பத்தாம்வகுப்பு தமிழ் மாதிரித்தேர்வு வினாவிடைகள்

 
  • சரியான விடைகள் எனக்கொள்க.

1) அன்னை மொழி எனும் தலைப்பில் அமைந்த கவிதை பற்றிய தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) அன்னை மொழி எனும் தலைப்பில் அமைந்த கவிதை கொய்யாக்கனி நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

2) இக்கவிதையை இயற்றியவர் பாவலர்மணி பெருஞ்சித்திரனார்

3) பெருஞ்சித்திரனார் தமிழ்ச் சிட்டு, தேன்மழை, தமிழ் நிலம் போன்ற இதழ்களை நடத்தினார்

a) 1, 2 தவறு

b) 1, 3 தவறு

c) 2, 3 தவறு

*d) 1, 2, 3 தவறு

e) விடை தெரியவில்லை

2) “நாடும் மொழியு்ம் நமதிரு கண்கள்” என்று கூறியவர் யார்

a) பெருஞ்சித்திரனார்

a) க. சச்சிதானந்தம்

*c) பாரதியார்

d) பாரதிதாசன்

e) விடை தெரியவில்லை

3) சரியாக அமைந்த கிளையின் பிரிவு வரிசையைத் தேர்க

*a) போத்து, குச்சு, இணுக்கு

b) போத்து, இணுக்கு, குச்சு

c) இணுக்கு, போத்து, குச்சு

d) இணுக்கு, குச்சு, போத்து

e) விடை தெரியவில்லை

4) கட்டைக்குத் தொடர்பில்லாத மரத்தின் பகுதி எது

a) கொம்பு

b) கவை

*c) விறகு

d) அடி

e) விடை தெரியவில்லை

5) பூவின் வாடிய நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் எது

a) மலர்

b) அலர்

c) வீ

*d) செம்மல்

e) விடை தெரியவில்லை

6) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இரா. இளங்குமரனாருக்குத் தொடர்பில்லாதது எது

a) காக்கை்ப் பாடினிய உரை

b) புறத்திரட்டு உரை

*c) திருக்குறள் மெய்ப்பொருள் உரை

d) குண்டலகேசி உரை

e) விடை தெரியவில்லை

7) “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து

ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்”

இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

a) நன்னூல்

b) தொல்காப்பியம்

c) யாப்பருங்கலம்

*d) தண்டியலங்காரம்

e) விடை தெரியவில்லை

8) திருவள்ளுவர் பெயரில் அமைந்த முதல் தமிழ்க் கணினி எப்போது உருவாக்கப்பட்டது

a) அக்டோபர் 1983

*b) செப்டம்பர் 1983

c) செப்டம்பர் 1993

d) அக்டோபர் 1993

e) விடை தெரியவில்லை

9) ஆங்கிலச் சொற்களையும் அவற்றிற்கு ிணையான தமிழ்ப் பதங்களையும் பொருத்துக

a) இணை ஒப்பு – 1) oxymoron

b) முரண்படு மெய்மை – 2) paradox

c) சொல்முரண் – 3) analogy

d) எதிரிணை இசைவு – 4) antithesis

a) 1 2 3 4

b) 2 1 4 3

*c) 3 1 2 4

d) 1 3 2 4

e) விடை தெரியவில்லை

10) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை

காரணம் – இது இசைநிறை அளபெடை என்றும் குறிப்பிடப்படுகிறது

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

*d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

11) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) அந்தமான்

b) வேங்கை

c) தேம்பாவணி

*d) சிலப்பதிகாரம்

e) விடை தெரியவில்லை

12) “வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்

ஆயுள் பெருக்கமுண் டாம்”

இவ்வடிகள் யாருடையது

a) இளங்கோவடிகள்

b) பழபட்டடைச் சொக்கநாதர்

*c) ஔவையார்

d) வெண்ணிக் குயத்தியார்

e) விடை தெரியவில்லை

13) திசைகளையும் வீசும் காற்றின் பெயர்களையும் பொருத்துக

a) தெற்கு – 1) தென்றல்

b) வடக்கு – 2) வாடை

c) கிழக்கு – 3) கோடை

d) மேற்கு – 4) கொண்டல்

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 1 2 4 3

d) 2 4 1 3

e) விடை தெரியவில்லை

14) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : புதுக்கவிதை என்னும் வடிவம் உருவாகக் காரணமாய் இருந்தது பாரதியாரின் வசன கவிதை ஆகும்

காரணம் : பாரதியார் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுகிறார்

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

15) பொருந்தாத இணையைக் காண்க

a) சுவல் – தோள்

b) நறுவீ – மணம் மிக்க மலர்

c) கோடு – மலை

*d) நேமி – இடம்புரிச் சங்கு

e) விடை தெரியவில்லை

16) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு

a) வெற்றிலைக் கொடி

b) மல்லிகைக் கொடி

c) வல்லிக் கொடி

*d) பூக்கொடி

e) விடை தெரியவில்லை

17) நூலையும் நூலாசிரியர்களையும் பொருத்துக

a) மழையும் புயலும் – 1) பா. சிங்காரம்

b) புயலிலே ஒரு தோணி – 2) வ. ராமசாமி

c) அதோ அந்தப் பறவைப் போல – 3) சேதுமணி மணியன்

d) தவறின்றித் தமிழ் எழுதுவோம் – 4) முகமது அலி

a) 1 2 3 4

b) 2 1 3 4

*c) 2 1 4 3

d) 3 1 2 4

e) விடை தெரியவில்லை

18) “விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர் போல”

இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது

a) புறநானூறு

b) சிலப்பதிகாரம்

*c) கலிங்கத்துப்பரணி

d) நற்றிணை

e) விடை தெரியவில்லை

19) “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

இவ்வடி உணர்த்தும் பொருள் என்ன

a) அல்லல் உற்ற காலத்தும் விருந்தினருக்கு உணவிடுதல்

b) உறவினர் அல்லாதோருக்கும் உணவிடுதல்

*c) நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்வுடன் வரவேற்று உணவிடுதல்

d) மேற்கூறிய எதுவும் இல்லை

e) விடை தெரியவில்லை

20) விருந்தினர் விடைபெற்றுச் செல்லும்போது அவர்கள் செல்ல இருக்கிற தேர்வரை ஏழடி நடந்து சென்று வழியனுப்பிய செய்தி இடம்பெறும் நூல் எது

a) புறநானூறு

b) சிறுபாணாற்றுப்படை

c) பெரும்பாணாற்றுப்படை

*d) பொருநராற்றுப்படை

e) விடை தெரியவில்லை

21) வருக என்ற சொல்லின் சரியான பகுபதத்தைக் காண்க

a) வரு + க

*b) வா [வரு] + க

c) வா + ர் + க

d) வரு + க் + அ

e) விடை தெரியவில்லை

22) சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

இவ்வடி இடம்பெறும் நூல் எது

a) பட்டினப்பாலை

b) மதுரைக்காஞ்சி

c) சிலப்பதிகாரம்

*d) மலைபடுகடாம்

e) விடை தெரியவில்லை

23) சொல்லையும் பொருளையும் பொருத்துக

a) வயிரியம் – 1) கூத்தர்

b) வேவை – 2) சோறு

c) பொம்மல் – 3) வெந்தது

d) கடும்பு – 4) சுற்றம்

a) 1 2 3 4

*b) 1 3 2 4

c) 2 1 3 4

d) 1 4 2 3

e) விடை தெரியவில்லை

24) தவறான கூற்று / கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது கோபல்ல கிராமம்

2) இப்புதினங்களின் ஆசிரியர் மீரா

3) 1991 ஆம் ஆண்டு கோபல்லபுரத்து மக்கள் புதினத்திற்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது

*a) 1, 2 தவறு

b) 1, 3 தவறு

c) 2, 3 தவறு

d) 1, 2, 3 தவறு

e) விடை தெரியவில்லை

25) எழுவாய்த் தொடரில் எழுவாயைத் தொடர்ந்து பயனிலையாக வராதது எது

a) பெயர்

b) வினை

c) வினா

*d) வேற்றுமை உறுபு

e) விடை தெரியவில்லை

26) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1) காசிக்காண்டம் காசி நகரின் பெருமையைக் கூறவில்லை

2) காசிக்காண்டம் நூலின் ஆசிரியர் அதிவீரராமப் பாண்டியர்

3) லிங்கபுராணம், கூர்மபுராணம், நறுந்தொகை போன்றவை அவர் எழுதிய பிற நூல்கள்

a) 1, 2, 3 சரி

b) 1, 3 சரி

*c) 2, 3 சரி

d) 1, 2 சரி

e) விடை தெரியவில்லை

27) தவறான இணையைக் காண்க

a) எச்ச வினை பெயரைக் கொண்டு முடிதல் – பெயரெச்சம்

b) எச்ச வினை வினையைக் கொண்டு முடிதல் – வினையெச்சம்

*c) வினையெச்சம் பெயரைக் கொண்டு முடிதல் – வினைமுற்றுத் தொடர்

d) வேற்றுமை உறுபு வெளிப்படையாக அமைதல் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

e) விடை தெரியவில்லை

28) சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1) ELA என்னும் உரையாடு மென்பொருளை பாரத் ஸ்டேட் வங்கி உருவாக்கியுள்ளது

2) அது ஒரு நிமிடத்திற்கு பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்

3) வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேவைகளை இணைய வசதி இல்லாமலேயே அளிக்கிறது

a) 1, 2 சரி

*b) 1 மட்டும் சரி

c) 2 மட்டும் சரி

d) 3 மட்டும் சரி

e) விடை தெரியவில்லை

29) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது

2) பெருமாள் திருமொழி 105 பாடல்களைக் கொண்டது

3) குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள உய்யவந்த பெருமாளை அன்னையாக உருவகித்து இதனைப் பாடியுள்ளார்

4) குலசேகர ஆழ்வாரின் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு

a) 1, 2 சரி

b) 2, 3 சரி

c) 1, 3 சரி

*d) 1, 2, 3 சரி

e) விடை தெரியவில்லை

30) வளர்வானம் இலக்கணக் குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) உம்மைத்தொகை

c) வேற்றுமைத்தொகை

*d) வினைத்தொகை

e) விடை தெரியவில்லை

31) “அண்டப் பகுதியின் உண்டைத் திரக்கம்

சிறிய ஆகப் பெரியோன் தெரியும்”

இப்பாடல் அடிகள் இடம்பெரும் நூல் எது

a) தேவாரம்

*b) திருவாசகம்

c) புறநானூறு

d) பதிற்றுப்பத்து

e) விடை தெரியவில்லை

32) இவ்வுலகில் நம் பால்வீதி போன்ற எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்பதை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹபுல் எந்த ஆண்டு நிரூபித்தார்

a) 1914

*b) 1924

c) 1934

d) 1944

e) விடை தெரியவில்லை

33) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) பரிபாடல் நூலில் எழுபது பாடல்கள் இருப்பதாக உரையாசிரியர்கள் கூறுகின்றனர்

2) தற்போது வரை 24 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

*c) 1, 2 இரண்டும் சரி

d) 1, 2 இரண்டும் தவறு

e) விடை தெரியவில்லை

34) பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் எப்போது நிருவப்பட்டது

a) 1978

*b) 1988

c) 1998

d) 2008

e) விடை தெரியவில்லை

35) பொருத்துக

a) செழியன் வந்தது – 1) இட வழு

b) நீ வந்தேன் – 2) திணை வழு

c) கண்ணகி உண்டான் – 3) கால வழு

d) நேற்று வருவான் – 4) பால் வழு

*a) 2 1 4 3

b) 2 1 3 4

c) 1 2 4 3

d) 1 2 3 4

e) விடை தெரியவில்லை

36) “கத்தும் குயிலோசை சற்றே வந்து

காதில் படவேணும்”

இவ்வடிகளில் காணப்படும் வழு எது

a) திணை வழு

b) பால் வழு

c) இட வழு

*d) மரபு வழு

e) விடை தெரியவில்லை

37) “ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேரொறு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்று கூறியவர் யார்

a) மு. கு. ஜகந்நாத ராஜா.

*b) மணவை முஸ்தபா

c) தமிழ்ச்செல்வன்

d) ச. கந்தசாமி

e) விடை தெரியவில்லை

38) “மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்”

இவ்வடி இடம்பெறுவது

a) வேள்விக்குடிச் செப்பேடு

b) தொல்காப்பியம்

c) மதுரைக்காஞ்சி

*d) சின்னமனூர்ச் செப்பேடு

e) விடை தெரியவில்லை

39) கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத காப்பியம் எது

a) சீவக சிந்தாமணி

b) கம்ப ராமாயணம்

c) வில்லி பாரதம்

*d) மேற்கூறிய எதுவும் இல்லை

e) விடை தெரியவில்லை

40) சேய்குத் தம்பிப் பாவலர் பற்றிய சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1) அவர் குமரி மாவட்டம் இடலாக்குடியில் பிறந்தார்

2) அவரது காலம் 1874 முதல் 1950 வரை

3) சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்

4) அவர் தனது 14 வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றிருந்தார்

5) அவரது சில நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன

*a) 1, 2, 3

b) 1, 2, 3, 4

c) 1, 2, 3, 4, 5

d) 1, 3, 4, 5

e) விடை தெரியவில்லை

41) திருவிளையாடற் புராணக் காண்டங்களின் சரியான வரிசை எது

a) கூடல், மதுரை, திருவாலவாய்

*b) மதுரை, கூடல், திருவாலவாய்

c) கூடல். திருவாலவாய், மதுரை

d) திருவாலவாய், மதுரை, கூடல்

e) விடை தெரியவில்லை

42) தான் அறிந்த ஒன்றை பிறர் அறிந்துள்ளனரா என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு வினாவப்படுவது எவ்வகை வினா

a) அறியா வினா

*b) அறிவினா

c) ஐயவினா

d) ஏவல் வினா

e) விடை தெரியவில்லை

43) பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குசேலப் பாண்டியன் தன்முன் பாடிய யாருடைய பாடலைப் பொருட்படுத்த்ாது அவமதித்தான்

a) கபிலர்

b) பரணர்

*c) இடைக்காடர்

d) மோசிகீரனார்

e) விடை தெரியவில்லை

44) பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க

a) சுட்டு விடை

b) மறை விடை

c) நேர் விடை

*d) ஏவல் விடை

e) விடை தெரியவில்லை

45) “விலங்கொடு மக்கள் அணையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏணை யவர்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள பொருள்கோள் எது

a) மொழிமாற்றுப் பொருள்கோள்

b) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

c) முறை நிரல்நிறைப் பொருள்கோள்

*d) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

e) விடை தெரியவில்லை

46) புரவியாட்டம் ராஜஸ்தானின் எவ்வாறு அழைக்கப்படுகிறது

a) புரவி நாட்டியம்

b) குதிரைக்கலி

*c) கச்சிகொடி

d) பொய்க்கால் குதிரையாட்டம்

e) விடை தெரியவில்லை

47) கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்குத் தொடர்பில்லாதது எது

a) கலைமாமணி

*b) இந்திய மாமணி

c) தாமரைத்திரு

d) கலை ஞாயிறு

e) விடை தெரியவில்லை

48) HEAD PHONE என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்லைக் காண்க

a) காதணிக் கருவி

*b) காதணி கேட்பி

c) காதுக் கருவி

d) ஒலிவாங்கி

e) விடை தெரியவில்லை

49) குட்டி இளவரசன் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

a) யூமா வாசுகி

*b) வே. ஸ்ரீராம்

c) வல்லிக்கண்ணன்

d) எம். பி. அகிலா

e) விடை தெரியவில்லை

50) மரப்பாவை பற்றிக் குறிப்பிடும் நூல் எது

a) பட்டினத்தார் பாடல்கள்

b) திருவாசகம்

*c) திருக்குறள்

d) புறநானூறு

e) விடை தெரியவில்லை

51) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்கப் பகுதியில் இராச சோழன் தெரு என்பது இன்றும் உள்ளது

காரணம் : ராசராசன் பல்வேறு நாடுகளின்மீது படையெடுப்பு மேற்கொண்டதை உணர்த்துகிறது

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

52) கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் கவிஞர் உமா மகேஸ்வரியின் நூல் அல்லாதது எது

*a) நிலாக்கால நட்சத்திரங்கள்

b) வெறும் பொழுது

c) கற்பாவை

d) நட்சத்திரங்களின் நடுவே

e) விடை தெரியவில்லை

53) செங்கீரைப் பருவத்திற்கான காலம் எது

a) மூன்றாவது மாதம்

b) ஐந்தாவது மாதம்

c) ஆறாவது மாதம்

*d) ஐந்து மற்றும் ஆறாவது மாதங்கள்

e) விடை தெரியவில்லை

54) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : பொருள் புரியாவிடினும் சந்த இன்பம் படிப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

காரணம் : பாரதியார் ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா என்று கூறுகிறார்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

55) பொருந்தாததைக் காண்க

a) தொலைந்து போனவர்கள்

b) சாந்தகுமாரி

c) சூர்யவம்சம்

*d) சுடுமண் சிலைகள்

e) விடை தெரியவில்லை

56) பொருந்தாத இணையைக் காண்க

a) குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை

*b) முன்பணி – மாசி, பங்குனி

c) இளவேனில் – சித்திரை, வைகாசி

d) முதுவேனில் – ஆனி, ஆடி

e) விடை தெரியவில்லை

57) திணையையும் மக்களையும் பொருத்துக

a) சேர்ப்பன் – 1) குறிஞ்சி

b) ஊரன் – 2) மருதம்

c) வெற்பன் – 3) முல்லை

d) ஆயன்- 4) நெய்தல்

a) 1 2 3 4

b) 4 3 2 1

*c) 4 2 1 3

d) 4 3 1 2

e) விடை தெரியவில்லை

58) கார்காலத்தைப் பெரும்பொழுதாகக் கொண்ட நிலங்கள் எவை

a) குறிஞ்சி, மருதம், நெய்தல்

*ஆ, முல்லை, மருதம், நெய்தல்

c) பாலை, மருதம், நெய்தல்

d) குறிஞ்சி, முல்லை, மருதம்

e) விடை தெரியவில்லை

59) “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது

a) சொல் பின்வருநிலை அணி

b) பொருள் பின்வருநிலை அணி

*c) சொற்பொருள் பின்வருநிலை அணி

d) உயர்வு நவிற்சி அணி

e) விடை தெரியவில்லை

60) “அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்”

இக்குறளில் பயின்றுவந்துள்ள மோனை எது

*a) இணை மோனை

b) கூழை மோனை

c) ஒரூஉ மோனை

d) முற்று மோனை

e) விடை தெரியவில்லை

61) “அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

a) இணை எதுகை

b) கூழை எதுகை

c) மேற்கதுவாய் எதுகை

*d) கீழ்க்கதுவாய் எதுகை

e) விடை தெரியவில்லை

62) பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட புனித நாள் என்று மா. பொ. சி. குறிப்பிடுவது எந்த நாள்

a) ஆகஸ்டு 15 1947

b) ஜூன் 26 1906

*c) ஆகஸ்டு 8 1942

d) ஜனவரி 26 1950

e) விடை தெரியவில்லை

63) முசிரி மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் வாழ்ந்த இரு வணிகர்களுக்கிடையேயான வணிக ஒப்பந்தம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

b) ஆஸ்திரேலியா

b) சீனா

c) மலேசியா

*d) ஆஸ்திரியா

e) விடை தெரியவில்லை

64) கு. ப. ரா. ஆசிரியராகப் பணியாற்றாத இதழ் எது

a) தமிழ்நாடு

*b) பாரதமாதா

c) பாரத தேவி

d) கிராம ஊழியன்

e) விடை தெரியவில்லை

65) பொருத்துக

a) பாசவர் – 1) வெற்றிலை விற்போர்

b) ஓசுநர் – 2) எண்ணெய் விற்போர்

c) மண்ணுள் வினைஞர் – 3) சிற்பி

d) மண்ணீட்டாளர் – 4) ஓவியர்

a) 1 2 3 4

*b) 1 2 4 3

c) 2 1 3 4

d) 2 1 4 3

e) விடை தெரியவில்லை

66) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : ராஜம் கிருஷ்ணன் அவர்களுக்கு வேருக்கு நீர் என்ற புதினத்திற்காகச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது

காரணம் : இதன்மூலம் இவர் சாகித்திய அகாதெமிவிருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆனார்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

67) வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட இரு அரசர்கள் போர்க்கலத்தில் போரிடும் திணை எது

a) வாகை

b) உழிஞை

*c) தும்பை

d) நொச்சி

e) விடை தெரியவில்லை

68) நன்றும் தீதும் ாய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சனது கடமை எனக் கூறும் நூல் எது

a) புறநானூறு

b) பட்டினப்பாலை

c) அகநானூறு

*d) மதுரைக்காஞ்சி

e) விடை தெரியவில்லை

69) வள்ளலின் பொருள் இரவலரின் பொருள்; வள்ளலின் வறுமை இரவலரின் வறுமை

என்று கூறியவர் யாப்

a) ஆவூர் மூலங்கிழார்

b) நக்கீரர்

*c) பெரும்பதுமனார்

d) ஔவையார்

e) விடை தெரியவில்லை

70) “புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது”

இவ்வரிகள் யாருடையது

a) வைரமுத்து

b) மு. மேத்தா

*c) கண்ணதாசன்

d) வாலி

e) விடை தெரியவில்லை

71) “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

இக்குறளில் அமைந்துள்ள ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு என்ன

a) நாள்

b) மலர்

c) காசு

*d) பிறப்பு

e) விடை தெரியவில்லை

72) கொடுக்கப்பட்டுள்ள ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமாகாத படைப்பு எது

a) உன்னைப்போல் ஒருவன்

b) சில நேரங்களில் சில மனிதர்கள்

c) ஊருக்கு நூறு பேர்

*d) சினிமாவுக்குப் போற சித்தாளு

e) விடை தெரியவில்லை

73) “எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் ஏழை

கண்ணீரும் பாடலில் கலந்திருக்கும்

பண்ணோடு சந்தமும் பாய்ந்து வரும் பழைய

மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்”

இவ்வடிகளில் ஜெயகாந்தன் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்

a) கண்ணதாசன்

*b) கல்யாணசுந்தரம்

c) மருதகாசி

d) புலமைப் பித்தன்

e) விடை தெரியவில்லை

74) நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன

a) முகமது இசுமாயில்

b) முகமது செரிபு

c) முகமது அலி

*d) முகமது ரஃபி

e) விடை தெரியவில்லை

75) கூற்று மற்றும் காரத்தை ஆய்க

கூற்று : வீரமாமுனிவருக்கு இஸ்மத் சன்யாசி பட்டம் வழங்கப்பட்டது

காரணம் : இஸ்மத் சன்யாசி என்பதற்கு தூய துறவி என்று பொருள்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

e) விடை தெரியவில்லை

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *