குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1) அசும்பு என்ற சொல்லின் பொருள் யாது?
A) வானம்
*B) நிலம்
C) காற்று
D) கடல்
E) விடை தெரியவில்லை
2) கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
பாடலில் பயின்றுள்ள தொடை யாது?
A) எதுகைத்தொடை
B) முரண் தொடை
*C) இயைபுத்தொடை
D) மோனைத்தொடை
E) விடை தெரியவில்லை
3) பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) வாரணம்-களிறு
B) அலர்தல்-மலர்தல்
C) துப்பு-உணவு
*D) நசை-வசை
E) விடை தெரியவில்லை
4) “ஓடி வா” என்ற சொல் எவ்வகை வினைமுற்று?
A) வியங்கோள் வினைமுற்று
*B) ஏவல் வினைமுற்று
C) தெரிநிலை வினைமுற்று
D) இறந்தகால வினைமுற்று
E) விடை தெரியவில்லை
5) பொருத்துக:
A) படித்த பையன் 1) குறிப்புப் பெயரெச்சம்
B) நடித்து 2) தெரிநிலைப் பெயரெச்சம்
C) பெரிய வீடு 3) வினைமுற்று
D) நடந்தான் 4)வினையெச்சம்
*A) 2,4,1,3
B) 2,3,1,4
C) 4,3,1,2
D) 3,4,1,2
E) விடை தெரியவில்லை
6) “பால்குடித்துப் பசியாறினேன்”. தொடரின் வேற்றுமைத்தொகையினைக் கண்டறிக.
A) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
B) நான்காம் வேற்றுமைத்தொகை
C) ஆறாம் வேற்றுமைத்தொகை
*D) இரண்டாம் வேற்றுமைத்தொகை
E) விடை தெரியவில்லை
7) “குழந்தாய் பசிக்கிறதா?” இது எவ்வகைத்தொடர்?
A) வினைமுற்றுத்தொடர்
B) எழுவாய்த்தொடர்
C) அன்மொழித்தொடர்
*D) விளித்தொடர்
E) விடை தெரியவில்லை
8) ‘பொருட்காட்சி’ சொல்லில் நிகழ்ந்த புணர்ச்சி யாது?
A) தோன்றல்
*B) திரிதல்
C) மறைதல்
D) இயல்பு
E) விடை தெரியவில்லை
9) “கீழடியில் வாழ்ந்த மக்களுள்பலர்ச்செல்வந்தர்களாக இருந்துள்ளனர்”
தொடரிலுள்ள பிழையைச் சரிசெய்க.
A) கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
*B) கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
C) கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தற்களாக இருந்துள்ளனர்
D) கீலடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
E) விடை தெரியவில்லை
10) பிரித்தெழுதுக. தத்தம்
A) தங்கள் + தங்கள்
B) தமது + தம்
*C) தம் + தம்
D) தத்து + தம்
E) விடை தெரியவில்லை
11) “கார் அறுத்தான்” தொடரில் பயின்றுள்ள ஆகுபெயர் யாது?
A) பொருளாகுபெயர்
*B) காலவாகு பெயர்
C) இடவாகுபெயர்
D) பண்பாகு பெயர்
E) விடை தெரியவில்லை
12) சரியான வரிசையைக் கண்டறிக.
குறள் அடி, கழிநெடிலடி, சிந்தடி, நெடிலடி, அளவடி
A) 6,5,4,2,3
*B) 2,6,3,5,4
C) 2,3,6,4,5
D) 2,5,4,3,6
E) விடை தெரியவில்லை
13) ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
A) நீளு + உழைப்பு
B) நீண் + உழைப்பு
C) நீள் + அழைப்பு
*D) நீள் + உழைப்பு
E) விடை தெரியவில்லை
14) சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
A) சீருக்கு ஏற்ப
*B) சீருக்கேற்ப
C) சீர்க்கேற்ப
D) சீருகேற்ப
E) விடை தெரியவில்லை
15) ‘இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.’
ஒல்லை என்பதன் பொருள் யாது?
A) முற்றிலும்
B) உறவு
*C) விரைந்து
D) நாடு
E) விடை தெரியவில்லை
16) பிழையான சொல்லைக் கண்டுபிடி.
A) மலர்ப்பாதம்
*B) வெற்றிலைப்பாக்கு
C) திருவளர்செல்வன்
D) பட்டுப்பூச்சி
E) விடை தெரியவில்லை
17) ஞானி என்பதன் சரியான ஆங்கிலச்சொல் எது?
A) Schollar
*B) saint
C) Mentor
D) Loyalist
E) விடை தெரியவில்லை
18) ‘கோவின் ஏ துளைத்த காவின் மா இதுவோ?’
அடியில் இடம்பெற்ற ஓரெழுத்துச் சொற்களை வரிசைப்படுத்துக.
A) மாமரம்-அம்பு-அரசன்-சோலை
B) சோலை-அரசன்-அம்பு-மாமரம்
C) அரசன்—சோலை-அம்பு-மாமரம்
*D) அரசன்-அம்பு-சோலை-மாமரம்
E) விடை தெரியவில்லை
19) மண்’சூடு’ தணிய, ‘இடி’ இடிக்க, மழை ‘பொழிதல்’ மண்ணுயிர்க்கு நன்றாம்.
சொற்களின் இலக்கணக் குறிப்புகளை வரிசைப்படுத்துக.
A) விகுதிபெற்ற, முதனிலைத் திரிந்த, முதனிலை தொழிற்பெயர்
*B) முதனிலைத் திரிந்த, முதனிலை, விகுதிபெற்ற தொழிற்பெயர்
C) முதனிலை, விகுதிபெற்ற, முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
D) விகுதி பெற்ற, முதனிலை, முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
E) விடை தெரியவில்லை
20) தமிழாக்கம் தருக. ‘Inscriptions’
A) கையெழுத்துப்படி
B) அகராதி
*C) கல்வெட்டு
D) சுவரோவியம்
E) விடை தெரியவில்லை
21) ‘ஈட்டினார்’ பொருத்தமான வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி.
A) ஈட்டி வந்தார்
B) ஈட்டியிருந்தவர்
*C) ஈட்டியவர்
D) ஈட்டுபவர்
E) விடை தெரியவில்லை
22) பொருத்துக
A) தொல்காப்பியம் – 1) சங்க நூல்
B) திருக்குறள் – 2) பக்தி நூல்
C) புறநானூறு – 3) அற நூல்
D) திருவாசகம் – i4) இலக்கண நூல்
*A) 4,3,1,2
B) 4,1,2,3
C) 2,4,3,1
D) 3,2,4,1
E) விடை தெரியவில்லை
23) விழிச்சுடர் வாசலில் உட்கார்ந்திருந்தாள். நேரம் நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது.
தொடரிலுள்ள நயங்கள் எவை?
A) உவமை, உருவகம்
B) உள்ளுறை, இறைச்சி
*C) உருவகம், உவமை
D) உவமை, உள்ளுறை
E) விடை தெரியவில்லை
24) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
குறளில் பயின்றுள்ள தொடைநயம் யாது?
கூழை எதுகை
*முற்றுமோனை
அடிமோனை
மேல்க்கதுவாய் மோனை
E) விடை தெரியவில்லை
25) வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூகிக்கொண்டும் இருந்தன.
தொடரில்இடம்பெற்றுள்ளமரபுப்பிழைகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்துக.
A) காட்டில், கூவிக்கொண்டும், கரைந்துகொண்டும்
B) தோப்பில், கூவிக்கொண்டும், கத்திக்கொண்டும்
C) தோப்பில், அளறிக்கொண்டும், கரைந்துகொண்டும்
*D) தோப்பில், கூவிக்கொண்டும், கரைந்து கொண்டும்
E) விடை தெரியவில்லை
26) பொருத்துக.
A) குயில்பாட்டு: – 1. தாயுமானவர்
B) தெய்வமணிமாலை: – 2. பாரதியார்
C) திருவருட்பா: – 3. கபிலர்
D) குறிஞ்சிப்பாட்டு: – 4. பாரதிதாசன்
E) அழகின் சிரிப்பு: – 5. வள்ளலார்
*A) 2,5,1,3,4
B) 2,4,1,3,5
C) 5,1,2,4,3
D) 4,3,2,1,5
E) விடை தெரியவில்லை
27) கடல் என்ற சொல்லின் பிற சொற்களுக்கான சரியான அகரவரிசையைக் கண்டறிக.
A) ஆழி, பரவை, அழுவம், முந்நீர், விரிநீர், சமுத்திரம்
B) சமுத்திரம், விரிநீர், பரவை, அழுவம், ஆழி, முந்நீர்
*C) அழுவம், ஆழி, சமுத்திரம், பரவை, முந்நீர், விரிநீர்
D) பரவை, அழுவம், ஆழி, முந்நீர், விரிநீர், சமுத்திரம்
E) விடை தெரியவில்லை
28) ‘புனைபெயர்’ இலக்கணக் குறிப்பு தருக.
A) பண்புப்பெயர்
B) பண்புத்தொகை
*C) வினைத்தொகை
D) உம்மைத்தொகை
E) விடை தெரியவில்லை
29) “நம் வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டும்”
தொடருக்கேற்ற பொருத்தமான வினாவைக் கண்டறிக.
A) திருக்குறளை எப்படிக் கற்க வேண்டும்?
*B) திருக்குறளை ஏன் கற்க வேண்டும்?
C) வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டுமா?
D) திருக்குறளைக் கற்றால் வாழ்வு என்னவாகும்?
E) விடை தெரியவில்லை
30) “அந்தோ! மிகக் கோரமான விபத்து”.
இது எவ்வகைத்தொடர் எனக் கண்டுபிடி?
A) செய்தித்தொடர்
B) வினாத்தொடர்
C) கட்டளைத்தொடர்
*D) உணர்ச்சித்தொடர்
E) விடை தெரியவில்லை
31) “வீடு கட்டியாயிற்று” தொடரைக் கண்டுபிடி.
A) செய்வினை
B) பிறவினை
C) தன்வினை
*D) செயப்பாட்டு வினை
E) விடை தெரியவில்லை
32) ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி’ உவமையால் குறிக்கப்படும் கருத்து யாது?
A) ஒழுக்கம்
*B) கல்வி
C) வெகுளி
D) அச்சம்
E) விடை தெரியவில்லை
33) ‘பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’.
குறளுக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக.
A) கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
*B) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
C) சிறுதுளி பெருவெள்ளம்.
D) முள்ளை முள்ளால் எடு.
E) விடை தெரியவில்லை
34) புலனழுக்கற்ற அந்தணாளன் என்ற தொடரால் சிறப்பிக்கப்படுபவர் யார்
*A) கபிலர்
B) நக்கீரர்
C) பரணர்
D) ஔவையார்
E) விடை தெரியவில்லை
35) உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு
இவ்வடி ஔவையாரின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
A) ஆத்திசூடி
*B) கொன்றை வேந்தன்
C) நல்வழி
D) மூதுரை
E) விடை தெரியவில்லை
36) “கண்ணித் தமிழெனக்கு வேண்டுமேயடா
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
என்றவர் யார்
A) ஆருமுக நாவலர்
B) சீ. வை. தாமோதரம்பிள்ளை
C) மயில்வாணன்
*D) க. சச்சிதானந்தன்
E) விடை தெரியவில்லை
37) பொருத்துக
A) தன்னாடு தந்த வெண்ணெல் தந்து – 1) குறுந்தொகை
B) பாலொடு வந்து கூலொடு பெயரும் – 2) அகநானூறு
C) பொன்னொடு வந்து கரியொடு பெயரும் – 3) நற்றிணை
A) 1 2 3
B) 2 1 3
C) 3 2 1
*D) 3 1 2
E) விடை தெரியவில்லை
38) கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய நூல்கள் எவை
A) திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
B) சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
*C) பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
D) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
E) விடை தெரியவில்லை
39) தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை,
என்று வருந்தியவர் யார்
A) மாதவி
B) மணிமேகலை
*C) கண்ணகி
D) ஆதிரை
E) விடை தெரியவில்லை
40) பொருத்துக
A) பாக்கள், – 1) மடைகள்
B) பாவினங்கள் – 2) வரப்பு
C) செய்யுள் நெறிகள் – 3) விளைபொருட்கள்
D) நூற்பயன் – 4) விதைகள்
A) 2 4 1 3
*B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 3 4 1 2
E) விடை தெரியவில்லை
41) விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல
என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் நூல் எது
A) தமிழ்விடு தூது
B) திருக்குற்றாலக் குறவஞ்சி
*C) கலிங்கத்துப்பரணி
D) முக்கூடற் பள்ளு
E) விடை தெரியவில்லை
42)) “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல்”
இப்பாடல் இடம்பெறும் நூல் எது
A)) ஆசாரக்கோவை
B) பழமொழி நானூறு
*C) திரிகடுகம்
D) நாலடியார்
E) விடை தெரியவில்லை
43) திங்கள் தானாக ஒளி வீசுவதில்லை என்ற அறிவியல் கருத்தைக் கூறும் நூல் எது
*A) திருக்குறள்
B) திருவள்ளுவமாலை
C) தொல்காப்பியம்
D) நாலடியார்
E) விடை தெரியவில்லை
44) ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையை அவை இடம்பெறும் நூல்களுக்கேற்பப் பொருத்துக
A) அகநானூறு – 1) 15
B) புறநானூறு – 2) 33
C) குறுந்தொகை – 3) 4
D) நற்றிணை – 4) 7
A) 1 2 3 4
B) 1 3 2 4
*C) 3 2 1 4
D) 4 1 2 3
E) விடை தெரியவில்லை
45) பிள்ளைத்தமிழ் நூலில் ஆறாவது பருவமாக அமைவது எது
A) காப்பு
B) சப்பானி
C) அம்புலி
*D) வருகை
E) விடை தெரியவில்லை
46) “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்”
இக்குறுந்தொகைப்பாடலின் ஆசிரியர் யார்
A) நக்கீரர்
B) வெள்ளிவீதியார்
*C) தேவகுலத்தார்
D) நல்வேட்டனார்
E) விடை தெரியவில்லை
47) பாடல் அடிகளை அவை இடம்பெறும் நூல்களோடு பொருத்துக
A) தமிழ் கெழு கூடல் – 1) பரிபாடல்
B) தமிழ் வேலி – 2) தேவாரம்,
C) கூடலில் ஆய்ந்த ஒன்தீந்தமிழின் – 3) திருவாசகம்
4) பண்ணொடும் தமிழொப்பாய் – 4) புறநானூறு
A) 4 1 2 3
*B) 4 1 3 2
C) 4 3 2 1
D) 1 2 4 3
E) விடை தெரியவில்லை
48) சீராப்புராணத்தின் எந்தக் காண்டத்திற்கு செலவியற் காண்டம் என்ற வேறு பெயர் உண்டு
A) விலாதத்துக் காண்டம்
B) நுபுவ்வத்துக்காண்டம்
*C) ஹிஜ்றத்துக் காண்டம்
D) 1, 2
E) விடை தெரியவில்லை
49) சொல்ல வந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது எந்த நூலின் சிறப்பு ஆகும்
A) குறுந்தொகை
B) ஐங்குறுநூறு
*C) அகநானூறு
D) புறநானூறு
E) விடை தெரியவில்லை
50) கருத்துகளையும் அவற்றைக் கூறிய சங்கப் புலவர்களையும் பொருத்துக
A) வள்ளலின் பொருள் இரவலரின் பொருள், வள்ளலின் வறுமை இரவலரின் வறுமை – 1) ஆவூர் மூலங்கிழார்
B) தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது – 2) பெரும்பதுமனார்
C) குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் – 3) பெருங்கடுங்கோ
D) உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் – 4) ஊண் பொதி பசுங்குடையார்
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 2 3 1 4
*D) 2 1 4 3
E) விடை தெரியவில்லை
51) நம்பி ஆரூரன் என்ற சிறப்புப் பெயருக்கு உரியவர் யார்
A) அப்பர்
B) சம்பந்தர்
*C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
E) விடை தெரியவில்லை
52) நீர் மேகமாகி மீண்டும் மழையாகப் பொழிகிறது என்ற செய்தியைக் கூறாத நூல் எது
A) திருக்குறள்
B) கார்நாற்பது
C) முல்லைப்பாட்டு
*D) பதிற்றுப்பத்து
E) விடை தெரியவில்லை
53) “காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவலமைத்து”
என்று வரும் பொங்கல்் விழா பற்றிய பாடல் அடிகளுக்குச் சொந்தக்காரர் யார்
A) பெரியாழ்வார்
B) பொய்கையாழ்வார்
*C) ஆண்டாள்
D) மதுரகவியாழ்வார்
E) விடை தெரியவில்லை
54) பொருந்தாத ஒன்றைக் கண்டறி: எட்டுத்தொகைப் பாடல் மற்றும் அடிவரையறை
*A) நற்றிணை – 4 முதல் 8 அடி
B) ஐங்குறுநூறு – 3 முதல் 6 அடி
C) அகநானூறு – 13 – 31 அடி
D) குறுந்தொகை – 4 முதல் 8 அடி
E) விடை தெரியவில்லை
55) மடப்பிடி யார்?
A) சீதை
*B) பாஞ்சாலி
C) மாதவி
D) கண்ணகி
E) விடை தெரியவில்லை
56) குறளை நிறைவு செய்க
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
பண்புடைமை என்னும் வழக்கு.
A) இரண்டும்
B) இவையிரண்டும்
*C) இவ்விரண்டும்
D) என இரண்டும்
E) விடை தெரியவில்லை
57) சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்
A) நல்லாதனார்
*B) காரியாசான்
C) விளம்பி நாகனார்
D) பெருவாயில் முல்லியார்
E) விடை தெரியவில்லை
58) “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்”
என்று கூறும் ஔவையாரின் நூல் எது
A) ஆத்திச்சூடி
*B) கொன்றைவேந்தன்
C) நல்வழி
D) மூதுரை
E) விடை தெரியவில்லை
59) சித்தர் என்ற பொருளைத் தரும் நிறைமொழி மாந்தர் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
1) தொல்காப்பியம்
2) திருக்குறள்
3) நன்னூல்
4) புறப்பொருள் வெண்பாமாலை
A) 1 3
B) 2 4
C) 3 4
*D) 1 2
E) விடை தெரியவில்லை
60) “நாடொணாது அமிர்தம் உண்டு
நான் அழிந்து நின்ற நாள்”
என்று பாடிய சித்தர் யார்
A) திருமூலர்
B) கடுவெளிச்சித்தர்
*C) சிவவாக்கியர்
D) பட்டினத்தார்
E) விடை தெரியவில்லை
61) சிறப்புப் பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உட்பட ஏலாதியில் எத்தனை பாடல்கள் உள்ளன
A) 70
B) 71
C) 80
*D) 81
E) விடை தெரியவில்லை
62) திருக்குறள் தோன்றியிராவிட்டால் தமிழினம், தமிழ் மொழி பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்
A) ஜி.யூ. போப்
B) திரு.வி.க
*C) கி.ஆ.பெ.. விஸ்வநாதம்
D) திருக்குறள் முனுசாமியார்
E) விடை தெரியவில்லை
63) மனோன்மணீயம் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு்க்க
1) மனோன்மணீயம் தமிழின் முதல் உரைநடை நாடக நூல்.
2) இது 5 அங்கங்கள் மற்றும் 20 கலங்களைக் கொண்டது
3) இந்நூலில் உள்ள கிளைக்கதை சிவகாமி சபதம்
A) கூற்றுகள் 1, 2 தவறு
*B) கூற்றுகள் 1, 3 தவறு
C) கூற்றுகள் 2, 3 தவறு
D) கூற்றுகள் 1, 2 மற்றும் 3 தவறு
E) விடை தெரியவில்லை
64) அம்மூவனாரின் பாடல்கள் கீழ்வரும் எந்த சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை
A) குறுந்தொகை
B) அகநானூறு
*C) புறநானூறு
D) ஐங்குறுநூறு
E) விடை தெரியவில்லை
65) கூற்றுகளை ஆய்ந்து உரிய விடையைத் தேர்ந்தெடு
1) நன்னூற்புலவன் என்று சிறப்பிக்கப்படுபவர் இளங்கோவடிகள்
2) நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகளைப் புகழ்ந்தவர் சீத்தலைச் சாத்தனார்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு
E) விடை தெரியவில்லை
66) நூல்களையும் பாடல் எண்ணிக்கையையும் பொருத்துக
A) திருவிளையாடற்புராணம் – 1) 3615
B) தேம்பாவணி – 2) 3363
C) இராவணகாவியம் – 3) 3766
D) இரட்சன்ய யாத்ரீகம் – 4) 3100
A) 2 3 1 4
B) 2 1 3 4
C) 2 4 1 3
*D) 2 1 4 3
E) விடை தெரியவில்லை
67) “இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை என் யெவ்வனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி
என்று கூறியவர் யார்
A) கவிமணி
B) ராமலிங்க அடிகள்
*C) பாரதியார்
D) அண்ணா
E) விடை தெரியவில்லை
68) இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முணைகள் என்ற கூற்று யாருடையது
A) பெரியார்
*B) அண்ணா
C) காந்தி
D) அம்பேத்கார்
E) விடை தெரியவில்லை
69) பொருத்துக:
A) பரிதிமாற்கலைஞர் 1) தமிழை தழைக்கச் செய்த செம்மல்.
B) மறைமலை அடிகள் 2) தமிழுக்கு வித்திட்டவர்.
C) தேவ நேய பாவாணர் 3) தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர்.
D) கால்டுவெல் 4) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்.
A) 4 1 3 2
*B) 2 1 4 3
C) 2 1 3 4
D) 4 2 3 1
E) விடை தெரியவில்லை
70) சிற்பக்கலை குறித்து தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககம் வெலியிட்ட நூல் எது?
*A) சிற்பச் செந்நூல்
B) சிற்பக்கலை ஆய்வு
C) சிற்பக்கலை நுணுக்கம்
D) சிற்பக் கலையியல்
E) விடை தெரியவில்லை
71) (நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்) என ஓவியருக்கு இலக்கணம் வகுத்தவர் யார்?
A) தொல்காப்பியர்
B) நந்நூலார்
C) சேனாவரையர்
*D) நச்சினார்க்கினியர்
E) விடை தெரியவில்லை
72) (தொண்டுக்கு முந்து தலைமைக்குப்பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்) என்ற கடித வரிகள் யாருடையது?
*A) மு. வரதராசனார்
B) அறிஞர் அண்ணா
C) பெரியார்
D) காந்தி
E) விடை தெரியவில்லை
73) முற்காலத்து இசைத் தமிழ் நூல்களுல் ஒன்று?
A) சிலப்பதிகாரம்
B) பெரியபுராணம்
C) கந்தபுராணம்
*D) பெருநாரை
E) விடை தெரியவில்லை
74) லிப்ரா என்ற இலத்தின் மொழிச்சொல் எதைக் குறிக்கிறது?
A) நூலகம்
B) அகராதி
C) நாட்குறிப்பு
*D) புத்தகம்
E) விடை தெரியவில்லை
75) பொருத்துக:
A) ஆசியாவின் பெரிய நூலகம் 1) தஞ்சை சரஸ்வதி மஹால்.
B) ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம் 2) கொல்கத்தா தேசிய நூலகம்.
C) இந்தியாவின் பழமையான நூலகம் 3) சீன தேசிய நூலகம்.
D) இந்தியாவின் பெரிய நூலகம் 4) அண்ணா நூற்றாண்டு நூலகம்.
A) 3 1 4 2
*B) 3 4 1 2
C) 2 1 4 3
D) 3 2 1 4
E) விடை தெரியவில்லை
76) ஆசிரியர் மற்றும் இதழ்களை பொருத்துக
A) பாரதியார் 1) அன்னம்விடு தூது.
B) பெருஞ்சித்திரனார் 2) அனுமன்.
C) ந. பிச்ச மூர்த்தி 3) தமிழ் நிலம்.
D) மி. ராசேந்திரன் 4) இந்தியா.
A) 3 4 2 1
*B) 4 3 2 1
C) 2 4 3 1
D) 3 2 1 4
E) விடை தெரியவில்லை
77) (இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே) இவ்வரிகள் எந்நூலைப் பெருமைப்படுத்துகிறது?
A) நாலடியார்
*B) திருக்குறள்
C) பழமொழி நாநூறு
D) ஏலாதி
E) விடை தெரியவில்லை
78) நோய்களையும் அவற்றைத் தீர்க்கும் மூலிகைகளையும் பொருத்துக
A) நெஞ்சுச் சளி – 1) கொத்தமல்லி
B) பித்தம் – 2) சீரகம்
C) வயிற்றுச்சூடு – 3) மிளகு
D) தொண்டைக்கட்டு – 4) மஞ்சள்
A) 1 3 2 4
B) 1 2 3 4
*C) 4 1 2 3
D) 4 3 2 1
E) விடை தெரியவில்லை
79) பொருத்துக
A) புதுக்கவிதைப் பிறப்புக்கு வித்திட்டவர் 1) சி. மணி.
B) புதுக்கவிதை செழுமையுர காரணமாக இருந்தவர் 2) ந. பிச்ச மூர்த்தி.
C) புதுக்கவிதைக்கு ஒரு துருவ நட்சத்திரம் 3) சி.சு. செல்லப்பா.
D) யாப்பறிந்து யாப்புடைத்தவர் 4) பசுவையா.
*A) 2 3 4 1
B) 3 4 2 1
C) 2 1 3 4
D) 4 2 3 1
E) விடை தெரியவில்லை
80) (பெண்ணெனல் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும்வரை உருப்படல் என்பது சரிப்படாது) என்றவர்?
A) கவிமணி
B) தேசியக்கவி
C) காந்தியக்கவி
*D) புரட்சிக்கவி
E) விடை தெரியவில்லை
81) (தேனிலேஊறிய செந்தமிழின் சுவைதேரும் சிலப்பதிகாரம் எனப் புரட்சிக் காப்பியத்தைப் புகழ்ந்தவர் யார்?
A) ராமலிங்கனார்
B) பாரதியார்
C) பாவேந்தர்
*D) கவிமணி
E) விடை தெரியவில்லை
82) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
A) பகுத்தறிவு கவிராயர்/உடுமலை நாராயணகவி.
B) நாமக்கல் கவிஞர்/பட்டுக்கோட்டையார்.
C) மருதகாசி/திரைக்கவி திலகம்.
*D) உவமைக் கவிஞர்/கல்யாண சுந்தரனார்.
E) விடை தெரியவில்லை
83) ரா.பி. சேதுபிள்ளை எழுதிய ஆய்வு நூல் எது?
A) தமிழ் இன்பம்
*B) ஊரும் பேரும்
C) தமிழ் விருந்து
D) தமிழ் அமுது
E) விடை தெரியவில்லை
84) தமிழ் பயிலும் ஆர்வமிக்க மாணவர்களுக்கு கற்பித்ததோடு அவர்களை இயற்றமிழ் மாணவர்கள் என அழைத்தவர் யார்?
A) மறைமலை அடிகள்
B) சுந்தரம்பிள்ளை
*C) பரிதிமாற்கலைஞர்
D) பாரதியார்
E) விடை தெரியவில்லை
85) திரு.வி.க. படுக்கைப் பிதற்றல் என்ற நூலை யாருடைய உதவியோடு எழுதி வெளியிட்டார்?
A) உ.வெ.சா.
B) வையாபுரி
C) ரா.பி.சே.
*D) வரதராசனார்
E) விடை தெரியவில்லை
86) அகில உலகத் தமிழ் ஆய்வு மன்றம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை உருவாகக் காரணமாக இருந்தவர்.
*A) தனிநாயகம் அடிகள்
B) மறைமலை அடிகள்
C) பரிதிமாற் கலைஞர்
D) செய்குத் தம்பிப் பாவலர்
E) விடை தெரியவில்லை
87) யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கியபோது நான் காப்பேன் என்று எழுந்தவர் யார்?
A) தமிழ் தென்றல்
*B) தமிழ் தாத்தா
C) தமிழ் வித்தகர்
D) தமிழ்ச் செம்மல்
E) விடை தெரியவில்லை
88) தெ.பொ.மீ. சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியக் கட்டுரை எது?
A) முத்தமிழ்க் காப்பியம்
B) நாடகக் காப்பியம்
C) உரையிடை இட்ட பாட்டுடை செய்யுள்
*D) குடிமக்கள் காப்பியம்
E) விடை தெரியவில்லை
89) பொருத்துக:
A) என் வாழ்க்கைப்போர் 1) உ.வெ.சா.
B) என்சரிதம் 2) இலக்குவனார்.
C) கானல்வரி 3) ரா.பி.சே.
D) தமிழ் இன்பம் 4) தெ.பொ.மீ.
*A) 2 1 4 3
) 2 1 3 4
C) 3 4 1 2
D) 4 3 2 1
E) விடை தெரியவில்லை
90) 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் (மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும்) என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர்?
*A) தேவ நேயப் பாவானர்
B) பரிதிமாற் கலைஞர்
C) இலக்குவனார்
D) திரு.வி.க.
E) விடை தெரியவில்லை
91) தனித்தமிழ் இயக்க மறவர் என போற்றப்படுபவர் யார்?
A) மறைமலை அடிகள்
B) பரிதிமாற் கலைஞர்
C) பாவாணர்
*D) பெருஞ்சித்திரனார்
E) விடை தெரியவில்லை
92) “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகலையும் உருவாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி”
என்று முத்துராமலிங்கரைப் புகழ்ந்தவர் யார்?
A) அண்ணா
*B) பெரியார்
C) சி. டி. ராமசாமி
D) காமராசர்
E) விடை தெரியவில்லை
93) “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான்”
என்று கூறியவர் யார்?
A) அண்ணா
B) பெரியார்
C) ம. பொ.. சி.
*D) காயிதே மில்லத்
E) விடை தெரியவில்லை
94) “திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது” – என்று கூறியவர் யார்?
A) காந்திஜி
B) நேருஜி
*C) இராஜாஜி
D) நேதாஜி
E) விடை தெரியவில்லை
95) “சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது” என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?
A) டாக்டர் பெரியார்
*B) டாக்டர். அம்பேத்கர்
C) பேரறிஞர் அண்ணா
D) காமராசர்
E) விடை தெரியவில்லை
96) கடற் பயணத்தின் சிறப்பை – அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
A) விளைந்து முதிர்ந்த விழுமுத்து, 1) பட்டினப்பாலை.
B) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி, 2) புறநானூறு.
C) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர், 3) மதுரைக் காஞ்சி.
D) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது போல் நாவாய் அசைந்தது, 4) அகநானூறு.
A) 4 3 2 1
*B) 3 4 2 1
C) 1 2 3 4
D) 3 4 1 2
E) விடை தெரியவில்லை
97) பொருத்துக:
A) தூதுவளை, 1) குமரி.
B) கற்றாழை, 2) ஞானப் பச்சிலை.
C) கரிசலாங்கண்ணி, 3) இந்திய மருந்து.
D) குறுமிளகு, 4) தேகராசம்.
A) 4 3 1 2
B) 3 4 2 1
C) 1 2 3 4
*D) 2 1 4 3
E) விடை தெரியவில்லை
98) தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?
A) திருநள்ளாறு
B) திருநெல்வேலி
C) தஞ்சாவூர்
*D) மதுரை
E) விடை தெரியவில்லை
99) “புதுநெறிகண்ட புலவர்” என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
A) சேக்கிழார்
B) தாயுமானவர்
C) மாணிக்கவாசகர்
*D) இராமலிங்க அடிகளார்
E) விடை தெரியவில்லை
100) கொலுபொம்மை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
*A) ந. பிச்ச மூர்த்தி
C) தி. ஜானகி ராமன்
D) புவியரசு
E) விடை தெரியவில்லை
பொதுப்பாட வினாக்கள்
1) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
a) முண்டாக் கிளர்ச்சி
b) கோல் கிளர்ச்சி
c) சாந்தலர்கள் கிளர்ச்சி
*d) வஹாபிக் கிளர்ச்சி
E) விடை தெறியவில்லை
2. இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.வ.யின் 6 மடங்காகும். மீ.பொ.வ 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க
a) 48
b) 36
*c) 24
d) 12
E) விடை தெறியவில்லை
3. இந்தியாவின் எந்த மாநிலத்தில் வெட்டுதல் மற்றும் எரித்தல் விவசாயம் என்பது பெவார் என்று அழைக்கப்படுகிறது?
ஆந்திரப்பிரதேசம்
ஜார்கண்ட்
* மத்தியப்பிரதேசம்
இராஜஸ்தான்
E) விடை தெறியவில்லை
4) பொருத்துக
A)பெருபாரி வழக்கு – 1) 1995
B)கேசவானந்தபாரதி வழக்கு – 2) 1994
C)எஸ். ஆர். பொம்மை வழக்கு – 3) 1973
D)LIC வழக்கு – 4) 1960
*A) 4 3 2 1
B) 2 4 1 3
C) 3 4 1 2
D) 3 4 2 1
E) விடை தெறியவில்லை
5 சிந்து சமவெளி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளுள் எத்தனை கூற்றுகள் சரியானவை?.
கூற்று I தெருக்கள் கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைந்திருந்தன.
கூற்று ii பெரிய தெருக்கள் 32 அடி அகலமும் சிறிய தெருக்கள் 9 அடி முதல் 12 அடி அகலமும் கொண்டதாக இருந்தன.
கூற்று iii கிணற்றுச் சுவர் மற்றும் சாக்கடைச் சுவர் போன்ற வளைந்த சுவரைக் கட்டுவதற்கு ஒரு வகையான சாந்தை பயன்படுத்தியுள்ளனர்.
கூற்று iv குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் ஆராய்ச்சி செய்தபோது லோத்தல் துறைமுகத்தை மார்டிமர் வீலர் என்பவர் கண்டுபிடித்தார்.
*A 1
B 2
C 3
D 4
E) விடை தெறியவில்லை
6. கீழ்காண்பவைகளைக் கருத்தில் கொள்க.
1. குஜராத்
2. ஹரியானா
3. கோவா
4. கர்நாடகா
5. தமிழ்நாடு
6. ராஜஸ்தான்
மேற்கண்ட மாநிலங்களில் எத்தனை மேற்கு தொடர்ச்சி மலைகளோடு தொடர்புடையது?
3 மட்டும்
* 4 மட்டும்
5 மட்டும்
அனைத்தும்
E) விடை தெறியவில்லை
7. சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க?
a. 12%
b. 14%
c. 15%
*d. 13%
E) விடை தெறியவில்லை
8 கங்கைச் சமவெளி பிராமனர்களின் பூமி என்று குறிப்பிட்டவர் யார்?
A ஆர் டி பேனர்ஜி.
*B பாஹியான்.
C யுவான்சுவாங்.
D சர்ஜான் மார்ஷல்.
E) விடை தெறியவில்லை
9) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க
கூற்று 1 : இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரவாசி பாரதிய தினம் கொண்டாடப்படுகிறது
கூற்று 2 : இந்த தினம் இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை பெரும் வகையில் கொண்டாடப்படுகிறது
கூற்று 3 : இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடுவாழ் இந்தியர்களை போற்றும் வகையில் 2002 லிருந்து இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
A) கூற்று 2, 3 சரி 1 தவறு
B) கூற்று 1, 3 சரி 2 தவறு
*C) கூற்று 1 , 2 சரி 3 தவறு
D) அனைத்தும் சரி
E) விடை தெறியவில்லை
10) எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?
A) சோடியம் அயனி
*B) லித்தியம் அயனி
C) கார்பன் அயனி
D) பொட்டாசியம் அயனி
E) விடை தெறியவில்லை
11) நவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திரமயமாதல் நமக்கு வரம் அல்ல சாபம் என குறிப்பிட்டவர் யார்?
A) திருவள்ளுவர்
*B) மகாத்மா காந்தி
C) குமரப்பா
D) பெரியார்
E) விடை தெறியவில்லை
12. ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜா செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜா செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜா செடிகள் என ஒரு தொடர் வரிசையில் அமைந்துள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜா செடிகள் இருப்பின், பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?
a. 12
*b. 10
c. 11
d. 13
E) விடை தெறியவில்லை
13. பின்வரும் நகரங்களில் எவை தங்க நாற்கரத்தில் இணைக்கப்பட்டுள்ள நகரங்கள்?
ஸ்ரீநகர், தமிழ்நாடு, சில்ச்சார், போர்பந்தர்
டெல்லி, அம்ரிஸ்தர், மும்பை, சென்னை
* டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா
டெல்லி, அஸ்ஸாம், பெங்களூரு, குஜராத்
E) விடை தெறியவில்லை
14 எந்த டெல்லி சுல்தான் காலத்தில் ஜும்மா மசுதி புதுப்பிக்கப்பட்டது?.
A இல்துமிஸ்.
B ஜலாலுதின் கில்ஜி.
*C பேரோஷ் துக்ளக்.
D சிக்கந்தர் லோடி.
E) விடை தெறியவில்லை
15) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் 1857 – ஆம் ஆண்டு பெருங்கழகத்திற்கான இராணுவக் காரணங்கள் எவை
1) இந்திய சிப்பாய்களின் வெறுப்பு
2) குறைந்த ஊதியம்
3) சமய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை
4) இந்திய சி்ப்பாய்களுக்குப் பணி உயர்வு அளிக்கப்படாமை
a) 1, 2, 4
b) 1, 2, 3
c) 1, 2
*d) 1, 2, 3, 4
E) விடை தெறியவில்லை
16. A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இவர்களின் தற்போதைய வயதின் கூடுதலைக் காண்க.
*a.45
b.55
c.35
d.65
E) விடை தெறியவில்லை
17. பின்வருபவைகளில் சரியான இணையைத் தேர்க.
நோக்ரெக் உயிர்க்கோள காப்பகம் :: சிக்கிம்
விக்ரம்ஷீலா கங்கை ஓங்கில் சரணாலையம் :: ஜார்கண்ட்
ஆசிய சிங்கங்கள் சரணாலையம் :: மத்திய பிரதேசம்
* இந்திய கானமயில்கள் :: ராஜஸ்தான்
E) விடை தெறியவில்லை
18 காலவரிசைப்படுத்துக?.
A ஷெர்ஷா ஆட்சிப் பொறுப்பேற்றல்.
B காண்வா போர்.
C குரு அர்ஜூன்சிங் மரனம்.
D குர்ரம் கட்டடக்கலை
1 3 2 4
*2 1 3 4
4 3 1 2
4 3 2 1
E) விடை தெறியவில்லை
19) பொருத்துக
A) ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் – 1) 2005
B) பிரதான் மந்திரி ஆதர்ண் கிராம் சதக் யோஜனா – 2) 1989
C) ஊரக நிலமற்றர் வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – 3) 2010
D) பாரத் நிர்மான் யோஜனா – 4) 1983
a) 2 1 4 3
*B) 2 3 4 1
C) 4 3 1 2
D) 3 1 4 2
E) விடை தெறியவில்லை
20. இரு பகடைகள் உருட்டப்படும்போது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை?
a. 4
*b. 5
c. 6
d. 7
E) விடை தெறியவில்லை
21) இந்தியாவில் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ள மாநிலங்களை தேர்ந்தெடுக்க.
1. பீகார்
2. மகாராஷ்டிரா
3. குஜராத்
4. மத்திய பிரதேசம்
5. கர்நாடகா
6. உத்திர பிரதேசம்
A) 1, 3, 4, 6
B) 2, 5, 6
C) 2, 3, 4, 5
*D) 1, 2, 5, 6
E) விடை தெறியவில்லை
22. கீழ் காண்பவைகளைக் கருதுக.
1. தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் : ஈரோடு
2. தமிழகத்தின் ஜவுளிப் பள்ளத்த்தாக்கு : கரூர்
3. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் : திருப்பூர்
மேற்கண்ட இணைகளில் எத்தனை தவறானவை?
1 மட்டும்
2 மட்டும்
* அனைத்தும்
எதுவுமில்லை
E) விடை தெறியவில்லை
23. A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.
a. 5
b. 6
c. 7
*d. 8
E) விடை தெறியவில்லை
24) காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
*A) காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
B) கனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
C) உப்புக்கள் உருவாவதால்
D) காரங்கள் உருவாவதால்
E) விடை தெறியவில்லை
25 சீனாவிற்கு தூது குழுக்களை அனுப்பிய பல்லவன் யார்?.
A முதலாம் மகேந்திர வர்மன்.
B முதலாம் நரசிம்ம வர்மன்.
*C இரண்டாம் நரசிம்ம வர்மன்.
D விஷ்னுகோபன்.
E) விடை தெறியவில்லை
26. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம் (TNHSP) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1999
2005
* 2013
2014
E) விடை தெறியவில்லை
27. சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் சமமெனில் அந்தச் சாய் சதுரம் ஒரு
A) இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல
B) செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல
*C) சதுரம்
D) இணைகரம் ஆனால் சதுரம் அல்ல
E) விடை தெறியவில்லை
28) பொருத்துக
a) பூலித்தேவனின் மூன்று கோட்டைகள் கைப்பற்றப்படல் -1) 1772
b) காளையார் கோவில் போர் – 2) 1761
c) கட்டபொம்மன் ஜாக்சன் சந்திப்பு -3) 1799
d) கட்டபொம்மன் தூக்கிலிடப்படல் -4) 1798
a) 2 1 3 4
*b) 2 1 4 3
c) 1 2 4 3
d) 1 2 3 4
E) விடை தெறியவில்லை
29) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143 இன் படி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெரும் அதிகாரத்தை பெற்றவர் யார்?
A) பிரதம அமைச்சர்
*B) குடியரசு தலைவர்
C) சட்டத்துறை அமைச்சர்
D) மேற்கண்ட அனைவரும்
E) விடை தெறியவில்லை
30 72 வனிகர்கள் அடங்கிய தூது குழுக்களை சீனாவிற்கு அனுப்பிவைத்தவர் யார்?.
A முதலாம் இராஜராஜன்.
B முதலாம் பராந்தகன்.
C முதலாம் இராஜேந்திரன்.
*D முதலாம் குலோத்துங்கன்.
E) விடை தெறியவில்லை
31. கீழ் காண்பவைகளை கருத்தில் கொள்க.
ஜனனி சுரக்ஷா யோஜனா
அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகம்
ஜன் ஆரோக்ய யோஜனா
டாக்டர் முத்துலட்சுமி மகப்பெறு திட்டம்
மேற்கண்ட திட்டங்களில் எத்தனை நேரடியாக தாய்மார்கள் நலன் / குழந்தை பெறுதலோடு தொடர்புடையது?
1 மட்டும்
2 மட்டும்
* 3 மட்டும்
அனைத்தும்
E) விடை தெறியவில்லை
32. பூச்சட்டி ஒன்றை ₹ 528 க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
a.₹625
*b. ₹550
c.₹553
d. ₹573
E) விடை தெறியவில்லை
33) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க
கூற்று – 1: BRICS நாடுகள் உலக மொத்த தேசிய உற்பத்தியில் 21 சதவீதம் பெற்றுள்ளன
கூற்று – 2: உலக மக்கள் தொகையில் BRICS 43 சதவீதத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
கூற்று – 3: சீனாவின் ஷாங்காய் நகரில் பிரிக்ஸின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 2 மற்றும் 3 சரி
C) கூற்று 2 மட்டும் சரி
*D) அனைத்து கூற்றுகளும் சரி
E) விடை தெறியவில்லை
34) கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
A) பொட்டாசியம் குளோரேட் 1) மலச்சிக்கலைத் தீர்க்க
B) எப்சம் உப்பு 2) தீப்பெட்டி தொழிற்சாலைகளில்
C) காப்பர் சல்பேட் உப்பு3) பட்டாசு
D) பொட்டாசியம் நைட்ரேட் 4) பூஞ்சைக்கொல்லியாக
A) 3 4 2 1
B) 2 3 4 1
*C) 2 1 4 3
D) 3 4 1 2
E) விடை தெறியவில்லை
35. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் _______ ஆகும்.
(A) 6 மாதங்கள்
*(B) 1 ஆண்டு
(C) 1 1/2 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
E) விடை தெறியவில்லை
36 பொருந்தாத இனையைக் கண்டுபிடி?.
A ஜெய்சிங் புரந்தர் உடன்படிக்கை.
B அகமது ஷா அப்தாலி மூன்றாம் பானிப்பட்டு போர்.
C செய்ஷ்டகான் தக்கான ஆளுநர்.
*D சாம்பாஜி ராம்தாஸ்.
E) விடை தெறியவில்லை
37. பின்வரும் பொருத்தங்களில் எது சரியாகப் பொருந்துகிறது?
திட்டம் முதல்வர்
A) மதிய உணவு திட்டம் 1) ஜெ.ஜெயலலிதா
B) தொட்டில் குழந்தை திட்டம் 2) கே.காமராஜ்
C)சமத்துவபுரம் 3) சி.என். அண்ணாதுரை
D) சத்துணவு திட்டம் 4) எம்.ஜி. ராமச்சந்திரன்
I
II
III
* IV
E) விடை தெறியவில்லை
38. A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.
a. 23
b. 24
*c. 25
d. 26
E) விடை தெறியவில்லை
39) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அன்னி பெசண்டின் தன்னாட்சி இயக்கப் பகுதி அல்லாதது எது
a) அகமது நகர்
b) கல்லிக்கோட்டை
*c) கர்நாடகம்
d) காண்பூர்
E) விடை தெறியவில்லை
40) அதிக முறை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொண்ட பிரதமர் யார்?
A) ஜவஹர்லால் நேரு
B) மன்மோகன் சிங்
*C) இந்திரா காந்தி
D) ராஜீவ் காந்தி
E) விடை தெறியவில்லை
41 சத்திரியா என்பது எந்த மாநிலத்தின் நடனம் ?.
*A அஸ்ஸாம்.
B குஜராத்.
C ஜம்மு.
D ஒடிசா.
E) விடை தெறியவில்லை
42. பின்வருபவைகளில் தேசிய பேரிடர் அவசரக்கால தொடர்பு எண் எது?
1098
1091
* 1077
108
E) விடை தெறியவில்லை
43. இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு என்ன?
a. 7/9
*b. 2/9
c. 4/7
d. 1/9
E) விடை தெறியவில்லை
44) வேறுபட்டு இருப்பதை கண்டுபிடி ஒரு செயலில் – வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது.
A) கடத்தல்
B) சலனம்
*C) உட்கவர்தல்
D) கதிர்வீசல்
E) விடை தெறியவில்லை
45 அரிக்கமேடு பகுதியை அகழாய்வு செய்தவர் யார்?.
A அலெக்சாண்டர் கன்னிங்காம்.
B சர்ஜான் மார்ஷல்.
*C மார்டிமர் வீலர்.
D ஆண்ட்ரு ஜோகர்.
E) விடை தெறியவில்லை
46) வகுப்புவாரிக் கொடை அளித்த பிரிட்ீஷ் பிரதமர் யார்
a) மௌண்ட் பேட்டன் பிரபு
b) அட்லி பிரபு
*c) ராம்சேய் மெக்டொனால்டு
d) மாண்டேகு
E) விடை தெறியவில்லை
47. ஒரு வகுப்பிலுள்ள 11 மாணவர்களின் சராசரி எடை 41. முதல் 5 மாணவர்களின் சராசரி 17kg. மற்றும் கடைசி 5 மாணவர்களின் சராசரி எடை 64kg எனில் 6 வது மாணவனின் எடை எவ்வளவு?
*A) 46.
B) 54.
C) 52.
D) 38.
E) விடை தெறியவில்லை
48) இந்திய கூட்டாட்சியை ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ என வர்ணித்த அரசமைப்பு அறிஞர் யார்?
A) கே.சி. வியர்
B) ஏ.வி. டைசி
C) மோரி ஜோன்ஸ்
*D) கிரான்வில் ஆஸ்டின்
E) விடை தெறியவில்லை
49 புலித்தேவரின் நெற்கட்டும்சேவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய மூன்று முக்கியமான கோட்டைகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தவர் யார்?.
A கர்னல் ஹெரான்
B மாபுஷ்கான்.
*C யூசுப்கான்.
D கர்னல் பான்கோட்.
E) விடை தெறியவில்லை
50. கூற்று மற்றும் காரணம்.
கூற்று (A): இந்தியப் பருவகாலமானது காற்றின் திசையின் தலைகீழ் மாற்றத்தால் உருவாகிறது, இது இந்தியாவில் விவசாய சுழற்சியை கணிசமாக பாதிக்கிறது.
காரணம் (ஆர்): இந்தியப் பருவக் காற்று இந்தியப் பெருங்கடல் மற்றும் திபெத்திய பீடபூமியின் மாறுபட்ட வெப்பத்தால் ஏற்படுகிறது, இது பருவக் காற்றை இயக்கும் அழுத்தச் சாய்வுக்கு வழிவகுக்கிறது.
* (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல.
(A) சரி, ஆனால் (R) தவறானது.
(A) தவறானது, ஆனால் (R) சரி.
E) விடை தெறியவில்லை
51. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் 5 செ.மீ மற்றும் 9 செ.மீ எனில் மூன்றாவது பக்கம் _________ ஆகும்.
*A) 5 செ.மீ
B) 3 செ.மீ
C) 4 செ.மீ
D) 14 செ.மீ
E) விடை தெறியவில்லை
52) எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
A) கால்சியம் கார்பனேட்
*B) கால்சியம் பாஸ்பேட்
C) கால்சியம் குளோரைடு
D) கால்சியம் சல்பேட்
E) விடை தெறியவில்லை
53 கீழ்க்கண்டவற்றுள் முதல் தலித் நாவல் எது?.
A மலரோ மனமோ .
B குறிஞ்சித்தேன்.
*C மலரும் சருகும்.
D பலாத்காரம்.
E) விடை தெறியவில்லை
54) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : நான்காம் மைசூர் போர் 1799 – ஆம் ஆண்டு நடைபெற்றது
காரணம் : திப்பு கொடுங்கலூரைத் தாக்கியது அப்போருக்கான காரணமாகக் கருதப்படுகிறது
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
*c) கூற்று சரி, காரணம் தவறு
d) கூற்று தவறு, காரணம் சரி
E) விடை தெறியவில்லை
55) நிதிக்குழு குறித்த கூற்றுக்களை ஆராய்க
கூற்று 1 : அரசமைப்பின் உறுப்பு 280 குழுவின் அமைப்பை விவரிக்கின்றன
கூற்று 2 : ஒவ்வொரு ஐந்தாண்டு இருக்கும் குடியரசுத் தலைவர் ஒரு நிதி குழுவை அமைப்பார்
கூற்று 3 : நிதிக்குழு ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் நிதிக்குழுவின் நான்காவது உறுப்பினர் உயர் நீதிமன்ற நீதிபதியாக தகுதி பெற்றவர்
A) கூற்று 2, 3 சரி 1 தவறு
B) கூற்று 1, 3 சரி 2 தவறு
C) கூற்று 1 , 2 சரி 3 தவறு
*D) அனைத்தும் சரி
E) விடை தெறியவில்லை
56. A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ. 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு?
*a. 3200
b. 4000
c. 3600
d. 4400
E) விடை தெறியவில்லை
57. கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024க்கான சின்னம் (Mascot) பின்வருவனவற்றில் எது?
* பனிச்சிறுத்தை
ஹங்குல்
சிவப்பு நரி
இந்திய கானமயில்
E) விடை தெறியவில்லை
58 கீழ்க்கண்டவர்களுள் சிறைப்பறவை என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டவர் யார்?.
*A பெரியார்.
B இராஜாஜி.
C சிங்காரவேலன்.
D காமராஜர்.
E) விடை தெறியவில்லை
59) ஒரு துகள் சிறிது நேரம் இயக்கத்தில் இருக்கும்போது பின்வருவனவற்றில் எது பூஜ்ஜியமாக இருக்க முடியும்?
A) வேகம்
B) விசை
C) நேரம்
*D) இடப்பெயர்ச்சி
E) விடை தெறியவில்லை
60 வேதாரன்யம் உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய நாள் எது?.
A ஏப்ரல் 11
*B ஏப்ரல் 13
C ஏப்ரல் 15
D ஏப்ரல் 16
E) விடை தெறியவில்லை
61. சமீபத்தில், ‘கள்ளக்கடல்’ என்ற சொல் செய்திகளில் காணப்பட்டது, இது பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
கடலோர கிராமங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கலாச்சார விழா.
* இந்தியாவின் தென்மேற்குக் கரையோரத்தில் வீசும் அலைகளால் ஏற்படும் கடலோர வெள்ளம்.
மலபார் பகுதியில் பிரபலமான உள்ளூர் உணவு வகை.
கேரளாவின் கடலோரப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மீன்பிடி நுட்பம்.
E) விடை தெறியவில்லை
62) இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியா என்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர் யார்
a) முகமது அலி ஜின்னா
b) மௌலானா அபுல்கலாம் ஆசாத்
c) மகாத்மா காந்தி
*d) சர் சையது அகமது கான்
E) விடை தெறியவில்லை
63. கவின் 25க்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம்
*a. 60 %
b. 15 %
c. 25 %
d. 15/25
E) விடை தெறியவில்லை
64) பொருத்துக
A)இஸ்ரேல் – 1. போக்டிங்
B)ஜெர்மனி – 2. ஸ்டார்டிங்
C)டென்மார்க் – 3. பந்தெஸ்டாக்
D)நார்வே – 4. கெநெஸட்
A) 3 2 1 4
*B) 4 3 1 2
C) 2 1 4 3
D) 4 1 3 2
E) விடை தெறியவில்லை
65. நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஹப் துறைமுகமாக எந்த துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்?
* வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
பரதீப் துறைமுகம்
காண்ட்லா துறைமுகம்
மோர்முகாவ் துறைமுகம்
E) விடை தெறியவில்லை
66 பனையோலைகளில் எழுதப்பட்ட பிரதிகளைப் புத்தகமாகப் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?.
A உ.வே.சா.
*B சி.வை. தாமோதரம் பிள்ளை.
C ஆறுமுக நாவலர்.
D மறைமலையடிகள்.
E) விடை தெறியவில்லை
67. ஒரு வகுப்பில் உள்ள 5 மாணவர்கள் தலா 76 மதிப்பெண்களும், 7 மாணவர்கள் தலா 77 மதிப்பெண்களும் 8 மாணவர்கள் 78 மதிப்பெண்களும் சராசரியாக பெற்றுள்ளனர் எனில் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் சராசரியை காண்க?
A) 77.5.
*B)77.15.
C)77.25.
D)78.
E) விடை தெறியவில்லை
68) பச்சை தாவரங்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தங்கள் உணவைத் தானே உற்பத்தி செய்கின்றன. பின்வரும் எந்த ஊட்டச்சத்து செயல்முறையை அவை பின்பற்றுகின்றன?
A) சாறுண்ணும் ஊட்டச்சத்து
*B) தன்னூட்ட ஊட்டச்சத்து
C) ஒட்டுண்ணி ஊட்டச்சத்து
D) திண்ம உணவை விழுங்கும் ஊட்டச்சத்து
E) விடை தெறியவில்லை
69 வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்ட பென் யார்?.
*A ராதாபாய்.
B ரமாபாய்.
C ருக்குமனி இலட்சுமிபதி.
D துர்காபாய்.
E) விடை தெறியவில்லை
70) பெரியார் தொடங்கிய இதழ்களையும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a) குடியரசு – 1) 1935
b) புரட்சி – 2) 1925
c) விடுதலை – 3) 1934
d) பகுத்தறிவு – 4) 1933
a) 1 3 2 4
b) 2 3 4 1
c) 2 4 3 1
*d) 2 4 1 3
E) விடை தெறியவில்லை
71. பின்வரும் எந்த இடம் தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்க முன்மொழியப்படவில்லை?
காசம்பட்டி (திண்டுக்கல்)
செந்திரக்கிளை புனித தோப்பு (கடலூர்)
இடையபட்டி (மதுரை)
* அரிட்டாபட்டி (மதுரை)
E) விடை தெறியவில்லை
72) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க
கூற்று 1: அரசியலமைப்பின் பிரிவு 44 அரசு நெறியுறுத்தும் கோட்பாட்டில் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்துகிறது
கூற்று 2: திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல் மற்றும் வாரிசுரிமை போன்றவற்றின் அனைத்து மதங்களும் ஒரே முறையை பின்பற்றும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது
கூற்று 3: இந்தியாவில் முதல்முறையாக பொது சிவில் சட்டம் ஜார்கண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
*A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 2 மற்றும் 3 சரி
C) கூற்று 2 மட்டும் சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
E) விடை தெறியவில்லை
73. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹70000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
*a. ₹64512
b. ₹65512
c. ₹66512
d. ₹62512
E) விடை தெறியவில்லை
74 பணியாளர் தேர்வுக்கழகம் எந்த அமைச்சரவை மூலம் கொண்டுவரப்பட்டது?.
*A பனகல் அரசர்.
B சுப்பாராயன்.
C முனுசாமி.
D தியாகராஜர்.
E) விடை தெறியவில்லை
75) “அமிலம்“ பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை ? 1) அது நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும். 2) அது 7 – ஐ விட அதிகமான pH மதிப்பு உடையது. 3) அது காரத்துடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றது.
a) 1 மற்றும் 2
*b) 1 மற்றும் 3
c) 2 மற்றும் 3
d) 3 மட்டும்
E) விடை தெறியவில்லை
76. ஆதித்யா-L1 மிஷன் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. இது சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்வெளி திட்டம்.
2. இது GSLV M3 விண்கலன் மூலம் ஏவப்படுகிறது.
3. இது புவியிலிருந்து 15 இலட்சம் கி.மீ தூரத்தில் L2 புள்ளியில் நிலை நிருத்தப்படுகிறது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 & 2
1 & 3
* 2 & 3
1, 2 & 3
E) விடை தெறியவில்லை
77 கீழ்க்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய நபர் யார்?.
கூற்று I சாதிப் படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமுகநீதீ, சமத்துவம், சமுக உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடினார்.
கூற்று ii 1893 ஆதிதிராவிடர் மகாஜனசபை என்னும் அமைப்பை நிறுவினார்.
கூற்று iii 1923இல் சென்னை மாகான சட்டசபையின் உறுப்பினர் ஆனார்.
கூற்று iv 1932இல் பூனா ஒப்பந்தத்தில் கையெலுத்திட்டவர்களில் இவரும் ஒருவர்.
A மயிலை சின்னதம்பி ராஜா .
B அயோத்திதாசர்.
*C ரெட்டைமலை சீனிவாசன்.
D ஆரியா.
E) விடை தெறியவில்லை
78) பொருத்துக
a) சாக்கிய பௌத்த சங்கம் – 1) ரெட்டமலை ஸ்ரீனிவாசன்
b) ஆதி திராவிட மகாஜன சபை – 2) எம். சி. ராஜா
c) அகில இந்திய ஒடுக்கப்பட்டவர்கள் சங்கம் – 3) அயோத்திதாசப் பண்டிதர்
d) சென்னை பிராமணர் அல்லாதோர் சங்கம் – 4) சுப்ரமணியன்
a) 1 3 2 4
b) 2 3 1 4
*c) 3 1 2 4
d) 3 4 1 2
E) விடை தெறியவில்லை
79. இரு எண்களின் விகிதம் 1:2 இவ்விரு எண்களுடன் 7ஐ கூட்டினால் விகிதமானது 3:5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்?
a. 17
b. 12
*c. 28
d. 36
E) விடை தெறியவில்லை
80. சாகித்ய அகாடமி விருதுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
1. சாகித்ய அகாடமி, 1954-ல் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் நிருவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு.
2. 2023-ஆம் ஆண்டிற்கான விருது பெற்ற நீர்வழி படூம் நூல் காவேரி நதியை மையமாக கொண்ட ஒரு புதினம்.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
* 1 மட்டும்
2 மட்டும்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
E) விடை தெறியவில்லை
81) கீழ்காணும் கூற்றுக்களில் சரியானதை கண்டறிக
கூற்று 1 : 1989 ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன
கூற்று 2 : 2003 இல் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வாக்கு அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டு ராணுவ சட்டத்திற்கு இசைவான வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது
கூற்று 3 : 2011 இல் தேர்தல் செலவினங்களுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது.
A) கூற்று 2, 3 சரி 1 தவறு
B) கூற்று 1, 3 சரி 2 தவறு
C) கூற்று 1 , 2 சரி 3 தவறு
*D) அனைத்தும் சரி
E) விடை தெறியவில்லை
82 சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் எது?.
A விடுதலை.
B பகுத்தறிவு.
C புரட்சி.
*D குடியரசு.
E) விடை தெறியவில்லை
83. 2010ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ. 30000 என பணியில் சேர்கிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ. 600 ஆண்டு ஊதியம் உயர்வாகப் பெறுகிறார் அவருடைய ஆண்டு ஊதியம் எத்தனை வருடத்திற்கு வருடத்தில் 39000 ஆக இருக்கும்?
a. 2023
b. 2024
*c. 2025
d. 2026
E) விடை தெறியவில்லை
84) பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன ?
a) ஃபிசியாலஜி
*b) ஃபைக்காலஜி
c) மைக்காலஜி
d) போமாலஜி
E) விடை தெறியவில்லை
85. நர்கீஸ் முகமதி, 2023-ல் செய்திகளில் அதிகளவில் இடம்பெற்றார். இவர் பின்வரும் எதனோடு தொடர்புடையவர்?
* அமைதிக்கான நோபல் பரிசு வென்றதற்காக
இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றதற்காக
சௌதி அரேபியாவின் முதல் உலக அழகி போட்டியாளர்
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர்
E) விடை தெறியவில்லை
86 பிராமணர் அல்லாதோர் கூட்டறிக்கையினை வெளியிட்டவர் யார்?.
A டி எம் நாயர்.
B நடேச முதலியார்.
C பனகல் அரசர்.
*D பி. தியாகராயர்.
E) விடை தெறியவில்லை
87) மீரட் சதி வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சியானவர் யார்
a) மணிலால்
b) முசாபர் அகமது
*c) குலாம் ஹுசைன்
d) வேலாயுதம்
E) விடை தெறியவில்லை
88. இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பொ.வா. 5 எனில் அவ்வெண்கள் யாவை?
(A) 30, 20
(B) 25, 12
(C) 10, 30
*(D) 15, 20
E) விடை தெறியவில்லை
89) அரசு தனது பொருளாதார இலக்குகளை அடைய 14 மிகப்பெரிய வணிக வங்கிகளை எப்போது தேசிய மயமாக்கியது?
A) 27 ஜூலை 1969
B) 3 ஜூலை 1969
*C) 19 ஜூலை 1969
D) 17 ஜூலை 1969
E) விடை தெறியவில்லை
90. 5+11+17+….. என்ற தொடரின் 16வது உறுப்பை காண்க.
*a. 95
b. 94
c. 96
d. 97
E) விடை தெறியவில்லை
91. 2023-ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் என்ன?
* அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி.
மனித உரிமை அனைவருக்குமானது
உலகளாவிய மனிதநேயம்
மனித உரிமை ஒவ்வொருவரின் பிறப்புரிமை
E) விடை தெறியவில்லை
92 நான்கும் உடையானாம் வேந்தனுக்கு ஒளி என்று வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?.
A இயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவகுத்தல்.
B கல்வி, செல்வம், வீரம், ஒழுக்கம்.
C அறம், பொருள், இன்பம், வீடு.
*D கொடை, கருனை, நீதீ, தளர்ந்த குடிகளைக் காத்தல்.
E) விடை தெறியவில்லை
93) பசுபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பைத் தொடங்கியவர் யார்
a) சோகன்சிங் பத்னா
b) லாலா லஜபதிராய்
c) மோகன்சிங்
*d) லாலா ஹர்தயால்
E) விடை தெறியவில்லை
94. தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
a. 15 ஆண்டுகள்
*b. 20 ஆண்டுகள்
c. 30 ஆண்டுகள்
d. 13 ஆண்டுகள்
E) விடை தெறியவில்லை
95. கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்
(A) 7 மீட்டர்
(B) 8 மீட்டர்
(C) 15 மீட்டர்
*(D) 56 மீட்டர்
E) விடை தெறியவில்லை
96) ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்வது
*a) லெய்டிக் செல்கள்
b) செர்டோலை செல்கள்
c) ஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
d) ஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
E) விடை தெறியவில்லை
97) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க
கூற்று – 1: ஆறாவது ஐந்தாண்டு திட்டம் 1980 முதல் 1985 வரை செயல்படுத்தப்பட்டது
கூற்று – 2: இத்திட்டத்தின் நோக்கம் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் ஆக்கப்பூர்வமான வேலை வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது
கூற்று – 3: இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் 5.7% வளர்ச்சி எட்டப்பட்டது
A) கூற்று 1 மற்றும் 2 சரி
B) கூற்று 2 மற்றும் 3 சரி
*C) கூற்று 3 மற்றும் 1 சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
E) விடை தெறியவில்லை
98. BDF, CFI, DHL,…. என்ற தொடரின் அடுத்த உறுப்பு யாது?
a. CJM
b. EIM
*c. EJO
d. EMI
E) விடை தெறியவில்லை
99) வெளிநாட்டினர் அவசரச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
a) 1908
b) 1910
c) 1911
*d) 1914
E) விடை தெறியவில்லை
100. அடுத்த எண்ணை கண்டறிக.
840, 168, 42, 14, 7, ______
*a. 7
b. 1
c. 0
d. -7
E) விடை தெறியவில்லை