ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் டிஆர்பி முதுகலைத் தேர்வு (பிப்பரவரி 1, 2024) வினாவிடைகள்

 

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. புதிய கற்காலத்தின் காலம்?

* பொ.ஆ.மு. 6000 – 4000 

பொ.ஆ.மு. 4000 – 3000

பொ.ஆ.மு. 5000 – 3000

பொ.ஆ.மு. 3000 – 4000

2. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்–

பட்டியல் I     பட்டியல் II

தொல்லியல் இடங்கள்      பண்புகள்

பிரம்மகிரி   ::   1. மெசோலித்திக்

குப்கல்   ::   2. குழி குடியிருப்புகள்

புர்ஜாஹம்   ::  3. பெருந்தாலிகள்

ஆதிச்சநல்லூர்  ::  4. மெகாலித்திக்

                              5. சாம்பல் மேடுகள்

5 2 1 4

1 5 2 4

1 2 5 3

* 4 5 2 3

3. பண்டைய இந்தியாவின் வரலாற்றுப் பெயர் என்ன?

ஆர்யவிருத்தா

இந்தியா

பாரதம்

* பாரதவர்ஷா

 4. பின்வரும் எந்த வேதத்தில் காயத்ரி மந்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது?

* ரிக்வேதம்

யஜுர்வேதம்

அதர்வவேதம்

சாமவேதம்

5. ஓவியங்கள் பற்றிய முதல் பண்டைய இலக்கியம் எது?

அலங்காரா

கலாஸ்மிருதி

* அலங்காரஞான சூத்திரம்

யாமினி

 6. பின்வருபவர்களில் பிருத்விராஜ் ராசோவை எழுதியவர் யார்?

அமர் சிங்

யாதவா

* சந்தாபர்தாய்

ஜெய்சிங்சுர்

7. 9-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையிலான குஜராத்தின் அரசியல் அமைப்பு மற்றும் சமூக அமைப்பை அறிய உதவும் நூல்?

ராஜதரங்கிணி

பஞ்சதந்திரம்

* லேகாபத்தாதி

சுக்ராநிதி

8. — “தங்களின் நாடு போன்ற நாடு இல்லை, அவர்களைப் போன்ற தேசம் இல்லை, அவர்களைப் போன்ற மன்னர்கள் இல்லை, அவர்களைப் போன்ற அறிவியல் இல்லை” என்று இந்துக்கள் நம்புகிறார்கள் எனக் குறிப்பிட்டவர்?

அமீர்குஸ்ரு

* அல்பெருனி

ஜியாவுதீன் பரனி

பிரோஸ் துக்லக்

9. பின்வரும் எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகளைக் கவனியுங்கள்.

ஆனந்த காந்தர் : விராஹிணி

வி.டி. சாவர்க்கர் : உத்தரக்ரியா

ரவீந்திரநாத் தாகூர் : கணதேவ்தா

முஹம்மது இக்பால் : பால்-இ-ஜிப்ரில்

மேலே உள்ள இணைகளில் எது சரியாகப் பொருந்துகிறது?

1 2 & 4

* 2 & 4

2 & 3

1 & 3

10. ஹரப்பா பின்வரும் இடங்களில் எங்கு அமைந்துள்ளது?

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டம்

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம்

* பாகிஸ்தானின் சாஹிவால் மாவட்டம்

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டம்

11. சிந்து சமவெளி நாகரீக  அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய தானியக் களஞ்சியம் எங்குள்ளது? லோதல்

காலிபங்கன்

* ஹரப்பா

மொகஞ்சதரோ

12. பின்வருவனவற்றில் எது தவறானது?

சிந்து சமவெளி மக்கள் தங்கத்தை நன்கு அறிந்திருந்தனர்

* சிந்து சமவெளி மக்கள் இரும்பு பற்றி நன்கு அறிந்திருந்தனர்

சிந்து சமவெளி மக்கள் கோதுமையை நன்கு அறிந்திருந்தனர்

சிந்து சமவெளி மக்கள் எழுத்துக் கலையை அறிந்திருந்தனர்

 13. சிந்து சமவெளி மக்களுக்கு தெரிந்த உலோகங்கள்?

தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், தகரம், இரும்பு

தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு

தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம்

* தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம், தகரம்

14. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

சுர்கோட்டா : உழுத வயல்

ஹரப்பா: குதிரை எச்சம்

* ரங்பூர்: நெல் உமி

சன்ஹுதாரோ : கோட்டை

15. சிந்து சமவெலி காலத்தின் மிகவும் மேம்பட்ட நீர் மேலாண்மை அமைப்பு எங்கு கண்டறியப்பட்டுள்ளது?

* டோலவிரா

லோதல்

காலிபங்கன்

ஆலம்கீர்பூர்

16. பின்வருவனவற்றில் ஹரப்பா நாகரிகத்தின் தனித்துவமான பங்களிப்பாக இல்லாதது எது?

* பொது கழிப்பறைகள்

எடைகள் மற்றும் அளவீடுகளின் சீரான தன்மை

தசம அளவீட்டு முறை

முதல் நகராட்சி அமைப்பு

17. பாலகங்காதர திலகர் கருத்துப்படி, ஆரியர்களின் பூர்வீகம்?

மத்திய ஆசியா

திபெத்

* ஆர்க்டிக் பகுதி

காஷ்மீர்

18. பின்வருவனவற்றில் எது சரியானது?

ரிக்வேத காலத்தில் வர்ணங்கள், பரம்பரையாக இருந்தன

ரிக்வேத காலத்தில் தீண்டாமை பரவலாக இருந்தது

ரிக்வேத காலத்தில் வர்ணங்களுக்கிடையேயான திருமணங்கள் தடை செய்யப்பட்டன

* ரிக்வேத காலத்தில் வர்ணங்களுக்கிடையே சமபந்தி முறை இருந்தது

19. வேத பண்பாட்டில் பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

அசுரா : புனிதமான செடி

பூஷன் : பழங்குடியினர் கூட்டம்

ரீட்டா : போதை பானம்

* ரிபு : குல்ல மனிதர்கள்

20. புத்தர் எங்கு ஞானம் பெற்றார்?

சாரநாத்

பிரயாக்

காசி

* போதிகயா

21. மகாவீரர் மற்றும் புத்தரின் போதனைகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்ன?

மரணத்திற்குப் பிறகான  வாழ்வு

கர்மாவில் நம்பிக்கை

அகிம்சையில் நம்பிக்கை

* உடலை  வருத்துதல்

22. “உயர்மட்ட நிர்வாகம் மற்றும் தேசிய உணர்வு இல்லாதது” மௌரிய வீழ்ச்சிக்கு காரணம்  எனக் கூறியவர்?

ஏ.எஸ். எச்.சி. ரே சவுத்ரி

.ஆர்.கே.முகர்ஜி

* ரோமிலா தாப்பர்

ஹெச்.பி. சாஸ்திரி

23. கீழ்காண்பவைகளைக் கவனி.

1. வருணா மற்றும் அசி நதிக் கரைகளில்  அமைந்துள்ளது

2. பானர் என்ற அரசரின் பெயரால் பெயர்பெற்றது?

3. முக்கிய அரசர் பிரஹன்தத்தா ஆவார்.

மேல் கண்ட கூற்றுகளால் அறியப்படும் மகாஜனபதம் எது?

மகதம்

* காசி

அங்கம்

அவந்தி

24. பின்வரும் கல்வெட்டுகளில் எது சந்திரகுப்த மௌரியர் மற்றும் அசோகர் ஆகிய இருவரின் பெயர்களைக் குறிப்பிடுகிறது?

ஷாபஜ்கர்ஹி பாறை கல்வெட்டு

மாஸ்கி கல்ழெட்டு

* ருத்ரதாமனின் ஜுனகர் கல்வெட்டு

ஸ்கந்தகுப்தர்வின் ஜுனகர் கல்வெட்டு

25. மௌரியர் ஆட்சியில் பஞ்ச நிவாரண நடவடிக்கைக்காக உணவு சேமிப்பு கிடங்குகள் இருந்தது என்பதை எதன்மூலம் அறியலாம்.

கினார் 2-ஆம் பாறைத்தூண் கல்வெட்டு

2-ஆம் தூண் கல்வெட்டு

சாசரத்தின் சிறியத்தூண் கல்வெட்டு

* சோகௌரா தகட்டுக் கல்வெட்டு

26. அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் நுழைய கீழ்க்கண்டவற்றில் எந்தக் கனவாயைப் பயன்படுத்தினார்?

பனிஹல் கனவாய்

ஜோகில்லா கனவாய்

* கைபர் கனவாய்

பீர்பாஞ்சல் கனவாய்

 27. இரண்டு ஜைன தீர்த்தங்கரர்களைத் தவிர, கதைகளில் குறிப்பிடப்பட்ட மற்ற அனைவரும் புராணங்களே. அந்த ிருவர் யார்?

சாந்திநாதர் மற்றும் வர்த்தமானர்

* பார்ஸ்வநாத் மற்றும் வர்த்தமானர்

 சாந்திநாதன் மற்றும் ஆதிநாதன்

பார்ஷ்வநாத் மற்றும் ஆதிநாதர்

28. பண்டைய இந்தியாவில் கீழ்க்கண்ட அரசர்களில் யார் சமண மதத்தின் ஆதரவாளர்களாக இருந்தார்கள்?

1. ஸ்ரேனிகா பிம்பிசாரர்

2. சந்திரகுப்த மௌரியர்

3. காரவேலர்

* 1,2&3

1&2

2 & 3

1 & 3

29. பின்வருவனவற்றைப் பொருத்துக.

கிர்னார் கல்வெட்டு   ::   1. ருத்ரதாமன்

அலகாபாத் பிரசஸ்தி   ::   2. கௌதமிபுத்ர ஷதகர்னி

ஐஹோல் கல்வெட்டு   ::   3. சமுத்திரகுப்தர்

நாசிக் பிரசஸ்தி   ::   4. புலிகேசி II

* 1 3 4 2

4 3 4 1

2 1 3 4

3 4 2 1

30. பொருத்துக.

ஆதவனே    ::   1. பாசனத் துறை.

கந்தாச்சாரே   ::   2. நில வருவாய்

சிஸத்    ::   3. நில வருவாய் துறை.

ஆயகா   ::   4. இராணுவத் துறை.

* 3 4 2 1

1 2 3 4

2 1 3 4

4 3 2 1

31. ஹர்ஷரின் காலத்தில் இந்தியா மிகவும் கல்வியறிவு பெற்ற நாடாக இருந்தது என்று பின்வரும் வரலாற்றாசிரியர்களில் யார் குறிப்பிடுகிறார்?

டாக்டர் ஆர்.எஸ். திரிபாதி

டாக்டர். ஆர்.சி. மஜூம்தார்

* டாக்டர்.கே.எம். பனிகர்

டாக்டர்.எஸ்.ராய்

32. பண்டைய நூல்கள் ஒருவரின் வாழ்க்கையை நான்கு ஆசிரமங்களாகப் பிரிக்கின்றன, பின்வருவனவற்றில் எது சரியான வரிசை?

பிரம்மச்சரியம், க்ரிஹஸ்தா, சன்யாஸம், வானபிரஸ்தம்

க்ரிஹஸ்தா, சன்யாஸம், வானபிரஸ்தம், பிரம்மச்சரியம்

வானபிரஸ்தம், பிரம்மச்சரியம், க்ரிஹஸ்தா, சன்யாஸம்

* பிரம்மச்சரியம், க்ரிஹஸ்தா, வானபிரஸ்தம், சன்யாஸம்

33. ராஜபுத்திர காலத்தில் ‘பண்டாரிகா’ எனப்பது எதனோடுத் தொடர்புடையது?

வருவாய்த் துறை

நீதி துறை

காவல் துறை

* கருவூலத் துறை

34. பொருத்துக.

அச்சரங்க சூத்திரம் 1. வேதம்

அங்குத்தர நிகாயா 2. பகவதம்

பஞ்சராத்ர சம்ஹிதா 3. சமணம்

வாஜசனேயி சம்ஹிதா 4. புத்தம்

4 3 1 2

* 3 4 2 1

3 4 1 2

4 3 2 1

 35. யுவான் சுவாங் எங்கு சமணம் செழித்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்?

ஒடிசா

காஷ்மிர்

* வங்கம்

பிகார்

36. இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்திய கவிதைப் படங்களையும் கருப்பொருளையும் ஏற்றுக்கொண்ட முதல் முஸ்லிம் எழுத்தாளர் யார்?

ஹசன் நிஜாமி

* அமீர் குச்ரோ

அபுல் ஃபசல்

அப்துல் காதர் பதோனி

37. பின்வருபவைகளில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில்களின் முக்கிய அம்சம்?

கோபுரங்கள் அல்லது நுழைவாயில்கள்

* விமானங்கள்

பக்தர்களுக்கான கூடங்கள்

பெரிய தூண்கள்

38. கூற்று மற்றும் காரணம்.

     கூற்று காசிமின் சிந்து படையெடுப்பானது ஒரு “விளைவுகளற்ற வெற்றி மட்டுமே.

      காரணம்: ஏனெனில் நாட்டின் எல்லைப்பகுதியை மட்டுமே இது தொட்டது.

கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

39. கூற்று மற்றும் காரணம்.

     கூற்று: கஜினி மாமுது, 1025-ல் சோமநாத கோவிளை தாக்கினார்.

    காரணம்: சமகால சமணச் சான்றுகள் இதை உறுதிசெய்யவில்லை என சதிஷ் சந்திரா குறிப்பிடுகிறார்.

* கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

40. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: அல்பெருனி கோரிமுகமதுடன் இந்தியா வந்தார்.

    காரணம். இவர் கிதாப் – உல் – ஹைந்த் என்ற புத்தகத்தை எழுதினார்.

கூற்று சரி, காரணம் தவறு

* கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

41. பின்வரும் கூற்றுகளைக் கவனி.

1. இல்துட்மிஷின் ஆட்சியின் போது, ​​தப்பியோடிய குவாரேஸ்ம் இளவரசரைப் பின்தொடர்ந்து செங்கிஸ் கான் சிந்துவை அடைந்தார்.

2. முகமது பின் துக்ளக்கின் ஆட்சியின் போதுதான் தைமூர் முல்தானை ஆக்கிரமித்து சிந்து நதியைக் கடந்தார்.

3. விஜயநகரப் பேரரசின் இரண்டாம் தேவராயரின் ஆட்சியின் போது வாஸ்கோடகாமா கேரளக் கடற்கரையை அடைந்தார்.

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

* 1 மட்டும்

1 & 2 மட்டும்

3 மட்டும்

2 & 3 மட்டும்

42. இடைக்கால இந்தியாவைப் பொறுத்தவரை, அளவு அடிப்படையில் ஏறுவரிசையில் பின்வருவனவற்றில் எது சரியான வரிசை?

* பர்கானா, சர்க்கார் சுபா

சர்க்கார், பர்கானா, சுபா

சுபா, சர்க்கார், பர்கானா

பர்கானா, சுபா, சர்க்கார்

43. இந்திய வரலாற்றில் பின்வரும் நிகழ்வுகளைக் கவனி.

1. அரசர் போஜரின் கீழ் பிரதிஹாரரின் எழுச்சி

2. முதலாம் மகேந்திரவர்மனின் கீழ் பல்லவ அதிகாரத்தை நிறுவுதல்

3. முதலாம் பராந்தகனால் சோழர் அதிகாரம் நிறுவுதல்

4. பால வம்சம் கோபாலனால் நிருவப்படல்

மேல் கண்ட நிகழ்வுகளின் சரியான காலவரிசை?

2 – 1 – 4 – 3

3 – 1 – 4 – 2

* 2 – 4 – 1 – 3

3 – 4 – 1 – 2

44. பின்வரும் வெளிநாட்டுப் பயணிகளில் யார் இந்தியாவின் வைரங்கள் மற்றும் வைரச் சுரங்கங்களைப் பற்றி விரிவாக குறிப்பிடுகிறார்?

பிரான்ஸுவா பெர்னியர்

* ஜீன் – பாப்டிஸ்ட் டேவர்னியர்

ஜீன் டி தெவெனோட்

அபே பார்தெலிமி கார்

45. பின்வரும் எந்த ஆட்சியாளர் ‘ஜிட்டல்’ என்ற செப்பு நாணயங்களை வெளியிட்டார்?

முகமது பின் துக்ளக்

ஃபிரோஸ் ஷா துக்ளக்

* இல்டுமிஷ்

குலி குதுப் ஷா

46. டெல்லி சுல்தான்களில்  எந்த வம்சம் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்தது?

* கில்ஜி

துக்ளக்

சயத்

லோடி

47. காஜி மாலிக் பின்வரும் எந்த வம்சத்தை நிறுவினார்?

* துக்ளக்

கில்ஜி

சயத்

லோடி

48. எந்த முகலாய பேரரசர் ‘ஜிந்தா பீர்’ என்று அழைக்கப்படுகிறார்?

ஹுமாயூன்

ஜஹாங்கீர்

அக்பர்

* ஔரங்கசீப்

49. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: ஷெர்ஷா சூரி அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயம் ரூபியா என்று அழைக்கப்பட்டது.

    காரணம்: கல்கத்தாவிலிருந்து லாகுருக்கு பெரிய டிரங்க் சாலை ஷேர்ஷா சூரியால் கட்டப்பட்டது.

* கூற்று சரி, காரணம் தவறு

கூற்று தவறு, காரணம் சரி

இரண்டும் சரி

இரண்டும் தவறு

50. பிளாசி போரின் போது முகலாய அரசர் யார்?

* ஆலம்கீர் II

சிராஜ்-உத்-தௌலா

மிர் காசிம்

ஷா ஆலம் II

51. தக்காணத்தில் மராட்டியர்கள் சேகரித்த 25 சதவீத நில வருவாய் எவ்வாறு அழைக்கப்பட்டது.

போகா

பாகா

சர்தேஷ்முகி

* சௌத்

52. மராட்டியருக்கும் அகமது ஷா அப்தாலிக்கும் இடையே நடைபெற்ற போர் எங்கு நிகழ்ந்தது?

பிவானி

* பானிபட்

ரேவாரி

கர்னல்

53. பின்வரும் எந்த ஆண்டில் சால்பாய் ஒப்பந்தம் கையெழுத்தானது?

1772

* 1782

1802

1817

54. வானியல் மற்றும் ஜோதிடத்தில் ஹுமாயூனின் ஆர்வத்தை பின்வரும் எந்தப் படைப்பு காட்டுகிறது?

தாரிக்-இ-சலாடின்-இ-ஆஃப்கானா

தாரிக்-இ-ரஷிதி

* கானுன்-இ-ஹுமாயுன்

தஸ்கிரத்-உல்-வாகியாத்

55. முகலாய நில வருவாய் நிர்வாகத்தில்  ‘ஜிஹாத்’ என்றால் என்ன?

* நிலையான கட்டணம்

ஒரு மத வரி

ஒரு சுங்கவரி

ஒரு சாலை வரி

56. முகலாயர்களின் ஆட்சியின் கீழ் துறைமுகத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர்?

மிர்-இ-பாகர்

தஹ்வில்தார்

முஷ்ரிப்

* முட்சாத்தி

57. ஹுமாயூன்-நாமாவை எழுதியவர் யார்?

ஹுமாயூன்

* குல்பதன் பேகம்

பாதம்

அகமது யாத்கர்

58. பின்வரும் ஓவியர்களில் அக்பரால் முல்தானின் திவானாக நியமிக்கப்பட்டவர் யார்?

* அப்துல் சமத்

அபுல் ஹசன்

மீர் சையத் அலி

தஸ்வந்த்

59. பின்வரும் மாகாணங்களில் உள்ளாட்சி அமைப்பு முதலில் எங்கு நடைமுறைக்கு வந்தது?

மதராஸ்

* கல்கத்தா

பம்பாய்

டெல்லி

60. பொருத்துக.

   போர்   ::    நபர்

  முதல் மைசூர் போர்   ::   1. கார்ன்வாலிஸ்

இரண்டாம் மைசூர் போர்    ::   2. ஹேஸ்டிங்ஸ் பிரபு

மூன்றாவது மைசூர் போர்   ::   3. வெல்லஸ்லி

நான்காவது மைசூர் போர்   ::   4. வாரன் ஹேஸ்டிங்ஸ்

                     5. கர்னல் ஸ்மித்

* 5 4 1 3

1 2 3 4

5 4 3 2

4 3 2 1

61. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பின்வரும் எந்த இடத்தில் ஆங்கிலேயத் தொழிற்சாலை இருந்தது?

கொச்சின்

தெலிச்சேரி

* கண்ணனூர்

கோழிக்கோடு

62. “1674 இல் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கீழ் ஆளுநராக இருந்த ஷாயிஸ்தா கான் என்பவரால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது.

ஏழு ஆண்டு போரின் போது (1756-63) இந்த நகரம் ஜான் நிறுவனத்தால் (1757) கைப்பற்றப்பட்டது, ஆனால் பின்னர் (1763) 1778 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றபட்டது, அமெரிக்க சுதந்திரப் போரின் (1776-84) முறிவுக்குப் பிறகு, இது பாரிஸ் உடன்படிக்கையின் (1783) மூலம் பிரெஞ்சுக்காரர்களிடம் கொடுக்கப்பட்டது. 1793 இல் ஆங்கிலேயர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஐரோப்பாவில் போர்கள் வெடித்ததால், அது இறுதியாக 1815 இல் பிரெஞ்சுக்காரர்களிடம் கொடுக்கப்பட்டது மற்றும் 1951-இல் இந்திய குடியரசிற்கு மாற்றப்படும் வரை அவர்களின் வெளிநாட்டுப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.”

மேல் கண்ட பத்தியோடு தொடர்புடைய இடம்?

பாண்டிச்சேரி

காரைக்கால்

* சந்த நகர்

மாகி

63. திப்பு சுல்தான் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி–

1. அவர் ஆங்கிலேயர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை

2. மராட்டியர்களுடன் அவருக்கு எந்தப் பகைமையும்  இல்லை

3. அவர் பிரெஞ்சு உதவியை நாடினார்

4. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீழ்ந்தார்

மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

1,2 மற்றும் 3 சரியானவை

2,3 மற்றும் 4 சரியானவை

* 3 மற்றும் 4 சரியானவை

1 மற்றும் 4 சரியானவை

64. பின்வரும் நிகழ்வுகளைக் கவனி–

கார்ன்வாலிஸ் சட்டம்

நார்த்தின் ஒழுங்குமுறை சட்டம்

பிட் இந்தியச் சட்டம்

மேல் கண்ட நிகழ்வுகளின் சரியான காலவரிசை?

3,2,1

* 2,3,1

1,2,3

2,1,3

65. 18 ஆம் நூற்றாண்டின் பின்வரும் ஆட்சியாளர்களில் யார் புதிய நாட்காட்டி, நாணயம் மற்றும் எடைகள் மற்றும் அளவீடுகளை அறிமுகப்படுத்தினார், ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையான இராணுவத்தை ஒழுங்கமைத்தார், சட்டவிரோத தீர்வைகளை அகற்றினார், நவீன ஆயுதக் கிடங்கைக் கட்டியெழுப்பினார் மற்றும் பட்டு வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தை ஊக்குவித்தார்?

ரஞ்சித் சிங்

மிர் குவாசிம்

சாதத் கான்

* திப்பு சுல்தான்

66. பின்வருபவர்களில் நிதிப் பரவலாக்கத்துடன் தொடர்புடையவர் யார்?

* லார்ட் மேயோ

லார்ட் இர்வின்

லார்ட் ரிப்பன்

லார்ட் ஹார்டிங்

67. பஞ்சாபில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வருவாய் முறை எது?

* மஹால்வாரி

மிராஸ்தாரி

ஜாகிர்தாரி

ரயத்வாரி

68. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வட்டித் தொழில் செய்பவர்கள் வளர முக்கிய காரணம் என்ன?

இயற்கை சீற்றங்களால் பயிர்களின்  நாசம்

மக்களின் ஆடம்பரமான வாழ்க்கை

* விவசாயிகளிடமிருந்து அதிக வருவாய் வசூலித்தது

சாகுபடிக்கான  மூலதனம் தேவை

69. வேலிகளின் வலையம் (RING FENCE)  யாருடன் தொடர்புடையது —

ஹென்றி லாரன்ஸ்

டல்ஹவு்சி

* வாரன் ஹேஸ்டிங்ஸ்

லார்ட் ஹேஸ்டிங்ஸ்

70. பின்வருவனவற்றில் எது சரியானது?

ராஜா ராம் மோகன் ராய் கிறித்தவ மதத் தாக்கத்திற்கு உட்படவில்லை.

ராஜா ராம் மோகன் ராய் சமகால ஐரோப்பிய சிந்தனையின் பகுத்தறிவுவாதத்தால் பாதிக்கப்படவில்லை

ராஜா ராம் மோகன் ராய் இஸ்லாத்தின் ஒரே இரை கொள்கையால் பாதிக்கப்படவில்லை

* ராஜா ராம் மோகன் ராய் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் கூறப்பட்ட மைய உண்மைகளின் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை.

71. ‘தத்வ வோதினி சமாஜ்’ யாரால் நிறுவப்பட்டது?

சுவாமி விவேகானந்தர்

ராஜா ராம் மோகன் ராய்

* தேவேந்திர நாத் தாகூர்

ராம கிருஷ்ண பரமஹம்சர்

72. இந்திய பத்திரிக்கைகளின்  சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் மிக விரிவான சட்டம்?

செய்தித்தாள் சட்டம், 1908

இந்திய பத்திரிகை சட்டம், 1910

இந்திய பத்திரிகை அவசர அதிகாரச் சட்டம், 1931

* பத்திரிகை (ஆட்சேபனைக்குரிய கருத்துகள்) சட்டம், 1951

73. 1857 இன் கிளர்ச்சியின் பின்வரும் தலைவர்களில் யார் பிரெஞ்சு பேரரசருக்கு “ஆங்கில அரசாங்கத்தின் அநீதி மற்றும் பொய்ச் செயல்கள் சூரியனின் கதிர்களைப் போல எல்லா பக்கங்களிலும் எரிகின்றன” என்று எழுதியது?

* நானா சாஹேப்

பகதூர் ஷா

தாந்தியா தோபே

பிர்ஜிஸ் கதர்

74. பின்வருபவர்களில் குதைய் கித்மத்கர் அமைப்பின் நிறுவனர் யார்?

கான் அப்துல் கபார் கான்

அப்துல் ரப் நிஷ்தார்

* சௌகத்துல்லாஹ் அன்சாரி

கான் அப்துல் குயூம் கான்

75. பின்வரும் நிகழ்வுகளைக் கவனி

1. ஸ்வராஜ் கட்சியை நிறுவுதல்

2. ஜாலியன்வாலாபாக் படுகொலை

3. காங்கிரஸ்-லீக் ஒப்பந்தம்

4. சௌரி-சௌரா நிகழ்வு

மேல் கண்ட நிகழ்வுகளின் சரியான காலவரிசை?

2 3,1,4

3,2,1,4

* 3,2,4,1

2,3,4,1

 76. ஒத்துழையாமை இயக்கம் மகாத்மா காந்தியால் கைவிடப்பட காரணம்?

மக்களின் ஆதரவு இல்லாதது

இஸ்லாமியர்கள் இயக்கத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தனர்

காங்கிரஸின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரிட்டிஷ் அரசு உறுதியளித்தது

* சௌரி-சௌராவில் வெடித்த வன்முறை

77. பின்வரும் இணைகளில் எது தொடர்பில்லாதது?

மகாத்மா காந்தி – உப்பு சத்தியாகிரகம்

* பாலகங்காதர திலகர் — வெள்ளையனே வெளியேறு இயக்கம் –

சுபாஷ் சந்திர போஸ்–இந்திய தேசிய ராணுவம்

அன்னி பெசந்த் – பிரம்மஞான சபை

78. மகாத்மா காந்தியின் சத்தியாகிரகக் கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளில் எது இல்லை?

அகிம்சை

உண்மைத்தன்மை

அச்சமின்மை

* மதுவிலக்கு

79. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

1. சித்தூ பாண்டே : வெள்ளையனே வெளியேறு இயக்கம்

2. லட்சுமி சுவாமிநாதன்: இந்திய தேசிய இராணுவம்

3. சசிபூஷன் ரே சுத்ரி: ஒத்துழையாமை இயக்கம்

4. குர்தித் சிங்: அனுஷிலன் கட்சி

கீழ்காணும் குறியீடுகளின் முலம் சரியானதைத் தேர்க.

* 1 & 2

1 & 3

2 & 4

3 & 4

80. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிகழ்வுகளில், காலவரிசைப்படி எது கடைசியாக நிகழ்ந்தது?

சிம்லா மாநாடு

ஜூலை 1946 தேர்தல்

கேபினட் மிஷன் திட்டத்தின் சலுகை

* முஸ்லிம் லீக் இடைக்கால அரசில் இணைதல்

81. 1940 இன் “ஆகஸ்ட் சலுகையில்” பின்வருபவைகளில் என்ன முன்மொழியப்பட்டது?

படிப்படியாக இந்தியாவின் முழுமையான சுதந்திரம்

* டொமினியன் நிலை

மாகாண சுயாட்சி

பிரதிநிதித்துவ அரசாங்கம்

82. பொருத்துக.

லக்னோ. அமர்வு, 1916   ::   1. முழு மக்களாட்சி

லாகூர் அமர்வு, 1929   ::   2. காங்கிரஸ்-லீக் ஒப்பந்தம்

கராச்சி அமர்வு, 1931   ::   3. பூர்ண ஸ்வராஜ் தீர்மானம்

ஃபைஸ்பூர் அமர்வு, 1936   ::   4. அடிப்படை உரிமைகளை ஏற்றுக்கொள்வது

3 2 4 1

* 2 3 4 1

2 4 1 3

4 3 2 1

83. கீழ்க்கண்டவர்களில் யார் கேபினட் தூதுக் குழுவில் உறுப்பினராக இல்லை?

* வேவல்

சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்

பேத்திக்-லாரன்ஸ்

அலெக்சாண்டர்

84. “சமூக மேம்பாட்டுத் திட்டம்” எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

1951

* 1952

1954

1956

85. பின்வருபவைகளில் பஞ்சசீலத்தின் கொள்கை இல்லாதது எது?

* உலக அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு

மற்ற நாட்டின் இறையாண்மையை மதித்தல்

பிற நாட்டின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யாமை

சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை

86. பின்வரும் இணைகளைக் கவனி.

1. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்– சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

2. இந்திய புள்ளியியல் நிறுவனம்–பி.சி. மஹலனோபிஸ்

3. அணுசக்தி ஆணையம்– எச்.என். சேத்னா

4. விண்வெளி ஆணையம்–எம்.ஜி.கே. மேனன்

மேல் கண்ட இணைகளில் எது சரியாக பொருந்துகிறது?

* 1, 2 மற்றும் 4

1, 3 மற்றும் 4

1, 2 மற்றும் 3

2, 3 மற்றும் 4

87. பின்வருவனவற்றைக் கவனி.

1. சுதந்திர கட்சி

2. இந்து மகாசபை

3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

4. பாரதிய ஜனசங்கம்

மேல் கண்ட கட்சிகளின் நிருவன ஆண்டினை சரியாக காலவரிசைப்படுத்துக.

1 4,2 3

1 4 3 2

2 4 3 1

* 2 3 4 1

88. சங்ககால சோழர்களின் தலைநகரம்?

* உறையூர்

தஞ்சை

பூம்புகார்

முஸுரி

89. கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?

தலையாலங்கானம் – நெடுஞ்செழியன்

பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்

கஜபாகு – இலங்கை

* திருவஞ்சிக்களம் – சோழர்

90. பொருத்துக.

  சிம்மவிஷ்ணு   ::   1. சாளுக்கிய அரசன்

முதலாம் ஜெயசிம்மன்   ::   2. பல்லவ அரசன்

முதலாம் ஆதித்தன்   ::   3. கப்பல் தளம்

மாமல்லபுரம்   ::   4. சோழஅரசன்

1 2 3 4

* 2 1 4 3

2 3 4 1

4 2 3 1

91. ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு?

* அத்வைதம்

விசிஷ்டாத்வைதம்

சைவசித்தாந்தம்

வேதாந்தம்

92. இரண்டாம் அலெக்சாண்டர் என தனது பெயரை நாணயங்களில் பொறித்தவர்?

முதலாம் முகமது

அலாவுதின் கில்ஜி

* அலாவுதின் பாமன்ஷா

கிருஷ்ண தேவராயர்

93. திருச்சிராப்பள்ளி சுதந்திரப்‌ பிரகடனத்தை வெளியிட்டவர்‌ யார்‌?

* மருது சகோதரர்கள்‌

பூலித்தேவர்‌

வீரபாண்டிய கட்டபொம்மன்‌

கோபால நாயக்கர்‌

94. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. சென்னைவாசிகள்‌ சங்கம்‌ 1884-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

2. இது கஜுலு லட்சுமிநரசு,  என்பவரால் துவங்கப்பட்டது.

3. இவ்வமைப்பின் போராட்டத்தால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது.

மேல் கண்ட கூற்றுகளில் எது தவறானது?

* 1 மட்டும்

2 மட்டும்

3 மட்டும்

1 & 3 மட்டும்

95. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தோடு தொடர்பில்லாதவர்?

TM நாயர்

* ஆணந்த சாருலூ

PT தியாகராயர்

நடேசனார்

96. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

ஈரோடு

சென்னை

* சேலம்‌

மதுரை

97. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தைஎதிர்த்தது.

   காரணம்: தன்னாட்சி இயக்கம்‌பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களைவழங்கிவிடுமென நீதிக்கட்சி அஞ்சியது.

கூற்று சரி காரணம் தவறு

கூற்று தவறு காரணம் சரி

* இரண்டும் சரி

இரண்டும் தவறு

98. சுய மரியாதை இயக்கதின் அதிகாரபூர்வ நாளேடு?

விடுதலை

பகுத்தறிவு

* குடியரசு

ரிவோல்ட்

99. சென்னை தொழிலாளர்‌ சங்கம்‌ எப்போது துவங்கப்பட்டது?

1916

1917

* 1918

1920

100. அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?

மார்கோ போலோ

ஜான் குட்டன்பெர்க்

பீட்டர் அபெலார்ட்

பேகன்

101. முதல் அபினிப் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?

* நாங்கிங் ஒப்பந்தம்

தைசிங் ஒப்பந்தம்

இலி ஒப்பந்தம்

சின்கியாங். ஒப்பந்தம்

102. ஷிமோனோசெக்கி ஒப்பந்தம் எதனோடுத் தொடர்புடையது?

ரஷ்ய-ஜப்பானிய போர்

இரண்டாவது அபினிப் போர்

இரண்டாம் ஆங்கிலேய-சீனப் போர்

* சீன-ஜப்பானியப் போர்

103. கியோ-மின்-தாங் கட்சியை நிருவியவர்?

* சன்யாட் சென்

யுவான்-சி-கை

மாவோ-செ-துங்

குவாட்டோ

104. எந்த ஆண்டு ஜப்பான் சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை கைப்பற்றியது?

* 1931

1932

1933

1934

105. பின்வருவனவற்றில் எது இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக இல்லை?

ஜெர்மனிக்கு வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையில் இழைக்கப்பட்ட அநீதீ

பண்ணாட்டு கழகத்தின் தோழ்வி

1930களின் பொருளாதார பெருமந்தம்

* காலனிகளில் தேசிய விடுதலை இயக்கங்கள்

106. “பனிப்போர்” என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்?

* பெர்னார்ட் பாரூச்

ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் கென்னன்

சர்ச்சில்

107.  கீழ்காண்பவைகளைக் காலவரிசைபடுத்துக.

1. வார்சா ஒப்பந்தம்

2. சென்டோ

3. சீட்டோ

4. நேட்டோ

4, 2, 3, 1

1, 3, 2, 4

* 4, 3, 2, 1

1, 2, 3, 4

108. பொருத்துக.

  இந்தோனேசியா   ::   1. ஜவஹர்லால் நேரு

எகிப்து    ::    2. டிட்டோ

கானா     ::     3. குவாமே நக்ருமா

யூகோஸ்லாவியா   ::   4. கமல் அப்தெல் நாசர்

இந்தியா    ::    5. சுகர்ணோ

5 3 4 2 1

1 3 2 4 5

* 5 4 3 2 1

1 2 3 4 5

109. 24 அக்டோபர் 1945 இல், ஐநா  எத்தனை உருப்பு நாடுகளுடன் துவங்கப்பட்டது?

100 உறுப்பினர்கள்

72 உறுப்பினர்கள்

* 51 உறுப்பினர்கள்

126 உறுப்பினர்கள்

110. சோவியத் யூனியன் என்று பிளவுப்பட்டது?

நவம்பர் 17, 1991

* டிசம்பர் 8, 1991

மே 1, 1991

அக்டோபர் 17, 1991

111. சார்க் அமைப்பின் செயலகம் எப்போது அமைக்கப்பட்டது?

1987

1984

1986

* 1985

112. பயன்பாட்டுவாத கொல்கையில் புகழ் பெற்றவர்?

ஹெர்பர்ட் ஸ்பென்சர்

ஜே.எஸ். மில்

ஆபிரகாம் லிங்கன்

* ஜெர்மி பெந்தம்

113. எந்த நாட்டில் மக்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் பங்கேற்கிறார்கள்?

பிரான்ஸ்

இங்கிலாந்து

* சுவிட்சர்லாந்து

அமெரிக்கா.

114. குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வை முதன்முறையாக நடத்திய நாடு எது?

பிரிட்டன்

பிரான்ஸ்

* சீனா

அமெரிக்கா

115. இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது

டேராடூன்

* பெங்களூர்

ஹைதராபாத்

ஸ்ரீநகர்

116. பின்வரும் எந்த இந்திய மாநிலம் மிக நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது?

ஆந்திரப் பிரதேசம்

* குஜராத்

கேரளா

மகாராஷ்டிரா

117. நரசிம்மன் கமிட்டி எதனோடு தொடர்புடையது?

வருமான வரி சீரமைப்பு

* வங்கி சீரமைப்பு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மறுசீரமைப்பு

பொதுத்துறை நிறுவனங்களில் நியமனங்களை அரசியலற்றதாக்குதல்

118. நிதி ஆணையத்தின் உறுப்பினர்களின் தகுதிகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனி.

1. ஆணையத்தின் உறுப்பினர்களின் தகுதிகளைத் தீர்மானிக்க அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது.

2. ஆணையத்தின் தலைவர் பொது நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

3. ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவர் உயர் நீதிமன்றத்தின்  நீதிபதியாக இருக்க வேண்டும் அல்லது நீதிபதியாக நியமிக்கத் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

1மட்டும்

* 2 & 3மட்டும்

1, 2 3 சரி

1, 2, 3 தவறு

119. பிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியைச் சேர்ந்தது?

பகுதி II

பகுதி I

* பகுதி III

பகுதி IV

120. மியான்மருடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்ளாத இந்திய மாநிலம் எது?

அருணாச்சல பிரதேசம்

மிசோரம்

மணிப்பூர்

* சிக்கிம்