*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1) திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்
a) ச) அகத்தியலிங்கம்
*b) குமரிலபட்டர்
c) பாவாணர்
d) ஹீராஸ் பாதிரியார்
2) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை ஆய்ந்து தமிழியன் என்று பெயரிட்டவர் யார்
a) கால்டுவெல்
b) வில்லியம் ஜோன்ஸ்
*c) ஹோக்கன்
d) ஹீராஸ் பாதிரியார்
3) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவெல் எந்த ஆண்டு வெளியிட்டார்
a) 1846
*b) 1856
c) 1866
d) 1876
4) பொருந்தாத ஒன்றைக் கண்டறி
a) கோண்டா
b) கோண்டி
c) கோலாமி
*d) கோத்தா
5) “மானிட மேன்மையைச் சாதித்திடக் குறள்
மட்டுமே போதுமே ஓதிநட”
இப்பாடல் அடிகள் யாருடையது
a) பாரதியார்
b) சுரதா
*c) ஈரோடு தமிழன்பன்
d) கவியோகி சுத்தானந்த பாரதி
6) பொருத்துக
a) 8 – 1) சுவை
b) 9 – 2) வனப்பு
c) 100 – 3) குணங்கள்
d) 110 – 4) வண்ணம்
a) 1 2 3 4
b) 2 1 3 4
*c) 2 1 4 3
d) 4 2 1 3
7) சரியான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) தூது இலக்கியங்கள் சங்க இலக்கியம், வாயில் இலக்கியம் என்றும் அழைக்கப்படுகின்றன
2) 1940 ஆம் ஆண்டு உ) வே) சா) தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தார்
3) தூது இலக்கியங்கள் கலிவெண்பாவால் ஆனவை
a) 1 மட்டும் சரி
b) 1, 2 சரி
c) 1, 3 சரி
*d) 3 மட்டும் சரி
8) பயனிலை, எழுவாய், செயப்படு பொருள், இவ்வரிசையில் அமைந்த தொடரைக் காண்க
a) நான் பாடத்தைத் படித்தேன்
*b) படித்தேன் நான் பாடத்தை
c) படித்தேன் பாடத்தை நான்
d) நான் படித்தேன் பாடத்தை
9) “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி”, இவ்வடி யாருடையது
a) மாங்குடி மருதனார்
b) தொ) பரமசிவன்
*c) ஆண்டாள்
d) குடபுலவியனார்
10) பொருந்தாத ஒன்றைக் கண்டறி
*a) வீரகாவியம்
b) கவிஞனின் காதல்
c) குருவிப்பட்டி
d) மேதினமே வருக
11) தவறான இணையைக் கண்டறிக
a) மது வேரி
b) பணிலம் சுரிவளை
c) மேதி பகடு
*d) கோடு சிமயம்
12) சேக்கிழார் யாரிடம் முதலமைச்சராகப் பணியாற்றினார்
a) ராசராசன்
b) முதலாம் குலோத்துங்கன்
*c) இரண்டாம் குலோத்துங்கன்
d) மூன்றாம் குலோத்துங்கன்
13) “பக்திச் சுவை னநிச் சொட்டச் சொட்டப் பாடும் கவி வலவ” என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் யார்
a) பாரதியார்
b) திரு) வி) க.
*c) மீனாட்சி சுந்தனார்
d) உ) வே) சா.
14) இலக்கிய வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ்பெற்றோரையும் பொருத்துக
A) வெண்பா – 1) ஒட்டக்கூத்தர்
B) விருத்தம் – 2) புகழேந்தி
C) கோவை – 3) படிக்காசு
D) சந்தம் – 4) கம்பர்
A) 2 4 3 1
*B) 2 4 1 3
C) 3 4 1 2
D) 2 1 3 4
15) கந்தர்வனின் இயற்பெயர் என்ன
a) ராசலிங்கம்
*b) நாகலிங்கம்
c) சொக்கலிங்கம்
d) ராமலிங்கம்
16) “அவன் எழுதிப் பார்த்தான்” இது எவ்வகை வினை
a) செயப்பாட்டு வினை
b) ஏவல் வினை
*c) கூட்டு வினை
d) காரண வினை
17) வாய்க்கால் மீன்கள் என்பது யாருடைய நூல்
a) கோமல் சாமிநாதன்
b) வைரமுத்து
*c) வெ) இறையன்பு
d) மா) கிருஷ்ணன்
18) “எழுந்தது துகல், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர்”
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள மருப்பு என்ற சொல்லின் பொருள் என்ன
a) காளை
*b) கொம்பு
c) வீரன்
d) ஏரு தழுவுதல்
19) ஏரு தழுவுதல் பற்றிக் கூறும் இலக்கண நூல் எது
a) நன்னூல்
b) அகப்பொரள் இலக்கணம்
*c) புறப்பொருள் வெண்பா மாலை
d) தண்டியலங்காரம்
20) திமிலுடன் கூடிய காளை ஓவியம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
a) கரிக்கையூர்
b) சேலம்
c) கல்லூத்து மேட்டுப்பட்டி
*d) சித்திரக்கல் புடவி
21) இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகை அல்லாதது எது
*a) பாங்கறிந்து
b) காய்க்குலைக் கமுகு
c) பூக்கொடி வல்லி
d) முத்துத்தாமம்
22) கீழ்வரும் கூற்றுகளை ஆய்க
1) நன்னூல் புலவன் என்று குறிப்பிடப்பட்டவர் இலங்கோவடிகள்
2) இளங்கோவடிகளை நன்னூல் புலவன் என்று கூறியவர் சீத்தலைச் சாத்தனார்
a) 1தவறு, 2 சரி
b) 2 தவறு, 1 சரி
c) 1, 2 இரண்டும் சரி
*d) 1, 2 இரண்டும் தவறு
23) எங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன
*a) அரிக்கமேடு
b) ஆதிச்சனல்லூர்
c) கீழடி
d) பல்லாவரம்
24) கீழ்வரும் எந்த இலக்கியத்தில் பட்டிமண்டபம் என்ற சொல் இடம்பெறவில்லை
a) சிலப்பதிகாரம்
b) மணிமேகலை
c) கம்பராமாயணம்
*d) பெரிய புராணம்
25) வல்லினம் மிகுமிடம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை
1) அ, இ ஆகிய சுட்டெழுத்துக்குப் பின் வல்லினம் மிகும்
2) அந்த, இந்த ஆகிய சுட்டுப் பெயருக்குப் பின் வல்லினம் மிகும்
3) எண்ணுப் பெயர்களில் பத்து எனும் எண்ணுப் பெயருக்குப் பின் மட்டும் வல்லினம் மிகும்
4) ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்
a) 1, 2, 3 சரி
*b) 1, 2, 4 சரி
c) 2, 3, 4 சரி
d) 1, 2, 3, 4 சரி
26) திருக்குறள் செய்திகள் பற்றிய தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் பரிமேலழகர்
2) வள்ளுவர் கோடி எனும் எண்ணுப் பெயரை எட்டு முறை பயன்படுத்தியுள்ளார்
3) ஏழு எனும் எண்ணுப் பெயர் திருக்குறளில் ஏழு இடங்களில் காணப்படுகிறது
a) 1, 2 தவறு
b) 2, 3 தவறு
c) 1, 3 தவறு
*d) 1, 2, 3 தவறு
27) சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்
a) 5
b) 6
*c) 7
d) 8
28) “எந்திர ஊர்தி இயற்றுமின்
இவ்வடிகள் சீவக சிந்தாமணியில் எந்த இலம்பகத்தில் உள்ளது
*a) நாமகள் இலம்பகம்
b) பூமகள் இலம்பகம்
c) மண்மகள் இலம்பகம்
d) குணமாலையார் இலம்பகம்
29) தொல்காப்பியரின் அறிவு வகைபாட்டைப் பொருத்துக
a) சுவை – 1) ஐந்தாம் அறிவு
b) முகர்தல் – 2) நான்காம் அறிவு
c) பார்த்தல் – 3) மூன்றாம் அறிவு
d) கேட்டல் – 4) இரண்டாம் அறிவு
a) 1 2 3 4
b) 2 1 4 3
c) 4 1 2 3
*d) 4 3 2 1
30) தனது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்ற பெயரில் நூலாக வெளியிட்டவர் யார்
a) சிவன்
b) வளர்மதி
*c) மயில்சாமி அண்ணாதுரை
d) அருணன் சுப்பையா
31) இணையவெளி என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல் எது
A) software
B) browser
C) crop
*D) cyberspace
32) டாக்டர் முத்து இலட்சுமி பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1) டாக்டர் முத்து இலட்சுமியின் காலம் 1886/1968
2) சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர் ஆவார்
3) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் இவர் ஆவார்
4) சென்னையின் முதல் மேயர் இவர் ஆவார்
*a) 1, 3 சரி
b) 1, 4 சரி
c) 1, 2, 3 சரி
d) 1, 2, 4 சரி
33) “பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ”
இது யாருடைய கூற்று
a) பெரியார்
b) பாரதியார்
*c) பாரதிதாசன்
d) அறிஞர் அண்ணா
34) பட்டினத்தார் பாராட்டிய மூவர் என்பது யாருடைய நூல்
*a) நீலாம்பிகை
b) மூவலூர் ராமாமிர்தம்
c) டாக்டர் முத்து இலட்சுமி ரெட்டி
d) பண்டித ரமாபாய்
35) கல்வி உடைய பெண்களை பாரதிதாசன் எதற்கு ஒப்புமைப் படுத்துகிறார்
a) மரம்
b) களர்நிலம்
c) விலங்கு
*d) திருந்திய கழனி
36) “பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு
இப்பாடலில் பயின்றுவந்துள்ள அணி எது
a) உவமை அணி
*b) எடுத்துக்காட்டு உவமை அணி
c) உருவக அணி
d) ஏகதேச உருவக அணி
37) “நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமாக இருக்கவேண்டும்”
இக்கூற்று யாருடையது
A) கால்டுவெல்
B) ஈரோடு தமிழண்பன்
*C) அறிஞர் அண்ணா
D) ஜி.யு.போப்
38) இந்திய நூலகங்கள் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு
1) இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்
2) அதிகமான தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம் அறிஞர் அண்ணா நூலகம்
3) இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் திருவனந்தபுரம் நடுவன் நூலகம்
4) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் கல்கத்தாவில் உள்ளது
a) 1, 2, 3 சரி
b) 1, 2, 4 சரி
*c) 1, 3, 4 சரி
d) 2, 3, 4 சரி
39) பொருந்தாத ஒன்றைக் கண்டறி
A) அல்
B) ஆ
C) இல்
*D) தல்
40) தற்காலத்தில் ஓகார இடைச்சொல் எப்பொருளில் அதிகமாக வருகின்றது
A) தெரிநிலை
*B) பிரிநிலைப்
C) அசைநிலை
D) எதிர்மறை
41) கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
*இ) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
42) பத்து உறுப்புகள் சிற்பத் தொழிற்கு உறியவை என்று கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
ா) மணிமேகலை
*c) திவாகர நிகண்டு
d) சிற்ப நூல்
43) கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் பாண்டியர் காலச் சிற்பங்கள் காணப்படாத இடம் எது
a) திருமயம்
*b) திருச்சி
c) திருப்பரங்குன்றம்
d) பிள்ளையார் பட்டி
44) மாளிகைகளில் சிற்பங்கள் வைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
*b) மணிமேகலை
c) புறநானூறு
d) அகநானூறு
45) கோயில்களையும் கோயில்களைக் கட்டியவர்களையும் பொருத்துக
a) தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் – 1) ராஜேந்திரன்
b) கங்கைகொண்ட சோழபுரம் – 2) இரண்டாம் ராஜராஜன்
c) தாராசுரம் – 3) மூன்றாம் குலோத்துங்கன்
d) திரிபுவன வீரேஸ்வரம் – 4) முதலாம் ராஜராஜன்
a) 4 1 3 2
b) 4 2 1 3
c) 4 3 1 2
*d) 4 1 2 3
46) கீழ்க்காணும் இடங்களில் உலோகப் படிமைகள் செய்யும் நிலையங்கள் அமைக்கப்படாத இடம் எது
a) சுவாமி மலை
b) கும்பகோணம்
*c) மாமல்லபுரம்
d) மதுரை
47) ஆடை அணிகலன்களுடன் கூடிய சிற்பங்கள் யார் காலத்தில் தோன்றின
a) பல்லவர் காலம்
b) பாண்டியர் காலம்
*c) விஜயநகர காலம்
d) நாயக்கர் காலம்
48) “வாய்வெரீஇ”, இது எவ்வகை அளபடை
a) செய்யுளிசை அளபடை
*b) சொல்லிசை அளபடை
c) இன்னிசை அளபடை
d) ஒற்றளபடை
49) சதிர் என்ற சொல்லின் பொருள் என்ன
a) விளக்கு
b) மாலை
c) பாடல்
*d) நடனம்
50) நூல்களையும் அவற்றிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக
a) அன்பளிப்பு – 1) 1970
b) சக்தி வைத்திய சாலை – 2) 1987
c) முதலில் இரவு வரும் – 3) 1977
d) அப்பாவின் சிநேகிதர் – 4) 1996
a) 1 2 3 4
*b) 1 3 2 4
c) 4 3 2 1
d) 4 2 3 1
51) தி) ஜானகிராமன் ரோம், செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளுக்குச் சென்ற பயன அனுபவங்களை எந்தப் பெயரில் நூலாக வெளியிட்டார்
a) நடந்தாய் வாழி காவேரி
b) அடுத்த வீடு ஐம்பது மைல்
*c) கருங்கடலும் கலைக்கடலும்
d) உதைய சூரியன்
52) சே + அடி எவ்வாறு புணரும்
A) சேவடி
B) சேயடி
C) சேஅடி
D) அ, ஆ இரண்டும்
53) கதிர்கள் நிமிர்ந்து நிற்பதைத் திருத்தக்க தேவர் எதனோடு ஒப்புமைப்படுத்துகிறார்
a) கல்லாதவர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்
*b) பக்குவமில்லாத செல்வர்கள் தலை நிமிர்ந்து நிற்றல்
c) விலங்குகள் தலை நிமிர்ந்து நிற்றல்
d) போரில் வெற்றி பெற்ற அரசன் தலை நிமிர்ந்து நிற்றல்
54) “அல்லல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ”
இவ்வடியில் சேரு என்ற பொருள் தரும் சொல் எது
*a) அல்லல்
b) பழனம்
c) அரக்கு
d) ஆம்பல்
55) மதுரைக்காஞ்சியை இயற்றிய மாங்குடி மருதனாரின் எத்தனை பாடல்கள் எட்டுத்தொகையில் உள்ளன
a) 11
b) 22
c) 35
*d) 13
56) “அடுப்பிடு சாந்தமோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
A) பெரியபுராணம்
*B) இராவண காவியம்
C) மணிமேகலை
D) சிறுபஞ்சமூலம்
57) நான் வள்ளுவரைப் படித்தேன்
இது எவ்வகை ஆகுபெயர்
a) பொருளாகு பெயர்
b) சினையாகு பெயர்
c) கருவியாகு பெயர்
*d) கருத்தாவாகு பெயர்
58) எழுத்துச் சீர்திருத்தங்களை எந்த இதழில் பெரியார் மேற்கொண்டார்
a) குடியரசு
b) விடுதலை
c) புரட்சி
*d) பகுத்தறிவு
59) யுனஸ்கோ நிருவனம் எந்த ஆண்டு பெரியாருக்குத் தெற்காசியாவின் சாக்ரட்டீஸ் என்ற பட்டத்தை வழங்கியது
a) 1938
b) 1939
*c) 1970
d) 1971
60) ரேவதி என்னும் புனைப்பெயரில் கவிதை எழுதியவர் யார்
a) பெரியார்
b) ரங்கராஜன்
*c) ந) பிச்சமூர்த்தி
d) வ) சே) குழந்தைசாமி
61) எதனைக் காக்க வேண்டும் என்று யசோதர காவியம் கூறுகிறது
a) அறம்
*b) ஞானம்
c) அறிவு
d) வெகுளி
62) யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துகள் எத்தனை வகைப்படும்
*a) 3
b) 2
c) 4
d) 6
63) பெரியாரின் சிந்தனைகள் என்ற நூலின் ஆசிரியர் யார்
a) பெரியார்
b) அண்ணா
c) கருணாநிதி
*d) வே) ஆனைமுத்து
64) இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது, என்று திருக்குறளைப் புகழ்ந்தவர் யார்
a) ஜி) யூ) போப்
b) கால்டுவெல்
c) வீரமாமுனிவர்
*d) ஆல்பர்ட் சுவைச்சர்
65) உலகத் தமிழ் மாநாடுகளையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக
a) கோலாலம்பூர் – 1) 1966
b) சென்னை – 2) 1968
c) மதுரை – 1981
d) மொரேஷியஸ் – 1989
a) 2 1 4 3
b) 1 3 2 4
c) 1 3 4 2
*d) 1 2 3 4
66) எந்த அமைப்பு தோன்றத் தனிநாயக அடிகள் காரணமாய் இருந்தார்
*a) அகில உலகத் தமிழாய்வு மன்றம்
b) தமிழ் பண்பாடு
c) தமிழ் வளர்ச்சிக் கழகம்
d) 1 மற்றும் 2
67) கல்யான் ஜி அவர்களின் நூல்களையும் நூல் வகைகளையும் பொருத்துக
a) முன்பின் – 1) சிருகதை
b) அகமும் புறமும் – 2) கவிதை
c) தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – 3) கட்டுரை
d) சில இறகுகள் சில பறவைகள் – 4) கடிதம்
a) 2 1 3 4
*b) 2 3 1 4
c) 1 2 3 4
d) 3 1 2 4
68) குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர் யார்
a) உ) வே) சா.
b) சீ) வை) தாமோதரம்பிள்ளை
c) தனிநாயக அடிகள்
*d) சௌரி பெருமாள் அரங்கனார்
69) பாலை பாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர்
*a) சேரர்
b) சோழர்
c) பாண்டியர்
d) பல்லவர்
70) தேவர் அணையர் கயவர் அவருந்தான்
மேவன செய்தொழுக லால்
இக்குறளில் இடம்பெறும் அணி எது
a) உவமை அணி
b) உருவக அணி
c) ஏகதேச உருவக அணி
*d) வஞ்சப் புகழ்ச்சி அணி
71) அந்தாதியில் அமைந்த செய்யுள்களைப் பாடுவதில் வல்லவர் யார்
a) கம்பர்
b) புகழேந்தி
c) இரட்டையர்கள்
*d) ஒட்டக்கூத்தர்
72) கொற்கை முத்தின் சிறப்பு பற்றிக் கூறும் நூல் எது
a) தாலமியின் பூகோல நூல்
a) தொல்காப்பியம்
*c) அர்த்த சாஸ்திரம்
d) கவிராஜ மார்க்கம்
73) கடைத்தெருக்கள் எவ்வாறு இருந்ததாக தனது பாடலில் மாங்குடி மருதனார் கூறுகிறார்
A) ஆறு
B) பெருங்காற்று புகுந்த கடலொலி
*C) ஓவியம்
D) நீர்குடைந்தது போல்
74) கடற்பயனத்தின்போது பயன்படுத்தப்பட்ட காந்த ஊசி பற்றிக் கூறும் நூல் எது
a) சிலப்பதிகாரம்
*b) மணிமேகலை
c) தொல்காப்பியம்
d) பதிற்றுப்பத்து
75) பேரழகு இலக்கணக் குறிப்பு தருக
a) வினைத்தொகை
*b) பண்புத்தொகை
c) வேற்றுமைத்தொகை
D) உவமைத்தொகை
76) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) ஒரு தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடம் பயனிலை, ஆகும்
2) பயனிலை தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
77) தவறான கூற்றைக் காண்க
1) கூட்டுவினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும்
2) துணைவினை, வினையடி வடிவில் இருக்கும்
3) கூட்டுவினையின் முதல்வினையே திணை, பால், இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும்
a) 1 மட்டும் தவறு
b) 1, 2 தவறு
c) 1, 3 தவறு
*d) 3 மட்டும் தவறு
78) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
இக்குறளில் அமையும் மோனை வகையைத் தேர்ந்தெடுக்க
*A) இணை மோனை
B) கூழை மோனை
C) பொழிப்பு மோனை
D) முற்று மோனை
79) தீயவை தீய பயத்தலால் தீயவை\
தீயினும் அஞ்சப் படும்.
இக்குறளில் இடம்பெறும் எதுகை வகை எது
A) இணை எதுகை
B) பொழிப்பு எதுகை
C) மேற்கதுவாய் எதுகை
*D) கீழ்க்கதுவாய் எதுகை
80) பிழையான தொடரைத் தேர்ந்தெடுக்க
A) கூடு கட்டு
*B) திருவளர்ச்செல்வன்
C) தாய்தந்தை, இரவுபகல்
D) அப்போதைய பேச்சு.
81) திருக்குறளை நிறைவு செய்க
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
—————————- மாற்றும் படை.
A) ஆற்றாரை
*B) மாற்றாரை
C) ஏற்றாரை
D) அற்றாரை
82) நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்தியத் தமிழனாகப் பிறக்க வேண்டுமென்று கூறியவர் யார்
A) மோகன்சிங்
*B) நேதாஜி
C) தில்லான்
D) பசும்பொன் முத்துராமலிங்கனார்
83) தேயிலை எவ்வகைப் புணர்ச்சிக்குறிய எடுத்துக்காட்டு ஆகும்
A) இயல்புப் புணர்ச்சி
B) விகாரப் புணர்ச்சி
*C) உடம்படுமெய்ப் புணர்ச்சி
D) குற்றியலுரகப் புணர்ச்சி
84) அசைகளையும் உரிய வாய்பாடுகளையும் பொருத்துக
A) நேர் – 1) காசு
B) நிரை – 2) பிறப்பு
C) நேர்பு- 3) நாள்
D) நிரைபு – 4) மலர்
A) 1 2 3 4
B) 2 1 3 4
*C) 3 4 1 2
D) 3 4 2 1
85) ஆகுபெயர் வகைகளை உரிய எடுத்துக்காட்டுகளோடு பொருத்துக
A) சினையாகுபெயர் – 1) முல்லையைத் தொடுத்தா்ள்
B) இடவாகுபெயர் – 2) வகுப்பறை சிரித்தது
C) பொருளாகுபெயர் – 3) மருக்கொழுந்து நட்டான்
D) காலவாகுபெயர் – 4) டிசம்பர் சூடினாள்
A) 1 2 3 4
B) 3 1 2 4
*C) 3 2 1 4
D) 3 4 2 1
86) எந்த இடத்தில் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்
1) ய’கர ஈற்றுச் சொற்கள் முன்
2) வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய,ர,ழ முன்னர்
3) புளி’ என்னும் சுவைப் பெயர் முன்னர்
4) பூ’ என்னும் பெயர் முன்னர்
A) 1, 2
*B) 3, 4
C) 1, 3
D) 2, 4
87) வல்லினம் மிகா இடங்களில் பொருத்தமற்றது எது
*A) னான்காம் வேற்றுமைத்தொடர்
B) மூன்றாம் வேற்றுமைத்தொடர்
C) ஐந்தாம் வேற்றுமைத்தொடர்
D) ஆறாம் வேற்றுமைத்தொடர்
88) தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1) எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்
2) எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்
3) அன்று என்பது ஒருமைக்கு உரியது
4) அல்ல என்பது பன்மைக்கு உரியது
A) 1, 2 தவறு
B) 3, 4 தவறு
C) 1, 2, 3 தவறு
*D) மேற்கூறிய எதுவும் இல்லை
89) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எதற்குப்பின் வல்லினம் மிகாது
A) வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து
B) மிக என்னும் சொல்லுக்குப்பின்
*C) அப்போதைய என்னும் சொல்லுக்குப்பின்
D) இனி, தனி ஆகிய சொற்களின்பின்
90) “உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;”
இவ்வடி இடம்பெறும் நூல் எது
A) மணிமேகலை
B) பெரியபுராணம்
*C) புறநானூறு
D) திருப்பாவை
91) அசைப் பிரிப்பில் எவ்வெழுத்தைக் கணக்கிடுவதில்லை
A) குரில் எழுத்து
B) நெடில் எழுத்து
*C) ஒற்றெழுத்து
D) அ மற்றும் ஆ
92) கனிச்சீருக்குப் பொருத்தமற்றது எது
A) நேர் நேர் நேர்
B) நிரை நேர் நேர்
*C) நிரை நிரை நிரை
D) நிரை நிரை நேர்
93) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
இக்குறளில் இடம்பெறும் தக்கது என்ற சீருக்குறிய வாய்பாட்டைத் தேர்வு செய்க
A) புளிமாங்காய்
*B) கூவிளம்
C) தேமாங்காய்
D) தேமா
94) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க
A) நேரொன்றாசிரியத்தளை – மா முன் நேர்
B) நிரையொன்றாசிரியத்தளை – விளம் முன் நிரை
*C) வெண்சீர் வெண்டளை – கனி முன் நேர்
D) கலித்தளை – காய் முன் நிரை
95) உரைநடையில் கவிதை எழுதுவதை வசன கவிதைகள் எழுதுவதன் வழியாகத் தொடங்கி வைத்தவர் யார்
A) ந) பிச்சமூர்த்தி
B) பாரதிதாசன்
*C) பாரதியார்
D) கல்யாண்ஜி
96) சரிந்து
இச்சொல்லில் அமையும் உ ஆனது பகுபத இலக்கணத்தின் எந்த உறுப்பு ஆகும்
A) பெயரெச்ச விகுதி
*B) வினையெச்ச விகுதி
C) இறந்தகால இடை நிலை
D) சந்தி
97) தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்பது வண்ணதாசனின் எவ்வகை நூலாகும்
A) கவிதைத்தொகுப்பு
B) கட்டுரைத்தொகுப்பு
*C) சிறுகதைத்தொகுப்பு
D) நாடகம்
98) குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்
A) உ.வே.சா
*B) சௌரிப்பெருமாள் அரங்கனார்
C) தனிநாயக அடிகள்
D) மீனாட்சி சுந்தரனார்
99) செய்யுளில் முன் வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது எவ்வகை அணி
A) சொல் பின்வருநிலையணி
*B) பொருள் பின்வருநிலையணி
C) சொற்பொருள் பின்வருநிலையணி
D) உவமை அணி
100) யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) பாலை
*ஈ) நெய்தல்
வரலாறு வினாக்கள்
1) பாபர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானவை எவை?
கூற்று 1: இவர் பிப்ரவரி 14, 1483 ஆம் ஆண்டு பிறந்தார்.
கூற்று 2 : 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் முதல் பானிபட் போர் நடைபெற்றது.
கூற்று 3: பாபர் முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து டெல்லியையும், ஆக்ராவையும் கைப்பற்றினார்.
கூற்று 4 : பாபரின் ஆட்சிக்கு முன்பு பீரங்கி பயன்படுத்தியதற்கான சான்றுகள் இந்தியாவில் கிடைக்கப்பட்டுள்ளது.
A) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 3
*C) 2 மற்றும் 4
D) 1, 2 மற்றும் 4
2) பொருத்துக :
a) முதல் பானிபட் போர் – 1) ராணா சங்கா
b) கான்வா போர் – 2) முகமது லோடி
c) மேதினி போர் – 3) சந்தேரி
d) காக்ரா போர் – 4) இப்ராஹிம் லோடி
A) 1, 2, 3, 4
B) 4, 1, 2, 3
C) 3, 1, 4, 2
*D) 4, 1, 3, 2
3) பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
கூற்று 1 : 1539 ஆம் ஆண்டு நடைபெற்ற சௌஷா போரில் சேர்ஷா தனது ராணுவம் மற்றும் அரசியல் திறமைகளால் வெற்றி பெற்றார்.
கூற்று 2 : சௌசா போரில் ஹுமாயூன் பெருந்தோள்வி அடைந்தார்.
கூற்று 3 : இப்போரில் 7,000 முகலாய பிரபுக்கள் கொல்லப்பட்டனர்.
கூற்று 4 : 1540 ல் நடைபெற்ற கண்ணோசி போரில் ஹுமாயூன் பெருந்தோள்வி அடைந்தார்
A) 1, 2, மற்றும் 3
B) 3 மற்றும் 4
C) 2, 3, மற்றும் 4
*D) அனைத்தும்
4) “விவசாயி சீர்குலைந்தால் அரசனும் சீர்குலைவான்” என்ற கூற்றை கூறியவர் யார்?
A) அக்பர்
B) அபுல் ஃபாசில்
*C) ஷெர்ஷா
D) பைரம் கான்
5) இந்து விதவைப் பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் எந்த முகலாய மன்னர் ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது?
*A) அக்பர்
B) பாபர்
C) ஹுமாயூன்
D) ஜஹாங்கீர்
6) பின்வருவனவற்றுள் எவை தவறானவை அல்ல?
1) ஜெஸியா வரியை அறிமுகப்படுத்திய முகலாய மன்னர் அக்பர்.
2) ஜெஸியா வரியை முழுமையாக நீக்கியவர் ஔரங்கசீப்.
3) “தீன் இலாஹி” என்னும் சமயக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் அக்பர்.
A) 1 மற்றும் 2
B) 2 மட்டும்
*C) 3 மட்டும்
D) அனைத்தும்
7) அக்பர் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
கூற்று 1 : கி பி 1542 ஆம் ஆண்டு அமர்கோட்டையில் அக்பர் பிறந்தார்.
கூற்று 2 : கி பி 1556 ஆம் ஆண்டு அக்பருக்கும் ஹெமுவுக்கும் இடையே இரண்டாம் பானிபட் போர் நடைபெற்றது.
கூற்று 3 : இரண்டாம் பானிபட் போரில் அக்பர் ஹெமுவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கூற்று 4 : அக்பர் டெல்லி மற்றும் ஆக்ராவின் அதிபதியாக பொறுப்பேற்றார்.
A) 1, 2 மற்றும் 3 சரி
B) 2 மற்றும் 4 சரி
C) 1, 3, மற்றும் 4 சரி
*D) அனைத்தும் சரி
8) அக்பர் கால படையெடுப்புகளை வரிசைப்படுத்துக :
1) மாளவ படையெடுப்பு
2) குஜராத் படையெடுப்பு
3) காஷ்மீர் படையெடுப்பு
4) சிந்து படையெடுப்பு
*A) 1, 2, 3, 4
B) 2, 1, 3, 4
C) 4, 2, 3, 1
D) 3, 2, 1, 4
9) பொருத்துக :
a) தீன்பனா – 1) ஷாஜகான்
b) புராணகிலா – 2) ஹுமாயூன்
c) மோதி மசூதி – 3) அக்பர்
d) புலந்தர் வாசா 4) ஷெர்ஷா
A) 1, 2, 3, 4
*B) 2, 4, 1, 3
C) 3, 2, 4, 1
D) 4, 2, 1, 3
10) பொருந்தாத இணையை தேர்வு செய்க :
*A) பெர்னியர் – வெனிஸ் மருத்துவப் பயணி
B) தபர்நியர் – பிரான்ஸ் வியாபாரி
C) மனுச்சி – இத்தாலிய எழுத்தாளர்
D) பீட்டர் முண்டி – ஆங்கிலேய வணிகர்
11) தாராசுகோ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
கூற்று 1 : தாராசுகோ “தத்துவஞானியின் இளவரசர்” என்று அழைக்கப்பட்டார்.
கூற்று 2 : இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதை கண்டறிந்தார்.
கூற்று 3 : உபநிடதங்களை பாரசீக மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.
A) 1 மட்டும் சரி
*B) 1 மற்றும் 2 சரி
C) 2 மற்றும் 3 சரி
D) அனைத்தும் சரி
12) “கப்பலின் ஒட்டகம்” எனப்படும் தொழில்நுட்பத்தை உலகில் கண்டறிந்த முதல் மனிதன் யார்?
A) ஷெர்ஷா
B) ஜஹாங்கீர்
C) ஷாஜகான்
*D) அக்பர்
13) ஜெகன்நாத பண்டிதர் எந்த முகலாய மன்னரின் அவைக்களப்புலவர்?
A) அக்பர்
*B) ஷாஜகான்
C) ஔரங்கசீப்
D) ஜஹாங்கீர்
14) அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புகளை வரிசைப்படுத்துக :
1) சித்தூர் படையெடுப்பு
2) ரத்தன்பூர் படையெடுப்பு
3) குஜராத் படையெடுப்பு
4) மாளவப் படையெடுப்பு
A) 1, 2, 3, 4
B) 3, 2, 4, 1
*C) 3, 2, 1, 4
D) 4, 2, 1, 3
15) “பாலா பாவோலி” கல்வெட்டு எந்த மொழியில் காணப்படுகிறது?
A) அரபு
B) உருது
*C) சமஸ்கிருதம்
D) பாரசீகம்
16) எந்த ஆண்டு கஜராஹோ கோவில் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது?
A) 1982
B) 1984
*C) 1986
D) 1988
17) “தாரிகி பெரோஸாகி” என்ற நூலை எழுதியவர் யார்?
A) அமீர் குஷ்ரு
*B) ஜியாவுதீன் பரணி
C) அசாம் நிஸாமி
D) சிராஜ்
18) ஃபெரோஷா துக்ளத்தின் சிந்து படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு?
A) கி பி 1364
B) கி பி 1386
C) கி பி 1355
D) கி பி 1362
19) அக்பர் அவையை அலங்கரித்த இசை அறிஞர் யார்?
*A) தான்சென்
B) தஷ்வந்த்
C) இக்பால்
D) ராஜா தோடர்மால்
20) குதுப்மினாரை பழுது பார்த்த டல்லி சுல்தானியர் யார்?
*A) ஃபெரோஷா துக்ளக்
B) முகமது பின் துக்ளக்
C) கியாசுதீன் துக்ளக்
D) அலாவுதீன் கில்ஜி
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
1) “குடும்ப விளக்கு திட்டம்” எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
B) கேரளா
*C) கர்நாடகா
D) புதுச்சேரி
2) 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” யாருக்கு வழங்கப்பட்டது?
*A) கீ. வீரமணி
B) ஆர். ராகவன்
C) ரவி சுந்தர்
D) சுமன்
3) பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது அல்ல?
1) முதல்வரின் சிறந்த மாநகராட்சி விருது திருச்சிக்கு வழங்கப்பட்டது.
2) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நகராட்சியாக திருத்துறைபூண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
*A) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) இரண்டும்
D) இரண்டும் இல்லை
4) எங்கு நடைபெற்ற அகழாய்வில் “தங்கத் தாலி” கண்டெடுக்கப்பட்டுள்ளது?
A) கீழடி
B) பொற்பனைக்கோட்டை
C) துலுக்கர்பட்டி
*D) வெம்பக்கோட்டை
5) தேசிய ஈட்டியெறிதல் திணம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) ஆகஸ்ட் 12
B) ஆகஸ்ட் 29
*C) ஆகஸ்ட் 7
D) ஆகஸ்ட் 4
6) தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
A) சந்துரு
*B) முகமது நசிமுதீன்
C) சைலேந்திரபாபு
D) இறையன்பு
7) 2023 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A) பா எழிலரசி
*B) நா முத்தமிழ்செல்வி
C) லட்சுமி
D) பத்மபிரியா
8) நாட்டிலேயே முதன்முறையாக 3D printing முறையில் கட்டப்பட்ட தபால் நிலையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
A) சென்னை
*B) பெங்களூரு
C) மும்பை
D) குஜராத்
9) 2023 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தின் கருப்பொருள் என்ன?
A) Nation for the people
B) First Nation for first people
C) Nation first, people first
*D) Nation first, always first
10) “இளவேனில் வாளறிவன்” கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) மல்யுத்தம்
B) பளு தூக்குதல்
*C) துப்பாக்கி சுடுதல்
D) வில்வித்தை
அறிவியல் வினாக்கள்
1) நாம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய கொழுப்பின் அளவு எத்தனை கிராம்?
A) 25 கிராம்
*B) 35 கிராம்
C) 45 கிராம்
D) 58 கிராம்
2) பின்வருவனவற்றுள் அயோடின் குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
*A) காய்டர்
B) எலும்புருக்கி நோய்
C) சர்க்கரை நோய்
D) மராஸ்மஸ்
3) எந்த வைட்டமின் குறைபாட்டினால் பெல்லாகரா நோய் ஏற்படுகிறது?
A) வைட்டமின் B
B) வைட்டமின் B 6
*C) வைட்டமின் B 3
D) வைட்டமின் B 12
4) உலக கலப்படத் தடுப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
A) 1948
*B) 1954
C) 1962
D) 1975
5) சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த முடியும் என்று கூறியவர் யார்?
A) சார்லஸ் டார்வின்
B) லூயி பாஸ்டர்
C) வில்லியம் ஹார்வி
*D) ஜேம்ஸ் லின்ட்
6) வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் முளைக்கட்டுவதை தடுக்கும் முறை எது?
*A) கதிர்வீச்சு முறை
B) வெப்பப்படுத்தும் முறை
C) குளிர்வித்தல்
D) பதப்படுத்துதல்
7) தங்கம் 198 ஐசோடோப் எந்த நோயை குணப்படுத்த உதவுகிறது?
A) மார்பகப் புற்றுநோய்
B) நுரையீரல் புற்றுநோய்
C) ஸ்கர்வி
*D) தோல் புற்றுநோய்
8) மனித உடலில் உள்ள நீரின் அளவை அறிய உதவும் கதிரியக்க ஐசோடோப் எது?
A) கோபால்ட் 60
*B) ஹைட்ரஜன் 3
C) தங்கம் 175
D) இவற்றுள் எதுவுமில்லை
9) நைட்ரஸ் ஆக்சைடின் பயன்பாடு என்ன?
A) வலி நிவாரணி
*B) பொது மயக்கமூட்டி
C) குறை தடுப்பான்
D) நுண்ணுயிர் எதிரி
10) ஆப்பிள் மற்றும் பேரிக்காய் போன்றவற்றில் பளபளப்பான தோற்றத்தை கொடுப்பதற்காக பூசப்படும் தீங்கு விளைவிக்கும் மெழுகின் பெயர் என்ன?
A) கார்னோவா மெழுகு
B) ஹைட்ரோ மெழுகு
C) கார்போ மெழுகு
D) கார்பன் மெழுகு
11) பாலில் சேர்க்கப்படும் கலப்பட பொருள் எது?
*A) ஹைட்ரஜன் ஃபெராக்ஸைட்
B) கால்சியம் குளோரைடு
C) அயோடின்
D) கால்சியம்
12) உணவு பாதுகாக்கும் முறையில் பயன்படும் கதிரியக்கம் என்ன?
A) X கதிர் ஆல்ஃபா கதிர்
*B) X கதிர் காமா கதிர்
C) X கதிர் பீட்டா கதிர்
D) இவை அனைத்தும்
13) பின்வருவனவற்றில் புரத குறைபாட்டினால் ஏற்படும் நோய் எது?
A) சர்க்கரை நோய்
B) ரத்த சோகை
C) காய்டர்
*D) மராஸ்மஸ்
14) நவீன கரிம வேதியியலின் தந்தை யார்?
A) நரேந்தர் கபானி
B) பெஞ்சமின் ஃபிராங்கிளின்
*C) ஃபெட்ரிக் ஹோலர்
D) ராபர்ட் காரை
15) பச்சை காய்கறிகளில் பச்சை நிறத்தை கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என்ன?
A) மெக்னீசியம்
*B) காரியம்
C) துத்தநாகம்
D) பாஸ்பரஸ்
Unit 8 வினாக்கள்
1) கால வரிசை படுத்துக?.
1, கர்னல் ஹெரான்.
2, கேப்டன் கேம்ப்பல்.
3, மாபஷ்கான்.
4, யூசுஃப்கான்.
A) 1,3,2,4
B) 2,4,3,1
*C) 1,3,4,2
D) 1,4,3,2
2) கலெக்டர் ஜாக்சன் துறையை பனியிடை நீக்கம் செய்தவர் யார்?.
A) வில்லியம் புரௌன்.
B) நபிக்கான் கட்டாக்.
*C) எட்வர்டு கிளைவ் .
D) காசாமேயர்.
3) கீழ்கண்டவர்களுள் பொருந்தாத நபர் யார்?.
A) கட்டபொம்மன்.
*B) துறைச்சாமி.
C) குமாரசாமி.
D) செவத்தையா.
4) கீழ்கானும் பாளையக்காரர்களில் தூக்கிலிடப்படாதவர் யார்?.
A) தீர்த்தகிரி.
B) ஊமைத்துரை.
*C) பூலித்தேவர்.
D) மருது பாண்டியர்கள்.
5) வேலூர் கோட்டையில் நடைபெற்ற புரட்சியை பற்றி கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்?.
A) மேஜர் ஆம்ஸ்ராங்.
*B) மேஜர் கூட்ஷ்.
C) மேஜர் யங்.
D) மேஜர் பான்கோட்.
6) கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடையது எது?.
1. தென்னிந்தியாவில்,தொடங்கப்பெற்ற காலத்தால் முற்பட்டஅமைப்பான இவ்வமைப்பு தனிப்பட்ட குழுக்களின்விருப்பங்களைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளை அனைவருக்கும் தெரிவிப்பதைநோக்கமாகக் கொண்டு உருவானது.
2, மேலும் கிறித்தவ சமயப் பரப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு அரசு ஆதரவளித்ததைஎதிர்த்தனர். மக்களின் நிலை அவர்களின்தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின்கவனத்தைத் திருப்பும் பணியை இவ்வமைப்புமேற்கொண்டது.
3, வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதைப்படுத்தப்படுவதற்குஎதிராக இவ்வமைப்பு நடத்திய போராட்டம்முக்கியமான பங்களிப்பாகும். இவ்வமைப்பு மேற்கொண்ட முயற்சிகளால் சித்திரவதைஆணையம் (Torture mission) நிறுவப்பட்டது.
A) சென்னை மதராஸ் சங்கம் .
B) சென்னை மஹாஜன சங்கம்.
*C) சென்னை வாசிகள் சங்கம்.
D) சென்னை மக்கள் சங்கம்.
7) 1899 ஆம் ஆண்டு நாழிதலாக மாறிய பத்திரிக்கை எது?.
A) தி ஹிந்து.
*B) சுதேச மித்திரன்.
C) ஒருபைசா தமிழன்.
D) திராவிடன்.
8) தாதாபாய் நௌரோஜி மற்றும் கோகலே ஆகியோருக்கு இனையாக கருதப்படும் தமிழ்நாட்டு விடுதலை வீரர் யார்?
A), சினிவாச சாஷ்த்ரி.
B) மாதவராவ்.
C) அனந்தா சார்லு.
*D) ஜீ.சுப்ரமனிய அய்யர்.
9) சுதேச கீதங்கள் வெளியிடப்பட்ட ஆண்டு?.
A) 1906.
B) 1907.
*C) 1908.
D) 1910.
10) சுதந்திரம்,சமத்துவம்,மற்றும் சகோதரத்துவம், ஆகியவை தனது குறிக்கோளாக கொண்ட பத்திரிக்கை எது?.
A) சுதேசமித்திரன்.
*B) இந்தியா.
C) புரட்சி.
D), சூர்யோதயம்.
11) அரசியல் கேளிச்சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு எது?.
A) தமிழ்நாடு.
B) தி ஹிந்து.
C) குடியரசு.
*D) இந்தியா.
12) ஆனும் பென்னும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திகூர்மையில் சிறந்து விலங்கும் என்று கூறியவர் யார்?
A) பெரியார்.
*B) பாரதியார்.
C) முத்துலட்சுமி ரெட்டி.
D) மூவலூர் அம்மாள்.
13) இந்தியாவில் முதன்முதலாக மே-01 உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு எது?.
A) 1921.
B), 1922
*C) 1923.
D) 1924.
14) 1940. தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்குகொண்ட பென் யார்?.
*A) சரஷ்வதி பாண்டுரங்.
B) சரஷ்வதி அம்மாள்.
C) கிருஷ்னம்மாள்.
D) பட்டம்மாள்.
15) ஈரோடு கல்லுகடை மறியலில் பங்குகொண்ட பென்கள் யாவர்?.
A) நாகம்மை,கன்னம்மாள் .
B) தர்மாம்பாள் ,நீலாம்பிகை அம்மாள்.
C) பத்மாஷ்னி அம்மாள்,தாயார் அம்மாள்.
D) செல்லம்மாள்,கன்னம்மாள்.
பொருளியல் வினாக்கள்
1) கிராம மக்கள் நகரங்களை நோக்கி பல்வேறு காரணங்களால் இடம்பெயர்கின்றனர். இதன் காரணமாக ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும், மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் உள்ளன. இந்நிலையை “இரட்டை நஞ்சாக்கல்” என குறிப்பிட்டவர் யார்?
*A) ஸ்மாச்சர்
B) அலெக்ஸ்டர்
C) டெரிக்
D) மான்ஸ்டர்
2) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க:
கூற்று : ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் மூலமாக வறுமையை ஒழிக்கலாம்.
காரணம் : ஊரக வேலையின்மையும், ஊரக வறுமையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
C) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
D) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
3) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபின் படி, 121 கோடியாக உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் ஊரகங்களில் வசிக்கின்றனர்?
A) 72.34%
B) 68.18%
C) 81.58%
*D) 68.84%
4) பின்வரும் எது இந்தியாவின் முதன்மை குடிசைத் தொழில் அல்ல?
A) மண்பாண்டங்கள் செய்தல்
B) சங்கு தொழில்
C) கைத்தறி மற்றும் நெசவு
*D) குளியல் சோப்பு தயாரித்தல்
5) தற்போது இந்தியாவில் எத்தனை வட்டார ஊரக வங்கிகள் உள்ளன?
A) 52
B) 112
C) 80
*D) 64
6) சிறு தொழில் புரிவோருக்கு தேவையான நிதியை வழங்கி அவர்களை தொழில் அல்லது வணிகத்தில் முதலீடு செய்ய வைப்பது பின்வரும் எதன் நோக்கமாகும்?
A) வட்டார ஊரக வங்கி
B) சிறு மற்றும் நடுத்தர கூட்டுறவு சங்கம்
*C) குறு நிதி
D) தொடக்கக் கூட்டுறவு வங்கி
7) “ஓர் இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்” என்று கூறியவர் யார்?
A) பாலோ கொய்லோ
*B) சர் மால்கம் டார்லிங்
C) அலெக்சாண்டர் ரூக்
D) அஞ்சலோ க்ரகாம்
8) “PURA” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) ரகுராம் ராஜன்
B) மன்மோகன் சிங்
C) இந்திரா காந்தி
*D) அப்துல் கலாம்
9) கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை கலோரிக்கு குறைவாக உணவு எடுத்துக் கொண்டால் அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் எனப்படுவார்கள்?
A) 1,800 கலோரி
B) 2,000 கலோரி
*C) 2,400 கலோரி
D) 2,900 கலோரி
10) ‘சுய உதவிக்குழு’ என்பது ஒரே மாதிரியான சமூகப் பொருளாதார பின்னணி கொண்ட, எத்தனை பெண்கள் வரை கொண்ட தன்னிச்சையான அமைப்பாகும்?
A) 12
B) 15
*C) 20
D)34
11) பொருந்தாத இணையை தேர்வு செய்க :
A) ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி – 1979
B) வேலைக்கு உணவு திட்டம் – 1977
*C) தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் – 1975
D) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் – 2006
12) கிசான் கிரெடிட் கார்டு என்பது ‘இந்திய மைய வங்கி’ மற்றும் ‘விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி’ ஆகியவற்றால் எப்போது தொடங்கப்பட்டது?
A) 1986
B) 1964
*C) 1998
D) 1979
13) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் படி, பயிர்கள் மற்றும் அவற்றுக்கான சந்தா தொகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறான இணை எது?
A) கோடைகால பயிர்கள் 2%
B) குருவை சாகுபடி பயிர்கள் – 1.5%
*C) தோட்டப்பயிர்கள் மற்றும் பணப் பயிர்கள் – 3.5%
D) இவற்றுள் எதுவுமில்லை
14) ஒருங்கிணைந்த ஊரக நல அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு?
A) 2013
B) 2003
C) 2018
*D) 2005
15) ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
A) 1978
B) 1975
*C) 1983
D) 1986
கணித வினாக்கள்
1) a:b:c = 2:3:4 எனில், a/b:b/c:c/a = ?
A) 4:6:9
*B) 8:9:24
C) 9:24:8
D) 5:9:6
2) டிசம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எனில், 95 நாட்களுக்கு முன்பு என்ன கிழமை இருந்திருக்கும்?
A) திங்கள்
B) செவ்வாய்
*C) புதன்
D) வியாழன்
3) ரூபாய் 20,000 க்கு 6 சதவீத வட்டி வீதம் 1/4 ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது எனில், 21 மாதங்கள் கழித்து எவ்வளவு தொகையை வட்டியாக செலுத்தி இருப்பார்?
*A) 2,100
B) 2,200
C) 2,300
D) 2,400
4) A B மற்றும் C மூவரும் இணைந்து 4:7:9 என்ற விகிதத்தில் ரூபாய் 4,00,000 ஐ முதலீடு செய்கின்றனர். எனில், அவர்கள் தனித்தனியாக செலுத்திய தொகை எவ்வளவு?
*A) 80,000, 1,40,000, 1,80,000
B) 1,80,000, 1,40,000, 80,000
C) 1,40,000, 80,000, 1,80,000
D) 1,80,000, 1,20,000, 1,00,000
5) பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்ணை காண்க?
1,225, 784, 484, 289 —– ?
A) 100
B) 121
C) 144
*D) 169
6) 10 நபர்கள் ஒரு வேலையை செய்ய 40 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். எனில், 16 நபர்கள் அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
A) 23 நாட்கள்
*B) 25 நாட்கள்
C) 27 நாட்கள்
D) 29 நாட்கள்
7) ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடும் முறையில் ரூபாய் 7,500 அசலுக்கு 4 சதவீத கூட்டுவட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு?
A) 600
*B) 612
C) 650
D) 680
8) சுருக்குக:
5/6- (1/4÷2/3)
*A)11/24
B)2/3
C)1/2
D)2 2/11
9) 5:4 ஐ சதவீதமாக மாற்றுக?
A) 12.5 சதவீதம்
B) 40 சதவீதம்
C) 80 சதவீதம்
*D) 125 சதவீதம்
10) ரூபாய் 18,000 க்கு 5 சதவீத தனிவட்டி வழங்கப்படுகிறது. எனில், 219 நாட்கள் கழித்து கிடைக்கும் வட்டித்தொகை எவ்வளவு?
A) 530
*B) 540
C) 560
D) 570
11) ஒரு வகுப்பில் 16:9 என்ற விகிதத்தில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் உள்ளனர். எனில் மாணவிகளின் சதவீதம் என்ன?
A) 36%
*B) 64%
C) 16%
D) 32%
12) 64, 48 மற்றும் Y இன் மீ பொ வ 8 எனில், பின்வருவனவற்றுள் Y இன் சாத்தியமான மதிப்பாக இருக்க முடியாதது எது?
A) 72
B) 88
*C) 96
D) 104
13) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியுடன் 46 மணிநேரத்தை கூட்டினால் கிடைக்கும் நேரம் மற்றும் கிழமை என்ன?
A) வெள்ளிக்கிழமை மாலை 3:30
B) செவ்வாய்க்கிழமை மதியம் 1:30
*C) செவ்வாய்க்கிழமை மாலை 3:30
D) வெள்ளிக்கிழமை மதியம் 2:30
14) 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய எண் எது?
A) 270
B) 504
C) 108
*D) 540
15) 5 ஆண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். 6 பெண்கள் அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர். எனில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?
A) 32 நாட்கள்
*B) 40 நாட்கள்
C) 60 நாட்கள்
D) 120 நாட்கள்
16) இரண்டு மின்விசிறிகளின் அடக்க விளையும் சமம். ஆனால், ஒரு மின்விசிறி 20 சதவீத நஷ்டத்திற்கும், மற்றொன்று 60 சதவீத நஷ்டத்திற்கும் விற்கப்படுகிறது எனில், மொத்த நஷ்ட சதவீதம் என்ன?
A) 25%
B) 35%
C) 38%
*D) 40%
17) 30 தொழிலாளர்களின் சராசரி வயது 25. புதிதாக இரண்டு தொழிலாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் சராசரியாக 41 சேர்க்கப்படுகிறது. எனில், புதிய சராசரி என்ன?
A) 23
B) 24
C) 25
*D) 26
18) ஆனந்த் என்பவர் ஒரு பொருளை 10 சதவீத நஷ்டத்திற்கு ரூபாய் 360 க்கு விற்பனை செய்கிறார். அவர் அதை 10 சதவீத லாபத்திற்கு விற்க வேண்டும் எனில், எவ்வளவிற்கு விற்பனை செய்ய வேண்டும்?
A) 360
B) 400
*C) 440
D) 480
19) எந்த இரண்டு கணித குறியீடுகளை மாற்றினால் சமன்பாடு சரியானதாக மாறும்?
2+5-3×6÷2=14
A) கூட்டல் மற்றும் வகுத்தல்
B) பெருக்கல் மற்றும் வகுத்தல்
*C) கழித்தல் மற்றும் பெருக்கல்
D) கூட்டல் மற்றும் பெருக்கல்
20) 3:x=12:20 எனில், x இன் மதிப்பை காண்க?
*A) 5
B) 6
C) 8
D) 10
21) 87,846 என்ற எண்ணானது —– ஆல் வகுபடும்?
A) 2 ஆல் வகுபடும்
B) 3 ஆல் வகுபடும்
C) 11 ஆல் வகுபடும்
*D) இவை அனைத்தும்
22) A என்பவர் ஆண்டுக்கு 14 சதவீத வட்டி வீதத்தில் B என்பவருக்கு ரூபாய் 15,000 கடனாக கொடுத்தார். 6 ஆண்டுகளுக்குப் பின் B ஆணவர் A க்கு ரூபாய் 25,000 மற்றும் ஒரு கடிகாரத்தையும் தருகிறார் எனில், கடிகாரத்தின் விலை என்ன?
*A) 2,600
B) 1,980
C) 1,850
D) 1,740
23) ஒரு வகுப்பில் உள்ள 40 மாணவர்களின் சராசரி வயது 15 ஆண்டுகள். ஆசிரியரின் வயதை சேர்த்தால் சராசரி 16 ஆண்டுகளாக மாறுகிறது எனில், ஆசிரியரின் வயது என்ன?
A) 50
B) 52
C) 54
*D) 56
24) ஒரு குறிப்பிட்ட அசலானது மூன்று ஆண்டுகளில் 729 மடங்காகிறது. எனில், கூட்டுவட்டி விகிதம் என்ன?
A) 600%
B) 700%
*C) 800%
D) 900%
25) 2023 டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை எனில், 2051 டிசம்பர் 17 என்ன கிழமை?
*A) ஞாயிறு
B) திங்கள்
C) செவ்வாய்
D) புதன்