குறிப்பு: (*) குறியிடப்பட்டவை சரியான விடைகள் ஆகும்.
1. பண்டைய இந்திய வரலாற்றில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்ததாகச் சான்றுகள் குறிப்பிடுகின்றன?
4
12
* 16
15
2. பொருந்தாததைத் தேர்க.
மகதம் – பீகார்
அவந்தி – உஜ்ஜைனி
கோசலம் – கிழக்கு உத்திரப்பிரதேசம்
* காசி – கோசாம்பி, அலகாபாத்
3. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: கங்கைச் சமவெளியில் இரும்பின் பரவலான பயன்பாட்டால் வேளாண்மை செழித்தோங்க தொடங்கியது.
காரணம்: இது ஜனபதங்கள் மகா ஜனபதங்களாக மாற வழி வகுத்தது.
கூற்று சரி, காரணம் தவறு
காரணம் சரி, கூற்று தவறு.
* கூற்று, காரணம் இரண்டும் சரி.
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
4. பண்டைய மகதத்தின் அரச வம்சங்களில் பொருந்தாதது?
அரியங்கா
சிசுநாகா
நந்தர்கள்
* சாதவாகனர்கள்
5. கீழ்க்காண்பவர்களில் பண்டைய இந்தியாவில் முதல் பேரரசைத் தோற்றுவித்தவர்கள்?
மௌரியர்கள்
முகலாயர்கள்
* நந்தர்கள்
சுங்கர்கள்
6. மகதத்தின் தலைநகராக பாடலிபுத்திரத்தை மாற்ற அடித்தள மிட்டவர்?
பிம்பிசாரர்
அஜாதசத்ரு
* உதையன்
காலசோகர்
7. “இனக்குழு தன் காலைப் பதித்த இடம் என்ற பொருள் தரும் சொல்?
கணசங்கம்
மகதம்
* ஜனபதம்
காசி
8. இந்திர பிரஸ்தம் எந்த மகாஜனபதத்தின் தலைநகரம்?
* குரு
பாஞ்சாலம்
அங்கம்
கோசலம்
9. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: பண்டைய இந்தியாவில் ‘கூட்டாட்சித் தத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக கணசங்கங்கள் இருந்தன.
காரணம்: மிதிலைப் பகுதியில் இருந்த உஜ்ஜெய்னி கணசங்கம் மிகவும் பிரபலம்.
* கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு
10. மகதத்தின் பழைய தலைநகரம் எது?
* கிரிவ்ராஜ்
பாட்னா
பாட்டாலிபுத்திரம்
வாரனாசி
11. அவந்தியை தோற்கடித்து மகதத்தை வலிமையான ஜனபதமாக மாற்றிய அரசர்?
பிம்பிசாரர்
அஜாதசத்ரு
* உதையன்
அசோகர்
12. ஐந்து மலைகளால் சூழப்பட்ட மகத நகரம் எது?
வைஷாலி
காசி
* ராஜ்கிரிகம்
பாடலிபுத்திரம்
13. ‘ஜலதுர்கா’ எனப்படும் கோட்டையைக் கொண்ட மகாஜனபதம்?
* மகதம்
காசி
காந்தாரம்
அவந்தி
14. யானையை முதன்முதலில் போரில் பயன்படுத்திய மகாஜனபதம்?
காசி
அங்கம்
* மகதம்
கோசலம்
15. ஆய்வாளர்களின் சான்றுகளின் படி பிம்பிசாரரின் ஆட்சிக்காலமாக கருதப்படுவது?
* 52 ஆண்டுகள்
42 ஆண்டுகள்
62 ஆண்டுகள்
72 ஆண்டுகள்
16. கீழ்காணும் கூற்றுகளைக் கவனி
1. அஸ்தினாபூருக்கு அருகில் யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது.
2. தலைநகரம் இந்திர பிரஸ்தம்.
3. ஜாதகங்கள், மகாபாரதம் மற்றும் புத்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்கண்ட கூற்றுகள் எந்த மகாஜனபதத்தோடு தொடர்புடையது?
பாஞ்சாலம்
* குரு
மகதம்
அவந்தி
17. சிந்து பகுதியில் பாரசீகர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிற முதல் கல்வெட்டுச் சான்று யாருடையது?
சைரஸ்
அலக்சாண்டர்
* டேரியஸ்-I
டேரியஸ்-II
18. பொ.ஆ.மு 516-ல் இந்தியாவிற்கு படையெடுத்த முதல் பாரசிகர்?
சைரஸ்
டைபீரியஸ்
* டேரியஸ்-I
ஹெரோடோடஸ்
19. காந்தாரம் ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது சத்ரபியாக இருந்தது எனக் கூறியவர்?
* ஹெரோடோட்டஸ்
மெகஸ்தனிஸ்
தாலமி
தைபீரியஸ்
20. அலெக்சாண்டர் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவை நோக்கி படையெடுத்தார்?
பத்மநந்தர்
சந்திரகுப்தர்
* தன நந்தர்
உதைய நந்தர்
21. அலெக்சாண்டர் இந்திய துணைகண்டத்திற்கு நுழைந்த ஆண்டு?
பொ.ஆ.மு. 329
* பொ.ஆ.மு. 326
பொ.ஆ.மு. 325
பொ.ஆ.மு. 323
22. அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த போது தட்சசீலத்தின் ஆட்சியாளர்?
போரஸ்
* அம்பி
தன நந்தர்
பிம்பிசாரர்
23. ஹைடாஸ்பெஸ் போர் எந்த நதிக் கரைகளுக்கு இடையில் நடைபெற்றது?
ஜீலம் – ராவி
ராவி – பியாஸ்
* ஜீலம் – பியாஸ்
பியாஸ் – சிந்து
24. அலெக்சாண்டர் படையெடுப்பின் போது ‘போர்க்கலையில் இந்தியர்கள் பிற நாட்டினரை விட உயர்ந்தவர்கள் என கூறியவர்?
செலுகஸ் நிக்கேடர்
ஹெரோடோடஸ்
மெகஸ்தனிஸ்
* ஆரியான்
25. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: அலெக்சாண்டர் இந்தியா முழுவதையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவர விரும்பவில்லை.
காரணம்: அவரது படையினர் நந்தர்களின் படை வலிமையை கண்டு படையெடுக்க விரும்பாதது.
கூற்று சரி, காரணம் தவறு
* கூற்று தவறு, காரணம் சரி
கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு
26. சைரஸ் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்த போது மகதத்தின் ஆட்சியாளர்?
அஜாதசத்ரு
* பிம்பிசாரர்
பத்ம நந்தர்
தன நந்தர்
27. பஞ்சாப் மற்றும் சிந்துப் பகுதிகளைத் தோற்கடித்த பாரசிகர்?
சைரஸ்
அலெக்சாண்டர்
* டாரியஸ்-I
டாரியஸ்-II
28. கீழ்காண்பவைகளைக் கவனி
1. கரோஷ்டி எழுத்துமுறை பாரசீகர்களால் வடமேற்கு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.
2. இந்த பகுதிகளில் அசோகரின் சில கல்வெட்டுகள் கரோஷ்டி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.
3. கரோஷ்டி எழுத்துகள் அராபிய க்எழுத்துக்களில் இருந்து பெறப்பட்டது.
4. இவ்வெழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளது.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1, 2, 4 தவறு
2 மட்டும் தவறு
* 4 மட்டும் தவறு
1, 2, 3 மற்றும் 4 தவறு
29. ‘ஆர்பெல் போர்’ (ARBELL) அலெக்சாண்டருக்கும் டாருக்கும் இடையில் நடைபெற்றது?
போரஸ்
அம்பி
டேரியஸ்-II
* டேரியஸ்-III
30. அலெக்சாண்டர் எந்த ஆண்டு அரசராக முடிசூடிக் கொண்டார்?
பொ.ஆ.மு. 356
பொ.ஆ.மு. 346
* பொ.ஆ.மு. 336
பொ.ஆ.மு. 330
31. அலெக்சாண்டரின் கடைசி கிரேக்க ஆளுநராக இந்தியாவில் இருந்தவர்?
செலுக்கஸ் நிக்கேடர்
ஆரியன்
* ஐடோமஸ்
டேரியஸ்
32. அலெக்சாண்டரின் படையெடுப்பால் இந்தியாவில் ஏற்பட்ட நேரடி தாக்கத்தில் பொருந்தாதது?
இந்தோ-கிரேக்க வாணிக தொடர்பு
பண்டைய இந்திய காலக்கோட்டை அறிதல்
* கரோஷ்டி எழுத்து முறை
அரசியல் ஒருங்கினைவு
33. மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் இந்தியாவுக்குள் நுழைய கீழ்க்கண்டவற்றில் எந்தக் கணவாயைப் பயன்படுத்தினார்?
பனிஹல் கனவாய்
* கைபர் கனவாய்
ஜோகில்லா கனவாய்
பீர்பாஞ்சல் கனவாய்
34. ஜோராஸ்டியத்தை பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. ஜோராஸ்டர் ஒரு ஈரானிய தீர்க்கதரிசி.
2. அவரது போதனைகள் ஜென்ட் அவஸ்த்தா என்ற புத்தகத்தில் உள்ளன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
* இரண்டும் சரி
இரண்டும் தவறு
35. மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர்?
செலுக்கஸ் நிக்கேடர்
சாணக்கியர்
* சந்திரகுப்தர்
பிந்துசாரர்
36. மௌரியப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
பொ.ஆ.மு. (C) 325
* பொ.ஆ.மு. (C) 321
பொ.ஆ.மு. (C) 261
பொ.ஆ.மு. (C) 315
37. மௌரியப் பேரரசின் மையமாக இருந்த ஜனபதம்?
* மகதம்
அவந்தி
காசி
அங்கம்
38. மௌரியப் பேரரசின் தலைநகரம்?
ராஜகிரிகம்
* பாடலிபுத்திரம்
வைஷாலி
உஜ்ஜெய்னி
39. கீழ்காண்பவர்களில் பொருந்தாதவர்?
* பிம்பிசாரர்
பிந்துசாரர்
சந்திர குப்தர்
அசோகர்
40. ‘சிம்ஹசேனா’ என்பது யாருடைய இயற்பெயர்?
சந்திரகுப்தர்
அசோகர்
* பிந்துசாரர்
சாணக்கியர்
41. ‘அமிர்தகதா என பிந்துசாரரை அழைத்தவர்கள்?
* கிரேக்கர்கள்
ரோமானியர்கள்
பாரசீகர்கள்
சோழர்கள்
42. பிந்துசாரர் அசோகரை எப்பகுதியின் ஆளுநராக நியமித்தார்?
தட்சசீலம்
காந்தாரம்
* உஜ்ஜைனி
பாட்டாலிபுத்திரம்
43. அசோகர் அரசராக முடிசூடிக் கொண்ட ஆண்டு?
பொ.ஆ.மு. 273
* பொ.ஆ.மு. 268
பொ.ஆ.மு. 261
பொ.ஆ.மு. 231
44. தேவநாம்பிய பியதசி என குறிப்பிடப்படுபவர்?
* அசோகர்
பிந்துசாரர்
சந்திரகுப்தர்
கௌடலியர்
45. அசோகர் கலிங்கத்தின் மீது போர்த்தொடுத்த ஆண்டு?
* பொ.ஆ.மு. 261
பொ.ஆ.மு. 260
பொ.ஆ.மு. 251
பொ.ஆ.மு. 250
46. அசோகரின் கலிங்கப் போரைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுச் சான்று?
* 13-வது பாறைக் கல்வெட்டு
2-வது பாறைக் கல்வெட்டு
6-வது பாறைக் கல்வெட்டு
12-வது பாறைக் கல்வெட்டு
47. அசோகரின் தர்மத்தின் பொருள் குறித்து குறிப்பிடும் கல்வெட்டுச் சான்று?
1-வது பாறைக் கல்வெட்டு
* 2-வது பாறைக் கல்வெட்டு
6-வது பாறைக் கல்வெட்டு
12-வது பாறைக் கல்வெட்டு
48. தர்ம மகமாத்ரா என்ற அதிகாரிகளின் பணி?
தர்மத்தை நிலைநிறுத்துவது
* பௌத்தத்தை பரப்புவது
விலங்குகளை பாதுகாப்பது
நீதி வழங்குவது
49. அசோகரின் சாஞ்சிக் கல்வெட்டுகள் எம்மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது?
பாலி
* பிராமி
கரோஷ்டி
அராமிக்
50. கீழ்காணும் அசோகரின் கல்வெட்டுப் பேராணைகளை கவனி
1. 2-வது பாறைக் கல்வெட்டு
2. 6-வது பாறைக் கல்வெட்டு
3. 9-வது பாறைக் கல்வெட்டு
4. 13-வது பாறைக் கல்வெட்டு
மேல் கண்ட பாறைக் கல்வெட்டுகளில் எது/எவை தென்னிந்திய அரசர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?
1 மற்றும் 3
2 மற்றும் 4
1, 2 மற்றும் 4
* 1 மற்றும் 4
51. ஜுனாக்கட் கல்வெட்டு யாருடைய காலத்தில் அமைக்கப்பட்டது?
சந்திரகுப்தர்
பிந்துசாரர்
அலெக்சாண்டர்
* அசோகர்
52. அசோகர் மூன்றாம் புத்த மாநாட்டை கூட்டிய ஆண்டு?
பொ.ஆ.மு. (C) 261
* பொ.ஆ.மு. (C) 250
பொ.ஆ.மு. (C) 241
பொ.ஆ.மு. (C) 232
53. இதுவரை கிடைத்துள்ள அசோகரின் கல்வெட்டுச் சான்றுகளில் நம்மால் படிக்கப்பட்டவை?
13
23
* 33
55
54. விஷ்ணுகுப்தர் எனக் குறிப்பிடபட்டவர்?
சந்திரகுப்தர்
பிந்துசாரர்
அசோகர்
* கௌடில்யர்
55. அசோகர் தனது மகளை எங்கு பௌத்தத்தைப் பரப்ப அனுப்பினார்?
இந்தோனேசியா
* இலங்கை
சீனா
கம்போடியா
56. சந்திரகுப்தரின் எதிரிகளுக்கு எதிராக சாணக்கியர் செய்த சூழ்ச்சிகளைக் குறிப்பிடும் இலக்கியச் சான்று?
அஸ்டதாயி
அர்த்தசாஸ்திரம்
* முத்ரா ராச்சசம்
இண்டிகா
57. அசோகர் என்கிற பெயர் எத்தனை கல்வெட்டுகளில் காண கிடைக்கிறது?
3
*4
5
7
58. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: கலிங்கப் போர் அசோகரை தீவிர அமைதிவாதியாக மாற்றியது என்பது தவறு.
காரணம்: அவர் தனது படையைக் கலைத்ததர்க்கான சான்றுகள் இல்லை
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
* கூற்று மற்றும் காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் தவறு
59. மௌரிய பேரரசின் கடைசி அரசர்?
தசரதன்
தேவவர்மா
தனுஷா
* பிருஹத்ரதா
60. பின்வருவனவற்றில் எது அசோகரின் ஆட்சியில் மிகத் துல்லியமாக பொருந்துகிறது ?
* தந்தைவழி சர்வாதிகாரம்
வழிகாட்டிய மக்களாட்சி
மையப்படுத்தப்பட்ட அதிகாரம்
கூட்டாட்சி குடியரசு
61. மகதத்தில் நந்தர்களுக்கு எதிராக சந்திரகுப்த மௌரியரின் வெற்றிக்கு பின்வருவனவற்றில் எது காரணமில்லை?
கௌடில்யரின் ராஜதந்திரம்
சந்திரகுப்தரின் படைவளிமை
நந்தர்களின் பலவீனம்
* கிரேக்கர்களின் படை உதவி
62. பின்வருவனவற்றில் எது சந்திரகுப்தரின் ஆளுகைக்கு கீழ் இல்லை?
காஷ்மிர்
குஜராத்
* கலிங்கம்
ஆஃ்கானிஸ்தான்
63. மௌரிய ஆட்சியில் அடிமைத்தனம் இல்லைஎனக் கூறியவர்?
* மெகஸ்தனிஸ்
சாணக்கியர்
அஷ்வகோசர்
ஜஸ்டீன்
64. பிந்துசாரரின் அரசவையில் இருந்த கிரேக்க தூதர்?
மெகஸ்தனிஸ்
* டைச்சுமஸ்
ஆக்கச்சியஸ்
ஆரியன்
65. பௌத்த இலக்கியம் அசோகரின் இரண்டு மகள்களைப் பற்றி குறிப்பிடுகிறது. ஒருவர் சங்கமித்ரா மற்றொருவர்?
அசந்திமித்ரா
பத்மாவதி
* சாருமதி
காருவகி
66. அசோகர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மௌரியப் பேரரசில் தலைநகர் பாடலிபுத்திரம் மற்றும் நான்கு மாகாண மையங்கள் உட்பட ஐந்து முக்கிய அரசியல் மையங்கள் இருந்தன. பின்வருவனவற்றில் எது மாகாண மையமாக இல்லை?
தட்சசீலம்
உஜ்ஜைனி
சுவர்னகிரி
* இந்திர பிரஸ்தம்
67. “அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார்” எனக் கூறியவர்?
டி. கொசாம்பி
R.S. சர்மா
* H.G. வெல்ஸ்
J. வாட்ஸ்
68. மௌரியப் பேரரசின் ‘மந்திரிப்பரிஷத்’ என்ற அமைப்பில் பொருந்தாதவர்?
புரோகிதர்
படைத் தலைவர்
மகாமந்திரி
* ஒற்றர்
69. சுதர்சன ஏரி யாருடைய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது?
சந்திரகுப்தர்
பிந்துசாரர்
* அசோகர்
ருத்ரதாமன்
70. பலி மற்றும் பாகா என்னும் வரிகளைப் பற்றி குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டு எங்குள்ளது?
சாரணாத்
சாஞ்சி
* லும்பினி
இரவிக்குடி
71. மௌரியப் பேரரசின் காலத்தில் முக்கிய இறக்குமதிகளில் பொருந்தாதது?
குதிரை
தங்கம்
லினன்
* முத்துக்கள்
72. மௌரியப் பேரரசில்ல் வரி வசூல் செய்யும் அதிகாரம் கொண்டவர்?
* சமஹர்த்தா
ரஜுவிகா
நகரிகா
பாலவிகா
73. ‘கந்தகோசந்தனா’ என்பது எதனோடு தொடர்புடையது?
நிதித் துறை
* நீதித் துறை
மாவட்ட நிர்வாகம்
ஒரு வகை வரி
74. ‘பானா’ என்பது மௌரியப் பேரரசில் எவ்வகை நாணயம்?
தங்கம்
செம்பு
* வெள்ளி
இரும்பு
75. கௌடிலியரின் கூற்றுபடி மௌரியப் பேரரசில் எத்தனை அதிகாரிகள் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமானவர்கள்?
* 27
30
44
99
76. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கவணி.
1. பிராமண எதிர்வினை
2. நிதி நெருக்கடி
3. அடக்குமுறை ஆட்சி
4. வடகிழக்கு எல்லையைப் புறக்கணித்தல்
மேல் காண்பவைகளில் எது/எவை சரியானவை?
1, 2, 4 சரி
1, 3, 4 சரி
* 1, 2, 3 சரி
1, 2, 3, 4 சரி
77. பின்வருவனவற்றில் எது மௌரியர் காலத்தில் பொருள் கலாச்சாரத்தின் அடிப்படையை உருவாக்கியது?
1. இரும்பின் தீவிர பயன்பாடு
2. மிகுதியான குத்து-குறியிடப்பட்ட நாணயங்கள்
3. மிகுதியான NBP மட்பாண்டங்கள்
4. சுட்டச் செங்கற்களைப் பயன்படுத்தியது
5. வளை கிணறுகளின் பயன்பாடு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்–
1,2,3 மற்றும் 5
1, 3 மற்றும் 4
2,4 மற்றும் 5
* 1,2,3,4மற்றும்5
78. கிரேக்கம் மற்றும் அராமிக் மொழிகளில் பொறிக்கப்பட்ட இருமொழி அசோகரின் கல்வெட்டுகள் எங்கு காணப்படுகின்றன–
மன்செஹ்ரா
புஸ்கலாவதி
சஹ்பஜ்கர்ாஹி
* காந்தஹார்
79. பின்வரும் சிற்பங்களில் எது மௌரியர் காலத்தைச் சேர்ந்தது அல்ல?
சாரநாத் :: சிங்கத்தின் முத்திரை
தௌலி :: யானை
* மதுரா :: நிற்கும் புத்தர்
ராம்பூர்வா :: காளை
80. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்–
(ஒற்றர்களின் வகைகள்) :: (அவர்களின் வேலையின் தன்மை)
குத புருஷக் :: 1. வேசிகள்
சமஸ்தா :: 2. அலைந்து திரியும் உளவாளிகள்
சஞ்சாரா :: 3. இரகசிய தூதுவர்கள்
ரூபஜீவா :: 4. நிலையான உளவாளிகள்
குறியீடுகள்
4 3 2 1
3 4 1 2
* 3 4 2 1
4 3 1 2
81. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் போது சுதர்சன ஏரியைக் கட்டிய பெருமைக்குரிய அதிகாரி:-
யவன்ராஜா துசாஸ்பா
பரந்தத்தா
ஸ்ரீவிசாகா
* வைசிய புஷ்யகுப்தா
82. கௌடில்யர் பயன்படுத்திய ‘தர்மஸ்தானியா’ என்ற சொல் குறிப்பது?
கல்வி நிறுவனங்கள்
மத நிறுவனம்
* நீதிமன்றம்
வருவாய் துறை
83. மௌரியப் பேரரசு இறுதியாக யாரால் அழிக்கப்பட்டது?
* புஷ்ய மித்ர சுங்கர்
அலெக்சாண்டர்
சந்திரகுப்த II
புலிகேசி II
84. பின்வருவனவற்றில் மௌரியர்களின் காலத்தில் சமூக நடைமுறையாக கடைப்பிடிக்கப்படாதது எது?
சாதி முறை
ஆசிரம முறை
அடிமை முறை
* பர்தா முறை
85. மெகஸ்தனிஸ் பின்வருபவைகளில் எதைப் பற்றி குறிப்பிடுகிறார்?
ஏழு நகரங்கள்
* ஏழு சாதிகள்
ஏழு உலகம்
ஏழு கடல்கள்
86. அசோகரின் காலத்தை நிர்ணயிப்பதற்கான மிகவும் நம்பகமான மற்றும் துல்லியமான ஆதாரம் பின்வருவனவற்றில் எது?
தேவநம்பியரின் சமகாலத்தவரைப் பற்றி குறிப்பிடும் இலங்கையைச் சார்ந்த இலக்கியம்
* வெளிநாட்டு அரசர்களைக் குறிப்பிடும் அசோகரின் கல்வெட்டுகள்
புராண இலக்கியங்கள்
பௌத்த மாநாட்டை நடத்துவதைக் குறிக்கும் பாலி இலக்கியம்
87. மௌரியர் காலத்தில் லக்ஷநந்தியாக்ஷா எந்தத் துறைக்கு பொருப்பாக இருந்தார்–
விலங்குகளின் குணாதிசயங்களைப் பற்றிய அறிவைக் கொண்ட ஒரு அதிகாரி
ஜோதிடர்
சாலை அடையாளங்களுக்கான அதிகாரி
* நாணைய சாலையின் பொருப்பாளர்
88. ‘எவரும் தனது சொந்த சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொள்ளவோ அல்லது ஒரு தொழிலை மற்றொரு தொழிலுக்கு மாற்றவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை பின்பற்றவோ அனுமதிக்கப்படுவதில்லை.” இது யாருடைய கூற்று?
* மெகஸ்தனிஸ்
ஃபாகியான்
ஆரியான்
அல்பெருனி
89. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர்?
தாமஸ் சாண்டர்ஸ்
* ஜேம்ஸ் பிரின்செப்
சர் ஜான் மார்ஷல்
வில்லியம் ஜோன்ஸ்
90. முதல் சாக ஆட்சியாளராக கருதப்படுபவர்?
* மொகா
மித்ரடேட்டியஸ்
அசிதான்
ருத்ரதாமன்
91. ருத்ரதாமன் ஆட்சிக்கு வந்த ஆண்டு?
பொ.ஆ. 78
பொ.ஆ. 80
பொ.ஆ. 110
* பொ.ஆ. 130
92. இந்திய துணைகண்டத்தில் நுழைந்த முதல் குஷாண அரசர்?
அசிதான்
* கோண்டோபெர்னெஸ்
விமா காட்பிசெஸ்.
கனிஷ்கர்
93. சக நாட்காட்டி தொடங்கிய ஆண்டு?
பொ.ஆ. 72
பொ.ஆ. 75
*பொ.ஆ. 78
பொ.ஆ. 110
94. தேவபுத்ரன் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டவர்?
அசோகர்
அலெக்சாண்டர்
* கனிஷ்கர்
சந்திரகுப்தர்
95. கூற்று மற்றும் காரணம்.
கூற்று: கனிஷ்கர் மகாயான பௌத்தத்தை ஊக்குவித்தார்.
காரணம் புத்தரை சிலையாக செதுக்குவதில் காந்தாரக் கலை புகழ் பெற்றது.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
* கூற்று காரணம் இரண்டும் சரி
கூற்று காரணம் இரண்டும் தவறு
96. சரிபுத்ரப்ரகரணா என்ற நாடகத்தின் ஆசிரியர்?
நாகார்ஜுனர்
பஷவர்
* அஷ்வகோசர்
வசுமித்திரர்
97. இந்தோ – கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர்?
யூதிடெமஸ்
டெமெட்ரியஸ்
* மினாண்டர்
ஆன்டியால்ஸைடஸ்
98. கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?
புத்தசரிதம் – அஸ்வகோஷர்
எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் – மெகஸ்தனிஸ்
அர்த்தசாஸ்திரம் – கௌடில்யர்
காமசூத்திரம் – வாத்சாயனர்
99. விக்ரம-சகாப்தம் எனக் குறிப்பிடப்படும் காலம்?
*பொ.ஆ.மு. 57-58
பொ.ஆ.மு. 47-48
பொ.ஆ.மு. 25-23
பொ.ஆ.மு. 72-71
100. பண்டைய இந்திய வரலாற்றாளர்கள் பார்த்தியர்களை எந்த தென்னிந்திய வம்சத்தோடு ஒப்பிடுகின்றனர்?
சோழர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
* பல்லவர்கள்