ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (12) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்

இந்திய தேசிய இயக்கம் வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

Unit 9 வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ் வினாக்கள்

  1. கூத்தராற்றுப்படை எத்தனை அடிகளை கொண்டுள்ளது?

A) 358.

B) 385.

C. 538.

*D. 583.

2) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

கூற்று1; செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய, மொழிக்குமுதலிலும் இடையிலும் இறுதியிலும்நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்

கூற்று 2;  உயிரலபெடையில் நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அந்நெடில் எழுத்துகளின் பின்னால் வரும்

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

3) பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்.

1) பாவியக்கொத்து.

2) தென்மொழி.

3) பள்ளிப் பறவைகள்.

4) மகபுகுவஞ்சி.

A. 1 மட்டும்.

*B. 2 மட்டும்.

C. 3 மட்டும்.

D. 4 மட்டும்.

4) சிறுமலை என்ற ஊர் எந்த மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது?

A. மதுரை.

B. திருச்சி.

C. கன்னியாகுமரி.

*D. திண்டுக்கல்.

5) ஒற்றளபெடையில் வராத எழுத்தைக் கண்டறி

A) ய்

B) வ்

C) ல்

*D) ழ்

6) திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது?

*A. 1983 செப்டம்பர்.

B. 1983 ஆகஸ்ட்.

C. 1983 அக்டோபர்.

D. 1983 நவம்பர்.

7) “அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

A) இணை எதுகை

*B) பொழிப்பு எதுகை

C) கூழை எதுகை

D) ஒரூஉ எதுகை

8) தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலை எழுதியவர் யார்?

A. வீரமாமுனிவர்.

B. பெரியார்.

C. சேதுபிள்ளை.

*D. மா.நன்னன்.

9) பொருத்துக

A) மதுரை சென்றார் – 1) வினைத்தொகை

B) கொல்களிறு – 2) வேற்றுமைத்தொகை

C) உவமைத்தொகை – 3) வட்டத்தொட்டி

D) பண்புத்தொகை – 4) மலர்க்கை

A) 2 3 1 4

*B) 2 1 4 3

C) 2 4 1 3

D) 2 1 3 4

10) ‘அரிய மலர்’ இலக்கணக் குறிப்புத் தருக.

*A. குறிப்புப் பெயரெச்சம்.

B. குறிப்பு வினையெச்சம்.

C. வினைத்தொகை.

D. பெயரெச்சம்.

11) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

கூற்று 1: செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

கூற்று 2; செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இசைநிறை அளபெடை ஆகும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

12) “அவர் பேசாதநாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா?

அவரிடம் சிக்கித் திணறாத பழமைஉண்டா?

மேற்கண்ட கூற்றில் அவர் என்பது யாரை குறிக்கிறது?

A. முத்துராமலிங்கர்.

B. திரு.வி.கல்யாணசுந்தரம்.

C. அண்ண்ா.

*D. பெரியார்.

13) எதனை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்

A) அறம்

*B) ஒழுக்கம்

C) நன்றி மறவாமை

D) இன்சொல் பேசுதல்

14) ‘கைதொழுது’ இலக்கணக்குறிப்பு தருக.

A. இரண்டாம் வேற்றுமைத் தொகை.

*B. மூன்றாம் வேற்றுமைத் தொகை.

C. நான்காம் வேற்றுமைத் தொகை.

D. ஐந்தாம் வேற்றுமைத் தொகை.

15) தாவரங்களில் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளை வரிசைப்படுத்துக.

1) சினை.

2) குச்சு.

3) போத்து.

4) இணுக்கு.

A. 1 2 3 4.

B. 2 1 3 4.

C. 2 1 4 3.

*D. 1 3 2 4.

16) திரு இரா இளங்குமரனார் பற்றிய தவறான கூற்று/கூற்றுகளை தெர்ந்தெடுக்கவும்.

1) தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வந்தார்.

2) பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கினார்.

3) தமிழ்வழித் திருமணங்களை நடத்தினார்.

A. 1 மற்றும் 3.

B. 2 மற்றும் 3.

C. 1 மற்றும் 2.

*D. இவற்றில் எதுவும் இல்லை.

17) “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்”

இக்குறளில் பயின்றுவரும் மோனை வகையைத் தேர்வு செய்க

A) இணை மோனை

B) பொழிப்பு மோனை

C) கூழை மோனை

*D) ஒரூஉ மோனை

18) தம் நாட்டுப்பற்று என்னும் கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் யார்?

A. ராமசாமி.

B. திரு வி கல்யானசுந்தரம்.

*C. மு வரதராசனார்.

D. ஜெயகாந்தன்.

19) வினைமுற்றுத் தொடர் எவ்வாறு அமையும்

A) வினையெச்சத்தைத் தொடர்ந்து பெயர் வரும்

*B) வினைமுற்றைத் தொடர்ந்து பெயர் வரும்

C) பெயரெச்சத்தைத் தொடர்ந்து வினை முற்று வரும்

D) வினையெச்சத்தைத் தொடர்ந்து வினைமுற்று வரும்

20) ‘இந்தியாதான் என் இளமையின் மெத்தை’ என்று கூறியவர் யார்?

*A. பாரதியார்.

B. பாரதிதாசன்.

C. பெரியார்.

D. அண்ணா.

21) அறிஞருக்குப் பொன்னாடை

இது எவ்வகைத் தொடருக்கான எடுத்துக்காட்டு ஆகும்

A) வேற்றுமைத் தொகைநிலைத்தொடர்

*B) வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

C) இடைச்சொல் தொடர்

D) உரிச்சொல் தொடர்

22) “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்ற அடி எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

A. குறுந்தொகை.

B. புறநானூறு.

C. அகநானூறு.

*D. நற்றிணை

23) கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இக்குறளில் எந்த அளபெடை இடம்பெற்றுள்ளது?

A) செய்யுளிசை அளபெடை

*B) ின்னிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) இசைநிறை அளபெடை

24) முல்லைப்பாட்டு எந்த பாவகையால் இயற்றப்பட்டது?

*A. ஆசிரியப்பா.

B. வெண்பா.

C. கழிப்பா.

D. வஞ்சிப்பா.

25) சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

கூற்று 1: அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல் காசிக்காண்டம்.

கூற்று 2: இவரின் மற்றொரு நூலான வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நைடதம் சிறந்த அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறது.

கூற்று 3: சீவலமாறன் என்ற பட்டப்பெயரும் அதிவீரராம பாண்டியருக்கு உண்டு.

A. 1 மற்றும் 2.

*B. 1 மற்றும் 3.

C. 2 மற்றும் 3.

D. இவை அணைத்தும்.

26) பெயர், வினை ஆகிய இரண்டும் இடம்பெறும் தொடர்களில் பொருந்தாதது எது

A) எழுவாய்த்தொடர்

*B) விளித்தொடர்

C) இடைச்சொல் தொடர்

D) உரிச்சொல் தொடர்

27) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தொழிற்பெயர் அல்லாதது எது

A) நடை

B) நடத்தை

C) நடத்தல்

*D) நட

28) பொருத்துக:

B. Tempest – 1. பெருங்காற்று.

B. Whirlwind: – 2. சுழல்காற்று.

C. Tornado: – 3. சூறாவளி.

D. Storm: – 4. புயல்.

A. 3 2 1 4.

B. 2 3 1 4.

C. 2 1 3 4.

*D. 1 2 3 4.

29) திருக்குறள் தமிழ் மரபுரை என்ற நூலை இயற்றியவர் யார்?

A. புலவர் குழந்தை.

B. துரை மாணிக்கம்.

*C. இரா இளங்குமரனார்.

D. திருக்குறலார்.

30) பாடி மகிழ்ந்தனர்

இது எவ்வகைத் தொடருக்கான எடுத்துக்காட்டு ஆகும்

A) எழுவாய்த்தொடர்

B) வினையெச்சத்தொடர்

C) பெயரெச்சத்தொடர்

*D) வினைமுற்றுத்தொடர்

31) கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினம் எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

A. 1990.

*B. 1991.

C. 1992.

D. 1993.

32) தொழிற்பெயர் எதனை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காட்டாது

A) பால்

B) இடம்

C) காலம்

*D) மேற்கூறிய அனைத்தும்

33) சண்முகசுந்தரம் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?

A. 8.

*B. 12.

C. 11.

D. 15.

34) பொருத்துக:

A. கிழக்கு – 1. கோடை.

B. மேற்கு – 2. கொண்டல்.

C. வடக்கு – 3. வாடை.

D. தெற்கு – 4. தென்றல்.

*A. 2, 1, 3,4.

B. 1, 2, 3, 4.

C. 1, 3, 2, 4.

D. 2, 1, 4, 3.

35) வினையாலணையும் பெயருக்குப் பொருத்தமற்ற கூற்று எது

A) மூவிடத்திற்கும் உரியது

B) காலம் காட்டும்

*C) படர்க்கைக்கே உரியது

D) தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும்

36) ‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று கூறியவர் யார்?

A. திரு.வி.கல்யானசுந்தரம்.

B. மு.வரதராசனார்.

C. பாரதிதாசன்.

*D. பாரதியார்.

37) ‘மூதூர்’ இலக்கணக்குறிப்பு தருக.

A. இடவாகு பெயர்.

B. பண்புப்பெயர்.

*C. பண்புத்தொகை.

D. இடப்பெயர்.

38) முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது எவ்வகைத் தொகாநிலைத்தொடர்

A) எழுவாய்த்தொடர்

B) வினையெச்சத்தொடர்

*C) பெயரெச்சத்தொடர்

D) வினைமுற்றுத்தொடர்

39) “தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் ” என்ற அடி இடம்பெற்ற நூல் எது?

A. மதுரைக்காஞ்சி.

*B. சிலப்பதிகாரம்.

C. குற்றால குரவஞ்சி.

D. மணிமேகளை.

40) ‘வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்உண் டாம்’ என்று காற்றைச் சிறப்பித்து கூறியவர் யார்?

A. திருமூலர்.

*B. ஔவையார்.

C. சொக்கநாதப் புலவர்.

D. இளங்கோவடிகள்.

41) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது எவ்வகை மொழி?

A) தனிமொழி

*B) தொடர்மொழி

C) பொதுமொழி

D) 2 மற்றும் 3

42) மழையும் புயலும் என்னும் நூலை எழுதியவர் யார்?

*A. வ.ராமசாமி.

B. E.வெ.ராமசாமி.

C. இரா.பி.சேதுபிள்ளை.

D. நா.பார்த்தசாரதி.

43) பொருத்துக:

A. இலை – 1) வேம்பு.

B. தோகை – 2) புல்.

C. தாள் – 3) சோளம்.

D. ஓலை – 4) பனை.

A. 2 1 3 4.

B. 1 2 3 4.

C. 3 1 2 4.

*D. 1 3 2 4.

44) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

கூற்று 1: பொதுப்பெயர் முன்னும் சிறப்புப்பெயர் பின்னும் நின்று இடையில் ‘ஆகிய’என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்

கூற்று 2: வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்

A) கூற்று 1 மட்டும் சரி

*B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

45) உலகத் தமிழ்க் கழகத்தை நிறுபியவர் யார்?

A. கவிஞாயிறு.

*B. மொழிஞாயிறு.

C. ஒலிஞாயிறு.

D. மேற்கண்ட எதுவுமில்லை.

46) பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?

*A. மூல்லைப்பாட்டு.

B. குருஞ்சிப்பாட்டு.

C. மலைபடுகடாம்.

D. மதுரைக்காஞ்சி.

47) ‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்’

மேற்கண்ட அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

A. சிலப்பதிகாரம்.

B. முல்லைப்பாட்டு.

C. மணிமேகளை.

*D. கூத்தராற்றுப்படை.

48) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

கூற்று 1: அளபெடை மூன்று வகைப்படும்.

கூற்று 2: உயிரளபெடை இரண்டு வகைப்படும்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1,2 இரண்டும் தவறு

49) பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்:

1. லிங்கபுராணம்.

2. கூர்ம புராணம்.

3. வாயு சம்கிதை.

4. திருக்கருவை.

A. 4 மட்டும்.

B. 3 மட்டும்.

C. 1 மட்டும்.

*D. இவற்றில் எதுவும் இல்லை.

50) “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு”

இக்குறளில் பயின்று வரும் அணி எது

*A) உவமை அணி

B) எடுத்துக்காட்டு உவமை அணி

C) உருவக அணி

D) ஏகதேச உருவக அணி

இந்திய தேசிய இயக்கம் வினாக்கள்

51) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க            

கூற்று 1) காந்தியடிகள் ஃபீனிக்ஸ் குடியிருப்பை 1905 இல் நிறுவினார்.

கூற்று 2) டால்ஸ்டாய் பண்ணையையை 1910 இல் நிறுவினார்.

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

*C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

52) காந்தியடிகள் இந்தியாவில் எந்த இடத்தில் முதன்முதலில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்

A) கேடா

B) அகமதாபாத்

*C) சப்பரான்

D) தண்டி

53) வரிசைப்படுத்துக

1) சம்பரான் சத்தியாகிரகம்

2) கேதா சத்தியாகிரகம்

3) அகமதாபாத் மில் வேலைநிறுத்தம்,

A) 1, 2, 3

*B) 1, 3, 2

C) 2, 3, 1

D) 3, 2, 1

54) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  காந்தியடிகள் ரௌலட் சட்டத்தை கருப்புச் சட்டம்’ என்று அழைத்தார்

காரணம் : காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை ரௌலட் சட்டம் வழங்கியது.

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

55) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : கலிபா அகத்துக்கு இருந்த அதிகாரம் மற்றும் பெருமைகளை நிலைநிறுத்தும் குறிக்கோளுடன் அலி சகோதரர்கள் தலைமையில் கிலாபத் இயக்கம் இந்தியாவில் நடந்தது.

காரணம் : காந்தியடிகள் இந்த இயக்கத்தை இந்து முஸ்லிம்களை இணைக்க ஒரு வாய்ப்பாகக் கருதினார்.

A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

56) எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கியது.

*A) கல்கத்தா

B) நாக்பூர்

C) சென்னை

D) டெல்லி

57) ஒத்துழையாமை இயக்கத் திட்டத்தின் கூறுகளில் தவறானது எது

A) பட்டங்கள் மற்றும் மரியாதை நிமித்தமான பதவிகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைப்பது.

B) நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளுக்கு தனியார் மத்தியஸ்தம் மூலமாகத் தீர்வு காண்பது.

C) அரசுப் பள்ளிகளை குழந்தைகளும் அவற்றின் பெற்றோர்களும் புறக்கணிப்பது.

*D) குடிமைப்பணி (சிவில்) அல்லது ராணுவப் பதவிகளை ஏற்பது

58) வரிசைப்படுத்துக

1) லாகூர் காங்கிரஸ் மாநாடு

2) முதல் வட்டமேசை மாநாடு

3) இரண்டாவது வட்டமேசை மாநாடு

4) காந்தி இர்வின் ஒப்பந்தம்

A) 1 2 3 4

*B) 1 2 4 3

C) 1 3 2 4

D) 1 4 2 3

59) எந்த ஆண்டு கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தது.

A) 1920

*B) 1925

C) 1930

D) 1935

60) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் சைமன் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது

காரணம் : வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

61) ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தரும் நோக்கில் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட அமைப்பு எது

A) மூக்நாயக்

B) பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை

C) பட்டியலினத்தவர் கூட்டமைப்பு

*D) மகத் சத்தியாகிரகம்

62) சுதந்திர தொழிலாளர் கட்சியை அம்பேத்கர் ஆரம்பித்த ஆண்டு எது

A) 1932

*B) 1937

C) 1942

D) 1946

63) உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றபோது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்

A) காமராசர்

B) சத்தியமூர்த்தி

*C) ராஜாஜி

D) பெரியார்

64) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

கூற்று 1) 1928 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைமையேற்றார்

கூற்று 2) 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு மோதிலால் நேரு தலைமையேற்றார்

A) கூற்று 1 சரி

B) கூற்று 2 சரி

C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

*D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

65) காங்கிறஸ் மாநாடுகளையும் அவை நடைபெற்ற இடங்களையும் பொருத்துக

A) 1918 சிறப்பு மாநாடு – 1) கல்கத்தா

B) 1920 சிறப்பு மாநாடு – 2) பம்பாய்

C) 1920 வருடாந்திர மாநாடு – 3) லாகூர்

D) 1929 வருடாந்திர மாநாடு – 4) நாக்பூர்

A) 2 1 3 4

*B) 2 1 4 3

C) 2 4 3 1

D) 2 3 4 1

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

66) வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிப்ரவரி 15  2019 இல்  தொடங்கப்பட்டது. 2021 – 2022 நிதிநிலை அறிக்கையில் ——– ஆண்டிற்குள் 400  வந்தே பாரத் ரயில் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது?

A) 2030

B) 2023

*C) 2025

D) 2027

67) காவலர் நலன் என்ற செயலியை தொடங்கி வைத்தவர் யார்?

A) சைலேந்திர பாபு

B) மு க ஸ்டாலின்

C) சங்கர் ஜீவால்

*D) மா சுப்பிரமணியன்

68) போதை பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

*A) ஜூன் 26

B) ஜூன் 19

C) ஜூன் 17

D) ஜூன் 22

69) உலக கோப்பை வில்வித்தை மூன்றாம் நிலை போட்டியில் இந்திய வீரரான அபிஷேக் வர்மா————-பதக்கம் வென்றுள்ளார்?

*A) தங்கம்

B) வெள்ளி

C) வெங்கலம்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

70) இந்தியாவின் ரா உழவு அமைப்பானது 1968 செப்டம்பர் 21ம் தேதி வெளிநாடுகளில் செயல்படுவதற்காக தொடங்கப்பட்ட ஓர் உலவு அமைப்பு ஆகும். இந்த ரா உழவு அமைப்பின் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

*A) ரவி சின்ஹா

B) சிவ சங்கர்

C) ராம் மேத்தா

D) மகேஷ் அகர்வால்

Unit 9 வினாக்கள்

71) கோவில் நுலைவு அங்கிகாரம் மற்றும் இலப்பிடு சட்டம்

எந்ந்த ஆண்டு யார்ஆல் கொண்டு வரப்பட்டது?

A) 1972 m g r

*B) 1939 ராஜாஜி

C) 1977 ஜெயலலிதா

D) 2019 எடப்பாடி பலணி சாமி.

72) கைத்தரி நெசவாளர்கலின் பொற்க்காலம் என்று யாருடைய ஆட்சி காலம் அழைக்கப்படுகிரது?

A) m.g.r.

B) ஜெயலலிதா

*C) ராஜாஜி

D) கருனாநீதி

73) பெறியார் யாரை பச்சை தமிழன் என்று அளைத்தார்?

A) அன்னா

B) ராஜாஜி

*C) காமராஜர்

D) கருனாநீதி

74) சத்துணவு திட்டம் எந்ந்த ஆண்டு யார்ஆல் கொண்டு வரப்பட்டது?

A) 1972, காமராஜர்

*B) 1982, m.g.r.

C) 2017 ஜயலலித்தா

D) 1987, m.g.r.

75) கூற்று மற்றும் காரனத்தை ஆராய்க;

கூற்று; தெழுங்கு கங்கை திட்டம் M G R ஆல் நடைமுரைபடுத்தப்பட்டது.

காரணம்; இத்திட்டம் சென்னையில் குடிநீர் பற்றா குரையை தீர்க்க கொண்டு வரப்பட்டது.

A) கூற்று சரி காரணம் தவறு.

B) கூற்று தவறு காரணம் சரி.

C) கூற்று மற்றும் காரனம் இரன்டும் சரி. ஆணாள், காரணம் கூற்றை விலக்கவில்லை.

*D) கூற்று மற்றும் காரணம் இரன்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

76) தொட்டில் குழந்தை திட்டம் எந்த ஆண்டு கொண்்டு வரப்பட்டது?

*A) 1992

B) 1993

C) 1994

D) 1995

77)பிண்வரும் கூற்றுகளை ஆராய்க;

கூற்று 1 தாய் பால் வங்கி திட்டம் 2014  இ் கொண்்டு வரப்பட்டது.

கூற்று 2 இத்திட்டம் குழந்தைகலின் ஊட்ட சத்து தேவையை நிவர்த்தி செய கொண்்டு வரப்பட்டது

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

*D) இரண்டும் சரி

78) பிண்வரும் கூற்றுகளில் எது சரியாணது? 

கூற்று 1 சுய மறியாதை திருமனத்தை அன்னா சட்டப்பூர்வமாக்கினார்.

கூற்று 2 ஜனவரி 16 1969 சென்னை மாஹாணம் தமிழ் நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.

கூற்று 3 குடிமாரா திட்டத்தை முதலில் அன்னா அரிமுகப்படுத்தினார்.

கூற்று 4 முதலமைச்சர் நலநிதி திட்டத்தை முதலில்  அன்னா அரிமுகப்படுத்தினார்.

*A) 1 4 சரி

B) 2 4 சரி

C) 1 2 3 4 சரி

D) 3 4 சரி

79) சமத்துவபுர திட்டம் எப்போது யாரால் துவங்கப்பட்டது?

A) 1999 கருனாநீதி

*B) 1997 கருனாநீதி

C) 1977 m.g.r.

D) 1966 காமராஜர்

80) பிண்வரும் கூற்றுகளை ஆராய்க:

  கூற்று 1 1989 பெண்கலுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை கருனாநிதி கொண்டுவந்தார்.

கூற்று 2 உல்லாட்சித் தேர்தலில் 33.3 சதவிகிதம் இட ஒதிக்கிட்டை 1996 ஆம் ஆண்்டு ஜெயலலிதா கொண்டுவந்தார்

*A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

81) தமிழ் நாடு வணிக நளவாரியம் அமைத்தவர் யார்?

*A) மு கருனாநிதி

B) மு கா ஸ்ட்ஆலின்

C) m g r

D) ஜெயலலிதா

82) மாநில நிதி ஆனையம் எந்ந்த ஆண்டு யார்ஆல் கொண்டு வரப்பட்டது?

*A) 1971, கருனாநிதி

B) 1987 கருனாநிதி

C) 1996 ஜெயலலிதா

D) 2021 ஸ்ட்ஆலின்

83) அனைத்து கிராம அன்னா மறுமலர்ச்சி திட்டம் எந்த ஆண்டு கொன்டுவரப்பட்டது?

A) 2005

B) 2007

*C) 2006

D) 2011

84) தமிழ் நாடு ஊட்ட சத்து உதவி தொகை யாருக்காக துவங்கப்பட்டது?

A) 5 வயது கீலெ உள்ள குழந்தைகளுக்காக

B) 6 வயது மேலெ உள்ள குழந்தைகளுக்காக

C) பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்காக

*D) காச நோயாலிக்காக

85) சரியான கூற்றை தேர்வு செய்க

கூற்று 1 15 8 2022 ஆம் ஆண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது.

கூற்று 2 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதலில் மதுரையில் துவங்கப்பட்டது.

A) 1 மட்டும் சரி

*B) 2 மட்டும் சரி

C) இரண்டும் தவறு

D) இரண்டும் சரி

கணித வினாக்கள்

86) பின்வருவனவற்றுள் எந்த எண் 3, 7, 9 மற்றும் 11 ஆல் வகுபடும்?

 A) 639

 B) 3,791

*C) 2,079

 D) 37,911

87) நவம்பர் 15 ஆம் தேதி புதன்கிழமை எனில், 97 நாட்களுக்குப் பிறகு என்ன கிழமை வரும்?

A) புதன்

*B) செவ்வாய்

C) வெள்ளி

D) வியாழன்

88) விடுபட்ட என்னை காண்க :

40, 130, 200, 250, ?

*A) 280

B) 290

C) 300

D) 320

89) ரிஷி என்பவர் ரூபாய் 600 கூட்டுவட்டியின் மூலம் கடனாகப் பெறுகிறார். அவர் இரண்டு ஆண்டுகள் கழித்து மொத்த தொகையாக ரூபாய் 661.5 செலுத்துகிறார் எனில், அவர் எத்தனை சதவீத வட்டிக்கு கடன் பெற்றிருப்பார்?

A) 8%

B) 9%

*C) 5%

D) 8.5%

90) 40  3/5 மீட்டர் நீளமுடைய இரும்பு கம்பியை மூன்று சரிசமமான துண்டுகளாக வெட்டவேண்டும் எனில், ஒரு துண்டின் நீளம் என்ன?

A) 13  7/15

*B) 13  8/15

C) 13  9/15

D) 13  10/15

91) ஒரு வியாபாரி ஒரு முட்டைக்கு 6 பைசா லாபத்திற்கு ஒரு நாளைக்கு 3000 முட்டை விற்கின்றார் எனில் 30 நாள் கழித்து அவர் பெரும் லாபத்தொகை எவ்வளவு?

A) 5200

B) 5600

*C) 5400

D) 5000

92) 22 நபர்களின் சராசரி வயது 33 ஆக உள்ளது. 23 வதாக ஒரு நபர் சேர்ந்த பிறகு அவர்களின் சராசரி வயதில் இரண்டு அதிகரிக்கிறது எனில், 23 வதாக வந்த நபரின் வயது என்ன?

A) 84

*B) 79

C) 53

D) 58

93) லதா என்பவர் ஒரு புத்தகத்தை 400 ரூபாய் வீதம் 60 புத்தகங்களை வாங்குகிறார். கடைக்காரர் ஒரு புத்தகத்திற்கு 2.5% தள்ளுபடி வழங்குகிறார். எனில், அவர் பெற்ற மொத்த தள்ளுபடி எவ்வளவு?

*A) 600

B) 630

C) 580

D) 650

94) பின்வருவனவற்றிற்கு LCM காண்க : 1/3, 5/6, 2/9 மற்றும் 4/27

 A) 1/54

 B) 4/27

 *C) 20/3

 D) 5/27

95) ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை தனி வட்டிக்கு கடன் பெறுகிறார் அவர் நான்கு ஆண்டுகள் கழித்து மொத்தத் தொகையாக 526 செலுத்துகிறார் எனில் அவர் பெற்ற அசல் மற்றும் செலுத்திய வட்டி எவ்வளவு?

A) 390, 134.

B) 410, 124.

*C) 400, 124.

D) 420, 124.

96) விடுபட்ட என்னை காண்க?

1,089, 841, 625, 441, ?

A) 324

B) 361

C) 289

*D) 256

97) ரித்திக் என்பவர் ஒரு குறிப்பிட்ட தொகையை 4%   கூட்டு வட்டிக்கு கடன் வழங்குகிறார் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மொத்த தொகையாக 36300 பெறுகிறார் எனில் அவர் பெற்ற வட்டி தொகை எவ்வளவு?

A) 6700

B) 6500

C) 6100

*D) 6300

98) X என்பவர் ரூபாய் 12,000 ஓராண்டிற்கு தனி வட்டி முறையில் 219 நாட்களுக்குப் பிறகு அவர் எவ்வளவு வட்டி பெறுவார்

A) 268

B) 248

C) 308

*D) 288

99) 60 பொருட்களின் குறித்த விலை 750. நேற்றைய விலையை விட இன்று 20% அதிகரிக்கிறது எனில், அவர் எவ்வளவு தொகை செலுத்தி அப்பொருட்களை வாங்கியிருப்பார்?

*A) 900

 B) 920

C) 940

D) 960

100) இரு எண்களின் பெருக்குத் தொகை 540. HCF 6 எனில், LCM ஐ காண்க?

 A) 1080

 *B) 90

 C) 60

 D) 180