கடந்த மே 8 2022 அன்று ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான குரூப் 2 மற்றும் 2 A ஆகிய பிரிவுகளுக்கான மாதிரித்தேர்வில் கேட்கப்பட்ட பகுதி 1 தமிழ்ப்பாட வினாக்களுக்கான விடைகள் வெளியிடப்படுகின்றன. நேர்ந்துவிட்ட தாமதத்துக்கு வருந்துகிறோம்.
குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
1. நூல் மற்றும் நூலாசிரியரைப் பொருத்துக
அ. புறப்பொருள் வெண்பாமாலை – 1. பவணந்தி முனிவர்
ஆ. தொன்னூல் விளக்கம் – 2. ஐயனாரிதனார்
இ. நன்னூல் – 3. புத்த மித்திரர்
ஈ. வீரசோழியம் – வீரமாமுனிவர்
அ. 2 1 3 4
ஆ. 4 2 1 3
*இ. 2 4 1 3
ஈ. 3 4 1 2
2. பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க
அ. மடங்கல் – சிங்கம்
ஆ. மேதி – எருமை
இ. உழுவை – புலி
*ஈ. அழுவம் – காடு
3. புலனழுக்கற்ற அந்தணாளன் என்ற தொடரால் சிறப்பிக்கப்படுபவர் யார்
*அ. கபிலர்
ஆ. நக்கீரர்
இ. பரணர்
ஈ. ஔவையார்
4. ஓங்கு எனும் அடைமொழி பெற்ற நூல் எது
அ. கலித்தொகை
*ஆ. பரிபாடல்
இ. பதிற்றுப்பத்து
ஈ. ஐங்குறுநூறு
5. அருட்பெருஞ்சோதி, பிரித்தெழுதுக
அ. அருமை + பெருமை + ஜோதி
ஆ. அருள் + பெரும் + ஜோதி
*இ. அருள் + பெருமை + ஜோதி
ஈ. அறுள் + பெரு + ஜோதி
6. எதிர்ச்சொற்களைப் பொருத்துக
அ. இடர் – 1. மூப்பு
ஆ. நகை – 2. தூய்மை
இ. மாசு – 3. அழுகை
ஈ. இளமை – 4. இன்பம்
அ. 1 2 3 4
ஆ. 2 1 3 4
*இ. 4 3 2 1
ஈ. 4 2 3 1
7. பொருத்துக
அ. காசு – 1. உயிர்த்தொடர்
ஆ. பயறு – 2. நெடில்தொடர்
இ. பாட்டு – 3. மென்றொடர்
ஈ. பந்து – 4. வன்றொடர்
அ. 1 2 3 4
ஆ. 4 3 2 1
இ. 2 1 3 4
*ஈ. 2 1 4 3
8. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
அ. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை வடித்தான்
ஆ. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிளை வடித்தான்
*இ. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை வடித்தான்
ஈ. சேரன் செங்குட்டுவன் கன்னகிக்குச் சிலை வடித்தான்
9. வழுவற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
அ. சான்றோர் அவையில் கூடியிருந்தன
ஆ. அவன் நாளை வந்தான்
இ. கயல் பாடம் படித்தான்
*ஈ. குரங்கு அலப்பியது
10. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
அ. மாடு மேய்ந்தன
*ஆ. குழந்தைகள் பாடினர்
இ. பேருந்துகள் நின்றது
ஈ. மாக்கள் திரிந்தது
11. பிறமொழிச் சொற்களையும் தொமிழ்ச் சொற்களையும் பொருத்துக
அ. அபிஷேகம் – 1. இடர்
ஆ. ஆபத்து – 2. வாழ்த்து
இ. ஆசிர்வாதம் – 3. உறுப்பினர்
ஈ. அங்கத்தினர் – 4. நீராட்டு
அ. 4 1 3 2
*ஆ. 4 1 2 3
இ. 3 4 1 2
ஈ. 3 4 2 1
12. voyage என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க
அ. படகுப் பயனம்
ஆ. கப்பல் பயனம்
*இ. கடற்பயனம்
ஈ. கட்டுமரப் பயனம்
13. ஒலி வேறுபாடறிந்து சொல்லைப் பொருளோடுப் பொருத்துக
அ. மனம் – 1. நாற்றம்
ஆ. மணம் – 2. உள்ளம்
இ. திரை – 3. வரி
ஈ. திறை – 4. அலை
அ. 1 2 3 4
*ஆ. 2 1 4 3
இ. 4 3 2 1
ஈ. 2 1 3 4
14. ஓரெழுத்து ஒருமொழியையும் உரிய பொருளையும் பொருத்துக
அ. ஐ – 1. ஒழுக்கம்
ஆ. கை – 2. இளமை
இ. பை – 3. நெருப்பு
ஈ. தீ – 4. தலைவன்
அ. 1 3 2 4
ஆ. 4 3 2 1
இ. 4 2 3 1
*ஈ. 4 1 2 3
15. வாழ்ந்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறி
அ. வாழ்ந்த
ஆ. வாழ்ந்து
இ. வாழும்
*ஈ. வாழ்
16. தோண்டுபவர், இலக்கணக் குறிப்பு தருக
அ. வினைமுற்று
ஆ. வினையெச்சம்
*இ. வினையாலனையும் பெயர்
ஈ. தொழிற்பெயர்
17. அகர வரிசைப்படிச் சரியாக அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்க
அ. அப்பா, அம்மா, அக்கா, அண்ணன்
ஆ. அம்மா, அப்பா, அண்ணன், அக்கா
இ. அக்கா, அம்மா, அப்பா, அண்ணன்
*ஈ. அக்கா, அண்ணன், அப்பா, அம்மா
18. சொற்கள் சரியாக அமைந்த சொற்றொடைத் தேர்ந்தெடுக்க
அ. கபிலர் குறிஞ்சி வல்லவர் திணை பாடுவதில்
ஆ. வல்லவர் குறிஞ்சி திணை கபிலர் பாடுவதில்
இ. பாடுவதில் வல்லவர் குறிஞ்சி திணைகபிலர்
*ஈ. கபிலர் குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவர்
19. பள்ளி, எவ்வகைப் பெயர்ச்சொல்
அ. பொருட்பெயர்
*ஆ. இடப்பெயர்
இ. காலப்பெயர்
ஈ. தொழிற்பெயர்
20. கார்க்குழாம், இலக்கணக் குறிப்பு தருக
அ. ஆறாம் வேற்றுமைத்தொகை
ஆ. ஐந்தாம் வேற்றுமைத்தொகை
இ. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
*ஈ. ஆறாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
21. தற்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா, விடைக்கேற்ற வினா அமைக்க
*அ. தற்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்
ஆ. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தவர் யார்
இ. சுசில் சந்திரா இந்தியத் தேர்தல் ஆணையத்தின் எத்தனையாவது தலைவர் ஆவார்
ஈ. சுசில் சந்திரா எங்கு பணியாற்றுகிறார்
22. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள், இது எவ்வகை வாக்கியம்
அ. தன்வினை
*ஆ. பிறவினை
இ. செய்வினை
ஈ. செயப்பாட்டுவினை
23. கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள், இது எவ்வகை வாக்கியம்
அ. உடன்பாட்டு வாக்கியம்
ஆ. எதிர்மறை வாக்கியம்
*இ. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
ஈ. பிறவினை வாக்கியம்
24. அவன் சித்திரையான், இவ்வாக்கியம் எதனைக் குறிப்பாக உணர்த்துகிறது
அ. பொருள்
ஆ. இடம்
*இ. காலம்
ஈ. தொழில்
25. கொம்பு முளைத்த குதிரை போல் பாய்ந்தது
இவ்வரியில் பயின்றுவந்துள்ள அணி எது
அ. உவமை அணி
ஆ. உருவக அணி
இ. இயல்பு நவிற்சி அணி
*ஈ. இல்பொருள் உவமை அணி
26. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
1. தொல்காப்பியர் ஆகுபெயர்களை ஏழு ஆக வகைபடுத்துகிறார்
2. நன்னூலார் ஆகுபெயரை பதினைந்தாக வகைபடுத்துகிறார்
அ. 1 மட்டும் சரி
ஆ. 2 மட்டும் சரி
*இ. 1,2 இரண்டும் சரி
ஈ. 1,2 இரண்டும் தவறு
27. ஆசிரியப்பா கீழ்க்கண்டவற்றுல் எதில் முடிவது சிறப்பானது
அ. ஆகாரம்
*ஆ. ஏகாரம்
இ. ஓகாரம்
ஈ. ஔகாரம்
28. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை வகை எது
அ. இணை மோனை
*ஆ. கூழை மோனை
இ. மேற்கதுவாய் மோனை
ஈ. பொழிப்பு மோனை
29. கீழ்க்காண்பவற்றில் சரியானது எது
அ. சால, உரு, தவ முதலிய உரிச்சொற்களுக்குப்பின் வல்லினம் மிகாது
*ஆ. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
இ. வன்றொடற் குற்றியலுகரத்தின்பின் வல்லினம் மிகாது
ஈ. உவமைத்தொகையில் வல்லினம் மிகாது
30. அண்ணம் நுனிநா வருட எவ்வெழுத்துகள் தோன்றும்
அ. ட ள வரும்<1
ஆ. த ந வரும்
*இ. ர ழ வரும்
ஈ. ய தோன்றும்
31. நாரதர் வந்தார்
இது எவ்வகை ஆகுபெயர்
அ. தொழிலாகு பெயர்
ஆ. கருவியாகு பெயர்
இ. கருத்தாவாகு பெயர்
*ஈ. உவமையாகு பெயர்
32. கனி முன் நேர் வருவது எவ்வகைத் தளை
அ. நேரொன்றாசிரியத்தளை
ஆ. நிரையொன்றாசிரியத்தளை
இ. ஒன்றிய வஞ்சித்தளை
*ஈ. ஒன்றாத வஞ்சித்தளை
33. உனக்குக் கதை எழுதத் தெரியுமா என்ற கேள்விக்குக் கட்டுரை எழுதத் தெரியும் என்று விடையளித்தல் எவ்வகை விடை
அ. உற்றது உரைத்தல் விடை
ஆ. உறுவது கூறல் விடை
இ. வினா எதிர் வினாதல் விடை
*ஈ. இனமொழி விடை
34. கீழ்வரும் நூல்களுல் திருக்குறள் முனுசாமி எழுதாத நூல் எது
அ. வள்லுவர் உள்ளம்
ஆ. வள்ளுவர் காட்டிய வழி
இ. திருக்குறளில் நகைச்சுவை
*ஈ. நாயன்மார் அடிச்சுவட்டில் குறட்செல்வம்
35. “திருவள்ளுவர் தோன்றி இராவிட்டால் தமிழன் என்னும் ஒரு இனம் இருப்பதாக உலகத்தாருக்குத் தெரிந்திருக்காது, திருக்குறள் தோன்றியிராவிட்டால் தமிழ் மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தாருக்குத் தெரிந்திருக்காது”
என்று கூறியவர் யார்
அ. திருக்குறள் முனுசாமி
ஆ. குன்றக்குடி அடிகளார்
இ. வ. சே. குழந்தைசாமி
*ஈ. கி. ஆ. பே. விஸ்வநாதம்
36. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர ——- நட்பு
விடுபட்ட சீரை நிறப்புக
அ. அறிவுடையார்
ஆ. அறிவிலார்
இ. பேனார்
*ஈ. பேதையார்
37. அறம்பொரு ளின்பம்வீ டென்னுந் நான்கின்
றிறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை யவன்வாய்ச்சொற்
கொள்ளா ரறிவுடை யார்.
திருக்க்ுறளைச் சிறப்பிக்கும் இப்பாடலைப் பாடியவர் யார்
அ. அரசில் கிழார்.
ஆ. நக்கீரர்
இ. கல்லாடர்
*ஈ. மாமூலனார்
38. பொருத்துக
அ. ஒல்லை – 1. அச்சம் தரும் கடல்
ஆ. ஏதம் – 2. தண்டித்தவர்
இ. நாமநீர் – 3. விரைவு
ஈ. ஒறுத்தார் – 4. குற்றம்
அ. 3 4 2 1
ஆ. 2 4 3 1
*இ. 3 4 1 2
ஈ. 4 3 1 2
39. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்
அ. விலம்பி நாகனார்
ஆ. பொய்கையார்
இ. கண்ணங்கூத்தனார்
*ஈ. கபிலர்
40. பொருத்துக
அ. அறநூல்கள் – 1. 1
ஆ. புறநூல்கள் – 2. 6
இ. அகநூல்கள் – 3. 11
அ. 1 2 3
*ஆ. 3 1 2
இ. 3 2 1
ீ. 1 3 2
41. பொருந்தாததைக் கண்டறி
அ. ஆசாரக்கோவை
ஆ. பழமொழி நானூறு
இ. முதுமொழிக்காஞ்சி
*ஈ. கைந்நிலை
42. உண்டி சுருங்குதல் பெண்டீருக்கு அழகு
இவ்வடி ஔவையாரின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
அ. ஆத்திசூடி
*ஆ. கொன்றை வேந்தன்
இ. நல்வழி
ஈ. மூதுரை
43. “கண்ணித் தமிழெனக்கு வேண்டுமேயடா
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
என்றவர் யார்
அ. ஆருமுக நாவலர்
ஆ. சீ. வை. தாமோதரம்பிள்ளை
இ. மயில்வாணன்
*ஈ. க. சச்சிதானந்தன்
44. “இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”
என்று ராவண காவியத்தைப் புகழ்ந்தவர் யார்
அ. பெரியார்
ஆ. கருணாநிதி
*இ. அண்ணா
ஈ. நாவலர் நெடுஞ்செழியன்
45. பொருத்துக
அ. தன்னாடு தந்த வெண்ணெல் தந்து – 1. குறுந்தொகை
ஆ. பாலொடு வந்து கூலொடு பெயரும் – 2. அகநானூறு
இ. பொன்னொடு வந்து கரியொடு பெயரும் – 3. நற்றிணை
அ. 1 2 3
ஆ. 2 1 3
இ. 3 2 1
*ஈ. 3 1 2
46. நற்றிணையைத் தொகுத்தவர் யார்
அ. பன்னாடு தந்த பாண்டியன் மாரன் வழுதி
ஆ. பூரிக்கோ
இ. கூடலூர் கிழார்
*ஈ. யாரென அறியப்படவில்லை
47. மதுரைக்காஞ்சியில் மதுரையைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் அடிகள் எத்தனை
அ. 360
ஆ. 782
*இ. 354
ஈ. 583
48. கடியலூர் உரித்திரங்கண்ணனார் எழுதிய நூல்கள் எவை
அ. திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை
ஆ. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
*இ. பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை
ஈ. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
50. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்
அ. நல்லியக்கோடன்
ஆ. கரிகாலச் சோழன்
*இ. தொண்டைமான் இளந்திரையன்
ஈ. பாண்டியன் நெடுஞ்செழியன்
51. நாலாயிர திவ்வியப்பிரபந்தத்திற்கு உரை எழுதியவர் யார்
அ. நாதமுனிகள்
ஆ. நம்பியாண்டார் நம்பி
இ. அடியாருக்கு நல்லார்
*ஈ. பெரியவாச்சான் பிள்ளை
52. சித்தர்கள் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு
அ. சித்தர்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள்
ஆ. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுனிச் சித்தர் ஆகியவை காரணப் பெயர்கள்
இ. சித்தர்கள் எளிய சொற்களில் அறிவுரை கூறினர்
*ஈ. இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதக் கலையைக் கற்றுச் செல்வர்களாக வாழ்ந்தனர்
53. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை,
என்று வருந்தியவர் யார்
அ. மாதவி
ஆ. மணிமேகலை
*இ. கண்ணகி
ஈ. ஆதிரை
54. பொருத்துக
அ. ஆக்குவது ஏதெனில் – 1. ஞானம்
ஆ. போக்குவது ஏதெனில் – 2. அறம்
இ. நோக்குவது ஏதெனில் – 3. விரதம்
ஈ. காக்குவது ஏதெனில் – 4. வெகுளி
அ. 1 2 3 4
ஆ. 4 3 2 1
இ. 2 1 3 4
*ஈ. 2 4 1 3
55. தேம்பாவணியில் எத்தனை விருத்தப்பாக்கள் உள்ளன
அ. 3363
ஆ. 4350
இ. 5027
*ஈ. 3615
56. பொருத்துக
அ. பாக்கள், – 1. மடைகள்
ஆ. பாவினங்கள் – 2. வரப்பு
இ. செய்யுள் நெறிகள் – 3. விளைபொருட்கள்
ஈ. நாற்பயன் – 4. விதைகள்
அ. 2 4 1 3
*ஆ. 2 1 4 3
இ. 2 1 3 4
ஈ. 3 4 1 2
57. விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
மென்மேலும் முகம் மலரும் மேலோர் போல
என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் நூல் எது
அ. தமிழ்விடு தூது
ஆ. திருக்குற்றாலக் குறவஞ்சி
*இ. கலிங்கத்துப்பரணி
ஈ. முக்கூடற் பள்ளு
58. பரப் பிரம்ம விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்
*அ. காலமேகக் புலவர்
ஆ. அழகிய சொக்கநாதர்
இ. பழப்பட்டடை்ச் சொக்கநாதர்
ஈ. அந்தகக்கவி வீரராகவர்
59. பாஞ்சாலி சபதச் சருக்கங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்க
அ. சூதாட்டச் சருக்கம், சூழ்ச்சிச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், அடிமைச் சருக்கம், சபதச் சருக்கம்
*ஆ. சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்
இ. அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், சபதச் சருக்கம்
ஈ. சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், அடிமைச் சருக்கம், சபதச் சருக்கம்
60. பஞ்சகாலக் கும்மி என்ற நூலைத் தொகுத்தவர் யார்
அ. கௌரன்
*ஆ. சே. ராசு
இ. வெங்கம்பூர் சாமிநாதன்
ஈ. சு. சக்திவேல்
61. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருநெல்வேலியைப் புகழ்ந்தவர் யார்
*அ. சம்பந்தர்
ஆ. சுந்தரர்
இ. அப்பர்
ஈ. மாணிக்கவாசகர்
62. மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் யார்
அ. திருஞான சம்பந்தர்
*ஆ. அப்பர்
இ. சுந்தரர்
ஈ. மாணிக்கவாசகர்
63. பொருத்துக
அ. முதல் மூன்று திருமுறைகள் – 1. சுந்தரர்
ஆ. ஏழாம் திருமுறை – 2. திருஞான சம்பந்தர்
இ. எட்டாம் திருமுறை – 3. திருமூலர்
ஈ. பத்தாம் திருமுறை – 4. மாணிக்கவாசகர்
அ. 2 3 1 4
ஆ. 2 1 3 4
*இ. 2 1 4 3
ஈ. 1 2 3 4
64. ரட்சணிய யாத்திரீகம் என்ற நூல் எந்த நூலின் மொழிபெயர்ப்பாகும்
அ. secret way
ஆ. light of asia
இ. pilgrims progress
ஈ. as a man thinketh
65. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன
அ. 102
ஆ. 103
இ. 104
*ஈ. 105
66. காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி அரிசி அவலமைத்து
என்று பொங்கல் கொண்டாடும் முறையைப் பற்றிக் கூறுபவர் யார்
அ. காரைக்கால் அம்மையார்
ஆ. ஔவையார்
*இ. ஆண்டாள்
ஈ. திலகவதி
67. “இந்தியாதான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மைதான் என் நன்மை. இந்தியாதான் என் இளமையின் மெத்தை என் யெவ்வனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி
என்று கூறியவர் யார்
அ. கவிமணி
ஆ. ராமலிங்க அடிகள்
*இ. பாரதியார்
ஈ. அண்ணா
68. பாரதிதாசனின் பிசிராந்தையார் நாடகத்திற்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
அ. 1966
ஆ. 1967
*இ. 1969
ஈ. 1979
69. மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்
தினமும் பாயில் விழுந்திடுவாய்
இவ்வடிகள் யாருடையவை
அ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
*ஆ. கவிமணி
இ. மருதகாசி
ஈ. கண்ணதாசன்
70. கொடுக்கப்பட்டுள்ள நூல்களுள் நாமக்கல் கவிஞரின் நூல் எது
அ. இன்ப ஒளி
ஆ. இதய ஒளி
*இ. சங்கொளி
ஈ. தமிழ் ஒளி
71. கவிஞர் துரை ராசுவுக்கு முடியரசன் பட்டம் கொடுத்தவர் யார்
அ. இராமலிங்க அடிகள்
ஆ. திரு. வி. க.
*இ. குன்றக்குடி அடிகளார்
ஈ. பாரதியார்
72. பொருத்துக
அ. அர்த்தமுள்ள இந்து மதம் – 1. முடியரசன்
ஆ. பூங்கொடி – 2. வானிதாசன்
இ. தேன்மழை – 3. கண்ணதாசன்
ஈ. தொடுவானம் – 4. சுரதா
அ. 2 1 4 3
*ஆ. 3 1 4 2
இ. 3 1 2 4
ஈ. 2 4 3 1
73. ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே நீ
ஏன் படித்தோம் என்பதையு்ம் மறந்துவிடாதே
இப்பாடலை எழுதியவர் யார்
அ. மருதகாசி
ஆ. உடுமலை நாராயண கவி
*இ. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
ஈ. கண்ணதாசன்
74. ஒரு சிறு இசை என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்
அ. எஸ். ரா.
ஆ. சோ. தருமன்
*இ. கல்யான் ஜி
ஈ. அம்பை
75. ரேவதி என்ற புனைப்பெயரில் கவிதை எழுதியவர் யார்
*அ. ந. வேங்கட மகாலிங்கம்
ஆ. சி. சு. செல்லப்பா
இ. பசுவையா
ஈ. சி. மணி
76. வேலிக்கு வெளியே தலையை நீட்டும்
என் கிளைகளை வெட்டும்
தோட்டக்காரரே
வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்
இக்கவிதை அப்துல்ரகுமானின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
அ. நேயர் விருப்பம்
ஆ. ஆளாபனை
*இ. பால்வீதி
ஈ. சுட்டுவிரல்
77. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முணைகள் என்ற கூற்று யாருடையது
அ. பெரியார்
*ஆ. அண்ணா
இ. காந்தி
ஈ. அம்பேத்கார்
78. பொருந்தாததைக் கண்டறிக
அ. சித்திராங்கதன்
ஆ. சித்திர சேனா
*இ. மண்ணீட்டாளர்
ஈ. மண்ணுள் வினைஞர்
79. நாட்டார் கலைகள் நூலின் ஆசிரியர் யார்
அ. சு. சக்திவேல்
ஆ. ந. முத்துசாமி
*இ. அ. க. பெருமாள்
ஈ. சு. சண்முக சுந்தரம்
80. பொருத்துக
அ. பாதம் – 1. பாவண்ணன்
ஆ. பயனம் – 2. அரசி -ஆதிவள்ளியப்பன்)
இ. ஆன்ற குடி பிறத்தல் – 3. எஸ். ராமகிருஷ்ணன்
ஈ. ஓய்ந்திருக்கலாகாது – 4. பி. ச. குப்புசாமி
அ. 3 1 2 4
*ஆ. 3 1 4 2
இ. 2 4 1 3
ஈ. 3 4 1 2
81. தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்ற எண்ணம் நம் நாட்டு இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று கூறியவர்
அ. தமிழ்த்தென்றல் திரு வி. க.
ஆ. பெரியார்
இ. பாரதிதாசன்
*ஈ. தாரா பாரதி
82. “இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள், பிறிந்தால் பொருளில்லை”, என்று பாடியவர்
*அ. சுரதா
ஆ. மு. மேத்தா
இ. தாரா பாரதி
ஈ. அப்துல் ரஹ்மான்
83. அறிஞர் அண்ணாவின் கவிதைகள் தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஆண்டு
*அ. 2004
ஆ. 2005
இ. 2003
ஈ. 2006
84. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்பு செய்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்
அ. சீ. வை. தாமோதரம்பிள்லை
ஆ. வ. சுப. மாணிக்கம்
இ. தே. போ. மீனாட்சி சுந்தரம்*
ஈ. சீனி வேங்கட சாமி
85. பூம்புகார் சிற்பக் கலைக்கூடம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது
அ. 1963
*ஆ. 1973
இ. 1964
ஈ. 1974
86. புறநிலைக் காப்பியன் என்று தன்னைக் கூறிக்கொண்டவர் யார்
அ. உமருப்புலவர்
*ஆ. வீரமாமுனிவர்
இ. கம்பர்
ஈ. சீகன்பால்கு
87. திராவிடம் என்ற சொல்லைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தவர் யார்
அ. குமரிளபட்டர்
*ஆ. கால்டுவெல்
இ. ஹீராஸ் பாதிரியார்
ஈ. கிரௌள்
88. தவறான இணையைக் கண்டறிக
அ. சொல்லின் செல்வர் – ரா. பி. சேது
*ஆ. தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் – மறைமலை அடிகள்
இ. தமிழ்த்தென்றல் – திரு. வி. க.
ஈ. தமிழ் நாடகப் பேராசிரியர் – பரிமாற் கலைஞர்
89. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களைத் தமிழக அரசு எந்த ஆண்டு ஏற்றுக் கொண்டது
அ. 1938
*ஆ. 1978
இ. 1979
ஈ. 1988
90. தெய்வீகமும் தேசியமு் இரு கண்கள் என்று கூறியவர் யார்
அ. பெரியார்
ஆ. பாரதியார்
*இ. முத்துராமலிங்கர்
ஈ. அண்ணா
91. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்றவந்த ஒளிக்கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்
என்று காயிதே மில்லத் அவர்களைப் புகழ்ந்தவர் யார்
அ. பெரியார்
ஆ. காமராசர்
*இ. அண்ணா
ஈ. பக்தவச்சலம்
92. தலையைக் கொடுத்தேனும் தலைநகரை மீட்பேன்,
என்று முழங்கியவர் யார்
அ. மங்கலம் கிழார்
ஆ. மார்ஷல் நேசமணி
*இ. ம. பொ. சி
ஈ. பூரணலிங்கனார்
93. பள்ளி வேலை நாட்களை 180 லிருந்து 200 நாட்களாக உயர்த்தியவர் யார்
அ. அண்ணா
ஆ. எம். ஜி. ஆர்
*இ. காமராசர்
ஈ. ராஜாஜி
94. பட்டி எந்நிலத்தைச்சார்ந்த ஊர்
அ. குறிஞ்சி
*ஆ. முல்லை
இ. மருதம்
ஈ. நெய்தல்
95. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாத நாடு எது
அ. இலங்கை
ஆ. மலேசியா
இ. சிங்கப்பூர்
*ஈ. இந்தோனேசியா
96. நீர் ஆவியாகி மேகமாகி மீண்டும் மழையாகப் பொழிகிறது என்ற செய்தியைக் கூறாத நூல் எது
அ. கார்நாற்பது
ஆ. பரிபாடல்
*இ. குறிஞ்சிப்பாட்டு
ஈ. முல்லைப்பாட்டு
97. இசைப் பேரரசி என்று எஷ். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டியவர் யார்
*அ. நேரு
ஆ. வாஜ்பாய்
இ. காந்தி
ஈ. லால்பகதூர் சாஸ்திரி
98. பொருத்துக
அ. மாட ஒள்ளெரி – 1. நாவாய் ஓட்டுபவன்
ஆ. மீகான் – 2. கப்பல்
இ. வங்கம் – 3. காற்று
ஈ. வங்கூழ் – 4. கலங்கரை விளக்கம்
அ. 1 2 3 4
ஆ. 4 2 1 3
*இ. 4 1 2 3
ஈ. 4 3 2 1
99. நோய்களையும் அவற்றைத் தீர்க்கும் மூலிகைகளையும் பொருத்துக
அ. நெஞ்சுச் சளி – 1. கொத்தமல்லி
ஆ. பித்தம் – 2. சீரகம்
இ. வயிற்றுச்சூடு – 3. மிளகு
ஈ. தொண்டைக்கட்டு – 4. மஞ்சள்
அ.. 1 3 2 4
ஆ. 1 2 3 4
*இ. 4 1 2 3
ஈ. 4 3 2 1
100. கன்னிமாரா நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
அ. 1942
*ஆ. 1896
இ. 1869
ஈ. 2010
*
வினாத்தாள் தயாரிப்பு: திரு. விஜய் அவர்கள்.
Be the first to leave a comment