*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
- ‘உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்’.
பாடலில் பயின்று வந்துள்ள அளபெடை எது?
உயிரளபெடை
இன்னிசை அலபெடை
*சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
2. சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. ‘Homograph’
கையெழுத்து
மெய்யெழுத்து
ஒற்றெழுத்து
*ஒப்பெழுத்து
3. தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் கண்டறிக.
‘இந்த மணிகண்டன் ஒருநாளும் பொய்சொல்ல மாட்டான்’
திணை வழுவமைதி
*இடவழுவமைதி
பால் வழுவமைதி
கால வழுவமைதி
4. வரிசைப்படுத்துக.
‘களிப்பா, வெண்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா’
செப்பல், அகவல், துள்ளல், தூங்கல்
துள்ளல், தூங்கல், அகவல், செப்பல்
*துள்ளல், செப்பல், தூங்கல், அகவல்,
தூங்கல், துள்ளல், அகவல், செப்பல்
5. அசும்பு என்ற சொல்லின் பொருள் யாது?
வானம்
*நிலம்
காற்று
கடல்
6. இலக்கணக்குறிப்பு தருக. ‘தடக்கை’
*உரிச்சொல் தொடர்
பண்புத்தொகை
தொழிற்பெயர்
இரண்டாம் வேற்றுமை உறுபும் பயனும் உடன்தொக்க தொகை
7. ‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.’
குறளில் பயின்றுள்ள தொடைநயத்தைக் குறிப்பிடுக.
ஒருவூ மோனை
பொழிப்பு எதுகை
அடி இயைபு
*ஒருவூ எதுகை
8. பிரித்தெழுதுக. ‘ஈராயிரம்
இரு+ஆயிரம்
ஈரு+ஆயிரம்
இரு+ஆயிரம்
*இரண்டு+ஆயிரம்
9. எதிர்ச்சொல் தருக. ‘கேண்மையினான்
உறவினன்
*பகைவன்
கிளைஞன்
தோழன்
10. பொருத்துக.
1. அவன் மாணவன் – அ. கட்டளைத்தொடர்
2. பூக்களைப் பறிக்காதீர் – ஆ. செயப்பாட்டு வினை
3. புத்தகம் தருவித்தான் – இ. பெயர்ப்பயனிலைத்தொடர்
4. பணம் களவு போயிற்று – ஈ. வியங்கொல்த்தொடர்
5. தலைவர் வாழ்க – உ. பிறவினைத்தொடர்
3,5,4,1,2
5,1,3,2,4
*3,1,5,2,4
4,3,2,1,5
11. “அடுபோர்”ச் செழிய! இகழாது வல்லே; குறியிடப்பட்ட சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு தருக.
உம்மைத்தொகை
*வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
*உறுபொருள்
நன்பொருள்,
விடை தெரியவில்ஐ
தண்மணல்
நல்லுரை
13. “கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்”
தொடரிலுள்ள பிழையைச் சரிசெய்க.
கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
*கீழடியில் வாழ்ந்த மக்களுல் பலர் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
கீழடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தற்களாக இருந்துள்ளனர்
கீலடியில் வாழ்ந்த மக்களுள் பலர்ச் செல்வந்தர்களாக இருந்துள்ளனர்
14. ‘தீயவை தீய பயத்தலால் தீயவை\
தீயினும் அஞ்சப் படும்.’
குறளில் பயின்றுள்ள தொடைநயம் எது?
அடி எதுகை
முற்றெதுகை
சீர்மோனை
*கீழ்க்கதுவாய் மோனை
15. பிரித்தெழுதுக. தத்தம்
தங்கள் + தங்கள்
தமது + தம்
*தம் + தம்
தத்து + தம்
16. கீழ்க்கண்ட சொற்களில் தவறானது எது?
அ. தரும்படிச் சொன்னார்
ஆ. திருவளர்ச்செல்வன்
அ தவறு ஆ சரி
அ சரி, ஆ தவறு
இரண்டும் சரி
*இரண்டும் தவறு
17. “கார் அறுத்தான்” தொடரில் பயின்றுள்ள ஆகுபெயர் யாது?
பொருளாகுபெயர்
*காலவாகு பெயர்
இடவாகுபெயர்
பண்பாகு பெயர்
18. சரியான வரிசையைக் கண்டறிக.
குறள் அடி, கழிநெடிலடி, சிந்தடி, நெடிலடி, அளவடி
6,5,4,2,3
*2,6,3,5,4
2,3,6,4,5
2,5,4,3,6
19. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும்
கனக முன்றில் அனம் விளையாடும்
பாடலில் பயின்றுள்ள தொடை யாது?
எதுகைத்தொடை
முரண் தொடை
*இயைபுத்தொடை
மோனைத்தொடை
20. பொருந்தாத இணையைக் கண்டறிக.
வாரணம்-களிறு
அலர்தல்-மலர்தல்
துப்பு-உணவு
*நசை-வசை
21. ‘குறளின்பத்தில் திளைக்காத தமிழன் இல்லை.’
தொடருக்கான சரியான வினா எது?
குறளின்பத்தில் திளைக்காத தமிழன் இல்லையா?
*குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா
குறளின்பத்தில் திளைக்காத தமிழன் தமிழனா?
குறளின்பத்தில் திளைக்காதவன் யார்?
22. ‘நீளுழைப்பு’ – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
நீளு + உழைப்பு
நீண் + உழைப்பு
நீள் + அழைப்பு
*நீள் + உழைப்பு
23. சீருக்கு + ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
சீருக்கு ஏற்ப
*சீருக்கேற்ப
சீர்க்கேற்ப
சீருகேற்ப
24. சம்பிரமுடன் என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
*முறையாக
துணையுடன்
சிலருடன்
கட்டுண்ட
25. “ஓடி வா” என்ற சொல் எவ்வகை வினைமுற்று?
வியங்கோல் வினைமுற்று
*ஏவல் வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று
இறந்தகால வினைமுற்று
26. பொருத்துக:
அ. படித்த பையன் – 1. குறிப்புப் பெயரெச்சம்
ஆ. நடித்து – 2. தெரிநிலைப் பெயரெச்சம்
3. பெரிய வீடு – 3. வினைமுற்று
4. நடந்தான் – வினையெச்சம்
*2,4,1,3
2,3,1,4
4,3,1,2
3,4,1,2
27. “மெதுவாகப் போனேன்” என்ற தொடரில் வெளிப்படுவது?
தெரிநிலை வினையெச்சம்
குறிப்புப் பெயரெச்சம்
*குறிப்பு வினையெச்சம்
தெரிநிலைப் பெயரெச்சம்
28. “பால்குடித்துப் பசியாறினேன்”. தொடரின் வேற்றுமைத்தொகையினைக் கண்டறிக.
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
நான்காம் வேற்றுமைத்தொகை
ஆறாம் வேற்றுமைத்தொகை
*இரண்டாம் வேற்றுமைத்தொகை
29. ‘அலந்தவர்’ சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக.
சிறந்தவர்
*பணக்காரர்
வறியவர்
சிறியவர்
30. “குழந்தாய் பசிக்கிறதா?” இது எவ்வகைத்தொடர்?
வினைமுற்றுத்தொடர்
எழுவாய்த்தொடர்
அன்மொழித்தொடர்
*விளித்தொடர்
31. பொருத்தமான சொல்லுறுபைக் கொண்டு நிரப்புக.
யாழ், தமிழர் இசைக்கருவி.
கொண்டு
*உடைய
காட்டிலும்
இருந்து
32. ‘இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.’
ஒல்லை என்பதன் பொருள் யாது?
முற்றிலும்
உறவு
*விரைந்து
நாடு
33. ‘பொருட்காட்சி’ சொல்லில் நிகழ்ந்த புணர்ச்சி யாது?
தோன்றல்
*திரிதல்
மறைதல்
இயல்பு
34. “கிழக்குகடல் நோக்கி வந்தக் கப்பல் பழுதடைந்துவிட்டது”. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
கிழக்குக்கடல் நோக்கி வந்தக் கப்பல் பழுதடைந்துவிட்டது
“கிழக்குகடல் நோக்கி வந்த கப்பல் பழுதடைந்துவிட்டது”. தொ
கிழக்கு கடல் நோக்கி வந்தகப்பல் பழுதடைந்துவிட்டது.
*கிழக்குக்கடல் நோக்கி வந்த கப்பல் பழுதடைந்துவிட்டது.
35. பிழையான சொல்லைக் கண்டுபிடி.
மலர்ப்பாதம்
*வெற்றிலைப்பாக்கு
திருவளர்செல்வன்
பட்டுப்பூச்சி
36. ஞானி என்பதன் சரியான ஆங்கிலச்சொல் எது?
Schollar
*saint
Mentor
Loyalist
37. பொருத்துக.
அ. நிறை – 1. விருப்பம்
ஆ. பொச்சாப்பு – 2. ஆராய்ந்து தெளிதல்
இ. மையல் – 3. சோர்வு
ஈ. ஓர்ப்பு – 4. பகை
உ. இகல் – 5. மேன்மை
*5,3,1,2,4
5,1,2,4,3
3,2,4,1,5
4,3,5,1,2
38. பொருந்தாத இணையைக் கண்டறிக.
கான்-விடர்
முகில்-மஞ்சு
வேழம்-களிறு
*பழனம்-அஞ்சனம்
39. ‘அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.’
குறளில் பயின்றுள்ள தொடைநயம் யாது?
அடி இயைபு
*ஒருவு இயைபு
பொழிப்பு மோனை
இணை எதுகை
40. ‘எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற’.
விச்சை என்பதன் பொருள் யாது?
அறம்
செல்வம்
இன்பம்
*கல்வி
41. ‘கோவின் ஏ துளைத்த காவின் மா இதுவோ?’
அடியில் இடம்பெற்ற ஓரெழுத்துச் சொற்களை வரிசைப்படுத்துக.
மாமரம்-அம்பு-அரசன்-சோலை
சோலை-அரசன்-அம்பு-மாமரம்
அரசன்—சோலை-அம்பு-மாமரம்
*அரசன்-அம்பு-சோலை-மாமரம்
42. மண்’சூடு’ தணிய, ‘இடி’ இடிக்க, மழை ‘பொழிதல்’ மண்ணுயிர்க்கு நன்றாம்.
சொற்களின் இலக்கணக் குறிப்புகளை வரிசைப்படுத்துக.
விகுதிபெற்ற, முதனிலைத் திரிந்த, முதனிலை தொழிற்பெயர்
*முதனிலைத் திரிந்த, முதனிலை, விகுதிபெற்ற தொழிற்பெயர்
முதனிலை, விகுதிபெற்ற, முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
விகுதி பெற்ற, முதனிலை, முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
43. தமிழாக்கம் தருக. ‘Inscriptions’
கையெழுத்துப்படி
அகராதி
*கல்வெட்டு
சுவரோவியம்
44. சரியான வினாச்சொல்லைத் தேர்க.
“அறநெறிச்சாரத்தின் பொருள் –.”
என்ன?
எது?
எவ்வாறு?
*யாது?
45. பொருத்துக.
அ. நிலன்: – 1. மங்கலம்
ஆ. முன்றில்: – 2. முதனிலைத் தொழிற்பெயர்
இ. விதை: – 3. இலக்கணப்போலி
ஈ. தஞ்சை: – 4. கடைப்போலி
உ. காலஞ்சென்றார்: – 5. மரூஉ
*4,3,2,5,1
4,3,5,2,1
5,4,3,2,1
2,3,4,5,1
46. வேறுபட்ட சொல்லைக் கண்டறிக.
தாரணி
*பரம்
மேதினி
வையம்
47. “’குளிர்ச்சி’ மிகுதியால் அன்று ‘வேலை’க்குப் போகாமல் இருந்த அவன் நாசியைப் புது’வாசம்’ நிறைக்கவே ‘உள்ளம்’ மகிழ்ந்தான்.”
தொடரில் குறியிடப்பட்டுள்ள சொற்களுக்கு இணையான சொற்களை வரிசைப்படுத்துக.
மனம்,மணம்,பணி,பனி
*பனி,பணி,மணம்,மனம்
பணி,பனி,மனம்,மணம்
மனம்,பனி,மணம்,பணி
48. ‘மறம்’ எதிர்ச்சொல் தருக.
வீரம்
அறம்
*கோழைத்தனம்
சோம்பேறித்தனம்
49. ‘கதிர்ச்சுடர்’ பிரித்தெழுதுக.
கதிர்ச்+சுடர்
கதிர்+சுடர்
கதிரவன்+சுடர்
கதிரின்+சுடர்
50. ‘கவிஞாயிறு’ என்று அழைக்கப்படுபவர் யார்?
*தாராபாரதி
முடியரசன்
பெருஞ்சித்திரனார்
தேசிகவிநாயகனார்
51. சத்தியம், தருமம் – இணையான தமிழ்ச்சொல் தருக.
உறுதி, சமயம்
*உண்மை, அறம்
வாய்மை, வழி
நன்மை, நற்பயணம்
52. ‘ஈட்டினார்’ பொருத்தமான வினையாலணையும் பெயரைக் கண்டுபிடி.
ஈட்டி வந்தார்
ஈட்டியிருந்தவர்
*ஈட்டியவர்
ஈட்டுபவர்
53. “நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்குச் செல்வேன்” (பொருள்மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக)
“நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்கா செல்வேன்?”
“நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்குச் செல்வேனோ?”
“நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்குச் செல்வதுண்டோ?”
*“நான் வாரத்தின் இறுதிநாள்களில் நூலகத்திற்குச் செல்லாமல் இருப்பேனா?”
54. பொருத்துக.
பொருத்துக
அ) தொல்காப்பியம் – 1) சங்க நூல்
ஆ) திருக்குறள் – 2) பக்தி நூல்
இ) புறநானூறு – 3) அற நூல்
ஈ) திருவாசகம் – i4) இலக்கண நூல்
*4,3,1,2
4,1,2,3
2,4,3,1
3,2,4,1
55. விழிச்சுடர் வாசலில் உட்கார்ந்திருந்தாள். நேரம் நத்தையைப்போல மெதுவாக நகர்ந்தது.
தொடரிலுள்ள நயங்கள் எவை?
உவமை, உருவகம்
உள்ளுறை, இறைச்சி
*உருவகம், உவமை
உவமை, உள்ளுறை
56. ‘நண்பன்’ சொல்லுக்கான பொருத்தமான வடசொல் எது?
பிரியன்
*நேசன்
புத்திரன்
சகன்
57. பிழையில்லாத் தொடரைக் கண்டறிக.
“அனைத்துத்துறைகளிலும் ஆண்களை போலவேப்பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்”.
“அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெறவேண்டும்”.
“அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவேப் பெண்களும் அரசுப் பணியைப் பெறவேண்டும்”.
*“அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களும் அரசுப்பணியைப் பெறவேண்டும்”.
58. பண்டுவர் யார்?
அறிஞர்
*மருத்துவர்
புலவர்
முனிவர்
59. “பாதையோரம் நடந்து காற்று வாங்கப் போனால், கால் கடுத்தது.”
உரிய சொற்களை வரிசைப்படுத்துக.
வளி, வழி, வலி
வளி, வலி, வழி
*வழி, வளி, வலி
வழி, வலி, வளி
60. “காலத்துக்கேத்த மாரி புதுசுபுதுசா மொழி வடிவத்த மாத்தனும்”.
சரியான எழுத்து வழக்கு எது?
“காலத்துக்கேத்த மாதிரி புதுசுபுதுசா மொழி வடிவத்தை மாற்றணும்”.
“காலத்துக்கேற்ற மாதிரி புதிதுபுதிதா மொழி வடிவத்தை மாற்றணும்”.
“காலத்துக்கேற்ற மாதிரி புதிதுபுதிதாக மொழி வடிவத்தை மாற்றணும்”.
*“காலத்துக்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்”.
61. சம்பளம் என்ற திசைச்சொல்லின் சரியான தமிழ்ச்சொல் எது?
ஊதியம்
*கூலி
வருவாய்
படி
62. “அருணா வீட்டுக்கு வந்தாள்”. வேர்ச்சொல், வினைமுற்று, வினை எச்சம், பெயரெச்சச் சொற்களை வரிசைப்படுத்துக.
வந்த, வந்து, வந்தாள், வா
*வா, வந்தாள், வந்து, வந்த
வந்து, வந்தாள், வா, வந்த
வந்த, வா, வந்தாள் வந்து
63. சரியான தொடரைக் கண்டுபிடி.
“நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா”.
“நேற்று வந்த பையன் பக்கத்தில் யார் ஏன் இருக்கவில்லை தெரியுமா”.
“நேற்று ஏன் வந்த பையன், பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?”
*”நேற்று வந்த பையன் யார் தெரியுமா? ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?”
64. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
தொடரில் இடம்பெற வேண்டிய வேற்றுமை உறுபுகளை வரிசைப்படுத்துக.
ஐ, ஆல், இன்
*இன், ஐ, ஆல்
ஆல், இன், ஐ
ஆல், ஐ, இன்
65. ‘Visa’ தமிழாக்கம் தருக.
*நுழைவு இசைவு
கடவுச்சீட்டு
நுழைவுச் சீட்டு
இசைவுச் சீட்டு
66. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
குறளில் பயின்றுள்ள தொடைநயம் யாது?
கூழை எதுகை
*முற்றுமோனை
அடிமோனை
மேல்க்கதுவாய் மோனை
67. வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள் கூகிக்கொண்டும் இருந்தன.
தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளைக் கண்டறிந்து வரிசைப்படுத்துக.
காட்டில், கூவிக்கொண்டும், கரைந்துகொண்டும்
தோப்பில், கூவிக்கொண்டும், கத்திக்கொண்டும்
தோப்பில், அளறிக்கொண்டும், கரைந்துகொண்டும்
*தோப்பில், கூவிக்கொண்டும், கரைந்து கொண்டும்
68. ‘வேளாண்வேதம்’ என்றழைக்கப்படும் நூல் எது?
முக்கூடற்பள்ளு
நெடுநல்வாடை
*நாளடியார்
களித்தொகை
69. பொருத்துக.
அ. குயில்ப்பாட்டு: – 1. தாயுமானவர்
ஆ. தெய்வமணிமாலை: – 2. பாரதியார்
இ. திருவருட்ப்ஆ: – 3. கபிலர்
ஈ. குறிஞ்சிப்பாட்டு: – 4. பாரதிதாசன்
ஈ. அழகின் சிரிப்பு: – 5. வள்ளலார்
*2,5,1,3,4
2,4,1,3,5
5,1,2,4,3
4,3,2,1,5
70. ‘தமிழ் இமயம்’ என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?
ராசமாணிக்கனார்
*வாசுப மாணிக்கனார்
பருதிமாற்கலைஞர்
மறைமலை அடிகள்
71. ‘நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.’
நுணங்கிய என்பதன் எதிர்ச்சொல் யாது?
பணிவற்ற
ஐயமற்ற
*நுட்பமற்ற
ஒழுங்கற்ற
72. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
விசும்பு
வளி
நிலம்
மழை
73. ‘aesthetics’ என்பதன் நேரான தமிழ்ச்சொல் என்ன?
கவித்துவம்
மெய்யியல்
*அழகியல்
இயற்கையியல்
74. “கடைக்கு நடந்தே போ”. வேர்ச்சொல்லிலிருந்து வினையெச்சம், பெயரெச்சம்,வினைமுற்று ஆகியவற்றை வரிசைப்படுத்துக.
*போய்க்கொண்டு, போகிற, போனான்
போன, போனாள், போய்க்கொண்டிருந்து
போனவர், போனார், போகும்
போ, போவாள், போய்வந்து
75. கடல் என்ற சொல்லின் பிற சொற்களுக்கான சரியான அகரவரிசையைக் கண்டறிக.
ஆழி, பரவை, அழுவம், முந்நீர், விரிநீர், சமுத்திரம்
சமுத்திரம், விரிநீர், பரவை, அழுவம், ஆழி, முந்நீர்
*அழுவம், ஆழி, சமுத்திரம், பரவை, முந்நீர், விரிநீர்
பரவை, அழுவம், ஆழி, முந்நீர், விரிநீர், சமுத்திரம்
76. ‘காலை எழுந்ததும் நூல்களைப் பயில்தல் மூளைக்குப் புத்துணர்வழிக்கும் செயல்”.
தொடரில் விடுபட்டுள்ள பெயர்ச்சொல் வகையைக் கண்டறிக.
சினைப்பெயர்
காலப்பெயர்
பண்புப்பெயர்
*இடப்பெயர்
77. ‘புனைபெயர்’ இலக்கணக் குறிப்பு தருக.
பண்புப்பெயர்
பண்புத்தொகை
*வினைத்தொகை
உம்மைத்தொகை
78. “நம் வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டும்”
தொடருக்கேற்ற பொருத்தமான வினாவைக் கண்டறிக.
திருக்குறளை எப்படிக் கற்க வேண்டும்?
*திருக்குறளை ஏன் கற்க வேண்டும்?
வாழ்வு மேம்பட திருக்குறளைக் கற்க வேண்டுமா?
திருக்குறளைக் கற்றால் வாழ்வு என்னவாகும்?
79. “அந்தோ! மிகக் கோரமான விபத்து”.
இது எவ்வகைத்தொடர் எனக் கண்டுபிடி?
செய்தித்தொடர்
வினாத்தொடர்
கட்டளைத்தொடர்
*உணர்ச்சித்தொடர்
80. “மணி சோறு உண்டான்” தொடரின் பொருத்தமான பிறவினைத் தொடரைக் கண்டுபிடி.
மணி சோறு உண்ணத் தந்தான்
சோறு மணியால் உண்ணப்பட்டது
*மணி சோறு உண்பித்தான்
மணியால் சோறு உண்ணப்பட்டு ஆயிற்று
81. “வீடு கட்டியாயிற்று” தொடரைக் கண்டுபிடி.
செய்வினை
பிறவினை
தன்வினை
*செயப்பாட்டு வினை
82. ‘உருட்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து’.
குறளுக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டுபிடி.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
*சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
அவசரமாய்க் கைவிட்டால் அண்டாவுக்குள்ளும் நுழையாது
83. ‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
குறளில் இடம்பெற்றுள்ள உவமை விளக்கும் கருத்து யாது?
*உட்பகை
கிழமை
வாழ்வின் இழிநிலை
பண்பற்றவர் தொடர்பு
84. ‘யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு’.
குறளில் பயின்றுள்ள தொடைநயத்தைக் கண்டறிக.
பொழிப்பு மோனை
அடி இயைபு
கூழை எதுகை
*பொழிப்பு எதுகை
85. ‘நாடுவோர்க்கெல்ல்ஆம்’ பிரித்து எழுதுக.
நாடுவோர்க் + கெல்ஆம்
*நாடுவோர்க்கு + எல்லாம்
நாடுவோர் + எல்லாம்
நாடுவோர்க்கு + எலாம்
86. “ஒரு மொழியை புரிந்துக்கொள்ள நாம் அம்மொழியின் வாக்கிய அமைப்புக் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”.
பிழையில்லாத் தொடரைத் தெரிக.
*“ஒரு மொழியைப் புரிந்துகொள்ள நாம் அம்மொழியின் வாக்கிய அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”.
“ஒரு மொழியை புரிந்துக்கொள்ள நாம் அம்மொழியின் வாக்கிய அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”.
“ஒரு மொழியை புரிந்துகொள்ள நாம் அம்மொழியின் வாக்கிய அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”.
“ஒரு மொழியைப் புரிந்துக்கொள்ள நாம் அம்மொழியின் வாக்கிய அமைப்பு குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்”.
87. ஒருமை பன்மை பிழைநீக்கிய தொடரைத் தெரிக.
“மக்கள் கூட்டம் சாலையைக் கடந்து சென்றனர்”
“மக்கள் கூட்டம் சாலையைக் கடந்து சென்றன”
*“மக்கள் கூட்டம் சாலையைக் கடந்து சென்றது”
“மக்கள் கூட்டம் சாலையைக் கடந்து சென்றார்கள்”
88. மரபுப்பிழை கொண்ட சொல்லைத் தெரிக.
ஆட்டு மந்தை
*தென்னங்கன்று
வாழைக்கன்று
அகவும் மயில்
89. வேறுபட்ட சொல்லைத் தெரிக.
*தேகம்
மெய்
உடம்பு
யாக்கை
90. வயலெல்லாம் நெல் உண்டாகி, அவை நல்ல லாபத்துக்கு விற்கப்பட வேண்டும் என விரும்பினார்.
தொடரின் பொருளறிந்து சொற்களின் சரியான வரிசையைக் கண்டறிக.
*விளை, விலை, விழை
விளை, விழை, விலை
விழை, விலை, விளை
விழை, விளை, விலை
91. “பொறுத்தது போதும் பொங்கி எழு” வேர்ச்சொல் அறிந்து வினைமுற்று, வினையாளணையும் பெயர், தொழிற்பெயர் ஆகியவை அமைந்த சரியான வரிசையைக் கண்டறிக.
எழுச்சி, எழுவாய், எழுந்திருத்தல்
எழுந்தான், எழுந்தவன், எழுதல்
எழுக, எழுந்தேன், எழுந்திருத்தல்
எழுந்து, எழுந்த, எழுவார்
92. தலைவன் ஏய்த அம்பினால் பால் கொடுக்கும் பசு இறைச்சியானது.
பொருளறிந்து சொற்களை வரிசைப்படுத்துக.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
ஈ, ஆ, ஐ, ஏ, ஊ
*ஐ, ஏ, ஈ, ஆ, ஊ
ஊ, ஆ, ஈ, ஏ, ஐ
93. ‘ஒன்றுரா முன்றிலோ இல்’ தொடர் இடம்பெற்ற நூல் எது?
நாளடியார்
*பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
நீதிநெறி விளக்கம்
94. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” இது யாருடைய கூற்று?
பாண்டியன் நெடுஞ்செழியன்
அதிவீர ராமபாண்டியன்
*குடபுலவியனார்
இறையனார்
95. ‘இரவுபகல்’ பாராது உழைத்து, என் ‘துன்பக்கட’லைக் கடந்தேன்.
குறிக்கப்பட்ட சொற்களின் சரியான இலக்கணக்குறிப்புகளைக் கண்டறிக.
*உம்மைத்தொகை, உருவகம்
எண்ணும்மை, உவமைத்தொகை
உருவகம், வினைத்தொகை
உவமைத்தொடர், உரிச்சொற்றொடர்
96. ‘பீளிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’.
குறளுக்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
*அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
சிறுதுளிப் பெருவெள்ளம்.
முள்ளை முள்ளால் எடு.
97. பொருத்துக.
அ. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்: – 1. கவிஞரேறு
ஆ. வாணிதாசன்: – 2. தமிழ்த்தென்றல்
இ.திரு.வி. கல்யாண சுந்தரனார்: – 3. மொழி ஞாயிறு
ஈ. தேவநேயப் பாவாணர்: – 4. புலமைக் கதிரவன்
4,3,2,1
2,4,1,3
1,2,4,3
*4,1,2,3
98. “தலைக்கு ஒரு பழம் கொடு” தொடரில் இடம்பெற்றுள்ள ஆகுபெயரைக் கண்டறிக.
தொழிலாகு பெயர்
கருவி ஆகுபெயர்
*சினை ஆகுபெயர்
பண்பாகு பெயர்
99. ‘தொட்டனைத்து ஊறும் மணற்கேணி’ உவமையால் குறிக்கப்படும் கருத்து யாது?
ஒழுக்கம்
*கல்வி
வெகுளி
அச்சம்
100. ‘நல்குரவு’ சொல்லின் பொருள் தருக.
பொறாமை
நல்ல உறவு
*வறுமை
கயமை
1. பின்வரும் விசைகளை கவனியுங்கள்.
(A) தசையினால் செயல்படுத்தப்படும் விசை
(B) காந்த சக்தி
(C) உராய்வு விசை
(D) ஈர்ப்பு விசை
(E) நிலை மின் கவர்ச்சி விசை
மேற்கண்ட விசைகளில் ‘தொடா விசைகள்’ எது/எவை ?
B மற்றும் E மட்டுமே
A, B மற்றும் D மட்டும்
* B, D மற்றும் E மட்டும்
B, C, D மற்றும் E
2. வானத்தின் நீல நிறத்திற்குக் காரணமான ஒளியியல் நிகழ்வு எது?
ஒளி பிரிகை
ஒளி எதிரொலித்தல்
ஒளிவிலகல்
* ஒளிச் சிதறல்
3. ‘கேலோ இந்தியா’ போட்டிகளைப் பொருத்தவரை, பின்வருபவைகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
சென்னை
மதுரை
# சேலம்
கோயம்புத்தூர்
4. ஒரு துகள் சிறிது நேரம் இயக்கத்தில் இருக்கும்போது பின்வருவனவற்றில் எது பூஜ்ஜியமாக இருக்க முடியும்?
வேகம்
விசை
நேரம்
* இடப்பெயர்ச்சி
5 பின்வருவனவற்றைப் பொருத்துக
உபகரணம் ஆற்றல் மாற்றம்
A. காற்றாலை 1. இரசாயன ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
B. மின்சார பல்பு 2. இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
C. மின்சார செல் 3. ஒலி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது
D. மைக்ரோஃபோன் 4. மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாற்றப்படுகிறது
A-3, B-2, C-1, D-4
* A-2, B-4, C-1, D-3
A-2, B-3, C-1, D-4
A-3, B-2, C-4, D-1
6. சேலம் சாகோ (ஜவ்வரிசி) சமீபத்தில் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது, இது எது மூலமாக உருவாக்கப்படுகிறது,
அரிசி
கோதுமை
பார்லி
* மரவள்ளிக்கிழங்கு
7. பின்வரும் எந்த இணை சரியாகப் பொருந்தவில்லை?
அளவு S. I. அலகு
* கதிரியக்கப் பொருளின் செயல்பாடு கியூரி
லென்சின் திறன் டையாப்டர்
வெப்பம் ஜுல்
அழுத்தம் பாஸ்கல்
8 கூற்று மற்றும் காரணம்:
கூற்று: நீர்ச் சிலந்தி தண்ணீரின் மேற்பரப்பில் எளிதாக நகர்ந்து செல்கிறது.
காரணம்: நீர்ச் சிலந்தி குறைவான மிதப்பு விசையை உணர்கிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
* கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
9. தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நல வாரியத்தை மறுசீரமைத்துள்ளது, இந்த வாரியம் எப்போது உருவாக்கப்பட்டது.
2004
2005
2006
* 2007
10. கீழ்காணும் கூற்றுகளை கவனி.
1. ஃப்ளெமிங்கின் இடது கை விதி மின்சார ஜெனரேட்டர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. ஃப்ளெமிங்கின் வலது கை விதி மின்சார மோட்டார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
1 சரி
2 சரி
இரண்டும் சரி
* இரண்டும் தவறு
11. ‘ஸ்வஸ்த் AI’ பின்வருபவைகளில் எதனோடுத் தொடர்புடையது?
கற்றல் உதவியாளர்
* ஆய்வக ரோபோ
பூட்டுதல் ரோபோ
சுகாதார உதவியாளர்
12. மின்னோட்டத்தின் வெப்ப விளைவின் அடிப்படையில் பின்வருவனவற்றில் எது இல்லை?
மின் அடுப்பு
மின்விளக்கு (மின்னிழையுடன்)
மின்னழலி
* நுண்ணலை அடுப்பு
13. கிலோவாட்-மணிநேரம் என்பது பின்வருவனவற்றுள் எதன் அலகு?
திறன்
விசை
* ஆற்றல்
உந்தம்
14. தமிழ்நாடு சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, பணிபுரியும் பெண்களுக்கான விடுதி வசதியைத் தொடங்கியுள்ளது, இந்த விடுதிகளுக்கு என்ன பெயர்?
முகவரி
* தோழி
நலம்
என் மகள்
15. பூமியின் காந்தத்தன்மை எந்த விளைவால் ஏற்படுகிறது?
* டைனமோ விளைவு
டாப்ளர் விளைவு
சூரிய விளைவு
மேக்னஸ் விளைவு
16. ஓய்வுபெற்ற நீதிபதி கே. சத்ரு குழு பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
வறுமையை நீக்குதல்
பெண்கள் அதிகாரமளித்தல்
குறை நிவர்த்தி
* மாணவர்களுக்கிடையே சாதி மற்றும் இன வேறுபாடுகளை நீக்குதல்
17. பின்வருவனவற்றில் எது மின்கடத்தி அல்ல?
வினிகர்
உப்பு நீர்
* காய்ச்சி வடிகட்டிய நீர்
எலுமிச்சை சாறு
18. பின்வரும் உலோகங்களில் எது நீராவியுடன் வினைபுரிந்து உலோக ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனை உருவாக்குகிறது?
செம்பு
வெள்ளி
ஈயம்
* அலுமினியம்
19. 18 ஆம் நூற்றாண்டின் “ஞானமுயற்சி” என்ற பெயரிடப்பட்ட தமிழ் பனை ஓலைச்சுவடிகள் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?
பிரான்ஸ்
* இத்தாலி
ஐக்கிய இராச்சியம்
ஜெர்மனி
20. பின்வருபவனவற்றுள் வாயுவை திடப்பொருளாக மாற்றும் செயல்முறை எது?
* படிதல்
பதங்கமாதல்
உறைதல்
ஆவியாதல்
21. பின்வரும் வாயுக்களில் எது குளிர்பானங்களில் நிரப்பப்படுகிறது?
* CO2
O2
H2
N2
22/ சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
கம்பர் மண்டபம்
வி.ஓ.சி. மண்டபம்
பெரியார் மண்டபம்
# பாரதியார் மண்டபம்
23. அணுகுண்டு பின்வரும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது?
* அணு இணைவு
அணுக்கரு பிளவு
இயற்கை கதிரியக்கம்
செயற்கை கதிரியக்கம்
24. செயற்கை மழையை கொண்டு வர மேக விதைப்பு செயல்பாட்டில் எந்த வேதிப்பொருள் மேகங்களில் தெளிக்கப்படுகிறது?
சில்வர் ஃப்ளோரைடு
சில்வர் ப்ரோமைடு
சில்வர் குளோரைடு
* சில்வர் அயோடைடு
25. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் பெற்ற முதல் சட்டமன்றத் தொகுதி எது?
* ராதாபுரம்
பாளையங்கோட்டை
ராயபுரம்
காஞ்சிபுரம்
26. திட மசகு எண்ணெய் பின்வருவனவற்றில் எதில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது?
* கிராஃபைட்
சோடியம்
லித்தியம்
துத்தநாகம்
27. பின்வருவனவற்றில் எது மிகவும் வலிமையான இயற்கை நாரிழை ஆகும்?
பருத்தி
சணல்
* பட்டு
கம்பளி
28. எந்த மாவட்டத்தின் ஆதூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
* தூத்துக்குடி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
29. பின்வரும் உலோகங்களில் எது அறை வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும்?
சோடியம்
* பாதரசம்
கந்தகம்
தோரியம்
30. சோடா-அமிலத் தீயணைப்பானில் பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?
சோடியம் குளோரைடு
* சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட்
கால்சியம் ஹைட்ராக்சைடு
அசிட்டிக் ஆசிட்
31. ஜல் சக்தி அமைச்சகத்தின் கூற்றுப்படி, சிறந்த நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது?
அரியலூர்
கிருஷ்ணகிரி
கன்னியாகுமரி
* நாமக்கல்
32. எந்த காரணத்தால் மழைத்துளிகள் கோள வடிவத்தில் உள்ளது?
கோளவடிவ பூமியின் ஈர்ப்பு
* மேற்பரப்பு இழுவிசை
மழைத்துளிகளின் பாகுத்தன்மை
காற்று மூலக்கூறுகளின் வளிமண்டல உராய்வு
33. தமிழக அரசின் எந்தத் துறை மணற்கேணி செயலியை அறிமுகப்படுத்தியது?
உயர் கல்வித் துறை
* பள்ளிக் கல்வித் துறை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை
34. பின்வருவனவற்றில் எது நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் ஒரு பகுதியாக இல்லை?
பினியல் சுரப்பி
* உமிழ்நீர் சுரப்பி
தைமஸ்
அட்ரினலீன்
35. பின்வரும் எந்த இணை சரியாகப் பொருந்துகிறது?
* தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
ஆரஞ்சு – அசிட்டிக் அமிலம்
நெட்டில் ஸ்டிங் (செந்தட்டி) – லாக்டிக் அமிலம்
புளி – மெத்தனோயிக் அமிலம்
36. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் – 2023ன் படி, 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகையில் உள்ள நகராட்சிகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
சிறப்பு நிலை நகராட்சிகள்
* தேர்வு நிலை நகராட்சிகள்
முதல் நிலை நகராட்சிகள்
37. பூவின் பின்வரும் எந்தப் பகுதி இனப்பெருக்க உறுப்பு அல்ல?
சூல்முடி
சூல்தண்டு
மகரந்தப்பை
* புல்லிவட்டம்
38. சமீபத்தில் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கான ஒரு இனையதலத்தைத் தொடங்கி வைத்தார். அதன் பெயர் என்ன?
விவசாயம்
நீர் வளம்
* மண் வளம்
நீர் மேலான்மை
39. எந்த வகை இரத்தக் குழு பொதுக்குருதி கொடையர் என்று அழைக்கப்படுகிறது?
A +
B –
* O –
O +
40. H5N1 நோய்த்தொற்று பின்வரும் எந்த நோய்களுக்கு வழிவகுக்கிறது?
எச்.ஐ.வி.
பன்றிக் காய்ச்சல்
* பறவைக் காய்ச்சல்
கோழிக் காலரா
41. பின்வருவனவற்றில் எது சரியானது/சரியானவை
1, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ‘புதுமை பெண்’ என பெயரிடப்பட்டுள்ளது
2, இது உயர்கல்வித் துறையால் செயல்படுத்தப்படுகிறது
* முதல் கூற்று
2ஆம் கூற்று
முதல் மற்றும் 2ஆம் கூற்று
இரண்டுமே தவறானது
42. பொதுவாக சிறுநீரகத்தின் மூலம் பின்வருவனவற்றில் எது வடிகட்டப்படுவதில்லை?
அமோனியா
யூரிக் அமிலம்
தண்ணீர்
* சர்க்கரை
43. வைரஸ்களைப் பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
1. வைரஸ்கள் பொதுவாக பாக்டீரியாவை விடப் பெரியவை.
2. வைரஸ்களுக்கு செல்லுலார் அமைப்பு இல்லை.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது அல்ல?
* 1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
1 மற்றும் 2 ஆகியவை அல்ல
44. “வஜ்ர பிரஹார் 2023” என்பது எந்த இரு நாடுகளுக்கிடையேயான கூட்டுப்பயிற்சி?
* இந்தியா – அமெரிக்கா
இந்தியா – மாலத்தீவு
இந்தியா – இலங்கை
இந்தியா – வங்கதேசம்
45. பச்சை தாவரங்கள் மற்றும் சில பாக்டீரியாக்கள் தங்கள் உணவைத் தானே உற்பத்தி செய்கின்றன. பின்வரும் எந்த ஊட்டச்சத்து செயல்முறையை அவை பின்பற்றுகின்றன?
சாறுண்ணும் ஊட்டச்சத்து
* தன்னூட்ட ஊட்டச்சத்து
ஒட்டுண்ணி ஊட்டச்சத்து
திண்ம உணவை விழுங்கும் ஊட்டச்சத்து
46. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக எங்கு ‘மீனவ கூட்டுறவு கடன் வங்கி’ துவங்கப்பட்டுள்ளது?
*A) தூத்துக்குடி
B) சென்னை
C) ராமநாதபுரம்
D) கன்னியாகுமரி
47. பின்வருவனவற்றில் எது உற்பத்தித்திறனைக் குறைக்கும் சுற்றுச்சூழல் அமைப்பின் சரியான வரிசை?
பெருங்கடல், ஏரிகள், புல்வெளிகள் மற்றும் சதுப்புநிலங்கள்
சதுப்புநிலங்கள், பெருங்கடல்கள், புல்வெளிகள் மற்றும் ஏரிகள்
* சதுப்புநிலங்கள், புல்வெளிகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்கள்
பெருங்கடல்கள், சதுப்புநிலங்கள், ஏரிகள் மற்றும் புல்வெளிகள்
48. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) கால் பந்து
B) பேட்மிட்டன்
C) ஈட்டி எறிதல்
*D) துப்பாக்கி சுடுதல்
49. பின்வருவனவற்றில் எது நிலையான வளர்ச்சிக்காக சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும்?
தொழில்கள்
காடுகள்
பயிர்கள்
* வளங்கள்
50. ”நிலவு குடிச்ச சிம்மங்கள்” என்பது யாருடைய சுயசரிதை நூல்?
A) சிவன்
*B) சோம்நாத்
C) மயில்சாமி அண்ணாதுரை
D) வளர்மதி
51. பின்வருவனவற்றில் எதற்கு வினையூக்கி மாற்றிகள் (Catalytic converters) பயன்படுத்தப்படுகின்றன?
* காற்று மாசுபாடு
நீர் மாசுபாடு
ஒலி மாசுபாடு
மண் மாசுபாடு
52. “முதல்வர் பெண் சக்தி பிரச்சாரம்” என்ற புதிய திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
A) தமிழ்நாடு
B) ஒடிஷா
C) கேரளா
*D) மகாராஷ்டிரா
53. பின்வருபவைகளில் உயிர்க்கோலம் பற்றிய சரியான கூற்றுகளை கருதுக.
(A) மனிதனின் உடனடி சுற்றுப்புறம்
(B) தாவர மற்றும் விலங்குகளின் உலகம்
(C) நிலம், நீர், காற்று தாவரங்கள் மற்றும் விலங்கு
A மட்டும்
B மட்டும்
C மட்டும்
* A, B மற்றும் C அனைத்தும்
54. பின்வருவனவற்றில் எது இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்தி?
மீத்தேன்
பென்சீன்
* ஓசோன்
கார்பன் டை ஆக்சைடு
55. 2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A) பா எழிலரசி
*B) நா முத்தமிழ்செல்வி
C) லட்சுமி
D) பத்மபிரியா
56. அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிய தகவல்களை வெளியிடும் அமைப்பு எது?
* இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்
உலக வனவிலங்கு ஒன்றியம்
உலக விலங்கு வளத் திட்டம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
57. பின்வரும் இந்தியாவின் எந்தப் பகுதி பல்லுயிர் பெருக்கப் பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
1. கிழக்கு இமயமலை
2. கிழக்கு தொடர்ச்சி மலை
3. மேற்கு தொடர்ச்சி மலை
4. மேற்கு இமயமலை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்:
1 மற்றும் 2 மட்டும்
* 1 மற்றும் 3 மட்டும்
2 மற்றும் 4 மட்டும்
3 மற்றும் 4 மட்டும்
58. எங்கு நடைபெற்ற அகழாய்வில் “தங்கத் தாலி” கண்டெடுக்கப்பட்டுள்ளது?
A) கீழடி
B) பொற்பனைக்கோட்டை
C) துலுக்கர்பட்டி
*D) வெம்பக்கோட்டை
59. கீழே கொடுக்கப்பட்ட இயற்கை பிரிவுகளை வடக்கிலிருந்து தெற்கு அடிப்படையில் சரியான வரிசையைக் குறிப்பிடுக.
தாரை – பாபர் – கதர் – டெல்டா
தாரை – பாபர் – டெல்டா – கதர்
பாபர் – கதர் – டெல்டா – தாரை
* பாபர் – தாரை – கதர் – டெல்டா
60. பின்வருவனவற்றில் இருந்து சரியான கூற்றை அடையாளம் காணவும்:
பசளை மண்ணில் உள்ள பெரிய துகள்களின் விகிதம் மணற்பாங்கான மண்ணை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
* களி மண்ணில் உள்ள நுண்ணிய துகள்களின் விகிதம் பசளை மண்ணை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
மணற்பாங்கான மண்ணில் உள்ள நுண்ணிய துகள்களின் விகிதம் களி மண்ணை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
பெரிய மற்றும் நுண்ணிய துகள்களின் அளவு களி மண்ணில் ஒரே மாதிரியாக இருக்கும்.
61. 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” யாருக்கு வழங்கப்பட்டது?
*A) கீ. வீரமணி
B) ஆர். ராகவன்
C) ரவி சுந்தர்
D) சுமன்
62. பின்வரும் கூற்றுகளை கவனியுங்கள்:
1. ஹைதராபாத் மற்றும் லக்னோவிற்கு இடையில் தீர்க்கரேகையில் பெங்களூருவின் அமைவிடம் உள்ளது.
2. ஷில்லாங் மற்றும் கொல்கத்தாவிற்கு இடையில் அட்சரேகையில் போபாலின் அமைவிடம் உள்ளது.
3. அகமதாபாத் திஸ்பூரை விட தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
1 மற்றும் 3
2 மட்டும்
* 2 மற்றும் 3
1, 2 மற்றும் 3
63. பின்வரும் மலைகளை வடக்கிலிருந்து தெற்காக அவற்றின் அமைவிடத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துக
1. நல்லமலை மலைகள்
2. சேர்வராய் மலைகள்
3. பால்கொண்டா மலைகள்
4. ஜாவடி மலைகள்
* 1 – 3 – 4 – 2
3 – 1 – 4 – 2
1 – 3 – 2 – 4
4 – 2 – 1 – 3
64. “கிரஹ ஜோதித் திட்டம்” எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
B) கேரளா
*C) கர்நாடகா
D) ஆந்திர பிரதேசம்
65. கூற்று (A): கனிமங்கள் புதுப்பிக்க முடியாத வளமாகும்
காரணம் (R): இந்த கனிமங்களை மனிதர்கள் உபயோகிக்கும் விகிதத்தை விட உருவாக்க விகிதம் வேகமாக உள்ளது
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல
* (A) உண்மை, ஆனால் (R) தவறானது
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
66. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதற்காகவும்———– ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டது?
A) 1950
B) 2002
*C) 1973
D) 1999
67. பின்வருவனவற்றைக் கவனியுங்கள்:
1. இமயமலை
2. அட்சரேகை அமைவிடம்
3. பருவக்காற்று
4. உயர்மட்ட காற்று சுழற்சிகள்
5. மிதமான குளிர் காற்றுத் திறள்
மேற்கூறியவற்றில் எது இந்தியக் காலநிலையை பாதிக்கிறது?
* 1, 2, 3, 4
1, 2, 4, 5
1, 2, 3, 5
1, 3 & 5
68. ‘பிரதமரின் பொது வளர்ச்சி திட்ட நிதி’ கீழ்க்கண்ட எந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது?
A) நிதி அமைச்சகம்
B) உள்துறை அமைச்சகம்
C) மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்
*D) சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம்
69. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
I. குஜராத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சூரிய பூங்கா உள்ளது.
II. அனைத்து மாநிலங்களிலும் தமிழ்நாடுதான் அதிக நிறுவப்பட்ட காற்றாலை உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது
III. கேரளாவில் முழு சூரிய சக்தியில் இயங்கும் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
I மற்றும் II மட்டுமே
III மட்டும்
* II மற்றும் III மட்டுமே
I, II மற்றும் III
70. பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?
கூற்று 1 : உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 33.
கூற்று 2 : சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75.
A) கூற்று ஒன்று மட்டும்
*B) கூற்று இரண்டு மட்டும்
C) இரண்டும்
D) இரண்டும் இல்லை
71. பின்வருவனவற்றில் இந்தியாவில் உள்ள அணைகளில் மிக உயரமானது எது?
பக்ரா
கொயேனா
பாங்
* தெஹ்ரி
72. சபர்மதி நதி எந்த இந்திய மாநிலத்தில் இருந்து உற்பத்தியாகிறது?
உத்தரப்பிரதேசம்
குஜராத்
வங்காளம்
* ராஜஸ்தான்
73. நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமைத் துறைமுகங்களாக மாற்றுவதற்காக தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டம் எது?
A) சாகர்மாலா
*B) ஹரித் சாகர்
C) பாரதமாலா
D) Vision sea
74. இந்தியாவின் எந்த மாநிலத்தில் மின்னல் புயலால் ஏற்படும் மழை ‘செர்ரி ப்ளாசம்’ என்று அழைக்கப்படுகிறது?
குஜராத்
மேகாலயா
உத்தரகாண்ட்
* கர்நாடகம்
75. பின்வருவனவற்றில் இருந்து பருவமழைக்கு முந்தைய பருவமான ‘நார் வெஸ்டர்’ தொடர்பான மாநிலங்களை அடையாளம் காணவும்
கேரளா மற்றும் கர்நாடகா
* மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்
76. நாட்டிலேயே முதன்முறையாக படகு மெட்ரோ சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
*A) கொச்சி
B) திருவனந்தபுரம்
C) மும்பை
D) கொல்கத்தா
77. பின்வரும் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழையால் அதிக மழையைப் பெறும் மாநிலம் எது ?
அசாம்
மேற்கு வங்காளம்
* தமிழ்நாடு
ஒடிசா
78. பின்வருவனவற்றில் இந்தியாவின் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் எது?
கவுகாத்தி சுத்திகரிப்பு நிலையம்
பராயுனி சுத்திகரிப்பு நிலையம்
* டிக்பாய் சுத்திகரிப்பு நிலையம்
விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம்
79. நேட்டோ கூட்டமைப்பில் எத்தனையாவது உறுப்பு நாடாக ஃபின்லாந்து இணைந்துள்ளது?
A) 30
*B) 31
C) 32
D) 33
80. பின்வருவனவற்றில் காரிஃப் பயிர் எது?
கோதுமை
பட்டாணி
* நிலக்கடலை
பூசணிக்காய்
81. பின்வரும் துறைமுகங்களில் எது இயற்கை துறைமுகத்தைக் கொண்டுள்ளது?
சென்னை
விசாகப்பட்டினம்
ஹால்டியா
* தூத்துக்குடி
82. பின்வருவனவற்றில் எது அரசாங்கத்தால் அதிக அளவிலான பாதுகாப்பைக் கொண்டுள்ளது?
* தேசிய பூங்கா
வனவிலங்கு சரணாலயங்கள்
புலிகள் காப்பகம்
உயிர்க்கோளக் காப்பகம்
83. “சுவதேஷ் தர்ஷன் திட்டம்” கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) கல்வி
B) மருத்துவம்
*C) சுற்றுலா
D) விளையாட்டு
84. பின்வருபவைகளைக் கருத்தில் கொள்க.
1. டார்ஜிலிங் இமாலய இரயில்வே
2. கால்கா சிம்லா இரயில்வே
3. நீலகிரி மலை இரயில்வே
4. சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் மும்பை-
மேற்கண்டவைகளில் எது/எவை யுனஸ்கோவின் பாரம்பரியத் தலங்களில் சரியானது?
1 , 3 & 4
2, 3 & 4
1, 2 & 3
# 1, 2, 3 & 4
85. பின்வரும் எந்த வனவிலங்கு சரணாலயம் முதலைகளுக்கு பிரபலமானது?
சீதா மாதா சரணாலயம்
* தேசிய சம்பல் சரணாலயம்
கைலாதேவி சரணாலயம்
கும்பல்கர் சரணாலயம்
86. எந்த வகையான மண் தக்காண பீடபூமியின் பெரும்பகுதியை உள்ளடக்கியது?
வண்டல் மண்
செம்மண்
மஞ்சள் மண்
* கரிசல் மண்
87. உலகின் உயரமான ரயில் மேம்பாலம் எந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது?
A) நர்மதா
B) கிருஷ்ணா
C) பிரம்மபுத்திரா
*D) ஸெனாப்
88. பின்வருவனவற்றைப் பொருத்தி, சரியான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
காடுகளின் வகைகள் இந்தியாவில் உள்ள இடங்கள்
a)வெப்பமண்டல மழைக்காடுகள் i)ராஜஸ்தான்
b)வெப்பமண்டல இலையுதிர் காடுகள் ii)மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவுகள்
c) முட்கள் நிறைந்த புதர்கள் iii) மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகள்
d)சதுப்புநிலக்காடுகள் iv) சுந்தர வனம்
ii, iii, iv, i
iii, ii, i, iv
# ii, iii, i, iv
iii, ii, iv, i
89. இந்தியாவின் “ஓசியானிக் தேசிய பூங்கா” எங்கு அமைந்துள்ளது?
சுந்தர்பன்
சில்கா ஏரி
நிக்கோபார் தீவுகள்
* கட்ச்
90. தமிழகத்தின் 18 ஆவது வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைகிறது?
A) சென்னை
B) கோவை
C) தூத்துக்குடி
*D) ஈரோடு
91. பின்வரும் துறைமுகங்களில் எது ‘வைர துறைமுகம்’ என்று அழைக்கப்படுகிறது?
* ஹால்டியா துறைமுகம்
காண்ட்லா துறைமுகம்
மசகான் துறைமுகம்
மர்மகோவா துறைமுகம்
92. இந்தியாவில் உள்ள எஃகு ஆலைகளைப் பொறுத்தவரை, பின்வரும் இணைகளில் எது சரியானது?
பொகாரோ – பீகார்
துர்காபூர் – ஒடிசா
* சேலம் – தமிழ்நாடு
ரூர்கேலா – மேற்கு வங்காளம்
93. தக்காணத்தின் இராணி என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது?
அகமதாபாத்
# பூனா
அம்ரித்சர்
புதுச்சேரி
94. பின்வருவனவற்றைப் பொருத்தவும்
முக்கிய மலைகள் மாவட்டங்கள்
A. சிவன் மலை 1. சேலம்
B. பச்சைமலை 2. வேலூர்
C. கஞ்சமலை 3. பெரம்பலூர்
D. இரத்தினமலை 4. ஈரோடு
1 , 3 , 2 , 4
4 , 1 , 2 , 3
* 4 , 3 , 1 , 2
1 , 2 , 3 , 4
95. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்
1. கோயம்புத்தூர் பீடபூமி தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இடையில் உள்ளது.
2. நொய்யல் ஆறு கோயம்புத்தூர் பீடபூமியை மைசூர் பீடபூமியிலிருந்து பிரிக்கிறது.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
* 1 மட்டும்
2 மட்டும்
இரண்டும் சரி
இரண்டும் தவறு
96. பின்வருபவைகளில் பூகம்பத்தின் தாக்கங்களுடன் தொடர்பில்லாத விளைவைத் தேர்ந்தெடுக்கவும்.
பிளவுகள்
சரிவு
சுனாமி
* தாழ்வு மண்டலம் உருவாக்கம்
97. கூற்று மற்றும் காரணம்.
கூற்று (A): இந்தியப் பருவகாலமானது காற்றின் திசையின் தலைகீழ் மாற்றத்தால் உருவாகிறது, இது இந்தியாவில் விவசாய சுழற்சியை கணிசமாக பாதிக்கிறது.
காரணம் (ஆர்): இந்தியப் பருவக் காற்று இந்தியப் பெருங்கடல் மற்றும் திபெத்திய பீடபூமியின் மாறுபட்ட வெப்பத்தால் ஏற்படுகிறது, இது பருவக் காற்றை இயக்கும் அழுத்தச் சாய்வுக்கு வழிவகுக்கிறது.
* (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல.
(A) சரி, ஆனால் (R) தவறானது.
(A) தவறானது, ஆனால் (R) சரி.
98. பின்வருவனவற்றைப் பொருத்தவும்
கனிமம் மாவட்டம்
A. பாக்சைட் 1. சேலம்
B. ஜிப்சம் 2. சேர்வராயன் மலைகள்
C. இரும்பு 3. கோயம்புத்தூர்
D. சுண்ணாம்புக்கல் 4. திருச்சிராப்பள்ளி
3 , 1 , 2 , 4
* 2 , 3 , 1 , 4
2 , 1 , 3 , 1
1 , 3 , 2 , 4
99. பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. மாநிலத்தின் மொத்த உப்பு உற்பத்தியில் 70 சதவீதமும், நாட்டில் 30 சதவீதமும் தமிழ்நாடு உற்பத்தி செய்கிறது.
2. தூத்துக்குடி “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது.
3. கோயம்புத்தூர் “தமிழகத்தின் நுழைவாயில்” என்று அழைக்கப்படுகிறது.
4. சென்னைக்கு “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று பெயர்.
மேலே உள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?
1, 2 மற்றும் 3 மட்டுமே
2, 3 மற்றும் 4 மட்டுமே
1, 3 மற்றும் 4 மட்டுமே
* 1 மற்றும் 4 மட்டுமே
100. ஆனைமலை மலையைப் பற்றிய பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.
1. ஆனைமலை தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ளது.
2. இந்த மலைகளில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
3. இது சேலம் நகருக்கு அருகில் 1,200 முதல் 1,620 மீட்டர் உயரம் கொண்ட மலைத்தொடராகும்.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
* 1 மட்டும்
2 மற்றும் 3 மட்டும்
3 மட்டும்
1 மற்றும் 3