*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கேற்பப் பொருத்துக
இளமைக்கு – தோள்
உயர்வுக்கு – தேன்
அறிவுக்கு – வாண்
அசதிக்கு – பால்
*A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 3 4 2 1
D) 3 4 1 2
2) சரியானவற்றைத் தேர்ந்தெடு.
2.1 ) திருவருட்பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதூரில் பிறந்தார்.
2.2 ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்பது ராமலிங்க அடிகளாரின் கூற்று.
A) ஒன்று மட்டும் சரி.
*B) ஒன்று மற்றும் இரண்டு சரி.
C) இரண்டு மட்டும் சரி.
D) ஒன்று மற்றும் இரண்டு தவறு.
3) பாரதியாரின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் யார்?
A) கனக சபை
*B) கனக சுப்புரத்தினம்
C) சுரதா
D) துரை மாணிக்கம்
4) உ வே சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாறு எந்தப் பெயரில் வெளியிடப்பட்டது?
A) எனது போராட்டம்
B) உ.வே. சா சுயசரிதை
*C) என் சரிதம்
D) வேங்கடரத்தினம் வாழ்க்கை வரலாறு
5) “தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என்னெஞ்சம் இனிக்கும் இனிக்கும்”
என்று பாடியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
*C) காசி ஆனந்தன்
D) பெருஞ்சித்திரனார்
6) 10 little fingers என்ற நூலின் ஆசிரியர் யார்?
*A) அரவிந்த் குப்தா
B) ராமகிருஷ்ணன்
C) ஜான் மில்டன்
D) ரவீந்திரநாத் தாகூர்
7) தமிழ்நிலம் என்பது
A) பெருஞ்சித்திரனார் எழுதிய கவிதைத்தொகுப்பு
B) பெருஞ்சித்திரனார் எழுதிய உரைநடைத் தொகுப்பு
C) பெருஞ்சித்திரனார் வெளியிட்ட திறனாய்வு நூல்
*D) பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்
8) எட்டு + திசை என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
A) எட்டுதிசை
*B) எட்டுத்திசை
C) எட்டியிசை
D) எட்டித்திசை
9) “என்று பிறந்தவ ளென்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”
என்று தமிழ்த்தாயின் தொண்மையைக் கூறுபவர் யார்?
*A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) கவிஞர் அறிவுமதி
D) காசி ஆனந்தன்
10) ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொற்களை பொருத்துக.
A) platform 1) நெகிழி.
B) sweet stall 2) நடைமேடை.
C) internet 3) இனிப்பகம்.
D) plastic 4) இணையம்.
A) 3,4,1,2
B) 2,1,4,3
C) 2,3,1,4
*D) 2,3,4,1
11 “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்”
என்று கபிலரால் புகழப்படும் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) தொல்காப்பியம்
*D) திருக்குறள்
12) சிலப்பதிகாரம் வாழ்த்துவனவற்றின் சரியான வரிசை எது?
*A) திங்கள், ஞாயிறு, மழை
B) ஞாயிறு, திங்கள், மழை
C) திங்கள், மழை, ஞாயிறு
D) திங்கள், ஞாயிறு மழை
13) கீற்றும் இளநீரும் என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடு
A) உம்மைத்தொகை
*B) எண்ணும்மை
C) முற்றும்மை
D) உவமைத்தொகை
14) முயற்சி திருவினையாக்கும் என்று கூறியவர் யார்?
A) *திருவள்ளுவர்
B) கம்பர்
C) தாராபாரதி
D) நாமக்கல் கவிஞர்
15) ஆய்த எழுத்து பற்றிய கூற்றுக்களில் தவறானது எது?
A) இது சார்பெழுத்துக்களில் ஒன்றாகும்
B) ஒரு சொல்லில், ஆய்த எழுத்தைத் தொடர்ந்து மெல்லினம், இடையினம் ஆகியவை வாரா
C) ஒருசொல்லில் நெடிலெழுத்தைத் தொடர்ந்து ஆய்தம் வராது
*D) ஆய்த எழுத்திற்கான மாத்திரை கால் மாத்திரையாகும்.
16) (உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரின் செங்கோலை நடத்தும் கோல்) என பாடியவர் யார்?
A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
B) *கம்பர்
C) மருதகாசி
D) நம்மாழ்வார்
17) விரிநீர் என்பதன் இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
A) உவமைத்தொகை
B) உம்மைத்தொகை
*C) வினைத்தொகை
D) வேற்றுமைத்தொகை
18) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று; சார்பெழுத்துக்கள் தனித்து இயங்காது
காரணம்; எனவே,இவை சார்பெழுத்துக்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை விளக்கவில்லை.
C) கூற்று சரி; காரணம் தவறு
D) கூற்று தவறு; காரணம் தவறு
19) அப்துல் கலாம் அவர்களுக்குப் பிடித்த தமிழ் நூல் எது?
A) திருப்புகழ்
*B) திருக்குறள்
C) கலிங்கத்துப்பரணி
D) விளக்குகள் பல தந்த ஒளி
20) கீழுள்ள எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வரும் எழுத்து எது?
A) ர
B) ல
C) ட
*D) ந.
21) “பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேணும்”
இப்பாடல் வரிகள் யாருடையவை?
*A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
B) மருதகாசி
C) கண்ணதாசன்
D) புலமைப்பித்தன்
22) காமராசரைக் கல்விக்கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
A) ராஜாஜி
*B) பெரியார்
C) அறிஞர் அண்ணா
D) திரு. வி. க.
23) கீழ்க்காண்பனவற்றுள் தவறானதைக் கண்டறிக?
A) கருப்பு காந்தி
B) தலைவர்களை உருவாக்குபவர்
C) ஏழைப்பங்காளர்
*D) மூதறிஞர்
24) காமராசர் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டவற்றுள் தவறானதைக் காண்க
*A) மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
B) கட்டாயக் கல்விச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
C) மாணவர்கள் பசியின்றிப் படிக்கச் சத்துணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
D) மாணவர்கள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்கச் சீருடைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
25) மின்னார் என்பதன் பொருள் என்ன?
A) *பெண்கள்
B) தேவர்
C) சித்தர்
D) இளையோர்
26) ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?
A) சென்னை
*B) சீனா
C) மும்பை
D) நியூயார்க்
27) கீழ்வரும் கூற்றுக்களில் சரியானவற்றை்த் தேருக
1. நூலகத்தின் தந்தை திரு. எஸ். ஆர். ரங்கநாதன் ஆவார்
2. சிறந்த நூலகருக்கு எஸ். ஆர்.. ரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B)2 மட்டும் சரி
*C) 1, 2 சரி
D) 1, 2 தவறு
28) இன எழுத்துக்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
மெல்லின எழுத்துக்கள் வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும்
இடையின எழுத்துக்கள் ஆறும் ஒரே இனமாகும்
உயிரெழுத்துகளில் நெடிலுக்குக் குறிலும், குறிலுக்கு நெடிலும் இன எழுத்துக்களாகும்
ஆய்த எழுத்திற்கு இன எழுத்து இல்லை
A) 1, 2, 4 சரி
B) 1, 2, 3 சரி
C) 1, 3, 4 சரி
*D) 1, 2, 3 4 சரி
29) அறிஞர்கறின் பிறந்தநாளையும் அனுசரிக்கப்படும் சிறப்பு தினங்களையும் பொருத்துக
குழந்தைகள்தினம் – ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்
தேசிய இளைஞர்தினம் – நேரு பிறந்தநாள்
மாணவர்தினம் – விவேகானந்தர் பிறந்தநாள்
ஆசிரியர்தினம் – அப்துல்கலாம் பிறந்தநாள்
A) 2 1 3 4
B) 2 1 4 3
*C) 2 3 4 1
D) 2 3 1 4
30) ஆசாரக்கோவை கூறும் நல்லொழுக்கத்தை விதைக்கும் வினைகள் எத்தனை?
A) 3
B) 6
C) 5
*D) 8
31) பொருட்களையும் அவைசார்ந்த நாடுகளையும் பொருத்துக
முக்கனி – சோழநாடு
முத்தமிழ் – பாண்டியநாடு
முத்தேன் – சேரநாடு
*A) 1 2 3
B) 2 3 1
C) 1 3 2
D) 3 2 1
32) “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்”
இக்குறளில் பயின்றுவரும் மோனை எது?
A) முற்றுமோனை
B) மேற்கதுவாய் மோனை
*C) கீழ்க்கதுவாய் மோனை
D) இணைமோனை
33) திராவிட நாட்டின் வானம்பாடி எனப் புகழப்படுபவர் யார்?
A) வாணிதாசன்
*B) முடியரசன்
C) பெருஞ்சித்திரனார்
D) பாரதியார்
34) முடியரசனின் நானிலம் படைத்தவன் என்ற கவிதையில் இடம்பெறாத நிலம் எது?
A) குறிஞ்சி
B) முல்லை
*C) பாலை
D) நெய்தல்
35) (துன்பத்தை நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்) யார்?
A) உடுமலை நாராயண கவி
B) காளமேகப்புலவர்
C) மருதகாசி
D) *ராமச்சந்திர கவிராயர்
36) நெய்தல் நிலத்திற்குரிய பூ எது?
A) முல்லை
*B) தாழம்பூ
C) கொன்றை
D) செங்காந்தள்
37) பெருமை + வாணம் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது?
A) பெருமைவாணம்
B) பேர்வாணம்
*C) பெருவாணம்
D) பெருமானம்
38) பண்டைய மக்கள் நெல்லைக் கொடுத்து, அதற்குப்பதிலாக உப்பைப் பெற்றனர் என்ற செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
*A) நற்றிணை
B) குறுந்தொகை
C) அகநாநூறு
D) புறநாநூறு
39) வணிகர்களை, “நடுவுநின்ற நன்னெஞ்சினோர்”, என்று பாராட்டும் நூல் எது?
A) புறநாநூறு
B) அகநாநூறு
C) மதுரைக்காஞ்சி
*D) பட்டினப்பாலை
40) [அவ்வுருவம்], இது எவ்வகைச் சுட்டு?
*A) அகச்சுட்டு
B) புறச்சுட்டு
C) அண்மைச்சுட்டு
D) சுட்டுத்திரிபு
41) நாலடியாரின் பொருட்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
A) 23
B) *24
C) 25
D) 26
42) சொல்லின் முதலிலும், இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?
A) எ
B) யா
*C) ஏ
D) ஓ
43) வினாயெழுத்துக்கள் அடிப்படையில் வினா எத்தனை வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
*A) 2
B) 3
C) 4
D) 6
44) வாழ்க்கைக்கு வளம் தரும் மழையை வழிபடும் நோக்கில், அக்காலத்தில் இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்ட விழா எது?
A) ஆடிப்பெருக்கு
B) அறுவடைத்திருநாள்
C) உழவர்திருநாள்
*D) போகி
45) பொருந்தாததைக் கண்டறிக
A) அறுவடைத்திருநாள்
B) உழவர்த்திருநாள்
C) திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்
*D) திருவள்ளுவர் தினம்
46) தமிழில் எத்தனை மயங்கொலி எழுத்துக்கள் உள்ளன?
A) 6
B) 4
C) 5
*D) 8
47) விளை என்ற சொல்லின் பொருள் என்ன?
A) பொருளின் மதிப்பு
B) விரும்புதல்
*C) உண்டாக்குதல்
D) விளைபொருள்
48 காளிதாசரின் பாடல்கள் எதிரொலித்த இடமென தாரா பாரதி குறிப்பிடும் இடம் எது?
A) கங்கைக்கரை
*B) காவிரிக்கரை
C) வைகைக்கரை
D) யமுனைக்கரை
49) சரியான கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க
1. காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு முதன்முதலில் சென்னைக்கு வந்தார்.
2. காந்தியடிகள் தான் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு வருமாறு பாரதியாரை அழைத்தார்.
3. பாரதியாரைத் தமிழ்நாட்டின் சொத்து என்று ராஜாஜி கூறினார்.
4. பாரதியாரை இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகள் புகழ்ந்தார்.
A) 1 2 3 சரி
B) 1 2 4 சரி
*C) 1 3 4 சரி
D) 1 2 3 4 சரி
50) ஒன்று என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு, ஓர் ஆகிய சொற்கள் பற்றிய கூற்றுக்களை ஆய்க
1. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஒரு எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
2. உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லிற்கு முன் ஓர் எனும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1, 2 இரண்டும் சரி
*D) 1, 2 இரண்டும் தவறு
51) தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படும் நூல் எது?
A) திருக்குறள்
B) பாரதியார் பாடல்கள்
C) திருவாசகம்
*D) தாயுமானவர் பாடல்கள்
52) எஸ். ராமகிருஷ்ணனின் பாதம் எனும் சிறுகதை இடம்பெற்றுள்ள சிறுகதைத்தொகுப்பு எது?
A) உபபாண்டவம்
B) கால்முளைத்த கதைகள்
C) தேசாந்திரி
*D) தாவரங்களின் உரையாடல்
53) நாற்காலி என்பது எவ்வகைப் பெயர்?
A) இடுகுறிப் பொதுப்பெயர்
B) இடுகுறிச் சிறப்புப்பெயர்
C) காரணப் பொதுப்பெயர்
*D) காரணச் சிறப்புப் பெயர்
54) “பாட்டுக்கொரு புலவன்” என்று புகழப்படுபவர் யார்?
A) பாரதிதாசன்
B) *பாரதியார்
C) கவியோகி
D) தாராபாரதி
55) “ஆற்றுவா ராற்றல் இகழாமைப் போற்றுவார்
போற்றலு லெல்லாம் தலை”
இக்குறளில் பயின்றுவந்துள்ள எதுகை எது?
A) இணையெதுகை
B) பொழிப்பு எதுகை
C) மேற்கதுவாய் எதுகை
*D) கீழ்க்கதுவாய் எதுகை
56) தேசிக வினாயகம்பிள்ளை எவ்வளவு காலம் ஆசிரியர்ப்பணி செய்தார்?
A) 26 ஆண்டுகள்
*B) 36 ஆண்டுகள்
C) 26 ஆண்டுகள்
D) 6 ஆண்டுகள்
57) சரியான கூற்று/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1. ஆசியஜோதி என்பது ஒரு மொழிபெயர்ப்பு நூலாகும்.
2. இதனை மொழிபெயர்த்தவர் தேசிக வினாயகம்பிள்ளை.
3. இதன் மூலநூல் லிட்டன் பிரபுவின் [light of asia] ஆகும்.
*A) 1 2 சரி
B) 1 3 சரி
C) 2 3 சரி
D) 1 2 3 சரி
58) “வாழ்க்கை என்பது
நீ சாகும்வரை அல்ல
மற்றவர் மனதில்
நீ வாழும்வரை”
இது யாருடைய கூற்று?
A) காந்தி
B) புத்தர்
*C) அன்னை தெரசா
D) வள்ளலார்
59) கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
*A) குழந்தைகளைப் பாதுகாப்போம்
B) குழந்தைகளை நேசிப்போம்
C) குழந்தைகளை வளர்ப்போம்
D) குழந்தைகள் உதவி மையம்
60) செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
A) செந் + தமிழ்
B) செம் + தமிழ்
C) சென்மை + தமிழ்
*D) செம்மை + தமிழ்
61) சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
A) தொல்காப்பியம்
B) முல்லைப்பாட்டு
*C) நற்றிணை
D) பதிற்றுப்பத்து
62) வெண்குடை இலக்கணக்குறிப்பு தருக
A) வேற்றுமைத்தொகை
B) வினைத்தொகை
C) உவமைத்தொகை
*D) பண்புத்தொகை
63) தாவரங்களையும் அவற்றின் இலைப்பெயர்களையும் பொருத்துக
அருகு – கூந்தல்
வரகு – மடல்
சப்பாத்திக்கள்ளி – தாள்
கமுகு – கீரை
A) 1 2 3 4
*B) 4 3 2 1
C) 1 3 2 4
D) 4 2 3 1
64) கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் அவற்றின் மாத்திரை அளவுகளில் பொருந்தாத இணையைக் காண்க
1. குறில் – 1
2. நெடில் – 2
3. வல்லின மெய் – அரை
4. மெல்லின மெய் – கால்
A) 1 தவறு
B) 2 தவறு
C) 3 4 தவறு
*D) 4 தவறு
65) கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
கூற்று; “காணி நிலம் வேண்டும்” என்று தொடங்கும் பாடல் பாரதிதாசனின் படைப்பாகும்.
காரணம்; இப்பாடல் பாரதிதாசனின் கவிதைத் தொகுப்பு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி காரணம் தவறு
D) கூற்று தவறு காரணம் சரி
66) மனிதர்களுக்கு மருந்தென நெல்லை சு. முத்து கூறுவது எது?
*A) அனுபவம்
B) அறிவியல்
C) உண்மை
D) ஊக்கம்
67) கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படாத பொருள் எது?
A) கண்ணாடி
B) கற்பூரம்
*C) குதிரை
D) பட்டு
68) அறுவடைத்திருநாளின் பெயர்களையும் மாநிலங்களையும் பொருத்துக
உத்திரப் பிரதேசம் – உத்தராயண்
பஞ்சாப்- மகர சங்கராந்தி
குஜராத் – லோரி
A) 1 2 3
B) 2 1 3
*C) 2 3 1
D) 3 2 1
69) மா எனும் ஓரெழுத்து ஒருமொழி பொருள் தராத சொல்லைக் காண்க
A) அழகு
B) அறிவு
*C) அன்பு
D) அளவு
70) நீர்நிலைகளில் வாழக்கூடிய பறவைகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
A) கொக்கு
B) நாரை
C) *ராசாளிப் பருந்து
D) கரண்டி வாயன்
71) “நாமநீர் வேலி உலகிற்கு அவ் அளிபோல்”
இதில் அளி என்ற சொல்லின் பொருள் என்ன?
*A) கருணை
B) தேன்
C) வண்டு
D) ஒருவகை மரம்
72). சமைப்பதற்கு வைத்திருந்த சிறிதளவு அரிசியையும், முற்றத்திலிருந்த சிட்டுக்குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டு பட்டினியாக இருந்தவர் யார்?
A) வள்ளலார்
B) அன்னை தரசா
*C) பாரதியார்
D) சலீம் அலி
73) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
A) துரை மாணிக்கம்
B) துரைராசு
*C) இராதாகிருஷ்ணன்
D) வாணிதாசன்
74) சரியான கூற்றுகளைக் கண்டறிக
1. அமுதசுரபி என்பது ஆபுத்திரன் கையிலிருந்த பாத்திரமாகும்.
2. அமுதசுரபியின் சிறப்பை மணிமேகலைக்குக் கூறியவள் தீவத்திலகை
3. அமுதசுரபியில் முதலில் உணவிட்டவள் தீவத்திலகை.
4. மணிமேகலை, அமுதசுரபியைக்கொண்டு மணிப்பல்லவத்தீவிலிருந்தவர்களுக்கு உணவளித்தாள்.
*A) 1 2 சரி
B) 1 3 சரி
C) 1 4 சரி
D) 1 2 3 4 சரி
75) வேலுநாச்சியார் பற்றிய தவறான கூற்று எது/எவை?
1. வேலுநாச்சியார் ராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதியின் ஒரே மகளாவார்.
2. அவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.
3. வேலுநாச்சியாரின் படையில், பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் உடையாள்.
4. வேலுநாச்சியாரின் காலம் 1730 முதல் 1786 வரை.
*A) 1 2 சரி
B) 1 2 3 சரி
C) 1 2 4 சரி
D) 1 2 3 4 சரி
76) சொற்களையும் சொல் வகைகளையும் பொருத்துக
ஆ – வினைச்சொல்
வா – இடைச்சொல்
கு – உரிச்சொல்
மா – பெயர்ச்சொல்
A) 4 3 2 1
B) 1 2 3 4
*C) 4 1 2 3
D) 4 1 3 2
77) தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட நூல் எது?
A) தொல்காப்பியம்
*B) சிலப்பதிகாரம்
C) தேவாரம்
D) இறையனார் களவியல் உரை
78) “அன்பினில் இன்பம் காண்போம்;
அறத்தினில் நேர்மை காண்போம்;”
இப்பாடல் வரிகள் யாருடையது?
A) ராமலிங்க அடிகள்
*B) முத்தரையன்
C) பாரதியார்
D) முடியரசன்
79) ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி
இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது?
A) உயர்வு நவிற்சி அணி
*B) இயல்பு நவிற்சி அணி
C) உவமை அணி
D) இல்பொருள் உவமை அணி
80) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
1. சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
2. அவரது வாழ்க்கை வரலாறு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
3. சிட்டு்க்குருவி தினம் மார்ச் 20 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
A) 1 2 சரி
B) 1 3 சரி
C) 2 3 சரி
*D) 1 2 3 சரி
81) நெல்லை சு. முத்து அவர்களோடு தொடர்பில்லாதது எது?
A) சதீஸ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையம்
B) இஸ்ரோ
C) விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்
*D) நாசா
82) கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
கூற்று- ங எனும் எழுத்து சொல்லின் முதலெழுத்தாக வராது.
காரணம்- இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.
A) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
B) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
C) கூற்று சரி, காரணம் தவறு.
*D) கூற்று தவறு, காரணம் சரி.
83) கூற்று மற்றும் காரணங்களை ஆய்க
கூற்று- நாம் பிப்ரவரி 28 ஆம் நாளை அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்
காரணம்- சர் சி. வி. ராமன் அவர்களின் பிறந்தநாள் பிப்ரவரி 28 ஆகும்.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.
*C) கூற்று சரி, காரணம் தவறு.
D) கூற்று தவறு, காரணம் சரி.
84) சரியான கூற்றுகளைக் காண்க
1. ஆசாரக்கோவை பதினெண்மேல்க்கணக்கு நூல்களுள் ஒன்று
2. இதன் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
3. ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்று பொருள்
4. இந்நூல் நூறு ஆசிரியப்பாக்களைக் கொண்டது
A) 1 3 சரி
B) 2 4 சரி
C) 1 4 சரி
*D) 2 3 சரி
85) (மனைக்கு விளக்கம் மடவார் *மடவார் தனக்கு தகைசால் புதல்வர்)
கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிகளில் மடவார் என்பது எதைக் குறிக்கிறது?
A) வீடு
B) குழந்தை
C) *பெண்கள்
D) ஆண்கள்
86) உலக நூல்கள் அனைத்திலும் சிறந்தது என்று நேரு கூறியது எதனை?
A) *போரும் அமைதியும்
B) உலகின் சரித்திரம்
C) சாகுந்தலம்
D) திருக்குறள்
87) கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தைக் கவனித்து உரிய விடையைத் தேர்ந்தெடு.
கூற்று: பறவைகள் நாடு விட்டு நாடு இடம் பெயர்தல் வலசை போதல் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்: பறவைகள் இடம்பெயர்வதற்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் ஆகும்.
A) *கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
D) கூற்று சரி காரணம் தவறு
88) (வைதாரை கூட வையாதே இந்த உலகம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே) என்ற கருத்தை வலியுறுத்திய சித்தர் யார்?
A *கடுவெளி சித்தர்
B) குதம்பை சித்தர்
C) பாம்பாட்டி சித்தர்
D) திருமூலர்
89) (உலகில் உள்ள மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் பாதி உள்ள பெண்களை மதிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) பாரதிதாசன்
C) அயோத்திதாசர்
D)*பெரியார்
90) தமிழ் மக்களின் வரலாறு மற்றும் பண்பாட்டை அறிய உதவும் சங்க நூல் எது?
A) *புறநானூறு
B) அகநானூறு
C) நற்றிணை
D) குறுந்தொகை
91) தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களால் வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்கு போடப்பட்டது?
A) பெரியார்
B) *முத்துராமலிங்க தேவர்
C) ராஜகோபால் ஆச்சாரி
D) வ.உ. சிதம்பரம் பிள்ளை
92) (சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்) இக்கூற்று யாருடையது?
A) முத்துராமலிங்க தேவர்
B) அயோத்திதாச பண்டிதர்
C) *பாரதியார்
D) கண்ணதாசன்
93) முத்துராமலிங்க தேவரின் அரசியல் வழிகாட்டி யார்?
A) திலகர்
B) அரவிந்த கோஷ்
C) பகத்சிங்
D) *நேதாஜி
94) உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் மூலம் பரவலாக்கியவர் யார்?
A) *மக்கள் கவிஞர்
B) பகுத்தறிவு கவிராயர்
C) திரைப்படத் திலகம்
D) முத்தையா
95) ஐராவதீஸ்வரர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
A) முதலாம் ராஜராஜன்
B) முதலாம் ராஜேந்திரன்
C) *இரண்டாம் ராஜராஜன்
D) இரண்டாம் ராஜேந்திரன்
[96) ) (தாராசுரம் கோவிலில் கூம்பிய விமான அமைப்பும் அதன் கீழ் யானைகள் மற்றும் குதிரைகளால் பூட்டப்பட்ட ரத மண்டபமும் உள்ளது). இது வானவில் ரகசியத்தை காட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறியவர் யார்,?
A) *கால் சேகன்
B) ஐராவதம் மகாதேவன்
C) சதாசிவ பண்டாரத்தார்
D) ராபர்ட் சுவிட்சர்
97) (விருதுப்பட்டி) என்று அழைக்கப்பட்ட நகரம் தற்பொழுது எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?
A) தென்காசி
B) சிவகங்கை
C) மதுரை
D) *விருதுநகர்
98) “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்” இவ் வரியில் இடம்பெற்றுள்ள மோனை வகையை தேர்ந்தெடு.
A) *முற்றுமோனை
B) மேற்கதுவாய் மோனை
C) கீழ்க்கதுவாய் மோனை
D) இணை மோனை
99) பெண்களுக்கு நகை மற்றும் அழகிய உடையைவிட அறிவும் சுய மரியாதையும் முக்கியம் எனக் கூறியவர் யார்?
A) அண்ணா
B) காமராசர்
*C) பெரியார்
D) திரு.வி.க.
100) பாவேந்தரின் நூல்களுள் தவறானது எது?
A) பாண்டியன் பரிசு
B) இருண்ட வீடு
C) குடும்பவிளக்கு
*D) பழமொழி