TNPSC மாதிரித்தேர்வு (2): வினாவிடைகள்

 

தலைப்புகளுக்குள் தாவிச் செல்ல

தமிழ் வினாக்கள்1

புவியியல் வினாக்கள்… 20

கணித வினாக்கள்… 35

குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ் வினாக்கள்

1) “அருள்நெறி அறிவைத் தரலாகும்

அதுவே தமிழன் குரலாகும்”

இப்பாடல் அடிகள் யாருடயவை

a) பாரதியார்

*b) இராமலிங்கனார்

c) வாணிதாசன்

d) இராஜகோபாலன்

2) விலங்குகளையும் அவற்றின் ஒலி மரபுகளையும் பொருத்துக

அ. மாடு – 1. கத்தும்

ஆ. கரடி – 2. கதரும்

இ. சிங்கம் = 3. உருமும்

ஈ. புலி – 4. முழங்கும்

a) 2 1 3 4

*b) 2 1 4 3

c) 1 2 3 4

d) 1 2 4 3

3) “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

       இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”

இக்கூற்று யாருடையது

a) பாரதியார்

b) திரு. வி. க.

*d) பாரதிதாசன்

d) நாமக்கல் கவிஞர்

4) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : செலவு என்பது குற்றியலுகரம் இல்லை

காரணம் : வ எனும் எழுத்தைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் தமிழில் இல்லை

a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

*b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

5) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க

1. குற்றியலுகரம் உரைநடையில் இல்லை

2. குற்றியலுகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

3. குற்றியலிகரம் உரைநடையில் இல்லை

4. குற்றியலிகரம் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது

a) 1 2 சரி

*b) 3 4 சரி

c) 1 3 சரி

d) 2 4 சரி

6) பொருந்தாத ஒன்றைக் கண்டறி

a) கொடிமுல்லை

*b) தமிழச்சியின் கத்தி

c) தொடுவானம்

d) எழிலோவியம்

7) ஓடை எனும் கவிதை எந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

a) கொடிமுல்லை

*b) தொடுவானம்

c) கனிச்சாறு

d) அமுதும் தேனும்

8) கிளிக்கண்ணி என்பது

a) இரண்டு சீர்களால் தொடுக்கப்படுவது

*b) இரண்டு அடிகளால் தொடுக்கப்படுவது

c) இரண்டு பாக்களால் தொடுக்கப்படுவது

d) இரண்டு சீர்களும் இரண்டு அடிகளும் அமையப்பெறுவது

9) ஜாதவ்பயெங் அவர்களுக்கு வனமகன் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் எது

a) கௌஹாத்தி பல்கலைக்கழகம்

b) மும்பைப் பல்கலைக்கழகம்

c) சென்னைப் பல்கலைக்கழகம்

*d) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

10) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : ஜாதவ்பயெங் இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுகிறார்

காரணம்; அவர் உருவாக்கிய காடு பிரம்மபுத்திராவிற்கு அருகே உள்ள மணற்பகுதியில் அமைந்துள்ளது

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

11) தவறான கூற்றைக் கண்டறிக

a) ஐகாரக்குறுக்கம் முதல், இடை மற்றும் இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் வரும்

*b) ஔகாரக் குறுக்கம் இறுதியில் மட்டும் வராது

c) ைகார மற்றும் ஔகாரக் குறுக்கங்கள் ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

d) இவை இரண்டும் சார்பெழுத்துக்களில் அடங்குவன

12) “ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி”

இவ்வடியில் சென்னி என்ற சொல்லின் பொருள் என்ன

a) சோழ அரசன்

b) கலங்கரைவிளக்கம்

c) தூண்

*d) உச்சி

13) கீழ்வரும் கூற்றுகளில் தவறானது எது 

1. பெரும்பாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்

2. இதன் பாட்டுடை்த்தலைவன் தொண்டைமான் இளந்திரையன்

3. இது 500 அடிகளைக் கொண்ட நூலாகும்.

*4. மதுரைக்காஞ்சி கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் மற்றொரு னூலாகும்

14) “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்”

இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது

a) பெரும்பாணாற்றுப்படை

*b) அகநானூறு

c) தொல்காப்பியம்

d) பதிற்றுப்பத்து

15) கப்பல் கட்டுவோர் ெவ்வாறு அழைக்கப்பட்டனர்

a) சுக்கான்

b) மீகான்

*c) கம்மியர்

d) கொல்லர்

16) தொல்காப்பியர் “முன்னீர் வழக்கம்” என்று குறிப்பிடுவது

a) கடலில் முத்துக்குளி்த்தல்

b) முக்கடல்களின் சங்கமம்

*c) கடற்பயனம் செய்தல்

d) ஏற்றுமதி இறக்குமதி செய்தல்

17) பூம்புகாரின் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட செய்தி எந்நூலில் இடம்பெற்றுள்ளது

a) அகநானூறு

b) பதிற்றுப்பத்து

c) மதுரைக்காஞ்சி

*d) பட்டினப்பாலை

18) தமிழரின் கப்பல் கட்டும் கலையை வியந்து பாராட்டியவர் யார்

a) பெரிபுலஸ்

b) யுவான்சுவாங்

*c) மார்கோபோலோ

d) வாக்கர்

19) அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று அறழைக்கப்படும் ஜூல்ஸ் வெர்ன் எந்த நாட்டைச் சார்ந்தவர்

a) இந்தியா

b) ரஸ்யா

c) ஜெர்மனி

*d) பிரான்சு

20) நால்வகைச் சொற்களில் இலக்கியங்களில் மட்டும் காணப்படும் சொல்வகை எது

a) இயற்சொல்

*b) திரிசொல்

c) திசைச்சொல்

d) வடசொல்

21. “ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட” என்ற பாடலின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்

a) குமர குருபரர்

b) ஔவையார்

*c) பாரதிதாசன்

d) பாரதியார்

22. நீதிநெறி விளக்கம் எத்தனை பாடல்களைக் கொண்டது

a) 31

*b) 102

c) 225

d) 100

23. “திருக்குறளில் நகைச்சுவை” என்பது யாருடைய நூல்

a) குன்றக்குடி அடிகளார்

b) நாமக்கல் கவிஞர்

*c) முனிசாமியார்

d) திரு. வி. க.

24. நூலையும் நூலாசிரியர்களையும் பொருத்துக

அ. தண்ணீர் – 1. சுப்ர பாரதி மணியன்

ஆ. தண்ணீர் தண்ணீர் – 2. அசோகமித்திரன்

இ. தண்ணீர் தேசம் – 3. கோமல் சாமிநாதன்

ஈ. தண்ணீர் யுத்தம் – 4. வைரமுத்து

a) 2 1 4 3

*b) 2 3 4 1

c) 2 4 3 1

d) 3 1 4 2

25) ஓரெழுத்து ஒருமொழிகளையும் பொருளையும் பொருத்துக

அ. ஏ – 1. மேகம்

ஆ. சே – 2. தெய்வம்

இ. பே – 3. அம்பு

ஈ. தே – 4. உயர்வு

a) 2 4 1 3

b) 4 3 1 2

c) 3 4 2 1

*d) 3 4 1 2

26) பகுபதம் எத்தனை வகைப்படும்

a) 4

*b) 6

c) 2

d) 8

27) பொருந்தாத ஒன்றைக் காண்க

a) வெள்ளை ரோஜா

b) மண்வாசல்

c) பெய்து பழகிய மேகம்

*d) கதை சொல்லும் கலை

28) நூல் மற்றும் நூலாசிரியர்களைப் பொருத்துக

அ. சகலகலாவல்லி மாலை – 1. குமரகுருபரர்

ஆ. சரஸ்வதிமாலை – 2. வரதன்

இ. புறப்பொருள் வெண்பா மாலை – 3. ஐயனார் இதனார்

ஈ. மலரும் மாலையும் – 4. கவிமணி

*a) 1 2 3 4

b)  2 1 3 4

c) 1 2 4 3

d) 2 1 4 3

29) குணமாலை யானையைக் கண்டு அஞ்சிய ஓவியம் எதில் வரையப்பட்டுள்ளது

a) பாறை

b) தந்தம்

*c) துணி

d) கண்ணாடி

30) ஓவியத்தைப்பற்றி அறிந்தோர் அதனைப்பற்றி அறியாதோருக்கு விளக்கிய செய்தி இடம்பெறும் நூல் எது

a) பதிற்றுப்பத்து

b) அகநானூறு

*c) பரிபாடல்

d) நற்றிணை

31. “வண்கீரை” இலக்கணக் குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) வேற்றுமைத்தொகை

*c) பண்புத்தொகை

d) அன்மொழித்தொகை

32. மதுரைத் தமிழ்ச்சங்கம் எப்போது திறக்கப்பட்டது

a) 2000

b) 1942

c) 1122

*d) 2016

33. தொழிற்பெயரின் வகைகள் எத்தனை

a) 2

*b) 3

c) 4

d) 5

34. கீழ்க்காண்பவற்றுள் தொழிற்பெயர் விகுதி அல்லாதது எது

a) அல்

b) தல்

c) அம்

*d) அன்

35) முன்றுறை அரையனாரின் காலம் எது

*a) கி. பி. நாண்காம் நூற்றாண்டு

b) கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

c) கி. பி.  மூன்றாம் நூற்றாண்டு

d) கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு

36) தவறான கூற்றைத் தேர்ந்தெடு

1. வயலும் வாழ்வும் என்னும் நாட்டுப்புறப் பாடல் மலையருவி என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

2. மலையருவி நூலின் தொகுப்பாசிரியர் கி. வ. ஜெகன்நாதன்

a) கூற்று 1 மட்டும் சரி

b) கூற்று 2 மட்டும் சரி

*c) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி

d) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு

37) “திக்கெல்லாம் புகழுரும் திருநெல்வேலி” என்று திருநெல்வேலியைப்பற்றிக் கூறுபவர் யார்

a) அப்பர்

b) மாணிக்கவாசகர்

c) சுந்தரர்

*d) சம்பந்தர்

38) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  திருநெல்வேலிக்கு முற்காலப் பெயர் வேணுவனம்

காரணம் : வேணுவனம் என்ற சொல்லுக்கு நெற்காடு என்று பொருள்

a) கூற்று காரணம் இரண்டும் சரி

b) கூற்று காரணம் இரண்டும் தவறு

*c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

39) “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a) திருநெல்வேலிப் உலா

*b) குற்றாலக் குறவஞ்சி

c) மதுரைக் கலம்பகம்

d) மேற்கண்ட எதுவும் இல்லை

40) கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று : பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது

காரணம் : பாளையங்கோட்டையில் கல்வி நிலையங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

41. கீழ்வரும் பெயர்களுள் ரசிகமணியின் சிறப்புப் பெயரல்லாதது எது

a) தமிழிசைக் காவலர்

b)  வளர்தமிழ் ஆர்வலர்

c) குற்றால முனிவர்

*d) செந்தமிழ் அந்தணர்

42. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நாமக்கல் கவிஞரின் படைப்பு அல்லாதது எது

a) மலைக்கள்ளன்

b) சங்கொலி

*c) என் சரித்திரம்

d) நாமக்கல் கவிஞர் பாடல்கள்

43. குற்றியலுகரச் சொற்களையும் அவற்றின் வகைகளையும் பொருத்துக

அ. பாக்கு – 1. இடைத்தொடர்

ஆ. காடு – 2. வன்தொடர்

இ. உலகு – 3. நெடில்தொடர்

ஈ. மூழ்கு – 4. உயிர்த்தொடர்

*a) 2 3 4 1

b) 2 4 3 1

c) 1 2 3 4

d) 4 3 2 1

44. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் காடு என்ற பொருள் தராத சொல் எது

a) அடவி

b) புரவு

*c) பவ்வம்

d) இரும்பு

45) “முள் + தீது” என்பதைச்  சேர்த்தெழுதக் கிடைப்பது

*a) முஃடீது

b) முஃதீது

c) முள்தீது

d) முள்ளீது

46) சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசனின் படைப்பான பிசிராந்தையார் என்னும் நூல் ஒரு

a) கவிதைத்தொகுப்பு

b) கட்டுரைத்தொகுப்பு

*c) நாடகம்

d) புதினம்

47) தேனரசன் கவிதை எழுதாத இதழ் எது

a) தென்றல்

b) குயில்

c) வானம்பாடி

*d) கனவு

48) நூலகங்களையும் அவை உருவாக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக

அ. கன்னிமாரா நூலகம் – 1. 1896

ஆ. உ. வே. சா. நூலகம் – 2. 1942

இ. சரஸ்வதிமஹால் நூலகம் – 3. 1122

ஈ. கீழ்த்திசை நூலகம் – 4. 1869

*a) 1 2 3 4

b) 1 3 2 4

c) 2 3 4 1

d) 2 1 4 3

49) “காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது”

இவ்வடியில் வெளிப்படும் அணி எது

a) உவமை அணி

b) எடுத்துக்காட்டு உவமை அணி

*c) இல்பொருள் உவமை அணி

d) உருவக அணி

50) சரியான கூற்று/கூற்றுகளைக் கண்டறிக

1. காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர் ஆவார்

2. இவர் ஒரே ஒரு பாடல் மட்டும் பாடியு்ளார்

3. அவ்வொரு பாடல் அகநானூற்றில் உள்ளது

*a) 1 2 சரி

b) 2 3 சரி

c) 1 3 சரி

d) 1 2 3 சரி

51. “வீரப் பேச்சால் எத்தனையோ தியாகிகளையும் விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகலையும் உருவாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி”

என்று முத்துராமலிங்கரைப் புகழ்ந்தவர் யார்

a) அண்ணா

*b) பெரியார்

c) சி. டி. ராமசாமி

d) காமராசர்

52. மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் முத்துராமலிங்கர்  யாரோடு சேர்ந்து போராடினார்

a) பெரியார்

b) ஜார்ஜ் ஜோசப்

*c) வைதியநாதர்

d) அண்ணா

53. கூற்று மற்றும் காரணத்தை ஆய்க

கூற்று :  ரா. பி. சேதுப்பிள்ளை சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுகிறார்

காரணம் : செய்யுளுக்கே உரிய மோனை, எதுகையை உரைநடைக்குக் கொண்டுவந்தவர்

*a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை

c) கூற்று சரி, காரணம் தவறு

d) கூற்று தவறு, காரணம் சரி

54. ரா. பி. சே. வின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் எது

a) தமிழ் விருந்து

*b) தமிழின்பம்

c) ஆற்றங்கரையினிலே

d) கடற்கரையினிலே

55) பொருந்தாததைக் கண்டறிக

a) இடக்கரடக்கல்

b) மங்கலம்

c) குழூுக்குறி

*d) மரூு

56) பொருந்தாத இணையைக் கண்டறி

a) மையல் – முதற்போலி

b) அமைச்சு – இடைப்போலி

c) அறன் – கடைப்போலி

*d) பத்து – முற்றுப்போலி

57) சரியான கூற்றுகளைத் தேர்ந்தெடு

1. பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

2. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்

3. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்

4. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் மாமல்லபுரம்

a) 1 2 4 சரி

b) 2 3 4 சரி

c) 1 2 3 சரி

*d) 1 2 3 4 சரி

58) “இடர்ஆழி” இலக்கணக்குறிப்பு தருக

a) உவமைத்தொகை

b) உம்மைத்தொகை

*c) உருவகம்

d) வேற்றுமைத்தொகை

59) அறக்கதிர் ஈன எதனை வித்தாக இடவேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்

a) இன்சொல்

*b) ஈதல்

c) வாய்மை

d) அன்பு

60) “உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்”

இக்கூற்று யாருடையது

a) பாரதியார்

*b) பாரதிதாசன்

c) திருவள்ளுவர்

d) குன்றக்குடி அடிகளார்

61. “பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்”

இக்குறளில் பயின்றுவரும் அணி எது

a) உவமை அணி

b) உருவக அணி

*c) எடுத்துக்காட்டு உவமை அணி

d) ஏகதேச உருவக அணி

62. ஜென் என்ற சொல்லிற்கான தமிழ்ப் பொருள் என்ன

a) வழிகாட்டு

*b) தியாகம் செய்

c) விட்டுக்கொடு

d) விருந்தோம்பல்

63. ” உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு”

இக்குறளில் பயின்றுவரும் எதுகை எது

a) இணை எதுகை

b) பொழிப்பு எதுகை

*c) ஒரூஉ எதுகை

d) முற்று எதுகை

64. “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்

காடும் உடையது அறன்”

இக்குறளில் பயின்றுவரும் மோனை எது

a) இணை மோனை

b) பொழிப்பு மோனை

*c) கூழை மோனை

d) முற்று மோனை

65) “வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்

வாழ்க்கை பாலைவனம் – அவர்

தூய மனத்தில் வாழ நினைத்தால்

எல்லாம் சோலைவனம்!”

இவ்வடிகள் யாருடையவை

a) சே. பிருந்தா

*b) கண்ணதாசன்

c) பாரதிதாசன்

d) வெண்ணிலா

66) தன்னை அறிதல் என்னும் கவிதை சே. பிருந்தாவின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

a) வீடு முழுக்க வானம்

b) மழை பற்றிய பகிர்தல்கள்

*c) மகளுக்குச் சொன்ன கதை

d) மலைப்பொழிவு

67) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன

a) முகமது இசுலாம்

b) முகமது அலி

c) முகமது நபி

*d) முகமது இசுமாயில்

68) “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக் கதிராக காயிதே மில்லத் திகழ்கிறார்”

என்று காயிதே மில்லத் அவர்களைப் புகழ்ந்தவர் யார்

a) கருணாநிதி

b) பெரியார்

c) எம். ஜி. ஆர்

*d) அண்ணா

69) “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான்”

என்று கூறியவர் யார்

a) அண்ணா

b) பெரியார்

c) ம. போ. சி.

*d) காயிதே மில்லத்

70) காயிதே மில்லத் என்பது

a) உருதுச் சொல்

b) ஹிந்திச் சொல்

*c) அரபுச் சொல்

d) தமிழ்ச் சொல்

71. பாவண்ணன் எந்த மொழியில் உள்ள  நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்

a) மலையாளம்

*b) கன்னடம்

c) தெலுங்கு

d) உருது

72. “டிசம்பர் சூடினாள்”

இது எவ்வகை ஆகுபெயர்

a) பொருளாகு பெயர்

*b) காலவாகு பெயர்

c) சினையாகு பெயர்

d) இடவாகு பெயர்

73. ஆலன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலை மனம் போல் வாழ்வு என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்

a) டி. கே. சி.

b) ம. போ. சி.

*c) வ. உ. சி.

d) கவிமணி

74. தமிழில் எத்தனை வகைக் குறுக்கங்கள் உள்ளன

a) 2

b) 3

*c) 4

d) 5

75) மாட ஒள்ளெரி என்ற சொல்லின் பொருள் என்ன

a) உயர்ந்த மாடம்

b) மாளிகை

c) கப்பல்

*d) கலங்கரை விளக்கம்

புவியியல் வினாக்கள்

76) பூமியானது தன் அச்சில் சுழன்று 24 மணி நேரத்தில் எத்தனை தீர்க்க கோடுகளை கடக்கிறது?

    A) 90

    B) 360*

    C) 270

    D) 180

77) இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை எதன் வழியாக செல்கிறது?

    A) குஜராத்

    B) அருணாச்சல பிரதேசம்

    C) அகமதாபாத்

    D) மிர்சாபூர்*

78) இந்திய நிலப் பகுதியின் தென்கோடி எது?

    A) இந்திரா முனை

    B) இந்ரா கோல்

    C) ராமேஸ்வரம்

    D) குமரிமுனை*

79) ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்கே அமைந்துள்ள தார் பாலைவனத்தின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

    A) மருஸ்தலி*

    B) காயல்

    C) பாங்கர்

    D) டெரிஸ்

80) இந்தியாவில் சூரியனின் செங்குத்து கதிர்கள் எம் மாதத்தின் மத்தியில் விளைகின்றன?

    A) ஏப்ரல்

    B) மே

    C) ஜூன்*

    D) ஜூலை

81) குளிர்காலத்தில் தென்னிந்தியாவில் ஒரு நாளின் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை எவ்வளவு டிகிரி செல்சியஸ்?

    A) 22*

    B) 26

    C) 28

    D) 32

82) தென்மேற்கு பருவக்காற்றானது பின்வரும் எவ்விசையின் காரணமாக திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது?

    A) புவியீர்ப்பு விசை

    B) கொரியாலிஸ் விசை*

    C) ஃபிலமெண்டேஷன் திசை

    D) காற்று தடை விசை

83) இந்திய பரப்பளவின் சதவீதத்தையும், மலை பொலிவையும் பொருத்துக;

  1) 37% – 35 செ மீக்கு குறைவாக

  2) 24% – 125 முதல் 200 செ மீ

  3) 21% – 75 முதல் 125 செ மீ

  4) 7% – 35 முதல் 75 செ மீ

    A) 1234

    B) 4231

    C) 3421*

    D) 2143

84) அயன மண்டல இலையுதிர் காடுகளில் காணப்படும் முக்கிய மரங்கள் எவை?

    A) தேக்கு மற்றும் சால்*

    B) சிங்கோனா மற்றும் தென்னை

    C) ரப்பர் மற்றும் மூங்கில்

    D) இவை அனைத்தும்

85) அயன மண்டல வரண்ட காடுகள் தமிழ்நாட்டின் எப்பகுதியில் காணப்படுகின்றன?

    A) வடக்கு

    B) கிழக்கு*

    C) தெற்கு

    D) மேற்கு

86) இமயமலையில் 2,400 மீட்டர் உயரத்திற்கு மேலே காணப்படும் காடுகள் எவை?

    A) இலையுதிர் காடுகள்

    B) ஓத அலை காடுகள்

    C) மாங்குரோவ் காடுகள்

    D) ஆல்பைன் காடுகள்*

87) உயிரினங்களின் வகைகளை பொருத்துக,

  1) பூச்சிகள் – 204

  2) பறவைகள் – 1,228

  3) மீன்கள் – 2,546

  4) ஊர்வன – 60,000

    A) 1234

    B) 4231*

    C)1324

    D) 3124

88) இந்தியாவில்  அதிகமான உயிர்க்கோள காப்பகங்கள் கொண்டுள்ள மாநிலம் எது?

    A) உத்தரபிரதேசம்

    B) மத்திய பிரதேசம்*

    C) தமிழ்நாடு

    D) மேகாலயா

89)  வெளிர் நிறமுடைய மணற்பாங்கான வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    A) காதர்*

    B) பாங்கர்

    C) தைஸ்

    D) கால்சா

90) பின்வரும் எந்த பயிர் வளர கரிசல்மண் ஏற்றதல்ல?

    A) பருத்தி

    B) கோதுமை*

    C) புகையிலை

    D) திணை வகைகள்

91) பின்வரும் கூற்றுகளில் எது தவறானது அல்ல?

  கூற்று : 1 செம்மண்ணில் இரும்பு மற்றும் நைட்ரஜன் ஆகிய இரு தனிமங்கள் அதிகம் காணப்படுகின்றன.

   கூற்ற : 2 தக்காண பீடபூமி, சோட்டா நாகபுரி பீடபூமி ஆகிய பகுதிகளில் செம்மண் அதிக அளவில் காணப்படுகின்றன.

    A)1 மட்டும்

    B) 2 மட்டும்*

    C) 1 மற்றும் 2

    D) எதுவும் இல்லை

92) பௌதீக சிதைவின் காரணமாக உருவாகும் மண் வகை எது ?

    A) காடு மற்றும் மலை மண்*

    B) உப்பு மற்றும் கார மண்

    C) வறண்ட பாலை மண்

    D) களிமண் மற்றும் சதுப்பு நிலம் மண்

93) நீர் சக்கரம் என்று அழைக்கப்படும் நீர் பாசனம்  எது?

    A) சொட்டுநீர் பாசனம்

    B) தெளிப்பு நீர் பாசனம்

    C) மைய சூழல் பாசனம்*

    D) எதுவுமில்லை

94) பின்வரும் திட்டங்களையும் அவைகளால் பயன்பெறும் மாநிலங்களையும் பொருத்துக,

   1) தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் – பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்

   2) பக்ரா நங்கல் திட்டம் – ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா

   3) ஹிராகுட் திட்டம் – மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட்

   4) துங்கபத்ரா திட்டம் – ஒடிசா

    A) 1234

    B) 3142*

    C) 4321

    D) 2413

95) இந்தியாவில் வேளாண்மை மூலம் எத்தனை சதவீதத்திற்கும் மேலான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது?

    A) 25%

    B) 50%*

    C) 75%

    D) 85%

96) அசாம் மாநிலத்தில் இடப்பெயர்வு வேளாண்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    A) பொன்னம்

    B) ஜூம்*

    C) மாசன்

    D) பொடு

97) பின்வருவனவற்றுள் எது வாணிப பயிர் அல்ல?

    A) கரும்பு

    B) பருத்தி

    C) மலர்*

    D) எண்ணெய் வித்துக்கள்

98) இந்தியாவில் நெல் பயிரிடும் முறைகளில் சேராதது எது?

    A) விதைத் நூவுதல் முறை

    B) துளையிடுதல் முறை

    C) நாற்று நடுதல் முறை

    D) விதை பரவல் முறை*

99) பின்வருவனவற்றை கவனிக்க,

    கூற்று : பருப்பு வகைகள் பயிர்சுழற்சி பயிரிடல் முறையில் வழக்கமாக பயிரிடப்படுகின்றன.

    காரணம் : இவை வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து மண் வளத்தை அதிகரிக்கிறது.

    A) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி*

    B) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

    C) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

100) உலகின் முதல் கால்நடை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

    A) 1819

    B) 1899

    C) 1919*

    D) 1929

101) இரும்பு சாரா தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைந்துள்ள இடம் எது?

    A) ஹைதராபாத்*

    B) அகமதாபாத்

    C) அலகாபாத்

    D) கொல்கத்தா

102) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

   கூற்று 1 : உலோக கனிமங்கள் அரிதாகவும், இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுகின்றன.

   கூற்று 2 : அலோக கனிமங்களை விட உலோக கனிமங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

    A) 1 மட்டும்*

    B) 2 மட்டும்

    C) 1 மற்றும் 2

    D) எதுவும் இல்லை

103) பின்வரும் எது தயாரித்தலில் சுண்ணாம்புக்கல் பயன்படுத்துவது இல்லை?

    A) காகிதம்

    B) கண்ணாடி

    C) உரங்கள்

    D) பாரிஸ் சாந்து*

104) இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் 1897ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது?

    A) சிம்லா

    B) டார்ஜிலிங்*

    C) குந்தா

    D) மூணார்

105) இந்தியாவின் மான்செஸ்டர் எது?

    A) அகமதாபாத்*

    B) மும்பை

    C) பெங்களூரு

    D) ஒடிசா

106) பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

    A) இந்திய மக்கள்தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக அதிகம்*

    B) இந்திய மக்கள்தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்தை விட மிக குறைவு

    C) இந்திய மக்கள்தொகை விகிதம் அதன் பரப்பு விகிதத்திற்கு சமம்

    D) மேற்கண்ட எதுவுமில்லை

107) இந்தியாவின் முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

    A) 1861

    B) 1872

    C) 1881*

    D) 1891

108) பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு குறிப்பிடப்படும் சாலையை அடையாளம் காண்க,

   1) இது 5,846 கி மீ நீளத்தையும், 4 முதல் 6 வழித்தடங்களையும் கொண்டதாக உள்ளது.

   2) இது வடக்கு தெற்காக இந்தியாவின் 4 பெருநகரங்களை இணைக்கிறது.

   3) இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

    A) சேது பாரத சாலை

    B) தேசிய நெடுஞ்சாலை

    C) தங்க நாற்கர சாலை*

    D) தலைநகர் இணைப்பு சாலை

109) பின்வருவனவற்றுள் இந்தியாவில் இருக்கும் முக்கியமான விரைவு சாலை அல்லாதது எது?

    A) மும்பை-புனே விரைவு சாலை

    B) தானே-டம்டம் விரைவுசாலை*

    C) துர்காபூர்-

கொல்கத்தா விரைவு சாலை

    D) டெல்லி-ஆக்ரா விரைவுசாலை

110) பின்வரும் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் ஏறு வரிசைப்படுத்துக.

  1) கஞ்சன்ஜங்கா

   2) மகளூர்

   3) தவளகிரி

   4) நந்தாதேவி

    A) 1234

    B) 4321*

    C) 2134

    D) 3412

111) பாபாபுதான் மலைகளில், சுரங்கத்திற்கு பிரபலமான பின்வரும் தாது எது?

    A) செம்பு

    B) இரும்பு*

    C) பாக்சைட்

    D) துத்தநாகம்

112) இந்தியாவில் மக்கள் தொகை வீழ்ச்சிக்கான காரணம் அல்லது காரணங்கள் எவை?

  1) இறப்பு விகிதம் குறைதல்

  2) குறைந்த கல்வியறிவு

  3) காலம் தாழ்ந்த திருமணம்

    A) 1 மற்றும் 2*

    B) 1 மற்றும் 3

    C) 2 மற்றும் 3

    D) 1 2 மற்றும் 3

113) பின்வரும் ஆறுகளை வடக்கு தெற்கு வரிசையில் வரிசைப்படுத்துக.

   1) கோதாவரி

   2) கிருஷ்ணா

   3) மகாநதி

   4) காவேரி

    A) 1234

    B) 3124*

    C) 2341

    D) 4213

114) “நிலை நிறுத்தும் அபிவிருத்தி” என்னும் வார்த்தை குறிப்பது?

    A) இயற்கை சொத்துக்கள் முடிவுற கூடியது*

    B) இயற்கை சொத்துக்கள் முடிவுறாதது

    C) இயற்கைச் சொத்துக்கள் வளங்கள் அல்ல

    D) தற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது

115) அனைத்திந்திய உயர்கல்விக்கான கணக்கெடுப்பு 2019 இன் படி, எந்த மாநிலம் அதிகப்படியான முனைவர்களை உருவாக்கியுள்ளது?

    A) தமிழ்நாடு*

    B) கேரளா

    C) மகாராஷ்டிரா

    D) குஜராத்

116) பின்வரும் கூற்றுகளில் எது சரியானது அல்ல.

  1) சென்னை, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

  2) தமிழகத்தில் 5 வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன.

   3) கரூரில் மிகப்பெரிய காகித உற்பத்தி நிறுவனம் உள்ளது.

   4) ரப்பர் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

    A) 1 மற்றும் 2

    B) 2 மற்றும் 3

    C) 2 மற்றும் 4*

    D) 1 மற்றும் 4

117) கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகைகளில் நாகாலாந்தின் கிழக்கு எல்லை எது?

    A) அசாம்

    B) மணிப்பூர்

    C) மேற்கு வங்கம்

    D) மியான்மர்*

118) 760 கி மீ நீளமுள்ள கொங்கன் ரயில் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?

   1) கேரளா

   2) கர்நாடகா

   3) மகாராஷ்டிரா

   4) கோவா

     A) 1 2 3 மற்றும் 4*

     B) 1 2 மற்றும் 3

     C) 1 மற்றும் 2

     D) 2 மற்றும் 4

119) இந்தியாவில் இடைநிலை வெப்பமண்டல காலநிலை எங்கு காணப்படுகிறது?

    A) கிழக்கு தொடர்ச்சி மலை

    B) மேற்கு தொடர்ச்சி மலை

    C) கங்கை சமவெளி*

    D) சோழ மண்டல கடற்கரை

120) சிவசமுத்திரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

    A) நர்மதா

    B) காவேரி*

    C) பவானி

    D) கிருஷ்ணா

121) பின்வரும் மலைத் தொடர்களை தெற்கு வடக்காக வரிசைப்படுத்துக.

  1) காரகோரம் மலைத்தொடர்

  2) பீர்பான்ஜல் மலைத்தொடர்

  3) லடாக் மலைத்தொடர்

  4) ஜாஸ்கார் மலைத்தொடர்

     A) 1234

     B) 2431*

     C) 3142

     D) 4321

122) பெருங்கடலின் சராசரி உவர்ப்பியத்தின் அளவு என்ன?

    A) 35%*

    B) 45%

    C) 50%

    D) 55%

123) சிமிலி பால் (Similipal) என்பது என்ன?

    A) சரணாலயம்

    B) உயிர் அடுக்கு வளம்*

    C) தேசிய பூங்கா

    D) மிருகக்காட்சிசாலை

124) தக்காணப் பீடபூமியில் இருந்து மிகுந்த ஈரத்தன்மையை தாங்கும் திறன் கொண்ட மண் எது?

    A) செம்மண்

    B) ரெகர் மண்*

    C) வண்டல் மண்

    D) சரளை மண்

125) தென் வியாபார காற்று (Southerly trade) புவியிடை கோட்டை கடந்த பின் வலது புறமாக விலகிச் செல்கிறது என்பதைக் கூறும் கோட்பாடு எது?

    A) ஹம்போல்ட் விதி

    B) பை பேலட் விதி

    C) ஃபெரல்ஸ் விதி*

    D) நியூட்டன் விதி

கணித வினாக்கள்

126) ஒரு குறிப்பிட்ட தொகை 8 வருடங்களில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தை கணக்கிடவும்?

A) 10%

B) 12%

C) 5%

*D) 12.5%

127) ரூபாய் 800க்கு 3  வருடங்களில்  ரூபாய் 920ஆக மாறுகிறது எனில், தனிவட்டி வீதத்தை கண்டறியவும்?

*A) 5%

B) 10%

C) 8%

D) 15%

128) ஒரு குறிப்பிட்ட அசல் இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 720 ஆகவும், 5 ஆண்டுகளில் ரூபாய் 1020 ஆகவும் மாறுகிறது எனில், அசலைக் கண்டறியவும்?

A) 500

*B) 520

C) 420

D) 300

129) ஒரு தொகை 6.25% தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்காக மாறும்?

A) 8 ஆண்டுகள்

*B) 16 ஆண்டுகள்

C) 10 ஆண்டுகள்

D) 12 ஆண்டுகள்

130) ஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது. மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு?

a) 6%

*b) 8%

c) 10%

d) 12%                                                                                                                                                                                   

131) 4000க்கு 5% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில், 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் எவ்வளவு?

a) Rs. 70

b) Rs. 80

*c) Rs. 10

d) Rs. 20                                                                                                                                                                                  

132) ரூ. 16000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 360 எனில் வட்டிவீதம் என்ன ?

a) 10%

*b) 15%

c) 20%

d) 25%

133) ஒரு தொகை 10 ஆண்டுகளில் கூட்டுவட்டி முறையில் இரட்டிப்பாகிறது. எத்தனை ஆண்டுகளில் 16 மடங்கு ஆகும்?

A) 25

B) 30

*C) 40

D) 35

134) ரூபாய் 9000 அடுத்தடுத்த ஆண்டுகள் முறையே 10% மற்றும் 12% கூட்டுவட்டி முறையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என்ன முதிர்வுத்தொகை கிடைக்கும்?

A) 10088

*B) 11088

C) 12088

D) 2188

135) 6 மாதத்திற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் ரூபாய் 24000க்கு 1.5 ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் கிடைக்கும் கூட்டுவட்டி என்ன?

*A) 3783

B) 2165

C) 2780

D) 3680

136) ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூபாய் 1.50 எனில் அசல் தொகை எவ்வளவு?

A) 1500

B) 750

C) 500

*D) 600

137) ஒரு குறிப்பிட்ட தொகை 16 வருடங்களில் தனிவட்டி முறையில் 4 மடங்காகிறதுஎனில், 7  மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

*A) 28 ஆண்டுகள்

B) 35 ஆண்டுகள்

C) 32 ஆண்டுகள்

D)30 ஆண்டுகள்

138) ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி ரூபாய் 5445 எனில், அசல் தொகை எவ்வளவு?

A) 3500

B) 5500

C) 4500

*D) 6500

139) ஒரு தொகை 3 வருடத்தில் கூட்டுவட்டி வீதத்தில் 1.331 மடங்காகிறது என்றால் வட்டி வீதம் என்ன?

A) 50%

B) 8%

C) 7.5%

*D) 10%

140) ரூபாய் 1200 ஆனது 5 வருடத்தில் கூட்டுவட்டி வீதத்தில் 2 மடங்காகிறது என்றால், 15 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்?

A) 4800

*B) 9600

C) 19200

D) 7200

141) மூன்று ஆண்டுகளுக்கு 10 சதவிகித கூட்டுவட்டியில் எவ்வளவு பணம் செலுத்தினால் ரூபாய் 2662 என முதிர்வுத்தொகை கிடைக்கும்?

A) 1000

*B) 2000

C) 3000

D) 4000

142) ரூபாய் 800 என்ற தொகையானது 10 சதவிகிதம் ஆண்டு வட்டியாக வருடத்திற்கு இரண்டுமுறை கூட்டுவட்டி கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில் அத்தொகையானது 926.10 என மாறும்?

*A) 1.1/2 ஆண்டுகள்

B) 2.1/2 ஆண்டுகள்

c) 1.1/3 ஆண்டுகள்

d) 2.1/3 ஆண்டுகள்

143) 10 சதவிகிதம் என ஆண்டு வட்டியில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை எனக் கூட்டுவட்டி கணக்கிடப்பட்டால் ரூபாய் 4400 என்ற தொகையானது ரூபாய் 4851 என எத்தனை ஆண்டுகளில் மாறும்?

a) 6 மாதங்கள்

*b) 1 ஆண்டு

c) 1.1/2 ஆண்டுகள்

d. 9 மாதங்கள்

144) ரூபாய் 50000 கூட்டுவட்டியாக 2 ஆண்டுகள் கணக்கிட்டால் வட்டித்தொகை எவ்வளவு கிடைக்கும்?

*a) 17280

b) 16280

c) 17180

d) 16180

145) 40 கிலோகிராமில் 0.75 சதவீத மதிப்பு காண்க.

A) 30 கிலோகிராம்

*B) 0.3 கிலோகிராம்

c) 3 கிலோகிராம்

d) 26 கிலோகிராம்

146. அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூபாய் 15000க்கு வாங்கி, 15 சதவீத நட்டத்தில் விற்றான் எனில், அதன் விற்பனை விலை என்ன?

*A) 12750

b) 12500

c) 13000

d) 11750

147. 50 எண்களின் சராசரி 30 எனில், அதில் 25 மற்றும் 35 என்ற இரண்டு எண்கள் நீக்கப்பட்டால் அதன் சராசரி என்ன?

a) 25

b) 35

*c) 30

d) 28

148. 21 ஆண்களின் மொத்த எடையின் சராசரி 64 கிலோகிராம். கடைசியாக ஒரு ஆணின் எடை சேர்த்துக் கணக்கிட்டபோது புதிய சராசரி எடை 65 கிலோகிராம் என்றால், அந்த ஆணின் எடை என்ன?

A) 66

B) 55

c) 64

*d) 86

149. ரூபாய் ஒரு லட்சம் அசலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு 10 சதவீதம் கூட்டு வட்டிக் கணக்கிட்டால், அசல் மற்றும் வட்டியின் கூட்டுத்தொகை எவ்வளவு?

a) 33100

*b) 133100

c) 146410

d) 46410

150. ரூபாய் இரண்டு லட்சத்திற்கு இரண்டாண்டுகளுக்கு 15 சதவீதம் கூட்டுவட்டி கணக்கிட்டால் வட்டித்தொகையைக் கணக்கிடுக.

a) 56400

*b) 64500

c) 63500

d) 63000

***

வினாக்கள் தயாரிப்பு:

திரு. சௌண்டப்பன்,

திரு. விஜை

திருமதி. வெண்ணிலா

தேர்வுக்கான வினாக்கள் பதிவேற்றம்: செல்வி. மெர்ஷல்.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *