*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1) குறளை நிறைவு செய்க
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
பண்புடைமை என்னும் வழக்கு.
A) இரண்டும்
B) இவையிரண்டும்
*C) இவ்விரண்டும்
D) என இரண்டும்
2) திருக்குறளில் பயின்றுவரும் மோனை வகையைத் தேருக
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
A) இணை மோனை
B) கூழை மோனை
C) மேற்கதுவாய் மோனை
*D) கீழ்க்கதுவாய் மோனை
3) குறளில் இடம்பெற்றுள்ள எதுகை வகையைத் தேருக
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
*A) இணை எதுகை]
B) கூழை எதுகை
C) முற்றெதுகை
D) பொழிப்பு எதுகை
4) ஒருவரின் மேன்மைக்கு உரைகல் என்று வள்ளுவர் குறிப்பிடுவது எது
A) தமக்குத் தீமை செய்பவருக்கும் நன்மை செய்தல்
B) ஒருவரின் நற்பண்புகள்
C) பிறர் குறைகளைப் பேசாதிருப்பது
*D) தனக்கு ஒப்பில்லாதவரிடத்தும் தோல்வியை ஏற்றுக் கொள்ளுதல்
5) திருக்குறளில் இடம்பெறாத சொல் எது
A) வேளாண்மை
B) அரசு
C) மகிழ்ச்சி
*D) தமிழ்
6) தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான்
தேசம் உடுத்திய நூலாடை!
என்று திருக்குறளைப் புகழ்பவர் யார்
A) முடியரசன்
*B) தாரா பாரதி
C) வானிதாசன்
D) தமிழ்ஒளி
7) தமிழில் திரு என்ற அடைமொழியில் வருகின்ற முதல் நூல் எது
A) திருப்புகழ்
B) திருமந்திரம்
*C) திருக்குறள்
D) திருச்சாழல்
8) பொருத்துக
A) இயற்கை ஓவியம் – 1) சிந்தாமணி
B) இயற்கை இன்பக்கலம் – 2) திருக்குறள்
C) இயற்கை வாழ்வு இல்லம் – 3) கலித்தொகை
D) இயற்கைத்தவம் – பத்துப்பாட்டு
A) 4 1 2 3
B) 4 1 3 2
*C) 4 3 2 1
D) 4 3 1 2
9) கல்வி அழகே அழகு என்று கல்வியின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடும் நூல் எது
A) நான்மணிக்கடிகை
B) திருக்குறள்
*C) நாலடியார்
D) ஆத்திசூடி
10) சிருபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்
A) நல்லாதனார்
*B) காரியாசான்
C) விளம்பி நாகனார்
D) பெருவாயில் முல்லியார்
11) நல்லொழுக்கத்தை விதைக்கும் வித்துக்களாக ஆசாரக்கோவை குறிப்பிடாதது எது
A) நன்றியறிதல்
B) பொறையுடைமை
C) இன்னாசெய்யாமை
*D) கேள்வி
12) “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்
தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல்”
இப்பாடல் இடம்பெறும் நூல் எது
A) ஆசாரக்கோவை
B) பழமொழி நானூறு
*C) திரிகடுகம்
D) நாலடியார்
13) “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்”
என்று கூறும் ஔவையாரின் நூல் எது
A) ஆத்திசூடி
*B) கொன்றைவேந்தன்
C) நல்வழி
D) மூதுரை
14) திங்கள் தானாக ஒளி வீசுவதில்லை என்ற அறிவியல் கருத்தைக் கூறும் நூல் எது
*A) திருக்குறள்
B) திருவள்ளுவமாலை
C) தொல்காப்பியம்
D) நாலடியார்
15) சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்
2) இவர் திருவஞ்சைக்களத்தில்பிறந்தார்
3) இவர் தமிழில் பெருமாள் திருமொழி மற்றும் முகுந்தமாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்
*A) கூற்றுகள் 1 2 சரி
B) கூற்றுகள் 1 3 சரி
C) கூற்றுகள் 2 3 சரி
D) கூற்றுகள் 1 2 மற்றும் 3 சரி
16) சோழன் செங்கனான் 78 கோயில்களைக் கட்டினான் என்ற செய்தி யாருடைய பதிகத்தில் இடம்பெற்றுள்ளது
*A) அப்பர்
B) சம்பந்தர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
17) சீராபுராணத்தில் இடம்பெற்றுள்ள காண்டங்களை வரிசைப்படுத்துக
1) விலாதத்துக் காண்டம்
2) நுபுவ்வத்துக்காண்டம்
3) ஹிஜ்றத்துக் காண்டம்
A) 2 1 3
B) 2 3 1
C) 3 2 1
*D) 1 2 3
18) சித்தர் என்ற பொருளைத் தரும் நிறைமொழி மாந்தர் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
1) தொல்காப்பியம்
2) திருக்குறள்
3) நன்னூல்
4) புறப்பொருள் வெண்பாமாலை
A) 1 3
B) 2 4
C) 3 4
*D) 1 2
19) “நாடொணாது அமிர்தம் உண்டு
நான் அழிந்து நின்ற நாள்”
என்று பாடிய சித்தர் யார்
A) திருமூலர்
B) கடுவெளிச்சித்தர்
*C) சிவவாக்கியர்
D) பட்டினத்தார்
20) அழகிய சொக்கநாதர் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க
1) இவர் பிரந்த ஊர் தச்சநல்லூர்
2) இவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
3) இவர் 22 கு மேற்பட்ட தனிப்பாடல்களைப் பாடியுள்ளார்
A) 1 2 சரி
*B) 1 3 சரி
C) 2 3 சரி
D) 1 2 3 சரி
21) “இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங்
கருதிக் காய்வனோ என்றயிர்”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
A) பாஞ்சாலி சபதம்
B) குயில் பாட்டு
*C) மனோன்மணியம்
D) சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல்
22) பண்ணவர் என்ற சொல்லின் பொருள் என்ன
A) அசுரர்
*B) தேவர்
C) முனிவர்
D) மனிதர்
23) ‘மதோன்மத்தர்’ என அழைக்கப்படுபவர் யார்?
A) பெருமாள்
B) திருமால்
C) இயேசு
D) சிவபெருமான்
24) பாரதியார் தொடர்பானவைகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
*A) சந்திரிகையின் கதை தராசு – கட்டுரைகள்
B) குயில்பாட்டு பாஞ்சாலி சபதம் – காவியங்கள்
C) பாப்பா பாட்டு ஆத்திசூடி – குழந்தைகளுக்கான நீதி நூல்கள்
D) இந்தியா விஜயா – இதழ்கள்
25) காளமேகப் புலவர் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1) காளமேகப் புலவரது இயற்பெயர் வரதன் ஆகும்
2) திருவானைக்கா உலா சரஸ்வதி அந்தாதி சித்திர மடல் பரப்பிரம்ம விளக்கம் போன்ற நூல்கள் இவர் இயற்றியவையாகும்
A) கூற்று 1 தவறு
*B) கூற்று 2 தவறு
C) கூற்றுகள் 1 2 இரண்டும் தவறு
D) மேற்கூறிய எதுவும் இல்லை
26) திரிகூட ராசப்பரால் குற்றாலத்தின்மீது எவ்வகை இலக்கியம் பாடப்படவில்லை
A) மாலை
*B) உலா
C) யமக அந்தாதி
D) சிலேடை
27) குற்றால மலையில் எந்த ஒன்று மட்டுமே வாடுவதாகத் திரிகூடராசப்ப கவிராயர் கூறுகிறார்
A) தவம் செய்வோரது உள்ளம்
B) சிறுவர்கள் கால்களின் அணியும் கிண்கினிகள்
C) முத்துகளை ஈனும் சங்குகள்
*D) பெண்களின் மெல்லிடை
28) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல”
விருந்தோம்பல் பற்றிக் கூறும் இவ்வடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன
A) சிலப்பதிகாரம்
B) கம்ப ராமாயணம்
*C) கலிங்கத்துப்பரணி
D) புறநானூறு
29) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) தூது என்னும் இலக்கிய வகை வாயில் இலக்கியம் சந்து இலக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது
2) இது வெண்கலிப்பாவால் இயற்றப்படுகிறது
3) தமிழ்விடு தூது நூலை உ.வே.சா 1930 ஆம் ஆண்டு பதிப்பித்தார்
A) 1 2 சரி
B) 2 3 சரி
*C) 1 3 சரி
D) 1 2 மற்றும் 3 சரி
30) “பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ”
என்று பாடியவர் யார்
A) பாரதிதாசன்
*B) பாரதியார்
C) தாரா பாரதி
D) முடியரசன்
31) தேம்பாவணியில் இடம்பெறும் கருணையன் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) கிறித்துவுக்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான்
2) இவரது வேறு பெயர் அருளப்பர்
3) கிறித்துவின் வருகையை அறிவித்தவர் இவரே
A) கூற்றுகள் 1 2சரி
B) கூற்றுகள் 2 3 சரி
C) கூற்றுகள் 1 3 சரி
*D) கூற்றுகள் 1 2 மற்றும் 3 சரி
32) திருவாலவாய் காண்டம் திருவிளையாடற் புராணத்தில் எத்தனையாவது காண்டமாக இடம்பெற்றுள்ளது
A) முதலாவது
B) இரண்டாவது
*C) மூன்றாவது
D) நான்காவது
33) சொல்லையும் பொருளையும் பொருத்துக
A) வையை நாடன் – 1) தருமி
B) நம்பி – 2) பாண்டியன்
C) விபுதர் – 3) அந்தணன்
D) பனவன் – 4) புலவர்
A) 2 1 3 4
*B) 2 1 4 3
C) 3 1 2 4D) 4 3 2 1
34) உலகம் உயிர் கடவுள் ஆகியவற்றை ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரிய புராணம் என்று பெரிய புராணத்தைப் புகழ்ந்தவர் யார்
A) மீனாட்சி சுந்தரனார்
*B) திரு. வி. க.
C) ஒட்டக்கூத்தர்
D) மேற்கூறிய யாரும் இல்லை
35) “ஈட்டுபுகழ் நந்தி பாணநீ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர் நரியென்றார் தோழி
நாயென்றாள் நீ என்றேன் நான்”
நந்திக்கலம்பகப் பாடலில் பாணன் பாடியதை நாய் குரைத்தது என்று கூறியது யார்
A) தலைவி
*B) தோழி
C) தலைவியின் தாய்
D) பிறர்
36) திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்ற செய்தியை எந்த சங்க நூல் கூறுகிறது
*A) அகநானூறு
B) புறநானூறு
C) ஐங்குறுநூறு
D) கலித்தொகை
37) சவரி பிறப்பு நீங்கு படலம் கம்பராமாயணத்தில் எந்தக் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது
A) அயோத்தியா காண்டம்
*B) ஆரணிய காண்டம்
C) கிட்கிந்தா காண்டம்
D) யுத்த காண்டம்
38) “வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்”
என்று இராமனிடம் கூறியவர் யார்
A) குகன்
B) வீடணன்
*C) சுக்ரீவன்
D) சவரி
39) ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையை அவை இடம்பெறும் நூல்களஉக்கேற்பப் பொருத்துக
A) அகநானூறு – 1) 15
B) புறநானூறு – 2) 33
C) குறுந்தொகை – 3) 4
D) நற்றிணை – 4) 7
A) 1 2 3 4
B) 1 3 2 4
*C) 3 2 1 4
D) 4 1 2 3
40) இராமலிங்க அடிகளின் சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது
A) சென்னை
B) வடலூர்
C) மருதூர்
*D) கந்தகோட்டம்
41) சிறப்புப் பாயிரம் தற்சிறப்புப் பாயிரம் உட்பட ஏலாதியில் எத்தனை பாடல்கள் உள்ளன
A) 70
B) 71
C) 80
*D) 81
42) “நாய்க்கால் சிறு விரல்போல் நன்கணிய ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்”
இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது
A) நான்மணிக்கடிகை
B) திருக்குறள்
*C) நாலடியார்
D) ஆத்திசூடி
43) மனைக்கு விளக்கம் என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுவது
*A) மனைவி
B) புதல்வர்கள்
C) கல்வி
D) புகழ்
44) “வைதோரைக் கூட வையாதே இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே”
என்று பாடிய சித்தர் யார்
A) திருமூலர்
*B) கடுவெளிச்சித்தர்
C) சிவவாக்கியர்
D) பட்டினத்தார்
45) பதுமத்தான் என்று இராமச்சந்திர கவிராயர் குறிப்பிடுவது
A) சிவன்
B) திருமாள்
*C) பிரம்மன்
D) முருகன்
46) மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் யார்
A) மீனாட்சி சுந்தரனார்
*B) திரு. வி. க.
C) சி.சு. செல்லப்பா
D) பறிதிமார்க் கலைஞர்
47) செல்வத்தால் உண்டாகும் நன்மையைக் காட்டிலும் ——————— ஆல் ஆகும் நன்மை சிறந்தது என்று முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுகிறது
A) நோய் இல்லாமல் இருத்தலால் உண்டாகும் நன்மை
B) தன்னிடம் இருக்கும் செல்வம் குறையாமல் இருத்தலால் உண்டாகும் நன்மை
C) வாய்மையால் உண்டாகும் நன்மை
D) கற்றது மறவாதிருத்தலால் உண்டாகும் நன்மை
48) நான்மணிமாலை என்ற இலக்கிய வகை கீழ்வரும் எதனால் பாடப்படுவதில்லை
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) ஆசிரிய விறுத்தம்
*D) கலிப்பா
49) இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனாரின் காலம் என்ன
*A) கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
B) கி.பி. மூன்றாம் நூற்றாண்டு
C) கி.பி. நான்காம் நூற்றாண்டு
D) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு
50) புகழேந்திப் புலவர் யார் அவையில் அவைக்களப் புலவராக இருந்தார்
A) முதலாம் குலோத்துங்கன்
*B) வரகுணப் பாண்டியன்
C) வரபதியாட்கொண்டான்
D) சந்திரன் சுவர்கி
51) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்ற அடிகள் திருமந்திர்தின் எந்தத் தந்திரத்தில் இடம்பெற்றுள்ளது
A) முதலாவது தந்திரம்
B) இரண்டாவது தந்திரம்
*C) மூன்றாவது தந்திரம்
D) நான்காவது தந்திரம்
52) கன்னப் பருவம் வில்லி பாரதத்தின் எத்தனையாவது பருவமாக அமைந்துள்ளது
A) ஆறாவது
B) ஏழாவது
*C) எட்டாவது
D) பத்தாவது
53) பிள்ளைத்தமிழ் நூலில் ஆறாவது பருவமாக அமைவது எது
B) காப்பு
B) சப்பானி
C) அம்புலி
*D) வருகை
54) பாஞ்சாலி சபதம் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1) பாஞ்சாலி சபதம் 2 பாகங்களைக் கொண்டது
2) பாஞ்சாலி சபதம் 5 சருக்கங்களைக் கொண்டது
3) பாஞ்சாலி சபதம் 2 சருக்கங்களைக் கொண்டது
4) பாஞ்சாலி சபதம் 5 பாகங்களைக் கொண்டது
A) 1 2 தவறு
*B) 3 4 தவறு
C) 1 3 தவறு
D) 2 4 தவறு
55) “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்”
இப்புறநானூற்றுப் பாடலின் ஆசிரியர் யார்
A) நக்கீரர்
B) வெள்ளிவீதியார்
*C) தேவகுலத்தார்
D) நல்வேட்டனார்
56) புகாரில் கப்பல்கள் தரியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன என்ற செய்தியைக் கூறும் நூல் எது
A) மதுரைக்காஞ்சி
B) சிலப்பதிகாரம்
C) மணிமேகலை
*D) பட்டிணப்பாலை
57) தாரகனின் மார்பைப் பிளந்தவள் யார்
A) கொற்றவை
B) பிடாரி
C) காலி
*D) துர்க்கை
58) சிலப்பதிகாரக் காண்டங்கள் மற்றும் காதைகள் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1) புகார் காண்டம் 13 காதைகளைக் கொண்டது
2) வஞ்சிக் காண்டம் 7 காதைகளைக் கொண்டது
3) மதுரைக் காண்டம் 7 காதைகளைக் கொண்டது
A) கூற்றுகள் 1, 2 தவறு
B) கூற்றுகள் 1, 3 தவறு
C) கூற்றுகள் 2, 3 தவறு
*D) கூற்றுகள் 1, 2 மற்றும் 3 தவறு
59) நல்வேட்டனார் குறுந்தொகையில் எத்தனை பாடல்கள் பாடியுள்ளார்
*A) 1
B) 2
C) 3
D) 4
60) கோப்பெருஞ்சோழனின் அவைப்புலவர், யார்
A) பிசிராந்தையார்
*B) கண்ணகனார்
C) கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி
D) குடபுலவியனார்
61) பாடல் அடிகளை அவை இடம்பெறும் நூல்களோடு பொருத்துக
A) தமிழ் கெழு கூடல் – 1) பரிபாடல்
B) தமிழ் வேலி – 2) தேவாரம்,
C) கூடலில் ஆய்ந்த ஒன்தீந்தமிழின் – 3) திருவாசகம்
4) பண்ணொடும் தமிழொப்பாய் – 4) புறநானூறு
A) 4 1 2 3
*B) 4 1 3 2
C) 4 3 2 1
D) 1 2 4 3
62) திருக்குறள் தோன்றியிராவிட்டால் தமிழினம், தமிழ் மொழி பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்
A) ஜி.யூ. போப்
B) திரு.வி.க
*C) கி.ஆ.பே. விஸ்வநாதம்
D) திருக்குறள் முனிசாமியார்
63) பழங்காலத்தில் ஆழ்துளைக் கினறு இருந்தமை பற்றிக் கூறும் நூல் எது
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) கம்பராமாயணம்
*D) பெருங்கதை
64) ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் தொகுப்பித்தவர் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) இந்நூலைத் தொகுப்பித்தவன் பண்ணாடு தந்த பாண்டியன் மாரன் வழுதி
2) இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு
65) சீராப்புராணத்தின் எந்தக் காண்டத்திற்கு செலவியற் காண்டம் என்ற வேறு பெயர் உண்டு
A) விலாதத்துக் காண்டம்
B) நுபுவ்வத்துக்காண்டம்
*C) ஹிஜ்றத்துக் காண்டம்
D) 1, 2
66) சொல்ல வந்த கருத்தை உள்ளுறை வழியாக உரைப்பது எந்த நூலின் சிறப்பு ஆகும்
A) குறுந்தொகை
B) ஐங்குறுநூறு
*C) அகநானூறு
D) புறநானூறு
67) திருவாசகம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) திருவாசகத்தில் 38 பதிகங்கள் உள்ளன
2) திருவாசகத்தில் 51 சிவத் தளங்கள் பாடப்பெற்றுள்ளன
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*ீ. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
68) மனோன்மணீயம் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு்க்க
1) மனோன்மணீயம் தமிழின் முதல் உரைநடை நாடக நூல்.
2) இது 5 அங்கங்கள் மற்றும் 20 கலங்களைக் கொண்டது
3) இந்நூலில் உள்ள கிளைக்கதை சிவகாமி சபதம்
A) கூற்றுகள் 1, 2 தவறு
*B) கூற்றுகள் 1, 3 தவறு
C) கூற்றுகள் 2, 3 தவறு
D) கூற்றுகள் 1, 2 மற்றும் 3 தவறு
69) வில்லி பாரதம் எவ்வகை பாவால் ஆன நூல்
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) கலிப்பா
*D) விறுத்தப்பா
70) அம்மூவனாரின் பாடல்கள் கீழ்வரும் எந்த சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை
A) குறுந்தொகை
B) அகநானூறு
*C) புறநானூறு
D) ஐங்குறுநூறு
71) “புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
இவ்வடி இடம்பெறும் நூல் எது
A) நெடுநல்வாடை
B) பதிற்றுப்பத்து
*C) மணிமேகலை
D) சிலப்பதிகாரம்
72) சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) நன்னூற்புலவன் என்று சிறப்பிக்கப்படுபவர் இளங்கோவடிகள்
2) நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகளைப் புகழ்ந்தவர் சீத்தலைச் சாத்தனார்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு
73) பாடல் அடிகளையும் அவை இடம்பெறும் நூல்களையும் பொருத்துக
A) பகைபுரத்துக் கொடுத்த பட்டிமண்டபம் – 1) மணிமேகலை
B) பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் – 2) கம்பராமாயணம்
C) பட்டிமண்டபம் ஏற்றினை – 3) திருவாசகம்
D) பண்ண அரும் கலைதெரி பட்டிமண்டபம் – 4) சிலப்பதிகாரம்
A) 4 1 2 3
*B) 4 1 3 2
C) 4 3 2 1
D) 4 2 1 3
74) சிலப்பதிகாரம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) கண்ணகிக்குச் சிலைவடித்த செய்தியைக் கூறுகிறது
2) கடைச்சங்ககாலத்தில் வட்டெழுத்துக்கள் வழக்கத்தில் இருந்த செய்தியைக் கூறுகிறது
3) பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்தபின், கொற்கையிலிருந்த பட்டத்து இளழரசன் வெற்றிவேற் செழியன் மதுரை வந்து அறியனை ஏறினான் என்ற செய்தியைக் கூறுகிறது
4) மாலிகைகளில் சுதைச் சிற்பங்கள் இருந்த செய்தியைக் கூறுகிறது
A) கூற்றுகள் 1, 2 சரி
B) கூற்றுகள் 2, 3 சரி
*C) கூற்றுகள் 1, 3 சரி
D) கூற்றுகள் 2, 4 சரி
75) கருத்துகளையும் அவற்றைக் கூறிய சங்கப் புலவர்களையும் பொருத்துக
A) வள்ளலின் பொருள் இறவலரின் பொருள், வள்ளலின் வறுமை இறவலரின் வறுமை – 1) ஆவூர் மூலங்கிழார்
B) தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது – 2) பெரும்பதுமனார்
C) குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் – 3) பெருங்கடுங்கோ
D) உறவினர் கெட வாழ்பவனின் பொலிவு அழியும் – 4) ஊண் பொதி பசுங்குடையார்
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 2 3 1 4
*D) 2 1 4 3
76) சித்தன் என்ற சொல் சிலப்பதிகாரத்தின் எந்தக் காதையில் இடம்பெறுகிறது
A) ஊர்காண் காதை
B) காடுகாண் காதை
*C) நாடுகாண் காதை
D) வரந்தரு காதை
77) யசோதரக் காவியப் பாடலுக்கேற்பப் பொருத்துக
A) ஆக்குவது – 1) வெகுளி
B) போக்குவது – 2) அறம்
C) நோக்குவது – 3) விரதம்
D) காக்குவது – 4) ஞானம்
A) 1 2 3 4
B) 2 3 4 1
*C) 2 1 4 3
D) 2 1 3 4
78) நூல்களையும் பாடல் எண்ணிக்கையையும் பொருத்துக
A) திருவிளையாடற்புராணம் – 1) 3615
B) தேம்பாவணி – 2) 3363
C) இராவணகாவியம் – 3) 3766
D) இரட்சன்ய யாத்ரீகம் – 4) 3100
A) 2 3 1 4
B) 2 1 3 4
C) 2 4 1 3
*D) 2 1 4 3
79) இரச்சண்ய யாத்ரீகம் நூலின் முதல் பதிப்பு எந்த ஆண்டு வெளியானது
A) 1891
B) 1892
C) 1893
*D) 1894
80) சென்னிகுளம் அண்ணாமலையார் முதலில் தமிழில் பாடிய சிந்து வகை எது
A) வழிநடைச் சிந்து,
B) நொண்டிச்சிந்து,
C) வளையற்சிந்து,
*D) வண்ணச்சிந்து
81) தன்னை அறிந்த நிலையில் ஆண்மா தானே தனக்குத் தலைவனாக நிற்கும் என்று கூறிய சித்தர் யார்
*A) திருமூலர்
B) கடுவெளிச்சித்தர்
C) சிவவாக்கியர்
D) பட்டினத்தார்
82) ஆண்டாள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) நாச்சியார் திருமொழியை இயற்றியவர் ஆண்டாள்
2) இவர் நம்மாழ்வாரின் வளர்ப்பு மகளாவார்
3) இவர் பாடிய பாடல்கள் ஏழாம் திருமொழியில் உள்ளன
*A) கூற்று 1 சரி
B) கூற்றுகள் 1 3 சரி
C) கூற்று 2 சரி
D) கூற்றுகள் 2 3 சரி
83) திருமயிலாப்பூர் பதிகம், பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) திருமயிலாப்பூர் பதிகம், திருனாவுக்கரசர் பாடியதாகும்
2) இது மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு
84) நம்பி ஆரூரன் என்ற சிறப்புப் பெயருக்கு உறியவர் யார்
A) அப்பர்
B) சம்பந்தர்
*C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
85) மாணிக்கவாசகர் பாடிய திருச்சாழல் எங்குள்ள கோவிலில் பாடப்பெற்றது
A) மதுரை
B) நெல்லை
*C) தில்லை
D) திருவாதவூர்
86) நீர் மேகமாகி மீண்டும் மழையாகப் பொழிகிறது என்ற செய்தியைக் கூறாத நூல் எது
A) திருக்குறள்
B) கார்நாற்பது
C) முல்லைப்பாட்டு
*D) பதிற்றுப்பத்து
87) இளங்கோவடிகள் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1) இலங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது
2) இளங்கோவடிகள் சேரமன்னர் மரபைச் சார்ந்தவர் என்று வரந்தரு காதை கூறுகிறது
A) கூற்று 1 சரி
B) கூற்று 2 சரி
C) கூற்றுகள் 1, 2 சரி
D) கூற்றுகள் 1, 2 தவறு
88) காவடி எடுக்கும் அடியார்கள் பாடும் திருப்புகழ் முழக்கமானது, எங்குள்ள உள்ள தேவர்களின் செவியைச் சென்று அடைக்கிறது என்று காவடிச்சிந்து கூறுகிறது
A) கழுகுமலை
B) செண்ணிக்குளம்
*C) அமராவதிப் பட்டினம்
D) ஊற்றுமலை
89) “அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ”
என்று தொடங்கும் வெள்ளிவீதியாரின் குருந்தொகைப் பாடல் எந்தத் திணையைச் சார்ந்தது
A) குறிஞ்சித்திணை
B) முல்லைத்திணை
C) மருதத்திணை
D) நெய்தல் திணை
90) நற்றிணையில் இடம்பெறும் 13 அடி பேரெல்லை கொண்ட பாடலைப் பாடியவர் யார்
*A) போதனார்
B) மோசிகீரனார்
C) ஔவையார்
D) நல்வேட்டனார்
91) பூவகைகளை உறிய நிலத்தோடு பொருத்துக
A) வேங்கை – 1) முல்லை
B) தோன்றி – 2) நெய்தல்
C) முண்டகப்பூ – 3) குறிஞ்சி
D) தாமரை – 4) மருதம்
A) 3 2 1 4
*B) 3 1 2 4
C) 3 4 2 1
D) 3 2 4 1
92) ஓரறிவு உயிர்களையும் விரும்பும் பண்பு, விருந்தோம்பல், அற வழியில் பொருளீட்டல் முதலிய தமிழர் தம் உயர் பண்புகளைத் தெள்ளத் தெளிவாய் எடுத்தியம்பும் நூல் எது
*A) நற்றிணை
B) குறுந்தொகை
C) ஐங்குறுநூறு
D) புறநானூறு
93) “காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவலமைத்து”
என்று வரும் பொங்கல்் விழா பற்றிய பாடல் அடிகளுக்குச் சொந்தக்காரர் யார்
A) பெரியாழ்வார்
B) பொய்கையாழ்வார்
*C) ஆண்டாள்
D) மதுரகவியாழ்வார்
94) நல்லந்துவனார் கலித்தொகையில் எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார்
A) 29
B) 35
*C) 33
D) 18
95) எந்த மாவட்டப் பேச்சுவழக்கை முக்கூடற்பள்ளு நூலில் ஆங்காங்கே காண முடிகிறது
A) மதுரை
B) கோவை
C) சென்னை
*D) திருநெல்வேலி
96) ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் புதரில் விதைத்த விதையைப் போன்ற பயனற்றது என்று உறைக்கும் நூல் எது
A) பழமொழி நானூறு
B) ஏலைதி
*C) திரிகடுகம்
D) திருக்குறள்
97) இனியவை நாற்பது நூலில் உள்ள ஒவ்வொரு பாடலும் எத்தனை நற்கருத்துகளைக் கூறுகின்றது
A) 3
B) 4
C) 5
D) 3 அல்லது 4
98) எங்கு எழுந்தருளியுள்ள முருகனின் பெயர் முத்துக்குமாரசாமி ஆகும்
A) திருத்தனி
B) திருப்பரங்குன்றம்
C) சுவாமிமலை
*D) வைதீஸ்வர்ன் கோவில்
99) பொருந்தாத ஒன்றைக் கண்டறி: எட்டுத்தொகைப் பாடல் மற்றும் அடிவரையறை
*A) நற்றிணை – 4 முதல் 8 அடி
B) ஐங்குறுநூறு – 3 முதல் 6 அடி
C) அகநானூறு – 13 – 31 அடி
D) குறுந்தொகை – 4 முதல் 8 அடி
100) மடப்பிடி யார்?
A) சீதை
*B) பாஞ்சாலி
C) மாதவி
D) கண்ணகி
1) இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது?
A) சரத்து 47
B) சரத்து 48
C) சரத்து 50
*D) சரத்து 51
E) விடை தெரியவில்லை
2) குணபரன் சத்திய சந்தன் சேத்தகாரி என்ற பெயர்களை சூட்டிக்கொண்டவர் யார்?.
A) முதலாம் ராஜராஜன்.
*B) முதலாம் மகேந்திரவர்மன்.
C) முதலாம் குலோத்துங்கன்.
D) முதலாம் நரசிம்மவர்மன்.
E) விடை தெரியவில்லை
3) GST தொடர்பான சட்ட திருத்தங்களை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்பதை கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
A) சட்டப்பிரிவு 280
B) சட்டப்பிரிவு 265A
C) சட்டப்பிரிவு 279A
*D) சட்டப்பிரிவு 246A
E) விடை தெரியவில்லை
4) 1966 முதல் 1969 வரையிலான திட்ட விடுமுறை காலத்திற்கான காரணம் என்ன?
(i) மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் தோல்வி
(ii) இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர்
(iii) இரண்டாவது திட்ட ஆணையம் காலம் தாழ்ந்து அமைக்கப்பட்டது
A) 1 மட்டும்
*B) 1 மற்றும் 2
C) 1 மற்றும் 3
D) இவை அனைத்தும்
E) விடை தெரியவில்லை
5) பெருங்குளத்தின் வடிவம் எவ்வாறு அமைந்திருந்தது?.
A) சதுரம்.
B) வட்டம்.
C) நீள்வட்டம்.
*D) செவ்வகம்.
E) விடை தெரியவில்லை
6) நிலச் சீர்திருத்தங்களை எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம்?
A) 3
B) 7
*C) 4
D) 5
E) விடை தெரியவில்லை
7) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாத போது குடியரசு தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
A) துணை குடியரசுத் தலைவர்
*B) உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி
C) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
D) பிரதமர்
E) விடை தெரியவில்லை
8) குதுப்பினார் தூனின் உயரம் எத்தனை அடி?
A) 233 அடி.
*B) 243 அடி.
C) 253 அடி.
D) 263 அடி.
E) விடை தெரியவில்லை
9) தில்வாரா என்பது?.
A) பௌத்த கோவில்
*B) சமன கோவில்.
C) இந்து கோவில்
D) ஆசிவக கோவில்
E) விடை தெரியவில்லை
10) தகவல் அறியும் உரிமை சட்டத்தை பரிந்துரை செய்தவர் யார்?
A) ஹனுமந்தையா
B) நரசிம்மராவ்
*C) வீரப்ப மொய்லி
D) ராமச்சந்திரன்
E) விடை தெரியவில்லை
11) அறுவைசிகிச்சை அதன் செயல்முறை பற்றி விளக்கிய முதல் இந்தியர்?.
A) தன்வந்திரி.
B) சரகர்.
*C) சுஷ்ருதர்.
D) அக்னிவாசர்.
E) விடை தெரியவில்லை
12) தஞ்சாவூர் பண்ணையால் பாதுகாப்பு சட்டத்தின் விளைவுகளில் சேராதது எது?
A) சிறு குத்தகை விவசாயிகள் தங்கள் விளைச்சலில் நியாயமான பங்கினை பெற முடிந்தது
B) குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலில் நியாயமான பங்கினை வழங்காதவர்களிடமிருந்து நிலம் பெறப்பட்டு, உழுதவருக்கே நிலம் சொந்தம் என்னும் அடிப்படையில் வழங்கப்பட்டது
C) வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்யப்பட்டது
*D) அதிகமாக நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து நிலம் பெறப்பட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது
E) விடை தெரியவில்லை
13) இந்திய மதசார்பின்மையின் தந்தை?.
*A) ஜவகர்லால் நேரு.
B) காந்தி.
C) நேதாஜீ.
D) படேல்.
E) விடை தெரியவில்லை
14) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :
கூற்று : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வளங்களை கட்டுப்படுத்துகிறது.
காரணம் : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினை கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி ஆனால், காரணம் தவறு
D) கூற்று தவறு ஆனால், காரணம் சரி
E) விடை தெரியவில்லை
15) இந்திய தலைமை தேர்தல் ஆணையரை குடியரசு தலைவர் எந்த விதியின் கீழ் நியமிக்கிறார்?
A) 324
B) 324 (1)
*C) 324 (2)
D) 325 (1)
E) விடை தெரியவில்லை
16) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 33 (7) ன் படி ஒரு வேட்பாளர் —-?
A) ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும்
*B) இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும்
C) அதிகபட்சமாக மூன்று தொகுதிகளில் போட்டியிடலாம்
D) ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்
E) விடை தெரியவில்லை
17) பொருத்துக?.
1 இந்துமதம்-மெகர்ஜிரானா.
2 சொரஷ்டிர்ய மதம்-புருசோத்தம் தேவி.
3 கிருஷ்தவமதம்-அக்பாவிவா மன்சரட்
4 சமணம்-ஹிரவிஜயசூரி
A) 3 4 2 1
B) 1 2 3 4
C) 2 3 1 4
*D) 2 1 3 4
E) விடை தெரியவில்லை
18) 2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
A) எட்வர்ட் கிளேசர்
*B) கிளாடியா கோல்டின்
C) கிர்ஷ்டின் லகார்டு
D) ஜான் லிஸ்ட்
E) விடை தெரியவில்லை
19) நெருக்கடி நிலையில் இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சியில் இருந்து ஒற்றை ஆட்சிக்கு மாற
*A) இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவை இல்லை
B) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் சேர்ந்து ஒப்புதல் வழங்க
வேண்டும்
C) முறையான அரசியலமைப்பு சட்ட திருத்தம் தேவை
D) 2/3 மாநிலங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்
E) விடை தெரியவில்லை
20) கீழ்கானும் கூற்றுகளை படித்து சரியான கூற்றை கண்டுபிடி?.
1 அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆனின் சிலை மொகஞ்சதாரோவில் ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
2 அச்சிலை நெற்றியில் ஒரு பட்டையுடனும் வலது கையின் மேல்பகுதியில் ஒரு சிறிய அனிகலனும் காணப்பட்டது.
3 வலது தோல் பூக்களாலும் வளையங்களாலும் முடப்பட்ட ஒரு மேல் அங்கியால் முடப்பட்டிருந்தது.
A) மூன்று கூற்றுகளும் சரி.
*B) கூற்று ஒன்று மற்றும் இரண்டு சரி.
C) கூற்று இரண்டு மற்றும் மூன்று சரி.
D) கூற்று ஒன்று மற்றும் மூன்று சரி.
E) விடை தெரியவில்லை
21) ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் பொருந்தாத நபர் யார்?
A) குலாம் நபி ஆசாத்
B) அமித்ஷா
C) ஆதிரஞ்சன் சௌத்ரி
*D) அர்ஜுன் ராம் மெக்வால்
E) விடை தெரியவில்லை
22) நாடு தழுவிய வெண்மை புரட்சி தொடங்கி வைக்கப்பட்ட ஆண்டு என்ன?
A) 1950
B) 1957
C) 1960
*D) 1966
E) விடை தெரியவில்லை
23) சிந்துவெளி மக்கள் எந்த உலோகம் பற்றி அறிந்துஇருந்தனர்?.
*A) செம்பு வேள்ளி வென்கலம் தங்கம்.
B) செம்பு வெள்ளி இரும்பு தங்கம்.
C) செம்பு தங்கம் இரும்பு வேள்ளி.
D) செம்பு வென்கலம் இரும்பு தங்கம்
E) விடை தெரியவில்லை
24) 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி எத்தனை அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டன?
A) 3
B) 7
C)12
*D) 5
E) விடை தெரியவில்லை
25) ஆன்லைன் விளையாட்டு களுக்கான GST எத்தனை சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது?
A) 5%
B) 12%
C) 18%
*D) 28%
E) விடை தெரியவில்லை
26) பொருந்தாததை கண்டுபிடி?.
A) பொம்மலாட்டம்.
B) கரகாட்டம்.
C) கோளாட்டம்.
*D) ராஜலீலா.
E) விடை தெரியவில்லை
27) சோழர்காலத்தில் கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?.
A) கிராமங்கள் கூட்டமைப்பு.
B) வளநாடுகள்.
*C) கூற்றங்கள்.
D) கிராம சபை ஊர்கள்.
E) விடை தெரியவில்லை
28) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க.
கூற்று : உணவுப் பொருட்களின் மீதான எல்லா வித கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார்.
காரணம் : அத்தகைய கட்டுப்பாடுகள் இயற்கை பற்றாக்குறையை உருவாக்கும் என்று காந்தி கூறினார்.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
*D) கூற்று சரி ஆனால், காரணம் தவறு
E) விடை தெரியவில்லை
29) அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு பரிந்துரை செய்த குழு எது?
*A) பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிட்டி
B) ஃபசல் அலி ஆணையம்
C) காக்கா கலேல்கர் குழு
D) சர்க்காரியா குழு
E) விடை தெரியவில்லை
30) கானிங்காரா என்ற பட்டம் பெற்றவர் யார்?.
A) முகமது ஜா .
*B) பகுலுல் லோடி.
C) சிக்கந்தர் லோடி.
D) முகமது பின் துக்ளக்
E) விடை தெரியவில்லை
31) ஐந்தாண்டு திட்டங்களையும் அவற்றின் முதன்மை நோக்கங்களையும் பின்வரும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
a) முதலாவது ஐந்தாண்டு திட்டம் – 1) தொழில் முன்னேற்றம்
b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2) நிலையான வளர்ச்சி மற்றும் தற்சார்பு
c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 3) சுதந்திரமான பொருளாதார மற்றும் சுய முன்னேற்றம்
d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் – 4) வேளாண் வளர்ச்சி
A) 2, 1, 3, 4
B) 3, 2, 4, 1
*C) 4, 1, 3, 2
D) 4, 1, 2, 3
E) விடை தெரியவில்லை
32) ஒரு மாநிலத்தின் செயலாற்றும் அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும் எனக் கூறும் அரசியலமைப்பு விதி எது?
A) 153
*B) 154
C) 164
D) 168
E) விடை தெரியவில்லை
33) முகவுரையை இந்திய அரசியலமைப்பின் ஜாதகம் என்று கூறியவர் யார்?
A) எர்னஸ்ட் பர்கர்
B) N A பல்கி வாளா
C) பதஞ்சலி சாஸ்திரி
*D) K M முன்சி
E) விடை தெரியவில்லை
34) இந்தியாவில் முதன்முதலாக போர்களில் பீரங்கி படையை பயன்படுத்தியவர் ?.
A) அக்பர்.
*B) பாபர்.
C) செர்ஷா.
D) தைமுர்.
E) விடை தெரியவில்லை
35) சிந்துசமவெளி மக்களால் பயன்படுத்தப்பட்ட தந்ததினால் ஆன அளவுகோள் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் எது?.
A) ராஜஷ்தான்.
*B) குஜராத்.
C) பீகார்.
D) டெல்லி.
E) விடை தெரியவில்லை
36) பின்வருவனவற்றுள் எது இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்ல?
*A) பணத்தின் நடுநிலைமையை காத்தல்
B) மாற்று வீதத்தை கட்டுப்படுத்துதல்
C) வணிக வங்கிகளை கட்டுப்படுத்துதல்
D) வங்கி கடன்களை கட்டுப்படுத்துதல்
E) விடை தெரியவில்லை
37) மத்திய அமைச்சர்கள் தனித்தனியாக குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானவர்கள் என்பதை குறிப்பிடும் அரசியலமைப்பு சரத்து எது?
A) 73
*B) 75
C) 78
D) 79
E) விடை தெரியவில்லை
38) ‘இந்திய வனப்பணி’ மூன்றாவது அகில இந்திய பணியாக நிறுவப்பட்ட ஆண்டு எது?
A) 1965
*B) 1966
C) 1967
D) 1968
E) விடை தெரியவில்லை
39) குப்த பேரரசின் அங்கிகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?.
*A) விஷ்னு குப்தர்.
B) பாலாதித்தர்.
C) ஷ்கந்த குப்தர்.
D) ஸ்ரீ குப்தர்.
E) விடை தெரியவில்
40) தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்ட நாள் எது?
A) ஜூலை 1, 1984
*B) நவம்பர் 1, 1986
C) நவம்பர் 1, 1984
D) ஜூலை 22, 1986
E) விடை தெரியவில்லை
41) ‘வரி என்பது ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் அரசிடமிருந்து எந்த ஒரு நன்மையையும் எதிர்பாராமல் அரசுக்கு கட்டாயம் செலுத்தக்கூடியதாகும்’ என்று கூறியவர் யார்?
*A) அணடோல் முராட்
B) ஆடம் ஸ்மித்
C) கீன்ஸ்
D) டால்டன்
E) விடை தெரியவில்லை
42 குப்தர்களின் அலுவலக மொழி?.
A) பிராக்கிருதம்.
*B) சமஷ்கிருதம்.
C) பாலி.
D) ஹிந்தி.
E) விடை தெரியவில்லை
43) 1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வரதட்சணை தடை சட்டம் எந்த ஆண்டு திருத்தப்பட்டது?
A) 1966
B) 1976
C) 1978
*D) 1986
E) விடை தெரியவில்லை
44) எந்த நிறுவனத்துடன் இணைந்து “டீல்ஸ்” என்னும் திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது?
A) Google
*B) Microsoft
C) Adobe
D) NIDIA
E) விடை தெரியவில்லை
45) பாபரை இந்தியாவின்மீது படையெடுக்கும்படி அழைத்தவர் யார்?.
A) பஃலுல் லோடி.
B) தில்வர்கான் லோடி.
C) இப்ராகிம் லோடி.
*D) தௌலத்கான் லோடி.
E) விடை தெரியவில்லை
46) குடியரசு தலைவர் பொது நலனுக்காக மாநிலங்களுக்கிடையேயான குழுவை உருவாக்கலாம் என்று கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
A) சட்டப்பிரிவு 265
B) சட்டப்பிரிவு 270
*C) சட்டப்பிரிவு 263
D) சட்டப்பிரிவு 248
E) விடை தெரியவில்லை
47) சத்ரியா என்பது எந்த மாநிலத்தின் நடனம் ?.
A) குஜராத்.
B) மேகாலயா.
C) திரிபுரா.
*D) அஷ்ஷாம்.
E) விடை தெரியவில்லை
48) எந்த நிறுவனம் எண்ம மாற்றத்துக்கான பிரிவில் 2019 – 2020 ஆம் ஆண்டின் “ஸ்கோப் எமினென்ஸ்” விருதை பெற்றது?
A) BHEL
B) SAIL
*C) NLC
D) NTPL
E) விடை தெரியவில்லை
49) நாளந்தா பல்கலைகழகத்தில் எத்தனை மிகப்பெரிய நூலகங்கள் இருந்தன?.
A) 2.
*B) 3.
C) 5.
D) 8.
E) விடை தெரியவில்லை
50) இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசியக் கட்சிகளில் தவறானது எது?
A) பாரதிய ஜனதா கட்சி
*B) தேசியவாத காங்கிரஸ்
C) தேசிய மக்கள் கட்சி
D) பகுஜன் சமாஜ் கட்சி
E) விடை தெரியவில்லை
51) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முதல் முதலில் அமல்படுத்திய நாடு எது?
*A) அமெரிக்கா
B) ஸ்பீடன்
C) நியூசிலாந்து
D) இந்தியா
E) விடை தெரியவில்லை
52) முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?.
A) இந்தியர்கள்.
B) சீனர்கள்.
*C) சுமெரியர்கள்.
D) ஆங்கிலேயர்கள்.
E) விடை தெரியவில்லை
53) பாலின அடிப்படையில் வேலைவாய்ப்பில் பாரபட்சத்தை தடை செய்யும் இந்திய அரசியலமைப்பு பிரிவு?
*A) 16 (2)
B) 15 (3)
C) 16 (1)
D) 15 (1)
E) விடை தெரியவில்லை
54) எந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி நபார்டு வங்கி தொடங்கப்பட்டது?
A) ரத்தினவேல் பாண்டியன் குழு
B) பொதுக் கணக்கு குழு
C) நரசிம்மன் குழு
*D) சிவராமன் குழு
E) விடை தெரியவில்லை
55) காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் ?
A) மகேந்திரவர்மன்.
B) நரசிம்மவர்மன்.
*C) ராஜசிம்மன்.
D) சிம்ம விஷ்னு.
E) விடை தெரியவில்லை
56) வேளாண் காடுகளுடன் கூடிய தரிசு நிலத்தை மறுசீரமைக்க ‘நிதிஆயோக்’ ஆல் தொடங்கப்பட்ட திட்டம் எது?
*A) GROW
B) GROWTH
C) SNOW
D) WETLAND
E) விடை தெரியவில்லை
57) தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 2016 சிறப்பம்சம் என்ன?
A) மூன்றடுக்கு முறையில் மாற்றம்
B) மாவட்ட திட்ட குழுக்களை அமைத்தது
C) குறிப்பிட்ட அதிகாரங்கள் மாநில அரசிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு மாற்றப்பட்டது
*D) 50 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது
E) விடை தெரியவில்லை
58) தத்துவ ஞான இளவரசன் என்று அறியப்பட்டவர்?.
A) கம்ரான்.
B) ஔரங்கசிப்.
*C) தாராஷ்கோ.
D) ஜாஜகான்.
E) விடை தெரியவில்லை
59) இந்திய மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் காண்க?
1) மகாராஷ்டிரா
2) தமிழ்நாடு
3) உத்திரபிரதேசம்
4) மேற்குவங்கம்
5) பீகார்
A) 2, 1, 4, 3, 5
B) 3, 4, 2, 5, 1
C) 4, 2, 3, 1,5
*D) 3, 1, 4, 5, 2
E) விடை தெரியவில்லை
60) பின்வரும் கூற்றுக்களை கவனிக்க.
கூற்று 1 : இந்தியாவில் அதிக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கூற்று 2 : தமிழ்நாட்டில் 72 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன.
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
E) விடை தெரியவில்லை
61) உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ள மாநிலம் எது?
A) கோவா
*B) குஜராத்
C) பீகார்
D) ஹரியானா
E) விடை தெரியவில்லை
62) கிருஷ்னதேவராயர் எந்த மரபை சேர்ந்தவர்?.
A) சாலுவ.
B) சங்கம.
C) ஆரவீடு.
*D) துலுவ.
E) விடை தெரியவில்லை
63) தற்போது வரை முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
*A) 1
B) 2
C) 4
D) தற்போது வரை திருத்தப்படவில்லை
E) விடை தெரியவில்லை
64) 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குறைவான மக்கள் அடர்த்தியை கொண்டுள்ள மாநிலம் எது?
*A) அருணாச்சலப் பிரதேசம்
B) பீகார்
C) மகாராஷ்டிரா
D) மேற்கு வங்கம்
E) விடை தெரியவில்லை
65) பின்வருவனவற்றுள் பணவீக்கம் ஏற்படுவதற்கான மிகச் சரியான காரணம் எது?
*A) பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு
B) பொருட்களுக்கான தேவை குறைவு
C) பொருளாதார தேக்க நிலை
D) பணவாட்டம்
விடை தெரியவில்லை
66) முதல் திருத்தச் சட்டம் பற்றிய வாக்கியங்களில் எது / எவை சரியானது?
1) முதல் திருத்தச் சட்டம் 1952 இல் இயற்றப்பட்டது.
2) முதல் திருத்தச் சட்டம் முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
3) இது தற்காலிக பாராளுமன்றதால் இயற்றப்பட்டது.
A) 1 மற்றும் 2
B) 1 மற்றும் 3 சரி
*C) 2 மற்றும் 3 சரி
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
67) கபதசரகா என்பது ஒரு?.
A) குடியிருப்பு நிலம்.
B) வேளான்மைக்கு உகந்த நிலம்.
*C) மேய்ச்சல் நிலம்.
D) வணம் அல்லது காட்டு நிலம்.
E) விடை தெரியவில்லை
68) பின்வரும் குழுக்களையும் அவை அமைக்கப்பட்ட ஆண்டுகளையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
a) பல்வந்த்ராய் மேத்தா குழு – 1) 1977
b) L N சின்வி குழு – 2) 1957
c) அசோக் மேத்தா குழு – 3) 1985
d) -G V K ராவ் கமிட்டி – 4) 1986
A) 2, 1, 3, 4
*B) 2, 1, 4, 3
C) 2, 3, 1, 4
D) 3, 1, 2, 4
E) விடை தெரியவில்லை
69) புரந்தர் உடண்படிக்கையின்படி சிவாஜீ எத்தனை கோட்டைகளை முகலாயரிடம் ஒப்படைத்தார்?.
A) 20
*B) 23
C) 25
D) 35
E) விடை தெரியவில்லை
70) ஆங்கிலேயர்களால் வங்காளம் மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்ட வரி வசூல் முறை எது?
A) மகல் வாரி
B) ரயத்துவாரி
*C) ஜமீன்தாரி
D) கிராமவாரி
E) விடை தெரியவில்லை
71) பின்வரும் எந்த விதிகள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் உறவுகளை விவரிக்கின்றன?
A) 73, 74, 75
B) 75, 77
C) 77, 78, 79
*D) 74, 75 78
E) விடை தெரியவில்லை
72) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க.
கூற்று : குடியரசு தலைவர் விரும்பும் வரை ஆளுநர் பதவியில் நீடிப்பார்
காரணம் : மாநில ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
E) விடை தெரியவில்லை
73) பண்டைய சோழ அரசின் தலைநகரம் ?.
A) தஞ்சாவுர்.
B) காவேரி பூம்பட்டிணம்.
C) கங்கைகொண்டான்.
*D) உறையூர்.
E) விடை தெரியவில்லை
74) பின்வருவனவற்றுள் எது ஐந்தாண்டு திட்டங்களின் சாதனை அல்ல?
A) பொருளாதாரத்தை விரிவு படுத்தியது
*B) அதிக அளவில் ஒருமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரம்
C) தேசிய வருமானத்திலும் தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி
D) தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிப்பு
E) விடை தெரியவில்லை
75) மாநில அரசின் உண்மையான அதிகார மையம் எது?
A) முதலமைச்சர்.
B) ஆளுநர்
*C) அமைச்சரவை
D) சட்டமன்றம்
E) விடை தெரியவில்லை
76) மார்க்கபோலோ இரண்டாம் முறையாக காயலுக்கு வந்த ஆண்டு?.
A) 1188
B) 1193
C) 1288
*D) 1293
E) விடை தெரியவில்லை
77) கீழ்காணும் எந்த இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எட்டாவது அட்டவணையின் கீழ் நான்கு மொழிகளை இணைத்து, அலுவலக மொழிகள் 22 ஆக உயர வழிவகை செய்தது?
*A) 92 ஆவது சட்ட திருத்தம்
B) 67 ஆவது சட்ட திருத்தம்
C) 84 ஆவது சட்ட திருத்தம்
D) 89 ஆவது சட்ட திருத்தம்
E) விடை தெரியவில்லை
78) பின்வருவனவற்றை கவனிக்க.
(i) கடன் பெறுவது எளிது
(ii) வியாபாரம் விசாலமாகும்
(iii) நுகர்வோர் அதிகம் நுகர்வர்
(iv) அதிக மக்கள் வேலை பெறுவார்கள்
(v) மக்கள் அதிகம் செலவு செய்வார்கள்
மேற்கண்ட பண்புகள் பணக்கொள்கையின் எந்த நிலையை தெரிவிக்கின்றன?
*A) பண வீக்கம்
B) மந்த நிலை
C) இவை இரண்டும்
D) பண வீழ்ச்சி
E) விடை தெரியவில்லை
79) சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
A) பீகார்
B) உத்திர பிரதேசம்
C) குஜராத்
*D) உத்தரகாண்ட்
E) விடை தெரியவில்லை
80) கொரிலா போர்முறை என்பது ஒரு?.
*A) முறைசாரா போர்முறை.
B) முறைசார் போர்முறை.
C) விதிகளுக்கு உட்பட்ட போர் முறை.
D) வெளிப்படையாக தாக்கும் போர்முறை.
E) விடை தெரியவில்லை
81) நிதிக்குழு என்பது —–
A) சட்டப்பூர்வ அமைப்பு
B) சட்டப்பூர்வமற்ற அமைப்பு
*C) பகுதி சார் சட்டப்பூர்வ அமைப்பு
D) மேற்கண்ட எதுவும் இல்லை
E) விடை தெரியவில்லை
82) ஒரு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றொரு மாநிலத்தில் விற்பனையாகும் போது, IGST க்கு முந்தைய பழைய ஆளுகை எது?
A) மாநில விற்பனை வரி + ஆயத்தீர்வை
B) VAT + மாநில ஆயத்தீர்வை
*C) மத்திய விற்பனை வரி + ஆயத்தீர்வை
D) VAT + மத்திய ஆயத்தீர்வை
E) விடை தெரியவில்லை
83) மத்திய நாடாளுமன்றத்தின் மூன்று பகுதிகளில் சேராதது அல்லது சேராதவர் யார்?
A) குடியரசு தலைவர்
B) மக்களவை
C) மாநிலங்களவை
*D) பிரதமர்
E) விடை தெரியவில்லை
84) டெல்லி நீதீமன்றத்தில் இந்து மத உயர்குடியினரை நியமித்தவர் யார்?.
*A) முபாரக் ஷா .
B) முகமது ஷா.
C) கிசிர்கான்.
D) அலாவுதின் ஷா.
E) விடை தெரியவில்லை
85) பின்வருவனவற்றுள் நிதிக் கருவி அல்லாதது எது?
A) அரசின் பொதுச் செலவுகள்
B) வரிவிதிப்பு
*C) பொருளாதாரத் தேக்கம்
D) அரசின் பொதுக்கடன்
E) விடை தெரியவில்லை
86) சர்வதேச பெண் குழந்தைகள் ஆண்டு எது?
A) 1978
B) 1979
*C) 1990
D) 1994
E) விடை தெரியவில்லை
87) தக்காவி எணப்படும் விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் யார்?.
A) காசிம்மாலிக்.
*B) பெரோஷ் துக்ளக்.
C) முகமது பின்துக்ளக்.
D) இரண்டாம் ஹியாசுதின் துக்ளக்.
E) விடை தெரியவில்லை
88) வரிவிதிப்பின் புனித விதிகள் பற்றிய கூற்றுகளில் சரியானது எது?
கூற்று 1 : ஒரு நல்ல வரியில் இருக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் தன்மைகள் புனித விதிகள் என விவரிக்கப்படுகிறது.
கூற்று 2 : புனித விதிகள் என்பவை அனைத்து வரிகளுக்கும் பொதுவானதாக இருக்கின்றது.
கூற்று 3 : ஒரு நல்ல வரி அமைப்பு என்பது அனைத்து வகை வரிகளை சரியாக இணைத்து புனித விதிகளை பெற்றிருக்க வேண்டும்.
கூற்று 4 : ஆடம் ஸ்மித் அவர்களின் கருத்துப்படி, மூன்று புனித விதிகள் உள்ளன.
*A) 1 மற்றும் 3
B) 1, 2 மற்றும் 4
C) 2 மற்றும் 4
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை
89) பஞ்சாயத்து ராஜ் பற்றி கூறும் அட்டவணை எது?
A) 7
B) 8
*C) 11
D) 12
E) விடை தெரியவில்லை
90) குருதேஜ்பகதூர் யாருடைய ஆட்சிகாலத்தில் கொள்ளப்பட்டார்?.
*A) ஔரங்கசிப்.
B) ஜாஜகான்.
C) ஜகாங்கீர்.
D) தாராஷ்கோ.
E) விடை தெரியவில்லை
91) பின்வருவனவற்றுள் பேரினப் பொருளியல் கொள்கை அல்லாதது எது?
A) பணவீக்கம்
*B) பண மதிப்பு இழப்பு
C) நுகர்ச்சி வளர்ச்சி
D) நீர்மை தன்மை
E) விடை தெரியவில்லை
92) வேள்விகுடிசெப்பேடுகளின் கொடையாளி யார்?.
அரிகேசரி மாறவர்மன்.
B) கடுங்கோன்.
*C) முதலாம் வரகுணன்.
D) முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்.
E) விடை தெரியவில்லை
93) கீழ்வரும் எந்த சட்ட திருத்தம் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குகிறது?
*A) 82ஆவது சட்டத் திருத்தம்
B) 76 ஆவது சட்டத் திருத்தம்
C) 44 ஆவது சட்ட திருத்தம்
D) 99 ஆவது சட்ட திருத்தம்
E) விடை தெரியவில்லை
94) கொடுக்கப்பட்டவைகளில் 1949 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படாத இடம் எது?
A) உத்திரபிரதேசம்
B) பீகார்
C) சென்னை
*D) பஞ்சாப் மற்றும் ஹரியானா
E) விடை தெரியவில்லை
95) இந்திய கோவில் கட்டிட கலையின் தொட்டில் எது?.
A) பட்டடக்கல்.
B) சோமநாதருரம்
*C) ஐகோல்
D) எல்லோரா.
E) விடை தெரியவில்லை
96) தேசிய மகளிர் ஆணையம் ஒரு —
A) அரசியலமைப்பு சார்ந்தது
*B) சட்டபூர்வ அமைப்பு
C) குடியரசு தலைவரின் தீர்மானம் மூலம் அமைக்கப்பட்ட அமைப்பு
D) மாநிலங்களவை தீர்மானம் மூலம் அமைக்கப்பட்ட அமைப்பு
E) விடை தெரியவில்லை
97) பசுமைப் புரட்சியின் மூலம் 1967 – 1968 ல் வேளாண் உற்பத்தி எத்தனை சதவீதம் அதிகரித்தது?
A) 25%
*B) 50%
C) 40%
D) 62%
E) விடை தெரியவில்லை
98) குடவோலை முறை தேர்தலில் பங்கேற்ப்பதற்க்கு உட்சபட்ச வயது?.
A) 35
B) 60
*C) 70
D) 75
E) விடை தெரியவில்லை
99) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை கவனிக்க.
கூற்று : வளர்ந்த நாடுகள் குறைவான மக்கள்தொகை வளர்ச்சியை கொண்டுள்ளன.
காரணம் : ஆப்பிரிக்க நாடுகள் அதிகமான மக்கள் தொகை வளர்ச்சியை கொண்டுள்ளன.
A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றை விளக்குகிறது.
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
D) கூற்று தவறு ஆனால், காரணம் சரி
E) விடை தெரியவில்லை
100) பின்வரும் கூற்றுகளை கவனிக்க.
கூற்று1 : லோக்பால் அமைப்பின் தலைவராக A M கான்வெல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூற்று 2 : லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக இருந்தவர் ரன்வீர் சிங்
கூற்று 3 : லோக்பால் அமைப்பு அதிகபட்சமாக 7 உறுப்பினர்களை கொண்டிருக்கும்.
கூற்று 4 : லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் நீதித்துறை சார்ந்த உறுப்பினர்களும் 50 சதவீதம் நீதித்துறை சாராத உறுப்பினர்களும் இருப்பார்கள்.
A) 1, 2 மற்றும் 4 சரி
B) 1 மற்றும் 3 சரி
*C) 1 மற்றும் 4 சரி
D) அனைத்தும் சரி
E) விடை தெரியவில்லை