தமிழ் வினாக்கள்
1) “தேசம் உடுத்திய நூலாடை” என்று எந்த நூலை தாராபாரதி குறிப்பிடுகிறார்?
*A) திருக்குறள்
B) தொல்காப்பியம்
C) காளிதாசர் பாடல்கள்
D) கம்பராமாயணம்
2) “மெய்யுணர்வு என்கிற மேலாடை “
இவ்வடியில் இடம்பெறும் ‘மெய்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
A) உடல்
*B) உண்மை
C) பொய்
D) உயிர்
3) தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
A) துரை மாணிக்கம்
B) துரைராசு
*C) ராதாகிருஷ்ணன்
D) அரங்கசாமி என்கிற எத்திராசுலு
4) காந்தியடிகள் தான் எங்கு வாழ்ந்தபோது தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறினார்?
A) குஜராத்
B) மதுரை
*C) தென்னாப்பிரிக்கா
D) குற்றாலம்
5) இந்தப் பெரியவரின் அடி நிழலிலிருந்து தமிழ் கற்க வேண்டும்” என்று யாருடைய உரையைக் கேட்டபின் காந்தியடிகள் கூறினார்?
A) ஜி.யூ. போப்
B) பாரதியார்
C) ராஜாஜி
*D) உ.வே.சா
6) வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?
A) பெரிய மருது
B) சின்ன மருது
*C) தாண்டவராயர்
D) முத்து வடுகநாதர்
7) காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் யார்?
A) வேலுநாச்சியார்
B) உடையாள்
*C) குயிலி
D) மேற்கூறிய யாரும் இல்லை
8) இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும். அவற்றுள் பொருந்தாத ஒன்றைக் காண்க
A) பெயர்ச்சொல்
B) வினைச்சொல்
*C) திரிசொல்
D) உரிச்சொல்
9) இடைச்சொல் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
1. இடைச்சொல் பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும்
2. இடைச்சொல் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருகிறது
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
D) கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
10) சொற்களையும் சொற்களின் வகைகளையும் பொருத்துக
a. ஓடுதல் – 1. வினைச்சொல்
b. விளையாடு – 2. இடைச்சொல்
c. மற்றொருவர் – 3. உரிச்சொல்
d. மாநகரம் – 4. பெயர்ச்சொல்
A) 1 2 3 4
B) 4 3 2 1
*c) 4 1 2 3
D] 4 2 1 3
11) வ.உ.சி. “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்த ஆண்டு
A) 1904
B) 1905
*C) 1906
D) 1907
12) இலக்கண அடிப்படையில் தவறாக அமைந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடுக்க
1. ஒரு நகரம்
2. ஓர் கடல்
3. ஒரு ஏரி
4. ஓர் ஊர்
A) 1, 2
B) 1, 3
*C) 2, 3
D) 3, 4
13) அகரவரிசைப்படுத்துக
1. பெண்கள்
2. போக்குவரத்து
3. புதுமை
4. பாரதம்
*A) 4 3 1 2
B) 4 3 2 1
C) 3 4 2 1
D) 3 1 2 4
14) தொண்டு என்ற பொருள் தரும் மற்றொரு சொல்லைக் காண்க
A) பனி
B) பநி
*C) பணி
D) 1, 2 இரண்டும்
15) தமிழ் மொழியின் உபநிடதம் என்று போற்றப்படும் நூல் எது?
A) திருக்குறள்
B) திருவாசகம்
*C) தாயுமானவர் பாடல்கள்
D) பராபரக் கண்ணி
16) கண்ணி என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல் வகையாகும்
A) 1
*B) 2
C) 3
D) 4
17) தீர்க்கதரிசி என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்
A) கலீல் கிப்ரான்
*B) புவியரசு
C) எஸ். ராமகிருஷ்ணன்
D) மேற்கூறிய யாரும் இல்லை
18) “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்” என்று கூறியவர் யார்?
A) மணிமேகலை
B) தீவதிலகை
C) காயசண்டிகை
*D) பாரதியார்
19) மணிபல்லவத்தீவைக் காவல் காத்தவர் யார்?
A) மணிமேகலை
B) மணிமேகலா தெய்வம்
*C) தீவதிலகை
D) ஆபுத்திரன்
20) கோமுகி என்னும் பொய்கை மீது எந்த நாளில் அமுதசுரபி தோன்றும்
A) சித்திரைத் திங்கள் முழு நிலவு நாள்
*B) வைகாசித் திங்கள் முழு நிலவு நாள்
C) மார்கழித் திங்கள் முழு நிலவு நாள்
D) தைத் திங்கள் முழு நிலவு நாள்
21) எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் எவ்வகை நூலாகும்
A) நாவல்
B) கட்டுரைத் தொகுப்பு
*C) சிறுகதைத் தொகுப்பு
D) சிறுவர் இலக்கியம்
22) பெயர்ச்சொற்களை அவற்றின் வகைகளோடு பொருத்துக
a. நாற்காலி – 1. சினைப்பெயர்
b. கண் – 2. பொருட்பெயர்
c. செம்மை – 3. தொழிற்பெயர்
d. ஆடுதல் – 4. பண்புப்பெயர்
A) 2 1 3 4
*B) 2 1 4 3
C) 2 3 1 4
D) 2 4 1 3
23) பொருத்துக
a. மா – 1. காரணச்சிறப்புப்பெயர்
b. வளையல் – 2. இடுகுறிச் சிறப்புப்பெயர்
c. பறவை – 3. காரணப்பொதுப்பெயர்
d. காடு – 4. இடுகுறிப் பொதுப்பெயர்
*A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 1 2 4 3
D) 1 2 3 4
24) சிறந்த அரமாக வள்ளுவர் குறிப்பிடுவது
A) பொறாமை
B) பேராசை
C) சினம்
*D) உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருத்தல்
25) “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
இக்குறளில் இடம்பெறும் மோனை வகையைத் தேர்ந்தெடுக்க
*A) இணைமோனை
B) பொழிப்பு மோனை
C) கூழை மோனை
D) முற்று மோனை
26) “ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை”
இக்குறளில் இடம்பெறும் எதுகை வகையைத் தேர்ந்தெடுக்க
A) மேற்கதுவாய் எதுகை
*B) கீழ்க்கதுவாய் எதுகை
C) இணை எதுகை
D) பொழிப்பு எதுகை
27) கொடுக்கப்பட்டுள்ள குறட்பாவின் முதல் அடியை சரியாக வரிசைப்படுத்துக
1. எனைத்தானும்
2. யார்க்கும்
3. எஞ்ஞான்றும்
4. மனத்தானாம்
A) 1 2 3 4
*B) 1 3 2 4
C) 2 1 3 4
D) 3 2 1 4
28) “காட்டும் கருணை உடையவரே – என்றும்
கண்ணிய வாழ்வை உடையவராம்;
வாட்டும் உலகில் வருந்திடுவார்- இந்த
மர்மம் அறியாத மூடரையா!”
இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது?
A) பராபரக் கண்ணி
B) பாரதம் அன்றைய நாற்றங்கால்
C) புதியதொரு விதி செய்வோம்
*D) ஆசிய ஜோதி
29) தேசிக விநாயகனார் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
1. இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஆவார்
2. இவர் 26 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்
3. இவர் எட்வின் அர்னால்டு என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘light of asia’ என்ற நூலைத் தமிழில் ஆசிய ஜோதி என்ற பெயரில் மொழிபெயர்த்தார்
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
*C) கூற்று 3 மட்டும் சரி
D) அனைத்துக் கூற்றுகளும் சரி
30) இனிமை + உயிர் எனன்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
A) இன்உயிர்
*B) இன்னுயிர்
C) இனிமைஉயிர்
D) இனிய உயிர்
31) “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
முயலுநர் உண்மையானே”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது?
A) திருக்குறள்
*B) புறநானூறு
C) அகநானூறு
D) தொல்காப்பியம்
32) வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை எங்கு உள்ளது?
A) கடலூர்
B) மருதூர்
C) சிதம்பரம்
*D) வடலூர்
33) “வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில்
நீ வாழும் வரை”
இக்கூற்று யாருடையது
A) வள்ளலார்
B) கைலாஷ் சத்யார்த்தி
*C) அன்னை தெரசா
D) காந்தியடிகள்
34) குழந்தைகளின் கல்வி உரிமைக்காக எத்தனை நாடுகளில் கைலாஷ் சத்யார்த்தி நடை பயணம் சென்றார்
A) 101
B) 102
*C) 103
D) 104
35) ஒரு பொருளின் அழகை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி
A) உயர்வு நவிற்சி அணி
B) இயல்பு நவிற்சி அணி
C) தன்மை நவிற்சி அணி
*D) 2, 3
36) “குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்குமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று
ஆகாச கங்கை
அனல் உறைக்குமென்று
பாதாள கங்கையைப்
பாடி அழைத்தார் உன் தாத்தா”
இப்பாடலில் இடம்பெறும் அணி எது?
A) தன்மை நவிற்சி அணி
*B) உயர்வு நவிற்சி அணி
C) இயல்பு நவிற்சி அணி
D) 1, 3
37) ‘mercy’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லைக் கண்டறிக
A) மனிதநேயம்
*B) கருணை
C) இலக்கியம்
D) கலைக்கூடம்
38) புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்நுனி வெளிச்சங்கள் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
A) துரை மாணிக்கம்
B) துரைராசு
*C) இராதாகிருஷ்ணன்
D) வானிதாசன்
39) சரியான கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்க
1. காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு முதன்முதலில் சென்னைக்கு வந்தார்.
2. காந்தியடிகள் தான் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு வருமாறு பாரதியாரை அழைத்தார்.
3. பாரதியாரைத் தமிழ்நாட்டின் சொத்து என்று ராஜாஜி கூறினார்.
4. பாரதியாரை இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகள் புகழ்ந்தார்.
A) 1 2 3 சரி
B) 1 2 4 சரி
*C) c. 1 3 4 சரி
D) 1 2 3 4 சரி
40) காலிதாசரின் பாடல்கள் எதிரொலித்த இடமென தாரா பாரதி குறிப்பிடும் இடம் எது?
A) கங்கைக்கரை
*B) காவிரிக்கரை
C) வைகைக்கரை
D) யமுணைக்கரை
வரலாறு வினாக்கள்
1) பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல?
A) ஹரப்பா மக்களின் முக்கிய தொழிலாக மேய்ச்சல் தொழில் இருந்தது.
B) செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கோழி போன்ற கால்நடைகளை வளர்த்தனர்.
C) எருமை, பன்றி யானை போன்ற விலங்குகள் பற்றி அறிந்திருந்தனர்.
*D) குதிரையைப் பற்றி அறிந்திருந்தனர்.
2) ஹரப்பா மக்கள் அறிந்திராத உலோகம் எது?
A) செம்பு
*B) இரும்பு
C) வெண்கலம்
D) தங்கம்
3) பின்வருவனவற்றுள் எவை தவறானது அல்ல?
1) சிந்துவெளி மக்களின் காலம் வெண்கல காலம் ஆகும்
2) இதன் காலம் பொ அ மு 3,300 முதல் பொ அ மு 1,900 வரை
3) 12 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருந்தது
4) 6 பெரிய நகரங்கள் காணப்பட்டது
5) 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் காணப்பட்டது.
A) 2 3 5
B) 1 3 4 5
*C) 1 2 4 5
D) 1 2 3 4 5
4) சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி எது?
*A) மெஹர்கர்
B) பஞ்சாப்
C) பாகிஸ்தான்
D) பலுசிஸ்தான்
5) பொருத்துக :
a) மொகஞ்சதாரோ – 1) உலோக கலவை
b) வெண்கலம் – 2) சிவப்பு மணி
c) கோட்டை – 3) இறந்தோர் மேடு
d) கார்னீலியன் – 4) மேடான பகுதி
A) 2 1 3 4
*B) 3 1 4 2
C) 4 1 2 3
D) 4 1 3 2
6) தொல்லியல் ஆய்வகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
*A) புது டெல்லி
B) சென்னை
C) மும்பை
D) கல்கத்தா
7) ஹரப்பாவின் இடர்பாடுகள் பற்றி தனது நூலில் முதன் முதலாக எழுதி வெளியிட்டவர் யார்?
A) சர் ஜான் மார்ஷல்
B) அலெக்சாண்டர் பர்ன்ஸ்
*C) சார்லஸ் மேஷன்
D) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
8) பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க
1) சிந்துவெளி மக்கள் இயற்கை கடவுளை வழிபட்டனர்.
2) சிந்துவெளி மக்கள் அரச மரத்தை வழிபட்டனர்.
3) காளிபங்கனில் நெருப்பு குண்டம் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
4) இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது.
A) 1 2
B) 1 2 4
C) 1 2 3
*D) 1 2 3 4
9) பொருந்தாத இணையை தேர்வு செய்க
A) ராக்கி ஹர்க்கி – ஹரியானா
B) பனவாலி – ராஜஸ்தான்
C] மொகஞ்சதாரோ – லர்ஹானா
*D) ஹரப்பா – சிந்து
10) சிந்து சமவெளி பகுதிகளையும் அவை அமைந்திருந்த இடங்களையும் பின்வரும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
a) ஹரப்பா – 1) சிந்து
b) மொகஞ்சதாரோ – 2) பஞ்சாப்
c) காளிபங்கன் – 3) குஜராத்
d) லோத்தல் – 4) ராஜஸ்தான்
A) 1 2 3 4
*B) 2 1 4 3
C) 2 3 1 4
D) 1 4 3 2
11) சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய எடை கற்களின் விகிதம் என்ன?
*A) 1:2:4:8:16:32
B) 1:4:8:16:32:64
C) 1:2:8:16:32
D) 1:2:4:6:16
12) ஹரப்பா பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல?
A) ஹரப்பா மக்கள் வேளாண்மையை முக்கிய தொழிலாக கருதினர்.
B) கோதுமை பார்லி போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர்.
C) ஆடு மாடு போன்ற கால்நடைகளை மேய்த்தனர்.
*D) ஹரப்பா மக்கள் ஆடுகளை செபு என்று அழைத்தனர்.
13) பின்வரும் கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க.
கூற்று : சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் ஆகும்.
காரணம் : இங்கு திட்டமிடப்பட்ட நகர அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிகால் அமைப்பு காணப்பட்டது.
*A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
C). கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
14) பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
A) சார்லஸ் மேஷன் – 1826
B) அலெக்சாண்டர் பர்ன்ஸ் – 1831
*C) அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் – 1862
D) மார்டிமர் வீலர் – 1940
15) சிந்து சமவெளி பகுதியில் கிடைக்கப் பெற்ற பொருட்களையும், அவை கண்டுபிடிக்கப்பட்ட இடங்களையும் பின்வரும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
a) கார்னீலியன் – 1) தெற்கு ராஜஸ்தான்
b) சங்கு – 2) ஷா்ட்டுகை
c) ஸ்டீயடைட் – 3) நாகேஸ்வர்
d) வைடூரியம் – 4) லோத்தல்
A) 1 2 3 4
B) 4 3 2 1
*C) 4 3 1 2
D) 3 2 1 4
16) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
1) சிந்துவெளி மக்கள் பருத்தி மற்றும் கம்பளியினால் ஆன ஆடைகளை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
2) சிந்துவெளி நாகரிகத்தில் அரண்மனை மற்றும் வழிபாட்டு தலங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
3) சிந்துவெளி மக்கள் போருக்கு படைகளை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
*A) 2 மற்றும் 3
B) 1 மற்றும் 3
C) 1 மற்றும் 2
D] அனைத்தும்
17) பின்வரும் கூற்றுகளில் எது அல்லது எவை சரியானது?
1) ஹரப்பாவிற்கும் மெசபடோமியாவிற்கும் இடையே வாணிக தொடர்பு இருந்தது.
2) ஹரப்பாவிற்கும் மெசபடோமியாவிற்கும் இடையில் அதிக அளவு வாணிபத் தொடர்பு இருந்ததாக கியூனிஃபாம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
3) கியூனிஃபாம் எழுத்தில் காணப்படும் மெலோகா என்ற குறிப்பு சிந்து பகுதியை குறிப்பதாகும்.
A) 1 மற்றும் 2 சரி
B) 1 மற்றும் 3 சரி
C) 2 மட்டும் சரி
*D) அனைத்தும் சரி
18) அமர்ந்த நிலையில் இருக்கும் ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A) மெஹர்க்கர்
*B) மொகஞ்சதாரோ
C) ஹரப்பா
D) காளிபங்கன்
19) அகழாய்வு செய்யப்பட்ட இடங்களும், அவற்றை அகழாய்வு செய்த நபர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A) மொகஞ்சதாரோ – R D பேனர்ஜி
B) ஹரப்பா – தயாராம் சஹானி
* C) பல்லாவரம் – மார்டிமர் வீலர்
D) லோத்தல் – S R ராவ்
20) சிந்து சமவெளி பகுதிகளையும் அவை அமைந்திருந்த திசைகளையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.
a) வடக்கு – 1) ஆழம்கிர்ப்பூர்
b) தெற்கு – 2) ஸார்ட்டுகை
c) கிழக்கு – 3) சர்க்கா ஜென்டோர்
d) மேற்கு – 4) தைமதாபாத்
*A) 3 4 1 2
B) 3 4 2 1
C) 2 1 4 3
D) 2 1 3 4
நடப்பு நிகழ்வுகள்
1) நாட்டின் எத்தனையாவது விமான நிலையமாக “சிவமொக்கா விமான நிலையம்” கர்நாடக மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளது?
A) 74
B) 121
C) 139
*D) 148
2) இஸ்ரோ மற்றும் நாஸாவின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எது?
A) நூர்
*B) நிஸார்
C) இ எஸ் ஓ – 01
D) வினிர்
3) 21 ஆவது “ஆசிய ஜூனியர் ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டி” எங்கு நடைபெற்றது?
*A) சென்னை
B) மும்பை
C) மதுரை
D) ஹைதராபாத்
4) துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன?
A) ஆப்ரேஷன் தேவி சக்தி
B) ஆப்ரேஷன் கங்கா
*C) ஆப்ரேஷன் தோஸ்த்
D) ஆப்ரேஷன் கருணா
5) “ரக்க்ஷா மந்திரி விருது” மத்திய அரசின் எந்த அமைச்சகத்தின் கீழ் வழங்கப்படுகிறது?
A) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
*B) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
C) மத்திய தொழில்துறை அமைச்சகம்
D) மத்திய வேளாண்துறை அமைச்சகம்
6) இந்தியாவில் முதன் முறையாக லித்தியம் இருப்பு எங்கு கண்டறியப்பட்டுள்ளது?
A) குஜராத்
B) ஒடிசா
C) மேற்கு வங்கம்
*D) ஜம்மு காஷ்மீர்
7) “உலக மகிழ்ச்சி குறியீடு 2023” ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது?
A) 112
B) 121
*C) 138
D) 146
8) 2023 – 24 ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதத்தை அடையும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது?
A) 6.6 %
*B) 6 to 6.8 %
C) 6.9 %
D) 7.2 %
9) ‘தேசிய உற்பத்தி திறன் தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது?
*A) பிப்ரவரி – 12
B) பிப்ரவரி – 13
C) பிப்ரவரி – 14
D) பிப்ரவரி – 15
10) ரஃபேல் வரேனே கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A) கிரிக்கெட்
B) டென்னிஸ்
C) பேட்மிட்டன்
*D) கால் பந்து
பொருளியல் வினாக்கள்
1. GNH என்ற குறியீடு எதனை குறிக்கிறது?
*A) Gross National happiness
B) Growth National happiness
C) Growing National happiness
D) Gross negligence happiness
2. கீழ்க்கண்ட நாடுகளில் G20 நாடுகளில் இடம்பெறாத நாடு எது?
A) மெக்சிகோ
B) அர்ஜன்டினா
*C) நேபாளம்
D) துருக்கி
3. தேசிய துறைமுக வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு?
A) 1960
*B) 1950
C) 1948
D) 1949
4. பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.
கூற்று 1 : 1921 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க விகிதம் 1.33% லிருந்து 1.25% ஆக குறைந்து வந்தது. ஆகையால் இது “சிறு பிளவு ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
கூற்று 2 : 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை அதிகரிக்க துவங்கியதால் அவ்வாண்டு “பெரும் பிரிவினை ஆண்டு” என அழைக்கப்படுகிறது.
கூற்று 3 : 1961 ல் இந்திய மக்கள் தொகை உயர்வு வீதம் 1.96% அதாவது 2% ஆகும். 1961 ஆம் ஆண்டை “மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு” என்கிறோம்.
A) கூற்று 1, 3 சரி கூற்று 2 தவறு
B) கூற்று 2, 3 சரி கூற்று 1 தவறு
*C) கூற்று 1, 2 தவறு கூற்று 3 சரி
D) அனைத்தும் சரி
5. தேசிய வளர்ச்சி கழகத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A) டாக்டர் இராதாகிருஷ்ணன்
B) டாக்டர் அம்பேத்கர்
*C) ஜவஹர்லால் நேரு
D) மகாத்மா காந்தி
6. இலக்க முறை பொருளாதாரத்தில் இந்தியா ஒரு உலகளாவிய போட்டியாளர் என்று கூறியவர்?
A) நரேந்திர மோடி
B) ஷிடிவ் ஜாப்ஸ்
*C) சுந்தர் பிச்சை
D) முகேஷ் அம்பானி
7. எந்த ஆண்டில் மக்கள் தொகை இந்தியாவில் 100 கோடியை எட்டியது?
A) 2010
B) 2000
*C) 2001
D) 2011
8. பின்வருவனவற்றில் புதுப்பிக்க இயலாத வளங்களில் தவறானதை கண்டறிக.
A) படிம எரிபொருட்கள்
*B) உயிரினத் தொகுதி
C) நிலக்கரி
D) கனிமங்கள்
9. முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு?
A) 1873
B) 1876
C) 1871
*D) 1872
10. மக்கள் தொகை அடர்த்தி என்பது?
A) நிலத்தின் அளவு/ மக்கள் தொகை
*B) மக்கள் தொகை/ குறிப்பிட்ட நிலை அளவு
C) மக்கள் தொகை/ வேலை வாய்ப்பு
D) நில அளவு + மக்கள் தொகை
11. கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை கண்டறிக.
கூற்று 1 : இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது. ஹேமடைட் இரும்புத்தாது 14,630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10,619 மில்லியன் டன் இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
கூற்று 2 : ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது.
A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
B) கூற்று 2 சரி கூற்று 1 தவறு
*C) கூற்று இரண்டும் சரி
D) கூற்று இரண்டும் தவறு
12. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம்?
*A) 74.04
B) 75.05
C) 77.07
D) 71.15
13. உலக மக்கள் தொகை தினம்?
A) ஜூலை 9
B) ஜூலை 1
*C) ஜூலை 11
D) ஜூலை 12
14. பொருத்துக
a) மனிதவள மேம்பாட்டு குறியீடு – 1. GDP
b) வாழ்க்கைத் தரக்குறியீடு – 2. HDI
c) மொத்த நாட்டு மகிழ்ச்சி குறியீடு – 3. PQLI
d) மொத்த உள்நாட்டு உற்பத்தி – 4. GNHI
A) 3 4 2 1
B) 4 1 3 2
C) 3 4 1 2
*D) 2 3 4 1
15. உரிமம் மற்றும் இழப்பு பற்றிய கட்டுரையை எழுதியவர்?
*A) அமர்த்தியா சென்
B) ஜவஹர்லால் நேரு
C) டாக்டர் அம்பேத்கர்
D) ஜே. சி. குமரப்பா
16. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவிட்டை குறிப்பிடுவது?
*A) GDP
B) GNP
C) NNP
D) தலா வருமானம்
17. சமீபத்திய நிலவரப்படி, வலுவான பொருளாதாரம் கொண்ட பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது?
A) மூன்று
*B) ஐந்து
C) ஒன்பது
D) ஆறு
18. கீழ்காணும் கூற்றுக்களில் சரியானவற்றை கண்டறிக
கூற்று 1 : இந்திய ரயில்வே முதல் Wi-fi வசதியை பெங்களூருவில் தொடங்கியது.
கூற்று 2 : இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவை 27-8-2009 அன்று ஒன்றாக இணைந்தன.
*A) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
B) கூற்று 1 மற்றும் 2 சரி
C) கூற்று 2 சரி கூற்று 1 தவறு
D) கூற்று 1 மற்றும் 2 தவறு
19. திருவள்ளுவரின் பொருளாதாரக் கொள்கைகள் குறிப்பிடுவது?
A) வேளாண்மை
B) செல்வம்
C) வறுமை சமுதாயத்தின் சாயம்
*D) மேற்கண்ட அனைத்தும்
20. பழங்கால இந்திய வர்த்தகம் என்ற கட்டுரையை எழுதியவர்?
*A) டாக்டர் அம்பேத்கர்
B) ஜவஹர்லால் நேரு
C) மகாத்மா காந்தி
D) ஜே. சி. குமரப்பா
கணித வினாக்கள்
1) கலப்பு பின்னம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1) கலப்பு பின்னம் என்பது ஒரு முழு எண் + தகு பின்னம் ஆகும்.
2) தகு பின்னத்தை மட்டுமே கலப்பு பின்னமாக மாற்ற இயலும்.
*A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி
D) இரண்டு கூற்றுகளும் தவறு
2) பின்வரும் பின்னங்களில் எது பெரியது?
A) 1/8
B) 1/6
C) 1/4
*D) 1/2
3) பின்வரும் பின்னத்தை ஏறுவரிசையில் எழுதுக. 2/3, 1/6 மற்றும் 4/9
A) 12/18, 3/18, 8/18
*B) 1/6, 4/9, 2/3
C) 2/3, 4/9, 1/6
D) 3/18, 8/18, 12/18
4) விண்ணக் கூட்டல் : 3/7 + 2/3 =
A) 5/10
B) 23/21
*C) 1 2/21
D) 1/2
5) 84 கிலோ ஆப்பிளின் விலை 21,000 எனில், 13 கிலோ ஆப்பிளின் விலை எவ்வளவு?
A) 2,750
B) 4,000
C) 3,450
*D) 3,250
6) 3/4 மற்றும் 2/7 ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை காண்க?
A) 1/3
*B) 13/28
C) 1/28
D) 2 2/3
7) சுருக்குக : 6 3/16
A) 96/16
*B) 99/16
C) 106/16
D) 33/4
8) சுருக்குக : 9 1/4 – 3 5/6 = ?
*A) 5 5/12
B] 54/12
C) 4 1/2
D) 26/2
9) 3 2/4 + 7 2/5 = ?
A) 51/20
B) 10 1/2
*C) 10 9/10
D) 21/20
10) ஒரு தோட்டத்தில் 56 மரங்கள் உள்ளன. அதில் 5/7 பங்கு மாமரங்கள் மீதமுள்ளவை புளியமரங்கள் எனில், புளியமரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A) 40
B) 35
C) 24 *D) 16