ஆன்சலிவன் பயிற்சிமையம் வழங்கும், தொகுதி 2 தமிழ் மற்றும் கணிதம் மாதிரித்தேர்வு (2) வினாவிடைகள்

 

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1) “அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்”

இப்பாடல் அடிகள் யாருடயவை

a) பாரதியார்

*b) இராமலிங்கனார்

c) வாணிதாசன்

d) இராஜகோபாலன்

2) விலங்குகளையும் அவற்றின் ஒலி மரபுகளையும் பொருத்துக

A) மாடு – 1. கத்தும்

B) கரடி – 2. கதறும்

C) சிங்கம் = 3. உருமும்

D) புலி – 4. முழங்கும்

a) 2 1 3 4

*b) 2 1 4 3

c) 1 2 3 4

d) 1 2 4 3

3) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

       இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”

இக்கூற்று யாருடையது

a) பாரதியார்

b) திரு. வி. க.

*d) பாரதிதாசன்

d) நாமக்கல் கவிஞர்

4) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : செலவு என்பது குற்றியலுகரம் இல்லை

காரணம் : வ எனும் எழுத்தைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் தமிழில் இல்லை

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

*b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

5) ஆடு முதலான 12 ராசிகள், மற்றும் விண்மீன்கள் வரையப்பட்டுள்ளதாக எந்த நூலில் குறிப்பிடப்படுகிறது?

A. மதுரைக்காஞ்சி.

*b. நெடுநல்வாடை.

C. குறிஞ்சிப்பாட்டு

D. முல்லைப்பாட்டு

6) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1. குற்றியலுகரம் உரைநடையில் இல்லை

2. குற்றியலுகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

3. குற்றியலிகரம் உரைநடையில் இல்லை

4. குற்றியலிகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

a) 1 2 சரி

*b) 3 4 சரி

c) 1 3 சரி

d) 2 4 சரி

7) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) கொடிமுல்லை

*b) தமிழச்சியின் கத்தி

c) தொடுவானம்

d) எழிலோவியம்

8) ஓடை எனும் கவிதை எந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

a) கொடிமுல்லை

*b) தொடுவானம்

c) கனிச்சாறு

d) அமுதும் தேனும்

9) கிளிக்கண்ணி என்பது

a) இரண்டு சீர்களால் தொடுக்கப்படுவது

*b) இரண்டு அடிகளால் தொடுக்கப்படுவது

c) இரண்டு பாக்களால் தொடுக்கப்படுவது

d) இரண்டு சீர்களும் இரண்டு அடிகளும் அமையப்பெறுவது

10) ஜாதவ்பயெங் அவர்களுக்கு வனமகன் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது ?

a) கௌஹாத்தி பல்கலைக்கழகம்

b) மும்பைப் பல்கலைக்கழகம்

c) சென்னைப் பல்கலைக்கழகம்

*d) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

11) தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பது ஓவியம் என்ற பெயரில் குறிப்பிடப்படும் நூல்கள் யாவை?

A. அகநானூறு மற்றும் புறநானூறு

B. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை

*c. பரிபாடல் மற்றும் குறுந்தொகை

D. நற்றிணை மற்றும் ஐங்குறுநூறு

12) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : ஜாதவ்பயெங் இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுகிறார்

காரணம்; அவர் உருவாக்கிய காடு பிரம்மபுத்திராவிற்கு அருகே உள்ள மணற்பகுதியில் அமைந்துள்ளது

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

13) தவறான கூற்றைக் கண்டறிக

a) ஔகாரக்குறுக்கம் முதல், இடை மற்றும் இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் வரும்

*b) ஔகாரக் குறுக்கம் இறுதியில் மட்டும் வராது

c)ஐகார மற்றும் ஔகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

d) இவை இரண்டும் சார்பெழுத்துக்களில் அடங்குவன

14) “ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி”

இவ்வடியில் சென்னி என்ற சொல்லின் பொருள் என்ன

a) சோழ அரசன்

b) கலங்கரைவிளக்கம்

c) தூண்

*d) உச்சி

15) கீழ்வரும் கூற்றுகளில் தவறானது எது 

1. பெரும்பாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்

2. இதன் பாட்டுடை்த்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

3. இது 500 அடிகளைக் கொண்ட நூலாகும்.

*4. மதுரைக்காஞ்சி கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் மற்றொரு நூலாகும்

16) “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்”

இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது

a) பெரும்பாணாற்றுப்படை

*b) அகநானூறு

c) தொல்காப்பியம்

d) பதிற்றுப்பத்து

17) கப்பல் கட்டுவோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்

a) சுக்கான்

b) மீகான்

*c) கம்மியர்

d) கொல்லர்

18) தொல்காப்பியர் “முன்னீர் வழக்கம்” என்று குறிப்பிடுவது

a) கடலில் முத்துக்குளி்த்தல்

b) முக்கடல்களின் சங்கமம்

*c) கடற்பயணம் செய்தல்

d) ஏற்றுமதி இறக்குமதி செய்தல்

19) பூம்புகாரில் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட செய்தி எந்நூலில் இடம்பெற்றுள்ளது

a) அகநானூறு

b) பதிற்றுப்பத்து

c) மதுரைக்காஞ்சி

*d) பட்டினப்பாலை

20) தமிழரின் கப்பல் கட்டும் கலையை வியந்து பாராட்டியவர் யார்

a) பெரிபுலஸ்

b) யுவான்சுவாங்

*c) மார்கோபோலோ

d) வாக்கர்

21) அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று அழைக்கப்படும் ஜூல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சார்ந்தவர்

a) இந்தியா

b) ரஸ்யா

c) ஜெர்மனி

*d) பிரான்சு

22) நால்வகைச் சொற்களில் இலக்கியங்களில் மட்டும் காணப்படும் சொல்வகை எது

a) இயற்சொல்

*b) திரிசொல்

c) திசைச்சொல்

d) வடசொல்

23) “ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட” என்ற பாடலின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்

a) குமர குருபரர்

b) ஔவையார்

*c) பாரதிதாசன்

d) பாரதியார்

24) நீதிநெறி விளக்கம் எத்தனை பாடல்களைக் கொண்டது

a) 31

*b) 102

c) 225

d) 100

25) “திருக்குறளில் நகைச்சுவை” என்பது யாருடைய நூல்

a) குன்றக்குடி அடிகளார்

b) நாமக்கல் கவிஞர்

*c) முனுசாமியார்

d) திரு. வி. க.

26) நூலையும் நூலாசிரியர்களையும் பொருத்துக

A) தண்ணீர் – 1. சுப்ர பாரதி மணியன்

B) தண்ணீர் தண்ணீர் – 2. அசோகமித்திரன்

C) தண்ணீர் தேசம் – 3. கோமல் சாமிநாதன்

D) தண்ணீர் யுத்தம் – 4. வைரமுத்து

a) 2 1 4 3

*b) 2 3 4 1

c) 2 4 3 1

d) 3 1 4 2

27) ஹிட்லரை கடிதம் மூலம் மன்னிப்பு கேட்க செய்தவர் யார்?

A. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

B. ஜான்சிராணி லக்ஷ்மிபாய்.

C. மோகன் சிங்.

*d. செண்பகராமன்

28) ஓரெழுத்து ஒருமொழிகளையும் பொருளையும் பொருத்துக

A) ஏ – 1. மேகம்

B) சே – 2. தெய்வம்

C) பே – 3. அம்பு

D) தே – 4. உயர்வு

a) 2 4 1 3

b) 4 3 1 2

c) 3 4 2 1

*d) 3 4 1 2

29) தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?

*a. மதுரை

B. தூத்துக்குடி

C. சென்னை.

D. கன்னியாகுமரி

30) பகுபதம் எத்தனை வகைப்படும்

a) 4

*b) 6

c) 2

d) 8

31) பொருந்தாத ஒன்றைக் காண்க

a) வெள்ளை ரோஜா

b) மண்வாசல்

c) பெய்து பழகிய மேகம்

*d) கதை சொல்லும் கலை

32) நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக

A. சகலகலாவல்லி மாலை – 1. குமரகுருபரர்

B. சரஸ்வதிமாலை – 2. வரதன்

C. புறப்பொருள் வெண்பா மாலை – 3. ஐயனார் இதனார்

D. மலரும் மாலையும் – 4. கவிமணி

*a) 1 2 3 4

b)  2 1 3 4

c) 1 2 4 3

d) 2 1 4 3

33) குணமாலை யானையைக் கண்டு அஞ்சிய ஓவியம் எதில் வரையப்பட்டுள்ளது

a) பாறை

b) தந்தம்

*c) துணி

d) கண்ணாடி

34) ஓவியத்தைப்பற்றி அறிந்தோர் அதனைப்பற்றி அறியாதோருக்கு விளக்கிய செய்தி இடம்பெறும் நூல் எது

a) பதிற்றுப்பத்து

b) அகநானூறு

*c) பரிபாடல்

d) நற்றிணை

35) “வண்கீரை” இலக்கணக் குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) வேற்றுமைத்தொகை

*c) பண்புத்தொகை

d) அன்மொழித்தொகை

36) மதுரைத் தமிழ்ச்சங்கம் எப்போது திறக்கப்பட்டது

a) 2000

b) 1942

c) 1122

*d) 2016

37) தொழிற்பெயரின் வகைகள் எத்தனை

a) 2

*b) 3

c) 4

d) 5

38) தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர் யார்?

A. பூரிக்கோ

B. பன்னாடு தந்த பாண்டியன் உக்கிர பெருவழுதி.

*c. சந்திரசேகர கவிராச பண்டிதர்

D. மேற்கூறிய எவருமில்லை.

39) கீழ்க்காண்பனவற்றுள் தொழிற்பெயர் விகுதி அல்லாதது எது

a) அல்

b) தல்

c) அம்

*d) அன்

40) முன்றுறை அரையனாரின் காலம் எது

*a) கி. பி. நான்காம் நூற்றாண்டு

b) கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

c) கி. பி.  மூன்றாம் நூற்றாண்டு

d) கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு

41) தவறான கூற்றைத் தேர்ந்தெடு

1. வயலும் வாழ்வும் என்னும் நாட்டுப்புறப் பாடல் மலையருவி என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

2. மலையருவி நூலின் தொகுப்பாசிரியர் கி. வ. ஜெகந்நாதன்

a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

*c) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி

d) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு

42) “திக்கெல்லாம் புகழுரும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியைப்பற்றிக் கூறுபவர் யார்

a) அப்பர்

b) மாணிக்கவாசகர்

c) சுந்தரர்

*d) சம்பந்தர்

43) ராமானுஜர் அறிஞராக இல்லாவிட்டாலும் அவர் குறைந்த பட்சம் ஜாகோபி என்று கூறியவர் யார்?

A. ஆய்லர்

*b. லிட்டில் வுட்.

C. ஜாக்கோபி

D. இந்திரா காந்தி.

44) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  திருநெல்வேலிக்கு முற்காலப் பெயர் வேணுவனம்

காரணம் : வேணுவனம் என்ற சொல்லுக்கு நெற்காடு என்று பொருள்

a) கூற்று காரணம் இரண்டும் சரி

b) கூற்று காரணம் இரண்டும் தவறு

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

45) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a) திருநெல்வேலி உலா

*b) குற்றாலக் குறவஞ்சி

c) மதுரைக் கலம்பகம்

d) மேற்கண்ட எதுவும் இல்லை

46) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது

காரணம் : பாளையங்கோட்டையில் கல்வி நிலையங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

47) கீழ்வரும் பெயர்களுள் ரசிகமணியின் சிறப்புப் பெயரல்லாதது எது

a) தமிழிசைக் காவலர்

b)  வளர்தமிழ் ஆர்வலர்

c) குற்றால முனிவர்

*d) செந்தமிழ் அந்தணர்

48) கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நாமக்கல் கவிஞரின் படைப்பு அல்லாதது எது

a) மலைக்கள்ளன்

b) சங்கொலி

*c) என் சரித்திரம்

d) நாமக்கல் கவிஞர் பாடல்கள்

49) குற்றியலுகரச் சொற்களையும் அவற்றின் வகைகளையும் பொருத்துக

a. பாக்கு – 1. இடைத்தொடர்

b. காடு – 2. வன்தொடர்

c. உலகு – 3. நெடில்தொடர்

d. மூழ்கு – 4. உயிர்த்தொடர்

*a) 2 3 4 1

b) 2 4 3 1

c) 1 2 3 4

d) 4 3 2 1

50) கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் காடு என்ற பொருள் தராத சொல் எது

a) அடவி

b) புரவு

*c) பவ்வம்

d) இரும்பு

51) முதுமொழிக்காஞ்சி என்னும் நூலில் உள்ள அதிகாரங்கள், மற்றும் பாடல்களின் எண்ணிக்கை யாவை?

A. 15, மற்றும் 150.

B. 20, மற்றும் 200

C. 8 மற்றும் 80.

*d. 10 மற்றும் 100

52) “முள் + தீது” என்பதைச்  சேர்த்தெழுதக் கிடைப்பது

*a) முஃடீது

b) முஃதீது

c) முள்தீது

d) முள்ளீது

53) சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பான பிசிராந்தையார் என்னும் நூல் ஒரு

a) கவிதைத்தொகுப்பு

b) கட்டுரைத்தொகுப்பு

*c) நாடகம்

d) புதினம்

54) தேனரசன் கவிதை எழுதாத இதழ் எது

a) தென்றல்

b) குயில்

c) வானம்பாடி

*d) கனவு

55) நூலகங்களையும் அவை உருவாக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக

A. கன்னிமாரா நூலகம் – 1. 1896

B. உ. வே. சா. நூலகம் – 2. 1942

C. சரஸ்வதிமஹால் நூலகம் – 3. 1122

D. கீழ்த்திசை நூலகம் – 4. 1869

*a) 1 2 3 4

b) 1 3 2 4

c) 2 3 4 1

d) 2 1 4 3

56) “காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது”

இவ்வடியில் வெளிப்படும் அணி எது

a) உவமை அணி

b) எடுத்துக்காட்டு உவமை அணி

*c) இல்பொருள் உவமை அணி

d) உருவக அணி

57) சரியான கூற்று/கூற்றுகளைக் கண்டறிக

1. காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர் ஆவார்

2. இவர் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியு்ளார்

3. அவ்வொரு பாடல் அகநானூற்றில் உள்ளது

*a) 1 2 சரி

b) 2 3 சரி

c) 1 3 சரி

d) 1 2 3 சரி

58) “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகலையும் உருவாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி”

என்று முத்துராமலிங்கரைப் புகழ்ந்தவர் யார்

a) அண்ணா

*b) பெரியார்

c) சி. டி. ராமசாமி

d) காமராசர்

59) மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் முத்துராமலிங்கர்  யாரோடு சேர்ந்து போராடினார்

a) பெரியார்

b) ஜார்ஜ் ஜோசப்

*c) வைத்தியநாதர்

d) அண்ணா

60) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  ரா. பி. சேதுப்பிள்ளை சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுகிறார்

காரணம் : செய்யுளுக்கே உரிய மோனை, எதுகையை உரைநடைக்குக் கொண்டுவந்தவர்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

61) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

*a. கால்டுவெல்

B. மாக்ஸ்முல்லர்

C. சா, அகத்தியலிங்கம்.

D. ஈராஸ் பாதிரியார்

62) ரா. பி. சே. வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது

a) தமிழ் விருந்து

*b) தமிழின்பம்

c) ஆற்றங்கரையினிலே

d) கடற்கரையினிலே

63) பொருந்தாததைக் கண்டறிக

a) இடக்கரடக்கல்

b) மங்கலம்

c) குழூஉக்குறி

*d) மரூு

64) மதுரையின் பழைய பெயர் என்ன?

A. மதுரா

*b. மதிரை

C. மதுரா

D. மருதை.

65) பொருந்தாத இணையைக் கண்டறி

a) மையல் – முதற்போலி

b) அமைச்சு – இடைப்போலி

c) அறன் – கடைப்போலி

*d) பத்து – முற்றுப்போலி

66) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1. பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

2. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்

3. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

4. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் மாமல்லபுரம்

a) 1 2 4 சரி

b) 2 3 4 சரி

c) 1 2 3 சரி

*d) 1 2 3 4 சரி

67) “இடர்ஆழி” இலக்கணக்குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) உம்மைத்தொகை

*c) உருவகம்

d) வேற்றுமைத்தொகை

68) அறக்கதிர் ஈன எதனை வித்தாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்

a) இன்சொல்

*b) ஈதல்

c) வாய்மை

d) அன்பு

69) “உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்”

இக்கூற்று யாருடையது

a) பாரதியார்

*b) பாரதிதாசன்

c) திருவள்ளுவர்

d) குன்றக்குடி அடிகளார்

70) “பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்”

இக்குறளில் பயின்றுவரும் அணி எது

a) உவமை அணி

b) உருவக அணி

*c) எடுத்துக்காட்டு உவமை அணி

d) ஏகதேச உருவக அணி

71) ஜென் என்ற சொல்லிற்கான தமிழ்ப் பொருள் என்ன

a) வழிகாட்டு

*b) தியாகம் செய்

c) விட்டுக்கொடு

d) விருந்தோம்பல்

72) ” உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

a) இணை எதுகை

b) பொழிப்பு எதுகை

*c) ஒரூஉ எதுகை

d) முற்று எதுகை

73) குமரிக் கண்டத்தில் தான் தமிழ் மொழி உருவானது என குறிப்பிடும் நூல் யாவை?

A. தொல்காப்பியம்

*b. தண்டி அலங்காரம்.

C. புறப்பொருள் வெண்பாமாலை

D. நன்னூல்

74) “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அறன்”

இக்குறளில் பயின்றுவரும் மோனை எது

a) இணை மோனை

b) பொழிப்பு மோனை

*c) கூழை மோனை

d) முற்று மோனை

75) “வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!”

இவ்வடிகள் யாருடையவை

a) சே. பிருந்தா

*b) கண்ணதாசன்

c) பாரதிதாசன்

d) வெண்ணிலா

76) தன்னை அறிதல் என்னும் கவிதை சே. பிருந்தாவின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

a) வீடு முழுக்க வானம்

b) மழை பற்றிய பகிர்தல்கள்

*c) மகளுக்குச் சொன்ன கதை

d) மலைப்பொழிவு

77) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன

a) முகமது இசுலாம்

b) முகமது அலி

c) முகமது நபி

*d) முகமது இசுமாயில்

78) தமிழ் அழகான சித்திர வேலைப்பாட்டால் அமைந்த வெள்ளித் தட்டு திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் தமிழ் என்னை ஈர்த்தது.குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் யார்?

A. கால்டுவெல்

B. ஈராஸ் பாதிரியார்

C. சா அகத்தியலிங்கம்.

*d. கிரவுல்

79) “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக் கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்”

என்று காயிதே மில்லத் அவர்களைப் புகழ்ந்தவர் யார்

a) கருணாநிதி

b) பெரியார்

c) எம். ஜி. ஆர்

*d) அண்ணா

80) இந்தியாவின் மகள், நவசக்தி, என்றும் இந்தியாவின் மகன், தேச பக்தன், என்றும் தனது இதழ்களை குறிப்பிட்டவர் யார்?

A. தேவநேய பாவாணர்

B. மகாத்மா காந்தி.

C. இளங்குமரனார்

*d. திரு வி கல்யாணசுந்தரனார்

81) “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான்”

என்று கூறியவர் யார்

a) அண்ணா

b) பெரியார்

c) ம. பொ. சி.

*d) காயிதே மில்லத்

82) கல்லும் மலையும் குதித்து வந்தேன், பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A. வாணிதாசன்

B. கண்ணதாசன்

*c. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.

D. முடியரசன்.

83) காயிதே மில்லத் என்பது

a) உருதுச் சொல்

b) ஹிந்திச் சொல்

*c) அரபுச் சொல்

d) தமிழ்ச் சொல்

84) பாவண்ணன் எந்த மொழியில் உள்ள  நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

a) மலையாளம்

*b) கன்னடம்

c) தெலுங்கு

d) உருது

85) “டிசம்பர் சூடினாள்”

இது எவ்வகை ஆகுபெயர்

a) பொருளாகு பெயர்

*b) காலவாகு பெயர்

c) சினையாகு பெயர்

d) இடவாகு பெயர்

86) ஆலன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலை மனம் போல் வாழ்வு என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

a) டி. கே. சி.

b) ம. போ. சி.

*c) வ. உ. சி.

d) கவிமணி

87) தமிழில் எத்தனை வகைக் குறுக்கங்கள் உள்ளன

a) 2

b) 3

*c) 4

d) 5

88) தக்சின சித்திரம் என்னும் ஓவிய நூலின் ஆசிரியர் யார்?

*a. முதலாம் மகேந்திரவர்மன்.

B. மூன்றாம் நந்திவர்மன்.

C. முதலாம் நரசிம்ம வர்மன்.

D. ராஜசிம்மன்

89) மாட ஒள்ளெரி என்ற சொல்லின் பொருள் என்ன

a) உயர்ந்த மாடம்

b) மாளிகை

c) கப்பல்

*d) கலங்கரை விளக்கம்

90)  மோசிக கீரனார் பாடல்கள் இடம்பெறாத நூல் எவை?

A. புறநானூறு.

B. நற்றிணை.

*C. ஐங்குறுநூறு.

D. அகநானூறு.

91) ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் துன்னரரை சாடும் எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?

a. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.

*b. வரதன்.

C. கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை.

D. சந்திரசேகர கவிராஜ பண்டிதர்.

92) கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என பாடியவர் யார்?

*a. அவ்வையார்.

B. அசலாம்பிகை அம்மையார்.

C. ஒட்டக்கூத்தர்.

D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.

93) யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல் திரட்டை தொகுத்தார்?

A. ராமநாதபுர சேதுபதி.

*b. ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி.

C.  நாயக்க மன்னர்கள்.

D. கிழவன் சேதுபதி.

94) யாருடைய ஆங்கிலப் பேச்சு வெள்ளியைப் போல் ஒளிர்வித்தாலும் அவரின் தமிழ் பேச்சு தங்கம் போல் ஒளி வீசுகிறது என மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.

A. ரவீந்திரநாத் தாகூர்.

B. முன்ஷிராம்.

C. சிதம்பரனார்.

*d. மதன் மோகன் மாளவியா.

95)  குமரகுருபரர் இயற்றாத நூல் எது?

A. நீதி நெறி விளக்கம்.

*b. நன்னெறி.

C. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்.

D. திருவாரூர் நான்மணிமாலை.

96) தலை சீவி பள்ளிக்கு ஓடு நல் தங்கப்பதுமையாம் தோழர்களோடு என்னும் பாடலை இயற்றியவர் யார்?

*a. வாணிதாசன்.

B. கண்ணதாசன்.

C. பாரதிதாசன்.

D. பாரதியார்.

97) நீங்கள் கடவுளின் குழந்தைகள் சிங்கங்களே எழுந்து வாருங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள் என இளைஞர்களை நோக்கி முழக்கமிட்டவர் யார்?

A. முத்துராமலிங்க தேவர்.

B. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

*c. விவேகானந்தர்.

D. ராமகிருஷ்ண பரமஹம்சர்.

98) நெத்தி வேர்வையை சிந்தினோமே முத்து முத்தாக அது நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்து கொத்தாக எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர், மற்றும் அப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

A. வாணிதாசன் கொடி முல்லை.

*b. மருதகாசி ஏர்முனை.

C. பெருஞ்சித்திரனார் கொய்யா கனி.

D. மேற்கூறிய எதுவும் இல்லை.

99)  எந்த மாவட்டத்தின் பேச்சு வழக்கு முக்கூடற்பள்ளு என்னும் நூலில் காணப்படுகிறது.

A. கோயம்புத்தூர்.

B. மதுரை.

C. கன்னியாகுமரி.

*d. திருநெல்வேலி.

100) உழத்திப் பாட்டு என்று அழைக்கப்படுவது எது

*A) முக்கூடற்பள்ளு

B) ஏர்முனை

C) ஏறெழுவது

D) பழமொழி

1. வில்சன் , மதன் , குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடும் பாதையில் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்க புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாக சுற்றத் தொடங்கினால் அவர்கள் மீண்டும் எப்பொழுது தொடக்கப் புள்ளியில் ஒன்றாக சந்திப்பார்கள்?

*a. 8 முப

b. 8 பிப

c. 5 பிப

d.9 முப

2.இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி ______________எனில் அவை சார் பகா எண்கள் எனப்படும்.

A) 2

B) 3

C) 0

*D) 1

3. பள்ளியில், ஏழாம் வகுப்பில் 18 மாணவர்களும், எட்டாம் வகுப்பில் 27 மாணவர்களும் உள்ளனர். ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் அணிகளாகப் பிரிக்கப்பட்டு வரவிருக்கும் விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் வென்ற அணிகள் இறுதிப் போட்டியில் ஒருவருக்கொருவர் எதிர் கொள்ள வேண்டும் எனில், ஒவ்வொரு அணியிலும் ஒருவர் கூட மீதமில்லாமல் விளையாடக்கூடிய மிகப் பெரிய அணியின் எண்ணிக்கை என்ன?

A) 54

B) 18

*C) 9

D) 45

4. பதினோறாவது பிபனோசி எண் என்ன?

A. 55

B. 77

*C. 89

D. 144

5. மீ.பொ.ம. (LCM) காண்க : 2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x 11

*a. 2 x 3 x 5 x 7 x 11

b. 2 x 32 x 52 x 72 x 11

c. 3 x 5 x 7

d. மேற்கண்ட எதுவுமில்லை

6.16 x²y², 24 xy²z இவற்றின் மீ.பொ.ம (LCM) காண்க.

a. 8 xy²

b. 8 xy²z

*c. 48 x²y²z

d. 48 xy²z

7.மூன்று எண்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம. (LCM) 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ (HCF)

*a. 40

b. 80

c. 120

d. 200

8.இரு எண்களின் விகிதம் 3:4 மற்றும் அவற்றின் HCF-4 எனில் அவ்வெண்களின் LCM?

a. 12

b. 16

c. 24

*d. 48

9.2/3, 3/5, 4/7 மற்றும் 9/13 -ன் மீ .பொ. ம-வை (LCM) கண்டுபிடி?

a. 1/36

b. 1/1365

c. 12/455

*d. 36

10.4/9, 2/5, 6/8, 2/5- ன் மீ.பெ.வ என்ன?

*a. 1/180

b. 2/181

c. 2/350

d. 1/142

11.3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம. 9 எனில் அவற்றின் மீ.பெ.வ.

a. 1

*b. 3.

c. 9

d. 27

12.இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன?

(A) 1001

(B) 101

*(C) 91

(D) 6

13. மீ.பொ.வ (HCF) காண்க: 144, 120

A) 20

B) 12

*C) 24

D) 22

14. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் எத்தனையாக இருக்கும் ?

a) 170 பக்கங்கள்

b) 180 பக்கங்கள்

*c) 175 பக்கங்கள்

d) 185 பக்கங்கள்

15.12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் ?

a) 16

*b) 24

c) 26

d) 54

16. A, B, C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பார்கள். A, C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 2 நாட்களுக்கு செய்தனர். பின்னர் C விலகுகிறார். B சேருகின்றார் எனில் A, B ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

a) 1

*b) 3

c) 4

d) 5

17. 100 மீ நீளமுள்ள ஒரு ரயிலானது மணிக்கு 30 கி.மீ/மணி வேகத்தில் செல்கிறது எனில் அந்த ரயிலானது ஒரு மின் கம்பத்தை கடக்கும் நேரம் என்ன?

*a) 12 நொடி

b) 15 நொடி

c) 9 நொடி

d) 10 நொடி.

18.ஓர் வேலையின் ஒரு பகுதியை A என்பவர் 10 நாட்களிலும் B என்பவர் 15 நாட்களிலும் செய்வர். இருவரும் 5 நாட்கள் வேலை செய்தனர். மீதி வேலையை C என்பவர் 2 நாட்களில் செய்து முடித்தார். மொத்த வேலைக்குரிய கூலி ரூ. 5,000 எனில் B மற்றும் C-யின் தினக்கூலி

a) ரூ. 150

*b) ரூ. 225.

c) ரூ. 250

d) ரூ. 300

19. 12 மனிதர்களும் 16 மாணவர்களும் சேர்ந்து ஒரு வேலையை 5 நாட்களில் முடிக்கின்றனர். 13 மனிதர்களும், 24 மாணவர்களும் சேர்ந்து அவ்வேலையை 4 நாட்களில் முடித்தால், தினமும் மனிதனும் மாணவரும் செய்யும் வேலையின் விகிதத்தை கூறு.

*a) 2:1

b) 3:19

c) 3:2

d) 5:4

20.7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

a) 25 நாட்கள்

*b) 28 நாட்கள்

c) 20 நாட்கள்

d) 45 நாட்கள்

21.A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்.

*a) 10 நாட்கள்

b) 12 நாட்கள்

c) 14 நாட்கள்

d) 15 நாட்கள்

*b) 9 நாட்கள்

22.9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?

a) 1 நாள்

c) 18 நாட்கள்

d) 12 நாட்கள்

23.A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்

a) 9 நாட்கள்

b) 11 நாட்கள்

*c) 12 நாட்கள்

d) 13 நாட்கள்

23.ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்

a) 45 நிமிடங்கள்

b) 50 நிமிடங்கள்

*c) 60 நிமிடங்கள்

d) 70 நிமிடங்கள்

24.ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை, இரண்டு மணிக்கு இருமுறை என்ற முறையில் மணி ஒலிக்கிறது எனில் ஒரு நாளில் மொத்தம் எத்தனை முறை மணி ஒலிக்கும்?

A)78.

*B)156.

C)24.

D)48.

25.15²+16²+….28² கூடுதல் காண்க?

A) 9966.

B)9696.

C)6969.

*D)6699.