குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனப் புரிந்துகொள்ளவும்.
1. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
1.கிரிப்ஸ் தூதுக்குழு – 1946
2.M.N. ராய் – 1940
3.கேபினட் தூதுக்குழு – 1934
4.ஆகஸ்ட் நன்கொடை – 1942
(a) 4 3 1 2
(b) 4 2 1 3
*(c) 4 3 1 2
(d) 3 1 2 4
2. தவறான கூற்றைக் கண்டறிக.
கூற்று 1. அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 211.
கூற்று 2. அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் முதல் மற்றும் நிரந்தரத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் ஆவார்.
கூற்று 3. அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் மொத்தப் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15.
- கூற்று 1 மற்றும் 2 சரி 3 தவறு.
(b) கூற்று 1 மற்றும் 3 சரி, 2 தவறு.
(c) கூற்று 1 சரி, 2 மற்றும் 3 தவறு.
*(d) கூற்று 3 சரி, 1 மற்றும் 2 தவறு.
3. மகாத்மா காந்தி எதனைப் பின்தேதியிட்ட காசோலை எனக் கூறினார்?
(a) கேபினெட் தூதுக்குழு
*(b) கிரிப்ஸ் தூதுக்குழு
(c) ஆகஸ்ட் நன்கொடை
(d) குறிக்கொள் தீர்மானம்
4. அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் இடம்பெறாத இரு முக்கியத் தலைவர்கள் யார்?
(a) மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு
(b) மகாத்மா காந்தி, அம்பேத்கர்
*(c) மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா
(d) மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத்
5. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்?
*(a)2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
(b) 2 ஆண்டுகள், 10 மாதங்கள், 12 நாட்கள்
(c) 2 ஆண்டுகள், 6 மாதங்கள், 18 நாட்கள்
(d) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 9 நாட்கள்
6. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
1. மத்திய அதிகாரக்குழு – ஜவஹர்லால் நேரு
2. மாகாண அரசியல் அமைப்புக்குழு – சர்தார் வல்லபாய் படேல்
3. வரைவுக்குழு – B.R. அம்பேத்கர்
4. கொடிக்குழு – இராஜேந்திர பிரசாத்
(a) 3
(b) 2
*(c) 4
(d) 1
7. பொருத்துக:
1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – 13-டிசம்பர்-1946
2. தேசியகீதம் – 22-ஜூலை-1947
3. தேசியக்கொடி – 26-நவம்பர்-1949
4. குறிக்கொள் தீர்மானம் – 24-ஜனவரி-1950
(a) 3 1 2 4
*(b) 3 4 2 1
(c) 3 1 4 2
(d) 4 1 2 3
8. கீழ்க்காணும் கூற்றுகளுள் தவறானது எது?
1. தேசியக்கொடியை வடிவமைத்தவர் பிட்மாரி சுப்பாராவ்.
2. தேசியக்கொடி முதன்முதலில் நெய்யப்பட்ட இடம் குடியாத்தம்.
(a) இரண்டும் சரி
*(b) கூற்று 1 தவறு 2 சரி
(c) இரண்டும் தவறு
(d) கூற்று 1 சரி 2 தவறு
9. இவர்களுள் வரைவுக்குழுவில் இடம்பெறாதவர் யார்?
(a) T.T. கிருஷ்ணமாச்சாரி
*(b) இராஜேந்திர பிரசாத்
(c) K.N. முன்ஷி
(d) N.M. மாதவ்ராவ்
10. முதன்முதலில் பிரிக்கப்பட்ட மொழிவாரி மாநிலம் எது? எந்த ஆண்டில் பிரிக்கப்பட்டது?
(a)கோவா 1961
(b) குஜராத் 1956
*(c) ஆந்திரப்பிரதேசம் 1953
(d) சிக்கிம் 1975
11. சரியான கூற்றைக் கண்டறிக.
கூற்று 1. புதிய மாநிலங்களை இணைப்பது மற்றும் தோற்றுவித்தலைப் பற்றி சரத்து ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூற்று 2. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் மாநிலங்களைப் பிரிப்பது மற்றும் சேர்ப்பது ஆகியவற்றைப் பற்றி சரத்து மூன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரண்டும் தவறு
(b) கூற்று 1 சரி 2 தவறு
(c) கூற்று 1 தவறு 2 சரி
*(d) கூற்று இரண்டும் சரி.
12. 1987ஆம் ஆண்டில், கீழ்க்கண்ட எந்த மாநிலம் யூனியன் பிரதேசத்திலிருந்து மாநில அந்தஸ்த்உ பெறவில்லை?
*(a) திரிபுரா
(b) கோவா
(c) அருணாச்சலப் பிரதேஷ்
(d) மிசோரம்
13. பொருத்துக: யூனியன் பிரதேசங்களும் சட்டத் திருத்தங்களும்
1. 69ஆவது சட்ட திருத்தம் – புதுச்சேரி
2. 12ஆவது சட்டத் திருத்தம் – தாத்ரா நாஹர்வேலி
3. 10ஆவது சட்டத் திருத்தம் – டையூ டாமன்
4. 14ஆவது சட்டத் திருத்தம் – டெல்லி
(a) 4 1 2 3
(b) 4 3 1 2
*(c) 3 4 1 2
(d) 4 3 2 1
14. 1975 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட எந்த சட்டத்திருத்தத்தின்படி சிக்கிம் முழு மாநில அந்தஸ்து பெற்றது?
(a) 56ஆவது சட்டத்திருத்தம்
(b) 46ஆவது சட்டத்திருத்தம்
*(c) 36ஆவது சட்டத்திருத்தம்
(d) 76ஆவது சட்டத்திருத்தம்
15. இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகப்புரையில் சமத்துவமும், சமயச் சார்பின்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.?
(a) 91
(b) 48
*(c) 42
(d) 69
16. நெருக்கடிநிலை காலத்தில் தற்காலிகமாக அடிப்படை உரிமைகளை இரத்து செய்யும் கூறானது எந்த அரசியலமைப்பு சட்டத்திலிருந்து பெறப்பட்டது?
(a) ஆஸ்திரேலியாவின் அரசியலமைப்புச் சட்டம்
(b) கனடாவின் அரசியலமைப்புச் சட்டம்
(c) அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம்
*(d) ஜெர்மனியின் அரசியலமைப்புச் சட்டம்
17. கீழே குறிப்பிடப்பட்ட எந்த வொரு வழக்கில், முகப்புரையானது அரசியலமைப்பின் ஓர் பகுதி அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது?
*(a) பெருபாரி யூனியன் வழக்கு
(b) சஜ்ஜன்சிங் வழக்கு
(c) கோலக்நாத் வழக்கு
(d) கேசவானந்த பாரதி வழக்கு
18. முகப்புரையை அரசியலமைப்பின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?
(a) பி.ஆர்.அம்பேத்கர்
*(b) என்.ஏ.பல்கிவாலா
(c) ஜவகர்லால் நேரு
(d) காந்தி
19. கீழ்கண்டவர்களுள் அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்பு வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள் யார்?
1. N. கோபாலசாமி ஐயங்கார்
2. ஜவகர்லால் நேரு
3. K.M.முன்ஷி
4. சர்தார்பட்டேல்
(a) 1,2 மற்றும் 3 மட்டும்
(b) 1 மற்றும் 4 மட்டும்
(c) 2,3 மற்றும் 4 மட்டும்
*(d) 1 மற்றும் 3 மட்டும்
20. “அரசியலமைப்பின் மனசாட்சி” என்றழைக்கப்படுவது எது?
(a) அடிப்படை உரிமைகள்
*(b) அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படை உரிமைகளும் இணைந்து
(c) அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அடிப்படைக் கடமைகளுடன் இணைந்து
(d) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
21. இந்திய அரசியலமைப்பு நிர்ணயசபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்தா சின்ஹா நியமனம் செய்யப்பட்டது எந்த நாட்டின் நடைமுறையின் அடிப்படையிலானது?
(a) ரஷ்யா
(b) பிரிட்டன்
*(c) பிரான்ஸ்
(d) அமெரிக்கா
22. அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை தொடர்பான கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க.
1. நீதிக் கோட்பாடுகள் பிரெஞ்சு புரட்சியிலிருந்து பெறப்பட்டது
2. சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகள் ரஷ்ய புரட்சியிலிருந்து பெறப்பட்டது.
மேற்க்காணும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
(a) ஒன்று மட்டும்
(b) 2 மட்டும்
(c) இரண்டும்
*(d) இரண்டுமில்லை
23. இந்தியாவில் அரசியல் அமைப்பு நிர்ணய சபை உருவாக்குவதற்காக தேர்தல் எப்பொழுது நடத்தப்பட்டது?
(a) ஆகஸ்ட் 1946
*(b) ஜூலை 1946
(c) ஜூன் 1946
(d) மே 1946
24. இந்தியாவிற்கான ஒரு அரசியலமைப்பு நிர்ணய சபை வேண்டும் என்று முதன் முதலாவதாக கூறியவர்
(a) மஹாத்மா காந்தி
(b) ஜவஹர்லால் நேரு
(c) பி. ஆர். அம்பேத்கர்
*(d)எம் என் ராய்
25. பொறுத்துக
A. டாக்டர் சச்சிதானந்த சின்கா 1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் இரண்டாம் கூட்ட தலைவர்
B. ராஜேந்திர பிரசாத் 2. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்ட தலைவர்
c. h c முகர்ஜி 3. அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஆலோசகர்
D. b n ராவ். 4. . அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணைத் தலைவர்
(a) 2,3,4,1
(b) 2,1,3,4
*(c) 2,1,4,3
(d) 3,2,4,1