ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிமையம் வழங்கும் முழு மாதிரித்தேர்வு (2) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்

Unit 7 வினாக்கள்

Unit 9 வினாக்கள்

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

புவியியல் வினாக்கள்

கணித வினாக்கள்

தமிழ் வினாக்கள்

1. கூற்று காரணம் ஆராய்க.

கூற்று: தற்கால ஐன்ஸ்டீன் என்று அழைக்கப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்.

காரணம்: அழிவின் ஆற்றல் என்று கருதப்பட்ட கருந்துளையை ஹாக்கின்ஸ் படைப்பின் ஆற்றல் என மாற்றினார்.

கூற்று சரி, காரணம் தவறு

*   கூற்று காரணம் இரண்டும் சரி

   கூற்று தவறு காரணம் சரி

   கூற்று காரணம் இரண்டுமே தவறு

2. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் எந்த இயலில் எத்தனையாவது பாடலாகக்  குறிப்பிடுகிறார்?

   கிளவியாக்கம்-68

   உவமையியல்-34

*   மரபியல்-98.

   மெய்ப்பாட்டியல்-14.

3. சரியான தலைகீழ் வரிசையைக் கண்டுபிடி.

   பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், ஹஜிராபாக் மத்திய சிறை, பாரா ஒலிம்பிக்

   ஹஜிராபாக் மத்திய சிறை, பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், பாரா ஒலிம்பிக்,

   பாரா ஒலிம்பிக், ஹஜிராபாக் மத்திய சிறை, பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம்

*   பாரா ஒலிம்பிக், பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம், ஹஜிராபாக் மத்திய சிறை

4. மாசற விசித்த வார்புறு வள்பின் என்ற புறநானூற்றின் 50ஆவது பாடலில் இடம்பெற்ற மாந்தர்கள் யார்?

  கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார்

*    மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

   கபிலர், பாரி

   ஔவையார், அதியமான் நெடுமானஞ்சி

5. நச்சப்‌ படாதவன்‌ செல்வம்‌ நடுஊருள்‌

நச்சு மரம் பழுத்‌ தற்று.

குறளில் பயின்றுள்ள அணி யாது?

  1. எடுத்துக்காட்டு உவமையணி

     ஒட்டணி

   தீவக அணி

*   உவமையணி

6. இந்தியாவின் தாமரைத்திரு விருதுபெற்ற தமிழ் நாடகக்கலைஞர் யார்?

   சங்கரதாச சுவாமிகள்

   அவ்வை சன்முகம்

*    கூத்துப்பட்டறை நா. முத்துசாமி

   பரீக்ஷா ஞானி

7. பொருத்துக.

அ. சிலம்பு, கிண்கிணி: 1. காலில் அணிவது

ஆ. அரைநாண்: 2. இடையில் அணிவது

இ. சுட்டி: 3. தலையில் அணிவது

ஈ. குண்டலம், குழை: 4. காதில் அணிவது

உ. சூழி: 5. நெற்றியில் அணிவது

   1 2 3 4 5

   1 2 3 5 4

   1 2 4 5 3

*   1 2 5 4 3

8. மதுரைக்கலம்பகம், மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர்கள் யார்?

   நக்கீரர், குமரகுருபரர்

   பரஞ்சோதி முனிவர், குமரகுருபரர்

*   குமரகுருபரர், பரஞ்சோதி முனிவர்

   பரஞ்சோதி முனிவர், நக்கீரர்

9. ‘சாகும்போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன்

சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும்.’ சொன்னவர் யார்?

 பாரதியார்

பாரதிதாசன்

*   சச்சிதானந்தன்

   சுத்தானந்த பாரதியார்

10. பொருத்துக:

அ. ரா.பி. சேதுபிள்ளை:     1. குறிஞ்சிமலர்

ஆ. வ. ராமசாமி:     2. மழையும் புயலும்

இ. எழில்முதல்வன்:    3. தமிழின்பம்

ஈ. நா. பார்த்தசாரதி:     4. புதிய உரைநடை

 1 2 3 4

     2 3 4 1

   2 4 1 3

*   3 2 4 1

11. வேறுபட்ட ஒன்றைச் சுட்டுக.

 சொல்முரண்

*     இறைச்சி

   இலக்கணை

   எதிரிணை இசைவு

12. முதல் தமிழ்க்கணினி வடிவமைக்கப்பட்ட ஆண்டு எது?

* 1983

     1982

   1984

   1985

13. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மேலை நாட்டு நூல் எந்த நகரில் அச்சிடப்பட்டது?

 ரோம்

     டப்லின்

*   லிஸ்பன்

   வெனிஸ்

14. மகபுகவஞ்சி என்னும் நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயர் என்ன?

 சண்முகசுந்தரம்

     மா. இராமலிங்கம்

*   துரை. மாணிக்கம்

   கனகசுப்புரத்தினம்

15. காக்கைப் பாடினிய உரை என்ற நூலை இயற்றியவர் யார்?

 பெருஞ்சித்திரனார்

     மு. வரதராசனார்

*   இரா. இளங்குமரனார்

   தேவநேயப் பாவாணர்

16. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

குறளில் பயின்றுவந்துள்ள அளபெடை யாது?

செயுளிசை அளபெடை

உயிரளபெடை

*   இன்னிசை அளபெடை

   ஒற்றளபெடை

17. கேடு எவ்வகைத் தொழிற்பெயர்?

 தொழிற்பெயர்

     முதனிலைத் தொழிற்பெயர்

   எதிர்மறைத் தொழிற்பெயர்

*   முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

18. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது எது?

* வினையாளணையும் பெயர்

     பொருட்பெயர்

   ஆகுபெயர்

   தொழிற்பெயர்

19. சொற்களைப் பொருத்துக.

அ. மொகு சாஸ்டு – 1. இராஜஸ்தானி

ஆ. கச்சிகொடி – 2. ஆங்கிலம்

இ. கா- 3. ஜப்பான்

ஈ. கேமல் – 4. தமிழ்

   3 1 2 4

   3 4 2 1

   3 4 1 2

*   3 1 4 2

20. கறங்கு என்பதன் பொருள் யாது?

*   காற்றாடி

   கொலுசு

   மரம்

   பனை ஓலை

21. கலைச்சொல் தருக. terminology?

   வேர்ச்சொல்

*    கலைச்சொல்

   ஒலிபெயர்ப்புச்ச்ஒல்

   இயற்சொல்

22. செய்க பொருளைச்‌ செறுநர்‌ செருக்கறுக்கும்‌

எஃகதனிற்‌ கூரிய தில்‌.

குறளில் பயின்றுள்ள தொடைநயத்தைக் குறிப்பிடுக.

கீழ்க்கதுவாய் மோனை

மேல்க்கதுவாய் எதுகை

கீழ்க்கதுவாய் எதுகை

*   மேல்க்கதுவாய் மோனை

23. கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

   ஹெப்லர்

*    ஜான் வீலர்

   ஜான் டால்டன்

   ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

24. மன்றல் என்ற சொல்லின் பொருள் யாது?

*   திருமணம்

   முற்றம்

   பொங்கல்

   தென்றல்

25. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

   தால்

*   உழுவை

   பண்டி

   அடி

26. ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய மனித இயந்திரம் எது?

   வாட்சன்

   இலா

*   பெப்பர்

   IBM

27. பொருள் தருக: ஆர்தருபு.

   குளிர்ந்த மழை

   யுகம்

   செந்தீ

*   வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த

28. நம் பால்வீதி போன்று பல பால்வீதிகள் உள்ளன என்று சொல்லும்

தமிழ் நூல் எது?

*   திருவாசகம்

   தேவாரம்

   திருப்புகழ்

   சீவகசிந்தாமணி

29. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

1. 360 பாகை அரைவட்ட வானத்திரை அமைந்துள்ள இந்தியாவின் ஒரே கோளரங்கம்  பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கோளரங்கம்.

2. இந்தத்திரை கடந்த 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

*   கூற்று 2 தவறு

   கூற்று 1 தவறு

   கூற்றுகள் இரண்டும் தவறு

   கூற்றுகள் எதுவும் தவறில்லை.

30. கலைச்சொல் தருக. ‘homograph’

 ஒருமொழி

*     ஒப்பெழுத்து

   உயிரெழுத்து

   மெய்யெழுத்து

31. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.

 கொண்டல்

*     ஊதை

   கோடை

   தென்றல்

32. ‘வளி மிகின் வலி இல்லை’ சொன்னவர் யார்?

 வெண்ணி குயத்தியார்

     மதுரை இளநாகனார்

*   ஐயூர் முடவனார்

   மோசி கீரனார்

33. ‘விரிச்சி’ என்பதன் பொருள் என்ன?

 நற்பயன்

     நன்னடத்தை

   நற்செயல்

*   நற்சொல்

34. ‘உறுதுயர்’ இலக்கணக் குறிப்பு தருக.

 உரிச்சொற்றொடர்

     பண்புத்தொகை

*   வினைத்தொகை

   உவமைத்தொகை

35. முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ள மொத்த அடிகள் எத்தனை?

 248

*     103

   262

   317

36. பெய்ட்டி, கிணா, மேக் முறையாக வரிசைப்படுத்துக.

* தாய்லாந்து, இலங்கை, இந்தியா

     தாய்லாந்து, இந்தியா, இலங்கை

   இந்தியா, இலங்கை, தாய்லாந்து

   இலங்கை, இந்தியா, தாய்லாந்து

37. கூற்றுகளை ஆராய்க.

1. வங்கக் கடலில் வீசும் புயலும், அமெரிக்காவை, ஜப்பானை, ஹவாய்த் தீவுகளைத் தாக்கும் புயல்கள் வலம்புரிப் புயல்கள்.

2. மேட்டிலிருந்து தாழ்வுக்குப் பாயும் தண்ணீர் போல, காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்துக்குக் காற்று வீசும்.

 கூற்று 1 சரி, 2 தவறு

     கூற்றுகள் இரண்டும் சரி

   கூற்று இரண்டும் தவறு

*   கூற்று 1 தவறு, 2 சரி.

38. ‘முறுக்கு மீசை வந்தார்’ தொகைநிலைத் தொடரைக் கண்டறிக.

 பண்புத்தொகை

*     அன்மொழித்தொகை

   உவமைத்தொகை

   வேற்றுமைத்தொகை

39. மொழிபெயர்க்க. ‘tornado’

 கடற்காற்று

*     சூறாவளி

   பெருங்காற்று

   சுழல்காற்று

40. ‘தொல்லோர்‌ சிறப்பின் விருந்தெதிர்‌ கோடலும்‌ இழந்த என்னை’ இது யாருடைய கூற்று?

 வள்ளுவர்

*     கண்ணகி

   இளங்கோவடிகள்

   தொல்காப்பியர்

41. முப்பழமொடு பால்‌ அன்னம்‌

முகம்‌ கடுத்து இடுவாராயின்‌

கப்பிய பசியி னோட

கடும்பசி ஆகும்‌ தானே”

பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

பழமொழி நானூறு

     சீவக சிந்தாமணி

   நாளடியார்

*   விவேக சிந்தாமணி

42. ‘வாயு சம்கிதை’ நூலை இயற்றியவர் யார்?

 குலசேகர பாண்டியன்

     கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

* சீவலமாறன்

   நன்மாறன்

43. பொருள் தருக. ‘இறடி பொம்மல்

* தினை சோறு

     ஊன் சோறு

   அரிசிச்சோறு

   கூட்டாஞ்சோறு

44. தவறான கூற்றைக் கண்டறிக.

1. மலையை யானையாக உருவகம்‌ செய்து மலையில்‌ எழும்‌ பலவகை ஓசைகளை அதன்‌ மதம்‌ என்று விளக்கும் நூல் கூத்தராற்றுப்படை எனப்படுகிறது.

2. மலைபடுகடாம் 583 அடிகளைக்கொண்டது.

3. அக்காலத்துப் பேரரசர்களுள் ஒருவரான நண்ணன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக்கொண்டு பாடப்பட்டது.

 மூன்று கூற்றுகளும் தவறு

     கூற்று 1 மற்றும் 2 தவறு

*   கூற்று 1 மற்றும் 3 தவறு

   கூற்று 3 மட்டும் தவறு

45. தொடர்பில்லாத ஒருவரைக் கண்டறிக.

 பூமணி

*     நாஞ்சில் நாடன்

   கு. அழகிரிசாமி

   கீ. ராஜநாராயணன்

46. ‘வரத்துக்காரன்’ எதிர்ச்சொல் தருக.

 வணிகன்

     உழவன்

   கிழவன்

*   பழையவன்

47. ஆடிய பாதம் இது எவ்வகைத் தொடர்?

 வினையெச்சத் தொடர்

     வினைமுற்று

*   பெயரெச்சத் தொடர்

   வேற்றுமைத்தொடர்

48. மொழிபெயர்க்க. Regional literature

 அக இலக்கியம்

*     வட்டார இலக்கியம்

   நாட்டுப்புற இலக்கியம்

   செவ்விலக்கியம்

49. யாருடைய நினைவுநாளில் பிறந்து, யாருடைய பிறந்தநாளில் இறந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்?

   கலிலியோ, நியூட்டன்

   நியூட்டன், ஐன்ஸ்டீன்

   ஐன்ஸ்டீன், நியூட்டன்

*   கலிலியோ, ஐன்ஸ்டீன்

50. கீழ்க்கண்ட பெயர்களை சரியான வரிசையில் அமைக்கவும்.

   டாக்டர் என். ஸ்ரீதர், கணமுத்தையா, யுமாவாசுகி

   யுமாவாசுகி, டாக்டர் என். ஸ்ரீதர், கணமுத்தையா

*   கணமுத்தையா, டாக்டர் என். ஸ்ரீதர், யுமாவாசுகி

   கணமுத்தையா, டாக்டர் என். ஸ்ரீதர், யுமாவாசுகி

51. முனிவு என்பதன் பொருள் யாது?

   முனைப்பு

*   சினம்

   முயற்சி

   துணிவு

52. தேவர்‌ அனையர்‌ கயவர்‌ அவரும்தாம்‌

மேவன செய்தொழுக லான்‌.

குறளில் பயின்றுள்ள அணி யாது?

*   வஞ்சப் புகழ்ச்சி அணி.

   பிறிது மொழிதல் அணி

   தற்குறிப்பேற்ற அணி

   வேற்றுமையணி

53. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து தவறானதைக் கண்டறிக.

1. கருந்துளையினுள்‌ செல்லும்‌ எந்த ஒன்றும்‌ தப்பித்து வெளியேவர முடியாது.

2. கருந்துளையின்‌ மையப்பகுதியிலிருந்து (Event Horizon) கதிர்வீச்சுகள் ‌வெளிப்பட்டுக்‌கொண்டிருக்கின்றன.

3.  கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை.

கூற்று மூன்றும் தவறு

கூற்று 1 மட்டும் தவறு

*கூற்று 2 தவறு

கூற்று 3 தவறு

54. கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைக் குறிப்பிடுக.

1. புலவர்களால்‌ எழுதப்பட்டுக்‌ கல்தச்சர்களால்‌ கல்லில்‌ பொறிக்கப்பட்டவை மெய்க்கீர்த்திகள்.

2. முதலாம்‌ இராசராசன்‌ காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள்‌ கல்லில்‌ வடிக்கப்பட்டூள்ளன

* கூற்று இரண்டும் சரி

     கூற்று 1 மட்டும் சரி

   கூற்று 2 மட்டும் சரி

   கூற்று இரண்டும் தவறு

55. பொருத்துக:

அ. மண்ணுள் வினைஞர் 1. வெற்றிலை விற்போர்

ஆ. காருகர் 2. எண்ணெய் விற்போர்

இ. பாசவர் 3. சிற்பி

ஈ. ஓசுநர் – 4. ஓவியர்

உ. மண்ணீட்டாளர் – 5. சாலியர்

 3 4  5 1 2

*     4 5 1 2 3

   4 5 3 2 1

   5 4 3 2 1

56. இலக்கண குறிப்பு தருக. ‘பயில்தொழில்’

 உம்மைத்தொகை

     பண்புத்தொகை

*   வினைத்தொகை

   உவமைத்தொகை

57. கீழ்க்கண்ட இணைகளை ஆராய்ந்து பொருத்தங்களைக்கண்டறிக?

அ. தாமரை அணி விருது – ஹெலன்கெல்லர்

ஆ. ராஜம் கிருஷ்ணன் கரிப்பு மணிகள்

இ. கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் – பூதான இயக்கம்

 1 மட்டும் பொருந்தவில்லை

     1 மற்றும் 2 பொருத்தமில்லை

*   மூன்றும் பொருத்தமானவை

   1 மற்றும் 3 பொருத்தமில்லை

58. முன்னால் பிரதமர் வாஜ்பாய் கையால் பெண் ஆற்றல் விருது பெற்ற பெண்மணி யார்?

 சின்னம்மாள்

     சின்னத்தாயி

   சின்னாத்தாள்

*   சின்னப்பிள்ளை

59. பொருத்தமான வரிசையில் அமைக்க.

வலிமை, மண் கவர்தல், வெற்றி, ஆநிரை கவர்தல்

வெட்சி, வஞ்சி, தும்பை, வாகை

வெட்சி, வஞ்சி, வாகை, தும்பை

*   தும்பை, வஞ்சி, வாகை, வெட்சி

   வஞ்சி, வாகை, தும்பை, வெட்சி

60. மொழிபெயர்க்க. Guild

 வழிகாட்டுக்குழு

*     வணிகக்குழு

   திட்டக்குழு

   சட்டக்குழு

61. “குற்றங்களை, அறத்தின்‌ அடிப்படையில் ‌ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்” சொன்னவர் யார்?

 ஏணிச்சேரி முடமோசியார்

     நல்லூர் நத்தத்தனார்

   வெண்ணி குயத்தியார்

*   ஊன்‌ பொதிப்‌ பசுங்குடையார்

62. ‘நிறைவடைகிறவனே செல்வன் எனச் சொல்வது?

 புறநானூறு

*     தாவோயியம்

   களித்தொகை

   நற்றிணை

63. மீட்சி விண்ணப்பம் என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

 பிரமிள்

     தேவேந்திரன் பூபதி

*   தி.சொ. வேனுகோபாலன்

   வெய்யில்

64. சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற கண்ணதாசனின் படைப்பு எது?

 இயேசு காவியம்

     மாங்கனி

   கலங்காதிரு மனமே

*   சேரமான் காதலி

65. ஈரசைச்‌ சீர்‌ மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும்‌ பயின்று வரும் பாவகை எது?

 வெண்பா

*     ஆசிரியப்பா

   களிப்பா

   வஞ்சிப்பா

66. ‘மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங்‌ காற்றே

மென்காற்றில்‌ விளைசுகமே சுகத்தில்‌உறும்‌ பயனே’

இயற்றியவர் யார்?

* வள்ளலார்

     பாரதியார்

   மாணிக்கவாசகர்

   தாயுமானவர்

67. மறுமலர்ச்சி என்ற சொல்லுக்கான [சரியான ஆங்கிலச் சொல் எது?

 revivalism

*     renaissance

   revolution

   revolve

68. சாகித்ய அகாடெமி விருதுபெற்ற ஜெயகாந்தன் அவர்களின் படைப்பு.

 இமயத்துக்கு அப்பால்

     உன்னைப்போல் ஒருவன்

   பாரீசுக்குப்போ

*   சில நேரங்களில் சில மனிதர்கள்

69. இலக்கணக்குறிப்பு தருக. என்னா

*   அசைச்சொல்

   உரிச்சொல்

   திர்இசொல்

   திசைச்சொல்

70. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியானவற்றைத் தேர்க.

1. நீதிவெண்பாவை இயற்றிய செய்குதம்பிப் பாவலர் சதாவதானக் கலையில் சிறந்தவர்

2. செய்குதம்பிப் பாவலர் உரை எழுதிய நூல் சீறாப்புராணம்

3. பாவலர் 1907, மார்ச் 18 அன்று, தன் சதாவதானக்கலையை மெய்ப்பித்தார்

   1 மற்றும் 3 சரி

*   1 மற்றும் 2 சரி

   2 மற்றும் 3 சரி

   அனைத்தும் சரி

71. பிரான்ஸ் தேசிய நூலகத்தில் பல அரும்பெரும் தமிழ் நூல்களைக் கண்டதாக விவரிப்பவர் யார்?

   குலோத்துங்கன்

   இராமலிங்க அடிகள்

*   தனிநாயக அடிகள்

   சா. கந்தசாமி

72. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

   அணிமை

   அண்மை

   அருகு,

*   செய்மை

73. “கற்பனைத்திறன் என்பது, இன்று நாம் அறிந்துவைத்திருப்பதை மட்டுமன்று, இனி நாம் அறியப்போவதையும் உள்ளடக்கியது”. சொன்னவர் யார்?

   ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்

*    ஐன்ஸ்டீன்.

   நியூட்டன்

   கலிலியோ

74. சோழர்காலச் சிற்பங்களும் தமிழ்க்கல்வெட்டும் அமைந்துள்ள சிவன்கோவிலைக் கட்டிய மன்னன் யார்?

   செங்கிஸ்கான்

   தைமூர்

*   குப்லாய்கான்

   ஷேர்ஷா

75. வாளால்‌ அறுத்துச்‌ சுடினும்‌ மருத்துவன்‌ பால்‌

மாளாத காதல்‌ நோயாளன்‌ போல்‌ மாயத்தால்‌

மீளாத்‌ துயர்தரினும்‌ வித்துவக்‌ கோட்டம்மா! நீ

ஆளா உனதருளை பார்ப்பன்‌ அடியேனே. *

பாடலில் பயின்று வந்துள்ள தொடைநயத்தைக் கண்டுபிடி.

  1. அடி இயைபு
  2. சீர் எதுகை
  3. ஒருவு மோனை

*   அடி எதுகை

76. இப்பேரண்டம் பெருவெடிப்புகளால் ஆனது என்பதை எதன் அடிப்படையில் ஹாக்கிங்ஸ் நிறுவினார்?

*   கணிதவியல்

   இயற்பியல்

   கோட்பாட்டு இயல்

   வானியல்

77. பொருத்தமான இணையைக் கண்டறிக.

 ஒரு கதாசிரியனின் கதை – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

*     உன்னைப்போல் ஒருவன் – யாருக்காக அழுதான்

   தேவன் வருவாரா – கைவிலங்கு

   கங்கை எங்கே போகிறாள் – வாழ்விக்க வந்த காந்தி

78. கப்பலுக்குப் போன மச்சான் என்ற புதினத்தை எழுதியவர் யார்?

 ஜெயகாந்தன்

     அசோகமித்திரன்

   G. நாகராஜன்

*   நாகூர் ரூமி

79. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.

 ஏழாவது சுவை

     நதியின் கால்கள்

*   மீட்சி

   சொல்லாத சொல்

80. பொருள் தருக. அசும்பு.

 வானம்

*     நிலம்

   காற்று

   கதிரவன்

81. இலக்கண குறிப்பு தருக. மெய்முறை

* வேற்றுமைத்தொகை

     உம்மைத்தொகை

   பண்புத்தொகை

   இடைக்குறை

82. இரண்டே மாதங்களில் வீரமா முனிவர் கற்றுக்கொண்ட மொழி எது?

 தமிழ்

     வடமொழி

*   உருது

   பிரெஞ்சு

83. ‘போருழந்‌ தெடுத்த ஆரியில்‌ நெடுங்‌கொடி

‘வாரல்‌’ என்பனபோல்‌ மறித்துக்கை காட்ட’

பாடலில் பயின்றுள்ள அணி யாது?

எடுத்துக்காட்டு உவமையணி

பிறிது மொழிதல் அணி

தன்மை நவிழ்ச்சி அணி

*   தற்குறிப்பேற்ற அணி

84. தமிழ்த்தென்றல்‌ திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும்‌ ஆற்றலைக் ‌கற்றுக்கொண்டவர்‌

தேவநேயப் பாவாணர்

*இளங்குமரனார்

பெருஞ்சித்திரனார்

மு. வரதராசனார்

85. தமிழழகனார் படைத்த சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எத்தனை?

16

18

15

*12

86. பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது என்ற சிற்றிலக்கியத்தை இயற்றியவர் யார்?

குமரகுருபரர்

ஜெயங்கொண்டார்

*பலபட்டடை சொக்கநாத புலவர்

வீர ராகவர்

87. “பல்‌ பழப்‌ பலவின்‌ பயங்கெழு கொல்லி” எனும் கொல்லிமலை பற்றிய குறிப்பு எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

புறநானூறு

*அகநானூறு

பழமொழி நானூறு

ஐங்குறுநூறு

88. கண்ணோட்டம் என்ற சொல்லின் பொருள் யாது?

பார்வை

கோணம்

அன்பு

*இரக்கம்

89. சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

*பரிபாடல்

நற்றிணை

மதுரைக்காஞ்சி

குறிஞ்சிப்பாட்டு

90. ஆறு பெரும்பொழுதுகளையும் கொண்ட திணைகள் எவை?

குறிஞ்சி, முல்லை

பாலை, நெய்தல்

*மருதம், நெய்தல்

முல்லை, மருதம்

91. இவற்றுள் பொருந்தாதது எது?

பாரதமணி

தமிழ்நாடு

இந்தியா

*கிராம ஊழியன்

92. தாது என்ற சொல்லின் பொருள் யாது?

இரும்பு

*மகரந்தம்

வண்டு

சத்து

93. சரியான கூற்றுகளைக் கண்டறிக.

1. தேவராட்டம் ஆண்களால் மட்டுமே ஆடப்படுவது.

2. பறை தேவராட்டத்துக்குரிய இசைக்கருவியாகும்.

   கூற்று 2 சரி

*   கூற்று 1 சரி

   கூற்று 1 மற்றும் 2 சரி

   கூற்று 1 மற்றும் 2 தவறு

94. கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்டது எது?

*   தக்கையின் மீது நான்கு கண்கள்

   சாயாவனம்

   தொலைந்து போனவர்கள்

   சூர்யவம்சம்

95. குழந்தையின் 5-6 மாதங்களில் தலையசையும் பருவம் எது?

   சிற்றில் பருவம்

   அம்மானைப் பருவம்

*   செங்கீரைப்பருவம்

   காப்புப் பருவம்

96. ‘அசும்பிய’ என்ற சொல்லின் பொருள் யாது?

   சிவக்கிற

   புன்னகைக்கிற

   அரும்புகிற

*   ஒளிவீசுகிற

97. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்” என்னும்  சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பினால்  தெரிய வருவது

   மகாபாரதம் பக்தி இலக்கிய காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது

   மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் இருந்தது

*   சங்ககாலத்திலேயே மொழிபெயர்ப்பு முயற்சிகள் இருந்தன

   தமிழின் முதல் மொழிபெயர்ப்பு நூல் மகாபாரதம்

98. பொருந்தாத இணையைக் கண்டறிக.

*   விசாரணைக் கமிஷன் – சுடுமண் சிலைகள்

   வேர்ட்ஸ்மித் – எழுத்தாளி

   எட்வின் ஹப்பின் – பால்வீதி

   உவா – முழுநிலவு

99. சொல்வடிவாய் இருப்பவர்

இறைவன்

இடைக்காடனார்

கபிலர்

*பார்வதி தேவி

100. ‘யாப்படி பலவினுங்‌ கோப்புடை மொழிகளை

ஏற்புழி இசைப்பது’ என நன்னூல் சுட்டும் பொருள்கோள் எது?

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

தாப்பிசைப் பொருள்கோள்

* கொண்டுகூட்டுப் பொருள்கோள்

நிரல்நிரைப் பொருள்கோள்

Unit 7 வினாக்கள்

1) ஜமீன்தாரி முறையின் குறைகள் பற்றிய கூற்றுகளில்  தவறானது எது

1) ஆங்கிலேய அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை.

2) விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டன

3) விவசாயிகள் பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.

4) இந்தத் திட்டத்தினால் ஜமீன்தார்கள் சோம்பேறிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாவும் மாறினர்.

A) கூற்றுகள் 1 2 3 தவறு

B) கூற்றுகள் 1 2 4 தவறு

C) கூற்றுகள் 1 3 4 தவறு

*D) மேற்கூறிய எதுவும் இல்லை

2) யாருடைய வழிகாட்டுதலின்படி மகல்வாரி முறையில் சில அடிப்படை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன

A) ஹோல்ட் மெகன்சி

*B) இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட்

C) பெண்டிங் பிரபு

D) சர் தாமஸ் மன்ரோ

3) எந்த செய்தித்தாள் அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை பலமுறை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது

A) நீல் தர்பன்

B) ராஸ்ட்கோப்தார்

*C) இந்து தேசபக்தன்

D) பெங்கால் கெசட்

4) விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் எது

A) தக்கான கலகம்

*B) சந்தால் கலகம்

C) இண்டிகோ கலகம்

D) பாப்னா கலகம்

5) வரிசைப்படுத்துக

1) கேடா சத்தியாகிரகம்

2) சம்பரான் சத்தியாகிரகம்

3) மாப்ளா கிளர்ச்சி

4) பர்தோலி சத்தியாகிரகம்

*A) 2 1 3 4

B) 2 1 4 3

C) 3 2 1 4

D) 3 4 1 2

6) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற பெருங்கலகத்திற்கான காரணங்களில் பொருந்தாதது எது

A) சதி ஒழிப்பு, பெண்சிசுக் கொலை ஒழிப்பு, விதவை மறுமணம் போன்றவை தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டது

B) இந்திய சிப்பாய்கள், ஆங்கில அதிகாரிகளால் தாழ்வாகவும் அவமரியாதையாகவும் நடத்தப்பட்டது

C) கிறித்துவசமய பரப்பு குழுவினரின் மதமாற்ற நடவடிக்கைகள்

*D) இராணுவத் தளபதி அக்னியூ புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியது

7) பரெய்லி என்ற இடத்தில் பெருங்கலகத்தை வழிநடத்திய இந்தியத் தலைவர் யார்

A) நானா சாகிப்

B) பேகம் ஹஸ்ரத் மகால்

C) தாந்தியா தோபே

*D) கான் பகதூர் கான்

8) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1) 1858 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் மூலம் இந்தியாவின் நிர்வாகம் ஆங்கில அரசிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு மாற்றப்பட்டது.

2) கவர்னர் ஜெனரல், அதன் பிறகு வைசிராய் என அழைக்கப்பட்டார்.

3) இயக்குநர் குழு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கப்பட்டு இந்திய விவகாரங்களை மேற்பார்வையிட செயலரின் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபை (கவுன்சில்) ஏற்படுத்தப்பட்டது.

4) இந்திய இராணுவம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. அதிகப்படியான இந்தியர்கள், இராணுவத்தில் பணியமர்த்தப்பட்டனர்.

A) 1, 3 சரி

B) 2, 4 சரி

C) 1 4 சரி

*D) 2, 3 சரி

9) ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதற்கான முதன்மையான நோக்கம் எது

A) இந்தியாவில் கல்வியை மேம்படுத்த

B) மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபட

*C) எழுத்தர்களை உருவாக்க

D) ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக மாற்ற

10. கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : சாதாரண சமாஜ் என்ற அமைப்பு கிறித்தவ எதிர்ப்பு மனப்பாங்கினை வளர்த்தது.

காரணம் : கேசவ் சந்திர சென்  என்பவரால் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

*D) கூற்று தவறு. காரணம் சரி

11) திருமண வயதுச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது

*A) 1860

B) 1891

C) 1925

D) 1929

12) விதவை மறுமணச் சங்கம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது

A) 1860

*B) 1861

C) 1870

D) 1884

13) அயல்நாடு சென்றால் தீட்டு என்று கூறப்பட்ட கருத்து மறைநூல்களால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என அறிவித்தவர் யார்

A) ராஜா ராம்மோகன் ராய்

B) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

*C) தயானந்த சரஸ்வதி

D) ஜோதிபா பூலே

14) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் பிரம்மஞான சபை முக்கியப் பங்காற்றியது.

காரணம் : ஆல்காட்டின் மறைவுக்குப் பின்னர் இவ்வமைப்பின் தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

15) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : சர் சையத் அகமத்கான் இஸ்லாமியருக்கு ஆங்கிலக் கல்வியைப் பயிலும் படியும் அதில் கவனம் செலுத்தும்படியும் அறிவுரை கூறினார்.

காரணம் : தேசிய இயக்கத்தில் இணைவதைக்காட்டிலும் ஆங்கில அரசுடன் நல்லுறவு மேற்கொண்டால் இஸ்லாமியர் நலன்கள் பேணப்படும் என அவர் நம்பினார்.

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

16) பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்காக சமத்துவ சமாஜம் எனும் அமைப்பை நிறுவியவர் யார்

A) இராமலிங்க அடிகள்

*B) வைகுண்ட சுவாமிகள்

C) அயோத்தி தாசர்

D) ஐயங்காளி

17) பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு யாருக்கு காந்தியடிகள் அறிவுறுத்தினார்.

A) சம்பரான் விவசாயிகளுக்கு

B) அகமதாபாத்  ஆலைத் தொழிலாளர்களுக்கு

*C) கேதா மாவட்ட விவசாயிகளுக்கு

D) தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுக்கு

18) இந்தியப் பணியாளர் சங்கத்தின் முக்கியக் கிளைகள் அமைந்திருந்த இடங்களில் தவறானது எது

*A) பூனா

B) மதராஸ்

C) அலகாபாத்

D) நாக்பூர்

19) மத்திய சட்டப்பேரவை அரங்குக்குள் 1929 ஏப்ரல் 8 இல் வெடிகுண்டை எறிந்தவர்கள் யார்

A) பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ்

*B) பகத் சிங் மற்றும் படுகேஷ்வர் தத்

C) உத்தம்சிங்

D) எஸ்.ஏ டாங்கே மற்றும் முசாபர் அகமது

20. எங்கு நடைபெற்ற மாநாட்டில், முழுமையான சுதந்திரம் அடைவது என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது

A) சென்னை

B) கல்கத்தா

C) பூனா

*D) லாகூர்

Unit 9 வினாக்கள்

21 பின்வருவனவற்றுல் எது மனிதவள மேம்பாட்டுக் குறியிட்டில் H D I  குறியிடாக இல்லை

1 பிறக்கும்போதூ எதிர்பார்க்கும் ஆயூள்காலம்.

2 தனிநபர் G N I

3 பள்ளி வருகை

4 குடி நீர்.

  1. 1, 3 மட்டும்
  2. 2, 3 மட்டும்

*C 2, 4 மட்டும்

D இவை அனைத்தும்

22 பின்வருவனவற்றுள் எது தவறான கூற்று?

  1. பால்இன சமத்துவமின்மை குறியீடு G I A என்பது பாலின ஏற்றத்தாள்வை அளவிடுவதற்க்கான ஒரு குறியிடுஆகும் இது 2010 மனித மேம்பாட்டு அறிக்கை 20ஆம் ஆண்டு பதிப்பில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தால் U N D Bஆல் அரிமுகப்படுத்தபட்டது.

2. 2020ல் நிதிஆய்வு வெலியிட்ட அரிக்கையின்படி நீடித்த வலர்ச்சி குறியிடு பாலின சமத்துவத்தில் S D G இலக்கு 5 கேரலா முதல் இடத்தில் உள்ளது.

  1. 1 மட்டும்

*B 2 மட்டும்

C இவை அனைத்தும்

D எதுவும் இல்லை

23 பின்வருவனவற்றுள் எத்தனை இனைகல் சரியாகப் பொருந்தி உள்ளன.

1 பசி இன்மை – கேரலா

2 வருமை இன்மை – தமிழ் நாடு

3 பாலினம் சமத்துவம் – கேரலா

4 சிறந்த கல்வி – ஆந்திரா

5 சமத்துவஇன்மை குறைந்துள்ளது – மேஹாலயா

6 உயர்ந்த ஆரோக்கியம் மற்றும் நள்வாழ்வு – ஹிமாச்சல பிரதேசம்

  1. 2 இனைகல்

*B 3 இனைகல்

C 4 இனைகல்

D 5 இனைகல்

24 பலபரிமான வருமைக் குறியிடு தரவரிசை தொடர்பாகப் பிண்வரும் கூற்றை கருத்தில்கொல்க.

1 மாநிலங்கலின் வாரியாக பலபரிமான வருமை குறியிட்டில் அதிக  மதிப்பெண் பெற்று கேரளா முதல் இடத்தில் உல்லது.

2 மாநிலங்கலின் வாரியாக பலபரிமான வருமைக் குறியிட்டில் அதிக  மதிப்பெண் பெற்று தமிழ்நாடு 4ஆம் இடத்தில் உல்லது.

3 யூணியன் பிரதேசப் பிரிவில் 1 மாநிலங்கலின் வாரியாக பலபரிமான வருமை குறியிட்டில் அதிக  மதிப்பெண் பெற்று புதுச்சேரி முதல் இடத்தில் உல்லது.

  1. 1, 2 மட்டும்
  2. 2, 3 மட்டும்
  3. 1, 3 மட்டும்

*D இவை அனைத்தும்

25 தமிழ்நாட்டில் பாலின சமத்துவம் தொடர்பாக பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று.

1 தமிழ்நாட்டில் பெண்கல் தொழிலாலர் பங்கேர்ப்பு 32% உள்ளது இது இந்தியாவில் மற்ற பகுதியைவிட 2 மடங்கு அதிகமானது.

2 இந்தியாவில் கல்லூரிகளில் சேரும் பெண்கலின் மொத்த சேர்க்கை விகிதம் G E R தமிழ்நாட்டில் 49% உள்ளது ஆனாள் மற்ற பகுதியில் 25%ஆக உள்ளது.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்

*C இவை அனைத்தும்

D எதுவும் இல்லை

26 பிண்வரும் எந்த ஆனையம் வழக்குகளில் இந்தியாவில் செழுமையை அடிக்கினர் கிரிமிலேயர் என்ற கருத்து அரிமுகப்படுத்தப்பட்டது.

  1. இந்திரா சகானி வழக்கு 1992

*B சட்ட நாதர்  ஆனையம்1971

C மண்டல ஆனையம் 1979

D ராம நந்தன் குளு 1993

27 பஞ்சமர் என்ற சொல்லை ஆதிதிராவிடர் என மாற்ற வேண்டும் என்று கூரியவர் யார்?

  1. இ.வே .ரா பெர்இயார்
  2. இரட்டை மலை ஸ்ரினிவாசன்
  3. M C ராஜா

*D ஐயோத்திதாசர்

28. 1917 முதல் 1925 வரை தென் இந்திய மக்கல் சங்கத்தின் S I P A  முதல் தலைவர்ஆகப் பணியாற்றியவர் யார்?

*A Pt தியாகராஜர் செட்டியார்

B சி நடேசன் முதலியார்

C பனகட்டி ராமராயர்லிங்கர்

D பிரகாஸ் வந்தளு

29 எண்ணும் எழுத்தும் தொடர்பான  பிண்வரும் கூற்றுகளை சரிபார்க்க

1 கோவிட்19 ஊரடங்கின்போது பள்ளிகள் மூடியதால் இதன் நோக்கம் கற்றலில்  உள்ள இடைவெளியைக் குரைப்பது ஆகும்.

2 2025ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகலில் பயிலும் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கட்டாயமாக புரிதல் மற்றும் அடிப்படை எண்கனிதம் திறனை வலர்ப்பது இதன் நோக்கம்.

3 8 வயதிர்க்குல் அனைத்து குழந்தைகளும் மொழிகளை படிக்கவும் புரிந்துக்கொளவும்  மற்றும்  அடிப்படை எண்கனிதம் திறனையும் வலர்ப்பதை இது உறுதி செய்கிரது.

*A இவை அனைத்தும்

B 1 மட்டும்

C 1, 3 மட்டும்

D 1, 2 மட்டும்

30 தவரான கூற்று தேர்வு செய்க

1 தமிழ்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் D I E T துறை கனவு ஆசிரியர் என்ற மாதாந்திர இதழை வெளியிடுகிரது.

2 கனவு ஆசிரியர்ஆனது கற்றல் மற்றும் கற்பித்தல் முரைகளில் உள்ள சிறந்த நடைமுரைகளைப் பரிமாறிக்கொள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயனுள்ள தளத்தை வழங்குகிரது.

*A 1 மட்டும்

B 12 மட்டும்

C இரண்டும் சரி

D இரண்டும் இல்லை

31. டிசம்பர் 18, 1982ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமூக நிதிகளுக்கான ஐக்கியநாடு சபயின் பிரகடணத்தில் கீள்க்கண்டவற்றுள் எதர்க்கு முக்கியத்துவம் தரவில்லை

  1. சிருபான்மையினர்கலுக்கு அறிவைவளர்க்க  வழிவகை செய்வது.
  2. சிருபான்மையினர்கலின் வரலாறை நிலைநாட்டிக்கொள்ள வழிவகை செய்வது
  3. சிருபான்மையினர்கல் நிருவனத்தை உருவாக்கி அதனை பராமரிக்க  வழிவகை செய்வது

*D மத சார்பற்ற நாட்டை உருவாக்க வெண்டும்

  • மத நல்லினக்கம் நாள் எப்பொது?

*A ஆகஸ்ட் 20

B ஆகஸ்ட் 21

C ஆகஸ்ட் 22

D ஆகஸ்ட் 23

33 சமூக நிதியை வளர்க்கவும் அதனைப் பாதுகாக்கவும் சமூகப் பங்கு யாது?

  1. அனைவருக்கும் சமம்ஆன வேலை வாய்ப்பு
  2. பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல்
  3. குழந்தை திருமனம் மற்றும் போதைப் பழக்கத்தை ஒழித்தல்

*D அவரவர் நிலைக்கு ஏற்ப்ப சமம்ஆன வாய்ப்பை அளித்தல்

34 கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சமூக நீதிக்குத் தொடர்பில்லாதது?

  1. ஜாதி ஒளிப்பு
  2. மத நல்லினக்கம்
  3. சமத்துவம் பாள்ளினம்

*D பொருளாதாரம் மற்றும் அரசியல் முன்னேற்றம்

  • கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எந்த நூலை ஜான்ராக் எழுதவில்லை.

*A நீதி நெறி கோட்பாடு

B நீதிக்கு ஞாயம்

C மக்கல் சட்டம்

D நீதி கோட்பாடு

இந்திய அரசியலமைப்பு வினாக்கள்

36) பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களின் தகுதிகளில் தவறானவற்றை தேர்வு செய்க?

கூற்று 1: இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்

கூற்று 2: குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்

கூற்று 3: பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் தகுதி இருத்தல் வேண்டும்

A) கூற்று 3 மட்டும் தவறு

*B) கூற்று 2, 3 தவறு

C) கூற்று 2 மட்டும் தவறு

D) அனைத்து கூற்றுகளும் சரி

37) அடிப்படை கடமைகளில் 51A.k. இன் படி கல்வி அளிப்பதை யாருக்கு எந்த திருத்தச் சட்டத்தின் படி அறிவுறுத்துகிறது?

A) சட்ட திருத்தம் 86, அரசுக்கு.

*B) சட்ட திருத்தம் 86, பெற்றோருக்கு.

C) சட்ட திருத்தம் 92, அரசுக்கு

D) சட்ட திருத்தம் 92, பெற்றோருக்கு

38) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1: அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை நீதிமன்ற வழக்கின் மூலம் செயல்படுத்த முடியாது

கூற்று 2: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்த தனியாக சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

A) இரண்டு கூற்றுகளும் சரி

B) கூற்று 1 தவறு 2 சரி

C) இரண்டு கூற்றுகளும் தவறு

*D) கூற்று 1 சரி 2 தவறு

39) அடிப்படை கடமைகளை செயல்படுத்துவதற்காகவும் அடிப்படை கடமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காகவும் யார் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டது

A) ஷர்மா கமிட்டி

B) ஸ்வரன் சிங் கமிட்டி

*C) வர்மா கமிட்டி

D) ராவ் கமிட்டி

40) மக்களவையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு எது?

*A) 330

B) 331

C) 333

D) 334

41) பொருத்துக

A) இந்திய கணக்கு மற்றும் தணிக்கையாளர் – 1. சட்டப்பிரிவு 316

B) தலைமை தேர்தல் அதிகாரி – 2. சட்டப்பிரிவு 155

C) ஆளுநர் நியமனம் – 3 சட்டப்பிரிவு 324

D) மத்திய தேர்வாணையம் – 4. சட்டப்பிரிவு – 148

*A) 4 3  2 1

B) 4 3 1 2

C) 2 3 4 1

D) 3 4 2 1

42) பின் வருவனவற்றுள் இந்திய குடியரசு தலைவர்களை வரிசைப்படுத்துக

1. வி வி கிரி

2. ஜாஹிர் ஹுசைன்

3. கே ஆர் நாராயணன்

4. நீளம் சஞ்சீவ் ரெட்டி

*A) 2 1 4 3

B) 1 2 3 4

C) 3 1 4 2

D) 2 3 4 1

43) பின்வரும் கூற்றுகளில் சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1: கட்சி தாவல் தடை சட்டம் 1985 ஆம் ஆண்டு 52 ஆவது சட்டத் திருத்தத்தின்படி ஏற்படுத்தப்பட்டது

கூற்று 2: சுயாட்சியாக வெற்றி பெற்ற மற்றும் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒரு கட்சியில் சேரும் பட்சத்தில் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள்

கூற்று 3: கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் படி ஓர் உறுப்பினரின் தகுதி இழப்பை குடியரசு தலைவரே முடிவு செய்ய இயலும்

A) கூற்று 2 மட்டும் தவறு

B) கூற்று 1, 3 சரி

C) கூற்று 2, 3 சரி

*D) கூற்று 1, 2 சரி

44) இந்திய அரசியலமைப்பு சரத்து 39 துணை பிரிவுகளுடன் சரியாக பொருத்துக

A) சட்டப்பிரிவு 39 a – 1. குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாத்தல்

B) சட்டப்பிரிவு 39 b – 2  போதிய வாழ்வாதார வாய்ப்பை உருவாக்குதல்

C) சட்டப்பிரிவு 39 c – 3 வளங்களை பகிர்ந்து அளித்தல்

D) சட்டப்பிரிவு 39 d – 4. குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணுதல்

E) சட்டப்பிரிவு 39 e – 5. செல்வம் குவிவதை தடுத்தல்

F) சட்டப்பிரிவு 39 f – 6 சம ஊதியம்

A) 4 5 2 1 6 3

B) 4 6 1 3 2 5

*C) 5 1 2 6 3 4

D) 3 5 4 3 6 1

45) குடியரசு தலைவர் தேர்தலில் சர்ச்சை ஏற்படும் பட்சத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்?

*A) உச்சநீதிமன்றம்

B) பாராளுமன்றம்

C) மக்களவை சபாநாயகர்

D) துணை குடியரசுத் தலைவர்

46) பின்வரும் சட்ட பிரிவுகளில் 42 ஆவது சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவுகளை தேர்வு செய்க 1. 39A, 2. 39f, 3. 43A, 4. 43b, 5. 47A, 6. 48.

A) 1 2 4 6

*B) 1 2 3 5

C) 2 4 5 6

D) 1 2 3 6

47) பின்வருவனவற்றுள் சரியாக அமைந்துள்ள இணைகளின் எண்ணிக்கையை காண்க

1. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பை சட்டப்பிரிவு 103 இன் படி மக்களவை சபாநாயகர் முடிவு செய்கிறார்

2. குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாக இருக்கும்போது மாநிலங்களவை துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படுகிறார்

3. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தின் போது குடியரசு தலைவர் தலைமை வகிக்கிறார்

4. மக்களவையில் பண மசோதா குடியரசு தலைவரின் முன் அனுமதி பெற்று தாக்கல் செய்யப்படுகிறது

A) 1

*B) 2

C) 3

D) 4

48) பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1: இந்திய அரசியல் அமைப்பில் சட்டப்பிரிவு 79 என் படி மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும்  இணைந்ததையே பாராளுமன்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது

கூற்று 2: மக்களவை மாநிலங்களவை என்று 1954 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது

கூற்று 3: ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உறுப்பினர்களாக செயல்படுகின்றனர்.

A) கூற்று 1, 3 சரி.

*B) கூற்று 2, 3 சரி

C) கூற்று 1, 2 சரி

D) அனைத்துக் கூற்றுகளும் சரி

49) குடியரசுத் தலைவர் நீக்கம் குறித்த கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க

கூற்று 1: குடியரசு தலைவர் நீக்கம் குறித்த முன்மொழிவு இரண்டு அவைகளிலும் கொண்டு வரலாம்

கூற்று 2: குடியரசு தலைவர் நீக்கம் குறித்த முன்மொழிவில் 3 இல் ஒரு பங்கு நபர்கள் ஆதரவு இருக்க வேண்டும்

கூற்று 3: குடியரசுத் தலைவர் நீக்கம் குறித்த தகவலை 15 நாட்களுக்கு முன்னதாக குடியரசு தலைவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்

கூற்று 4: 3 இல் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று இருந்தால் குடியரசுத் தலைவரை நீக்கம் செய்யலாம்

A) கூற்று 1, 3 , சரி

B) கூற்று 1, 2, 3 சரி

*C) கூற்று 1, 4 சரி

D) கூற்று 1, 3, 4 சரி

50) தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

A) 39

B) 12

*C) 18

D) 25

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

51) சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 62.92 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

A) குர்மீத் கௌர்

B) பார்பரா வெஸ்டர்

C) பாருல் சௌத்ரி

*D) அன்னு ராணி

52) இந்தியாவில் கடைசியாக எப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது?

A) 1927

*B) 1931

C) 1965

D) 1948

53) 2023 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

*A) ஜான் ஃபோஸே

B) லூயி புரூஸ்

C) மௌங்கி பவெண்டி

D) நர்கீஸ் முகமது

54) ஆண்டுதோறும் “நீலகிரி வரையாடு” தினம் எப்போது அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்?

A) அக்டோபர் 5

*B) அக்டோபர் 7

C) அக்டோபர் 12

D) அக்டோபர் 20

55) “முதல்வர் பெண் சக்தி பிரச்சாரம்” என்ற புதிய திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?

A) தமிழ்நாடு

B) ஒடிஷா

C) கேரளா

*D) மகாராஷ்டிரா

56) சமீபத்தில் எங்கு நடைபெற்ற கள ஆய்வில் ‘சோழர், விஜயநகர பேரரசு கால செப்பு நாணயங்கள்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது?

A) மதுரை

B) சிவகங்கை

*C) கடலூர்

D) புதுக்கோட்டை

57) ‘காஜிண்ட் – 2023’ என்ற கூட்டு ராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?

*A) இந்தியா & கஜகஸ்தான்

B) இந்தியா & மாலத்தீவு

C) இந்தியா & வங்கதேசம்

D) இந்தியா & இலங்கை

58) ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த சாத்திய கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவில் இடம்பெறாத நபரை தேர்வு செய்க?

A) அமித்ஷா

B) குலாம் நபி ஆசாத்

C) ஹரிஷ் சால்வே

*D) நிர்மலா சீதாராமன்

59) பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?

A) 107

*B) 111

C) 100

D) 125

60) இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடங்கிய திட்டம் எது?

A) ஆப்ரேஷன் தோஸ்த்

B) ஆப்ரேஷன் தேவி சக்தி

*C) ஆப்ரேஷன் அஜய்

D) ஆப்ரேஷன் தண்டர்

புவியியல் வினாக்கள்

61. பிகாரின் துயரம் என அழைக்கப்படும் நதி?

A) மகாநதி

*B) கோஸி

C) கோதாவரி

D) பத்மா

62. திபத் பகுதியில் ‘சிங்கி காம்பன்’ என அழைக்கப்படும் நதி?

*A) சிந்து

B) பிரம்மபுத்திரா

C) கங்கை

D) ஷெண்டாங்

63. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. பாகிரதி அலக்நந்தாவுடன் சேரும் இடம் தேவபிரயாக் எனப்படுகிறது.

2. கங்கை 2525 கி.மீ. நீலம் கொண்டுள்ளது.

3. கங்கையின் மொத்த பரப்பளவின் 60% உத்தரபிரதேசத்தில் பாய்கிறது.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

A) 1 மட்டும்

B) 2 & 3 மட்டும்

C) 1 & 3 மட்டும்

*D) 1, 2 & 3

64. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. கோதாவரி மிக நீலமான தீபகற்ப நதியாகும்.

2. காவெரி ‘தெற்கு கங்கை’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.

3. நர்மதை மட்டுமே அரபிக் கடலில் கலக்கும் ஒரே தீபகற்ப நதியாகும்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

A) 1 & 2 தவறு

*B) 2 & 3 தவறு

C) 1 & 3 தவறு

D) 3 மட்டும் தவறு

65. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டுடன் சரியாகப் பொருத்துக.

பட்டியல்-I   ::   பட்டியல்-II

முதன்மை நதி     ::     துணை நதிகள்

மகாநதி   ::   1. அமராவதி

காவெரி   ::   2. கோமதி,

பிரம்மபுத்திரா   ::   3. இந்திராவதி

கங்கை   ::   4. திபாங்

*A) 3 1 4 2

B) 2 1 3 4

C) 4 1 3 2

D) 2 1 4 3

66. கீழ்காண்பவைகளைக் கவனி.

1. வண்டல் மண், (மணல், வண்டல், களிமண் போன்றவை) படிவதன் மூலம் உருவாகின்றன.

2. படிக மற்றும் உருமாற்ற பாறைகளின்மூலமாக  செம்மண் உருவாகிறது.

3. பாலை மண்ணில்  pH மதிப்பு அதிகமாக உள்ளது.

4. கரிசல் மண்ணில் முக்கியப் பயிர் பருத்தி.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

A) 1, 2 & 4

B) 2, 3 & 4

C) 1, 3 & 4

*D) 1, 2, 3 & 4

67. கூற்று மற்றும் காரணம்.

கூற்று: இந்தியாவில் மண் வகைகளை ஆராய்ச்சி செய்யும் பொருப்புடையது 1956-ல் துவங்கப்பட்ட இந்திய மண்ணாராய்ச்சி நிருவனமாகும்.

காரணம்: இது இந்திய வேலான் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்குகிறது.

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று தவறு, காரணம் சரி

*C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

68. பின்வருவனவற்றுள் அதிக அளவு இரும்புத்தாது கொண்ட கனிமம்?

A) ஹேமடைட்

*B) மேக்னடைட்

C) பாஸ்பேட்

D) ரூட்டைல்

69. 2020-ஆம் ஆண்டின்படி அதிக அளவு மாங்கனிசு உற்பத்தி செய்யும் மாநிலம்?

A) ஆந்திர பிரதேசம்

B) கர்நாடகம்

*C) மத்திய பிரதேசம்

D) ஜார்கண்ட்

70. கூற்று மற்றும் காரணம்.

    கூற்று: சோட்டா நாக்பூர் இந்தியாவின் கனிமக் கிடங்கு எனப்படுகிறது.

     காரணம்: கடற்கரைப் பகுதிகளில் கனிம தாது வளங்கள் அதிகமாக  உள்ளன.

A) கூற்று காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

*B) கூற்று சரி காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D) இரண்டும் தவறு

71. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

A) ஜனவரி 12

B) ஆகஸ்ட் 15

C) அக்டோபர் 15

*D) டிசம்பர் 5

72. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி.

1. பெற்றோலியம் ‘கருப்பு தங்கம்’ என அழைக்கப்படுகிறது.

2. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமையகம் புது டெல்லியில் அமைந்துள்ளது.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?

A) 1 மட்டும்

B) 2 மட்டும்

*C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

73. தமிழகத்தில் உள்ள அனல்மின்‌ நிலையங்களில் பொருந்தாதது?

A) நெய்வேலி

B) மேட்டூர்

C) தூத்துக்குடி

*D) கூடங்குளம்

74. கீழ்காண்பவைகளைக் கவனி.

1. இந்தியாவின்‌ முதல்‌ நீர்மின்‌நிலையம்‌ 1797-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில்‌ நிறுவப்பட்டது.

2. இந்திய தேசிய நீர்‌மின்சக்தி நிறுவனம்‌ ஃபரிதாபாத்தில் அமைந்துள்ளது.

மேல் காண்பவைகளில் எது/எவை சரியானவை?

A) 1 மட்டும் சரி

*B) 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

75. உலகின் அதிகளவு காற்றாலைகளைக் கொண்ட நாடு?

A) இங்கிலாந்து

B) டென்மார்க்

*C) இந்தியா

D) சீனா

கணித வினாக்கள்

76) 43 க்கும் 480 க்கும் இடையில் எத்தனை ஒன்பதால் வகுபடும் எண்கள் உள்ளன?

A) 50

*B) 48

C) 54

D) 56

77) 5 மற்றும் 80 ன் சராசரி விகிதத்தை காண்க?

*A) 20

B) 42.5

C) 26

D) 22.5

78) ஒரு மருத்துவமனையில் 30 மருத்துவர்களும், 45 உதவியாளர்களும் உள்ளனர். பின்னர் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு 15 உதவியாளர்கள் அதிகரிக்கப்படுகின்றனர். எனில், எத்தனை மருத்துவர்களை சேர்த்தால் விகிதம் மாறாமல்  இருக்கும்?

A) 10

B) 20

C) 30

*D) 40

79) 2a=3b=4c எனில், a:b:c ன் மதிப்பை காண்க?

A) 2:3:4

B) 4:3:2

*C) 6:4:3

D) 20:15:2

80) √10÷√30×√27 சுருக்குக.

A) 3

B) 6

C) √3

D) √2

81) A, B ஐ விட 40 சதவீதம் திறமையானவர். B ஒரு வேலையை 36 நாட்களில் முடிப்பார். எனில், A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

A) 9  1/3 நாட்கள்

*B) 15 நாட்கள்

C) 11  1/2 நாட்கள்

D) 18 நாட்கள்

82) ஒன்பது சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது. எனில், ஒரு சிலந்தி ஒரு வலையை எத்தனை நாட்களில் பின்னும்?

A) 1 நாள்

B) 2 நாட்கள்

C) 5 நாட்கள்

*D) 9 நாட்கள்

83) அனு, ஸ்வாதி மற்றும் ராஜி மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பார்கள். அனு தனியாக அந்த வேலையை 9 நாட்களிலும், சுவாதி தனியாக அந்த வேலையை 12 நாட்களிலும் முடிப்பார். எனில், ராஜி அந்த வேலையை தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார்?

A) 12 நாட்கள்

B) 16 நாட்கள்

*C) 18 நாட்கள்

D) 24 நாட்கள்

84) 3.6 க்கும் 0.9 க்கும் சராசரி விகிதத்தை காண்க?

A) 0.6

*B) 1.8

C) 0.9

D) 1.67

85) ஒரு குறிப்பிட்ட அசல் ஆனது ஆறு ஆண்டுகளில் ரூபாய் 8,880 ஆகவும், 4 ஆண்டுகளில் 1920 ஆகவும் மாறுகிறது. எனில், அசலை காண்க?

*A) 6,000

B) 6,880

C) 7,000

D) 12,000

86) A என்பவர் B க்கு ₹350 ஐ தனிவட்டி வீதத்தில் கடனாக வழங்குகிறார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மொத்த தொகையாக ரூபாய் 420 ஐ பெறுகிறார். எனில், அவர் பெற்ற வட்டித்தொகை மற்றும் தனிவட்டி சதவீதத்தை காண்க?

A) 42 ரூபாய் மற்றும் 3 சதவீதம்

B) 90 ரூபாய் மற்றும் 6 சதவீதம்

*C) 70 ரூபாய் மற்றும் 5 சதவீதம்

D) 105 ரூபாய் மற்றும் 7 சதவீதம்

87) 27 பொருட்களின் வாங்கிய விலை, 18 பொருட்களின் விற்ற விலைக்கு சமம் எனில், லாபம் அல்லது நஷ்ட சதவீதம் என்ன?

A) 33.33 % லாபம்

B) 30 % நஷ்டம்

C) 50 % லாபம்

*D) 60% நஷ்டம்

88) பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணை காண்க?

21, 23, 20, 22, 19, 21, ?

A) 17

*B) 18

C) 22

D) 23

89) 9 ஆட்டங்களில் ஒரு கிரிக்கெட் வீரர் எடுத்த சராசரி ரன்கள் 58. அவர் அடுத்த ஆட்டத்தில் எவ்வளவு ரன்கள் எடுத்தால், சராசரி 61 ஆகும்?

A) 68

B) 79

*C) 88

D) 100

90) கீதா ஒரு கடிகாரத்தை ரூபாய் ஆயிரத்துக்கு வாங்கி, 300 செலவு செய்து பழுது நீக்கிய பிறகு ரூபாய் 1,508 க்கு விற்பனை செய்கிறார். எனில், லாப சதவீதம் என்ன?

A) 12%

B) 14%

*C) 16%

D) 18%

91) ஒரு பொம்மை விற்கும் கடையில் 600 பந்துகள் மற்றும் 400 கார்கள் உள்ளன. 15 சதவீத பந்துகளும், 12.5 சதவீத கார்களும் ஒரு வாரத்தில் விற்கப்பட்டது. எனில், மொத்தம் எத்தனை பொருட்கள் விற்கப்பட்டன?

A) 150

B) 169

C) 130

*D) 140

92) ஆண்டுக்கு ஒரு முறை கூட்டுவட்டி கணக்கிடலின்படி, அசல் ரூபாய் 7,500 க்கு 4 சதவீத ஆண்டு வட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டுவட்டியின் மதிப்பு என்ன?

A) 600

*B) 612

C) 660

D) 680

93) மூன்று வருடங்களுக்கு பத்து சதவீத கூட்டுவட்டியில் எவ்வளவு பணம் செலுத்தினால் ரூபாய் 2,662 முதிர்வுத் தொகையாக கிடைக்கும்?

A) 1,500

B) 1,800

*C) 2,000

D) 2,500

94) இரண்டு அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் மீ சி ம 144. எனில், அந்த இரு எண்கள் எவை எவை?

A) 14, 16

*B) 16, 18

C) 18, 20

D) 22, 24

95) கீழ்க்கண்ட எந்த எண் நான்கால் வகுபடும்?

A) 3,566

B) 2,654

C) 7,290

*D) 2,176

96) ஆறு குழந்தைகளின் சராசரி எடை 17.5 கிலோகிராம். 5 குழந்தைகளின் எடைகளின் முறையே 14, 19, 23, 21 மற்றும் 13 எனில், ஆறாவது குழந்தையின் எடை எவ்வளவு?

*A) 15 கிலோ கிராம்

B) 16 கிலோ கிராம்

C) 17 கிலோ கிராம்

D) 18 கிலோ கிராம்

97) ஓர் எண்ணின் 25 சதவீதத்துடன் 25 கூட்டினால் அந்த எண் கிடைக்கும். எனில், அந்த எண் என்ன?

A) 25

B) 50

C) 100

*D) 100/3

98) (103-85)×(62+145)÷23=?

A) 142

B) 172

*C) 162

D) 132

99) ஒரு வகுப்பில் உள்ள 15 மாணவர்களின் சராசரி வயது 15. அதில் 5 மாணவர்களின் சராசரி வயது 14 மற்றும் 9 மாணவர்களின் சராசரி வயது 16. எனில், பதினைந்தாவது மாணவரின் வயது என்ன?

*A) 11

B) 12

C) 16

D) 17

100) நவம்பர் ஒன்பதாம் தேதி வியாழக்கிழமை. எனில், 158 நாட்களுக்குப் பிறகு என்ன கிழமை வரும்?

A) ஞாயிறு

*B) திங்கள்

C) செவ்வாய் D) புதன்