குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1. கற்குகை என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a. கள் + குகை
b. கற் + குகை
*c. கல் + குகை
d. கற்கு + கை
2. காவற்பெண்டு யாருடைய செவிலித்தாயாக விளங்கினார்
a. கரிகாலச் சோழழ
b. கிள்ளி வலவன்
*c. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி
d. கோப்பெருஞ்சோழன்
3. சாஸ்தி என்ற சொல்லின் பொருள் என்ன
a. செல்வம்
b. பெரும்பரப்பு
c. யானை
*d. மிகுதி
4. பாஞ்சாலங்குரிச்சி நாட்டின் வளத்தைக் கூறுவதாக வீரபாண்டிய கட்டபொம்மனின் கதைப்பாடல் குறிப்பிடுவது எது
a. குயில்
*b. மயில்
c. புலி
d. பசு
5. முத்துராமலிங்கத்தேவரை தேசியம் காத்த செம்மன் என்று புகழ்ந்தவர் யார்
a. தந்தை பெரியார்
b. அறிஞர் அண்ணா
*c. திரு.வி. கல்யாணசுந்தரனார்
d. பாலகங்காதர திலகர்
6. நேதாஜி என்ற பெயரில் வார இதழை நடத்தியவர் யார்
a. சுபாஷ் சந்திர போஸ்
b. திரு.வி. கல்யாணசுந்தரனார்
c. தந்தை பெரியார்
*d. முத்துராமலிங்கத்தேவர்
7. முத்துராமலிங்கத்தேவரின் நினைவாக இந்திய அரசு தபால் தலை வெளியிட்ட ஆண்டு எது
a. 1985
*b. 1995
c. 2005
d. 2015
8. “வந்தே மாதரம் என்போம் எங்கள்
மாநிலத்தாயை வணங்குதும் என்போம்”
என்று பாடியவர் யார்
a. பாலகங்காதர திலகர்
b. வ.உ.சி.
*c. பாரதியார்
d. இரா. சேது
9. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வ.உ.சி. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த நூல் எது
a. மெய்யறிவு
b. மெய்யறம்
*c. மனம்போல் வாழ்வு
d. இவை அனைத்தும்
10. இரா. சேது பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
1. இரா. சேது சொல்லின் செல்வர் என்று புகழப்படுகிறார்
2. இவரது நூலான தமிழின்பம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் தமிழ் நூலாகும்
3. இவர் தமிழறிஞர் எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்
a. 1, 2 சரி
b. 1, 3 சரி
c. 2, 3 சரி
*d. அனைத்தும் சரி
11. நுனிக்கிளை என்பது எவ்வகை வழக்குச் சொல்
a. இலக்கணமுடையது
b. இலக்கணப்போலி
c. முன்பின்னாகத் தொக்க போலி
* d. B மற்றும் C
12. தமிழ் இலக்கணத்தில் உள்ள போலியின் வகைகளும் அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்லன. அவற்றுள் தவறான இணையைக் கண்டறிக
a. பைசல் – முதற்போலி
b. அரையர் – இடைப்போலி
c. நிலன் – கடைப்போலி
*d. ஐந்து – முற்றுப்போலி
13. Elocution என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க
a. முழக்கம்
b. ஒற்றுமை
c. சமத்துவம்
*d. பேச்சாற்றல்
14. பாரதிதாசனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலான பிசிராந்தையார் எவ்வகை நூலாகும்
a. கட்டுரை
b. கவிதை
c. சிறுகதை
*d. நாடகம்
15. சொற்களையும் அவற்றிற்குறிய பொருளையும் பொருத்துக
a. கழனி – 1. கதிரவன்
b. நிகர் – 2. மேகம்
c. பரிதி – 3. சமம்
d. முகில் – 4. வயல்
a. 4 3 2 1
*b. 4 3 1 2
c. 3 4 1 2
d. 3 4 2 1
16. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வமாக நாலடியார் குறிப்பிடுவது
*a. கல்வி
b. வீடு
c. பணம்
d. அணிகலன்
17. நாலடியார் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க
1. நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நூலாகும்
2. நாலடி நானூறு, உத்தர வேதம் என்பவை இந்நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகும்
3. திருக்குறளைப் போன்றே நாலடியாரும் முப்பால் பகுப்புக் கொண்டது
a. 1, 2 சரி
*b. 1, 3 சரி
c. 2, 3 சரி
d. அனைத்தும் சரி
18. திருக்குறளார் வீ. முனிசாமி எழுதிய நூல்களில் மிகவும் புகழ் பெற்ற நூல் எது
a. வள்ளுவர் உள்ளம்
b. வள்ளுவர் காட்டிய வழி
c. திருக்குறளில் நகைச்சுவை
*d. உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்
19. கல்வி இல்லாத நாடு எத்தகைய வீடு எனக் கருதப்படுகிறது
*a. விளக்கில்லாத வீடு
b. பொருளில்லாத வீடு
c. கதவில்லாத வீடு
d. வாசலில்லாத வீடு
20. சுப்ரபாரதிமணியனன் நடத்திய இதழ் எது
a. பின்னல்
b. வேட்டை
c. தண்ணீர் யுத்தம்
*d. கனவு
21. ஓரெழுத்து ஒருமொழி பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. தமிழில் 42 ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன
2. அவற்றுள் இரண்டு எழுத்துகள் மட்டும் நெடில் எழுத்துகளாகும்
*a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
22. ஓரெழுத்து ஒருமொழிகளையும் அவற்றிற்குறிய பொருளையும் பொருத்துக
a. ஏ – 1. இரைச்சி
b. கூ – 2. அம்பு
c. ஊ – 3. உயர்வு
d. சே – 4. பூமி
a. 2 1 4 3
b. 2 3 4 1
c. 2 1 4 3
*d. 2 4 1 3
23. அகரவரிசைப்படுத்துக
1. பொருள்
2. இடம்
3. காலம்
4. சினை
5. பண்பு
6. தொழில்
*a. 2 3 4 6 5 1
b. 2 4 3 6 5 1
c. 2 3 6 4 5 1
d. 1 2 3 6 5 4
24. பகுபத உறுப்புகளில் பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறுவது எது
a. சந்தி
*b. சாரியை
c. பகுதி
d. விகாரம்
25. பகாப்பதம் எத்தனை வகைப்படும்
a. 6
b. 2
c. 3
*d. 4
26. சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவை வெளிப்படுமாரு கவிதைகள் எழுதியவர் யார்
a. வானிதாசன்
b. முடியரசன்
*c. தேனரசன்
d. சுப்ரபாரதிமணியன்
27. காளமேகப் புலவர் எழுதிய நூல்களில் பொருந்தாதது எது
a. திருவானைக்கா உலா
b. சித்திரமடல்
*c. சகலகலாவல்லிமாலை
d. பரபிரம்ம விளக்கம்
28. பொருந்தாத ஓசை உடைய சொல் எது
a. பாய்கையால்
b. மேன்மையால்
*c. திரும்புகையில்
d. அடிக்கையால்
29. சித்தண்ணவாசல் என்ற இடத்தில் எவ்வகை ஓவியம் மிகுந்து காணப்படுகிறது
a. குகை ஓவியம்
b. பாறை ஓவியம்
*c. சுவரோவியம்
d. துணி ஓவியம்
30. குணமாலை யானையைக் கண்டு அஞ்சிய காட்சியை சீவகன் எதில் ஓவியமாக வரைந்தான்
a. பாறை
*b. துணி
c. சுவர்
d. ஓலை
31. “புனையா ஓவியம் புறம் போந்தன்ன”
இவ்வடி இடம்பெறும் நூல் எது
a. நெடுநல்வாடை
*b. மணிமேகலை
c. சிலப்பதிகாரம்
d. பரிபாடல்
32. தந்த ஓவியங்கள் அதிகமாகக் காணப்படும் இடம் எது
a. தமிழ்நாடு
b. ஆந்திரா
*c. கேரளா
d. கர்ணாடகா
33. பாரதியார் இந்தியா இதழில் தமிழ் மொழியில் அறிமுகம் செய்தது
a. நவீன ஓவியம்
b. தாள் ஓவியம்
c. கேலிச்சித்திரம்
*d. கருத்துப்பட ஓவியம்
34. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 1982 இல் தோற்றுவிக்கப்பட்டது
2. இதன் பரப்பளவு 1000 ஏக்கர் ஆகும்
3. இங்கு ஐந்து துறைகளும் இருபத்தைந்து புலங்களும் உள்ளன
a. 1, 2 சரி
b. 2, 3 சரி
c. கூற்றுகள் 2, 3 சரி
*d. கூற்று 2 மட்டும் சரி
35. எந்த நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் செயல்பட்டுவருகிறது
a. கீழ்த்திசை நூலகம்
*b. கன்னிமாரா நூலகம்
c. உ.வே.சா. நூலகம்
d. சரஸ்வதிமகால் நூலகம்
36. வள்ளுவர் கோட்டத்தில் செதுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முப்பால் வகைகளை அவை செதுக்கப்பட்டுள்ள நிறங்களோடு பொருத்துக
a. அறத்துப்பால் – 1. கருமை
b. பொருட்பால் – 2. வெண்மை
c. இன்பத்துப்பால் – 3. செம்மை
*a. 1 2 3
b. 2 1 3
c. 3 2 1
d. 2 3 1
37. ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் அமைந்த கவிதை தேனரசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
a. வெள்ளை ரோஜா
b. மண்வாசல்
*c. பெய்து பழகிய மேகம்
d. குயில்
38. விகுதி பெறாத தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க
a. கல்வி
b. போக்கு
*c. ஆடு
d. வருகை
39. “மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்”
இக்குறளில் இடம்பெறும் மோனை வகை எது
*a. இணை மோனை
b. பொழிப்பு மோனை
c. கூழை மோனை
d. முற்று மோனை
40. “மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்”
இக்குறளில் இடம்பெறும் எதுகை வகை எது
a. இணை எதுகை
b. பொழிப்பு எதுகை
c. மேற்கதுவாய் எதுகை
*d. கீழ்க்கதுவாய் எதுகை
Unit 8 வினாக்கள்
41, கீழ்கண்டவற்றுள் எவை சரியானவை.?
அ, 1852,சென்னை வாசிகள் சங்கம் தொடங்கப்பட்டது இவ்வமைப்பு கஜ்லு லட்சுமி நரசு மற்றும் மானிக்கவாசனார் மற்றும் அவரை சார்ந்தோரால் தொடங்கப்பட்டது.
ஆ, இவ்வமைப்பு தனிப்பட்ட நபரின் விருப்பத்தை காட்டிலும் பொதுமக்களின் குறைகளை அனைவருக்கும் தெரிவித்தது, இவ்வமைப்பில் பெரும்பாலும் வனிகர்களே பங்கு பெற்றனர்.
இ, இவ்வமைப்பின் முயற்ச்சியால் சித்தரவாதை சட்டம் ஒழிக்கப்பட்டது,
பதில்கள்.
1, அ, ஆ, இ, ஆகியவை சரி .
2, அ, ஆ, ஆகியவை சரி.
*3, ஆ, இ, ஆகியவை சரி.
4, அ, இ, ஆகியவை சரி.
42, கீழ்கண்டவற்றுள் தவறானது எது.?
அ, சென்னை வாசிகள் சங்கம், 1852.
ஆ, சென்னை சுதேசி சங்கம், 1852.
இ, மேட்ராஷ் நேட்டிவ் அசோசிஏசன், 1852.
*ஈ, சென்னை மதராசி சங்கம், 1852.
43, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்.?
அ, முத்துசாமி,1867.
ஆ, முத்துசாமி, 1876.
*இ. முத்துசாமி, 1877.
ஈ, முத்துசாமி , 1878.
44, பத்திரிக்கை வளர்ச்சி பற்றிய கூற்றுகளில் சரியானது எது.?
அ, சுப்ரமனியம் மற்றும் வீரராகவாச்சாரி மற்றும் நன்பர்களால் 1878 ஆம் ஆண்டு ‘the hindu ‘ பத்திரிக்கை தொடங்கப்பட்டது.
ஆ, 1893 ஆம் ஆண்டு சுப்ரமனியம் சுதேசமித்ரன் என்ற தமிழ் பருவ இதழை தொடங்கினார் பின்னாளில் அது 1899 ஆம் ஆண்டு நாளிதழாக மாறியது.
பதில்கள்.
அ, இரண்டு கூற்றுகளும் சரி.
ஆ, இரண்டு கூற்றுகளும் தவறு.
*இ, கூற்று ஒன்று சரி,இரண்டு தவறு.
ஈ, கூற்று ஒன்று தவறு,இரண்டு சரி.
45, கீழ்கண்டவற்றுள் சரியானது எது.?
அ, வீரராகவாச்சாரி,அனந்தாசார்லு,ரங்கையா, ஆகியோரால் 1884 ஆம் ஆண்டு சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்டது .
ஆ, இவ்வமைப்பின் முதல் தலைவர் ரங்கையா மற்றும் முதல் செயலர் வீரராகவாச்சாரி, மேலும் இவ்வமைப்பு குறிப்பிட்ட இடைவேளிகளில் அரை கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் பிரச்சனைகள் பற்றி விவாதித்தது.
இ, குடிமைப்பனிகளுக்கான தேர்வூ இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஒரெ நேரத்திலும் நடத்தப்படவேண்டும் , மற்றும் லண்டனில் உள்ள இந்திய கவுன்சிலை மூடவேண்டும் என்று இவ்வமைப்பு கோரிக்கை விடுத்தது.
ஈ, இரானுவ குடியியல் நிர்வாக செலவுகளை குறைப்பது, வரிகளை குறைப்பது ஆகியவை இவ்வமைப்பின் முக்கிய கோரிக்கை ஆகும்.
பதில்கள்.
1, அ, ஆ, இ, ஈ, ஆகியவை சரி.
2, அ, ஆ, ஈ, ஆகியவை சரி.
*3, அ, இ, ஈ, ஆகியவை சரி.
4, அ, ஆ, இ, ஆகியவை சரி.
46, சென்னை மகாஜான சபை உப்பு சத்யஆகிரகம் தலமை ஏற்று நடத்திய பகுதி எது??.
அ, ஜார்ஜ்டவுன் சென்னை.
ஆ, உயர்நீதிமன்றம்.
இ, யானைகவுனி.
ஈ, கடற்கரை பகுதி.
பதில்கள்.
அ, 1,3, சரி.
ஆ, 2, 4, சரி.
இ, 1,2,3, சரி.
*ஈ, 1,2,3,4, சரி.
47, சென்னை மஹாஜன சபை பொன்விழா ஆண்டில் கலந்துகொண்டவர் யார்?.
அ, மோதிலால் நேரு.
ஆ, சித்தரஞ்ஜன் தாஷ்.
*இ, ஜவகர்லால் நேரு.
ஈ, ஜின்னா.
48, இந்திய தேசிய காங்கிரஷ் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று பிரிந்த மாநாடு எது?.
அ, கொல்கத்தா.
ஆ, வங்காளம்.
*இ, சூரத்.
ஈ, சென்னை
49) சென்னை மஹாஜன சங்கத்தின் வரவேற்ப்பினை எற்க மறுத்த வைசிராய் யார் ,எற்க மறுத்த ஆண்டு ?.
அ) ரிப்பன் பிரபு, 1895
ஆ) கர்சன் பிரபு, 1895
* இ) எல்ஜின் பிரபு, 1895.
ஈ) கானிங் பிரபு, 1895.
50) பக்ருதின் தியாப்ஜின் அலி தலமை வகித்த காங்கிரஷ் மாநாடு எது, மற்றும் அம்மாநாடு நடைபெற்ற இடம்?.
அ முதலாவது, ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
ஆ ) இரண்டாவது, ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
* இ) மூன்றாவது , ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
ஈ) நான்காவது , ஆயிரம் விலக்கு பகுதி,மக்கிஷ் தோட்டம்.
51, மிதவாதிகள் பற்றிய கூற்றுகளுள் சரியானது எது?.
அ, அரசியலமைப்பின்மீது நம்பிக்கை கொள்ளுதல் மற்றும் அரைகூட்டங்கள் நடத்துதல்.
ஆ, தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தல் குறிப்பானை மூலம் இறைஞ்சுதல் .
இ, சீனிவாச சாஷ்திரி,நடேசன்,மாதவராவ்,சுப்ரமனியம், ஆகியோர் தமிழ்நாட்டின் குறிப்பிடதக்க மிதவாத தலைவர்கள் ஆவர்.
பதில்கள்,
அ, 1,2, சரி.
*ஆ, 1,2,3, சரி.
இ, 2,3, சரி.
ஈ, 1, 3, சரி.
52, கீழ்கண்டவர்களுள் பொருந்தாத நபரை கண்டுபிடி?.
*அ, வா,வே,சு.
ஆ, வா,உ,சி.
இ, சுப்ரமனிய பாரதி.
ஈ, சுப்ரமனிய சிவா.
53, தென்நாட்டு திலகர் என்று அழைக்கப்பட்டவர் யார்?.
அ, பாரதியார்.
ஆ, சுதந்திரானந்தா.
*இ, வல்லியப்பன் உலகநாதன் சிதம்பரம்.
ஈ, வரகநேரி வேங்கட சுப்ரமனி.
54) பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?.
அ) அரவிந்தர்,
* ஆ) நீலகண்டபிரம்மசாரி,
இ) வா.வே.சு. அய்யர்,
ஈ) சென்பகராமன்,
55) 1911 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் நாள் வாஞ்சிநாதன் யாரை சுட்டுக்கொன்றார்?.
அ) மதுரை ஆட்சியர் ,ஆஷ் தூறையை,
* ஆ) நெல்லை ஆட்சியர் , ஆஷ் தூறையை,
இ) சென்னை ஆட்சியர் ஆஷ்தூறையை,
ஈ) புதுக்கோட்டை ஆட்சியர் ,ஆஷ் தூறையை,
56) பாண்டிச்சேரியில் தர்மாலையம் என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுதல் ,சிலம்பம்,கழரி போன்ற பயிற்சியை வழங்கியவர் யார்?.
அ) வா.உ.சி.
ஆ) நீலகண்டர்.
* இ) வா.வே.சு.
ஈ) வாஞ்சிநாதன்.
57) கீழ்கண்ட பத்திரிக்கைகளில் பொருத்தம்மில்லாதது எது?.
அ) பாலபாரதம்.
ஆ) சூர்யோதயம்.
இ) புரோ இந்தியா.
* ஈ) விவேக பானு.
58) பென்களுக்காக பாரதியார் நடத்திய பத்திரிக்கை எது?.
அ) விஜெயா.
* ஆ) சக்கரவர்தினி.
இ) இந்தியா.
ஈ) சுதேச கீதங்கள்.
59, புரட்ச்சிகரவாதிகளின் தமிழக தலைவர் யார்?.
அ, அரவிந்தர்.
*ஆ, நீலகண்டபிரம்மசாரி.
இ, வா,வே,சு, அய்யர்.
ஈ, பாரதியார்.
60, பாரத தாய் பெற்ற தவ புதழ்வர்கள் என்று குறிப்பிடப்பட்டது?.
*அ, காலியோ லாவோ.
ஆ, புரட்ச்சி,புத்தகம்.
இ, சுதேசி,புரட்ச்சி.
ஈ, பத்திரிக்கை,எழுத்து.
நடப்பு நிகழ்வுகள்
61) உலகின் முதல் மூங்கில் சாலையோர தடுப்பு எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
A) தமிழ்நாடு
B) கேரளா
*C) மகாராஷ்டிரா
D) ஒடிசா
62) இந்திய விமானப்படையின் தாக்குதல் பிரிவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் தளபதி யார்?
A) அஜிஷா
B) ரஷ்யா சென்
C) ஹர்ஷிதா ஒவ்வெட்டி
*D) ஷாலிஸா தாமி
63) “யாவ்ஷாங்” திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
A) அருணாச்சல பிரதேசம்
B) பிகார்
*C) மணிப்பூர்
D) மேகாலயா
64) தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் எந்த மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது?
*A) சென்னை
B) கோவை
C) மதுரை
D) திருச்சி
65) எத்தனையாவது ‘உலகத் தமிழர் பொருளாதார மாநாடு’ துபாயில் நடைபெற்றது?
A) 5
*B) 9
C) 13
D) 4
66) “ஷின்யு மைத்திரி” என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு விமானப்படை பயிற்சி?
A) இந்தியா & அமெரிக்கா
B) இந்தியா & இஸ்ரேல்
C) இந்தியா & ஆஸ்திரேலியா
*D) இந்தியா & ஜப்பான்
67) மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட செயலி எது?
*A) சக்க்ஷம்
B) சுவிதா
C) லெட்ஸ் வெய்ட்
D) ரைஸ்
68) “விமான போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு” மத்திய அரசால் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A) புவனேஸ்வர்
*B) ஹைதராபாத்
C) லக்னோ
D) சென்னை
69) எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 3
B) 7
C) 10
*D) 14
70) ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது பெற்ற இந்தியர் யார்?
A) இனிய
*B) குகேஷ்
C) பிரகியானந்தா
D) ரக்சன்
அறிவியல் வினாக்கள்
71) லத்தின் மொழி சொல்லான —- ல் இருந்து ஆசிட் என்ற சொல் உருவானது?
A) அசிட்டா
*B) அசிட்டஸ்
C) அசிட்டோ
D) அசிட்டோஸ்
72) பின்வரும் கூற்றுகளை ஆராய்க :
1) அமிலம் என்பது சுவையற்ற நீர்மக்கரைசல்.
2) அமிலம் என்பதற்கு அமெரிக்க நாட்டு அறிஞரான அக்கீமியஸ் 1884 ஆம் ஆண்டு விளக்கம் அளித்துள்ளார்.
3) ஒரு பொருள் நீரில் கரைக்கப்படும் பொழுது ஹைட்ரஜன் அயனியையோ அல்லது ஹைட்ரோனியம் அயனியையோ தருமாயின் அது அமிலம் எனப்படும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
*C) கூற்று 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
73) பின்வரும் பொருட்களையும் அவற்றில் உள்ள அமிலங்களையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக :
a) ஆப்பிள் – 1) சிட்ரிக் அமிலம்
b) எலுமிச்சை – 2) மாலிக் அமிலம்
c) திராட்சை – 3) அசிட்டிக் அமிலம்
d) வினிகர் – 4) டார்டாரிக் அமிலம்
A) 1 2 3 4
*B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 2 4 1 3
74) பின்வரும் உணவுப் பொருட்களில் ஆக்சாலிக் அமிலம் இடம்பெற்றுள்ளதை தேர்வு செய்க?
A) நார்த்தங்காய்
B) ஆரஞ்சு பழம்
C) திராட்சை
*D) தக்காளி
75) பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க :
*A) அஸ்கார்பிக் அமிலம் – அண்ணாச்சி பழம்
B) டார்டாரிக் அமிலம் திராட்சை
C) டானிக் அமிலம் – தேநீர்
D) ஃபார்மிக் அமிலம் – எறும்பின் கொடுக்கு
76) அசிட்டிக் அமிலத்திற்கான மூலக்கூறு வாய்ப்பாட்டினை சரியாக தேர்வு செய்க
*A) CH3, C O O H
B) H C O O H
C) C H O O3
D) H N O3
77) அனைத்து அமிலங்களிலும் இடம்பெறும் ஒரு மூலக்கூறு எது?
A) சல்ஃபர்
B) கார்பன்
*C) ஹைட்ரஜன்
D) நைட்ரஜன்
78) வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படும் அமிலம் எது?
A) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
*B) கந்தக அமிலம்
C) சிட்ரிக் அமிலம்
D) ஃபார்மிக் அமிலம்
79) H2 S O4 எனும் மூலக்கூறு வாய்ப்பாடு பின்வரும் எந்த அமிலத்துடன் தொடர்புடையது?
A) நைட்ரிக் அமிலம்
B) சிட்ரிக் அமிலம்
C) ஃபார்மிக் அமிலம்
*D) சல்ஃபியூரிக் அமிலம்
80) பின்வரும் கூற்றை காரணத்துடன் பொருத்தி விடை காண்க :
கூற்று : அமிலங்கள் கரிம அமிலம் மற்றும் கனிம அமிலம் என இருவகைப்படும்.
காரணம் : ஆப்பிள், ஆரஞ்சு போன்ற உணவுப் பொருட்களில் கரிம அமிலம் காணப்படுகிறது.
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
*C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
D) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
81) H2 S O4 என்பது எத்தனை காலத்துவ அமிலம்?
A) ஒற்றை காரத்துவம்
*B) இரட்டை காரத்துவம்
C) மும்மை காரத்துவம்
D) இவற்றில் எதுவும் இல்லை
82) பின்வரும் கூற்றுகளை ஆராய்க :
1) வலிமை மிகுந்த அமிலம் நீரில் முழுமையாக கரையும்.
2) ஹைட்ரோ குளோரிக் அமிலம் வலிமை மிகுந்த அமிலத்திற்கு உதாரணமாகும்.
3) அசிடிக் அமிலம் வலிமைகுறைந்த அமிலத்திற்கு உதாரணமாகும்.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 3 மட்டும் சரி
*D) அனைத்தும் சரி
83) மின்கலங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
A) அசிட்டிக் அமிலம்
B) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
*C) சல்ஃபியூரிக் அமிலம்
D) ஃபார்மிக் அமிலம்
84) கழிவறை சுத்திகரிப்பானில் பயன்படுத்தப்படும் அமிலம் எது?
*A) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
B) நைட்ரிக் அமிலம்
C) ஃபார்மிக் அமிலம்
D) இவற்றுள் எதுவுமில்லை
85) இரும்பு மற்றும் சில்வர் பொருட்களில் உள்ள துருவினை நீக்க பயன்படுத்தப்படும் அமிலம் எது?
*A) ஆக்சாலிக் அமிலம்
B) நைட்ரிக் அமிலம்
C) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
D) சல்ஃபியூரிக் அமிலம்
86) பின்வருவனவற்றுள் எதில் கார்பானிக் அமிலம் இடம்பெற்றுள்ளது?
A) ரொட்டி
*B) குளிர்பானங்கள்
C) தக்காளி
D) தயிர்
87) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க :
கூற்று : தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்றவற்றை கரைக்க இராஜதிராவகம் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் : ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் கலந்திருப்பதால் உலோகங்களை உருக்குகிறது.
A) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
*B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
C) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
88) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க :
1) காரம் கார்ப்பு சுவை உடையது.
2) சோடியம் ஹைட்ராக்சைடு என்பது வலிமை மிகுந்த காரத்திற்கு உதாரணமாகும்.
3) வலிமை குறைந்த காரத்திற்கு உதாரணம் கால்சியம் ஹைட்ராக்சைடு.
A) கூற்று 1 மற்றும் 3 சரி
B) கூற்று 1 மற்றும் 2 சரி
*C) கூற்று 2 மற்றும் 3 சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
89) சோப்பு தயாரிக்க பயன்படும் காரம் எது?
A) கால்சியம் ஹைட்ராக்சைடு
B) பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
*C) சோடியம் ஹைட்ராக்சைடு
D) இவற்றுள் எதுவும் இல்லை
90) பின்வருவனவற்றுள் துத்தநாக உப்பின் சுடரின் நிறம் என்ன?
A) சிவப்பு
B) மஞ்சள்
C) ஊதா
*D) பச்சை
கணித வினாக்கள்
91) ஒரு பொருளின் அடக்க விலை ரூபாய் 6,200. அதன் விற்பனை வரி 2.5%. எனில், வரி எவ்வளவு விதிக்கப்படும்?
A) 145
*B) 155
C) 125
D) 135
92) 1/3 ஆனது 5/9 ல் எத்தனை சதவீதம்?
*A) 60%
B) 30%
C) 500/3%
D) 90%
93)ஒருவர் 17 சதவீத மாம்பழங்களை விற்பனை செய்துள்ளார். அவர் 1,360 மாம்பழங்களை விற்றுள்ளார். எனில், மொத்தம் இருந்த மாம்பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A) 6,000
B) 6,640
C) 7,000
*D) 8,000
94) ஒரு எண்ணின் 35 சதவீதம் என்பது 105 எனில், அந்த எண்ணின் எவ்வளவு சதவீதம் 100 ஆக இருக்கும்.
A) 40%
B) 41%
*C) 33 1/3%
D) 37 1/2%
95) ஓர் என்னுடன் 64 ஐ கூட்டினால் அந்த எண்ணின் மதிப்பு 116 சதவீதமாக மாறுகிறது எனில், அந்த எண்ணை காண்க?
*A) 400
B) 415
C) 416
D) 800
96) ஓர் எண்ணின் 16 சதவீத மதிப்பை அந்த எண்ணுடன் கூட்டினால் 7,424 கிடைக்கிறது எனில், அந்த எண் என்ன?
A) 6,000
B) 6,200
*C) 6,400
D) 7,000
97) 36 என்பது 144 ல் எத்தனை சதவீதம்?
A) 10%
B) 20%
*C) 25%
D) 30%
98) 200 என்ற எண்ணை 18 சதவீதம் அதிகரித்தால் எந்த எண் கிடைக்கும்?
A) 136
B) 218
C) 224
*D) 236
99) அரை லிட்டர் பாலின் விலை ₹25. அதில் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது எனில், அதன் புதிய விலை என்ன?
A) 32
*B) 30
C) 35
D) 15
100) 80 பேர் சுற்றுலா செல்கின்றனர். அதில் 15 சதவீதம் பெண்கள் எனில், ஆண்கள் எத்தனை பேர்?
*A) 68
B) 12
C) 36
D) 24