ஆன்சலிவன் பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (4) வினாவிடைகள்

 

தமிழ் வினாக்கள்

I.N.M. வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

Unit 9 வினாக்கள்

கணித வினாக்கள்

குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக் கொள்க.

தமிழ் வினாக்கள்

1. “அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம்

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்”

இப்பாடல் அடிகள் யாருடையது

A. வானிதாசன்

b. பாரதிதாசன்

*c. நாமக்கல் கவிஞர்

d. பாரதியார்

2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்

A. கண்ணதாசன்

b. பாரதிதாசன்

*c. வே. இராமலிங்கனார்

d. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்

3. மரபுநிலை திரிதல் எதற்கு இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது

A. உரைநடை

*b. செய்யுள்

c. கட்டுரை

d. சிறுகதை

4. இவ்வுலகம் எதனாலான கலவை என்று தொல்காப்பியம் கூறுகிறது

A. ஐம்பால்கள்

b. இரு திணைகள்

*c. ஐம்பூதங்கள்

d. மேற்கூறிய அனைத்தும்

5. தொல்காப்பியம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் கண்டறிக

1. தொல்காப்பியம் ஐந்து இலக்கண நூலாகும்

2. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டுள்ளது

A. கூற்று 1 மட்டும் சரி

*b. கூற்று 2 மட்டும் சரி

c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

6. . விலங்குகளின் பெயர்களோடு அவற்றின் இளமைப் பெயர்களைப் பொருத்துக

A. புலி – 1. குருளை

b. சிங்கம் – 2. கன்று

c. யானை – 3. குட்டி

d. கரடி – 4. பறழ்

*A. 4 1 2 3

b. 4 3 1 2

c. 1 3 2 4

d. 4 2 3 1

7. விலங்குகளின் பெயர்களும்  அவற்றின் ஒலிமரபுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறான இணையைக் காண்க

*A. மாடு – கத்தும்

b. கரடி – கத்தும்

c. யானை – பிளிறும்

ஈ?. சிங்கம் – முழங்கும்

8. மொழியின் முதல் நிலையாகக் கருதப்படுவது எது

1. பேசுதல்

2. எழுதுதல்

3. கேட்டல்

4. படித்தல்

A. 1, 2

*b. 1, 3

c. 2, 4

d. 3, 4

9. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்

திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்”

இந்நூற்பா இடம்பெறும் இலக்கண நூல் எது

A. தொல்காப்பியம்

*b. நன்னூல்

c. தண்டியலங்காரம்

d. யாப்பருங்கலம்

10. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தமிழ் மொழியின் கிளை மொழி அல்லாதது எது

A. தெலுங்கு

b. கன்னடம்

c. மலையாளம்

*d. வடமொழி

11. அதிர அடிச்சா உதிர விளையும் என்னும் சொலவடையின் மூலம் வெளிப்படும் உட்பொருள் என்ன

A. சோம்பல்

*b. முயற்சி

c. பிடிவாதம்

d. மரியாதை

12. குற்றியலுகம் அல்லாத சொல்லைத் தேர்ந்தெடுக்க

A. புகு

b. பசு

c. ஏழு

*d. இவை அனைத்தும்

13. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அசைச்சொல் எது

*A. காரம்

b. கரம்

c. கான்

d. கேனம்

14. நெடில்தொடர் குற்றியலுகரம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைக் காண்க

1. தனி நெடிலைத் தொடர்ந்து வரும்  குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க்  குற்றியலுகரம்’ எனப்படும்

2. இவை ஈரெழுத்துச் சொற்களாக  மட்டும் அமையும்

A. கூற்று 1 மட்டும் சரி

b. கூற்று 2 மட்டும் சரி

*c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி

d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு

15. குற்றியலுகரச் சொற்களை சரியான வகைகளோடு பொருத்துக

A. மாசு – 1. நெடில்தொடர் குற்றியலுகரம்

b. ஒன்பது – 2. இடைத்தொடர் குற்றியலுகரம்

c. உப்பு – 3. வன்தொடர் குற்றியலுகரம்

d. மூழ்கு – 4. உயிர்த்தொடர் குற்றியலுகரம்

A. 1 2 3 4

*b. 1 4 3 2

c. 1 3 2 4

d. 1 4 2 3

16. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அஃறிணைச் சொல் எது

A. முகிலன்

b. கயல்விழி

*c. கடல்

d. தலைவி

17. அகரவரிசைப்படுத்துக

1. குறிஞ்சி

2. முல்லை

3. மருதம்

4. நெய்தல்

5. பாலை

A. 1 2 3 4 5

b. 1 3 2 4 5

c. 1 5 2 3 4

*d. 1 4 5 3 2

18. எழுத்திலக்கணம் என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லைத் தேர்க

A. Phonology

b. Linguistics

c. Puppetry

*d. Orthography

19. செஞ்சொல் என்ற சொல்லின் பொருள் என்ன

A. தவறான சொல்

b. சிவப்பான சொல்

c. இன்சொல்

*d. திருந்திய சொல்

20. வானிதாசன் அவர்களுக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயர் எது

A. கவிஞரேறு

b. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

*c. பாவலரேறு

d. பாவலர்மணி

21. ஓடை என்ற தலைப்பில் அமைந்த பாடல் வானிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது

A. கொடிமுல்லை

*b. தொடுவானம்

c. எழிலோவியம்

d. குழந்தை இலக்கியம்

22. காட்டை இயற்கை விடுதி எனத் தனது கவிதையில் குறிப்பிடுபவர் யார்

A. வானிதாசன்

b. சுரதா

c. இராசகோபாலன்

*d. 2, 3

23. காடு என்ற பொருள் தராத சொல் எது

A. அழுவம்

b. பழவம்

*c. வள்ளை

d. விடர்

24. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி எங்கு அமைந்துள்ளது

A. திருநெல்வேலி

b. முண்டந்துறை

*c. மேட்டுப்பாளையம்

d. சென்னை

25. வனமகன் என்ற சிறப்பைப் பெற்ற ஜாதவ்பயெங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்

A. டெல்லி

*b. அஸ்ஸாம்

c. உத்திரப்பிரதேசம்

d. தமிழ்நாடு

26. ஐகாரக்குறுக்கம் பற்றிய சரியான கூற்றைக் காண்க

1. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

2. ஐகாரம் சொல்லின் இடையில் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்

3. ஐகாரம் சொல்லின் இறுதியில் வரும்போது அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

*A. 1, 2 சரி

b. 1, 3 சரி

c. 2, 3 சரி

d. அனைத்தும் சரி

27. வலம் வந்தான் என்ற தொடரில் மகர மெய் ஒலிக்கும் மாத்திரையின் அளவு என்ன

A. ஒரு மாத்திரை

b. அரை மாத்திரை

c. இரண்டு மாத்திரை

*d. கால் மாத்திரை

28. ஆய்தக் குறுக்கச் சொல்லைத் தேர்ந்தெடுக்க

A. அஃது

b. எஃகு

*c. முஃடீது

d. இவை அனைத்தும்

29. “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

     குறுகத் தரித்த குறள்”

என்று திருக்குறளின் பெருமையைப் போற்றுபவர் யார்

A. நக்கீரர்

*b. ஔவையார்

c. பரனர்

d. கபிலர்

30. “ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு”

இக்குறளில் அமைந்துள்ள மோனை எது

A. இணை மோனை

*b. பொழிப்பு மோனை

c. ஒரூஉ மோனை

d. முற்று மோனை

31. இழிந்தவரிடத்திலும் உள்ள செல்வமாக வள்ளுவர் குறிப்பிடுவது

A. அருட்செல்வம்

*b. பொருட்செல்வம்

c. மேற்கூறிய இரண்டும்

d. மேற்கூறிய இரண்டும் இல்லை

32. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் யார்

A. கடியலூர் உருத்திரங்கண்ண னார்

*b. தொண்டைமான் இளந்திரையன்

c. கரிகால் பெருவளத்தான்

d. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

33. மாட ஒள்ளெரி

என்ற சொல்லின் பொருள் என்ன

A. கப்பல்

b. காற்று

*c. கலங்கரை விளக்கம்

d. அழகு

34. பெருங்கடல் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

A. பெரு + கடல்

b. பெரிய + கடல்

*c. பெருமை + கடல்

d. பெருங் + கடல்

35. பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்பட்டன என்பதை விளக்கும் நூல் எது

A. தொல்காப்பியம்

*b. பட்டினப்பாலை

c. திருக்குறள்

d. அகநானூறு

36. தமிழர்கள் கப்பல் கட்டுவதற்குறிய மரங்களாகத் தேர்ந்தெடுத்தவற்றுள்  கப்பலின் நீர்மட்ட வைப்பிற்கு பயன்படுத்திய மரங்களில் தவறானது  எது

A. வேம்பு

 b. இலுப்பை

c. நாவல்

*d. தேக்கு

37. தமிழர்கள் கப்பலில் பயன்படுத்தியதாகக் கப்பல் சாத்திரம் குறிப்பிடும் ஆயுதம் எது

 A. நங்கூரம்

b. பருமல்

c. சுக்கான்

*d. சமுக்கு

38. “கலம் தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரை சேர்க்குந்து”

இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது

A. பரிபாடல்

*b. புறநானூறு

c. அகநானூறு

d. பட்டினப்பாலை

39. ஜூல்ஸ் வெர்ன் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க

1. அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன்

2. இவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர்

3. இவர் எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார்

A. கூற்று 1, 2 சரி

*b. கூற்று 1, 3 சரி

c. கூற்று 2, 3 சரி

d. அனைத்தும் சரி

40. இலக்கியவகைச் சொற்களை அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக

A. இயற்சொல் – 1. பெற்றம்

b. திரிசொல் – 2. இரத்தம்

c. திசைச்சொல் – 3. அழுவம்

d. வடசொல் – 4. சோறு

*A. 4 3 1 2

b. 4 3 2 1

c. 3 4 2 1

d. 2 4 1 3

I.N.M. வினாக்கள்

41) இரயத்துவாரி முறையில் நிலத்திற்கு உரிமையாளராக இருந்தவர்கள் யார்

A) ஜமீன்தார்கள்

*B) விவசாயிகள்

C) கிராமத் தலைவர்

D) பிரிட்டீஷார்

42) ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை முதலில் நடைமுறைப் படுத்தியவர் யார்

A) வாரன் ஹேஸ்டிங்ஸ்

B) காரன்வாலிஸ்

C) வெல்லெஸ்லி

*D) ராபர் கிளைவ்

43) நிலையான நிலவரி திட்டம் பற்றிய சரியான கூற்றைக் கண்டறி

A) நிலையான நிலவரி திட்டத்தை காரன்வாலிஸ் நடைமுறைப் படுத்தினார்

B) இத்திட்டம் 1793 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது

C) இது பத்து ஆண்டு நில வருவாய் திட்டம் ஆகும்

*D) அனைத்தும் சரி

44) சித்து மற்றும் கங்கு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கலகம் எது

A) இண்டிகோ கலகம்

*B) சந்தால் கலகம்

C) முண்டாக்கள் கலகம்

D) பாப்னா கலகம்

45) ஆங்கில அரசால் எந்த ஆண்டு அவுரி ஆணையம் அமைக்கப்பட்டது

A) 1859

*B) 1860

C) 1861

D) 1862

46) பாப்னா கலகம் யாரால் தொடங்கப்பட்டது

A) விஸ்ணு சரன் விஸ்வாஸ்

B) சித்து

*C) கேசவ சந்திரராய்

D) பிர்சா முண்டா

47) தக்காண கலகம் பற்றிய தவறான கூற்றைக் கண்டறி

1) தக்காணக் கலகம் 1875 ஆம் ஆண்டு தொடங்கியது

2) இக்கலகம் படிப்படியாக 33 கிராமங்களுக்குப் பரவியது

3) இராணுவம் வரவழைக்கப்பட்டு இப்புரட்சி கட்டுப்படுத்தப்பட்டது

4) இப்புரட்சியின் விளைவாக தக்காண விவசாயிகள் மீட்புச் சட்டம் இயற்றப்பட்டு அதன்மூலம் விவசாயிகளின் குறைகள் கலையப்பட்டன

A) 1 3 சரி

B) 1 2 3 சரி

C) 1 3 4 சரி

*D) 1 2 3 4 சரி

48) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : பஞ்சாப் பகுதிகளில் எந்த ஒரு புரட்சி நடைபெறுவதையும்  ஆங்கில அரசு விரும்பவில்லை

காரணம் : இப்பகுதியிலிருந்துதான் ஆங்கில இராணுவத்திற்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

C) கூற்று சரி. காரணம் தவறு

D) கூற்று தவறு. காரணம் சரி

49) விவசாயிகள் கலகங்களையும் அவை நடைபெற்ற ஆண்டுகளையும் பொருத்துக

A) சந்தால் கலகம் – 1) 1855 1856

B) தக்காண கலகம் – 2) 1875

C) பாப்னா கலகம் – 3) 1873

D) இண்டிகோ கலகம் – 4) 1859 1860

*A) 1 2 3 4

B) 1 4 2 3

C) 1 3 2 4

D) 1 3 4 2

50) சம்பரான் விவசாயச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது

*A) 1918

B) 1919

C) 1920

D) 1921

51) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்தது எது

A) துணைப்படைத் திட்டம்

B) வாரிசிழப்புக் கொள்கை

C) அயோத்தி இணைப்பு

*D) கொழுப்புத் தடவப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள்

52) 1857 ஆம் ஆண்டு கலகம் முதலில் எந்த இடத்தில் தோன்றியது

A) மீரட்

B) கான்பூர்

*C) பாரக்பூர்

D) டெல்லி

53) 1857 ஆம் ஆண்டு புரட்சியின் அடையாளமாக விளங்கியவர் யார்

A) பகத்கான்

*B) இரண்டாம் பகதூர்ஷா

C) மங்கள் பாண்டே

D) ஜான்ஸி ராணி

54) ஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி 1857 ஆம் ஆண்டு புரட்சியில் கலந்துகொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் யார்

A) மங்கள் பாண்டே

B) இரண்டாம் பகதூர்ஷா

*C) ராணி லட்சுமிபாய்

D) தாந்தியா தோப்

55) கலகம் நடைபெற்ற இடங்களையும் தலைமைவகித்த இந்தியத் தலைவர்களையும் பொருத்துக

a) கான்பூர் – 1) ராணி லட்சுமிபாய்

b) ஜான்ஸி – 2) நானா சாகிப்

c) குவாலியர் – 3) கான் பகதூர் கான்

d) பரேலி – 4) தாந்தியா தோபே

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 2 3 1 4

*D) 2 1 4 3

56) டெல்லி அடக்கப்பட்ட பிறகு இரண்டாம் பகதூர்ஷா நாடு கடத்தப்பட்ட இடம் எது

A) கல்கத்தா

B) பர்மா

*C) ரங்கூன்

D) நேபாளம்

57) 1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களில் தவறானது எது

A) சரியான ஒருங்கிணைப்பு இல்லாதது

B) பொதுவான திட்டம் இல்லாதது

C) நவீன ஆயுதங்கள் மற்றும் தொழிள்நுட்ப வசதி இல்லாதது

*D) அதிகப்படியான மக்கள் பங்கேற்றது

58) 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தில் கலந்துகொண்ட இந்தியத் தலைவர்களையும் அவர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரிகளையும் பொருத்துக

a) இரண்டாம் பகதூர்ஷா – 1) ஜான் நிக்கல்சன்

b) பேகம் ஹஸ்ரத் மகால் – 2) காலின் கேம்பெல்

c) நானாசாகிப் – 3) ஹென்ரி லாரன்சு

d) கன்வர்சிங் – 4) வில்லியம் டெய்லர்

A) 1 2 3 4

B) 1 4 2 3

*C) 1 3 2 4

D) 1 2 4 3

59) 1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தை ஒரு திட்டமிடப்பட்ட தேசிய சுதந்திரப் போர் என்று தனது நூலில் விவரித்தவர் யார்

A) ஆர்.சி. மஜுந்தார்

*B) வி.டி. சவார்க்கர்

C) எட்வர்டு ஜான் தாம்சன்

D) எஸ்.என். சென்

60) இந்தியாவில் பண்ணை முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு

) 1823

*B) 1833

C) 1843

D) 1853

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

61) குவாட் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் தவறானது எது?

A) இந்தியா

*B) ரஷ்யா

C) ஆஸ்திரேலியா

D) ஜப்பான்

62) முத்ரா திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A) மார்ச் 16, 2016

B) ஏப்ரல் 4, 2014

C) ஏப்ரல் 1, 2015

*D) ஏப்ரல் 8, 2015

63) “சோனியா கோகனி” கீழ்க்கண்ட எந்த உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்?

A) அஸ்ஸாம்

B) அலகாபாத்

*C) குஜராத்

D) கௌஹாத்தி

64) ‘ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்’ கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

*A) துப்பாக்கி சுடுதல்

B) கார்பந்தயம்

C) நீளம் தாண்டுதல்

D) பேட்மிட்டன்

65) இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள கிராமங்களின் விரிவான மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் எது?

A) பொலிவான கிராமங்கள் திட்டம்

B) எஎல்லையோர கிராமங்கள் திட்டம்

*C) ஒளிரும் கிராமங்கள் திட்டம்

D) மிளிரும் இந்தியா

66) இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?

*A) 2

B) 3

C) 5

D) 1

67) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) பிப்ரவரி 21

B) பிப்ரவரி 22

C) பிப்ரவரி 23

*D) பிப்ரவரி 24

68) அனைத்து புதைசாக்கடைகளிலும் கழிவுகளை அகற்ற ரோபோவை பயன்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?

*A) கேரளா

B) கர்நாடகா

C) குஜராத்

D) உத்திர பிரதேசம்

69) சி – விசில் (C – VIGIL) என்ற செயலியை கீழ்க்கண்ட எந்த அமைப்பு உருவாக்கியுள்ளது?

A) இந்திய ரிசர்வ் வங்கி

*B) இந்திய தேர்தல் ஆணையம்

C) அமலாக்கத்துறை

D) இந்திய ராணுவம்

70) 2023 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?

A) கர்நாடகா

B) கேரளா

C) மகாராஷ்டிரா

*D) சௌராஷ்டிரா

Unit 9 வினாக்கள்

71)  ‘An uncertain Glory’ புத்தகத்திற்கு நோபல் பரிசு பெற்ற அறிஞர் யார்?

A. மெகபூப்- உல்- ஹிக்

B. ஆல்பிரட் மார்ஷல்

*C. அமர்த்தியா சென்

D. J.M. கீன்ஸ்

72) மனிதவள மேம்பாட்டு குறியீடு 2022-ல் முதல் இடம் பிடித்த நாடு எது?

A. நார்வே

*B. ஸ்விட்சர்லாந்து

C. டென்மார்க்

D. அயர்லாந்து

73) பொருத்துக

 மாநிலங்கள்  – கல்வியறிவு விகிதம் % (2011)

 a) ஆந்திரப் பிரதேசம் – 1. 75.36

 b) கேரளா – 2. 80.09

 c) கர்நாடகா – 3. 94

 d) தமிழ்நாடு – 4. 67.02

 A. 2 4 1 3

 *B. 4 3 1 2

 C. 3 1 4 2

 D. 4 2 3 1

74) மனிதவள மேம்பாட்டு குறியீடு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

A. 1998

B. 1991

C. 1993

*D. 1990

75) பொருத்துக

a) தேசியப் பசுமை தீர்ப்பாய சட்டம் – 1. 2002

b) பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம் – 2. 1980

c) சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் – 3. 2010

d) வன (பாதுகாப்பு) சட்டம் – 4. 1986

A. 4 1 2 3

*B. 3 1 4 2

C. 2 3 4 1

D. 3 4 1 2

76) செய்திறன் குறியீட்டு எண் (PQLI) பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை கண்டறிக

கூற்று 1 : 1 லிருந்து 100 வரையிலான எண்களுக்குள் இருக்கும், எண் 1 என்பது ஒரு நாட்டின் மோசமான செயல்பாட்டை குறிக்கும். 100 என்பது மிகச் சிறப்பான செயல்பாட்டை குறிக்கும்.

கூற்று 2 : எடுத்துக்காட்டாக, எதிர்பார்க்கப்படும் ஆயுளுக்கான குறியீட்டில் மேல் எல்லையான 100 என்பது 77 வருட ஆயுளுக்கு வழங்கப்படுகிறது.

A. கூற்று 1 சரி கூற்று 2 தவறு

B. கூற்று 2 சரி கூற்று 1 தவறு

C. கூற்று இரண்டும் தவறு

*D. கூற்று இரண்டும் சரி

77) ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு?

A. மொத்த நாட்டு உற்பத்தி

B. நிகர நாட்டு உற்பத்தி

*C. மொத்த உள்நாட்டு உற்பத்தி

D. நிகர உள்நாட்டு உற்பத்தி

78) காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வன உயிர்கள் மற்றும் இயற்கை சூழலை பேணவும், மேம்படுத்தவும் கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய அரசியலமைப்பின் பிரிவு வலியுறுத்துகிறது?

*A. 51A (g)

B. 51A (d)

C. 51A (i)

D. 51A (f)

79) மனிதவள மேம்பாட்டு குறியீட்டை நாடுகளுடன் பொருத்துக

a) நேபாளம்  – 1. 79

b) சீனா – 2. 73

c) இந்தியா –  3. 143

d) இலங்கை – 4. 132

A. 3 2 1 4

B. 4 2 1 3

*C. 3 1 4 2

D. 2 3 4 1

80) கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க:

கூற்று 1 : தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென் மாநிலங்களில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

கூற்று 2 : தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசியச் சராசரியை விட அதிகமாக உள்ளது.

கூற்று 3 : தமிழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவில் மிக உயர்ந்ததாகும்.

A. கூற்று 1, 2 சரி கூற்று 3 தவறு

B. கூற்று 2 மட்டும் சரி

*C. கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு

D. அனைத்தும் சரி

81) இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும் இதன் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A. மும்பை

*B. புதுடெல்லி

C. சென்னை

D. கொல்கத்தா

82) பின்வருவனவற்றுள் மனித மேம்பாட்டு குறியீட்டு அட்டவணையில் தமிழ்நாட்டில் உள்ள முதல் நிலையில் இருக்கும் ஐந்து மாவட்டங்களை வரிசைப்படுத்துக.

1. விருதுநகர்

2. சென்னை

3. கன்னியாகுமரி

4. காஞ்சிபுரம்

5. தூத்துக்குடி

A. 2 4 1 3 5

B. 3 5 4 2 1

C. 5 4 1 2 3

*D. 3 1 5 2 4

83) பின்வரும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று 1 : பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி அளித்தல் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

கூற்று 2 : 1991 – 1992 ஆம் ஆண்டில் ரூ.410 கோடியாக இருந்தது, 2015 – 16 இல் ரூ.8245.41 கோடியாக அதிகரித்தது.

A. கூற்று 1 மட்டும் சரி

*B. கூற்று இரண்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. கூற்று இரண்டும் தவறு

84) அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் அதிக அளவு _______ வாயுக்களை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.

A. நைட்ரஜன்

*B. கார்பன் டை ஆக்சைடு

C. ஹைட்ரஜன்

D. கார்பன் மோனாக்சைடு

85) கீழ்க்கண்டவற்றுள் உலக வங்கியின் அறிக்கையின்படி, நாடுகளின் வருமான அளவீடுகளை பொருத்துக.

நாடுகளின் வகைகள் தலா வருமானம் (அமெரிக்க டாலரில்)

a) குறைந்த வருவாய் – 1. 3956 – 12,235

b) குறைந்த நடுத்தர வருவாய் – 2. <1005

c) உயர் நடுத்தர வருவாய் – 3. >12,235

d) உயர்ந்த வருவாய் – 4. 1006 – 3995

A. 4 1 2 3

B. 3 2 4 1

*C. 2 4 1 3

D. 4 3 1 2

86) பொருத்துக

a) நிகர நாட்டு உற்பத்தி – 1.PCI

b) தனிநபர் வருமானம் – 2. PPP

c) வாங்கும் திறன் சமநிலை – 3. HDI

d) மனிதவள மேம்பாட்டு குறியீடு – 4. NNP

*A. 4 1 2 3

B. 3 2 4 1

C. 2 1 4 3

D. 3 1 2 4

87) செய்திறன் குறியீட்டு எண்ணை (PQLI) உருவாக்கியவர் யார்?

A. அமர்த்தியா சென்

*B. மோரிஸ் டி. மோரிஸ்

C. மெகபூப்- உல்- ஹிக்

D. லையனல் ராபீன்ஸ்

88) பொருத்துக

மாநிலங்கள் – பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு தலா பெண்களின் எண்ணிக்கை) (2011)

a) உத்திரபிரதேசம் – 1. 919

b) குஜராத் – 2. 912

c) தமிழ்நாடு – 3. 1084

d) கேரளா – 4.996

A. 3 2 1 4

B. 4 2 3 1

C. 3 4 1 2

*D. 2 1 4 3

89) தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின் திறன் ________ மெகாவாட் ஆகும்.

A. 1677

B. 1643

*C. 1697

D. 1656

90) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று 1 : சூரிய சக்தி உற்பத்தி தொழில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.

கூற்று 2 : இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.

A. கூற்று 2 சரி கூற்று 1 தவறு

*B. கூற்று 1 மற்றும் 2 சரி

C. கூற்று 1 சரி கூற்று 2 தவறு

D. கூற்று 1 மற்றும் 2 தவறு

90) கீழ்காணும் கூற்றுக்களை ஆராய்க

கூற்று 1 : சூரிய சக்தி உற்பத்தி தொழில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.

கூற்று 2 : இந்தியாவில் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.

A. கூற்று 2 சரி கூற்று 1 தவறு

*B. கூற்று 1 மற்றும் 2 சரி

C. கூற்று 1 சரி கூற்று 2 தவறு

D. கூற்று 1 மற்றும் 2 தவறு

கணித வினாக்கள்

91) ஒரு மீட்டர் துணியின் விலை ₹ 30 எனில், 7  1/3 மீட்டர் துணியின் விலை எவ்வளவு?

A) 250

B) 320

C) 350

*D) 220

92) 4  2/3  × 5  6/7 = ?

A) 20  12/21

B) 42/3

C) 27/7

*D) 82/3

93) பின்னத்தின் பகுதி எண்ணில் ஒன்றைக் கூட்டினால் பின்னம் 1/2 ஆகவும் மற்றும் பின்னத்தின் தொகுதியில் ஒன்றைக் கூட்டினால் பின்னம் 1 ஆகும் எனில், அந்த பின்னத்தை கண்டறிக?

*A) 2/3

B) 4/7

C) 5/9

D) 10/11

94) பின்வரும் பின்னங்களை ஏறுவரிசைப்படுத்துக:

2/3, 1r2, 4/5, 3/8

A) 1/2, 2/3, 4/5, 3/8

B) 1/2, 2/3, 3/8, 4/5

*C) 3/8, 1/2, 2/3, 4/5

D) 3/8, 4/5, 2/3, 1/2

95) பின்னக்கழித்தல் : 5  1/3 – 3  1/2 = ?

A) 9

B) 11/3

C) 1  7/2

*D) 1  5/6

96) 40  3/5 மீட்டர் நீளமுடைய இரும்பு கம்பியை மூன்று சரிசமமான துண்டுகளாக வெட்டவேண்டும் எனில், ஒரு துண்டின் நீளம் என்ன?

A) 13  7/15

*B) 13  8/15

C) 13  9/15

D) 13  10/15

97) சுருக்குக : 1  3/5 + 5  4/7 = ?

*A) 7  6/35

B) 6  7/35

C) 1  13/35

D) 7/35

98) ஒரு தகர எண்ணெய் பெட்டியில் 3  3/4 லிட்டர் எண்ணெய் இருந்தது. அதிலிருந்து 2  1/2 எண்ணெய் பயன்படுத்தப்பட்டது எனில், எவ்வளவு எண்ணெய் மீதமிருக்கும்?

A) 2  1/2

*B) 1  1/4

C) 10/2

D) 5  2/8

99) சுருக்குக : 3/7 + 4 = ?

A) 31/7

*B) 3/28

C) 1/28

D) 12/7

100) பிரியா என்பவர் 3  1/2 கிலோகிராம் தக்காளியையும், 3/4 கிலோகிராம் உருளைக்கிழங்கையும், 1  1/4 கிலோகிராம் வெண்டைக்காயையும் வாங்கினார் எனில், அவர் வாங்கிய மொத்த காய்கறிகளின் எடை எவ்வளவு?

A) 15/2

B) 7  1/2

*C) 5  1/2

D) 23/4