குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1. மூதுரை என்ற சொல்லின் பொருள் என்ன
a. பழமையான உரை
b. முதுமையான உரை
*c. மூத்தோர் சொல்லும் அறிவுரை
d. முன்னுரை
2. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஔவையார் எழுதாத நூல் எது
a. கொன்றை வேந்தன்
b. ஆத்திசூடி
*c. நன்னெறி
d. நல்வழி
3. இடமெல்லாம் என்ற சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
a. இடம் + மெல்லாம்
*b. இடம் + எல்லாம்
c. இட + எல்லாம்
d. எட + மெல்லாம்
4. ” மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது”
இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார்
a. ஔவையார்
b. கண்ணதாசன்
c. மருதகாசி
*d. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
5. “மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது”
இவ்வரியில் இடம்பெரும் மாற்றார் என்ற சொல்லின் பொருள் ென்ன
a. பகைவர்
b. நண்பர்
*c. மற்றவர்
d. முதியவர்
6. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
a. மானம்இல்லா
*b. மானமில்லா
c. மானமல்லா
d. மானம்மில்லா
7. பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் அவர்களுக்கு் உரிய சிறப்புப் பெயர் ென்ன
*a. மக்கள் கவிஞர்
b. பகுத்தறிவு கவிராயர்
c. மக்கள் திலகம்
d. கவிப்பேரரசு
8. காமராசரால் மேற்கொள்ளப்படாத நடவடிக்கை எது
a. இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டம் இயற்றுதல்
b. சீருடைத் திட்டத்தை அறிமுக் செய்தல்
*c. சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவருதல்
d. தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்குதல்
9. காமராசருக்கு வழங்கப்படாத சிறப்புப் பெயர் எது
*a. தென்னாட்டு காந்தி
b. கர்மவீரர்
c. ஏழைப்பங்காளர்
d. தலைவர்களை உருவாக்குபவர்
10. காமராசருக்கு பாரதரத்னா விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது
a. 1966
*b. 1976
c. 1986
d. 1996
11. அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய சரியான கூற்று எது
1. அண்ணா நூற்றாண்டு நூலகம் தரைத்தளத்தோடு எட்டு அடுக்குகளைக் கொண்டது
2. இதன் பரப்பளவு எட்டு ஏக்கர்
3. இதுவே ஆசியாவின் மிகப் பெரிய நூலகம் ஆகும்
4. தரைத்தளத்தில் பிரெயிலி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன
a. 1, 2 மட்டும் சரி
b. 1, 3, 4 மட்டும் சரி
*c. 1, 2, 4 மட்டும் சரி
d. 1, 2, 3, 4 சரி
12. தமிழ் எழுத்துகளில் எந்த எழுத்துக்கு இன எழுத்து இல்லை
a. குறில் எழுத்து
b. நெடில் எழுத்து
c. மெய்யெழுத்து
*d. ஆய்த எழுத்து
13. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
*இ) கல்வி
ஈ) தம்பி
14. “ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை”
இவ்வடிகள் இடம்பெறும் ணூல் எது
a. திருக்குறள்
b. மூதுரை
*c. பழமொழி நானூறு
d. நல்வழி
15. தலைவர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடப்படும் தினங்களையும் பொருத்துக
a. தேசிய இளைஞர் தினம் – 1. அப்துல்கலாம் பிறந்த நாள்
b. மாணவர் தினம் – 2. காமராசர் பிறந்த நாள்
c. கல்வி வளர்ச்சி நாள் – 3. விவேகானந்தர் பிறந்த நாள்
d. குழந்தைகல் தினம் – 4. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள்
a. 2 1 3 4
*b. 3 1 2 4
c. 3 2 1 4
d. 1 2 3 4
16. நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகளாக ஆசாரக்கோவை கூறுவது
a. 5
b. 6.
c. 7
*d. 8
17. முக்கனிகளில் பொருந்தாதது எது
a. மா
b. பலா
c. வாழை
*d. திராட்சை
18. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் எது
*அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
19. போகித்திருநாள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. போகி முற்காலத்தில் இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது
2. மார்கழி மாதத்தின் இறுதி நாள் போகித்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது
a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
*c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
20. அகரவரிசைப்படுத்துக
1. போகி
2. பொங்கல்
3. மாட்டுப் பொங்கல்
4. காணும் பொங்கல்
a. 1 2 3 4
*b. 4 2 1 3
c. 4 3 2 1
d. 4 3 1 2
21. அறுவடைத் திருநாளின் பெயர்களையும் கொண்டாடப்படும் மாநிலங்களையும் பொருத்துக
a. மகரசங்கராந்தி – 1. ராஜஸ்தான்
b. உத்தராயன் – 2. பஞ்சாப்
c. லோரி – 3. உத்திரப் பிரதேசம்
*a. 3 1 2
b. 1 2 3
c. 1 3 2
d. 3 2 1
22. பஞ்சபாண்டவர் இரதம் சிற்பம் யார் காலத்தைச் சார்ண்டது
*a. மாமல்லன்
b. மகேந்திரவர்மன்
c. நந்திவர்மன்
d. இரண்டாம் நரசிம்மவர்மன்
23. தமிழில் எத்தனை மயங்கொலி எழுத்துகள் உள்ளன
a. 5
b. 6
c. 7
*d. 8
24. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடும்போது பிறக்கும் எழுத்து எது
a. ன
b. ந
*c. ண
d. ர
25. றகரத்தை அடுத்து வரும் னகர் எவ்வாறு அழைக்கப்படுகிறது
a. தந்நகரம்
*b. றன்னகரம்
c. டண்ணகரம்
d. ரன்னகரம்
26. ஆகாயம் என்ற பொரள் தரும் சொல் எது
*a. வானம்
b. வாணம்
c. வாநம்
d. மேற்கூறிய எதுவும் இல்லை
27. ளகரத்திற்கு உறிய வேறு பெயரைக் காண்க
a. பொது ளகரம்
b. னகர் ளகரம்
c. சிறப்பு ழகரம்
*d. 1, 2 இரண்டும்
28. ஆங்கிலச் சொற்களை அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களோடு பொருத்துக
a. நல்வரவு – 1. Sculptures
b. சிற்பங்கள் – 2. Welcome
c. சில்லுகள் – 3. Readymade Dress
d. ஆயத்த ஆடை – 4. Chips
a. 2 1 3 4
*b. 2 1 4 3
c. 2 3 1 4
d. 4 3 2 1
29. “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்”
இக்குறட்பாவில் அமைந்துள்ள மோனை வகையைக் காண்க
*a. இணை மோனை
b. பொழிப்பு மோனை
c. கூழை மோனை
d. முற்று மோனை
30. “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்”
இக்குறட்பாவில் அமைந்துள்ள எதுகை வகையைக் காண்க
*a. இணை எதுகை
b. பொழிப்பு எதுகை
c. கூழை எதுகை
d. முற்றெதுகை
31. நிலையான செல்வம் என்று வள்ளுவர் கூறுவது எது
*a. ஊக்கம்
b. நோக்கம்
c. ஆக்கம்
d. ஏக்கம்
32. “மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்
நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன் அவன்”
இப்பாடல் அடிகளின் ஆசிரியர் யார்
a. சுரதா
b. வானிதாசன்
c. பாரதிதாசன்
*d. முடியரசன்
33. முடியரசனின் நூல்களில் தவறானதைக் காண்க
a. பூங்கொடி
b. வீரகாவியம்
c. காவியப்பாவை
d. பாவியக்கொத்து
34. நெய்தல் நிலத்திற்கு உறிய பூ எது
a. கொன்றை
b. குறிஞ்சி
*c. தாழம்பூ
d. தோன்றிப்பூ
35. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ———–
அ) பெருமைவனம்
*ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
36. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி”
இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது
*a. நற்றிணை
b. குறுந்தொகை
c. ஐங்குறுநூறு
d. கலித்தொகை
37. பழங்காலத்தில் வணிகம் மேற்கொண்டபோது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படாத பொருள் எது
a. கண்ணாடி
b. கற்பூரம்
c. பட்டு
*d. குதிரைகள்
38. பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்துவைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை
a. திருவள்ளுவர்
*b. ஔவையார்
c. கபிலர்
d. இளங்கோவடிகள்
39. அவ்விடம் ென்பது எவ்வகைச் சுட்டு
a. அகச்சுட்டு
b. புறச்சுட்டு
c. சேய்மைச்சுட்டு
*d. 2, 3
40. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது
a. எ
*b. ஏ
c. யா
d. ஓ
புவியியல் வினாக்கள்
1. ஆசிய கண்டத்தில் எத்தனையாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது
a. 1
*b. 2
c. 3
d. 7
2. இந்தியாவின் நிலப்பரப்பு புவியின் மொத்த நிலப் பரப்பில் எத்தனை சதவீதம் ஆகும்
*a. 2.4
b. 3.4
c. 4.4
ஈ.5.4
3. இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளையும் திசைகளையும் பொருத்துக
a. மேற்கு – 1. ஆப்கானிஸ்தான்
b. வட மேற்கு – 2. பாகிஸ்தான்
c. வடக்கு – 3. மியான்மர்
d. கிழக்கு – 4. நேபாளம்
a. 2 1 3 4
*b. 2 1 4 3
c. 2 4 1 3
d. 4 1 3 2
4. இந்தியா எந்த நாட்டுடன் குறைந்த அளவு நில எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது
a. வங்காள தேசம்
b. சீனா
c. மியான்மர்
*d. ஆப்கானிஸ்தான்
5. இந்தியாவின் அமைவிடம் பற்றிய சரியான கூற்றைக் கண்டறிக
1. இந்தியா கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியில் அமைந்துள்ளது
2. இந்தியா ஆசியாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது
a. கூற்று 1 மட்டும் சரி
b. கூற்று 2 மட்டும் சரி
*c. கூற்றுகள் 1, 2 இரண்டும் சரி
d. கூற்றுகள் 1, 2 இரண்டும் தவறு
6. கூற்று மற்றும் காரணத்தை ஆய்க
கூற்று : இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
காரணம் : இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படகூடிய வேறுபாடுகளைக் கொண்டதாக இந்தியா உள்ளது
*a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
c. கூற்று சரி. காரணம் தவறு
d. கூற்று தவறு. காரணம் சரி
7. இந்தியாவின் மத்தியத் தீர்க்கரேகை எந்த இடத்தின் வழியாகச் செல்கிறது
a. அருணாச்சல பிரதேசம்
b. குஜராத்
*c. அலகாபாத்
d. மேற்கு வங்காளம்
8. உலகின் கூரை என்று அழைக்கப்படுவது எது
a. இமயமலை
b. திபெத்
*c. பாமிர் முடிச்சு
d. எவரெஸ்ட் சிகரம்
9. மேற்கு இமயமலையில் அமைந்திராத முக்கிய மலைத்தொடர் எது
a. கைலாஸ்
b. காரகோரம்
c. லடாக்
*d. மகாபாரத்
10. இந்தியாவில் அமைந்துள்ள சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்குவரிசையில் வரிசைப்படுத்துக
1. காமெட்
2. நந்தா தேவி
3. நங்க பர்வதம்
4. கஞ்சஞ்சங்கா
a. 1 2 3 4
b. 2 1 3 4
c. 3 1 4 2
*d. 4 3 2 1
11. உலகில் உள்ள உயரமான சிகரங்களில் எத்தனை சிகரங்களை இமயமலை தன்னகத்தே கொண்டுள்ளது
a. 14
b. 11
*c. 9
d. 8
12. கொடுக்கப்பட்டுள்ள கணவாய்களையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் பொருத்துக
a. காரகோரம் கணவாய் – 1. இமாச்சல் பிரதேசம்
b. பொமிடிலா கணவாய் – 2. சிக்கிம்
c. சிப்கிலா கணவாய் – 3. அருணாச்சல பிரதேசம்
d. நாதுலா கணவாய் – 4. காஷ்மீர்
a. 1 3 2 4
*b. 4 3 1 2
c. 4 1 2 3
d. 3 4 2 1
13. இமயமலையின் நீள்வெட்டுப் பிரிவுகளின் ஒன்றான அஸ்ஸாம் கிழக்கு இமயமலைகள் எந்தெந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது
a. சிந்து மற்றும் சட்லெஜ்
b. சட்லெஜ் மற்றும் காளி
c. காளி மற்றும் திஸ்தா
*d. திஸ்தா மற்றும் திபாங்
14. வட இந்திய பெரும் சமவெளிகள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. வட இந்திய பெரும் சமவெளிகள் சுமார் 2400 கி.மீ நீளம் கொண்டவை
2. இது 7 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது
3. வட இந்திய சமவெளி மேடு பள்ளமற்ற ஒரு சீரான சமப் பரப்பாக அமைந்துள்ளது
a. கூற்று 1, 2 சரி
b. கூற்று 1,3 சரி
c. கூற்று 2, 3 சரி
*d. கூற்று 1, 2, 3சரி
15. தீபகற்ப பீடபூமியின் வட மேற்கு எல்லையாக அமைந்துள்ளது எது
a. பண்டல் கண்ட் உயர் நிலப்பகுதி
*b. ஆரவல்லி மலைத்தொடர்
c. மேற்குத் தொடர்ச்சி மலைகள்
d. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
16. தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஆறு எது
a. சிந்து
b. கங்கை
c. காவிரி
*d. நர்மதை
17. ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் எது
a. எவரெஸ்ட்
b. தொட்டபெட்டா
*c. குருசிகார்
d. ஆனைமுடி
18. இரும்புத்தாது மற்றும் நிலக்கரி போன்ற கனிம வளங்களுக்குப் புகழ் பெற்ற இந்தியப் பகுதி எது
a. வட இந்திய பெரும் சமவெளிகள்
b. தக்காண பீடபூமி
*c. சோட்டாநாகபுரி பீடபூமி
d. ஆரவல்லி மலைத்தொடர்
19. மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது
2. இவை மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
3. இதன் உயரமானது மடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லச் செல்லக் குறைகிறது
*a. கூற்று 1 , 2 சரி
b. கூற்று 1, 3 சரி
c. கூற்று 2, 3 சரி
d. கூற்று 1, 2, 3 சரி
20. தார் பாலைவனம் பற்றிய சரியான கூற்றைக் காண்க
1. இப்பாலைவனத்தின் பரப்பளவு 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும்
2. இது உலகின் 17 வது மிகப் பெரிய பாலைவனமாகும்
3. உப அயண மண்டல பாலைவனங்களில் உலகின் 9 ஆவது மிகப் பெரிய பாலைவனமாக அமைந்துள்ளது
a. 1, 2 சரி
b. 1, 3 சரி
c. 2, 3 சரி
*d. 1, 2, 3 சரி
அரசியல் அறிவியல் வினாக்கள்
1) மிக நீளமான அரசியலமைப்பை கொண்ட இரண்டாவது நாடு எது?
A) பாகிஸ்தான்
*B) சேன்மெரினா
C) வெனிசுலா
D) ஜிம்பாபே
2) அரசியல் நிர்ணய சபை வேண்டுமென்று M N ராய் எந்த ஆண்டு தெரிவித்தார்?
A) 1932
B) 1933
*C) 1934
D) 1935
3) அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில், பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A) 10
*B) 15
C) 20
D) 25
4) அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
A) 1946, அக்டோபர் 9
B) 1946, நவம்பர் 9
C) 1946, டிசம்பர் 6
*D) 1946, டிசம்பர் 9
5) இந்திய அரசியலமைப்பினை உருவாக்க வரைவுக் குழு எப்போது அமைக்கப்பட்டது?
A) ஆகஸ்ட் 15, 1947
B) ஆகஸ்ட் 21, 1947
*C) ஆகஸ்ட் 29, 1947
D) ஆகஸ்ட் 31, 1947
6) “மாடன் மனு” என்று அழைக்கப்படுபவர் யார்?
*A) அம்பேத்கர்
B) மன்மோகன் சிங்
C) சர்தார் வல்லவாய் படேல்
D) அடல் பிகாரி வாஜ்பாய்
7) இந்திய அரசியலமைப்பு உருவாக எவ்வளவு காலம் ஆனது?
A) 2 வருடங்கள் 10 மாதங்கள் 10 நாட்கள்
B) 2 வருடங்கள் 10 மாதங்கள் 18 நாட்கள்
C) 2 வருடங்கள் 11 மாதங்கள் 11 நாட்கள்
*D) 2 வருடங்கள் 11 மாதங்கள் 18 நாட்கள்
8) இந்திய அரசியலமைப்பை உருவாக்க எவ்வளவு தொகை செலவிடப்பட்டது?
*A) 64 லட்சம்
B) 63 லட்சம்
C) 61 லட்சம்
D) 60 லட்சம்
9 பின்வருவனவற்றை பொருத்துக :
அ) முகவுரையின் மொழி – 1 தென்னாபிரிக்கா
ஆ) சட்டத் திருத்தம் – 2 ரஷ்யா
இ) அடிப்படைக் கடமைகள் – 3 அமெரிக்கா
ஈ) அடிப்படை உரிமைகள் – 4 ஆஸ்திரேலியா
A) 1 2 3 4
B) 4 3 2 1
*C) 4 1 2 3
D) 4 1 3 2
10) அரசியல் நிர்ணய சபையின் சட்ட ஆலோசகர் யார்?
*A) B N ராவ்
B) M N ராய்
C) சச்சிதானந்த சின்ஹா
D) H C முகர்ஜி
11) இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகள் நோக்கங்கள் மற்றும் லட்சியங்களை உள்ளடக்கியது?
A) அரசு நெறிமுறை உறுத்தும் கோட்பாடுகள்
*B) அரசியலமைப்பின் முகவுரை
C) அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்
D) அனைத்தும் சரி
12) குடியரசு தலைவர்
தேர்தல் முறை எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
A) ஆஸ்திரேலியா
B) அமெரிக்கா
*C) அயர்லாந்து
D) இங்கிலாந்து
13) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1) அரசியலமைப்பு சட்டத்தின் உண்மை பிரதி நாடாளுமன்றத்தில் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
2)] அரசியலமைப்பு சட்டத்தின் உண்மை பிரதி ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.
A) 1 மட்டும் சரி
*B) 2 மட்டும் சரி
C) இரண்டும் சரி
D) இரண்டும் தவறு
14) இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு
*A) 1976
B) 1975
C) 1978
D) 1974
15) அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவைகளில் தவறானது எது?
A) அடிப்படை உரிமைகள்
B) சுதந்திரமான நீதித்துறை
C) குடியரசுத் தலைவர் – முப்படைகளின் தளபதி
*D) குடியரசு தலைவர் – பெயரளவு தலைவர்
16) இந்திய அரசியலமைப்பில் சமதர்மம் மதசார்பின்மை மற்றும் ஒருமைப்பாடு என்ற வார்த்தைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டது
A) 44 ஆவது திருத்தச் சட்டம்
B) 46 ஆவது திருத்தச் சட்டம்
*C) 42 ஆவது திருத்தச் சட்டம்
D) 45 வது திருத்த சட்டம்
17) இந்திய அரசியலமைப்பின் முகவுரை பற்றிய சரியான கூற்றை தேர்வு செய்க?
கூற்று 1 நான்கு வகையான நீதிகளை பெற்றுள்ளது
கூற்று 2 ஐந்து வகையான சுதந்திரத்தை பெற்றுள்ளது
கூற்று 3 ஆறு வகையான சமத்துவத்தை பெற்றுள்ளது
கூற்று 4 ஏழு வகையான சகோதரத்துவம் பெற்றுள்ளது
A) கூற்று இரண்டு மற்றும் மூன்று சரி
*B) கூற்று இரண்டு மட்டும் சரி
C) கூற்று ஒன்று மற்றும் மூன்று சரி
D) அனைத்து கூற்றுகளும் சரி
18) அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்ட சரத்துக்களில் தவறானது எது?
A) 391, 392, 393
B) 366, 367, 372
C) 5, 6, 7, 8, 9
*D) 60, 324, 328
19) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?
A) அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போது, 393 சரத்துக்கள், 22 பகுதிகள் மற்றும் 8 அட்டவணைகள் இருந்தன.
B) தற்போதைய நிலவரப்படி, 24 பகுதிகள் மற்றும் 12 அட்டவணைகள் உள்ளன.
* C) செப்டம்பர் 16, 2016 நிலவரப்படி, 101 சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன
D) அனைத்தும்
20) நமது நீண்ட நாள் கனவை அரசியலமைப்பின் முகவுரை பிரதிபலிக்கிறது எனக் கூறியவர்?
A) அம்பேத்கர்
B) முன்சி
* C) அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
D) ராஜேந்திர பிரசாத்
கணித வினாக்கள்
1. 11646 என்ற எண்ணை 8ஆல் வகுபடும் எண்ணாக மாற்ற வேண்டுமென்றால் எந்த சிறிய என்னை கழிக்க வேண்டும்?
(A 2
B. 4
*C. 6
D. 8
2. 9ஆல் வகுபடும் 3 இலக்க இயல் எண் எத்தனை?
A. 99,
B. 111,
C. 101,
*D. 100.
3. மீ சி மா காண்க 1.08, 0.36, 0.9
A. 54
*B. 5.4
C. 0.54
D. 0.054
4. மி பொ வ காண்க 72, 80, 252.
*A. 4
B. 8
C. 6
D. 12
5. மி சி ம காண்ங்க 4 P² Q³ R, 8P³ Q² R², 16 P² Q⁴, R³
A. 4 P, ² Q ²R
*B. 16 P ³Q⁴ R³
C. 12 P ²Q R²²
D. 4 P Q R
6. 602338 என்ற எண் கீழ்கண்ட எந்தக் கூற்றிற்கு பொருந்தும்
A. 7 மற்றும் 11ஆல் வகுபடும்,
B. 7ஆல் மட்டும் வகுபடும்,
*C. 11ஆல் மட்டும் வகுபடும்,
D. மேற்கண்ட எதுவும் இல்லை
7. 9, 15, 18, 27 போன்ற எண்களால் மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய என் எது?
A. 54
*B. 270
C. 1350
D. 540
8. 1 முதல் நூறு வரை எத்தனை பகா எங்கள் உள்ளன?
A. 27
B. 24
C. 26
*D. 25
9. 38, 45, 52 ஆகிய எண்களை வகுக்கும் பொழுது மீதி 2, 3, 4ஐ கொடுக்கும் மிகப்பெரிய எண் எது?
A. 8
B. 12
C. 9
*D. 6
10. 70க்கும் 80க்கும் இடையே உள்ள பகா எண்களின் கூடுதல் என்ன?
*A. 223
B. 233
C. 213
D. 243
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
1) நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 4
B)*5
C) 6
D) 7
2) ‘வருணா கூட்டு கடற்கரை பயிற்சியின்’ 21 ஆவது பதிப்பு எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
A) இந்தியா – சீனா
B) இந்தியா – அமெரிக்கா
C) இந்தியா – மாலத்தீவு
D) *இந்தியா – பிரான்ச்
3) “Come! Let’s run” என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்?
A) *மா சுப்பிரமணியன்
B) இறையன்பு
C) கனிமொழி
D) தமிழிசை சௌந்தரராஜன்
4) 2023 ஆம் ஆண்டிற்கான “ராஷ்டிய பால் புரஷ்கார் விருது” எத்தனை சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது?
A) 8
B) 10
C) *11
D) 15
5) “கோக்போராக்” தினம் எந்த மாநிலத்தில் அனுசரிக்கப்படுகிறது?
A) அசாம்
B) *திரிபுரா
C) மேகாலயா
D) கோவா
6) ‘தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம்’ எப்போது தொடங்கப்பட்டது?
A) 2015
B) 2017
C) *2019
D) 2021
7) அந்தமான் நிக்கோபரின் எத்தனை தீவுகளுக்கு “பரம்லீர் சக்ரா விருது” பெற்றவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
A) *21
B) 24
C) 25
D) 27
8) “I N S வாகீர்” என்பது
A) ஏவுகணை
B) ரோந்து கப்பல்
C) *நீர் மூழ்கி கப்பல்
D) போர் விமானம்
9) 8 ஆவது “இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா” எங்கு நடைபெற்றது?
A) பூனே
B) *போபால்
C) புவனேஸ்வர்
D) மும்பை
10 தமிழ்நாடு மற்றும் —- மாநிலத்திற்கு இடையே விளையாட்டு மேம்பாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?
A) *ஒடிசா
B) உத்தர பிரதேசம்
C) பிஹார்
D) கேரளா