ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும், தொகுதி 2 தமிழ் மாதிரித்தேர்வு (5) வினாவிடைகள்

 

1) அன்னை மொழி எனும் தலைப்பில் அமைந்த கவிதை பற்றிய தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) அன்னை மொழி எனும் தலைப்பில் அமைந்த கவிதை கொய்யாக்கனி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

2) இக்கவிதையை இயற்றியவர் பாவலர்மணி பெருஞ்சித்திரனார்

3) பெருஞ்சித்திரனார் தமிழ்ச் சிட்டு, தேன்மழை, தமிழ் நிலம் போன்ற இதழ்களை நடத்தினார்

a) 1, 2 தவறு

b) 1, 3 தவறு

c) 2, 3 தவறு

*d) 1, 2, 3 தவறு

2) “நாடும் மொழியு்ம் நமதிரு கண்கள்” என்று கூறியவர் யார்

a) பெருஞ்சித்திரனார்

a) க. சச்சிதானந்தம்

*c) பாரதியார்

d) பாரதிதாசன்

3) சரியாக அமைந்த கிளையின் பிரிவு வரிசையைத் தேர்க

*a) போத்து, குச்சு, இணுக்கு

b) போத்து, இணுக்கு, குச்சு

c) இணுக்கு, போத்து, குச்சு

d) இணுக்கு, குச்சு, போத்து

4) கட்டைக்குத் தொடர்பில்லாத மரத்தின் பகுதி எது

a) கொம்பு

b) கவை

*c) விறகு

d) அடி

5) பூவின் வாடிய நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் எது

a) மலர்

b) அலர்

c) வீ

*d) செம்மல்

6) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இரா. இளங்குமரனாருக்குத் தொடர்பில்லாதது எது

a) காக்கை்ப் பாடினிய உரை

b) புறத்திரட்டு உரை

*c) திருக்குறள் மெய்ப்பொருள் உரை

d) குண்டலகேசி உரை

7) “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து

ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்”

இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

a) நன்னூல்

b) தொல்காப்பியம்

c) யாப்பருங்கலம்

*d) தண்டியலங்காரம்

8) திருவள்ளுவர் பெயரில் அமைந்த முதல் தமிழ்க் கணினி எப்போது உருவாக்கப்பட்டது

a) அக்டோபர் 1983

*b) செப்டம்பர் 1983

c) செப்டம்பர் 1993

d) அக்டோபர் 1993

9) ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு ிணையான தமிழ்ப் பதங்களையும் பொருத்துக

a) இணை ஒப்பு – 1) oxymoron

b) முரண்படு மெய்மை – 2) paradox

c) சொல்முரண் – 3) analogy

d) எதிரிணை இசைவு – 4) antithesis

a) 1 2 3 4

b) 2 1 4 3

*c) 3 1 2 4

d) 1 3 2 4

10) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை

காரணம் – அவ்வாறு அளபெடுப்பதால் இது இசைநிறை அளபெடை என்றும் குறிப்பிடப்படுகிறது

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

*d) கூற்று தவறு, காரணம் சரி

11) (தமிழ் இலக்கணம் படிக்க, படிக்க விருப்பத்தை உண்டாக்குகிறது.) என்று கூறியவர் யார்?

A)  ரசூல் கம்சதேவ்

*b) கெல்லட்

C) மாக்ஸ் முல்லர்

D) கால்டுவெல்

12) “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கமுண் டாம்”

இவ்வடிகள் யாருடையது

a) இளங்கோவடிகள்

b) பலபட்டடைச் சொக்கநாதர்

*c) ஔவையார்

d) வெண்ணிக் குயத்தியார்

13) திசைகளையும் வீசும் காற்றின் பெயர்களையும் பொருத்துக

a) தெற்கு – 1) தென்றல்

b) வடக்கு – 2) வாடை

c) கிழக்கு – 3) கோடை

d) மேற்கு – 4) கொண்டல்

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 1 2 4 3

d) 2 4 1 3

14) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : புதுக்கவிதை என்னும் வடிவம் உருவாகக் காரணமாய் இருந்தது பாரதியாரின் வசன கவிதை ஆகும்

காரணம் : பாரதியார் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார்

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

15) பொருந்தாத இணையைக் காண்க

a) சுவல் – தோள்

b) நறுவீ – மணம் மிக்க மலர்

c) கோடு – மலை

*d) நேமி – இடம்புரிச் சங்கு

16) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

a) வெற்றிலைக் கொடி

b) மல்லிகைக் கொடி

c) வல்லிக் கொடி

*d) பூக்கொடி

17) நூலையும் நூலாசிரியர்களையும் பொருத்துக

a) மழையும் புயலும் – 1) பா. சிங்காரம்

b) புயலிலே ஒரு தோணி – 2) வ. ராமசாமி

c) அதோ அந்தப் பறவைப் போல – 3) சேதுமணி மணியன்

d) தவறின்றித் தமிழ் எழுதுவோம் – 4) முகமது அலி

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 2 1 4 3

d) 3 1 2 4

18) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல”

இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது

a) புறநானூறு

b) சிலப்பதிகாரம்

*c) கலிங்கத்துப்பரணி

d) நற்றிணை

19) “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

இவ்வடி உணர்த்தும் பொருள் என்ன

a) அல்லல் உற்ற காலத்தும் விருந்தினருக்கு உணவிடுதல்

b) உறவினர் அல்லாதோருக்கும் உணவிடுதல்

*c) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்வுடன் வரவேற்று உணவிடுதல்

d) மேற்கூறிய எதுவும் இல்லை

20) விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது அவர்கள் செல்ல இருக்கிற தேர்வரை ஏழடி நடந்து சென்று வழியனுப்பிய செய்தி இடம்பெறும் நூல் எது

a) புறநானூறு

b) சிறுபாணாற்றுப்படை

c) பெரும்பாணாற்றுப்படை

*d) பொருநராற்றுப்படை

21) வருக என்ற சொல்லின் சரியான பகுபதத்தைக் காண்க

a) வரு + க

*b) வா [வரு] + க

c) வா + ர் + க

d) வரு + க் + அ

22) சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

இவ்வடி இடம்பெறும் நூல் எது

a) பட்டினப்பாலை

b) மதுரைக்காஞ்சி

c) சிலப்பதிகாரம்

*d) மலைபடுகடாம்

23) சொல்லையும் பொருளையும் பொருத்துக

a) வயிரியம் – 1) கூத்தர்

b) வேவை – 2) சோறு

c) பொம்மல் – 3) வெந்தது

d) கடும்பு – 4) சுற்றம்

a) 1 2 3 4

*b) 1 3 2 4

c) 2 1 3 4

d) 1 4 2 3

24) தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது கோபல்ல கிராமம்

2) இப்புதினங்களின் ஆசிரியர் மீரா

3) 1991 ஆம் ஆண்டு கோபல்லபுரத்து மக்கள் புதினத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது

*a) 1, 2 தவறு

b) 1, 3 தவறு

c) 2, 3 தவறு

d) 1, 2, 3 தவறு

25) எழுவாய்த் தொடரில் எழுவாயைத் தொடர்ந்து பயனிலையாக வராதது எது

a) பெயர்

b) வினை

c) வினா

*d) வேற்றுமை உறுபு

26) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) காசிக்காண்டம் காசி நகரின் பெருமையைக் கூறவில்லை

2) காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் அதிவீரராமப் பாண்டியர்

3) லிங்கபுராணம், கூர்மபுராணம், நறுந்தொகை போன்றவை அவர் எழுதிய பிற நூல்கள்

a) 1, 2, 3 சரி

b) 1, 3 சரி

*c) 2, 3 சரி

d) 1, 2 சரி

27) தவறான இணையைக் காண்க

a) எச்ச வினை பெயரைக் கொண்டு முடிதல் – பெயரெச்சம்

b) எச்ச வினை வினையைக் கொண்டு முடிதல் – வினையெச்சம்

*c) வினையெச்சம் பெயரைக் கொண்டு முடிதல் – வினைமுற்றுத் தொடர்

d) வேற்றுமை உறுபு வெளிப்படையாக அமைதல் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

28) சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1) ELA என்னும் உரையாடு மென்பொருளை பாரத் ஸ்டேட் வங்கி உருவாக்கியுள்ளது

2) அது ஒரு நிமிடத்திற்கு பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்

3) வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேவைகளை இணைய வசதி இல்லாமலேயே அளிக்கிறது

a) 1, 2 சரி

*b) 1 மட்டும் சரி

c) 2 மட்டும் சரி

d) 3 மட்டும் சரி

29) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது

2) பெருமாள் திருமொழி 105 பாடல்களைக் கொண்டது

3) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து இதனைப் பாடியுள்ளார்

4) குலசேகர ஆழ்வாரின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு

a) 1, 2 சரி

b) 2, 3 சரி

c) 1, 3 சரி

*d) 1, 2, 3 சரி

30) வளர்வானம் இலக்கணக் குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) உம்மைத்தொகை

c) வேற்றுமைத்தொகை

*d) வினைத்தொகை

31) “அண்டப் பகுதியின் உண்டைத் திரக்கம்

சிறிய ஆகப் பெரியோன் தெரியும்”

இப்பாடல் அடிகள் இடம்பெரும் நூல் எது

a) தேவாரம்

*b) திருவாசகம்

c) புறநானூறு

d) பதிற்றுப்பத்து

32) இவ்வுலகில் நம் பால்வீதி போன்ற எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்பதை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹபுல் எந்த ஆண்டு நிரூபித்தார்

a) 1914

*b) 1924

c) 1934

d) 1944

33) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) பரிபாடல் நூலில் எழுபது பாடல்கள் இருப்பதாக உரையாசிரியர்கள் கூறுகின்றனர்

2) தற்போது வரை 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

*c) 1, 2 இரண்டும் சரி

d) 1, 2 இரண்டும் தவறு

34) பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எப்போது நிருவப்பட்டது

a) 1978

*b) 1988

c) 1998

d) 2008

35) பொருத்துக

a) செழியன் வந்தது – 1) இட வழு

b) நீ வந்தேன் – 2) திணை வழு

c) கண்ணகி உண்டான் – 3) கால வழு

d) நேற்று வருவான் – 4) பால் வழு

*a) 2 1 4 3

b) 2 1 3 4

c) 1 2 4 3

d) 1 2 3 4

36) “கத்தும் குயிலோசை சற்றே வந்து

காதில் படவேணும்”

இவ்வடிகளில் காணப்படும் வழு எது

a) திணை வழு

b) பால் வழு

c) இட வழு

*d) மரபு வழு

37) “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேரொறு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்று கூறியவர் யார்

a) மு. கு. ஜகந்நாத ராஜா.

*b) மணவை முஸ்தபா

c) தமிழ்ச்செல்வன்

d) ச. கந்தசாமி

38) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”

இவ்வடி இடம்பெறுவது

a) வேள்விக்குடிச் செப்பேடு

b) தொல்காப்பியம்

c) மதுரைக்காஞ்சி

*d) சின்னமனூர்ச் செப்பேடு

39) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத காப்பியம் எது

a) சீவக சிந்தாமணி

b) கம்ப ராமாயணம்

c) வில்லி பாரதம்

*d) மேற்கூறிய எதுவும் இல்லை

40) சேய்குத் தம்பிப் பாவலர் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) அவர் குமரி மாவட்டம் இடலாக்குடியில் பிறந்தார்

2) அவரது காலம் 1874 முதல் 1950 வரை

3) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்

4) அவர் தனது 14 வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தார்

5) அவரது சில நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

*a) 1, 2, 3

b) 1, 2, 3, 4

c) 1, 2, 3, 4, 5

d) 1, 3, 4, 5

41) திருவிளையாடற் புராணக் காண்டங்களின் சரியான வரிசை எது

a) கூடல், மதுரை, திருவாலவாய்

*b) மதுரை, கூடல், திருவாலவாய்

c) கூடல். திருவாலவாய், மதுரை

d) திருவாலவாய், மதுரை, கூடல்

42) தான் அறிந்த ஒன்றை பிறர் அறிந்துள்ளனரா என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு வினாவப்படுவது எவ்வகை வினா

a) அறியா வினா

*b) அறிவினா

c) ஐயவினா

d) ஏவல் வினா

43) பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குசேலப் பாண்டியன் தன்முன் பாடிய யாருடைய பாடலைப் பொருட்படுத்த்ாது அவமதித்தான்

a) கபிலர்

b) பரணர்

*c) இடைக்காடர்

d) மோசிகீரனார்

44) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க

a) சுட்டு விடை

b) மறை விடை

c) நேர் விடை

*d) ஏவல் விடை

45) “விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏணை யவர்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள பொருள்கோள் எது

a) மொழிமாற்றுப் பொருள்கோள்

b) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

c) முறை நிரல்நிறைப் பொருள்கோள்

*d) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

46) புரவியாட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a) புரவி நாட்டியம்

b) குதிரைக்கலி

*c) கச்சிகொடி

d) பொய்க்கால் குதிரையாட்டம்

47) கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்குத் தொடர்பில்லாதது எது

a) கலைமாமணி

*b) இந்திய மாமணி

c) தாமரைத்திரு

d) கலை ஞாயிறு

48) HEAD PHONE என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க

a) காதணிக் கருவி

*b) காதணி கேட்பி

c) காதுக் கருவி

d) ஒலிவாங்கி

49) குட்டி இளவரசன் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

a) யூமா வாசுகி

*b) வே. ஸ்ரீராம்

c) வல்லிக்கண்ணன்

d) எம். பி. அகிலா

50) மரப்பாவை பற்றிக் குறிப்பிடும் நூல் எது

a) பட்டினத்தார் பாடல்கள்

b) திருவாசகம்

*c) திருக்குறள்

d) புறநானூறு

51) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்கப் பகுதியில் இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது

காரணம் : ராசராசன் பல்வேறு நாடுகளின்மீது படையெடுப்பு மேற்கொண்டதை உணர்த்துகிறது

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

52) கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் கவிஞர் உமா மகேஸ்வரியின் நூல் அல்லாதது எது

*a) நிலாக்கால நட்சத்திரங்கள்

b) வெறும் பொழுது

c) கற்பாவை

d) நட்சத்திரங்களின் நடுவே

53) செங்கீரைப் பருவத்திற்கான காலம் எது

a) மூன்றாவது மாதம்

b) ஐந்தாவது மாதம்

c) ஆறாவது மாதம்

*d) ஐந்து மற்றும் ஆறாவது மாதங்கள்

54) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் படிப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

காரணம் : பாரதியார் ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று கூறுகிறார்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

55) பொருந்தாததைக் காண்க

a) தொலைந்து போனவர்கள்

b) சாந்தகுமாரி

c) சூர்யவம்சம்

*d) சுடுமண் சிலைகள்

56) பொருந்தாத இணையைக் காண்க

a) குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை

*b) முன்பணி – மாசி, பங்குனி

c) இளவேனில் – சித்திரை, வைகாசி

d) முதுவேனில் – ஆனி, ஆடி

57) திணையையும் மக்களையும் பொருத்துக

a) சேர்ப்பன் – 1) குறிஞ்சி

b) ஊரன் – 2) மருதம்

c) வெற்பன் – 3) முல்லை

d) ஆயன்- 4) நெய்தல்

a) 1 2 3 4

b) 4 3 2 1

*c) 4 2 1 3

d) 4 3 1 2

58) கார்காலத்தைப் பெரும்பொழுதாகக் கொண்ட நிலங்கள் எவை

a) குறிஞ்சி, மருதம், நெய்தல்

*ஆ, முல்லை, மருதம், நெய்தல்

c) பாலை, மருதம், நெய்தல்

d) குறிஞ்சி, முல்லை, மருதம்

59) “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது

a) சொல் பின்வருநிலை அணி

b) பொருள் பின்வருநிலை அணி

*c) சொற்பொருள் பின்வருநிலை அணி

d) உயர்வு நவிற்சி அணி

60) “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை எது

*a) இணை மோனை

b) கூழை மோனை

c) ஒரூஉ மோனை

d) முற்று மோனை

61) “அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

a) இணை எதுகை

b) கூழை எதுகை

c) மேற்கதுவாய் எதுகை

*d) கீழ்க்கதுவாய் எதுகை

62) பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட புனித நாள் என்று மா. பொ. சி. குறிப்பிடுவது எந்த நாள்

a) ஆகஸ்டு 15 1947

b) ஜூன் 26 1906

*c) ஆகஸ்டு 8 1942

d) ஜனவரி 26 1950

63) முசிரி மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் வாழ்ந்த இரு வணிகர்களுக்கிடையேயான வணிக ஒப்பந்தம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

a) ஆஸ்திரேலியா

b) சீனா

c) மலேசியா

*d) ஆஸ்திரியா

64) கு. ப. ரா. ஆசிரியராகப் பணியாற்றாத இதழ் எது

a) தமிழ்நாடு

*b) பாரதமாதா

c) பாரத தேவி

d) கிராம ஊழியன்

65) பொருத்துக

a) பாசவர் – 1) வெற்றிலை விற்போர்

b) ஓசுநர் – 2) எண்ணெய் விற்போர்

c) மண்ணுள் வினைஞர் – 3) சிற்பி

d) மண்ணீட்டாளர் – 4) ஓவியர்

a) 1 2 3 4

*b) 1 2 4 3

c) 2 1 3 4

d) 2 1 4 3

66) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு வேருக்கு நீர் என்ற புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

காரணம் : இதன்மூலம் இவர் சாகித்திய அகாதெமிவிருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆனார்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

67) வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட இரு அரசர்கள் போர்க்கலத்தில் போரிடும் திணை எது

a) வாகை

b) உழிஞை

*c) தும்பை

d) நொச்சி

68) நன்றும் தீதும் ாய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சனது கடமை எனக் கூறும் நூல் எது

a) புறநானூறு

b) பட்டினப்பாலை

c) அகநானூறு

*d) மதுரைக்காஞ்சி

69) வள்ளலின் பொருள் இரவலரின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலரின் வறுமை

என்று கூறியவர் யார்

a) ஆவூர் மூலங்கிழார்

b) நக்கீரர்

*c) பெரும்பதுமனார்

d) ஔவையார்

70) “புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது”

இவ்வரிகள் யாருடையது

a) வைரமுத்து

b) மு. மேத்தா

*c) கண்ணதாசன்

d) வாலி

71) “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

இக்குறளில் அமைந்துள்ள ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு என்ன

a) நாள்

b) மலர்

c) காசு

*d) பிறப்பு

72) கொடுக்கப்பட்டுள்ள ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமாகாத படைப்பு எது

a) உன்னைப்போல் ஒருவன்

b) சில நேரங்களில் சில மனிதர்கள்

c) ஊருக்கு நூறு பேர்

*d) சினிமாவுக்குப் போற சித்தாளு

73) “எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை

கண்ணீரும் பாடலில் கலந்திருக்கும்

பண்ணோடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய

மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”

இவ்வடிகளில் ஜெயகாந்தன் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்

a) கண்ணதாசன்

*b) கல்யாணசுந்தரம்

c) மருதகாசி

d) புலமைப் பித்தன்

74) நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன

a) முகமது இசுமாயில்

b) முகமது செரிபு

c) முகமது அலி

*d) முகமது ரஃபி

75) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்யாசி பட்டம் வழங்கப்பட்டது

காரணம் : இஸ்மத் சன்யாசி என்பதற்கு தூய துறவி என்று பொருள்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

76) (இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே) என கூறியவர் யார்?

*A) பாரதிதாசன்

B) கண்ணதாசன்

C) பாரதியார்

D) வண்ணதாசன்

77) பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் நூல் நோக்கி  வாழ்வான் நுனித்து என்ற பாடல்  இடம்பெற்றுள்ள நூல் எது?

A) திருக்குறள்

*B) எளாதி

C) நாளடியார்

D) பழமொழி

78) அழுது அடியடைந்த அன்பர் யார்?

A) அ்ப்பர்

B) சுந்தரர்

*C) மாணிக்க வாசகர்

D) சம்மந்தர்

79) பதினாறு செவ்வியல் தன்மைகள் கொண்டது செம்மொழி அதுவே நம் தமிழ் மொழி என்று கூறியவர் யார்?

A)  இளங்குமரனார்

*b) பாவானர்

C) பரிதிமாற் கலைஞர்

D)  மறைமலை அடிகள்

80) தமிழ் மிகவும் பண்பட்ட மொழி என்றும்; அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றுள்ளது என்றும் கூறியவர் யார்?

A)  கால்டுவெல்

B)  பிரான்சிஸ் எல்லீஸ்

*c)  மாக்ஸ் முல்லர்

D) குமரிலபட்டர்

81) சூரிய நாராயண சாஸ்திரி தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என சூட்டிக்கொண்ட நூல் எது?

A) மான விஜயம்

B)  மதுரா விஜயம்

C) தனிப்பாடல் திரட்டு

*d)  தனி பாசுரத்தொகை

82) வாழ்தல் இலக்கணக்குறிப்பு தருக.

A) ஆகுபெயர்

B) பண்பு பெயர்

*c) தொழில் பெயர்

D)  பொதுப்பெயர்

83) (தாமே பாடுபட்டு உயர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்) என்று கூறியவர் யார்?

A)  காயிதே மில்லத்

*b) தந்தை பெரியார்

C)  அறிஞர் அண்ணா

D) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

84) (உலக நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும்  திருக்குறளும் கம்பராமாயணமும் இருந்தால் போதும் உலகை புதுப்பித்து விடலாம்) என்று கூறியவர் யார்?

A) முனைவர் எமினோ

B) மாக்ஸ்முல்லர்

C) கெல்லட்

*d) கால்டுவெல்

85) (அரை வயிற்று கஞ்சிக்கு அல்லல்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்) என்று கூறியவர் யார்?

A) இரட்டைமலை சீனிவாசன்

*b)  அம்பேத்கர்

C) பா. ஜீவானந்தம்

D)  ராஜேந்திர பிரசாத்

86) செய்வினை என்பதன் இலக்கண குறிப்பு யாது?

A) அன்மொழித்தொகை

B) வியங்கோள் வினைமுற்று

C) வினையெச்சம்

*D) வினைத்தொகை

87) காவிய தர்ஷம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் அணி இலக்கண நூல் எது?

A)  வீரசோழியம்

*b) தண்டி அலங்காரம்

C) புறப்பொருள் வெண்பாமாலை

D) நன்னூல்

88) ஐ ஏ எஸ் படிக்கட்டுகள் என்ற நூளை  இயற்றியவர் யார்?

A) தமிழ் நபி

B) பாலகிருஷ்ணன்

C) ஐராவத மகாதேவர்

*d) இறையன்பு

89) (மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே) எனக் கூறும் நூல் எது?

A) கலித்தொகை

B) முல்லைப்பாட்டு

C) அகநானூறு

*d) குறுந்தொகை

90) (பஞ்சகாப்பியம்) என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?

A) தென்றல் விடு தூது

B) குற்றால குறவஞ்சி

C) ஐங்குறுநூறு

*d) தமிழ்விடு தூது

91) (தமிழ் தேனி) என்று அழைக்கப்பட்டவர் யார்?

*a) மயிலை சீனி வேங்கடசாமி

B) அடியாருக்கு நல்லார்

C) பாரதியார்

D) கவிமணி

92) சரியானக் கூற்றுகளைத் தேர்ந்தெடு.

1) (கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவளை உனக்கில்லை ஒற்றுக்கொள்) என்பது நாமக்கல்லாரின் அறிவுரை.

2) (வினையே ஆடவருக்கு உயிர்) என்பது குருந்தொகையில் இடம்பெற்றுள்ள வரிகள்.

*A) ஒன்று மற்றும் இரண்டு சரி

B) ஒன்று மற்றும் இரண்டு தவறு

C) ஒன்று மட்டும் சரி

D) இரண்டு மட்டும் சரி

93) 13 ஆண்டுகள் நற்போதகம் என்னும் மாத இதழில் தொடராக வெளிவந்த நூல் எது?

A) தேம்பாவணி

B) ரக்சன்ய மனோகரம்

C) அதிசய மலர்

*d) இரட்சணிய யாத்திரிகம்

94) தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்படுபவர் யார்?

A) ராஜமாணிக்கம்

B) தமிழ் அழகனார்

*c) வாசுப மாணிக்கம்

D)  சி. மணி

95) (கண்ணாடி ஆகும் கண்கள்) என்னும் கவிதையை எழுதியவர் யார்?

A) சிற்பி பாலசுப்பிரமணியன்

B) பாரதியார்

*C) நகுலன்

D) காமராசு

96) கம்பராமாயணத்தில் ஏழாவது காண்டம் பாடியவர் யார்?

A) கம்பர்

B) சடையப்ப வள்ளல்

C) இரண்டாம் குலோத்துங்க சோழன்

*d) ஒட்டக்கூத்தர்

97) அழகிய மணவாளதாசன் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பலபட்டடை சொக்கநாதப் புலவர்

B) வரதநஞ்சயப் பிள்ளை

*c) பிள்ளை பெருமாள் ஐயங்கார்

D) நம்பி ஆண்டார் நம்பி

98) பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர் யார்?

*a) சுரதா.

B) நகுலன்

C) வாணிதாசன்

D) ராதாகிருஷ்ணன்

99) புத்தகசாலை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A)  பாரதியார்

*b) பாரதிதாசன்

C) அறிஞர் அண்ணா

D) வாணிதாசன்

100) கபிலரை வாய்மொழி கபிலர் என கூறியவர் யார்?

A) குன்றக்குடி அடிகளார்

*b) நக்கீரர்

C) அவ்வையார்

D) பெரும் குன்றூர் கிழார்

1: ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150cm என கணக்கிடப்பட்டது சரி பார்க்கும் பொழுது 140cm என்பதை 130cm என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க

a. 150cm

b. 152cm

c. 153cm

*d. 151cm

2: ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்க

*a) 165 செ.மீ..

b) 160 செ.மீ,

c) 155 செ.மீ.,

d) 170 செ.மீ.,

3: ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152cm என கணக்கிடப்பட்டது. சரி பார்க்கும் பொழுது 172cm என்பதை 148cm என தவறுதலாக எடுத்து கொள்ளப்பட்டதாக தெரியவந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது?

a. 150cm

b. 156cm

c. 158cm

*d. 154cm

4: 25 எண்களின் சராசரி 78.4 என கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 என பயன்படுத்தப்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரிசெய்யப்பட்ட சராசரி எது?

*a. 79.48

b. 76.54

c. 81.82

d. 78.4

5: 75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 என கணக்கிடப்படுகிறது. பின்பு 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது எனவே அத்தொகையின் சரியான சராசரியை காணவும்

a. 26.13

*b. 27.13

c. 28.13

d. 25.13

6: 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது சரியான மதிப்பெண்கள் கொண்ட சரியான சராசரியை காண்க

*a. 39.7

b. 38.7

c. 41.7

d. 40.7

7. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவர்களின் வயது என்ன

a. 30,5

*b. 36,6

c. 48,8

d. 24,4

8. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது?

a. 24

b. 36

*c. 48

d. 50

9. 2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது

*a.42

b.43

c.50

d.45

10. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன?

a. 60

*b. 40

c. 50

d. 30

11. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இவர்களின் தற்போதைய வயது கூடுதலாக காண்க

*a.55

b.45

c.35

d.25

12. 5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதை போல் 7 மடங்காகவும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயதை போல 4 மடங்காக இருக்கும் எனில், அவருடைய தற்போதைய வயது என்ன?

a. 80

b. 60

c. 50

*d. 40

1. X  என்பவர் ரூபாய்  60000  கொடுத்து 20% லாபத்தில் கைபேசி வாங்குகிறார்  பின்னர் அதனை 10 சதவிகித நட்டத்திற்கு விற்கிறார் எனில்  அக்காய் பேசியின் அடக்கவில்லை மற்றும் விற்ற விலை எவ்வளவு?

A. 54000,50000.

*b. 50000.,54000.

C. 54000 51000.

D. 50000. 53000.

2.  ஸ்ரீநாத்  என்பவர்  ஒரு பொருளை 20 சதவிகித லாபத்திற்கு  வாங்கி  20  சதவிகிதம் நட்டத்திற்கு விற்கிறார் எனில்  அவர் பெரும் லாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க?

A.  லாபம் நான்கு சதவீதம்.

B.  எதுவும் இல்லை.

*c.  நட்டம் 4 சதவிகிதம்

D.  லாபம் 2 சதவீதம்.

3.  இரண்டு கைக்கடிகாரத்தின் குறித்த விலை 3000  முதலில் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது  இரண்டாவதாக ஐந்து சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது எனில்  அவர் எவ்வளவு தொகை செலுத்தி கை கடிகாரத்தை வாங்கி இருப்பார்?

*a. 2565.

B. 2685.

C. 2495.

D. 2550.

4.  வினித் என்பவர் 600 தீப்பெட்டி வாங்க கடைக்கு செல்கிறார்  நேற்றைய விலையை விட இன்று 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனில் அவர் எத்தனை தீப்பெட்டியை வாங்கி இருப்பார்?

A. 520.

*b. 500.

C. 480.

D. 720.

5.  ஒரு பல கூடையில் உள்ள பழங்களின் எண்ணிக்கை 3000  ஆரஞ்சு பத்து சதவிகிதம்  ஆப்பிள் 20 சதவிகிதம்  மாதுளை பத்து சதவிகிதம்  கொய்யா பத்து சதவிகிதம் தர்பூசணி 20 சதவிகிதம்  எனில் மீதமுள்ள மற்ற பழங்களின் எண்ணிக்கை காண்க?

A. 1200.

B. 850.

*c. 900.

D. 1050.

6 h,c,f   மீச்சி மா விற்கு சமம் இல்லாதவற்றை காண்க?

A. S.

B. E,s.

*C. A,c,h.

D. D,t.

7. Sunday  2. Tuesday 3. Wednesday 3  எனில் Monday வின் மதிப்பு காண்க.

A. 4.

*b. 2.

C. 3.

D. 5.

8.  ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் அகலமும் கொண்ட செவ்வகத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண்க?

A. சுற்றளவு 24 மீட்டர் பரப்பளவு 20 மீட்டர்.

B.  சுற்றளவு 22 மீட்டர் பரப்பளவு 24 மீட்டர்.

C.  சுற்றளவு 20 மீட்டர் பரப்பளவு 23 மீட்டர்.

*d.  சுற்றளவு 20 மீட்டர் பரப்பளவு 24 மீட்டர்.

9.  ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்  பதினோரு சென்டிமீட்டர் அறுவது சென்டிமீட்டர் 61  சென்டிமீட்டர் என?ில் அதன் பரப்பளவு காண்க

A.  320 சென்டிமீட்டர்.

*b.  330 சென்டிமீட்டர்.

C.  310 சென்டிமீட்டர்.

D.  350 சென்டிமீட்டர்.

10 மீட்டர் அடிப்பக்கமும் 7 மீட்டர் உயரத்தையும் கொண்ட இணைகரத்தின் பரப்பளவு காண்க,?

A.  60 மீட்டர்.

*b.  70 மீட்டர்.

C.  50 மீட்டர்.

D.  எய்ட்டி மீட்டர்.

11.  இரு சமபக்க முக்கோணம் 30 சென்டிமீட்டர்   மூன்றாவது பக்கம் 10 சென்டிமீட்டர் எனில் அதன் சுற்றளவு காண்க

A.  30 சென்டிமீட்டர்.

*b.   நாப்பது சென்டிமீட்டர்.

C.  35 சென்டிமீட்டர்.

D.  30 சென்டிமீட்டர்.

12.  இணைகரத்தின் அடி உயரம் 9 சென்டிமீட்டர்  புத்துயரம் ஐந்து சென்டிமீட்டர் எனில்  அதன் பரப்பளவு காண்க?

A.  17 செண்டிமீட்டர்.

B.  35 சென்டிமீட்டர்.

*c.   45 சென்டிமீட்டர்.

D.  45 மீட்டர்.

13.  ஆரம் 28 சென்டிமீட்டர் உடைய அரை வட்டத்தின் பரப்பளவு காண்க?

A. 618.

B. 144.

C. 784.

*d. 1232.