குறிப்பு: (*) குறியிட்டவை சரியான விடைகளாகும்.
1. பின்வரும் குறியீடுகளில் சரியானதைத் தேர்க.
தொடக்க கால ஹரப்பா பொ.ஆ.மு. 3000 – 2600
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா பொ.ஆ.மு. 2600 – 1900
பிற்கால ஹரப்பா பொ.ஆ.மு. 1500 – 800
* 1 & 2 சரி
2 & 3 சரி
1 & 3 சரி
1, 2, 3 சரி
2. சிந்து நாகரீகத்தின் மொத்தப் பரப்பளவு?
1.5 இலட்சம் கி.மீ
* 15 இலட்சம் கி.மீ
10 இலட்சம் கி.மீ
1 இலட்சம் கி.மீ
3. சிந்து நாகரீகத்தின் எல்லைகளில் பொருந்தாதது?
சட்காஜென்டர்
ஆலம்கிர்புர்
தைமாபாத்
* சுர்கோட்டடா
4. பின்வரும் சிந்து நாகரீக நகரங்களில் எது தற்போதைய குஜராத்தில் இல்லை?
டோலவிரா
லோத்தல்
சுர்கோட்டடா
* ராக்கிகார்ஹி
5. பின்வரும் கூற்றுகளில் ஹரப்ப நகர அமைப்போடு பொருந்தாதது?
மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர்.
* நகரங்கள் முக்கோண வடிவமைப்பைக் கொண்டிருந்தன.
கழிவுநீர் செல்ல வடிகால்கள் கட்டப்பட்டிருந்தன.
வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.
6. சிந்து நாகரீகத்தில் (பெரும் குளம் ) காணப்பட்ட நகரம்?
டோலவிரா
லோத்தல்
* மொகஞ்சதாரோ
ஹரப்பா
7. மொகஞ்சதரோ பற்றிய கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. உயர்ந்த மேடை மீது கட்டப்பட்ட நகரம்.
2. நகரத்தில் கோட்டைப்பகுதி போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* 1 &2 சரி
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 தவறு
8. சிந்து நாகரீக மக்களின் வேளாண்மை பற்றிய கீழ்காணும் கூற்றுகளை கவனிக்கவும்.
ஹரப்ப மக்கள் கோதுமை, பார்லி உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டார்கள்.
அவர்கள் ஒற்றைப் பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள்.
உழவுக்குக் கலப்பையைப் பயன்படுத்தவில்லை.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை தவறானது?
1 & 3 தவறு
* 2 & 3 தவறு
1 & 2 தவறு
3 மட்டும் தவறு
9. மொகஞ்சதரோ எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
பியாஸ்
சிந்து
* ராவி
சட்லச்
10. கார்னிலியன் (மணி) அதிகளவில் காணப்பட்ட சிந்து நகரம் எது?
பாலகோட்
* லோத்தல்
ஷார்டுகை
காலிபங்கன்
11. சிந்து நாகரீக மக்கள் கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தாத உலோகம்
வெண்கலம்
செம்பு
தங்கம்
* இரும்பு
12. நடன மங்கை சிலை கிடைக்கப்பெற்ற சிந்து நகரம் எது?
ஹரப்பா
காலிபங்கன்
* மொகஞ்சதாரோ
லோத்தல்
13. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமான எழுத்துத்தொடர்வரிசை?
18
38
* 26
47
14. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட மதகுரு சிலை எதனால் செய்யப்பட்டது?
தங்கம்
செம்பு
* ஸ்டீட்டைட்
லோரிசெல்ட்
15. சிந்து நாகரீகத்தில் (வேள்வி பீடங்கள்) கண்டறியப்பட்ட இடம்
* காலிபங்கன்
சர்கட்டோடா
ஹரப்பா
லோத்தல்
16. எந்தக் கல்வெட்டு மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
* க்யூனிபார்ம்
ஹைரோக்ளைபிக்ஸ்
தேவநாகரி
கரோஷ்டி
17. சிந்து நாகரீகத்தின் எழுத்து முறைப் பற்றிய கூற்றுகளை கவனி.
1. ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.
2. ஹரப்பா எழுத்துத் தொடர்கள் சராசரியாக ஐந்துக்கும் அதிகமான குறியீடுகளையே கொண்டுள்ளன.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானது?
* 1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
இரண்டும் தவறு
18. ‘சிந்து நாகரீக எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பத்தினை ஒத்த வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன’ என கூறியவர்?
மேக்ஸ்முல்லர்
ஜான் மார்ஷல்
அலக்சாண்டர் கன்னிங்ஹாம்
* யூரி நோரோசோவ்
19. சிந்துவெளி மக்கள் ‘ இழந்த மெழுகு செயல்முறை ‘ (Lost Vax) முறையை அறிந்திருந்தார்கள் என்பதை எதன் மூலம் அறியலாம்?
சுடுமண் ஜாடி
மதகுரு சிலை
பறவை முத்திரை
* நடனமாடும் பெண் சிலை
20. சிந்து நாகரீகத்தில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
தொலவீரா
* லோத்தல்
சர்கட்டோடா
ராக்கிகார்கி
21. 2. சிந்து நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
* உலோக காலம்
22. ஹரப்பா முத்திரை பற்றிய அலெக்சாண்டர் கன்னிங்காமின் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு?
1856
1861
* 1875
1921
23. 1921-ஆம் ஆண்டு ஹரப்பாவில் அகழ்வாய்வை தொடங்கியவர்
கன்னிங்ஹாம்
தயாராம் சகாணி
ஜான் மார்ஷல்
* M.S. வாட்ஸ்
24. எஸ்.ஆர். ராவ் லோதலில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கிய ஆண்டு?
1924
1936
1946
* 1955
25. பி.பி.லால் மற்றும் பி.கே. தாப்பர் காளிபங்கனில் அகழ்வாராய்ச்சியை நிகழ்த்திய ஆண்டு?
* 1960
1975
1980
2013
26. வேதகாலத்தில் “பருஷ்னி” என அழைக்கப்பட்ட நதி எது
பியாஸ்
சரஸ்வதி
சிந்து
* ராவி
27. ‘ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள்’ என கூறியவர்?
A.C. தாஸ்
* மேக்ஸ் முல்லர்
தயானந்த சரஸ்வதி
பாலகங்காதர திலகர்
28. பாலகங்காதர திலகரின் கூற்றுபடி ரிக்வேதத்தின் காலம்?
பொ.ஆ.மு. 1500
* பொ.ஆ.மு. 4000
பொ.ஆ.மு. 1200
பொ.ஆ.மு. 800
29. ரிக்வேத காலத்தில் எவ்வகை அரசமைப்புமுறை பின்பற்றப்பட்டது?
நேரடி ஜனநாயகம்
* பரம்பரை முடியாட்சி
இராணுவ சர்வாதிகாரம்
பிரபுத்துவ குடியரசு
30. கீழ்காண்பவைகளில் எது வேதகால சுருதியோடுத் தொடர்புடையது அல்ல?
வேதங்கள்
பிராமணங்கள்
ஆரண்யகங்கள்
* ஆகமங்கள்
31. வேதகாலத்தில் இருந்த ‘ஸ்மிருதி’ என்பதன் பொருள்?
* எழுதப்பட்ட பிரதி
எழுதப்படாத ஒன்று
வாய்மொழி இலக்கியம்
ரிக்வேதத்தின் முதல் தொகுப்பு
32. “சத்யமேவ ஜெயதே” (“வாய்மையே வெல்லும்”) என்னும் முழக்கம் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
இராமாயணம்
மகாபாரதம்
மனு ஸ்மிருதி
* முண்டக உபநிடதம்
33. வேதகால அரசியல் பற்றிய கீழ்காணும் கூற்றுகளை கவனி.
1. சபா – மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு.
2. சமிதி – மூத்தோர்களைக் கொண்ட மன்றம்
மேல்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
* 1 மற்றும் 2 தவறு
இரண்டும் சரியான கூற்றுகள்
34. ரிக்வேதகால பெண்களின் நிலை பற்றிய கூற்றுகளை கவனி.
1. பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினர்.
2. உடன்கட்டை ஏறுதல் என்னும் பழக்கம் இல்லை.
3. சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 & 2 சரி
2 & 3 சரீ
* 1, 2, 3 சரி
1 & 3 சரி
35. பின்வேதகாலத்தில் வயதின் அடிப்படையில் ஆஸ்ரமங்கள் எத்தனையாக வகைபடுத்தப்பட்டன?
2
3
* 4
6
36. ரிக்வேதகால பெண் புலவர்களில் பொருந்தாதவர்?
* அதிதி
லோபமுத்ரா
அப்பலா
கோஷா
37. பின் வேதகால சடங்குகளை பொருத்துக.
ராஜசுய யாகம் :: 1. குதிரைகளை பலியிடுதல்
வாகபய யாகம் :: 2. பட்டாபிஷேகம்
அஸ்வமேத யாகம் :: 3. தேர் ஓட்டம்
1, 3, 2
3, 2, 1
* 2, 3, 1
1, 2, 3
38. பின்வருபவைகளில் எது ரிக்வேதகால சமூக வர்ண கட்டமைப்பில் இல்லை?
பிராமனா
க்ஷத்ரியா
வைஷியா
* சூத்ரா
39. ஆரம்பக்கால ஆரியர்களின் முதன்மைத் தொழில்?
வேளாண்மை
மண்பாண்டம் வனைதல்
* மேய்ச்சல்
வேட்டையாடுதல்
40. ரிக்வேதகாலத்தின் காலகட்டமாக கருதப்படுவது?
* பொ.ஆ.மு. 1500 – 1000
பொ.ஆ.மு. 1200 – 800
பொ.ஆ.மு. 1000 – 600
பொ.ஆ.மு. 800 – 500
41. ஒரே வகுப்பை சேர்ந்த மணமக்கள் வேத முறைபடி செய்துக்கொள்ளும் திருமணம்?
* பிரம்ம விவாகா
அசுர விவாகா
காந்தருவ விவாகா
அர்ஷ விவாகா
42. வேதகால இசைபற்றி அதிகளவில் குறிப்பிடும் முதல் வேதம்?
ரிக்வேதம்
யஜூர் வேதம்
அதர்வன வேதம்
* சாம வேதம்
43. இடியோடு தொடர்புடைய வேதகால கடவுள்?
வருணன்
* இந்திரன்
வாயு
மாருதி
44. பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தவும்
அஸ்வாலாயனா :: 1. சம்ஹிதா
ஆபஸ்தம்பா :: 2. க்ரிஹ்யசூத்திரம்
மைத்ராயனம் :: 3. நிருக்தா
யாசகா :: 4. தர்மசூத்திரம்
1 4 2 3
3 1 2 4
2 3 1 4
* 2 4 1 3
45. பின்வரும் எதில் ‘பிரம்மா’ முதன்மைக் கடவுளாக கருதப்பட்டார்?
ரிக்வேதம்
* பிராமணங்கள்
உபநிடதங்கள்
ஆருன்யங்கள்
46. “புருஷ சுக்தா” பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது
* ரிக்வேதத்தின் ஏழாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
பிராமணர் என்பது முதல் கடவுளின் வாயிலிருந்து வெளிப்பட்டதாக குறிப்பிடுகிறது
குடும்ப படிநிலையின் எழுச்சியைக் காட்டுகிறது
அப்போது வளர்ந்து வந்த சமூகக் கட்டமைப்பிற்கு மத அங்கீகாரத்தை அளிக்கிறது
47. ரிக்வேத கலாச்சாரத்தில் பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
இயற்கை வழிபாடு, வர்ண முறை, உருவ வழிபாடு
* கிராமப்புறம், மேய்ச்சல், முடியாட்சி
பண்டமாற்று முறை, சதி முறை, பசுவின் புனிதத்தன்மை
தாய்வழிச் சமூகம் , தனிக்குடும்ப முறை, தற்காப்பு ஆயுதங்கள்
48. பின்வருவனவற்றில் எது பிரஜா பதியின் வடிவமாக வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளது?
கபிலா
நரசிம்மா
வாமனா
* வராஹா
49. பின்வரும் பிராமண நூல்களில் எது ரிக்வேதத்தைச் சேர்ந்தது
* ஐதரேய பிராமணம்
கோபாத பிராமணம்
சதபத பிராமணம்
தைத்திரிய பிராமணம்
50. பின் வேதகாலத்தில் எந்தக் கைவினை கலைஞர்கள் புனிதச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
குயவர்கள்
நெசவாளர்கள்
* தேர் – செய்பவர்கள்
தச்சர்கள்
51. மகலகோசர் மகாவீரரை எங்குச் சந்தித்தார்?
வைஷாலி
மகதம்
பாட்டாலிபுத்திரம்
* நாலந்தா
52. நட்புத்தர் என்று புத்த இலக்கியத்தில் குறிப்பிடப்படுபவர்?
புத்தர்
* மகாவீரர்
மகலகோசர்
அஜாதசத்ரு
53. சமண சமயத்தை தோற்றுவித்தவராக கருதப்படுபவர்?
மகாவீரர்
* ரிஷபர்
அஜிதானந்தர்
பத்ரபாகு
54. மகாவீரர் பிறந்த இடம்?
மகதம்
லிச்சாவி
* வைஷாலி
குஷிநகரம்
55. மகாவீரர் தனது எந்த வயதில் கவாலியத்தை அடைந்தார்?
30
* 42
58
72
56. சமண சமயப் பிரிவான “ஸ்வேதம்பறர்கள்” யாருடைய தலைமையில் ஒன்று திரண்டனர்?
மகாவவீரர்
பத்ரபாகு
ரிஷபர்
* ஸ்தூலபத்திரர்
57. சமணத்தில் கூறப்படும் திரி ரத்னங்களில் பொருந்தாதது?
சம்யோக் – தர்ஷனா
சம்யோக் – ஞானா
சம்யோக் – மஹாவ்ரதா
* சம்யோக் – அஸ்தேயா
58. பஞ்ச – மஹாவ்ரதாவில் ‘பிரும்மச்சரியா” என்பதன் பொருள்?
கொல்லாமை.
கள்ளாமை
* புலனடக்கம்
பொருள் பற்றின்மை
59. சமணத்தில் குறிப்பிடப்படும் “சல்லேகனா” என்பதன் பொருள்?
புலனடக்கம்
* உண்ணாநோன்பிருத்தல்
பொய்யாமை
நன்னம்பிக்கை
60. சமணக்காஞ்சி என அழைக்கப்பட்ட இடம்?
திரு கழுக் குன்றம்
* திரு பருத்திக் குன்றம்
செங்குன்றம்
திரு குன்றம்
61. ‘உத்ரதாயயானசுத்தா’ என்ற நூல் எச்சமயத்தைச் சார்ந்தது?
ரிக்வேதம்
* சமணம்
புத்தம்
ஆசிவகம்
62. சமணத்தில் 23-வது தீர்த்தங்கரராக கருதப்படுபவர்?
ஆர்ஷிநந்தர்
* பர்ஷவநாதர்
மகாவீறர்
மகலகோசர்
63. திகம்பரர்கள் பற்றிய கூற்றுகளை கவனி..
1. திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்.
2. இப்பிரிவைச் சேர்ந்த துறவிகள் ஆடைகள் அணிவதில்லை.
3. ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என இப்பிரிவினர் கருதுகின்றனர்.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 மட்டும் சரி
2 & 3 சரி
* 1 & 2 சரி
1, 2, 3, சரி
64. பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் போதிக்கிறது.
2. அகிம்சை அல்லது அறவழியே சமணத்தின் அடிப்படைத் தத்துவம்.
மேல்கண்டக் கூற்றுகளில் எது/எவை தவறானவை?
* 1 மட்டும்
2 மட்டும்
1 & 2 தவறு
இரண்டும் சரியானக் கூற்றுகள்.
65. சமணம் பரவியதற்கான காரணங்களில் சரியானதைத் தேர்க.
1. பாலி மொழியிலேயே சமணக் கருத்துக்கள் சொல்லப்பட்டன.
2. அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்தது.
3. சடங்குகளையும் வேள்விகளையும் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 மற்றும் 2 தவறு
2 மட்டும் தவறு
1,2, 3 தவறானவை
* 1, 2, 3 சரியானவை
66. சமண சமையத் தீர்த்தங்கரர்களோடு தொடர்புடைய சின்னம்?
மான்
* சிங்கம்
யானை
குதிரை
67. சமண சமய நூல்கள் எந்த சமண மாநாட்டில் தொகுக்கப்பட்டது?
முதல் மாநாடு
* இரண்டாம் மாநாடு
3-ஆம் மாநாடு
4-ஆம் மாநாடு
68. முதல் சமண சமய மாநாடு எங்கு நடைபெற்றது?
நாலந்தா
வைஷாலி
* பாட்டாலிபுத்திரம்
காஞ்சிபுரம்
69. சமண திகம்பர பிரிவில் உள்ள உட்பிரிவுகளில் பொருந்தாதது?
மூல சங்
பிசபந்தா
* முர்திபுஜகா
தெரபந்தா
70. சமண கட்டிடக்கலையில் கீழ்காண்பவைகளை கவனி.
1. எல்லோரா குகைகள் (குகை எண். 20-25)-
2. உதயகிரி-கந்தகிரி குகைகள்-
3. ஹதி-கும்பா குகை-
மேல்கண்டவற்றுள் தவறானதைத் தேர்க.
* 1 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
3 மட்டும் தவறு
1 மற்றும் 3 தவறு
71. கோமதேஸ்வரர் சிலை காணப்படும் தற்போதைய மாநிலம்?
தமிழ்நாடு
ஆந்திரா
பிகார்
* கர்நாடகம்
72. ‘அனேகண்டவாடா’ என்பது பின்வருவனவற்றில் எந்த சமயத்தின் கோட்பாடு?
* சமணம்
புத்தம்
வைணவம்
சைவம்
73. சமண மதத்தைப் பொறுத்தவரை, பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
ஸ்துலபாகுவின் தலைமையில் தென்னிந்தியாவில் சமணம் பரவியது.
பத்ரபாகுவின் தலைமையில் இருந்த சமணர்கள் பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு ஸ்வேதாம்பரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
* பொ.ஆ. முதல் நூற்றாண்டில் கலிங்க மன்னர் காரவேலன் ஆதரவை சமணம் பெற்றிருந்தது.
துவக்க காலத்தில் சமணர்கள் உருவங்களை வழிபட்டனர்.
74. பின்வரும் கூற்றுகளை கவனி..
1. மகாவீரரின் தாயார் லிச்சாவியைச் சேர்ந்த அரசரின் மகள்.
2. இருபத்தி மூன்றாவது தீர்த்தங்கரரான பார்ஷ்வநாதர், பனாரஸைச் சேர்ந்தவர்
1 மட்டும் சரி
* 2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 2 தவறு
75. பின்வருவனவற்றில் எது ஆரம்பக்கால சமண இலக்கியத்தில் இல்லை?
அசரங்கசூத்திரா
சூத்ரகிருதங்கா
பிருஹத்கல்பசூத்திரம்
* திரிகதா
76. புத்தரின் இயற் பெயர்?
வர்தமானர்
மகலகோசர்
* சித்தார்த்தர்
சேடாக்
77. கௌதம புத்தர் பிறந்த இடமாக கருதப்படுவது?
குஷிநகரம்
பாவபுரி
* லும்பினி
சாரணாத்
78. சித்தார்த்தர் நாட்டை விட்டு வெளியே வந்தபோது கண்ட துயரக்காட்சிகள்?
3
* 4
5
8
79. சாக்கிய முனி என அழைக்கப்படுபவர்?
அஜாத சத்ரு
பிம்பிசாரர்
* சித்தார்த்தர்
வர்தமானர்
80. புத்தர் தனது முதல் ’தர்ம சக்ர பிரவர்த்தனாவை’ நிகழ்த்திய இடம்?
* சாரணாத்
கயா
குஷிநகரம்
லும்பினி
81. புத்தரின் எண்வகை வழிகளில் பொருந்தாதது?
நல்ல நம்பிக்கை
நல்ல எண்ணம்
நல்ல அறிவு
* நற்பிறப்பு
82. புத்தரின் போதனைகளில் சரியானதைத் தேர்க.
1. புத்தரின் போதனைகள் ’தம்மா’ என்று குறிப்பிடப்படுகின்றன.
2. கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக் கொண்டது.
3. சாதிபடிநிலையினை புத்தர் ஏற்றுக்கொண்டார்.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
* 1 & 2 சரி
2 & 3 சரி
1 & 3 சரி
1, 2, 3 சரி
83. மகாயானம் பிரிவைச் சார்ந்தவர்கள் புத்த மதத்தைப் பரப்ப பயன்படுத்திய மொழி?
பிராக்கிருதம்
பாலி
*சமஸ்கிருதம்
தேவநாகரி
84. தேரவாதம் பிரிவு பரவியிருந்த நாடுகளில் பொருந்தாதது?
இலங்கை
பர்மா
இந்தோனேஷியா
* திபேத்
85. மகாயானம் பற்றிய பின்வரும் கூற்றுகளை கவனி.
1. புத்தரின் சிலைகளையோ உருவப் படங்களையோ வணங்க மாட்டார்கள்.
2. விரிவான சடங்குகளைப் பின்பற்றினர்.
3. பிராகிருத மொழியைப் பயன்படுத்தினர்.
மேல் கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 & 2 தவறு
2 & 3 தவறு
* 1 & 3 தவறு
1, 2, 3 தவறு
86. புத்தரின் போதனைகள் எந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளது?
வினையபீடகா
* சுத்தபீடகா
அபிதம்மபீடகா
தெரிகதா
87. முதல் புத்த சங்கம் எங்கு நடைபெற்றது?
பாட்டாலிபுத்திரம்
* ராஜகிருகம்
காஷ்மீர்
வைஷாலி
88. அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல்?
சீவகசிந்தாமணி
அச்சரங்கதத்திரம்
கல்பசூத்திரம்
* சமனபலசுத்தா
89. யாருடைய ஆட்சிக்காலத்தில் சூலாமணி விகாரம் நாகையில் கட்டப்பட்டது?
* முதலாம் இராஜராஜன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் குலோத்துங்கன்
இரண்டாம் நரசிம்மன்
90. புத்தர் தனது அரண்மனையிலிருந்து வெளியேறிய நிகழ்வை குறிக்கும் ஓவியம் காணப்படும் இடம்?
சாஞ்சி
* அமராவதி
அஜந்தா குகைகள்
குஷிநகரம்
91. “நீங்கள் அனைவரும் உங்கள் இருளிலிருந்து விடுதலையடைய, நீங்களே விளக்குகளாக இருங்கள்” என சீடர்களுக்கு தனது இறுதி போதனையாக கூறியவர்?
மகலகோசர்
பர்ஷவநாதர்
மகாவீறர்
* புத்தர்
92. புத்த சங்கங்களில் பெண்கள் துரவிகளாக இனைய காரணமாக இருந்தவர்?
புத்தர்
* ஆனந்தர்
அஷ்வகோசர்
அசோகர்
93. புத்த ஸ்தூபிகளை எழுப்புவதற்கு அசோகர் ஆணையிட்டதை குறிப்பிடும் நூல்?
* அசோகவத்தனா
வினையபீதகா
தீபவம்சம்
மகாவம்சம்
94. புத்தரின் மகாபரிநிர்வாணத்தைக் குறிக்கும் குறியீடு எது?
தர்ம சக்கரம்
தாமரை
* ஸ்தூபி
மரம்
95. பின்வருவனவற்றில் எந்த மகாஜனபதங்கள் புத்தரின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடையது?
1. அவந்தி
2. காந்தாரம்
3. கோசலம்
4. மகதம்
மேல்கண்டவற்றுள் எது/எவை சரியானவை?
1, 2 மற்றும் 3
2 மற்றும் 4.
3 மற்றும் 4
* 1, 3 மற்றும் 4
96. பின்வரும் கூற்றுகளைக் கவனி.
1. தென்னிந்தியாவில் இச்சவாகு அரசர்கள் புத்த சமையத்தை கடுமையாக எதிர்த்தனர்.
2. கிழக்கில் பால அரசர்கள் புத்த சமையத்தை போற்றி வளர்த்தனர்.
மேல்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
1 மட்டும் சரி
*2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
97. காஷ்மீரில் கனிஷ்கரின் ஆட்சியின் போது நடைபெற்ற புத்தமத மாநாட்டிற்கு கீழ்கண்டவர்களில் யார் தலைமை தாங்கினார்?
பர்ஸ்வர்
நாகாற்ஜுனா
* வாசுமித்ரா
ஆணந்தர்
98. புத்தத் துறவிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் கட்டுபாடுகளைக் குறிப்பிடுவது?
சுத்தபிடகா
* வினையபிடகா
அபிதம்மபிடகா
தெரிகதா
99. புத்தரின் போதனைகள் மூன்று பிரிவுகளாக தொகுக்கப்பட்ட புத்த மாநாடு?
* முதல் மாநாடு
2-ஆம் மாநாடு
3-ஆம் மாநாடு
4-ஆம் மாநாடு
100. புத்த மதத்துடன் தொடர்புடைய யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களில் பொருந்தாதது?
நாலந்தா மகாவிகாரம்
சாஞ்சி நினைவுச் சின்னம்
மகாபோதி கோயில்
* சாரணாத் நினைவுச் சின்னம்