியம்
*A) 1, 2
B) 1, 3
C) 2, 3
D) 3மட்டும்
4) சேரர்களின் தலைநகர் எது
A) வஞ்சி
B) குடநாடு
C) கருவூர்
*D) 1, 3
5) மூவேந்தர்களுக்குறிய பூக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சரியான இணையைக் காண்க
1) சேரர் — பனம்பூ
2) சோழர் — வேம்பு
3) பாண்டியர் — ஆத்திப்பூ
*A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
6) கொங்குநாட்டின் எல்லைகளை உறிய திசைகளோடு பொருத்துக
A) மேற்கு – 1) பெரும்பாலை
B) கிழக்கு – 2) பழனிமலை
C) தெற்கு – 3) வெள்ளிமலை
D) வடக்கு – 4) மதிற்கரை
A) 1 2 3 4
B) 3 4 1 2
*C) 3 4 2 1
D) 4 3 1 2
7) ஆன்பொருநை என்று அழைக்கப்படும் கொங்குநாட்டு நதி எது
A) காவிரி
B) பவானி
C) நொய்யல்
*D) அமராவதி
8) வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பது எவ்வகைப் புணர்ச்சி
A) மெய்யீற்றுப் புணர்ச்சி
D) உயிரீற்றுப் புணர்ச்சி
*C) உயிர்முதல் புணர்ச்சி
D) மெய்முதல் புணர்ச்சி
9) நாடகக்கலை என்பது எதற்குறிய எடுத்துக்காட்டு
A) கெடுதல் விகாரம்
B) திரிதல் விகாரம்
C) தோன்றல் விகாரம்
*D) 1, 3
10) மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக
A) ஆயிரங்காலத்துப் பயிர் – 1) இயலாத செயல்
B) கம்பி நீட்டுதல் – 2) இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
C) கானல்நீர் – 3) நீண்டகாலமாக இருப்பது
D) கல்லில் நார் உரித்தல் – 4) விரைந்து வெளியேறுதல்
A) 3 4 1 2
*B) 3 4 2 1
C) 4 3 2 1
D) 4 3 1 2
11) கலிங்கத்துப்பரணியை தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று புகழ்ந்தவர் யார்
A) பழபடட்டைச் சொக்கநாதர்
B) அழகிய சொக்கநாதர்
C) கம்பர்
*D) ஒட்டக்கூத்தர்
12) கலிங்கத்துப்பரணி எதனால் பாடப்பெற்ற நூல்
A) கலிப்பா
B) கலித்துறை
C) கலிவிருத்தம்
*D) கலித்தாழிசை
13) “பகத்சிங் பார்த்துப்
பரவசப் பட்ட
அற்புத விடியலை
அழைத்து வந்தது
எந்த நாளோ
அந்த நாள் இது.”
இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது
A) மூன்றும் ஆறும்
B) வா இந்தப் பக்கம்
*C) கோடையும் வசந்தமும்
D) குக்கூ
14) எம்.ஜி.ஆர் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) தமிழக அரசால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது
2) சென்னைக் கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது
3) இவருக்கு இந்திய மாமணி விருது 1988 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது
A) 1, 2 சரி
B) 1, 3சரி
*C) 2, 3 சரி
D) அனைத்தும் சரி
15) எம்.ஜி.ஆர் செயல்படுத்தாத திட்டம் எது
A) நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்
B) முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
C) பற்பொடி வழங்கும் திட்டம்
*D) மதிய உணவுத் திட்டம்
16) “உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்”
என்று பாடியவர் யார்
*A) ஔவையார்
B) கபிலர்
C) பரனர்
D) காவற்பெண்டு
17) வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது
A) அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
B) எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்.
*C) இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ மறைந்து வருமிடத்தில் வல்லினம் மிகும்.
D) நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
18) உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் எவ்வகைக் குற்றியலுகரமாக இருந்தால் வல்லினம் மிகாது
A) வன்றொடர்
*B) மென்றொடர்
C) உயிர்த்தொடர்
B) ஆய்தத்தொடர்
19) வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது
A) இரண்டாம் வேற்றுமைத்தொகை
B) உம்மைத்தொகை
*C) உவமைத்தொகை
D) வினைத்தொகை
20) அல்லை என்பது எதற்குறிய எதிர்மறை வினைமுற்று
A) தன்மை ஒருமை
B) தன்மை பன்மை
*C) முன்னிலை ஒருமை
D) முன்னிலை பன்மை
21) திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பெற்றிருக்கும் இடம்
A) ஆறாம் திருமுறை
B) எட்டாம் திருமுறை
*C) பத்தாம் திருமுறை
D) ஏழாம் திருமுறை
22) “காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!”
இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்
A) திருமூலர்
B) ஔவையார்
*C) சுல்தான் அப்துல்காதர்
D) முகமது இஸ்மாயில்
23) சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரப்புவதில் அயோத்திதாசர் யாருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்
A) அண்ணல் அம்பேத்கர்
B) காமராசர்
C) தந்தை பெரியார்
*D) 1,3
24) எங்கு வாழ்ந்த கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்த தமிழர்களின் உரிமைகளுக்காக அயோத்திதாசர் பாடுபட்டார்
A) நீலகிரி
B) சென்னை
*C) பர்மா
D) இலங்கை
25) அயோத்திதாசர் ஒரு பைசாத் தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு
A) 1905
B) 1906
*C) 1907
D) 1908
26) “சங்ககாலப் பெண்களைப் போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும்”
என்று கூறியவர் யார்
A) அம்பேத்கர்
B) பெரியார்
C) காந்தியடிகள்
*D) அயோத்திதாசர்
27) அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களுள் தவறானதைத் தேர்ந்தெடுக்க
1) சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்
2) பாலவாகடம்
3) புத்தர் சரித்திரப்பா
4) விவாக விளக்கம்
A) 1, 2
B) 1, 3
C) 2, 4
*D) 3, 4
28) மனித யந்திரம் என்னும் சிறுகதை எந்த இதழில் வெளியானது
A) எழுத்து
*B) மணிக்கொடி
C) வானம்பாடி
D) கல்கி
29) சொ.விருத்தாசலம் என்பது யாருடைய இயற்பெயர்
A) ஜெயகாந்தன்
B) சுஜாதா
C) எஸ்.ராமகிருஷ்ணன்
*D) புதுமைப்பித்தன்
30) அகரவரிசைப்படுத்துக
1) எழுத்து
2) அசை
3) சீர்
4) தளை
5) அடி
6) தொடை
A) 2 1 5 3 4 6
*B) 2 5 1 3 4 6
C) 5 2 1 3 4 6
D) 5 2 1 4 6 3
31) பொருத்துக
எழுத்து – 1) இரண்டு வகை
B) அசை – 2) நான்கு வகை
C) சீர் – 3) ஏழு வகை
D) தளை – 4) மூன்று வகை
A) 2 4 1 3
*B) 4 1 2 3
C) 4 2 1 3
D) 4 3 2 1
32) பாவகைகளையும் அவற்றிற்குறிய ஓசைகளையும் பொருத்துக
A) வெண்பா – 1) தூங்கலோசை
B) ஆசிரியப்பா – 2) துள்ளலோசை
C) வஞ்சிப்பா – 3) அகவலோசை
D) கலிப்பா – 4) செப்பலோசை
A) 4 3 2 1
*B) 4 3 1 2
C) 3 4 1 2
D) 3 4 2 1
33) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) சங்க இலக்கியங்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை
2) அற நூல்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
34) கலைச்சொற்களைப் பொருத்துக
A) தொண்டு – 1) Philosophy
B) தத்துவம் – 2) Charity
C) நேர்மை – 3) Reform
D) சீர்திருத்தம் – 4) Integrity
*A) 2 1 4 3
B) 2 1 3 44
C) 1 2 4 3
D) 3 4 2 1
35) “கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது”
இக்குறளில் பயின்றுவரும் அணி எது
A) உவமை அணி
B) உருவக அணி
C) வேற்றுமை அணி
*D) பிரிதுமொழிதல் அணி
36) “நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.”
இக்குறளில் பயின்றுவரும் மோனை வகை எது
A) இணைமோனை
*B) பொழிப்பு மோனை
C) ஒரூஉ மோனை
D) முற்று மோனை
37) நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாக வள்ளுவர் குறிப்பிடுவது எது
A) நமது செல்வம்
*B) நமக்கு வரும் துன்பம்
C) நன்பரைக் கண்டித்தல்
D) நல்ல பழக்கம்
38) குறளில் விடுபட்ட சீரை நிறப்புக
பெருக்கத்து வேண்டும் பணிதல் —————-
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
A) பெரிய
B) உறிய
*C) சிறிய
D) அறிய
39) பாவை நூல்கள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக பாடப்பட்ட நூலே திருப்பாவை
2) சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
40) “பாதங்கள்
நடக்கத்
தயாராய் இருந்தால்
பாதைகள்
மறுப்புச் சொல்லப்
போவதில்லை.”
இக்கவிதை வரிகளின் ஆசிரியர்யார்
A) இறையரசன்
*B) மு.மேத்தா
C) முடியரசன்
D) கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
41) மு.மேத்தாவின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
A) சோழநிலா
B) மகுடநிலா
C) கண்ணீர்ப்பூக்கள்
*D) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
42) இந்திய மக்களுக்கு அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் கிடைக்கும்போதுதான் இந்தியா முழுமையான விடுதலைபெற்ற நாடாக இருக்க முடியும் என்று கருதி உழைத்த தலைவர் யார்
A) எம்.ஜி.ஆர்
B) தந்தை பெரியார்
*C) அண்ணல் அம்பேத்கர்
D) காமராசர்
43) அம்பேத்கர் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1) மகாதேவ் அம்பேத்கர் என்பவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் மீது அன்பு கொண்ட ஆசிரியர் ஆவார்
2) அம்பேத்கர் அமெரிக்காவில் உயர்கல்வி கற்க உதவியவர் பரோடா மன்னர் சிவாஜிராவ்
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகல் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
44) அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் எது
A) பண்டைக்கால இந்திய வணிகம்
*B) இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
C) இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
D) ரூபாய் பற்றிய பிரச்சனை
45) அம்பேத்கர் தொடர்பான நிகழ்வுகளையும் ஆண்டுகளையும் பொருத்துக
A) ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை நிறுவுதல் – 1) 1930
B) முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளுதல் – 2) 1924
C) புத்த சமயத்தில் இணைதல் – 3) 1956
D) பாரதரத்னா விருது வழங்கப்படல் – 4) 1990
*A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 3 2 1 4
D) 3 4 2 1
46) கொடுக்கப்பட்டுள்ள நூல்களுல் கோமகள் எழுதாத நூல் எது
A) உயிர் அமுதாய்
B) நிலாக்கால நட்சத்திரங்கள்
C) அன்பின் சிதறல்
*D) மீதமிருக்கும் சொற்கள்
47) “ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும்நேர் செப்பு”
இப்பாடலில் பயின்றுவரும் அணி எது
A) பிரிதுமொழிதல் அணி
B) வேற்றுமை அணி
C) ஏகதேச உருவக அணி
*D) சிலேடை அணி
48) பிறிதுமொழிதல் அணியில் எது மட்டும் இடம்பெறும்.
*அ) உவமை
ஆ) உவமேயம்
இ) தொடை
ஈ) சந்தம்
49) சரியான கூற்றைக் காண்க
1) தான் என்னும் சொல்லை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்
2) தமக்கு என்ற சொல்லைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
50) பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக எந்த ஊர் விளங்குகிறது
A) ஈரோடு
B) திருப்பூர்
C) சேலம்
*D) கரூர்
இந்திய தேசிய இயக்கம் (INM) வினாக்கள்
51) ராஜாராம் மோகன் ராய் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. விதவைப்பெண்கள் மறுமணம் செய்து கொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்
2. இந்துக்களின், மறைநூல்கள் அனைத்தும் ஒரு கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரு கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாகக் கூறினார்
3. பிரம்ம சமாஜத்தை 1929 ஆம் ஆண்டு நிறுவினார்
*a. 1, 2 சரி
b. 1, 3 சரி
c. 2, 3 சரி
d. அனைத்தும் சரி
52) விதவைகளை எரிப்பது, விதவை மறுமணத்தைத் தடை செய்வது போன்ற பழக்கவழக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களிலிருந்தே சான்றுகளை முன்வைத்தவர் யார்
a. கேசவ் சந்திர சென்
*b. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
c. தயானந்த சரஸ்வதி
d. தேவேந்திரநாத் தாகூர்
53) திருமணத்திற்கான வயது 12 ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு எது
a. 1860
*b. 1891
c. 1925
d. 1929
54) அமைப்புகளையும் அவை நிறுவப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a. பிரம்ம சமாஜம் – 1. 1867
b. பிரார்த்தனை சமாஜம் – 2. 1828
c. ஆரிய சமாஜம் – 3. 1897
d. ராமகிருஷ்ணா மிஷன் – 1875
a. 1 2 4 3
b. 1 2 3 4
*c. 2 1 4 3
d. 2 1 3 4
55) மகாதேவ் கோவிந்த் ரானடே எப்போது விதவை மறுமணச் சங்கத்தை நிறுவினார்
a. 1842
*b. 1861
c. 1870
d. 1884
56) வேதங்களுக்குத் திரும்புவோம் என்பது எந்த அமைப்பின் முழக்கம் ஆகும்
a. பிரம்ம சமாஜம்
b. பிரார்த்தனை சமாஜம்
*c. ஆரிய சமாஜம்
d. சமத்துவ சமாஜம்
57) பிரம்மஞானசபை பற்றிய தவறான கூற்றைக் காண்க
*a. பிரம்மஞானசபை 1875 ஆம் ஆண்டு H.P. பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் சிகாகோவில் நிறுவப்பட்டது
b. இவ்வமைப்புப் பின்னர் 1886இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது
c. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞான சபை முக்கியப் பங்காற்றியது
d. அன்னிபெசன்ட் பிரம்மஞானக் கருத்துக்களைத் தன்னுடைய நியூ இந்தியா காமன்வீல் எனும் செய்தித்தாள்களின் மூலம் பரப்பினார்
58) ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்புக்குத் தொடர்பில்லாதவர் யார்
a. டாக்டர் பால்பு
b. குமாரன் ஆசான்
c. சகோதரன் ஐயப்பன்
*d. அய்யன்காளி
59) சீர்திருத்த இயக்கங்களையும் அவற்றை நிறுவிய தலைவர்களையும் பொருத்துக
a. அலிகார் இயக்கம் – 1. முகமது குவாசிம் நானோதவி
b. தியோபந்த் இயக்கம் – 2. மிர்சா குலாம் அகமது
c. அகமதியா இயக்கம் – 3. பர்துன்ஜி நௌரோஜி
d. ரஹ்னுமாய்மஜ்தயாஸ்னன்சபா – 4. சர் சையத் அகமது கான்
a. 4 3 2 1
*b. 4 1 2 3
c. 4 2 1 3
d. 4 1 3 2
60) சீக்கிய சீர்திருத்த அமைப்புகள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. நாம்தாரி இயக்கம் பாபாராம் சிங் என்பவரால் தொடங்கப் பெற்றது
2. நிரங்கரி இயக்கம் பாபா தயாள்தாஸ் என்பவரால் தொடங்கப் பெற்றது
a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
61) பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க
a. அகிலத்திரட்டு — வள்ளலார்
b. குலான்கிரி — ஜோதிபா பூலே
c. அருள் நூல் — வைகுண்டசுவாமிகள்
d. சத்யார்த்தபிரகாஷ் — தயானந்த சரஸ்வதி
62) ஆங்கில ஆட்சியை வெள்ளைப் பிசாசுகளின் ஆட்சி என்று விமரிசித்தவர் யார்
a. இராமலிங்க சுவாமிகள்
*b. வைகுண்ட சுவாமிகள்
c. ஸ்ரீ நாராயணகுரு
d. ஐயங்காளி
63) தேசிய சமூக மாநாடு யாருடைய முயற்சியால் ஒருங்கிணைக்கப்பட்டது.
*a. M.G. ரானடே
b. தேவேந்திரநாத் தாகூர்
c. கேசவ சந்திர சென்
d. இராமகிருஷ்ண பரமஹம்சர்
64) பண்டித ரமாபாய் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. சமூகத்தின் கீழ்மட்டக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வங்காளியைத் திருமணம் செய்து கொண்டார்
2. ஆரிய மகிளா சமாஜ் எனும் அமைப்பை நிறுவினார்
3. கேத்கான் என்ற இடத்தில் முக்தி சதன் சுதந்திர இல்லம். எனும் அமைப்பை நிறுவினார்
4. பண்டித, சரஸ்வதி போன்ற பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டன
a. 1, 2, 4 சரி
b. 1, 3, 4 சரி
c. 2, 3, 4 சரி
*d. அனைத்தும் சரி
65) இந்தியாவில் சீர்திருத்தங்கள் பற்றிய பல கருத்துக்கள் தோன்றிய முதல் மாகாணம் எது
a. பஞ்சாப்
*b. வங்காளம்
c. பம்பாய்
d. சென்னை
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
66) அதிக நீர்நிலைகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 9
*B) 7
C) 4
D) 3
67) நாட்டிலேயே முதன்முறையாக படகு மெட்ரோ சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
*A) கொச்சி
B) திருவனந்தபுரம்
C) புவனேஸ்வர்
D) ரூர்கேலா
68) உலக பாரம்பரிய தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஏப்ரல் 13
B) ஏப்ரல் 16
*C) ஏப்ரல் 18
D) ஏப்ரல் 21
69) ஃபெங்குயின் – 3 என்ற வானிலை செயற்கைக்கோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?
A) அமெரிக்கா
B) இந்தியா
C) ஜப்பான்
*D) சீனா
70) “பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக எந்த மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
B) கேரளா
*C) கர்நாடகா
D) குஜராத்
Unit 9 வினாக்கள்
71) அரசுப் பணியில் போதிய அளவு பிரதிநிதித்துவம்பெறாத அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணிநியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் இந்திய அரசியலமைப்பு விதி எது
a. 15(4.
*b. 16(4.
c. 17(4.
d. 18(4.
72) “தனிமனிதன் எந்த ஒரு செயலோ அல்லது பண்போ மற்றவருக்கு பயனளிக்காத வகையில் இருக்குமாயின் அது அந்த சமூகத்தின் அநீதியான பண்பை காட்டுவதாக அமையும்”
என்று கூறுயவர் யார்
a. பிளாட்டோ
*b. ஜான் ரால்ஸ்
c. தந்தை பெரியார்
d. சாக்ரடீஸ்
73) “மொழி மேல் வெறியும், தங்களது பண்பாடு மேல் தீவிர பற்றும் கொண்டுள்ள நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது”
என்று வாதிட்டவர் யார்
a. பிளாட்டோ
b. ஜான் ரால்ஸ்
*c. தந்தை பெரியார்
d. மகாத்மா காந்தியடிகள்
74) பிராமணரல்லாதார் அறிக்கையை வெளியிட்டவர் யார்
a. டாக்டர் சி. நடேசன்
*b. சர். பி. தியாகராயர்
c. டாக்டர் டி. எம். நாயர்
d. ரெட்டைமலை ஸ்ரீனிவாசன்
75) நீதிக்கட்சி பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்தியர் சுதந்திர சங்கம் நீதிக்கட்சியாக மாற்றம் பெற்றது
2. இவ்வியக்கம் சார்பில் ஜஸ்டிஸ் என்ற இதழ் வெளியிடப்பட்டது
3. உயர்கல்வியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் 1917 இல் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது
*a. 1, 2 சரி
b. 1, 3 சரி
c. 2, 3 சரி
d. அனைத்தும் சரி
76) வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது
a. 1915
b. 1917
*c. 1921
d. 1926
77) “எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரிதிநிதித்துவம் தரப்படாவிட்டால், நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்”
என்று கூறியவர் யார்
a. முனுசாமி
*b. நடேசனார்
c. ஆர்.கே. சண்முகம்
d. பி. தியாகராயர்
78) தமிழ்நாட்டில் எந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு 25%, தாழ்த்தப்பட்டோருக்கு 16% என இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டது
a. 1921
*b. 1951
c. 1971
d. 1979
79) யார் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இட ஒதுக்கீடு சட்டப் பாதுகாப்பினைப் பெற்றது
a. மு.கருணாநிதி
b. எம்.ஜி. ராமச்சந்திரன்
*c. ஜெ. ஜெயலலிதா
d. காமராசர்
80) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : 76-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் இணைக்கப்பெற்றது
காரணம் : தமிழக அரசின் இச்சட்டத்தினை எதிர்த்தும் வழக்குத்தொடரும் சூழலைத் தவிர்க்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின் IX ஆவது அட்டவணையில் சேர்க்க தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்தது
*a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c. கூற்று சரி. காரணம் தவறு
d. கூற்று தவறு. காரணம் சரி
81) பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கக் குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து எது
a. சரத்து 338
*b. சரத்து 340
c. சரத்து 342
d. சரத்து 344
82) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : 1990 ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்திய அரசுப் பணிகளில் மட்டும், பிற்படுத்தப்பட்ட வகுப்பாருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தது
காரணம் : பிற்படுத்தப்பட்ட வகுப்பார்க்கு மத்திய அரசுப் பணிகளில் 27% வழங்க வேண்டும் என்று காகா கலேல்கர் ஆணையம் பரிந்துரைத்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது
a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
*c. கூற்று சரி. காரணம் தவறு
d. கூற்று தவறு. காரணம் சரி
83) கூற்று: பிராமணரல்லாதோர், ஆங்கிலேயர் காலத்தில் அரசு பதவிகளில் பணியமர்த்தப்பட்டனர்.
காரணம்: 1921-ம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்டது.
a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c. கூற்று சரி. காரணம் தவறு
*d. கூற்று தவறு. காரணம் சரி
84) வைக்கம் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர்.
*a. பெரியார்
b. ராஜாஜி
c. நேரு
d. காந்தியடிகள்
85) இந்திய அரசு எத்தனை பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை இதுவரை அமைத்துள்ளது
a. 1
*b. 2
c. 3
d. 4
கணித வினாக்கள்
86) ஒரு மாணவி ஐந்து பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி 62. அவர் நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 40, 70, 90, 60 எனில், ஐந்தாவது பாடத்தில் அவர் பெற்ற மதிப்பெண் எவ்வளவு?
A) 40
*B) 50
C) 60
D) 70
87) ஒரு வகுப்பில் உள்ள 15 மாணவர்களின் சராசரி வயது 15. அதில் 5 மாணவர்களின் சராசரி வயது 14 மற்றும் 9 மாணவர்களின் சராசரி வயது 16 எனில், 15 ஆவது மாணவனின் வயது என்ன?
A) 15
B) 14
C) 16
*D) 11
88) 5 எண்களின் கூட்டு சராசரி 25. அவற்றிலிருந்து ஓர் என்னை நீக்கினால் அவற்றின் கூட்டு சராசரி 20 எனில், நீக்கப்பட்ட எண் எது?
A) 40
*B) 45
C) 35
D) 30
89) ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் உயரம் 166 cm. என கணக்கிடப்பட்டது. தகவல்களை சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 cm-க்கு பதிலாக 160 cm என குறிப்பிடப்பட்டுள்ளது எனில், சரியான சராசரி உயரம் காண்க?
A) 170
B) 180
*C) 165
D) 175
90) ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78, 11 எனில், சராசரியை காண்க?
A) 45
*B) 46
C) 47
D) 44
91) 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் சராசரி 8 எனில், x – இன் மதிப்பை காண்க?
A) 13
B) 14
C) 12
*D) 13
92) 100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு சரியான சராசரியை காண்க?
A) 39
*B) 39.7
C) 39.5
D) 38
93) முதல் ஒன்பது பகா எண்களின் சராசரி என்ன?
A) 12
B) 10 1/9
C) 11
*D) 11 1/9
94) 21 ஆண்களின் சராசரி எதை 64 கிலோகிராம். ஒருவர் கடைசியாக சேர்க்கப்பட்டார். புதிய சராசரி 65 ஆவது எனில், கடைசியாக சேர்க்கப்பட்டவரின் எடை எவ்வளவு?
A) 66
B) 55
C) 64
*D) 86
95) 5 எண்களின் சராசரி 46 முதல் நான்கு எண்களின் சராசரி 45 எனில், ஐந்தாவது எண் என்ன?
*A) 50
B) 30
C) 20
D) 70
96) ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14. ஆசிரியரின் வயதோடு சேர்க்கும் பொழுது சராசரி 15 ஆக உயர்கிறது. எனில், ஆசிரியரின் வயது எவ்வளவு?
A) 40
*B) 45
C) 50
D) 55
97) 5, 35, 65, 95, 125 ஆகிய ஐந்து எண்களின் சராசரி எவ்வளவு?
A) 95
B) 105
*C) 65
D) 125
98) ஆறு பாடங்களின் மொத்த மதிப்பெண்கள் 1,200. வினிதா என்பவர் பெற்ற மதிப்பெண் 1,008 எனில், அவர் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எவ்வளவு?
A) 82
*B) 84
C) 86
D) 88
99) 20, 40, 60, 80 ஆகிய நான்கு எண்களின் சராசரி எவ்வளவு?
*A) 50
B) 55
C) 60
D) 70
100) 11 எண்களின் சராசரி 30. முதல் 5 எண்களின் சராசரி 25. கடைசி 5 எண்களின் சராசரி 28. எனில், இடையில் உள்ள எண்ணின் சராசரியை காண்க?
A) 90
B) 50
C) 85
*D) 65