மாநில அளவிலான மாதிரித்தேவின் வினாவிடைகள் பகுதி 2

 

கடந்த மே 8 2022 அன்று ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான குரூப் 2 மற்றும் 2 A ஆகிய பிரிவுகளுக்கான மாதிரித்தேர்வில் கேட்கப்பட்ட பகுதி 2 வினாக்களுக்கான விடைகள் வெளியிடப்படுகின்றன. நேர்ந்துவிட்ட தாமதத்துக்கு வருந்துகிறோம்.

குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. செயல்பாட்டு முறை கற்றல் மற்றும் புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்யும் கற்றல் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

(A) புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்யும் கற்றல்முறை நிலையானது

(B) செயல்பாட்டு முறை கற்றலில் ஈடுபாடு குறைவு

*(C) புரிதல் இல்லாமல் மனப்பாடம் செய்வது என்பது திரும்பத் திரும்ப கற்பது

(D) செயல்பாட்டு முறை கற்றல் மிகவும் ஆற்றல் வாய்ந்தது

2. கனரக இயந்திரங்களில், உயவு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பின்வருவனவற்றில் எது உயவு எண்ணெய் பயன்படுத்துவதன் நோக்கமல்ல?

(A) தேய்மானக் குறைவு

(B) வெப்பத்தைக் குறைத்தல்

(C) உராய்வுக் குறைவு

*(D) அழுத்தக் குறைவு

3. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

I. சந்திரசேகர் எல்லை (CSL) என்பது நிறையின் மிகப்பெரிய நடைமுறை அலகு ஆகும்.

II. காலத்தின் மிகக் குறைந்த நடைமுறை அலகு ஸேக் (Shake) ஆகும்.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

*(A) I மட்டும்

(B) II மட்டும்

(C) இரண்டும்

(D) இரண்டுமில்லை

4. வேகவைத்த சூடான முட்டையை குளிர்ந்த நீரில் விட்டு, ​​முட்டையின் ஓட்டை பிரிப்பது எளிதாக உள்ளது. ஏன்?

*(A) வெவ்வேறு உருகுநிலை காரணமாக

(B) வெப்ப விரிவாக்க வேறுபாட்டின் காரணமாக

(C) அழுத்த வேறுபாடு காரணமாக

(D) வெவ்வேறு பரப்பு இழுவிசை காரணமாக

5. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.

(தனிமம்( பயன்பாடுகள்)

 (A) கியூரியம்  கனிமப் பகுப்பாய்வி

( B ) இரிடியம்  மின்பொறி முனை

( C ) ஆஸ்மியம்  பேனா முனை

*( D ) அமெரிசியம்  ராக்கெட் என்ஜின்கள்

6. கீழ்காண்பவைகளில் நுண் ஊட்டச்சத்தைக் கண்டறிக.

*(A) கார்பன்

(B) நைட்ரஜன்

(C) சல்ஃபர்

(D) போரான்

7. கீழ்க்கண்ட எந்தத் தாவரம் வயிற்றுப் பூச்சி அகற்றியாகப் பயன்படுகிறது?

(A) எபிட்ரா

(B) கிளாடோஸ்போரியம்

(C) நீட்டம்

*(D) ட்ராயப்டெரிஸ்

8. பின்வரும் எந்த பாஸ்ஃரஸ் வடிவமானது தண்ணீருக்கடியில் சேமித்து வைக்கப்படுகிறது. மேலும், அதிக நட்சுத் தன்மை வாய்ந்தது?

A) ஊதா பாஸ்ஃபரஸ் Violet Phosphorous

B) கருப்பு பாஸ்ஃபரஸ் Black phosphorous

*C) வெள்ளை பாஸ்ஃபரஸ் White Phosphorous

D) சிவப்பு பாஸ்ஃபரஸ்  Red Phosphorous

9. கீழ்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

1. மின்னோட்டத்தின் SI அளகு ஆம்பியர்.

2. 1 ஆம்பியர் = 1 வினாடி/1 கூலும்‌

மேற்கண்டவற்றுள் எது சரியானது/சரியானவை?

*A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 1 மற்றும் 2 சரி

D) 1 மற்றும் 2 தவறு

10. பின்வரும் கூற்றுகளைக் கவணிக்கவும்.

I. பொட்டாஷ் படிகாரம் உருவமற்ற நிலையில் உள்ளது.

II. பொட்டாஷ் படிகாரம் அலுனைட் அல்லது படிகாரக் கல்லில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

III. பொட்டாஷ் படிகாரம் ஜவுளி, சாயமிடுதல் மற்றும் காகிதத் தொழிலில் நீர் புகாத சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.

IV. பொட்டாஷ் படிகாரம் தண்ணீரில் கரையாதது ஆனால் ஆல்கஹாலில் கரையக்கூடியது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை தவறானது?

A) I மற்றும் II மட்டும்

B) II மற்றும் III மட்டும்

*C) I மற்றும் IV மட்டும்

D) மேலே உள்ள அனைத்தும்

11. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கை விளையாட்டு வீரர் யார்?

*A) லௌரெல் ஹப்பர்ட்

B) க்வின்

C) அலேனா ஸ்மித்

D) க்ரிஸ் மோசியர்

12. நாடாலுமன்ற உருப்பினர்களின் தேர்தல் பற்றியப் கீழ்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க.

(I) மக்களவை தேர்தல் வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் நடைபெருகிறது.

(II) மாநிலங்களவை தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் நடைபெருகிறது.

மேற்கண்ட கூற்றுகளில் தவறானது எது/எவை?

A) I மட்டும்

B) II மட்டும்

C) I மற்றும் II இரண்டும்

*D) இரண்டும் இல்லை

13. குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி பதவிகள் ஒரே நேரத்தில் காலியாக இருக்கும்போது, ​​இந்தியாவின் குடியரசுத் தலைவராக பின்வருபவர்களுல் யார் செயல்படுவார்?

A) மக்களவை சபாநாயகர்

*B) உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி

C) கொலிஜியத்தால் நியமிக்கப்படும் நீதிபதி

D) நாடாலுமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ுபவர்

14. இந்தியாவின் 52வது புலிகள் காப்பகமாக “ராம்கர் விஷ்தாரி”, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.  இந்தக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம்?

A) சத்தீஸ்கர்

B) மத்திய பிரதேசம்

*C) ராஜஸ்தான்

D) கர்நாடகா

15. பிரஞ்சுக்காரர்களுக்கு வணிகம் செய்ய அணுமதி (firman) வழங்கிய முகலாய அரசர் யார்?

*A) ஔரங்கசீப்

                B) ஜகாங்கீர்

C) ஷாஜகான்

D) ஃபரூக்சியார்

16. யூசுப் கான் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.

A) இவரின் இயற்பெயர் மருதநாயகம்

B) இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்

C) 1752-இல் ராபட் கிளைவின் கீழ் கிழக்கிந்திய கம்பெணியில் சிப்பாயாக சேர்ந்தார்

*D) திப்பு சுல்தானை தோற்கடித்து சோல வந்தானைக் கைப்பற்றினார்

17. உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியைக் கண்டறிந்த நாடு?

A) அமெரிக்கா

B) இங்கிலாந்து

C) ஜெர்மனி

*D) ரஷ்யா

18. பின்வரும் எந்த மாநிலங்களில் 2021 இல் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற்றது?

I. கோவா

II. அசாம்

III. கேரளா

IV. மேற்கு வங்காளம்

குறியீடுகள் :

A) I, II மற்றும் III மட்டும்

*B) II, III மற்றும் IV மட்டும்

C) I, III மற்றும் IV மட்டும்

D) மேலே உள்ள அனைத்தும்

19. “க்ஷேத்ரா”, “கிலா”, “வாஸ்தி” என்ற சொற்கள் குறிப்பிடுவது?

A) குப்தர் காலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள்

B) குப்தர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள்

*C) குப்தர் காலத்தில் நிலங்களின் வகைப்பாடு

D) குப்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விவசாய கருவிகள்

20. பட்டியல் Iஐ, பட்டியல்-II உடன் பொருத்துக.

பட்டியல்-I பட்டியல்-II

(ஆசிரியர்) (உரை)

A) மின்ஹாஜ் உஸ் சிராஜ் 1. தாரிக்-அல்-ஹிந்த்

b) ஷம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப் 2. காசைன் உல் ஃபுதுஹ்

c) அமீர் குஸ்ரு 3. தாரிக்-ஃபிருஸ் ஷாஹி

D) அல்-பெருனி 4. தபாகத்-இ-நசிரி

குறியீடுகள்:

a b c d

A) 4 3 2 1

*B) 4 2 3 1

C) 1 2 3 4

D) 1 3 2 4

21. பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க.

   1)  இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் கனரக தொழிற்சாலைகளை  நிறுவுவது குறித்து வலியுறுத்தியது.

  2) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இறக்குமதி மாற்றம் என்ற கருத்தை தொழில்மயமாக்கலுக்கான உத்தியாக அறிமுகப்படுத்தியது.

   3) ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம் ‘தன்னிறைவு மற்றும் பூஜ்ஜிய நிகர வெளிநாட்டு உதவியை’ அறிமுகப்படுத்தியது.

மேற்கண்டவற்றுள் எது/எவை சரியானதல்ல?

    A) 1 மட்டும்

    B) 2 மட்டும்

*    C) 3 மட்டும்

    D)  2 மற்றும் 3

5) வனவிலங்கு சரணாலயம் மற்றும் அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளை பொருத்துக :

   வA.ல்லநாடு – 1. 1940

B.   மேகமலை – 2. 2014

C.   வட காவேரி – 3. 2009

D   முதுமலை – 4. 1987

குறியீடுகள்

A B C D

    A) 1 2 3 4

*    B) 4 3 2 1

    C) 3 1 2 4

    D) 2 3 4 1

23. பட்டியல்-I பட்டியல்-II உடன் பொருத்தவும்.

பட்டியல்-I பட்டியல்-II

A) ரகசியாதிகிரிதா 1. நீதிபதிகள்

B) மாணிக்கப்பண்டாரம் 2. பரிசுப் பொருட்களுக்கான அதிகாரி

C) கொடுக்கப்பிள்ளை 3. கருவூலப் பொறுப்பாளர்

D) தர்மாதிகாரிகள் 4. அரசரின் தனிச் செயலாளர்

குறியீடுகள்: a b c d

A) 1 2 3 4

B) 3 2 4 1

*C) 4 3 2 1

D) 1 3 2 4

24. வடக்கு திருவேங்கடத்திற்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட மக்கள் தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என குறிப்பிடும் இலக்கியம்?

*A) தொள்காப்பியம்

B) புறநாநூறு

C) நாண்மணி கடிகை

D) நன்னெறி

25. பின்வருபவர்களில் யாருடையக் காலம் வென்கலச் சிற்பத்தின் உச்சம் எனக் கருதப்படுகிறது?

A) பல்லவர்கள்

*B) சோழர்கள்

C)நாயக்கர்கள்

D) பாண்டியர்கள்

26. பின்வருவனவற்றிலிருந்து தவறான ஒன்றை அடையாளம் காணவும்.

A) ADH குறைபாடு டையபிடிஸ் இன்சிபிடஸை ஏற்படுத்துகிறது

B) பாலூட்டி சுரப்பிகளில் இருந்து பாலை வெளியேற்ற ஆக்ஸிடாசின் உதவுகிறது.

*C) அயோடின் குறைபாட்டால் ஸ்போரோடிக் கோயிட்டர் ஏற்படுகிறது.

D) தைராய்டு சுரப்பி பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ளது.

27. பின்வருவனவற்றில் ரைபோசோம்கள் எதில் காணப்படவில்லை?

A)முதிர்ந்த விந்தணு

B) குளோரோபிளாஸ்ட்

C) சிவப்பு இரத்த அணுக்கள்

*D) A மற்றும் C இரண்டும்

28. இந்தியாவின் முதல் காகிதப் பயன்பாடில்லா உயர் நீதிமன்றம்

A) அலகாபாத் உயர் நீதிமன்றம்

B) சென்னை உயர்நீதிமன்றம்

*C) கேரள உயர் நீதிமன்றம்

D) மும்பை உயர் நீதிமன்றம்

29. “பெண்களுக்கான புதிய வரைவுக் கொள்கை 2021 பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.

I. புதிய கொள்கை பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வழி வகுக்கிறது.

II. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில்  பெண்களுக்கு 33.3% பிரதிநிதித்துவம் கிடைக்க வழீகோல்கிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?

A) I மட்டும்

B) II மட்டும்

*C) I மற்றும் II இரண்டும்

D) இரண்டும் இல்லை

30. அளவின் அடிப்படையில் செல் உறுப்புகளின் இறங்கு வரிசையில் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

*A)நியூக்ளியஸ் – வாக்குலோஸ் – குளோரோபிளாஸ்ட் – மைட்டோகாண்ட்ரியா

B) – மைட்டோகாண்ட்ரியா – நியூக்ளியஸ் – குளோரோபிளாஸ்ட்

சி) நியூக்ளியஸ் – மைட்டோகாண்ட்ரியா – வாக்குலோஸ் – குளோரோபிளாஸ்ட்

டி) நியூக்ளியஸ் – குளோரோபிளாஸ்ட் – மைட்டோகாண்ட்ரியா – வாக்குலோஸ்

31. பொருத்துக.

    a) கீழடி  1. பகடைகள்.

    b) பொறுந்தல்  2. கொழு முனைகள்.

    c) கொடுமணல்  3. சுழல்அச்சுகள்.

    d) ஆதிச்சநல்லூர்  4. தங்க ஆபரணங்கள்.

குறியீடுகள்

A B C D

    a) 4,3,2,1.

    b) 1,2,4,3.

*    c) 1,2,3,4.

    d) 3,4,1,2.

32.  தமிழ்நாட்டின் நுழைவுவாயில் எங்கு அமைந்து உள்ளது?.

    a) கன்னியாகுமரி.

    b) சென்னை.

*    c) தூத்துக்குடி.

    d) ராமநாதபுரம்.

33. கீழ்கண்டவற்றுள் வேலுநாச்சியார் பற்றிய குறிப்புகளில் தவறானது எது?.

*    a) ஹைதர் அலியை சந்தித்த போது ஆங்கிலத்தில் பேசி உதவியை நாடினார்.

b) தமிழ்நாட்டின் வீரமங்கை என்றும் ,தென்இந்தியாவின் ஜான்சிரானி என்ரும் அழைக்கப்படுகிறார்.

    c) ஹைதர் அலியின் உதவியுடன் 1772-ல் இழந்த சிவகங்கையை 1780 இல் மீட்டார்.

    d) உடையாள் என்ற பென்னுக்கு நடுகல் அமைத்து தன் தாலியை கானிக்கையாக இட்டார்,

34. வட்டமேசை மாநாடுகளில் கலந்துகொண்ட பென் யார்?.

    a) ரமாபாய்.

    b) முத்து லட்சுமி.

    c) ருக்குமனி லட்சுமிபதி.

*    d) ராதாபாய்.

34. சரியாக பொருந்தியுள்ளதை கண்டறிக.

    1. பேகன் ஔவைக்கு நெல்லிக்கனியை வழங்கினான்.

    2. ஆய் அண்டிரன் மயிலுக்கு போர்வை தந்தவன்.

    3. அதியமான் நீல நாகத்தின் ஆடையை இறைவனுக்கு அனிவித்தவன்.

    4. பாரி முல்லைக்கு தேர் தந்தவன்.

    a) 1,3,மட்டும்.

    b) 2,4,மட்டும்.

*    c) 4, மட்டும்.

    d) 3,மட்டும்.

35. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத நபர் யார்?.

    a) சென்பகராமன்.

    b) வா.வே.சு.

*    c) வா.உ.சி.

    d) வாஞ்சிநாதன்.

36. மனிதனை மனிதனாக கருதாமல் சாதியைவைத்து எடைபோடுவது காட்டுமிராண்டித்தனம் என்று கூறியவர் யார்?.

    a) பீமாராவ் ராம்ஜி.

*    b) பெரியார்.

    c) அயோத்திதாச பண்டிதர்.

    d) வைகுண்ட சாமிகள்.

37. மேற்கு தொடர்ச்சி மலையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதற்கான காரணங்களைக் கவணி.

I. கனமழை

II. காடழிப்பு

III. சட்டவிரோத கட்டுமானம்

IV. சுரங்கம்

மேலே கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?

A) I, II மற்றும் III மட்டும்

B) II, III மற்றும் IV மட்டும்

C) I, III மற்றும் IV மட்டும்

*D) மேலே உள்ள அனைத்தும்

38. பின்வருவனவற்றில் விவசாயப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய சந்தையுடன் தொடர்புடையது எது?

*A) E-NAM

B) JAM

C) PM-KISAN மான் தன் யோஜனா

D) KUSUM திட்டம்

39. கூற்று மற்றும் காரணம்.

கூற்று (A) : தமிழ்நாடு “இந்தியாவின் நூல் கிண்ணம்” என்று அறியப்படுகிறது.

காரணம் (R) : இந்தியாவின் பருத்தி நூல் உற்பத்தியில் 41% தமிழ்நாடு கொண்டிருக்கிறது.

*A). கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்குகிறது.

B) கூற்று காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றை விளக்கவில்லை.

C) கூற்று சரி, காரணம் தவறு.

D( கூற்று தவறு, காரணம் சரி.

40. எந்த ஆண்டு முதல் ரயில்வே நிதிநிலை அறிக்கை மத்திய பொது நிதிநிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டது?

A) 2015

B) 2016

*C) 2017

D) 2018

41. கீழ்காணும் குழுக்களை  அதன் நோக்கங்களோடு பொருத்தவும்

குழு    நோக்கம்

A) சுரேஷ் டெண்டுல்கர் 1. தேசிய கல்விக் கொள்கை

B) கே. கஸ்தூரிரங்கன் கமிட்டி 2. மியூச்சுவல் ஃபண்ட் விதிமுறைகள்

C) சந்திர சேகர் கமிட்டி 3. வறுமை மதிப்பீடு

D) உஷா தோரட் கமிட்டி 4. துணிகர முதலீடு

குறியீடுகள்:

a b c d

A) 3 2 4 1

B) 2 3 1 4

C) 4 1 2 3

*D) 3 1 4 2

42. உலகின் முதல் முழு சூரிய சக்தியில் இயங்கும் விமான நிலையம்

A) இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

B) நியூயார்க் விமான நிலையம்

*C) கொச்சின் சர்வதேச விமான நிலையம்

D) லண்டன் விமான நிலையம்

43. பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.

I. ‘சத்யாகிரக சபா’ காந்தியால் நிறுவப்பட்டது.

II. அது முதலில் ரவுலட் சட்டத்தை மீறுவதாக உறுதியளித்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானவை?

A) I மட்டும்

B) II மட்டும்

*C) I மற்றும் II

D) I மற்றும் II இரண்டும் இல்லை

44. லாகூர் அமர்வு பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனி.

I. காங்கிரஸின் நோக்கம் முழு சுதந்திரத்தை அடைவதே என்று காங்கிரஸ் அறிவித்தது.

II. 1929 டிசம்பர் 31 அன்று கொல்கத்தாவில் சுதந்திரத்தின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

III. காந்தி தலைமையில் சட்ட மறுப்புப் போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது சரியானது/சரியானது?

A) I மட்டும்

B) I மற்றும் II மட்டும்

*C) I மற்றும் III மட்டும்

D) II மற்றும் III மட்டும்

45. பின்வரும் எந்த ஆளுமை மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் கலந்துக் கொண்டார்?

*A) அம்பேத்கர்

B) நேரு

C) வல்லபாய் படேல்

D) M.N.ராய்

46. 55. காந்தியடிகள் ஏரவாடா சிறையில் இருந்தபோது தொடங்கிய செய்தித்தாள் எது?

A) யங் இந்தியா

B) நவ்ஜீவன்

C) இந்தியன் ஒப்பீனியன்

*D) ஹரிஜன்

47. “இந்தப் பரந்தக் கண்டத்தில் வசிக்கும் இந்துக்களும் முஸ்லீம்களும் இரண்டு சமூகங்கள் அல்ல, ஆனால் பல வழிகளில் இரு தேசத்தினராகக் கருதப்பட வேண்டும்” என்று கூறியவர் யார்?

A) முகமது இக்பால்

B) ரஹ்மத் அலி

C) ஜின்னா

*D) சர் வசீர் ஹசன்

48. சுபாஸ் சந்திர போஸ் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை எங்கு நிறுவினார்?

A) பெர்லின்

B) டோக்கியோ

C) மலாயா

*D) சிங்கப்பூர்

49. பட்டியல் I-ஐ பட்டியல் -II உடன் பொருத்துக.

பட்டியல் I    பட்டியல் II

a) ஜான்சி 1. கன்வர் சிங்

b) லக்னோ 2. ராணி லக்ஷ்மி

c) கான்பூர் 3. பேகம் ஹஸ்ரத் மஹால்

d) பீகார் 4. நானா சாஹிப்

குறியீடுகள்

a b c d

A) 2 3 4 1

B) 1 4 3 2

C) 3 1 4 2

D) 4 3 1 2

50. தவறாகப் பொருந்திய இணையைக் கண்டறியவும்.

A) பூனா சர்வஜனிக் சபா – எம்ஜி ரானடே

*B) பம்பாய்  மாகாணச் சங்கம் – பக்ருதீன் தியாப்ஜி

C) மெட்ராஸ் மகாஜன சபா – ஜி.சுப்ரமணியர்

D) இந்திய லீக் – அரபிந்தோ கோஷ்

51. ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தோடு தொடர்புடைய அரசியலமைப்பின் பகுதி எது?

A) பகுதி XII

B) பகுதி XIII

*C) பகுதி XIV

D) பகுதி XVI

52. கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய நபர் யார்?.

    1) 1882 ஆம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவினார்.

    2) மக்கள்தொகை கனக்கெடுப்பின்போது ஒடுக்கப்பட்டவர்களை சாதியற்ற திராவிடர்கள் என பதிவு செய்யுமாறு வற்ப்புறுத்தினார்.

    3) மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு போராட்டத்திற்க்காக அத்வைதானந்தா சபையை நிருவினார்.

    4) மேலும் இவர் தமிழ் அறிஞர், பத்திரிக்கையாளர், மற்றும் சமுக செயல்பாட்டாளர் என பன்முகத்தன்மையை கொண்டவர்.

    a) மயிலை சின்னத்தம்பி ராஜா.

*    b) அயோத்திதாசர்.

    c) ரெட்டைமலை சினிவாசன்.

    d) கனகசபை.

53. தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டிற்க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த ஆண்டு மற்றும் நாள்?.

    a) 1992-ஜூலை 19.

    b) 1992-ஜூலை 16.

*    c) 1994-ஜூலை 19.

    d) 1994-ஜூலை 16.

54. திட்டங்களை சரியாக பொருத்துக.

    a) ஈ.வே.ரா. மனியம்மை திட்டம்- 1. ஏழை விதவைகள் திருமன உதவித் திட்டம்.

    b) தர்மாம்பாள் திட்டம்- 2. ஆதரவற்ற பென்கள் திருமன உதவித்திட்டம்.

    c) அன்னை தரசா திட்டம்- 3. விதவைகள் மறுமன திட்டம்.

    d) முத்துலட்ச்சுமி ரெட்டி திட்டம்- 4. கலப்பு திருமன உதவித்திட்டம்.

குறியீடுகள்

A B C D

a    a) 1 2 3 4.

    b) 1 3 4 2.

*    c) 1 3 2 4.

    d) 2 1 3 4.

55. பின்வரும்  இடங்களில் சதுப்புநில காடுகள் இல்லாத இடத்தைக் கண்டறியவும்:

A)  பிச்சாவரம்

B)  கோடியக்கரை

C)  வேதாரண்யம்

*D)  மாமல்லபுரம்

56. பின்வரும் கூற்றுகளில் “விவசாய விலைக் கொள்கையின்” வலுவான குறிக்கோள்கள் எது/எவை?

I. தனியார் வியாபாரிகளின் சுரண்டல் நடவடிக்கைகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்.

II. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

III. மொத்த விற்பனையாளர்களுக்கு நியாயமான விலையில் விவசாயப் பொருட்கள் போதுமான மற்றும் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்தல்.

[A] (i) மட்டும்.

[B] (ii) மற்றும் (iii) மட்டும்.

*[C] (i) மற்றும் (ii) மட்டும்.

[D] (i) மற்றும் (iii) மட்டும்.

57. பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

I. ஆண்களின் கல்வியறிவை விட தமிழ் நாட்டில் பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ளது.

II. தமிழ்நாட்டில் நகர்ப்புற கல்வியறிவு விகிதம் கிராமப்புற கல்வியறிவு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.

மேற்கூறியவற்றுள் தவறானது எது/எவை?

(A) I மட்டும்

(B) II மட்டும்

(C) இரண்டும்

*(D) இரண்டுமில்லை

58. தமிழ்நாடு மனித வளர்ச்சிக் குறியீட்டில், எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது?

*(A) கன்னியாகுமரி

(B) சென்னை

(C) விருதுநகர்

(D) காஞ்சிபுரம்

59. வள்ளலார் எந்த ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கினார்?

*(A) 1867

(B) 1865

(C) 1866

(D) 1868

60. பெரியார் எப்போது காங்கிரசில் இணைந்தார்?

(A) 1918

*(B) 1919

(C) 1920

(D) 1917

61. பின்வரும் கூற்றுகளை கவனிக்கவும்.

கூற்று ( A ) : இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆவார்.

காரணம் ( R ) : இவரது முயற்சியினால் அடையாரில் புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்பட்டது.

(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமாகும்

*(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது (A)-யின் சரியான விளக்கமல்ல

(C) (A) சரி ஆனால் (R) தவறு

(D) (A) தவறு ஆனால் (R) சரி

62. இரட்டைமலை சீனிவாசன் பற்றிய பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

I. அம்பேத்கருடன் மூன்று வட்டமேசை மாநாட்டிலும் பங்கேற்றார்.

II. பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

(A) I மட்டும்

*(B) II மட்டும்

(C) இரண்டும்

(D) இரண்டுமில்லை

63. சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக்கட்சி இணைக்கப்பட்ட நிகழ்வானது எங்கு நடைபெற்றது?

(A) திருச்சி

*(B) சேலம்

(C) ஈரோடு

(D) தஞ்சாவூர்

64. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் குறித்த பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

I. இவர் 1925-ல் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.

II. இவரது பெயரில் தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

*(A) I மட்டும்

(B) II மட்டும்

(C) இரண்டும்

(D) இரண்டுமில்லை

65. பல பரிமாண வறுமைக் குறியீட்டைக் கணக்கிடுவதற்கு பின்வரும் எந்த குறிகாட்டிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது?

I. சமையல் எரிபொருள்

II. பாதுகாப்பான குடிநீர்

III. குழந்தை இறப்பு விகிதம்

IV. கல்வியிலிருந்து இடைநிறுத்தம்

(A) I, III மற்றும் IV மட்டும்

(B) II, III மற்றும் IV மட்டும்

(C) I, II மற்றும் III மட்டும்

*(D) மேற்கண்ட அனைத்தும்

66. தமிழ்நாட்டின் புது வாழ்வுத் திட்டத்துடன் தொடர்பில்லாத அமைப்பு எது?

(A) உலக வங்கி

(B) ஊரக வளர்ச்சி அமைச்சகம்

(C) பஞ்சாயத்து ராஜ் அமைப்பு

*(D) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

67. 2011-ம் ஆண்டுக்கான இந்திய தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் தமிழகத்தின் தரவரிசை என்ன?

(A) மூன்றாவது

*(B) நான்காவது

(C) ஐந்தாவது

(D) ஆறாவது

68. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் பத்தாண்டு வளர்ச்சியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.

I. 2001-2011 காலகட்டத்தில் மக்கள்தொகையின் பத்தாண்டு வளர்ச்சி விகிதம் 15.6 சதவீதமாக இருந்தது, இது முந்தைய பத்தாண்டை விட அதிகமாகும்

II. 2001-2011 பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்தை தேசிய அளவில் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.

மேற்கூறியவற்றுள் சரியானது எது/எவை?

(A) I மட்டும்

(B) II மட்டும்

*(C) இரண்டும்

(D) இரண்டுமில்லை

69. 5வது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலங்கள் தேசிய கருவுறுதல் விகித அளவான 2.0-ஐ விட குறைவாக 1.8 என்ற குறைவான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளன?

I. ஆந்திரப் பிரதேசம்

II. கோவா

III. தமிழ்நாடு

IV. மகாராஷ்டிரா

*(A) I, II மற்றும் III மட்டும்

(B) II, III மற்றும் IV மட்டும்

(C) I, III மற்றும் IV மட்டும்

(D) மேற்கண்ட அனைத்தும்

70. தமிழ்நாட்டில் முதல் உழவர் சந்தை எங்கே கொண்டுவரப்பட்டது?

(A) தஞ்சாவூர்

*(B) மதுரை

(C) திருச்சி

(D) தர்மபுரி

71. செண்பகம் துரைராஜன் வழக்கு பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

(A) சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்

*(B) இட ஒதுக்கீடு கொள்கை

(C) டார்ஜிலிங் மக்களுக்கு சிறப்பு நிலை

(D) நீதிபதிகள் நியமனம்

72. சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பின்வரும் யாருக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுவதில்லை?

(A) கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்

(B) மாற்றுத் திறனாளி ஆண்கள்

(C) விதவைகள்

*(D) மூத்த குடிமக்கள்

73. நாட்டில் பூஜ்ய கார்பன் விவசாய முறையினை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது?

(A) சிக்கிம்

(B) அசாம்

(C) சத்தீஸ்கர்

*(D) கேரளா

74. அவ்வையார் விருது 2022 வென்றவர் யார்?

*(A) கிரிஜா குமார்பாபு

(B) கிரிஜா வைத்தியநாதன்

(C) மதுரை சின்னப்பிள்ளை

(D) சாந்தி ரங்கநாதன்

75. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற நரசிங்கப்பேட்டை நாதஸ்வரம் தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?

(A) திருவாரூர்

(B) நாகப்பட்டினம்

*(C) தஞ்சை

(D) காஞ்சிபுரம்

76. மட்டைப் பந்தாட்ட வீரரின் 20 ஆட்டங்களுக்கான சராசரி 35 மற்றும் அவரின் சிறந்த ஆட்டத்திற்கும் மோசமான ஆட்டத்திற்கும் இடையிலான ஓட்டங்களின் வித்தியாசம் 50. இவ்விறு ஆட்டத்தையும் நீக்கினால், 18 ஆட்டங்களின் சராசரி 32 எனில், அவர் தனது சிறந்த ஆட்டத்தில் எடுத்த ஓட்டம்?

87

88

89

90

77. ஒரு கோலத்தின் ஆரம் 25 சதவீதம் அதிகரிக்கிறது எனில் அதன் பரப்பளவு அதிகரிக்கும் சதவீதம்?

A) 56.52%

B) 56.50%

C) 56.20%

D) 56.25%

78. அரசு உயர்நிலைப் பள்ளியில் 80 மாணவர்கள் பள்ளி இருதி வகுப்பு தேர்வை எழுதினர். அவர்களில் 72 மாணவர்கள் தேர்ச்சியடைந்ததாக அரிவிக்கப்பட்டது. தேர்ச்சியடைந்த சதவிகிதத்தைக் காண்க.

*A) 90%

B) 94%

C) 95%

D) 96%

79. ஒரு நபரிடம் ரூ. 1, ரூ. 5, ரூ. 10 நோட்டுகளாக ரூ. 960 உள்ளது. ஒவ்வொரு முக மதிப்புகளிலும் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை சமம் எனில் அவரிடம் உள்ள மொத்த நோட்டுகளின் எண்ணிக்கை?

A) 150

B) 160

C) 170

*D) 180

80. பின்வருபவைகளில் தவரானதைத் தேர்க.

A) ஒரு எண் 3 அல்லது 7 உடன் முடிவடைந்தால், அதன் வர்க்கம் 9 உடன் மட்டுமே முடிவடையும்.

B) ஒரு எண் 4 அல்லது 6 உடன் முடிவடைந்தால், அதன் வற்கம் 6 உடன் மட்டுமே முடிவடையும்.

C) ஒரு எண் 1 அல்லது 9 உடன் முடிவடைந்தால், அதன் வர்க்கம் 1 உடன் முடிவடைகிறது.

*D) வர்க்க எண்கள் 0, 1, 3, 5, 7 மற்றும் 9 உடன் மட்டுமே முடிவடையும்.

81. “P” = 16, “TAP” = 37 எனில் “CUP” = ?

A) 36

B) 39

*C) 40

D) 24

82. ஒரு காரின் சக்கரம் 20 சுழற்சிகளில் 3520 செ.மீ. கடக்கிறது எனில், அந்தக் காரின் சக்கரத்தின் விட்டத்தைக் கண்டறியவும்.

*A) 56 cm

B) 28 cm

C) 42 cm

D) 36 cm 

83. ஒரு இனிப்புப் பெட்டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் 5 : 4 : 3 என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கன அளவு 7500 செ.மீ3 எனில், அதன் அளவுகளைக் கண்டறியவும்.

A) 15 cm × 20 cm × 25 cm

*B) 25 cm × 20 cm × 15 cm

C) 45 cm × 30 cm × 35 cm

D) 15 cm × 10 cm × 5 cm

84. ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் பரப்பளவின் மதிப்பு  சமமாக இருந்தால், அக்கோளத்தின் ஆரத்தின் மதிப்பு

A) 1

B) 2

*C) 3

D) 4 

85. 76 மீ நீளமும் 60 மீ அகலமும் கொண்ட செவ்வக வயலின் மையத்தில் 35 மீ நீளமுள்ள கயிற்றால் ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது. அந்த மாடு மேய முடியாத வயலின் பரப்பளவைக் கண்டுபிடியுங்கள்?

A) 510 m2

B) 610 m2

*C) 710 m2

D) 810 m2 

86. ஒரு தொகை ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் 6200 எனவும், 5 ஆண்டுகளில் 8000 எனவும் உயர்கிறது எனில், அசலையும் வட்டி வீதத்தையும்  காண்க.

*A) Rs. 5000 — 12%

B) Rs. 4500 —  14%

C) Rs. 6000 — 11%

D) Rs. 1600 —  8%

87. A என்பவர் B என்ற நபரிடமிருந்து 52000-ஐ ஒரு குறிப்பிட்ட தனி வட்டி வீதத்தில் கடனாக பெற்றார். நாண்கு  ஆண்டுகள் கழித்து ரூ 79040-ஐ மொத்த தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.

A) 15%

*B) 13%

C) 10%

D) 17%

88. ஒரு நாண்கு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் 3,50,000-ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 6% வீதம் குறைகிறது எனில், அதன் தற்போதய மதிப்பைக் காண்க.

A) 3,29,360

*B) 3,09,260

C) 3,08,000

D) 2,80,260

89. கொரோனா வைரஸ் முதல் நாளில் 5% வளர்ச்சியும், இரண்டாவது நாளில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது நாளில் 10% வளர்ச்சியும் அடைகிறது. எனில், துவக்கத்தில் அந்த எண்ணிக்கை 10000ஆக இருந்தது எனில், 3 நாட்களுக்கு பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

*A) 10,626

B) 11,255

C) 9,356

D) 12,256

90. கூட்டுவட்டி கணக்கிடலின்படி, அசல் ரூ. 7,500-க்கு 4% ஆண்டு கூட்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு இடப்பட்டால், கிடைக்கும் கூட்டு வட்டியில் மதிப்பு காண்க.

(A) ரூ. 600

(B) ரூ. 650

(C) ரூ. 680

(D) ரூ. 612

91. ஒரு வகுப்பில் ரோகன் மேலிருந்து ஏழாவது தரத்திலும் கீழேயிருந்து இருபத்தி ஆறாவது தரத்திலும் தேர்ச்சி பெற்றால் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

(A) 31

*(B) 32

(C) 33

(D) 34

92. “Aeroplane” என்பது “ship” எனவும், “ship” என்பது. “train” எனவும், “train” என்பது “tractor” எனவும், “tractor” என்பது “bus” எனவும், “bus” என்பது “car” எனவும், “car” என்பது “scooter” எனவும் அழைக்கப்படுகிறது எனில் எது நிலத்தை உழுவதற்கு பயன்படுகிறது

(A) Train

(B) Tractor

*(C) Bus

(D) Car

93. ஒரு எண்ணை 24, 32 மற்றும் 36 ஆல் வகுக்கும் போது முறையே 19, 27 மற்றும் 31 என்பன மீதியாக கிடைத்தால் அந்த எண்ணை காண்க.

(A) 280

(B) 290

*(C) 283

(D) 300

94. மிதிவண்டியில் 5 கி.மீ. தூரத்தை ஒருவர் 20 நிமிடத்தில் கடக்கிறார் எனில் 50 நிமிடத்தில் அவர் எவ்வளவு தூரம் செல்வார்?

(A) 10.5 km

(B) 12 km

*(C) 12.5 km

(D) 13.5 km

95. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர், அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8 செ.மீ மற்றும் மாறுபாட்டுக்கெழு 3.2 எனில், அவர்களுடைய உயரங்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

(A) 3.23

(B) 4.91

*(C) 5.24

(D) 6.38

96. இரு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் 594 ரூபாய்க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% லாபமும், மற்றதில் 10% நட்டமும், அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட லாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காணவும்.

(A) 12% நட்டம்

*(B) 1% நட்டம்

(C) 1% லாபம்

(D) 12% லாபம்

97. சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கரின் வயதைப் போல 6 மடங்கு. 4 வருடங்கள் கழித்து அவரின் வயது மகன் வயதைப் போல 4 மடங்கு எனில், அவர்களின் தற்போதைய வயது என்ன?

(A) 30, 5

*(B) 36, 6

(C) 48, 8

(D) 24, 4

98. இரண்டு எண்களின் மீ.சி.ம, (LCM) 48 ஆகவும், மேலும் அந்த எண்கள் 2:3 என்ற விகிதத்திலும் இருந்தால், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகையானது எதற்கு சமமாக இருக்கும்?

(A) 28

(B) 32

*(C) 40

(D) 64

99. மதிப்புக் காண்க.

123 × 999 + 123

(A) 246999

*(B) 123000

(C) 246000

(D) 123999

100. பின்வரும் வரிசையில் பொருந்தாத எண்ணை தேர்வு செய்க:

3, 5, 7, 12, 17, 19

(A) 3

*(B) 12

(C) 5

(D) 19

***

வினாத்தாள் தயாரிப்பு: திரு. சவுண்டப்பன் அவர்கள்.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *