ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு 20 (25 பிப்பிரவரி,2024) வினாவிடைகள்

 

புவியியல் வினாக்கள்

Unit 7 வினாக்கள்

அரசியல் அறிவியல் வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

புவியியல் வினாக்கள்

1. கீழ் காண்பவைகளைக் கவனி.

1. NH-1

2. NH-2

3. NH-7

4. NH-47

மேல் காண்பவைகளில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் தென்னிந்தியா வழியாக செல்கிறது?

* 2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

எதுவுமில்லை

2. கீழ் காணும் இணைகளைக் கவனி.

வடமேற்கு இரயில்வே  :  ஜெய்ப்பூர்‌

வடகிழக்கு எல்லைஇரயில்வே  :  கொரக்பூர்‌

கிழக்கு மத்திய இரயில்வே  :  புவனேஸ்வர்‌

தென்‌ கிழக்கு இரயில்வே  :  கொல்கத்தா

மேல் கண்ட இணைகளில் எத்தனை சரியாக பொருந்தவில்லை?

1 மட்டும்

* 2 மட்டும்

3 மட்டும்

அனைத்தும்

3. பொருத்துக.

இந்துஸ்தான்‌ கப்பல்‌ கட்டும்‌ தளம்   ::   1. கொச்சீன்

கார்டன்‌ ரீச்‌ கப்பல்‌ கட்டும்‌ தொழிற்சாலை   ::   2. கொல்கத்தா

மசாகான்‌ கப்பல்‌ கட்டும்‌ தொழிற்சாலை  ::   3. விசாகபட்டினம்

கொச்சி கப்பல்‌ கட்டும்‌ தளம்   ::   4. மும்பை

3 4 2 1

* 3 2 1 4

3 2 4 1

4 3 2 1

4. கீழ் காண்பவைகளை கவனிக்க.

1. சென்னை

2. ஐதராபாத்

3. நவி மும்பை

4. பெங்களூர்

மேல் கண்ட எத்தனை நகரங்களில் மெட்ரோ போக்குவரத்து செயல்படுகிறது?

1 மட்டும்

2 மட்டும்

3 மட்டும்

* அனைத்திலும்

5. இந்திய அஞ்சல் துறை விரைவு அஞ்சல்‌ முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு?

1972

* 1975

1980

2014

6. இஸ்ரோ ‘மங்கல்யான் செயற்கைக்கோலை பின்வரும் எந்த ஏவுகலம்  மூலம் செலுத்தியது?

* துருவ செயற்கைக்கோள் ஏவுகலம்

புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவுகலம்

மார்க்-II ஏவுகலம்

மார்க்-III ஏவுகலம்

7. கீழ் காணும் கூற்றுகளை கவனி.

கூற்று 1: ஒரு நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி என்பது, அந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை/மொத்த நிலப்பரப்பு.

கூற்று 2: மக்கள் தொகை அடர்த்தி என்பது, சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை.

மேல் கண்ட கூற்றுகளை பின் வரும் குறியீட்டுடன் பொருத்துக.

* கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி, கூற்று 2 கூற்று 1-ஐ விளக்குகிறது.

கூற்று 1 மற்றும் கூற்று 2 சரி, கூற்று 2 கூற்று 1-ஐ விளக்கவில்லை.

கூற்று 1 சரி கூற்று 2 தவறு

கூற்று 2 சரி கூற்று 1 தவறு

8. கீழ் காண்பவைகளை கருத்தில் கொள்க.

1. பிகார்

2. உத்திர பிரதேசம்

3. மகாறாச்டிரா

4. மேற்கு வங்கம்

மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் மேல் கண்ட மாநிலங்களை ஏருவரிசையில் அமைக்கவும்.

* 4 1 3 2

4 3 2 1

2 3 1 4

3 2 1 4

9. மக்கள் தொகை அடர்த்தியில் கடைசி இடம் வகிக்கும் மாநிலம்?

சிக்கிம்

* அருனாச்சல் பிரதேசம்

அசாம்

நாகாலாந்து

10. 2011-ஆம் ஆண்டின்படி தமிழ் நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?

382

1106

* 555

754

Unit 7 வினாக்கள்

1. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள் போராடிய பிறகு இந்தியாவிற்கு எப்பொழுது திரும்பினார்?

*(a) 1915

(b) 1917

(c) 1920

(d) 1919

2. மகாத்மா காந்தி, டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில் பயணம் மேற்கொண்டபோது எந்த ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்?

(a) டர்பன்

*(b) பீட்டர்மாரிட்ஸ்பர்க்

(c) பிரிட்டோரியா

(d) டிரான்ஸ்வாலி

3. சட்டமறுப்பு (Civil Disobedience) என்ற நூலின் ஆசிரியர் யார்?

*(a) தாரோவி

(b) டால்ஸ்டாய்

(c) ஜான் ரஸ்கின்

(d) ஸ்மட்ஸ்

4. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக சட்டப் போராட்டங்கள் நடத்தியதற்கான காரணங்களுல் சரியானவை யவை?

1. டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலை வரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது.

2. அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாதநிலை இருந்தது.

3. இரவு 9 மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லமுடியாத நிலையும் இருந்தது.

(a) 1 மட்டும் சரி.

(b) 1 2 இரண்டும் சரி.

(c) 3 மட்டும் சரி.

*(d) அனைத்தும் சரி.

5. பொருத்துக

a. கேதா சத்தியாகிரகம் 1. 1920

b. கிலாபத் இயக்கம் 2. 1918

c. ஒத்துழையாமை இயக்கம் 3. 1922

d. சௌரி சௌரா நிகழ்வு 4. 1919

*(a) 2 4 1 3.

(b) 2 3 4 1.

(c) 3 2 1 4.

(d) 4 1 3 2.

6. காந்தியடிகள் 1930 மார்ச் மாதம் 12ஆம் நாள் எத்தனை பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கினார்?

(a) 87

*(b) 78

(c) 91

(d) 80

7. தவறான  கூற்றைத் தேர்ந்தெடு?

1. காங்கிரசின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் முதல் வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.

2. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துகொண்டதால், காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை.

3. சட்டமறுப்பு இயக்கத்திற்கு புத்துயிரூட்டியதால் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் பங்கேற்கவில்லை.

(a) 1 மட்டும்

*(b) 2 மட்டும்

(c) 1,3 மட்டும்

(d) அனைத்தும்

8. வகுப்புவாரி ஒதுக்கீட்டை ராம்சே மெக்டொனால்டு எப்பொழுது அறிவித்தார்?

*(a) 1932 ஆகஸ்டு 16

(b) 1933 ஜனவரி 8

(c) 1930 மார்ச் 12

(d) 1932 நவம்பர் 17

9. காந்தி, எங்கு முதன்முறையாக இனவெறியை எதிர்கொண்டார்?

(a) இந்தியா

*(b) தென்னாப்பிரிக்கா

(c) இங்கிலாந்து

(d) அமேரிக்கா

10. காந்தியடிகள் யாரைத் தன் அரசியல் குருவாக ஏற்றார்?

*(a) கோபால கிருஷ்ண கோகலே

(b) ஜின்னா

(c) மௌலானா அபுல்கலாம் ஆசாத்

(d) பகத்சிங்

11. சம்பரான் சத்தியாகிரகம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது?

(a) கல்கத்தா

(b) டெல்லி

*(c) பீகார்

(d) தமிழ்நாடு

12. சம்பரான் சத்தியாகிரகத்திற்காக பீகாருக்கு காந்தியை அழைத்தவர் யார்?

*(a) ராஜ்குமார் சுக்லா

(b) சோகன்சிங் பத்னா

(c) மோகன்சிங்

(d) முசாபர் அகமது

13.  காந்தியடிகள் டால்ஸ்டாய் பண்ணையை எந்த ஆண்டு நிருவினார்?

(a) 1905

*(b) 1910

(c) 1915

(d) 1903

14. ரௌலட் சட்டத்தை கருப்புச் சட்டம்’ என்று அழைத்தவர் யார்?

(a) லாலா லஜபதிராய்

(b) சைஃபுதீன் கிச்லு

*(c) காந்தியடிகள்

(d) சத்யபால்

15. ஜாலியன் வாலாபாக் படுகொலையில் அதிகாரபூர்வ அரசு தகவல்களின்படி எத்தனை மக்கள் கொள்ளப்பட்டனர்?

(a) 405

(b) 1000

*(c) 379

(d) 378

16. பொருத்துக

a. கிலாபத் இயக்கம் 1. சி.ஆர். தாஸ்.

b. சுயராஜ்ஜிய கட்சி 2. அலி சகோதரர்கள்.

c. சைமன் குழு 3. மோதிலால் நேரு

d. நேரு அறிக்கை4. சர் ஜான் சைமன்.

(a) 1,3,4,2

*(b) 2,1,4,3

17.ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளுல் சரியானதைத் தேர்ந்தெடு?

1. பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.

2. அரசின் செயல்பாடுகளில் ஒத்துழைக்காமலிருப்பது.

3. அரசுப் பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.

4. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பேரவையில் கலந்துகொள்வது.

(a) 1,2,3,4 சரி.

*(b) 1,2,3 சரி.

(c) 1,2,4 சரி.

(d) 2,3,4 சரி.

18. வரிகொடா இயக்கத்தை காந்தி எங்கு, எப்போது அறிவித்தார்?

(a) 1920 கல்கத்தா

(b) 1922 சௌரிசௌரா

(c) 1921 டெல்லி

*(d) 1922 பர்தோலி

19. எந்த ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது?

(a) 1909

(b) 1935

(c) 1947

*(d) 1919

20. சைமன் குழு புறக்கணிப்பு போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டதால் உயிர் இழந்தவர் யார்?

*(a) லாலா லஜபதிராய்.

(b) சி.ஆர். தாஸ்.

(c) பகத்சிங்.

(d) ராம்பிரசாத் பிஸ்மில்

21. செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட குடைகிட்மட்கர்’ இயக்கத்தை நடத்தியவர் யார்?

*(a) கான் அப்துல் கஃபார்கான்

(b) ஜவகர்லால் நேரு

(c) அல்லூரி சீதாராம ராஜு

(d) மதன் மோகன் மாளவியா

22. அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாரபட்சங்களை முழுமையாக  அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கியவர்?

(a) அம்பேத்கர்

*(b) காந்தியடிகள்

(c) ஐயோதி தாச பண்டிதர்

(d) இரட்டை மலை சீணிவாசன்

23. காங்கிரஸ் சமதர்ம (சோஷலிஷ) கட்சி உருவாக காரணமாக இருந்தவர்களுல் பொருந்தாதவர் யார்?

(a) ஜெயப்பிரகாஷ் நாராயண்

(b) ஆச்சார்ய நரேந்திரதேவ்

(c) மினுமசானி

*(d) சிங்காரவேலர்

(24) சிட்டகாங் ஆயுதக் கிடங்குத் தாக்குதல் எப்போது நடைபெற்றது

(a) ஏப்ரல் 5 1929

(b) ஏப்ரல் 8 1930

(c) ஏப்ரல் 18 1929

*(d) ஏப்ரல் 18 1930

25. மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசிய ஆண்டு?

(a)1930

(b) 1928

*(c) 1929

(d) 1927

அரசியல் அறிவியல் வினாக்கள்

இந்திய அரசியலமைப்பு

வினாத்தாள்

1). இந்திய அரசியலமைப்பு செயல்பாட்டிற்கு வந்தவுடன் தற்பொழுது உள்ள உச்ச நீதிமன்றம் எப்போது இருந்து செயல்பட தொடங்கியது?

  1. A)   *ஜனவரி 28 1950
  2. B)    ஜனவரி 26 1950
  3. C)    நவம்பர் 26 1949
  4. D)   ஜனவரி 25 1950

2) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு செய்க?

கூற்று – 1: இந்திய உச்ச நீதிமன்றம் சரத்து 124 இன் படி இந்தியாவிற்கு ஓர் உச்ச நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கிறது

கூற்று – 2: குற்றவியல் மற்றும் குடிமையியல் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உச்சபட்ச அதிகாரமாகும்

கூற்று – 3: அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல், அமலாக்கம், அனைத்து இந்திய மக்களின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது.

  1. A)   கூற்று 1 மற்றும் 2 சரி
  2. B)    கூற்று 2 மற்றும் 3 சரி
  3. C)    கூற்று 1 மட்டும் சரி
  4. D)   *அனைத்தும் கூற்றுகளும் சரி

3) இந்திய அரசியலமைப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அலுவலராக கணக்கு தணிக்கையாளர் விளங்குகிறார் என குறிப்பிட்டவர் யார்?

  1. A)   ஜவகர்லால் நேரு
  2. B)    *அம்பேத்கர்
  3. C)    ராஜேந்திர பிரசாத்
  4. D)   கிருஷ்ணசாமி ஐயங்கார்

4) கீழ்க்கண்ட ஆளுநரின் விருப்ப அதிகாரம் அல்லாத இணைகளின் எண்ணிக்கையை கண்டறிக?

இணை – 1: சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமித்தல்

இணை – 2: குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் கொண்டு வருதல்

இணை – 3: மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற நபர்களின் தண்டனையை குறைத்தால் அல்லது நிறுத்தி வைத்தல்

இணை – 4: சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்தல்

  1. A)   1
  2. B)    4
  3. C)    3
  4. D)   *2

5) _______என்பவர் பட்டியல் சமூகத்தில் இருந்து முதல் முறையாக தலைமை நீதிபதியாக உயர்ந்துள்ளார்?

  1. A)   ரஞ்சன் கோயல்
  2. B)    *கே. ஜி பாலகிருஷ்ணன்
  3. C)     பி. சதாசிவம்
  4. D)    எஸ். இராஜேந்திர பாபு

6) கீழ்காணும் கூற்றுகளுக்கு ஏற்ப பொருத்தமான நபரை தேர்வு செய்க?

கூற்று – 1: அரசின் கொள்கை முடிவுகளை வகுத்தல்

கூற்று – 2: சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டிய தீர்மானங்கள் முன்மொழிவுகள் ஆகியவற்றை பரிசீலனை செய்தல்

கூற்று – 3: அரசின் முக்கிய பதவிகளுக்கான நியமன பரிந்துரையை வழங்குதல்

  1. A)   ஆளுநர்
  2. B)    *முதலமைச்சர்
  3. C)    சட்டமன்ற செயலாளர்
  4. D)   சபாநாயகர்

7) கீழ்க்கண்டவற்றில் இந்திய நீதிமன்ற அமைப்பு முறையை தேர்வு செய்தல்?

  1. A)   கூட்டுறவு நீதிமன்றம்
  2. B)    ஒற்றை நீதிமன்றம்
  3. C)    *ஒருங்கிணைந்த நீதிமன்றம்
  4. D)   மைய நீதிமன்றம்

8) கீழ்கண்ட கூற்றுக்களை படித்து உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த நீதிப்பேராணையை குறிக்கிறது என கண்டறிக?

கூற்று – 1: இந்த பேராணையானது சட்டப்படி இயங்கும் படியும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இடப்படும் ஆணையாகும்.

கூற்று – 2: இதன் பொருள் எந்த ஒரு அதிகாரம் கொண்டவரையும் அவரின் சட்டபூர்வமான கடமையை செய்ய உத்தரவிடுவதை குறிக்கும்

  1. A)   ஆட்கொணர்வு நீதிப்பேராணை
  2. B)    *நெறியுத்தும் நீதிப்பேராணை
  3. C)     தடை நீதிப்பேராணை
  4. D)   தகுதி முறை வினவும் நீதிப் பேராணை

9) உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை யாரிடம் வழங்க வேண்டும்?

  1. A)   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
  2. B)    *குடியரசுத் தலைவர்
  3. C)    துணை குடியரசுத் தலைவர்
  4. D)   பிரதமர்

10) மாநில தலைமை வழக்கறிஞரை நியமிப்பவர் யார்?

  1. A)   உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
  2. B)    முதலமைச்சர்
  3. C)    *ஆளுநர்
  4. D)   குடியரசு தலைவர்

11) கீழ்காணும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன தகுதிகளை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு செய்க?

கூற்று – 1: இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

கூற்று – 2: ஐந்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் அல்லது 10 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்

கூற்று – 3: நாடாளுமன்றம் விதித்துள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்

கூற்று – 4: குடியரசு தலைவரின் பார்வையில் சிறந்த சட்ட நிபுணராக திகழ வேண்டும்

  1. A)   கூற்று 1, 2 மற்றும் 3 சரி
  2. B)    *கூற்று 1, 3 மற்றும் 4 சரி
  3. C)    கூற்று 1, 2 மற்றும் 4 சரி
  4. D)   அனைத்து கூற்றுகளும் சரி

12) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஒரே ஆளுநர் இருக்கலாம் என_______ ஆண்டு சட்டத்திருத்தம் குறிப்பிடுகிறது?

  1. A)   1951
  2. B)    *1956
  3. C)    1952
  4. D)   1961

13) கீழ்காணும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அதிகாரி பற்றிய கூற்றுகளை ஆராய்க?

கூற்று – 1: இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அதிகாரி பற்றி சரத்து 148 குறிப்பிடுகிறது

கூற்று – 2: இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம்

கூற்று – 3: இவரது ஊதியம் இந்திய துணை குடியரசு தலைவருக்கு இணையாக இருக்கும்

  1. A)   கூற்று 3 மட்டும் தவறு
  2. B)    கூற்று 2 மற்றும் 3 சரி
  3. C)    *கூற்று 1 மட்டும் சரி
  4. D)   கூற்று 1 மற்றும் 3 சரி

14) மாநிலத்தின் உண்மையான செயல்மிகு தலைவராக விளங்குபவர்?

  1. A)   *முதலமைச்சர்
  2. B)    தலைமைச் செயலாளர்
  3. C)    ஆளுநர்
  4. D)   உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

15) பின்வரும் கூற்றுக்களை படித்து பொருத்தமானவற்றை தேர்வு செய்க

கூற்று – 1: உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் கட்டாயம் தலைமை நீதிபதி இடம் கலந்தாலோசிக்க வேண்டும்

கூற்று – 2: தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் கட்டாயம் செயல்படுத்திட வேண்டும்

கூற்று – 3: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு தலைமை நீதிபதியை கொண்ட கொலிஜியம் அமைப்பு இருக்க வேண்டும் என நான்காவது நீதிபதிகள் வழக்கில் மூலம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

  1. A)   கூற்று 2 மற்றும் 3 சரி 1 தவறு
  2. B)    கூற்று 2 மட்டும் தவறு 1, 3 சரி
  3. C)    கூற்று 1, 2 மற்றும் 3 சரி
  4. D)   *கூற்று 3 மட்டும் தவறு, 1 மற்றும் 2 சரி

16) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று – 1: உச்ச நீதிமன்றம் ஆனது அரசியலமைப்பு சட்ட உறுப்பு 131 இன் படி நீதிமன்ற ஆவணங்களை பராமரிக்கிறது

கூற்று – 2: இத்தகைய ஆவணங்கள் சாட்சியங்களாகவும் ஆதாரங்களாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது

  1. A)   இரண்டு கூற்றுகளும் சரி
  2. B)    கூற்று 1 சரி 2 தவறு
  3. C)    இரண்டு கூற்றுகளும் தவறு
  4. D)   *கூற்று 1 தவறு 2 சரி

17) இந்திய அரசாங்கச் சட்டம் 1935 இன் படி கூட்டாட்சி நீதிமன்றம் ______ஆம்  ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

  1. A)   1935
  2. B)    *1937
  3. C)    1947
  4. D)   1950

18) பொருத்துக

A) மேல்முறையீட்டு உச்சநீதிமன்றம் – 1. திவான் – இ – ரியாசட்

B) குடிமையியல் வழக்கு உச்ச நீதிமன்றம் – 2. திவான் – அல் – மசாலிம்

c) மாநில தலைமை நீதிபதி நீதிமன்றம் – 3. திவான் – இ – ரிசாலட்

D) தேச துரோக வழக்கு நீதிமன்றம் – 4. சத்ரே ஜகான் நீதிமன்றம

  1. A)    4 3 2 1
  2. B)    2 4 3 1
  3. C)    *2 3 4 1
  4. D)   3 1 4 2

19) உச்ச நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம்?

  1. A)   62 வயது
  2. B)    *65 வயது
  3. C)    58 வயது
  4. D)   50 வயது

20) கீழ்கண்டவற்றில் கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி பற்றிய கூற்றுகளில் தவறான கூற்றை கண்டறிக?

கூற்று – 1: மத்திய மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்

கூற்று – 2: மத்திய மாநில உதவி பெற்ற அமைப்புகளின் கணக்குகளை மேற்பார்வை செய்தல்

கூற்று – 3: மத்திய மாநில அரசுகளின் ஆண்டு அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கிறார்

  1. A)   *கூற்று 1 மற்றும் 2 சரி
  2. B)    கூற்று 3 மற்றும் 1 சரி
  3. C)    கூற்று 2 மட்டும் தவறு
  4. D)   அனைத்து கூற்றுகளும் சரி

21) ஆளுநருக்கு உதவவும் ஆலோசனை வழங்கவும் முதலமைச்சர் தலைமையிலான ஒரு குழு இருக்க வேண்டும் என கூறும் சட்ட உறுப்பு எது?

  1. A)   *163
  2. B)    164
  3. C)    165
  4. D)   167

22)  கீழ்க்கண்ட உச்ச நீதிமன்றம் குறித்த கூற்றுகளை படித்து சரியான கூற்றை தேர்வு செய்க?

கூற்று – 1: அரசியல் அமைப்பின் ஆரம்பத்தில் ஒரு தலைமை நீதிபதியும் 8 கீழ்நிலை நீதிபதிகளும் இருந்தனர்.

கூற்று – 2: 2008 ல் இதன் எண்ணிக்கை 33 ஆக அதிகரிக்கப்பட்டது

கூற்று – 3: ஒவ்வொரு உச்சநீதிமன்ற நீதிபதியையும் 4 நபர்கள் கொண்ட கொலிஜியம் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்

  1. A)   *கூற்று 3 மட்டும் சரி
  2. B)    கூற்று 1 மற்றும் 3 சரி
  3. C)    கூற்று 1 மட்டும் சரி
  4. D)   அனைத்து கூற்றுகளும் சரி

23) இந்திய அரசியலமைப்பின்_______சட்ட உறுப்பின் படி ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளார்?

  1. A)   123
  2. B)    202
  3. C)    203
  4. D)   *213

24) பொருத்துக

 A) சரத்து 155 – 1. ஆளுநர் பதவிக்காலம்

B) சரத்து 156 – 2. ஆளுநரின் தகுதிகள்

C) சரத்து 154 – 3. ஆளுநர் நியமனம்

D) சரத்து 157 – 4. ஆளுநரின் அதிகாரம்

  1. A)   *3 1 4 2
  2. B)    2 3 4 1
  3. C)    3 1 4 2
  4. D)   2 4 3 1

25) உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

  1. A)   எம்.சி. மகாஜன்
  2. B)    எம். இதயதுல்லா
  3. C)    *ஹரிலால் ஜே கனியா
  4. D)   ஒய்.வி. சந்திரசூட்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

1) பிராந்திய அளவிலான சிறிய விமான நிலையங்களை இணைக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட திட்டம் எது?

  1. பிரயாக் திட்டம்
  2. தர்ஷன் திட்டம்
  3. டிஜி யாத்ரா திட்டம்
  4. *உதான் திட்டம்

2) தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எதிர்கால அணு உலைகள் தொடர்பாக இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

  1. அமெரிக்கா
  2. ஐக்கிய அரபு அமீரகம்
  3. *ரஷ்யா
  4. ஜப்பான்

3) 65 – ஆவது தேசிய சீனியர் பேட்மிட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

  1. *சிராக் சென்
  2. பிரித்திவிராஜ்
  3. சுராஜ் கோலா
  4. நிதின் குமார்

4) சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செம்மொழி பூங்கா அமைக்க எங்கு அடிக்கல் நாட்டினார்?

  1. மதுரை
  2. *கோயம்புத்தூர்
  3. சென்னை
  4. திருச்சி

5) 2023 ஆம் ஆண்டின் மிக நீண்ட இரவாக எப்பொழுது காணப்பட்டது?

  1. *டிசம்பர் 21
  2. டிசம்பர் 22
  3. டிசம்பர் 23
  4. டிசம்பர் 24

6) சர்வதேச தரநிர்ணய அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  1. நியூயார்க்
  2. டெல்லி
  3. *ஜெனிவா
  4. பாரிஸ்

7) ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜென் ஆரோக்கிய திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  1. 2022
  2. *2018
  3. 2014
  4. 2017

8) எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?

  1.  பி எஸ் எல் வி சி 54
  2. எஸ் எஸ் எல் வி டி2
  3. *பி எஸ் எல் வி சி 58
  4.  ஜிஎஸ்எல்வி சி 52

9) தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?

  1.  டிசம்பர் 22
  2. டிசம்பர் 28
  3. *டிசம்பர் 24
  4.  டிசம்பர் 26

10) ஏஹெச் 64 ரக அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டரை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

  1. *அமெரிக்கா
  2. இந்தியா
  3. பிரான்ஸ்
  4. சீனா

11) இந்திய வானிலை ஆய்வு மையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  1.  1876 அக்டோபர் 2
  2. *1875 ஜனவரி 15
  3. 1875 நவம்பர் 25
  4. 1877 பிப்ரவரி 13

12) இரண்டாவது காசி தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தவர் யார்?

  1. *நரேந்திர மோடி
  2. ஆர் என் ரவி
  3. நிர்மலா சீதாராமன்
  4. திரௌபதி மர்மூ

13) உலகளாவிய மல்யுத்தத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான ரைசிங் ஸ்டார் அறிவிக்கப்பட்டவர் யார்?

  1.  *அண்டிம் பங்கள்
  2.  சாக்ஷி மாலிக்
  3.  வினேஷ் போகத்
  4.  கீதா மாலியா

14) 19 – ஆவது மின் வாகன கண்காட்சி எங்கு நடைபெற்றது?

  1. *டெல்லி
  2. லக்னோ
  3. சென்னை
  4. மும்பை

15) தேவி பாரதியின் எந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

  1. நொய்யல்
  2. *நீர் வழிபடுஉம்
  3. நிழலின் தனிமை
  4. நட்ராஜ் மகாராஜ்

கணித வினாக்கள்

1) 87846 என்ற எண் —- வகுப்படும்.

A) 2ல் வகுப்படும்.

B) 3ல் வகுப்படும்.

C) 9ல் வகுப்படும்.

*D) A மற்றும் B சரி.

2)  X மற்றும் Y ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 5:7 எனில் Y ன் தற்போதைய வயது என்ன?

A) 60 years.

*B) 40 years.

C) 50 years.

D) 30 years.

3) 8,12,15 மற்றும் 16 எங்களால் வகுப்படும் போது மீதி 7 தரக்கூடிய சிறிய எண் எது?

A) 548.

B) 257.

*C) 247.

D) 614.

4) மீ பொ வ காண்க. 6 , 3 9/17, 36/51.

*A) 6/17.

B) 36/51.

C) 36/17.

D) 6.

5) A;B = 5;7 B;C = 6;11 எனில் A;B;C விகிதம் என்ன?

A) 55;77;66

B) 30;49;48

*C) 30;42;77

D) 5;13;11

6) ஒரு குறிப்பிட்ட தொகையானது 6% தனி வட்டி விகிதத்தில் மூன்று ஆண்டுகளில் ரூபாய் 6372 ஆகிறது எனில் அசலை காண்க?

A). 5000

B) 4500

*C) 4000

*D) 5400

7) ஒரு அசலானது இரண்டு ஆண்டுகளில் கூட்டு வட்டி முறையில் 1.44 மடங்கு ஆகிறது எனில் வட்டி விகிதம் என்ன?

A).15%

*B) 20%

C) 5%

D) 10%

8) ரூபாய் 1200 ஆனது கூட்டு வட்டி முறையில் 1348.32 ஆக மாறுகிறது எனில் கூட்டு வட்டி சதவீதம் என்ன?

*A).6%

b) 7.5%

C) 7%

D) 6.5%

9) 4X+5Y=183 3X/2Y=21/22 எனில் X-Y=?

A). 3

B) 4

C) 7

D) 11

10) ஒரு குறிப்பிட்ட தொகையானது 15 வருடங்களில் இரண்டு மடங்கு ஆகிறது எனில் எளிய வட்டி விகிதம் என்ன?

A). 6 1/3%

*B) 62/3%

C) 5 ⅓%

D) 5 ⅔%

11) (6+6+6+6) /6 / (4+4+4+4)/4 இன் மதிப்பு

*A) 4/13

B) 12/5

c) 7/4

*D) 1

12) 45X? = 900 இல் 25 சதவீதம்?

A) 4

*B) 5

C) 16.2

D) 500

13) ஒருவர் இரண்டு மிதிவண்டியை 20 சதவீதம் லாபத்திற்கு விற்பனை செய்கிறார் அவர் ஒவ்வொரு மிதிவண்டியும் 3500 வாங்கினார் முதல் மிதிவண்டிக்கு 5% லாபம் அடைந்தார் எனில் இரண்டாவது மிதிவண்டிக்கு அவர் அடைந்த லாபம்?

A) 35%

B) 25%

C) 30%

*D) 15%

14) 15 பேர் 5 நாட்கள் வேலை செய்து 750 சம்பாதிக்கின்றனர். 25 பேர் 6 நாட்கள் வேலை செய்து எவ்வளவு சம்பாதிப்பார்கள்?

A) 900

*B) 1500

C) 1200

D) 960

15) A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பார்கள் A மட்டும் அந்த வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B அந்த வேலையை செய்ய ஆகும் காலம்?

A). 20

B) 23

C) 22

*D) 24

16) பிரியா மற்றும் ஸ்வேதா இருவரின் வயது விகிதம் 5;2 ஆக உள்ளது 7 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 4;3 ஆகிறது எனில் பிரியாவின் வயது என்ன?

A).8

*B) 4

*C) 5

D) 6

17) x மற்றும் Y இருவரின் சராசரி வயது 18 Z இன் வயது 9 எனில் மூவரின் சராசரி வயது என்ன?

*A). 15

B) 24

C) 18

D) 20

18) ஐந்து பாடங்களில் ரவி என்பவரின் சராசரி மதிப்பெண் 150. கணக்கீட்டின்போது கணிதத்தில் 43 என்பது 23 என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது எனில் சரியான சராசரி என்ன?

A) 148

B) 160

C) 150

*D) 154

19) சீதா ஒரு பொருளை வாங்கும் போது அவருக்கு 20% தள்ளுபடி கிடைக்கிறது  மேலும் அவர் பணமாக அளிப்பதன் மூலம் ஐந்து சதவீதம் கடைக்காரர் தள்ளுபடி அளிக்கிறார் அடக்க விலை ரூபாய் 3000 எனில் விற்ற விலை என்ன?

*A) 2280

B) 2276

C) 2290

D) 2270

20) 5+11+17,,,,, என்ற தொடரின் 16 ஆவது உறுப்பை காண்க?

A) 97

B) 94

C) 96

*D) 95

21) ஒரு பகடை உருட்டும் போது 4 ஐ விட பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

A) 1/6

*B) 2/6

C) 3/6

D) 5/6

22) ஒரு ஒலிபெருக்கியை ஒருவர் 768 க்கு  விற்பதால் 20% நட்டம் ஏற்படுகிறது 20% லாபம் அடைய அவர் என்ன விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்?

A) 1151

*B) 1152

C) 1153

D) 1154

23) ஒரு தொகையின் 12 சதவிகிதம் என்பது 1080 எனில் அத்தொகையை காண்க?

A) 6000

B) 7000

C) 8000

*D) 9000

24) 11 மற்றும் 60 இக்கு இடையில் உள்ள பகா எண்களின் எண்ணிக்கை?

A) 10

B) 12

*C) 13

D) 14

25) ஒரு கொள்கலனின் கன அளவு 1440 மீட்டர் ³ அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீட்டர் 8 மீட்டர் எனில் உயரத்தை காண்க?

A). 13 மீட்டர்

*B) 12 மீட்டர்

C) 14 மீட்டர்

D) 15 மீட்டர்