டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 மாதிரித்தேர்வு வினாவிடைகள்

 

*குறியிட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ்ப்பாட வினாவிடைகள்: 2

பொதுப்பாட வினாவிடைகள்: 32

தமிழ்ப்பாட வினாவிடைகள்:

1) நூலையும் நூலாசிரியர்களையும் பொருத்துக

a) தமிழர் மானுடவியல் – 1) தட்சிணாமூர்த்தி

b) தமிழர் சமுதாயம் – 2) தி. சு. நதராசன்

c) தமிழின் பண்பாட்டு வெளிகள் – 3) தமிழ் ஒளி

d) தமிழர் நாகரீகமும் பண்பாடும் – 4) பக்தவச்சலபாரதி

a) 4 3 1 2

b) 3 4 2 1

c) 3 1 4 2

*d) 4  3 2 1

2) செந்தமிழ்ச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்

a) வீரமாமுனிவர்

b) கால்டுவெல்

c) வ. சு. ப. மாணிக்கம்

*d) ஜி. யு. போப்

3) “கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்,

                வசைபாடக் காள மேகம்,

பண்பாய பகர்சந்தம் படிக்காசு”

என்று பாடியவர் யார்

a) அழகியசொக்கநாதர்

*b) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

c) சோமசுந்தரபாரதியார்

d) மகாகவி பாரதியார்

4) [மல்லல்] மூதூர் வயவேந்தே- அடைப்புக்குறிக்குள் உள்ள சொல்லின் பொருள் என்ன?

a) மறுமை

b) பூவரசு மரம்

*c) வளம்

d) பெரிய

5) இலக்கணக் குறிப்பறிக, மலர்க்கண்ணி-

a) இரண்டாம் வேற்றுமைத் தொகை

b) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

c) மூன்றாம் வேற்றுமைத் தொகை

*d) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

6) தாழ்பூந்துறை இலக்கணக் குறிப்பு தருக

a) உருவகம்

b) உவமைத் தொகை

c) வேற்றுமைத் தொகை

*d) வினைத் தொகை

7) பொருந்தாத இணை எது?

a) ஏறுகோள் – எருதுகட்டி

*b) திருவாரூர் – கரிக்கையூர்

c) ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு

d) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

8) சரியாக அமைந்துள்ள சொற்றொடரைக் காண்க

*அ( வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பையும் அறிவையும் வளர்க்கும் வாயிலாக விருந்தோம்புதல் விளங்கியது

ஆ) அடிப்படையான அன்பையும் வாழ்க்கைக்கு அறிவையும் வளர்க்கும் வாயிலாக விருந்தோம்புதல் விளங்கியது.

இ) அன்பையும் அறிவையும் விருந்தோம்புதல் வாழ்க்கைக்கு அடிப்படையான வளர்க்கும் வாயிலாக விளங்கியது.

ஈ) வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பையும் அறிவையும் வளர்க்கும் விளங்கியது வாயிலாக விருந்தோம்புதல்

9) ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

a) நுகர்தல்

*b) தொடு உணர்வு

c) கேட்டல்

d) காணல்

10) “உலக வரலாற்றிலேயே, மேதையான மாணிக்கவாசகரை விட, புலமை, உழைப்பு, துண்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதைக் கவர்பவர் வேறு யாரும் இல்லை”

இக்கூற்று யாருடையது

a) கால்டுவெல்

b) கிரௌள்

*c) ஜி. யு. போப்

d) எல்லிஸ்

11) பிரித்தறிக, நற்றிறம்

a) நல் + திறம்

*b) நன்மை + திறம்

c) நல்ல + திறம்

d)  நற் + திறம்

12) அடைப்புக்குறியிடப்பட்ட சொல்லுக்கு உரிய எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடு

மெத்த வணிகலனும் [மேவலால்]

a) பொருந்துதல்

b) பெறுதல்

*c) இழத்தல்

d) நீக்குதல்

13) பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு

a) வேரி

b) முருகு

c) மது

*d) கோடு

14) வினைகளை வினை மரபுகளோடு பொருத்துக

a) இலை – 1) கொய்

b) பால் – 2) குடி

c) தண்ணீர் – 3) பருகு

d) பூ – 4) பறி

a) 1 2 3 4

*b) 4 3 2 1

c) 2 3 1 4

d) 3 2 4 1

15) “தொண்டர்சீர் பரவுவார்“ என்று போற்றப்படுபவர் யார் ?

a) அப்பூதியடிகள்

b) திருநாவுக்கரசர்

*c) சேக்கிழார்

d) திருஞானசம்பந்தர்

16) “யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

a) சொல்லாகு பெயர்

b) கருத்தாகு பெயர்

c) காரியவாகு பெயர்

*d) கருவியாகு பெயர்

17) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

a) சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது

b) திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது

c) விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்

*d) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

18) ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் பொருத்துக

a) பண்டம் – 1) sculptures

b) சிற்பங்கள் – Commodity

c) பாரம்பரியம் – Adulteration

d) கலப்படம் – Heritage

a) 3 1 2 4

*b) 2 1 4 3

c) 2 1 3 4

d) 3 4 1 2

19) ஒருமை பண்மைப் பிழையுள்ள தொடரைக் காண்க

a) ஆசிரியர் வந்தார்

b) மக்கள் கூடினர்

*c) பசு கன்றைத் தேடின

d) ஆடு மேய்ந்தது

20) ஒலி வேறுபாடறிந்து பொருத்துக

a) காண் – 1) காடு

b) கான் – 2) பார்

c) மணம் – 3) உள்ளம்

d) மனம் – 4) நாற்றம்

a) 1 2 3 4

b) 2 1 3 4

c) 1 2 4 3

*d) 2 1 4 3

21) தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்

இது எவ்வகைத் தொடர்

a) தன்வினை

*b) பிறவினை

c) செய்வினை

d) செயப்பாட்டுவினை

22) கவிதா உரை படித்தாள்

இது எவ்வகைத் தொடர்

*a) தன்வினைத் தொடர்

b) பிறவினைத் தொடர்

c) செய்வினைத் தொடர்

d) செயப்பாட்டுவினைத் தொடர்

23) வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவது இல்

இவ்வடியில் உள்ள ஆற்றுணா என்ற சொல்லின் பொருள் என்ன

*a) கட்டுச்சோறு

b) ஆற்றாமை

c) ஆற்று நீர்

d) ஆராத உணவு

24) பழமொழியை நிறைவு செய்க

 மெல்லப் பாயும் தண்ணீர் ……….. கரைக்கும்

a) மண்ணையும்

b) உப்பையும்

*c) கல்லையும்

d) சர்க்கரையையும்

25) உவமைத்தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு

கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல    

a) திட்டமிட்ட நிகழ்வு

*b) எதிர்பாரா நிகழ்வு

c) தற்செயல் நிகழ்வு

d) வேடிக்கையான நிகழ்வு

26) உவமைத்தொடருக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடு

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல

a) திட்டமிட்ட நிகழ்வு

b) எதிர்பாரா நிகழ்வு

*c) தற்செயல் நிகழ்வு

d) வேடிக்கையான நிகழ்வு

27) வேர்ச்சொல்லைக் கண்டறிக, கடந்தான்

a) கடந்து

b) கடந்த

*c) கட

d) கடக்க

28) வினையாலணையும் பெயர் அல்லாததைக் கண்டறி

a) பொறுத்தார்

b) ஒறுத்தார்

c) இகழ்ந்தார்

*d) செதுக்கியது

29) சொற்களை அகரவரிசைப்படுத்துக

a) சட்டை, சட்டம், சக்கரம், சங்கு,

b) சங்கு, சக்கரம், சட்டம், சட்டை

*c) சக்கரம், சங்கு, சட்டம், சட்டை

d) சக்கரம், சங்கு, சட்டை, சட்டம்

30) “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீரோ என சேரிதொரும் நுவலும்”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a) புறநானூறு

b) நற்றிணை

*c) அகநானூறு

d) களவழி நாற்பது

31) “ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு

ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும்

ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்!”

என்று பாடியவர் யார்

a) பாரதிதாசன்

b) காசி ஆனந்தன்

*c) பெருஞ்சித்திரனார்

d) பாரதியார்

32) அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை

இக்குறளில் பயின்றுவரும் மோனை எது

a) இணை மோனை

b) கூழை மோனை

c) மேற்கதுவாய் மோனை

*d) கீழ்க்கதுவாய் மோனை

33) உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து

இக்குறளில் பயின்றுவரும் அணி எது

a) சொல் பின்வருநிலை அணி

b) பொருள் பின்வருநிலை அணி

*c) சொற்பொருள் பின்வருநிலை அணி

d) பிரிது மொழிதல் அணி

34) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு

இக்குறளில் பயின்றுவரும் எதுகை வகையைக் கண்டறி

a) அடி எதுகை

b) சீர் எதுகை

*c) அடி எதுகை, சீர் எதுகை

d) இணை எதுகை

35) சொல்ல வந்த கருத்துகளை அதிக உள்ளுரைகளைக் கொண்டு உரைக்கும் நூல் என்று கருதப்படும் நூல் எது

a) நற்றிணை

b) குறுந்தொகை

c) புறநானூறு

*d) அகநானூறு

36) ஏழு என்ற எண்ணுப்பெயர் திருக்குறளில் எத்தனை இடங்களில் இடம்பெறுகிறது

a) 7

*b) 8

c) 9

d) 10

37) கடிகை என்ற சொல்லின் பொறுல் என்ன

*a) அணிகலன்

b) கடித்தல்

c) கடுகு

d) காரம்

38) கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும் – பாத்துண்ணும்

தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல்

இப்பாடல் இடம்பெற்றுள்ள அற நூல் எது

a) ஏலாதி

b) சிறுபஞ்சமூலலம்

*c) திரிகடுகம்

d) பழமொழி நானூறு

39) பொருந்தாத ஒன்றைக் காண்க

a) புரட்சிக் காப்பியம்

b) பொதுமைக் காப்பியம்

c) வரலாற்றுக் காப்பியம்

*d) சீர்திருத்தக் காப்பியம்

40) தான் செங்குட்டுவனின் தம்பி என்பதை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் எந்தக் காதையில் குறிப்பிடுகிறார்

a) அடைக்கலக் காதை

b) காணல் வரி

c) மங்கல வாழ்த்துக் காதை

*d) வரந்தரு காதை

41) “கற்ற பெண்களை இந்த நாடு – தன்

கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு!”

இவ்வடிகளுக்குச் சொந்தக்காரர் யார்

a) பாரதியார்

*b) பாரதிதாசன்

c) கவிமணி

d) நாமக்கல் கவிஞர்

42) அண்ணம் ஆடும் நீர்நிலையை எருமை கலக்குதல், வாளை மீன்கள் பாக்கு மரங்களில் தாவுதல் ஆகிய காட்சிகள் எதைப் போன்று இருந்தன என்று பெரியபுராணம் கூறுகிறது

a) கரிய மேகங்கள் பொன்மலையை வலமாகச் சுற்றுதல்

b) கருமேகங்கள் முழு நிலவைத் தொடர்ந்து செல்லுதல்

*c) நிலையான வானவில்

d) வலிமையற்றவர் வலிமையுடையவரைக் கண்டு அஞ்சுதல்

43) சரியான கூற்றுகளைக் கண்டறிக

1) குலசேகர ாழ்வார் வித்துவக்கோட்டில் பிறந்தவர்.

2) அவர் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள இறைவனான உய்யவந்த பெருமாளைத் தந்தையாக உருவகித்துப் பாடினார்

3) அவர் பாடிய நூற்றைந்து பாசுரங்களின் தொகுப்பு பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படுகிறது

4) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தின் ஐந்தாம் திருமொழியாகும்

a) 1 2 சரி

b) 1 3 சரி

*c) 3 4 சரி

d) 1 2 3 4 சரி

44) பை என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குறிய பொருள் என்ன

a) பசுமை

*b) இளமை

c) வறுமை

d) முதுமை

45) படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

இப்பாடலின் ஆசிரியர் யார்

a) குணங்குடி மஸ்தான் சாகிபு

*b) திருமூலர்

c) தாயுமானவர்

d) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

46) பொருந்தாத இணையைக் காண்க

a) கண்ணதாசன் – காரைமுத்துப் புலவர்

*b) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – பகுத்தறிவுக் கவிராயர்

c) உவமைக் கவிஞர் – சுரதா

d) வானிதாசன் – கவிஞரேறு

47) ந. பிச்சமூர்த்தி பற்றிய தவறான கூற்றைக் காண்க

1) இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை அலுவலராகப் பணியாற்றியவர்

2)  ரேவதி என்ற புணைப்பெயரில் புதுக்கவிதை படைத்தவர்

3) அவரது முதல் கவிதைத் தொகுப்பு சயன்சுக்கு பலி

4) ஹணுமன், நவ இந்தியா இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்

a) 1, 2 தவறு

b) 1, 3 தவறு

*c) 3, 4 தவறு

d) 2, 3 தவறு

48) இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்

a) வைரமுத்து

b) வல்லிக்கண்ணன்

*c) சிற்பி பாலசுப்ரமணியன்

d) சி. சு. செல்லப்பா

49) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களுள் ஒன்று எது

a) மயிலாட்டம்

ஆ, ஒயிலாட்டம்

c) தேவராட்டம்

*d) புலியாட்டம்

50) நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக

a) சாசனம் – 1) தி. ஜானகிராமன்

b) தாய்மைக்கு வரட்சியில்லை – 2) கந்தர்வன்

c) செய்தி – 3) வண்ணதாசன்

d) ஒளியிலே தெரிவது – 4) சு. சமுத்திரம்

*a) 2 4 1 3

b) 2 4 3 1

c) 3 4 2 1

d) 4 1 3 2

51) ஒரே கல்லிலமைந்த நவ கிரகம் எங்கு உள்ளது

a) பிரகதீஸ்வரர் ஆலயம்

b) திரிபுவன வீரேஸ்வரம்

c) ஐராவதேஸ்வரர் கோயில்

*d) கங்கைகொண்டசோழபுரம்

52) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் அண்மையில் கண்டுபிடிக்கப்படாத திராவிட மொழி எது

*a) குரூக்

b) குரும்பா

c) தங்கா

d) சோலிகா

53) பழத்தோல் வகைகளையும் அவற்றின் தன்மையையும் பொருத்துக

a) தொலி – 1) திண்ணமானது

b) தோல் – 2) மிகவும் மெல்லியது

c) ஓடு – 3) வன்மையானது

d) தோடு – 4) மிகவும் வன்மையானது

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 2 1 4 3

d) 2 3 4 1

54) தவறான இணையைக் காண்க

a) எழுத்தறிவற்றவர் ஏராளம் இந்நாட்டில். இது பெருங்கேடு – அண்ணா

*b) இளைஞர்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை  – பெரியார்

c) மணக்கொடை அளிக்கும் திருமணங்களில் கலந்துகொள்ளமாட்டேன் – காயிதேமில்லத்

d) தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்பேன் – ம. பொ. சி.

55) நெய்தல் நில ஊர்களில் இல்லாதது எது

a) கீழக்கரை

b) கோடியக்கரை

c) நீலாங்கரை

*d) ஆற்றங்கரை

56) எதுவுமில்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கான கரு தோன்றியது, வானம் தோன்றியது, நெருப்புப் பந்து போல பூமி தோன்றியது

என்ற அறிவியல் உண்மையைக் கூறும் இலக்கியம் எது

a) திருவாசகம்

b) தொல்காப்பியம்

*c) பரிபாடல்

d) புறநானூறு

57) எங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில்இரோமானியக் காசுகள் கிடைத்துள்ளன

a) அரிக்கமேடு

b) ஆதிச்சனல்லூர்

*c) கோவை

d) பல்லாவரம்

58) திருக்குறளுக்கு இருபத்தைந்து நாட்களில் உரை எழுதிய உரையாசிரியர் யார்

a) மு. வரதராசன்

*b) புலவர் குழந்தை

c) தஞ்சை ஞானப்பிரகாசம்

d) திருக்குறள் முனுசாமி

59) “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவன யாவையே”

விருந்தோம்பலைப் பற்றிய இப்பாடல் இடம்பெறும் நூல் எது

a) இராவண காவியம்

b) பெரியபுராணம்

c) சிலப்பதிகாரம்

*d) கம்பராமாயணம்

60) புலவர் இடைக்காடரை அவமதித்த அரசர் யார்

a) கூன்பாண்டியன்

b) அதிவீரராமபாண்டியன்

*c) குசேலபாண்டியன்

d) சுந்தரபாண்டியன்

61) தேம்பாவணி இயற்றப்பட்ட காலம்

a) பதினாறாம் நூற்றாண்டு

*b) பதினேழாம் நூற்றாண்டு

c) பதினெட்டாம் நூற்றாண்டு

d) பத்தொன்பதாம் நூற்றாண்டு

62) இராஜராஜசோழன் உலா நூலை இயற்றியவர் யார்

a) ஜெயங்கொண்டார்

*b) ஒட்டக்கூத்தர்

c) கம்பர்

d) புகழேந்தி

63) பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார்

a) தருமன்

b) சகுனி

*c) விதுரன்

d) திருதராட்டிரன்

64) “கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்”

என்று கூறியவர் யார்

*a) திரு. வி. க.

b) ம. பொ. சி

c) பாரதியார்

d) பாரதிதாசன்

65) நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக

a) தெய்வமணிமாலை  – 1) காளமேகப் புலவர்

b) திருவாரூர் நாண்மணிமாலை – 2) வேதநாயகம்பிள்ளை

c) பெண்மதிமாலை – 3) வள்ளலார்

d) சரஸ்வதிமாலை – 4) குமரகுருபர்

a) 4 3 2 1

*b) 3 4 2 1

c) 2 3 4 1

d) 2 1 4 3

66) மூவலூர் இராமாமிதம் அம்மையாரைத் தமிழ்நாட்டின் அன்னிபெசண்ட் என்று புகழ்ந்தவர் யார்

a) திரு. வி. க.

b) காந்தியடிகள்

*c) அண்ணா

d) பெரியார்

67) 2015 – ஆம் ஆண்டு அப்துல்கலாம் விருது பெற்றவர் யார்

a) அருணன் சுப்பையா

b) மயில்சாமி அண்ணாதுரை

c) சிவன்

*d) வளர்மதி

68) சென்னைப் பல்கலைக்கழகம் உ. வே. சா. அவர்களுக்கு எந்த ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது

a) 1930

*b) 1932

c) 1940

d) 1942

69) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியவர் யார்

a) உ. வே. சா

*b) தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

c) சி. இலக்குவனார்

d) பாவானர்

70) ஞானபோதினி இதழை சி. பூரணலிங்கத்துடன் சேர்ந்து தொடங்கியவர் யா்ர்

a) சீ. வை. தாமோதரம்பிள்ளை

b) தனிநாயகம் அடிகள்,

c) திரு. வி. க.

*d) பரிதிமாற்கலைஞர்,

71) செய்குதம்பி பாவலர் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) சீறாப்புராணம் நூலுக்கு உரை எழுதியுள்ளார்

2) சதாவதானி என்று அழைக்கப்படுகிறார்

3) கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்

4) இவருக்கு இடலாக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது

a) 1 2 3 சரி

b) 1 3 4 சரி

c) 1 2 4 சரி

*d) 1 2 3 4 சரி

72) அகில உலகத் தமிழாய்வு மன்றம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிருவனம் ஆகிய அமைப்புகள் தோன்றக் காரணமாக இருந்தவர் யார்

*a) தனிநாயகம் அடிகள்,

b) பாவானர்

c) ஆருமுக நாவலர்

d) மறைமலை அடிகள்,

73) தமிழ் விருந்து என்ற நூலின் ஆசிரியர் யார்

a) வையாபுரிப்பிள்ளை

*ஆ.இரா. பி. சேதுப்பிள்ளை

c) சீ. வை. தாமோதரம்பிள்ளை

d) சுந்தரம்பிள்ளை

74) சிறந்த நடிகருக்குக் கொடுக்கப்படும் பட்டம் எது

a) கலைமாமணி

b) பத்மஸ்ரீ

c) பாரதரத்னா

*d) பாரத்

75) நாட்காட்டி ஓவியங்களின் முன்னோடி எனக் கருதப்படுபவர் யார்

d. இராஜா ரவிவர்மா

b) பாரதியார்

*c) கொண்டையராஜு

d) ஓவியர்இராம் கி

76) மணிமேகலைக் காப்பியத்தில் விழாவரைக் காதை அமைந்துள்ள இடம் எது

*a) முதலாவது காதை

b) இரண்டாவது காதை

c) ஐந்தாவது காதை

d) ஏழாவது காதை

77) “உன் மொழியையும் நாட்டையும்  போற்றுவதற்காக மற்றவர்களின் மொழியையும் நாட்டையும் தூற்றாதே; பழிக்காதே; வெறுக்காதே”

என்று மொழிப்பற்று மற்றும் நாட்டுப்பற்றின் இன்றியமையாமையைக் கடிதத்தின் மூலம் உணர்த்தியவர் யார்

a) அண்ணா

b) காந்தியடிகள்

c) ஜவஹர்லால் நேரு

*d) மு. வரதராசனார்

78) அன்னைபூமி என்ற புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர் யார்

a) சே. பிருந்தா

b) இரா. மீனாட்சி

*c) இராஜலட்சுமி

d) இராஜம் கிருஷ்ணன்

79) மாறுபட்ட ஒன்றைக் கண்டறிக

a) இராஜம் கிருஷ்ணன் – வேருக்கு நீர்

b) கல்மரம் – திலகவதி

*c) இந்திரா பார்த்தசாரதி – குருதிப்புணல்

d) அன்னைபூமி – கோமகள்

80) பெயர்வகையைக் கண்டறிக (கருவேலங்காடு)

a) இடுகுறிப் பொதுப்பேயர்

b) காரணப் பொதுப்பெயர்

*c) இடுகுறிச் சிறப்புப்பெயர்

d) காரணச் சிறப்புப்பெயர்

81) நேற்று மாலை மழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன

இது எவ்வகைத் தொடர்

a) தனிநிலைத் தொடர்

b) தொடர்நிலைத் தொடர்

*c) கலவைத் தொடர்

d) செய்தித்தொடர்

82) குடியரசுத்தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது

விடைக்கேற்ற வினா அமைக்க

*a) குடியரசுத்தலைவருக்கான தேர்தல் எப்போது நடைபெறும்

b) குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற்றதா

c) எத்தனையாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது

d) குடியரசுத் தலைவர் தேர்தல் ஏன் நடைபெறுகிறது

83) குடும்பம் என்ற சொல் முதலில் இடம்பெற்ற இலக்கியம் எது

a) தொல்காப்பியம்

*b) திருக்குறள்

c) தேவாரம்

d) திருமந்திரம்

84) திருக்குறளில் விடுபட்ட சீரை நிறப்புக

சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்

சொல்லிய ……… செயல்

a) எண்ணம்

b) திண்ணம்

*c) வண்ணம்

d) சின்னம்

85) அன்புள இனிநாம்ோர் ஐவர்கள் உளரானோம்

இராமன் குகனை என்ன உறவாக ஏற்றுக்கொள்வதாக இவ்வடி கூறுகிறது

a) நண்பன்

b) பகைவன்

*c) சகோதரன்

d) விருந்தினன்

86) தமிழரின் வரலாற்றுக் களஞ்சியம் எனக் கருதப்படும் நூல் எது

a) அகநானூறு

*b) புறநானூறு

c) பழமொழிநானூறு

d) நற்றிணை நானூறு

87) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்று ஔவையாரால் சிறப்பிக்கப்பட்ட கடையேழு வள்ளல் யார்

a) பாரி

b) பேகன்

*c) அதியன்

d) காரி

88) ஐங்குறுநூற்றின் அடிவரையறை என்ன

a) 4 – 8

b) 13 – 31

c) 9 – 12

*d) 3 – 6

89) திரிகூடஇராசப்பரின் கவிதைக் கிரீடம் என்று அழைக்கப்படும் நூல் எது

*a) குற்றாலக்குரவஞ்சி

b) குற்றாலப் பிள்ளைத்தமிழ்

c) குற்றால மாலை

d) குற்றால யமக அந்தாதி

90) நெல்லுவகையை எண்ணினாலும் ………. வகையை எண்ணமுடியாது

a) கல்லு

b) சொல்லு

c) புல்லு

*d) பள்ளு

91) உடைய என்பது எந்த வேற்றுமையின் சொல்லுருபு ஆகும்

a) இரண்டாம் வேற்றுமை

b) நாண்காம் வேற்றுமை

*c) ஆறாம் வேற்றுமை

d) எட்டாம் வேற்றுமை

92) “ஒன்றென்றிரு தெய்வம்

உண்டென்றிரு”

என்று ஒரு கடவுள் வழிபாட்டை வலியுறுத்திய சித்தர் யார்

a) திருமூலர்

*b) பட்டினத்தார்

c) கடுவெளிச் சித்தர்

d) பாம்பாட்டிச் சித்தர்

93) ஒரு பெண்ணின் கதை என்பது ஜெயகாந்தனின் எவ்வகைப் படைப்பு

a) கவிதை

b) சிறுகதை

*c) புதினம்

d) கட்டுரை

94) நூலையு்ம் நூலாசிரியரையும் பொருத்துக

a) சுவரும் சுண்ணாம்பும் – 1) வானிதாசன்

b) குயில்பாட்டு – 2) பாரதிதாசன்

c) தமிழச்சியின் கத்தி – 3) பாரதியார்

d) எழிலோவியம் – 4) சுரதா

a) 4 1 3 2

*b) 4 3 2 1

c) 1 2 3 4

d) 3 4 2 1

95) எவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம்பெயர்கின்றன

a) நிலவு

b) விணிமீன்

c) புவியீர்ப்புப் புலம்

*d) இவை அனைத்தும்

96) கலீல் ஜிப்ரான் எந்த நாட்டைச் சார்ந்தவர்

a) பிரான்சு

b) இங்கிலாந்து

*c) லெபனான்

d) இலங்கை

97) கீழ்வரும் எந்த நூலகத்தில் இந்தியாவில் வெளியாகும் அனைத்து நூல்களின் ஒரு பிரதி பாதுகாக்கப்படுகிறது

a) தஞ்சை சரஸ்வதி நூலகம்

b) உ. வே. சா. நூலகம்

c) கீழ்த்திசை நூலகம்

*d) கன்னிமாரா நூலகம்

98) நேதாஜி என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார்

a) சுபாஷ் சந்திரபோஸ்

b) காயிதேமில்லத்

*c) முத்துராமலிங்கர்

d) ம. பொ. சி.

99) சங்ககாலப் பெண்களைப் போல இக்காலப் பெண்களும் கல்வி கற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற வேண்டும் என எடுத்துரைத்தவர் யார்

a) பெரியார்

b) அண்ணா

*c) அயோத்திதாசர்

d) அம்பேத்கார்

100) இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் பொருத்துக

a) கந்தர்வன் – 1) ஜெகதீசன்

b) தமிழண்பன் – 2) நாகலிங்கம்

c) தாராபாரதி – 3) இராஜகோபாலன்

d) சுரதா – 4) இராதாகிருஷ்ணன்

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 2 1 4 3

d) 4 3 2 1

பொதுப்பாட வினாவிடைகள்:

1. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வு யாருடைய மேற்பார்வையில் தொடங்கியது?

*a) அலெக்சாண்டர் ரியா

b) ஏ.ஜே. ஸ்டூவர்ட்

C) ராபர்ட் கால்டுவெல்

D) ஆண்ட்ரூ ஜாகோர்

e) விடைத்தெரியவில்லை

2. தவறாகப் பொருந்திய இனையைக் கண்டறியவும்.

A) மெகஸ்தனிஸ் — இண்டிகா

B) தேவிசந்திரகுப்தம் – விசாகதத்தர்

C) லகுசம்ஹிதா – வராஹமிஹிரா

*D) மிருச்சகடிகம் – காளிதாசர்

e) விடைத்தெரியவில்லை

3. குப்தர்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. அவர்கள் பாக் ஓவியங்களை உருவாக்கினர்.

II. இந்தக் காலகட்டத்தில்தான் மனுஸ்மிருதி தோன்றியது.

III. விவசாயத்தில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

IV. அவர்கள் சமந்தா முறையை அறிமுகப்படுத்தினர்.

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானது?

A) I, II, III மட்டும்

B) I, II, IV மட்டும் 

*C) I, III, IV மட்டும்

D) II, III, IV மட்டும்

e) விடைத்தெரியவில்லை

4. ஞயாபத்-இ-குதை (Niyabat–i–Khudai ) என்பது யாரால் கொண்டுவரப்பட்டது?

*a) பால்பன்

B) இல்துமிஷ்

C) குதுப்–உத்-தின்–ஐபெக்

D) அலாவுதீன் கில்ஜி

E) விடைத்தெரியவில்லை

5. பின்வரும் போர்களை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.

I. காக்ரா போர்

II. கனோசி  போர்.

III சௌசா போர்.

IV சந்தேரி போர்

குறியீடுகள்:

A) II-I-III-IV

*B) IV-I-III-II

C) II-IV-I-III

D) III-IV-I-II

E) விடைத்தெரியவில்லை

6. விக்ரமஷிலா பல்கலைக்கழகம் பௌத்தத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?

A) ஹீனயானம்

B) மஹாயானம்

*C) வஜ்ராயனம்

D) தேரவாதம்

E) விடைத்தெரியவில்லை

7. அலாவுதீன் கில்ஜி பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. பொருட்களின் விலைகளை மிகக் குறைவாக நிர்ணயித்தார்.

II. பொருட்களைப் பங்கிட்டு வழங்குதல் முறையை அறிமுகப்படுத்தினார்.

III. விளைபொருட்களின் மீது  50% வரியாக நிர்ணயித்தார்.

IV. பெஷாவரில் இருந்து சோனார்கான் வரை கிராண்ட் டிரங்க் எனப்படும் சாலையை உருவாக்கினார்.

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானது?

*A) I, II, III மட்டும்

B) I, II, IV மட்டும் 

C) II, III, IV மட்டும்

D) அனைத்தும்

E) விடைத்தெரியவில்லை

8. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:

கூற்று (A): ஜோதிபா பூலே சாதி அமைப்பை மனித சமத்துவக் கொள்கைக்கு எதிரானதாகக் கருதினார்.

காரணம் (ஆர்) : பூலே மக்களின் கல்வியை, விடுதலை மற்றும் புரட்சிகர காரணியாகக் கருதினார்.

குறியீடுகள்:

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)இன் சரியான விளக்கமாகும்.

*B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)இன் சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி, ஆனால் (ஆர்) தவறானது.

D) (A) தவறு ஆனால் (R) சரி

e) விடைத்தெரியவில்லை

9. பட்டியல்-I-ஐ பட்டியல்-II-உடன் பொருத்தவும்.

பட்டியல்-I   —    பட்டியல்-II

A) ஆர்காட் போர்   —  1. முதல் ஆங்கிலோ – மைசூர் போர்

b) சாந்தோம் போர்  —  2. இரண்டாம் கர்நாடகப் போர்

c) வந்தவாசி போர்  —  3. மூன்றாவது கர்நாடகப் போர்

d) போர்டோ-நோவோ போர்  —  4. முதல் கர்நாடகப் போர்

குறியீடுகள்: a b c d

A) 4 1 3 2

*B) 4 1 2 3

C) 2 4 3 1

D) 2 4 1 3

E) விடைத்தெரியவில்லை

10. வங்காள குத்தகைச் சட்டம் பின்வரும் எந்த கிளர்ச்சியின் விளைவாக உருவானது?

*A) இண்டிகோ கிளர்ச்சி

B) பாப்னா கிளர்ச்சி

C) தக்கான கிழர்ச்சி

D) முண்டா கிளர்ச்சி

E) விடைத்தெரியவில்லை

11. “பிரம்ம சமாஜ நாடகத்தை” எழுதியவர் யார்?

A) தேவேந்திரநாத் தாகூர்

B) ராஜா ராம்மோகன் ராய்

C) கேசப் சந்திர சென்

*D) காசி விஸ்வநாத முதலியார்

E) விடைத்தெரியவில்லை

12. “இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் சுதந்திரம்” என்று கூறியவர் யார்?

A) பால கங்காதர் திலகர்

*B) அன்னி பெசன்ட்

C) ஜிதேந்திரலால் பானர்ஜி

D) S. சுப்ரமணியம்

E) விடைத்தெரியவில்லை

13. நேரடி நடவடிக்கை நாள் எப்போது அறிவிக்கப்பட்டது?

A) 22 டிசம்பர் 1939

B) 6 ஆகஸ்ட் 1939

*C) 16 ஆகஸ்ட் 1946

D) 8 ஜனவரி 1933

E) விடைத்தெரியவில்லை

14. பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

கூற்று (A): லாலா லஜபதி ராய் 1907 சூரத் அமர்வின் தலைவராக இருப்பதற்கான வாய்ப்பை நிராகரித்தார்.

காரணம் (ஆர்): அவர் காங்கிரஸில் பிளவைத் தவிர்க்க விரும்பினார்.

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும், (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்.

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல.

C) (A) சரி ஆனால் (ஆர்) தவறானது.

D) (A) தவறு ஆனால் (R) சரி.

E) பதில் தெரியவில்லை

15. இரண்டாம் புலிகேசி பின்வரும் எந்த மன்னனை தோற்கடித்த பிறகு பரமேஸ்வரன் என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டார்?

A) மகேந்திரவர்மன் I

B) கீர்த்திவர்மன்

*C) ஹர்ஷவர்தனர்

D) மங்கலேசன்

E) விடைத்தெரியவில்லை

16. தமிழ்நாட்டில் கிலாபத் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I.  தமிழ்நாட்டில் கிலாபத் தினம் 17 அக்டோபர் 1920 அன்று அனுசரிக்கப்பட்டது.

II. யாகூப் ஹசன் தலைமையில் கிலாபத் கூட்டம் நடைபெற்றது.

III. வாணியம்பாடி கிலாபத் போராட்டத்தின் மையமாக இருந்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?

A) I, III மட்டும்

B) II மட்டும் 

*C) I, II மட்டும்

D) III மட்டும்

E) விடைத்தெரியவில்லை

17. பின்வரும் எந்த அரசியலமைப்பு விதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பானது?

A) விதி-76

B) விதி-74

*C) விதி-75

D) விதி-78

18. அரசியலமைப்பின் பின்வரும் அட்டவணைகளில் எது இந்தியாவில் “அரசியல் கட்சிகள்” அமைப்பு இருப்பதற்கான தெளிவான அரசியலமைப்பு அங்கீகாரத்தை அளிக்கிறது?

A) இரண்டாவது அட்டவணை

B) ஏழாவது அட்டவணை

*C) பத்தாவது அட்டவணை

D) ஒன்பதாவது அட்டவணை

E) விடைத்தெரியவில்லை

19. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142, சில நேரங்களில் செய்திகளில் இடம்பெருகிறது. இது கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?

*A) உச்ச நீதிமன்றத்தின் உன்மை அதிகார வரம்பு தொடர்பானது.

B) முழுமையான நீதியை வழங்க உச்ச நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

C) உயர் நீதிமன்றங்களில் இருந்து வரும் மேல்முறையீடுகளில் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகார வரம்பு.

D) நீதி பேறாணைகளை வெளியிடுவதற்கான உச்ச நீதிமன்றத்திற்கான அதிகாரங்கள்

E) விடைத்தெரியவில்லை

20. இந்திய அரசியலமைப்பில் உள்ள எந்தப் பிரிவு, ‘மாநிலங்களில் சட்ட மேலவைகளை ஒழித்தல் அல்லது உருவாக்குதல்’ என்பதோடு தொடர்புடையது?

A) பிரிவு 156

*B) பிரிவு 169

C) பிரிவு 176

D) பிரிவு 172

E) விடைத்தெரியவில்லை

21. அரசியலமைப்பில் உள்ள சிறப்பு விதிகளுடன் பின்வரும் மாநிலங்களை பொருத்தவும்.

பட்டியல்-I பட்டியல்-II

(மாநிலங்கள்)   (அரசியலமைப்பு விதி)

a) மணிப்பூர்  —  1. 371

B.  b) கர்நாடகா  —  2. 371

C.  c) அசாம்  —  3. 371 J.

குறியீடுகள்: a b c

A) 3 1 2

*B) 2 3 1

C) 2 1 3

D) 1 2 3

E) விடைத்தெரியவில்லை

22. பட்டியல்-I-ஐ பட்டியல்-II-உடன் பொருத்தவும்.

பட்டியல்-I பட்டியல்-II

(அரசியல் அறிஞர்)   (இந்திய கூட்டாட்சி மீதான விமர்சனம்)

A) கே.சி. Wheare  —  1. பகுதியளவு கூட்டாட்சி

b) Morris Jones  —  2. பேரம் பேசும் கூட்டாட்சி

c) Granville Austin  — 3. கூட்டுறவு கூட்டாட்சி

d) Ivor Jennings  —  4. மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி

குறியீடுகள்: a bc d

A) 1 4 2 3

B) 2 1 3 4

*C) 1 2 3 4

D) 4 1 2 3

E) விடைத்தெரியவில்லை

23. ஒரு மாநிலத்தை பின்வரும் எவ்வழியின் மூலம் யூனியன் பிரதேசமாக (UT) மாற்ற இயலும்?

A) குடியரசுத் தலைவரின் நிர்வாக உத்தரவின் (executive order) மூலம்

*B) பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம்

C) பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற அரசியலமைப்பு திருத்தம்ச் சட்டத்தின் மூலம்

D) சம்மந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர்

e) விடைத்தெரியவில்லை

23. பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளில் எது இந்திய அரசியலமைப்பு  முதலில் நடைமுறைக்கு வந்தபோது வழங்கப்படவில்லை?

A) கிராம பஞ்சாயத்துகலை  அமைத்தல்

*B) காடுகளையும் வனவிலங்குகளையும் பாதுகாத்தல்

C) குடிமக்களுக்கான ஒரேமாதிறியான சிவில் சட்டம்

D) விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு

e) விடைத்தெரியவில்லை

24. இந்திய அரசியலமைப்பில் உள்ள சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் சிந்தனைகள்  எங்கிருந்து பெறப்பட்டது?

A) அமெரிக்க அரசியலமைப்பு

B) பிரிட்டிஷ் அரசியலமைப்பு

*C) பிரஞ்சு அரசியலமைப்பு

D) கனடிய அரசியலமைப்பு

E) விடைத்தெரியவில்லை

25. இந்திய அரசியலமைப்பின் கீழ், பின்வருவனவற்றில் எது அடிப்படைக் கடமை அல்ல?

*A) பொதுத் தேர்தலில் வாக்களித்தல்

B) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்

C) பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்

D) அரசியலமைப்பைக் கடைப்பிடித்து அதன் இலட்சியங்களுக்கு மதிப்பளித்தல்

E) விடைத்தெரியவில்லை

26. இந்தியாவில் முதன்முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1956

*B) 1959

C) 1960

D) 1958

E) விடைத்தெரியவில்லை

27. பின்வரும் சட்டங்களை  அதன் ஆண்டுடன் பொருத்தவும்.

பட்டியல்-I  —    பட்டியல்-II

a) பணமோசடி தடுப்புச் சட்டம்  —  1. 1988

b) ஊழல் தடுப்புச் சட்டம்  —  2. 2015

c) வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா  (வரி விதித்தல்)  —  3. 2002

d) பினாமி பரிவர்த்தனைகள் தடைத் திருத்தச்  சட்டம் —  4. 2016

குறியீடுகள்: a b c d

*A) 3 1 2 4

B) 2 3 4 1

C) 3 2 1 4

D) 2 4 1 3

E) விடைத்தெரியவில்லை

28. தமிழ்நாடு தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

I. மக்கள் தொகை கணக்கெடுப்பு  2011 படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

II. (மக்கள் தொகை கணக்கெடுப்பு  2011 படி, தமிழ்நாட்டின் பாலின விகிதம் கேரளாவை விட அதிகமாக உள்ளது.

III.(2015-16 படி,  உயர்கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தை விட அதிகமாக உள்ளது.

குறியீடுகள்:

A) I மற்றும் II மட்டும்

B) II மற்றும் III மட்டும்

*C) I மற்றும் III மட்டும்

D) மேலே உள்ள அனைத்தும் 

E) விடைத்தெரியவில்லை

29. 1991-இன் புதிய பொருளாதாரக் கொள்கை எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது?

A) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்

*B) எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 

C) ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்

D) ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் 

E) விடைத்தெரியவில்லை

30. கீழ்க்கண்டவற்றில் எந்தப் பகுதி வேளாண் தொழில்துறை வழித்தடமாக அறிவிக்கப்பட உள்ளது?

A) கோயம்புத்தூர் – திருவாரூர்

B) திருச்சிராப்பள்ளி – திருப்பூர்

C) மதுரை – கடலூர்

*D) திருச்சிராப்பள்ளி – நாகப்பட்டினம்

E) விடைத்தெரியவில்லை

31. கிராமப்புற வறுமைக்கு கீழ்க்கண்டவற்றில் எது காரணம்?

*A) விவசாயம்் சாரா வேலையின்மை

B) அதிக வேலைவாய்ப்பு

C) குறைந்த பணவீக்க விகிதம்

D) அதிக முதலீடு.

E) விடைத்தெரியவில்லை

104   32. தமிழ்நாட்டில் காணப்படும் கனிமங்கள் தொடர்பான தவறான கூற்றை அடையாளம் காணவும்.

A) நெய்வேலியில் அதிகளவில் லிக்னைட் வளங்கள் உள்ளன.

B) சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை பகுதியில் இரும்பு படிவுகள் காணப்படுகின்றன

C) பாக்சைட் சேர்வராயன் மலைகளில் காணப்படுகிறது

*D) இல்மனைட் வேலூர் மாவட்டத்தில் காணப்படுகின்றன

E) விடைத்தெரியவில்லை

33. கீழ்க்கண்ட நீர்நிலைகளை கிழக்கிலிருந்து மேற்காக அமைக்கவும்.

I. கழுவெலி நீர் தேக்கம்

II. ஸ்டான்லி நீர்த்தேக்கம், 

III. சாத்தனூர் அணை, 

IV. பவானி அணை 

குறியீடுகள்:

A) IV-II-III, I

*B) I-III-II-IV

C) II-III-I-IV

D) III-I-II-IV 

E) விடைத்தெரியவில்லை

34. பின்வரும் எந்த கிரகத்தில் வளிமண்டலம் இல்லை?

A) செவ்வாய்

B) வெள்ளி

*C) புதன்

D) வியாழன் 

E) விடைத்தெரியவில்லை

35. 2019–20க்கான மாநில சுகாதாரக் குறியீடு தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. NITI ஆயோக் மாநில சுகாதார குறியீட்டை  வெளியிடுகிறது.

II. இதில் தமிழகம் முதலிடத்திலும், கேரளாவும்  தெலுங்கானாவும் 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?

*A) I மட்டும்

B) II மட்டும் 

C) I மற்றும் II இரண்டும்

D) I மற்றும் II இரண்டும் இல்லை

E) விடைத்தெரியவில்லை

36. களைஞர் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. கலைஞரின் அணைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சியையும் தன்னிறைவையும் உறுதி செய்வதாகும்

II. ஒவ்வொரு ஆண்டும், ஐந்தில் ஒரு பகுதி கிராம பஞ்சாயத்துகள் கண்டறியப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது?

A) I மட்டும்

B) II மட்டும் 

*C) I மற்றும் II இரண்டும்

D) I, II இரண்டும் இல்லை

E) விடைத்தெரியவில்லை

37. தமிழக அரசின் கல்வித் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. எண்ணும் எழுத்தும் திட்டமானது கல்வியறிவு மற்றும் எண்கள் சார்ந்த அறிவினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

II. இந்த இலக்கு 2025க்குள் அடையப்படும்.

III. 8 வயதிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் புரிந்துகொண்டு கற்கும் திறன் மற்றும் அடிப்படை எண்கணித திறன்களை பெற்றிருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?

A) I மட்டும்

B) III மட்டும்

*C) II மட்டும்

D) மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை 

E) விடைத்தெரியவில்லை

38. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

கூற்று (A): கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகியவை ‘தமிழ்நாட்டின் ஜவுளிப் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிடப்படுகின்றன.

காரணம் (ஆர்) : இவை தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி சந்தையைக் கொண்டுள்ளது

குறியீடுகள்:

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A-வின்)  சரியான விளக்கம்

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A) சரியான விளக்கம் அல்ல )

C) (A) உண்மை ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) உண்மை

E) விடைத்தெரியவில்லை

39. பின்வருபவைகளில் பேரிடர் மேலாண்மைக்கான மாநில உதவி எண் எது?

A) 1070

*B) 1077

C) 1098

D) 108

E) விடைத்தெரியவில்லை

40. பட்டியல்-I-ஐ பட்டியல்-II-உடன் பொருத்தவும்.

பட்டியல்-I  —    பட்டியல்-II 

(பருவங்கள்) —   (மாதங்கள்)

அ) குளிர்காலம்  —  1. மார்ச் – மே

ஆ) கோடை காலம்  —  2. அக்டோபர் – டிசம்பர்

இ) மழைக்காலம்  —  3. ஜூன் – செப்டம்பர்

ஈ) வடகிழக்கு பருவமழை காலம்  —  4. ஜனவரி – பிப்ரவரி

குறியீடுகள்:

A) 2 1 4 3

*B) 4 1 3 2

C) 2 3 4 1

D) 4 3 2 1

E) விடைத்தெரியவில்லை

41. பின்வருவனவற்றில் எது இளஞ்சிவப்பு புரட்சியின் (Pink Revolution) கீழ் வருவதில்லை?

A) வெங்காய உற்பத்தி

*B) மருந்துகள்

C) இறால் உற்பத்தி

D) இறைச்சி உற்பத்தி 

E) விடைத்தெரியவில்லை

42. கிளாஸ்கோவில் நடைபெற்ற COP-26 மாநாடு கீழ்காண்பவைகளில் எதனோடு தொடர்புடையது?

A) பாலைவனமாக்கல்

*B) காலநிலை மாற்றம்

C) வனப் பாதுகாப்பு

D) பேரிடர் மேலாண்மை

E) விடைத்தெரியவில்லை

43, பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. மயிலாடுதுறை என்பது தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாகும்.

II. தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியை எல்லையாகக் கொண்டுள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ளகூற்றுகளில் எது தவறானது?

*A) I மட்டும்

B) II மட்டும் 

C) I மற்றும் II இரண்டும்

D) இரண்டும் சரி

E) விடைத்தெரியவில்லை

44. பட்டியல்-I-ஐ பட்டியல்-II-உடன் பொருத்தவும்.

பட்டியல்-I —   பட்டியல்-II

(வறுமையின் வகை)   —  (வரையறை)

அ) ஒப்பீட்டு வறுமை  —  1. அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை

ஆ) சூழ்நிலை வறுமை  —  2. வருமான சமத்துவமின்மையை அளவிடுதல் 

இ) முழுமையான வறுமை  —  3. பாதகமான சூழலின் வெளிப்பாடு

ஈ) சுழற்சி வறுமை. 4. வரையறுக்கப்பட்ட காலத்திற்கு வறுமை

குறியீடுகள்: a b c d

*A) 2 3 1 4

B) 3 2 4 1

C) 2 1 4 3

D) 3 4 1 2

E) விடைத்தெரியவில்லை

45. பின்வருவனவற்றில் எது தற்போது சூரிய-உதைய தொழிற்துறை “Sunrise Industry” என்று அழைக்கப்படுகிறது?

A) அனல் மின் தொழில்கள் 

B) ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி

*C) சூரிய மின்களன் உற்பத்தி 

D) உப்பு உற்பத்தி 

E) விடைத்தெரியவில்லை

46. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி?

(A) 5501/சதுர கி.மீ

*(B 555 /சதுர கி.மீ

(C) 560/ச.கி.மீ

(D) 565/ச.கி.மீ

(E) விடைத்தெரியவில்லை

47. பின்வரும் எந்தத் திட்டம் தமிழக அரசால்  விதவை மறுமணத்தை ஊக்குவிக்கவும் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் தொடங்கப்பட்டது?

A) சத்யவானி அம்மையார் நிணைவுத் திட்டம்

*B) தர்மாம்பாள் அம்மையார் நிணைவுத் திட்டம்

C) ஈ.வே.ரா. மணியம்மை நிணைவுத் திட்டம்

D) முவலூர் ராமாமிர்தம் அம்மையார் நிணைவுத் திட்டம்

48. அன்மையில் தமிழகத்தில் கிராமசபை கூட்டம் ஆண்டுக்கு ஆறு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு நாட்கள் எவை?

A) பிப்ரவரி-21 மற்றும் ஜூன்-1

*B) மார்ச்-22 மற்றும் நவம்பர்-1

C) அக்டோபர்-2 மற்றும் ஆகஸ்ட்-15

D) பிப்ரவரி-21 மற்றும் நவம்பர்-1

E) விடைத்தெரியவில்லை

49. 2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை எந்த நாடு நடத்தவுள்ளது?

*A) ஆஸ்திரேலியா

B) இங்கிலாந்து

C) இந்தியா

D) மலேசியா

E) விடைத்தெரியவில்லை

50. கீழ்காண்பவர்களில் 2021 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்களை கண்டறிக.

I. சிகுரோ மனாபே

II. க்லௌஸ் ஹசல்மன்

III. ஜியோர்ஜியோ பாரிசி

IV. டேவிட் ஜூலியஸ்

வி. டேவிட் கார்ட்

குறியீடுகள்:

*A) I, II, III மட்டும்

B) II, III, IV மட்டும்

C) I, III, IV மட்டும்

D) II, IV, V மட்டும்

E) விடைத்தெரியவில்லை

51. வாடிகன் நகரத்தின் போப்பால் புனிதர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் முதல் புனிதர் யார்?

A) பிலிப்

B) ஜான் துரை

*C) தேவசகாயம் பிள்ளை

D) DGS தினகரன்

E) விடைத்தெரியவில்லை

52. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக பிங்க்-போலீஸ் படையை தொடங்கியுள்ளது?

*A) கேரளா

B) கோவா

C) தமிழ்நாடு

D) மகாராஷ்டிரா

E) விடைத்தெரியவில்லை

53. தொல்லியல் தளங்களையும் அவை அமைந்துள்ள இடங்களையும் பொருத்தவும்.

பட்டியல்-I  —  பட்டியல்-II

A) மயிலாடும்பாறை  —  1. அரியலூர்

B) மலிகைமேடு  —  2. கிருஷ்ணகிரி

C) வேம்பகோட்டை —  3. திருநெல்வேலி

D) துளுக்காரப்பட்டி  —  4. விருதுநகர்

குறியீடுகள்: a b c d

*A) 2 1 4 3

B) 1 2 4 3

C) 4 1 2 3

D) 2 4 1 3

E) விடைத்தெரியவில்லை

54. ‘கீழடியில் கேட்ட தாளாட்டுகள்’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

*A) ஈரோடு தமிழன்பன்

B) பிரபஞ்சன்

C) இரையன்பு IAS

D) பசுவய்யா

55. “மேஃப்ளவர்-400” என்பது அன்மையில் செய்திகளில் இடம்பெற்றது. இதன் சிறப்பு என்ன?

(A) முதல் மனித ரோபோ

*(B) உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கப்பல்

(C) விளங்குகளுக்கான முதல் கோவிட் தடுப்பூசி

(D) மரபணு மாற்றப்பட்ட மலர்

56. மாநில ஆற்றல் திறன் குறியீடு 2020 (SEI) இல் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?

(A) கோவா

(B) கேரளா

(C) தமிழ்நாடு

*(D) கர்நாடகா

57. நீட்டப்பட்ட கைகளுடன் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவர் திடீரென்று தன் கைகளை வளைக்கும்போது கோண வேகம் என்னவாக இருக்கும்?

(A) குறையும்

*(B) அதிகரிக்கும்

(C) பூஜ்யம்

(D) மாறிலி

58. பின்வரும் இணைகளில் எது தவறானது?

1. குளோரோ புளோரோ கார்பன்கள் – குளிர்சாதனப் பெட்டிகள்

2. மீத்தேன் – வயல்களை உழுதல்

3. நைட்ரஸ் ஆக்சைடு – பசுக்களில் குடல் நொதித்தல்

4. கார்பன் டை ஆக்சைடு – புதைபடிவ எரிபொருட்களை எரித்தல்

(A) 1 மற்றும் 2

*(B) 2 மற்றும் 3

(சி) 3 மற்றும் 4

(D) 1 மற்றும் 4

59. கீழ்காண்பவைகளில் தவறான இணையை அடையாளம் காணவும்:

1. சலவை சோடா – Na2CO3

2. ப்ளீச்சிங் தூள் – CaO

3. பாரிஸ் சாந்து – CaSO4 1/2 H2O

4. சமையல் சோடா – NaHCO3

A) I மட்டும்

*(B) II

(C) III

(D) IV

60. தாவர உலகத்தில் எந்தத் தாவர இனங்கள் குறைவாக உள்ளன?

(A) பூஞ்சை

(B) டெரிடோஃபைட்

(C) பிரையோபைட்டுகள்

*(D) ஜிம்னோஸ்போர்ம்கள்

61. பின்வருவனவற்றில் எது உயிர் உரம் அல்ல?

(A) அனபேனா

(B) நஸ்டாக்

*(சி) லிண்டேன்

(D) ரைசோபியம்

62. 41. காய்கறிகளும் பழங்களும் வெட்டும்போது பழுப்பு நிறமாக மாறுவது ஏன்?

*(A) காற்றில் உள்ள ஃபினாலிக் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்கு இடையேயான வினை காரணமாக

(B) கனிமமற்ற பொருட்கள் உருவாக்கம் காரணமாக

(C) உப்புகள் உருவாவதால்

(D) காரங்களின் உருவாக்கம் காரணமாக

63. மழைநீர் அமிலத்தன்மையை அடைவதற்கான காரணம்?

A) PH மதிப்பு அதிகரிப்பதால்

*B) PH மதிப்பு குறைவதால்

C) PH மதிப்பு நடுநிலையாக இரு்ப்பதால்

D) PH மதிப்பு 9-ஐ அடையும்போது

64. காலத் தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன் எது?

*A) மெலட்டோனின்

B) TSH

C) LH

D) அட்ரினலீன்

65. நீதிக்கட்சியின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?

*(A) கோயம்புத்தூர்

(B) சேலம்

(C) திருச்சி

(D) மதுரை

(இ) விடைத்தெரியவில்லை

66. பின்வருவனவற்றை கருத்தில் கொள்க.

கூற்று (A): நீதிக்கட்சி பிராமணர் அல்லாதவர்களுக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோரியது.

காரணம் (ஆர்) : வகுப்புவாத பிரதிநிதித்துவ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸில் இருந்து பெரியார் வெளியேறினார்.

*(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) இன் சரியான விளக்கம்

(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) என்பது (A) இன் சரியான விளக்கம் அல்ல

(C) (A) சரி ஆனால் (R) தவறானது

(D) (A) தவறானது ஆனால் (R) சரி

(E) விடைத்தெரியவில்லை

67. பின்வருவனவற்றில் எது தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் சாதனை அல்ல?

A) இது வகுப்புவாத பிரதிநிதித்துவத்திற்கான சட்டங்களை இயற்றுவதில் வேலை செய்தது.

B) இது எந்த ஒரு தனிநபரும், அவர்களின் சாதி வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல், கோவில் நிர்வாகத்தில் உறுப்பினராக உதவியது.

C) தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதை அங்கீகரித்தது.

*D) இதன் முயற்சிகளால்  சித்திரவதை ஆணையம் நிறுவப்பட்டது.

e) விடைத்தெரியவில்லை

68. ராமலிங்க அடிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

A) சைவ தேவாரம் மற்றும் திருவாசகம் பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.

B) அவர் முறையான பள்ளிப்படிப்பைக் கொண்டிருக்கவில்லை.

C) சைவ மதத்தில் உள்ள பழமைவாதக் கூறுகளை அவரது கவிதைகள் எதிர்த்தன.

*D) அவர் தனது சித்தாந்தங்களைப் போதிக்க சத்திய ஞான சபையை நிறுவினார்.

E) பதில் தெரியவில்லை

69. பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

I. இயற்கை ஓவியம் எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் குரிஞ்சிப்பாட்டு.

II. இயற்கை தவம் எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் பதினெண் மேல்கணக்கு நூள்களில் ஒன்று.

மேல் காண்பவைகளில் எது சரியானதல்ல.

A) I

B) II

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

70. புது கவிதையின் “துருவ நட்சத்திரம்” என பாராட்டப்படுபவர் யார்?

A) பாரதியார்

B) நா. பிச்சமூர்த்தி

C) சிற்பி பாலசுப்ரமணியம்

D) பசுவய்யா

71. திருக்குறளில் “மக்கட்பேறு” அதிகாரம் எந்த இயலில் இடம்பெற்றுள்ளது?

A) துரவறவியல்

B) இல்லறவியல்

C) ஊழியல்

D) கற்பியல்

72. தமிழ் மாதின் இணிய உயிர்நிலை எனப் பாராட்டப்படும் நூள்?

A) உத்திர வேதம்

B) வேளாண் வேதம்

C) சதூர் வேதம்

D) நேமிநாதம்

73. பெரியார் எப்போது காங்கிரசில் இணைந்தார்?

(A) 1918

*(B) 1919

(C) 1920

(D) 1917

74. 2022 ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக  எந்த இந்திய திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது?

A) சர்தார் உத்தவ்

B) நாயாட்டு

C) மண்டேலா

*D) கூழாங்கல்

75. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

கூற்று ( A ) : இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.

காரணம் ( R ) : இவரது முயற்சியினால் அடையாரில் புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்பட்டது.

(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமாகும்

*(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமல்ல

(C) (A) சரி ஆனால் (R) தவறு

(D) (A) தவறு ஆனால் (R) சரி

76. ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ 10050 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க.

A. 3770

*B. 6700

C. 7750

D. 6750

77. நிர்மல் என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனி வட்டியாக ரூ 21280ஐ செலுத்தினார் எனில் அசலைக் காண்க.

*A. 56000

B. 55000

C. 61505

D. 52310

78. ஆண்டுக்கு 6% வட்டி வீதத்தில் ஒரு தொகை ரூ 17800 லிருந்து எத்தனை ஆண்டுகளில் ரூ 19936 ஆக உயரும்?

A. 4

B. 3.5

C. 3

*D. 2

79. ஒரு குறிப்பிட்ட அசல்  30000 தொகை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் முறையே 7 மற்றும் 8 சதவீதம் கூட்டு வட்டி முறையில் ாண்டுக்கு ொருமுறை கணக்கிடப்பட்டால், கிடைக்ககூடிய கூட்டு வட்டியை காண்க.

*A. 4668

B. 4357

C. 4238

D. 3668

80. ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765ஆக இருந்தது எனில், 2020ஆம் ஆண்டு மக்கள் தொகையைக் காண்க.

A. 212500

*B. 268276

C. 262556

D. 305276

81. மலர் 25 மீட்டர் துணி சுற்றலிலிருந்து 1.75 மீட்டர் துணியை வாங்கினார் எனில்  மலர் வாங்கிய துணியின் அளவை சதவீதத்தில் காண்க

*A. 7%

B. 15%

C. 10%

D. 8%

82. 50 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் முறையே 28 மற்றும் 22 மாணவிகளும், மாணவர்களும் இருக்கிறார்கள் எனில் அவர்களின் சதவீதங்களைக் காண்க

A. 22% & 28%

B. 22% & 28%

C. 44% & 56%

*D. 56% & 44%

83. ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 200 லிட்டர் ஆகும். தற்போது அதில் 40% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், 75% தண்ணீர் அதில் நிரைய வேண்டும் எனில், இன்னும் எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? 

A. 80

B. 150

*C. 70

D. 75

84. 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றிற்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றிற்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்? 

A. 26

*B. 36

C. 24

D. 18

85. 35 பெண்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர் எனில், 28 பெண்கள் அதே வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

A. 25

B. 24

*C. 20

D. 18

     86. 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாட்களில் வன்னமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் அந்த ஓவியத்தை எத்தனை மாணவர்கள் வன்னமிடுவர்? 

A. 70

*B. 60

C. 55

D. 61/3

87. சுருக்குக.

(489+375)^2 – (489-375)^2 / 489÷375

A) 4

B) 315

C) 489

D) 3

88. 5+7+17+…………95 என்ற கூட்டுத்தொடர் வரிசையின் கூடுதல் காண்க?

    A) 600

    B) 700

*    C)800

    D) 690

89. ஒரு தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான விடைக்கு 1/2 மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவன் 120 வினாக்களுக்கு விடையளித்து 45 மதிப்பெண்கள் பெற்றான் எனில், அவர் சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை எத்தனை?

    A) 45

*    B) 42

    C) 90

    D) 40

90. 3, 20, 63, 144, 275 என்ற தொடர் வரிசையில் அடுத்து உறுப்பு என்ன?

    A) 435

    B) 375

    C) 389

*    D) 468

91. CAMEL என்பது XZNVO என எழுதப்பட்டால் TIGER என்பது எவ்வாறு அமையும்

*    A) GRTVI

    B) GSTVI

    C) GTOIV

    D) GVIYR

92. மதிப்பு காண்க.

P+Q = 10, P*Q = 5 எனில் P/Q + Q/p = ?

A) 16

B) 15

*C) 18

D) 10

93. (A/B)^X-1 = (B/A)^X-3. எனில், X-இன் மதிப்பு காண்க.

A) -2

B) 4

*C) 2

D) -2

94. ஒரு பையில் 6 பச்சை நிற பந்துகளும், சில கருப்பு மற்றும் சிவப்பு நிற பந்துகளும் உள்ளன. கருப்பு பந்துகளின் எண்ணிக்கை சிவப்பு பந்துகளைப் போல் இரு மடங்காகும். பச்சை பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவு சிவப்பு பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவைப் போல் 3 மடங்காகும். இவ்வாறெனில்,  பையில் உள்ள கருப்பு பந்துகளின் எண்ணிக்கை என்ன? 

A) 6

*B) 4

C) 8

D) 3

95. ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/2 : 1/3 : 1/4 என்ற விகிதத்தில் உள்ளது அதன் சுற்றளவு 52 செ மீ எனில் அதன் மிகச்சிறிய பக்கத்தின் நீளம் என்ன?

    A) 6 செ மீ

    B) 8 செ மீ

*    C)12 செ மீ

    D) 16 செ மீ

96. ஒரு சதுரத்தின் பரப்பு 96% அதிகரிக்கப்பட்டால், சதுரத்தின் பக்கம் அதிகரிக்கும் சதவீதம் என்ன?

    A) 10%

    B) 20%

    C) 30%

*    D) 40%

97. 16 செ மீ ஆரமுள்ள ஒரு உலோக பந்து உருக்கப்பட்டு, 2 செ மீ ஆரமுள்ள சிறு பந்துகளாக்கப்பட்டால் எத்தனை பந்துகள் கிடைக்கும்?

*    A) 512

    B) 467

    C) 438

    D) 549

98. இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் 594 ரூபாய்க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 20% லாபமும், மற்றதில் 10% நட்டமும், அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட லாபம் அல்லது நட்ட தொகையைக் காணவும்.

A) 33 நட்டம்

B) 11 லாபம்

C) 23 நட்டம்

*D) 33 லாபம்

99. ஸ்டாலின் என்பவரின் வயது தன் மகன் உதயின்  வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?

(A) 30, 5

*(B) 36, 6

(C) 48, 8

(D) 24, 4

100. இரண்டு எண்களின் மீ.சி.ம, (LCM) 48 ஆகவும், மேலும் அந்த எண்கள் 2:3 என்ற விகிதத்திலும் இருந்தால், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகையானது எதற்கு சமமாக இருக்கும்?

(A) 28

(B) 32

*(C) 40

(D) 64ஏஏ    ஏஏ  

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *