குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது எது
a. உழைப்பு
b. வாய்மை
*c. விருந்தோம்பல்
d. அறத்தைப் போற்றுதல்
2. மழை என்ற பொருள் தரும் மற்றொரு சொல் எது
a. மாறி
*b. மாரி
c. 1, 2 இரண்டும்
d. 1, 2 இரண்டும் இல்லை
3. மலை அருவி என்ற நூலைத் தொகுத்தவர் யார்
a. ந. வானமாமலை
b. சு. சக்திவேல்
c. மயிலை சீனி வேங்கடசாமி
*d. கி. வ. ஜகந்நாதன்
4. கீழ்க்கண்டவர்களுள் முதலாழ்வார்களுள் அல்லாதவர் யார்
a. பொய்கையாழ்வார்
b. பூதத்தாழ்வார்
c. பேயாழ்வார்
*d. நம்மாழ்வார்
5. இயேசு காவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்
a. முத்தையா
ஆ, கண்ணதாசன்
c. வீரமாமுனிவர்
*d. 1, 2
6. பாண்டியர்கள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. பாண்டியர்களின் தலைநகரம் திருநெல்வேலி
2. அவர்களின் இரண்டாவது தலைநகரமாக மதுரைவிளங்கியது
a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
*d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
7. தண்பொருநை புனல் நாடு என்று திருநெல்வேலியைப் போற்றியவர் யார்
a. திருஞான சம்பந்தற்
b. மாணிக்கவாசகர்
*c. சேக்கிழார்
d. திரிகூட ராசப்ப கவிராயர்
8. திருநெல்வேலி பற்றிய தவறான கூற்றைக் காண்க
1. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயர் இருந்துள்ளது
2. வேணுவனம் என்ற சொல்லுக்கு மூங்கில் காடு என்று பொருள்
3. மூங்கில் அதிகமாக விளைந்தமையால் திருநெல்வேலிக்கு அப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்
a. கூற்று 1 தவறு
b. கூற்று 2 தவறு
*c. கூற்று 3 தவறு
d. கூற்றுகள் 2, 3 இரண்டும் தவறு
9. “கொற்கையில் பெருந்துறை முத்து”
என்று கொற்கை முத்தைச் சிறப்பிக்கும் நூல் எது
a. சிலப்பதிகாரம்
b. நற்றிணை
*c. அகநானூறு
d. மதுரைக்காஞ்சி
10. பொருத்துக
a. காவற்புரை – 1. நாணயசாலை
b. அக்கசாலை – 2. வணிகம் நடைபெறும் இடம்
c. பேட்டை – 3. தானியம் விற்கப்படும் இடம்
d. கூழைக்கடை – 4. சிரைச்சாலை
a. 4 3 1 2
*b. 4 1 2 3
c. 3 4 1 2
d. 3 1 4 2
11. வெங்கடேசுர எட்டப்பராசாவைப் பற்றிப் பாடியவர் யார்
a. பாரதியார்
b. திரிகூடராசப்ப கவிராயர்
*c. கடிகைமுத்துப் புலவர்
d. பலபட்டடைச் சொக்கநாதர்
12. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம் எது
a. ஆழ்வார் திருநகர்
b. ஆழ்வார்திருநகரி
c. திருக்குருக்கூர்
*d. 2, 3
13. கோமதித்தாயைப் பற்றிப் பாடியவர் யார்
a. பலபட்டடைச் சொக்கநாதர்
b. அருணகிரிநாதர்
*c. அழகிய சொக்கநாதர்
d. கடிகைமுத்துப் புலவர்
14. “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்”
என்று பாடியவர் யார்
a. திருஞான சம்பந்தற்
*b. மாணிக்கவாசகர்
c. சேக்கிழார்
d. திரிகூட ராசப்ப கவிராயர்
15. டி.கே.சி பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. டி.கே.சி ரசிகமணி என்று சிறப்பிக்கப்படுகிறார்
2. இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழ்க்காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் என்றெல்லாம் புகழப்படுகிறார்
3. வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்தினார்
*a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
c. கூற்று 3 மட்டும் சரி
d. அனைத்தும் சரி
16. உவமையா்ல் விளக்கப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
a. உவமை அணி
b. உவமானம்
*c. உவமேயம்
d. உவம உருபு
17. பூதத்தாழ்வார் எதனை நெய்யாகக் கொண்டு ஞான ஒளியாகிய சுடர்விளக்கைத் மனமுருகத் திருமாளுக்கு ஏற்றினார்
a. பூமி
b. கடல்
c. அன்பு
*d. ஆர்வம்
18. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்
a. பொய்கையாழ்வார்
b. பூதத்தாழ்வார்
c. நம்பியாண்டார் நம்பி
*d. நாதமுனி
19. உவமையையும் பொருளையும் அறநெறிச்சாரப் பாடலுக்கேற்பப் பொருத்துக
a. இன்சொல் – 1. களை
b. ஈதல் – 2. விளைநிலம்
c. வன்சொல் – 3. வித்து
d. அன்பு – 4. நீர்
*a. 2 3 1 4
b. 2 3 4 1
c. 2 4 1 3
d. 4 1 3 2
20. அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பது எத்தகைய பண்பு
a. சிறந்த வாழ்க்கைமுறை
b. அறம்
c. பண்பாடு
*d. ஒப்புரவு நெறி
21. ஒருவர் எல்லாருக்காகவும் , எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது எத்தகைய நெறி ஆகும்
a. ஒப்புரவு நெறி
*b. பொதுவுடைமை
c. அறநெறி
d. நல்லொழுக்கம்
22. “உலகம் உண்ண உண் ; உடுத்த உடுப்பாய்”
என்று கூறியவர் யார்
a. பாரதியார்
*b. பாரதிதாசன்
c. காந்தியடிகள்
d. குன்றக்குடி அடிகளார்
23. குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ் எது
a. நாயன்மார் அடிச்சுவட்டில்
*b. அருளோசை
c. குரட்செல்வம்
d. ஆலயங்கள் சமுதாய மையங்கள்
24. ஜென் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. ஜென் என்ற லத்தின் சொல்லுக்கு தியானம் செய் என்று பொருள்
2. புத்த மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்
3. இவர்கள் பெரும்பாலும் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தார்கள்
a. கூற்று 1 மட்டும் சரி
*b. கூற்று 2 மட்டும் சரி
c. கூற்று 3 மட்டும் சரி
d. அனைத்தும் சரி
25. “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்”
இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது
a. உவமை அணி
b. உருவக அணி
*c. ஏகதேச உருவக அணி
d. இல்பொருள் உவமை அணி
26. உருவக அணிக்குப் பொருத்தமில்லாததைக் காண்க
*a. மலர்ப்பாதம்
b. இன்ப வெள்ளம்
c. துன்பக் கடல்
d. தமிழ்த்தேன்
27. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
இக்குறளில் பயின்றுவந்துள்ள் அணி எது
*a. உவமை அணி
b. உருவக அணி
c. ஏகதேச உருவக அணி
d. இல்பொருள் உவமை அணி
28. “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்”
இக்குறளில் இடம்பெறும் மோனை மற்றும் எதுகை வகையைக் காண்க
*a. கூழை மோனை, ஒரூஉ எதுகை
b. கீழ்க்கதுவாய் மோனை, இணை எதுகை
c. கீழ்க்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் எதுகை
d. கீழ்க்கதுவாய் மோனை, மேற்கதுவாய் எதுகை
29. ஒரு நாட்டின் அறனாக வள்ளுவர் கூறாதது எது
a. காடு
*b. வயல்
c. மலை
d. தெளிந்த நீர்
30. யாருக்கு தாரனி முழுவதும் உறியது என இயேசு காவியம் கூறுகிறது
a. இரக்கம் உடையவர்
*b. சாந்தம் உடையவர்
c. உயர்வு தாழ்வு பாராட்டாதவர்
d. பொறாமையற்றவர்
31. காயிதே மில்லத் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. 1962 இல் நடைபெற்ற சீனப்போருக்குத் தான் செல்ல ஆயத்தமாக இருப்பதாக ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்
2. இவர் கண்ணியமிகு என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுகிறார்
3. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறினார்
a. கூற்றுகள் 1, 2 சரி
b. கூற்றுகள் 1, 3 சரி
*c. கூற்றுகள் 2, 3 சரி
d. அனைத்தும் சரி
32. காயிதே மில்லத் என்பது எம்மொழிச் சொல்
a. தமிழ்
b. உருது
*c. அரபு
d. சமஸ்கிருதம்
33. “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்”
என்று காயிதே மில்லத் அவர்களைப் புகழ்ந்தவர் யார்
a. காமராசர்
b. அறிஞர் அண்ணா
*c. தந்தை பெரியார்
d. ஜவஹர்லால் நேரு
34. நேற்று வாழ்ந்தவர்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்
*a. பாவண்ணன்
b. சே. பிருந்தா
c. கண்ணதாசன்
d. குன்றக்குடி அடிகளார்
35. வீடு முழுக்க வானம் என்ற நூலின் ஆசிரியர் யார்
a. பாவண்ணன்
*b. சே. பிருந்தா
c. கண்ணதாசன்
d. குன்றக்குடி அடிகளார்
36. மல்லிகை சூடினாள்
இது எவ்வகை ஆகுபெயர்
a. சினையாகுபெயர்
b. இடவாகுபெயர்
c. பண்பாகுபெயர்
*d. முதலாகுபெயர்
37. ஆகுபெயர்களை அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக
a. மல்லிகை சூடினாள் – 1. காலவாகுபெயர்
b. டிசம்பர் சூடினாள் – 2. பொருளாகுபெயர்
c. இனிப்புத் தின்றான் – 3. தொழிலாகுபெயர்
d. பொங்கல் உண்டான் – 4. பண்பாகுபெயர்
*a. 2 1 4 3
b. 2 1 3 4
c. 1 2 4 3
d. 1 2 3 4
38. ஆகுபெயர் பற்றிய சரியான கூற்றுகளைக் காண்க
1. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும்
2. சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகுபெயர் எனப்படும்
a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
*c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
39. இரட்டைக்கிளவி பற்றிய தவறான கூற்றைக்க ாண்க
1. இரட்டைக்கிளவியில் ஒரு சொல் இரண்டு முறை மட்டுமே வரும்
2. இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் தராது
3. இரட்டைக்கிளவி விரைவு, வெகுளி, அவலம், அச்சம், சினம் ஆகிய பொருள்கள் காரணமாக வரும்
4. இரட்டைக்கிளவியில் சொற்கள் தனித்தனியே நிற்கும்
a. கூற்றுகள் 1, 2 தவறு
b. கூற்றுகள் 1, 3 தவறு
*c. கூற்றுகள் 3, 4 தவறு
d. கூற்றுகள் 2, 4 தவறு
40. ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பொருத்துக
a. எளிமை – 1. Charity
b. ஈகை – 2. Dignity
c. நேர்மை – 3. Simplicity
d. கண்ணியம் – 4. Integrity
a. 1 3 4 2
*b. 3 1 4 2
c. 3 2 1 4
d. 3 4 2 1
அரசியல் அறிவியல் வினாக்கள்
41) பின்வருவனவற்றுள் இரட்டைக் குடியுரிமை முறையை கொண்டிருக்கும் நாடு எது?
A) இந்தியா
*B) அமெரிக்கா
C) இங்கிலாந்து
D) எதுவும் இல்லை
42) தற்பொழுது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளன?
*A) 6
B) 7
C) 5
D) 9
43) “மாநில மறுசீரமைப்பு சட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் எது?
A) ஜனவரி 1, 1956
B) மார்ச் 1, 1956
C) ஆகஸ்ட் 1, 1956
*D) நவம்பர் 1, 1956
44) இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர், பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்?
A) 3
B) 5
*C) 7
D) 9
45) தவறான இனையை தேர்ந்தெடுக்கவும் :
1. ஷரத்து 25 – தனிநபர் மத சுதந்திரம்.
2. ஷரத்து 26 – மத நிறுவனங்களை உருவாக்கலாம்.
3. ஷரத்து 27 – மதம் சார்ந்த வரிகளை விதிக்ககூடாது.
4. ஷரத்து 28 – கல்வி நிறுவனங்களில் மத சுதந்திரம்.
A) 2 மட்டும்
B) 1 மற்றும் 3
C) 1 2 மற்றும் 3
*D) இவற்றுள் எதுவும் இல்லை
46) 14 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்கள் எந்த சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
A) 5 – ஆவது சட்டத்திருத்தம்
*B) 7 – ஆவது சட்டத்திருத்தம்
C) 11 – ஆவது சட்டத்திருத்தம்
D) 15 – ஆவது சட்டத்திருத்தம்
47) பொருத்துக :
a) பேச்சு அல்லது கருத்து சுதந்திரம் – 1) ஷரத்து 19B.
b) பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்க்கான உரிமை – 2) ஷரத்து 19A.
c) சங்கம் உருவாக்குவதற்கான உரிமை – 3) ஷரத்து 19C.
d) நாடெங்கும் செல்வதற்கான உரிமை – 4) ஷரத்து 19D.
*A) 2 1 3 4
B) 4 3 2 1
C) 1 2 4 3
D) 1 2 3 4
48) இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, குடியுரிமை பெறுவதற்கான வழிகள் எத்தனை?
A) 4
B) 3
*C) 5
D) 7
49) சரியான கூற்றை காண்க?
1) கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
2) இச்சட்டம் ஏப்ரல் 1 2010ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது.
A) மட்டும் சரி
*B) இரண்டும் சரி
C) 2 மட்டும் சரி
D) இரண்டும் இல்லை
50) ஃபசல் அலி ஆணையத்தில் இருந்த உறுப்பினர்களின் பொருந்தாத நபரை குறிப்பிடுக?
*A) சர்தார் வல்லபாய் படேல்
B) குன்ஸ்ரூ
C) பணிக்கர்
D) ஃபசல் அலி
51) பின்வரும் கூற்று மற்றும் காரணம்:
கூற்று : ஒரு நபர் நீதிப்பேராணைக்காக மனுத்தொடுத்தால், உயர் நீதிமன்றம் அதனை நிறாகரிக்கலாம் அல்லது ஏற்றுக்கொல்லலாம்.
காரணம் : இது உயர் நீதிமன்றத்திற்கு தன்விருப்ப அதிகாரம்.
A) கூற்று மட்டும் சரி
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
C) காரணம் மட்டும் சரி
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
52) மாநிலங்களின் பெயர் மாற்றம், பரப்பை விரிவுபடுத்துதல் மற்றும் எல்லையை குறைத்தல் இவை பற்றி குறிப்பிடும் ஷரத்து எது?
A) ஷரத்து 1
B) ஷரத்து 2
*C) ஷரத்து 3
D) ஷரத்து 4
53) இந்திய குடியுரிமைச் சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்ட ஆண்டு எது?
A) 1965
B) 1967
C) 1955
*D) 1957
54) பிறப்பால் பெரும் குடியுரிமை பற்றிய பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
கூற்று 1 : 1950 ஜனவரி 26 முதல் ஜூலை 1, 1987 க்கு முன்பு இந்தியாவில் பிறந்த ஒருநபர் பிறப்பால் குடியுரிமை பெற முடியும்.
கூற்று 2 : ஜூன் 1, 1987 மற்றும் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால், பிறப்பால் குடியுரிமை பெற முடியும்.
கூற்று 3 : டிசம்பர் 3, 2003 மற்றும் அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 1 மற்றும் 3 சரி
C) கூற்று 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
55) இயல்பு குடியுரிமை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க :
A) விண்ணப்பிப்பதன் மூலம் குடியுரிமை பெறலாம்.
B) வெளிநாட்டு குடியுரிமையை துறக்கும் பட்சத்தில் ஒருவர் இந்தியாவில் இயல்பு குடியுரிமையை பெறலாம்.
C) 8 ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவினை பெற்றவர் இயல்பு குடியுரிமை பெற தகுதியுடையவர் ஆவார்.
*D) அனைத்தும் சரி
56) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
கூற்று 1 : 1963ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் 16 ஆவது மாநிலமாக பிரிக்கப்பட்டது.
கூற்று 2 : இதன் தலைநகரம் கோஹிமா ஆகும்.
கூற்று 3 : அசாம் மாநிலத்தில் இருந்து நாகாலாந்து பிரிக்கப்பட்டது.
A) 1 மட்டும் சரி
B) 1 மற்றும் 2 சரி
C) 2 மட்டும் சரி
*D) அனைத்தும் சரி
57) அரசியலமைப்பில் எந்த ஷரத்து மனிதர்களில் ஆல் கடத்தலை தடைசெய்கிறது?
A) ஷரத்து 20
*B) ஷரத்து 23
C) ஷரத்து 27
D) ஷரத்து 30
58) சொத்துரிமை எத்தனையாவது பகுதியில் இடம்பெற்றுள்ளது?
A) 10
B) 11
*C) 12
D) 13
59) உயர்நீதிமன்றத்திற்கான 5 பேராணைகளை எந்த சரத்து கூறுகிறது?
A) ஷரத்து 212
B) ஷரத்து 32
C) ஷரத்து 121
*D) ஷரத்து 226
60) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?
கூற்று 1 : இந்திய அரசியலமைப்பு விதி 5 முதல் 11 வரை குடியுரிமை பற்றி கூறுகிறது.
கூற்று 2 : இது பகுதி 3 – ல் அமைந்துள்ளது.
கூற்று 3 : இந்தியா இரட்டை குடியுரிமை முறையை பின்பற்றுகிறது.
*A) 1 மட்டும்
B) 1மற்றும் 2
C) 2 மற்றும் 3
D) அனைத்தும்
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
61) 2022 ஆம் ஆண்டிற்கான “சரஸ்வதி சம்மான்” விருது பெற்றவர் யார்?
*A) சிவசங்கரி
B) சத்ய சாய்
C) மாதவ் கௌஷிக்
D) அம்பை
62) தமிழகத்தின் 18 ஆவது வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைகிறது?
A) சென்னை
B) கோவை
C) தூத்துக்குடி
*D) ஈரோடு
63) ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
A) ஜனவரி 1, 2001
*B) ஜூன் 15, 2001
C) டிசம்பர் 31, 1999
D) செப்டம்பர் 20, 1999
64) கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் யார்?
*A) பத்மா லட்சுமி
B) வித்யா காம்ப்ளே
C) ஜோயிதா மோண்டல்
D) சினேகா
65) எந்த மாநிலத்தில் “பசு நலவாழ்வு ஆணையம்” அமைக்கப்பட உள்ளது?
A) கேரளா
B) கர்நாடகா
*C) மகாராஷ்டிரா
D) பஞ்சாப்
66) உலகின் உயரமான ரயில் மேம்பாலம் எந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது?
A) நர்மதா
B) கிருஷ்ணா
C) பிரம்மபுத்திரா
*D) ஸெனாப்
67) “சாட் ஜி பி டி” க்கு இணையாக “எர்ணி” என்னும் மென்பொருளை எந்த நாடு அறிமுகம் செய்துள்ளது?
A) அமெரிக்கா
*B) சீனா
C) ரஷ்யா
D) சிங்கப்பூர்
68) “சுவதேஷ் தர்ஷன் திட்டம்” கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A) கல்வி
B) மருத்துவம்
*C) சுற்றுலா
D) விளையாட்டு
69) உலக தண்ணீர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A) மார்ச் 20
B) மார்ச் 18
C) மார்ச் 19
*D) மார்ச் 22
70) ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A) சந்திரசேகரன்
B) உத்தம் சிங்
*C) ஹார்த்திக் சிங்
D) குருபக் சிங்
புவியியல் வினாக்கள்
71. 1929 இல் உலகில் பதிவான மிகக் குறைந்த அழுத்தம்?
A. 845 mb
B. 860 mb
C. 880 mb
*D. 870 mb
72. பியோபோர்டு அளவை என்ற கருவி எதன் வேகத்தை அளக்க பயன்படுகிறது?
A. நீர்
*B. காற்று
C. ஒளி
D. கடல் அலை
73. மாஞ்சாரல் எனப்படும் இடியுடன் கூடிய மழையானது எந்த கடற்கரையில் விளையும் மாங்காய்கள் உதிர்வதற்கு உதவுகிறது?
A. தமிழ்நாடு மற்றும் கேரளா
B. ஆந்திரா மற்றும் ஒடிசா
*C. கேரளா மற்றும் கர்நாடகா
D. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
74. காலநிலை வரைபடங்களின் தொகுப்பை வெளியிட்ட அல்-பலாஹி எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A. ஜெர்மனி
B. அமெரிக்கா
*C. அரேபியா
D. பிரான்ஸ்
75. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வெப்பநிலை பெறுவதற்கான காரணம்?
A. வெப்ப கதிர்வீச்சு
B. காற்றழுத்தம்
C. வளிமண்டலம்
*D. புவியின் கோள வடிவம்
76. காற்றின் அழுத்தம்______ஆல் அளவிடப்படுகிறது?
A. தெர்மாமீட்டர்
*B. காற்றழுத்தமானி
C. வெப்பநிலைமானி
D. ஈரநிலைமானி
77. இந்தியாவில் அதிகமாக மழை பொழியும் பகுதி எது?
A. சிரபூஞ்சி
*B. மெளஸின்ரம்
C. மகாபலீஸ்வரர்
D. மேகலாயா
78. புவியில் மிக அதிகபட்ச வெப்பநிலையான 56.7 பாகை செல்சியஸ் எந்த ஆண்டில் பதிவானது?
*A. 1913 July 10
B. 1913 July 9
C. 1913 Aug 10
D. 1913 June 13
79. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலை __________ வரை உயர்வடைகிறது?
A. 49 டிகிரி செல்சியஸ்
B. 42 டிகிரி செல்சியஸ்
C. 44 டிகிரி செல்சியஸ்
*D. 46 டிகிரி செல்சியஸ்
80. மழை பொழிவு எந்த கருவியால் அளவிடப்படுகிறது?
A. ஈரநிலைமானி
B. தெர்மாமீட்டர்
*C. மழைமானி
D. ஹைட்ரோ மீட்டர்
81. காற்றின் அழுத்தம் குறைவதனால் _________ வாயுவின் அளவு குறைகிறது?
A. நைட்ரஜன்
B. ஹைட்ரஜன்
C. கார்பன் டை ஆக்சைடு
*D. ஆக்சிஜன்
82. கிளைமேட் என்ற சொல் பண்டைய கிளைமா என்ற மொழியில் இருந்து பெறப்பட்டது?
A. இலத்தீன்
B. சமஸ்கிருதம்
*C. கிரேக்கம்
D. பாரசீகம்
83. இந்தியாவில் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75% மழைப்பொழிவு பெறும் பருவக்காற்று எது?
A. வடகிழக்கு பருவக்காற்று
*B. தென்மேற்கு பருவக்காற்று
C. பின்னடையும் பருவக்காற்று
D. முன் பருவக்காற்று காலம்
84. ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டல தன்மையை குறிப்பிடுவது?
A. காலநிலை
*B. வானிலை
C. வெப்பநிலை
D. காற்றழுத்தம்
85. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு ________ மில்லி மீட்டர் ஆகும்?
*A. 930
B. 1010
C. 950
D. 890
86. காலநிலை என்பது எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது?
A. 25 ஆண்டுகள்
*B. 35 ஆண்டுகள்
C. 30 ஆண்டுகள்
D. 20 ஆண்டுகள்
87. இந்தியாவில் குறைவாக மழைப்பொழிவை பெறும் ஜெய்சால்மர் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A. பஞ்சாப்
*B. ராஜஸ்தான்
C. மகாராஷ்டிரா
D. மேற்கு வங்காளம்
88. இந்தியாவில் ஆண்டு சராசரி மழைப்பொழிவின் அளவு?
A. 116 சென்டிமீட்டர்
B. 117 சென்டிமீட்டர்
*C. 118 சென்டிமீட்டர்
D. 119 சென்டிமீட்டர்
89. இந்தியாவில் மூன்றாவது அதிகம் மழை பொழிவு பெறும் பகுதி எது?
*A. சின்னக்கல்லார்
B. வால்பாறை
C. சிரபூஞ்சி
D. கொடியூர்
90. இதுவரை புவியில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவு______?
A. -84.3 டிகிரி செல்சியஸ்
*B. -89.2 டிகிரி செல்சியஸ்
C. -73.4 டிகிரி செல்சியஸ்
D. -79.2 டிகிரி செல்சியஸ்
கணித வினாக்கள்
91) 16 புத்தகங்களின் விலை 12 புத்தகங்களின் விற்பனை விலைக்கு சமம் எனில், இலாப சதவீதம் என்ன?
*A) 33 1/3%
B) 25%
C) 20%
D) 30%
92) ஒரு பொருளின் மதிப்பு முதல் வருட முடிவில் 60 சதவீதம் குறைகிறது. இரண்டாம் வருட முடிவில் 50 சதவீதம் குறைகிறது அதன் தற்போதைய மதிப்பு 320 எனில், இரண்டு வருடத்திற்கு முன்ப அந்தப் பொருளின் மதிப்பு எவ்வளவு?
A) 1,800
B) 1,200
C) 1,400
*D) 1,600
93) ஒருவர் ஒரு மிதிவண்டியை 1,400 க்கு வாங்குகிறார். பிறகு அதை 15 சதவீத நட்டத்திற்கு விற்கிறார் எனில், விற்ற விலை எவ்வளவு?
*A) 1,190
B) 1,290
C) 1,090
D) 1,390
94) ஒருவரின் சம்பளம் முதலில் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. பிறகு 30 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. எனில், எவ்வளவு சதவீதம் அவர் சம்பளத்தில் இழக்கிறார்?
A) 15%
B) 0%
*C) 9%
D) 18%
95) ஹமீது என்பவர் ஒரு பொருளை ரூபாய் 15,200 க்கு வாங்கி 20 சதவீத லாபத்திற்கு விற்கிறார் எனில், விற்ற விலை என்ன?
A) 18,000
*B) 18,240
C) 18,160
D) 18,400
96) ஒரு புத்தகத்தின் விலை ₹ 225 அதற்கு 8 சதவீதம் தள்ளுபடி அளித்தால் அதன் விற்பனை விலை என்ன?
A) 200
*B) 207
C) 327
D) 187
97) ஒரு பொருளை ரூபாய் 810 க்கு விற்பதால் 10 சதவீதம் நஷ்டம் ஏற்படுகிறது எனில், அதன் அடக்கவிலை என்ன?
A) 840
B) 850
C) 890
*D) 900
98) அமர் ஒரு வாஷிங்மிஷினை ரூபாய் 4,500 க்கு வாங்கி, 500 செலவு செய்து பழுது நீக்குகிறார். பிறகு ரூபாய் 4,500 க்கு விற்பனை செய்கிறார் எனில், நஷ்ட சதவீதம் என்ன?
A) 6%
B) 8%
*C) 10%
D) 12%
99) 16 சதவீத தள்ளுபடியில் வாங்கிய ஒரு தொப்பியின் விலை ரூபாய் 210. அதன் குறித்த விலை என்ன?
A) ரூபாய் 243
B) ரூபாய் 176
C) ரூபாய் 230
*D) ரூபாய் 250
100) 20 சதவீத விலை உயர்த்தப்பட்ட பிறகு ஒரு கிலோ உளுந்தின் விலை ₹ 150. எனில், உயர்விற்கு முன் உளுந்தின் விலை எவ்வளவு?
*A) 125
B) 120
C) 135 D) 130